Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:02:36 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 15
#KOTWART0115
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 13, 2012
விடுமுறையில் விதையுங்கள்!
இந்த பக்கம் 5384 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விடுமுறை என்றதும் விடுதலை பெற்ற சந்தோஷ உணர்வு குழந்தைகளுக்கு. இவர்களை எவ்வாறு கையாளப் போகிறோம் என்ற திகைப்பும், மலைப்பும் பெற்றோர்களுக்கு.

இரு வேறு மன நிலைக்கு மத்தியில் துவங்கி விட்டது குழந்தைகளுக்கான விடுமுறை. இந்த அருமையான ஓய்வு காலத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, அதற்கான திட்டமிடல் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை சுருக்கமாக நோக்குவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

முதுமை வருமுன் இளமையை
நோய் வருமுன் ஆரோக்கியத்தை
வறுமை வருமுன் செலவச்செழிப்பை
பணிக்குச் செல்லும் முன் ஓய்வை
மரணத்திற்கு முன் வாழ்வினை

சிறப்பானதாகக் கருதும்படி அறிவுரை வழங்கினார்கள்.

போட்டிமிக்க பரப்பரப்பான இன்றைய காலச் சூழலில் நமக்கு கிடைப்பதற்குரிய ஓய்வு நேரத்தை வீனாக்கிடாமல் சரியான வழியில் பயன்படுத்திட நம்மை நாம் பழக்கிக் கொளலாமே!

வருடம் முழுவதும் பாடங்களையும், பரீட்சைகளையும், படித்தும், எழுதியும், கலைத்து விட்ட நம் அருமை குழந்தைகள் புத்துணர்வு பெற்றிட அவர்தம் மனம் மகிழும் வண்ணம் அவர்களின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப பூமியில் பரந்து விரிந்து காண்பதற்குரிய, உள்ளம் கொள்ளை கொள்ளும், இயற்கை வனப்புகளையும், பூமியின் சுவாரசியங்களையும், அரசர்களும், அமைச்சர்களும் காலஞ்சென்று விட்ட போதும், நம் கண்முன்னே ஆட்சி, அதிகாரத்தின், எச்சங்களாக நிமிர்ந்து நிற்கும் கோட்டை, கொத்தளங்களின் வரலாற்று சுவடுகளை கண்டு மகிழும் அதே நேரம், சிறந்த பாடங்களையும், படிப்பினைகளையும் கற்றுக் கொள்ளலாம்.

இது போன்ற பயணங்களில் வெறுமனே இயற்கையை ரசித்து மெய் சிலிர்ப்பதொடு நின்றிடாமல் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் நம்மை படைத்த இரட்சகனின் அருட் கொடிகள், அத்தாட்சிகள், இவை நம் இரட்சகனின் வல்லமையை, படைத்தது பரிபாலிக்கும் ஆற்றலை, நமக்கு கற்றுத் தருகின்றன. எனவே அந்த இறைவனை புகழ்ந்து துதி செய்திடவும், நன்றி செலுத்திடவும், பாவங்களை நினைத்து வருந்தி பாவ மன்னிப்பு கோரிடவும் அவ்விடத்திலேயே நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திட வேண்டும்.

உலகெங்கும் மனிதர்கள் நிம்மதி தேடி அலையும் இந்த நவீன காலத்தில் "அல்லாஹ்வை நினைவு கூறுவதின் மூலமாக உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன" என்கின்ற தீர்வினை முன் வைக்கும் அல் குர்ஆனின் அறைகூவலை சற்றே பிஞ்சு மனங்களில் பதிய செய்திடுங்கள்.

சூரிய ஒளிப்படும் சிறந்த புள் வெளியில் தனது மனதை இஷ்டபடி உலவ விடும் வேளையில், ஒரு பாரிய விருட்சத்தின் அடியில் குழந்தைகளை நிறுத்தி

அம்மரத்தின் கிளைகளும் இலைகளும் ஒருங்கினைதுள்ள விதத்தையும் -
தென்றல் காற்றில் அவை சுயாதீனமாக ஆடியசைவதையும் -
இலைகள், வீசும் காற்றின் வேகத்திற்கேற்ப அங்கும் இங்கும் அசைந்தாடுவதையும் -
விபரித்து அனுபவிக்க செய்யுங்கள்
தண்டுகளுக்கும், கிளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும்
கிளைகளுக்கும் இலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும்
அதனுள் மறைந்துள்ள பொறியியல் தொழில் நுட்பத்தையும்
மகரந்தச் சேர்க்கையெனும் அறிவியல் அற்புதத்தையும்
அவர்களுக்கு விளக்கிடுங்கள்.

வானத்தின் விசாலத்தையும், காற்றின் மென்மையையும், கடுமையையும் மட்டுமின்றி நதிகளைய்ம், அந்நதியில் பாயும் நீரின் அழகினையும், வேகத்தையும், விவேகத்தையும், நீரின் ஓட்டத்தில் ஏற்படும் நெளிவு சுளிவுகளையும், பூமியில் இறைவனால் நட்டப்பட்டுள்ள மலைகளின் உறுதியையும், வலிமையையும், பிரமாண்டத்தையும் கண்டு களிக்கச் செய்யுங்கள். இவை அனைத்தையும் படைத்தவன் யார் என குழந்தைகளிடம் வினா எழுப்பி, இந்த பூமியை அழகுற ஒழுங்கமைத்தவன் - இறைவன் ஒருவனே! என்ற விடையையும் கற்றுக் கொடுத்திடுங்கள். இதுப்போன்ற எண்ணிலடங்கா இறைவனின் அத்தாட்சிகளை வாழ்வின் அன்றாட நிகழ்வுகளாய் காண்பதும், கடந்து செல்வதுமில்லையா? இது போன்ற தருணங்களில் தவறாமல் இறைவனை நினைவு கூர்ந்து மனம் நிம்மதி அடைந்திட வழி காட்டிடுங்கள்.

இன்னும் கற்றலுக்கான ஏராளமான வாய்ப்புகள் பூமி எங்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது. கற்றலுக்கு எல்லை என்பது இல்லை. வானமே எல்லை. நாமோ கற்றலுக்கு எல்லை விதித்து, அவற்றை வகுப்பரையோடும், கரும்பலகையோடும், மட்டுப்படுத்திக் கொண்டோம்.

கல்விக்கூடங்களுக்கு வெளியிலே நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆசிரியராகவும், ஒவ்வொரு நிமிடமும் வகுப்பறையாகவும் பயன்படுத்திட சொல்லிக் கொடுத்திடுங்கள்.

தேர்வு காலங்களில் பெற்றோர் குழந்தைகள் அளவளாவிக் கொள்வதில் ஒரு பாரிய இடைவெளி ஏற்பட்டிருக்கும். எனவே இந்த விடுமுறை காலத்தை குழந்தைகளுக்கிடையிலேயான உறவை, நெருக்கத்தை, பாசப்பிணைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் வைப்பாக பயன்படுத்திடல் வேண்டும்.

குழந்தைகளுடன் அளவளாவிட கூடுதலான நேரத்தை ஒதுக்கிடுங்கள். அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் எனபதனையும், மிகுந்த அன்புக்கும் நேசத்துக்கும் உரியவர்கள் என்பதனையும், உங்களின் வார்த்தைகளால் அவர்களிடம் வெளிப்படுத்த தவறாதீர்கள். பாசத்தை மனதிலே பூட்டி சிறை வைத்திடாதீர்கள். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற வார்த்தைகளை வெளிப்படுத்த வெட்கமும், தயக்கமும் கொள்கின்றன.

சந்தர்ப்பம் கிட்டும் பொழுதெல்லாம் உங்கள் கரங்களால், குழந்தைகளுக்கு உணவூட்டி மகிழுங்கள். உணவுண்ணும் நேரம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து உண்டு மகிழுங்கள். இராணுவத் தளபதி போல் கட்டளை பிறப்பிப்பதையே வழமையாக்கி கொள்ளாமல் - அவர்களின் கனவுகளையும், விருப்பங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் காது கொடுத்து கேளுங்கள்.

அன்றாட நிகழ்வுகளை ஒரு நண்பனாக / நண்பியாக நெருங்கின் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவைகளுக்கு தகுந்த தீர்வினையும், ஆலோசனைகளையும் வழங்கிடுங்கள். இதன் மூலம் அந்த பிஞ்சுகளின் பிரச்சனைகளுக்கு காது கொடுத்திட, ஆறுதல் கூறி அரவணைத்திட நம் பெற்றோர்கள் துணை இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஆழமாக விதைத்திடுங்கள். தங்களது எண்ணங்களை, அபிலாசங்களை பகிர்ந்து கொள்ள எக்காலத்திலும், தடைகளை ஏற்படுத்தி தனிமைபடுத்திடாதீர்கள்.

சின்னஞ்சிறியதாய் இருந்தாலும் குழந்தைகள் செய்யும் நல விடயங்களுக்காக அவர்களை மனம் திறந்து பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.

கடல் கடந்து வசிக்கும் தந்தையர், தம் துணைவியரோடு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தும் போதெல்லாம் - தவறிடாமல் குழந்தைகளுடன் அளவளாவிட நேரத்தை ஒதுக்குங்கள். அவர்கள் உங்களுக்கு விசேடமானவர்கள் என்பதை உணர்த்துங்கள். இறை வேத வரிகளையும், மாநபி மொழிகளையும் தினமும் கற்றிட செய்யுங்கள். இறை இல்லத்தோடு அதிகமான தொடர்பை ஏற்படுத்தி ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன், தொழுதுவர பழக்கப்படுத்துங்கள்.

இரத்த உறவுகளை அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அண்டை வீட்டாரோடு அன்புடன் பழகச் செய்யுங்கள். துன்பத்திலிருப்பவருக்கும், நலிந்தோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், தேவையான பொருளுதவிகளை குழந்தைகளின் ஊடாக வழங்கச் செய்து, அவர்களின் உள்ளத்திலே பிறருக்கு உதவிடும் எண்ணத்தை விதைத்திடுங்கள்.

நோயுற்றவர்களை சுகம் விசாரிக்கவும், அவர்களின் நல் வாழ்வுக்காக பிரார்த்தனை செய்திடவும், உறவுகளில் மரணம் சம்பவிக்கும் பொது, அவர்களின் கவலையில் பங்கேற்று ஜனாஸா தொழுகையிலும், நல்லடக்கதிலும் கலந்து கொள்ள பழக்கப்படுத்திட வேண்டும்.

பல்வேறு தேவைகள் நிமித்தம் திருநெல்வேலிக்கு அடிக்கடி சென்று வரும் நாம், அங்கே அமைந்துள்ள முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு நம் குழந்தைகளை அழைத்துப்போய், அங்கே அனாதரவான நிலையில் இருக்கும் பிஞ்சுக் குழந்தைகளுடன் ஒரு சில மணித்தியாலங்கள் செலவிட்டு அளவளாவி அவர்களின் கரங்களாலே இனிப்புகளையும் பரிமாரிடச் செய்திடுங்கள். இதன் மூலம் அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியையும், சகோதரதத்துவத்தையும் விதைத்திடும் வேளை, பெற்றோரின் பாசத்திற்காக ஏங்கும் அக்குழந்தைகளின் தேவைகளையும், துயரங்களையும் உள்வாங்கிக்கொண்ட, சமூகத்தின் மீது கரிசனையும், அக்கறையும் கொண்ட சிறந்த தலைமுறையினராக உருவாக்கிடுங்கள்.

பணத்தை சேமிக்க சொல்லித்தரும் ஒவ்வொரு பெற்றோரும் - அதனை எவ்வாறு இறை திருப்தி நாடி அற வழியில் செலவழித்திடலாம் என்பதை இது போன்ற ஒன்று கூடலினால் கற்றுக்கொடுத்திடுங்கள்.

இது போன்ற, இங்கே சொல்லாமல் விடப்பட்ட இன்னும் ஏராளமான நற்குணங்களை, மனிதப் பண்புகளை நம் குழந்தைகளிடையே ஆழமாகவும், அறிவுப்பூர்வமாகவும், விதைத்து பயிற்சி அளித்திட இந்த அருமையான விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - மனிதன் இறந்து விட்டால் அவனுடைய செயல் முடிந்து விடுகிறது. ஆனால் மூன்று விதமான செயல்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன.

1. நீடித்த, நிலையான தருமங்கள்
2. பயன் அளிக்கும் சிறந்த கல்வி
3. அவனுக்காக பிரார்த்தனை புரிந்து வரும் நல்ல பிள்ளைகள்

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, நல்லொழுக்கமும் நற்பண்புகளுமிக்க சிறந்த மனிதனாக நம் குழந்தைகளை நமக்காகவும், நம் சமூகத்திற்காகவும், உருவாக்கிடுவது இன்றைய காலத்தின் கட்டாய கடமையாகும்.

இறுதியாக - வகுப்பிலே முதல் இடம் பெற வேண்டும் என ஓய்வில்லாமல் குழந்தைகளை உற்சாகமூட்டும் பெற்றோர்களே! அது போலவே, சிறந்த மனித நேயமிக்க, முன் மாதிரியான மானுடனாக வாழ்ந்திட வேண்டும் என, இதையும் கொஞ்சமாவது சொல்லிவையுங்கள்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: Mauroof (Dubai) on 13 May 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21031

கட்டுரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விடயங்கள் அவசியம் நம் இளைய தலைமுறையினருக்கு சொல்லித்தரப்பட வேண்டியவை. ஆசிரியருக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

10 ௦- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் இத்தருணத்தில் பெற்றோர்கள் இவ்வாசிரியரின் 23.03.2012 திகதியிட்ட "பார்வை படாத பக்கங்கள்" என்ற கட்டுரையை மேலும் ஒரு முறை படிப்பது சிறந்ததாக இருக்கும் என எண்ணுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: Nafeesa Buhary (kayalpatanam) on 13 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21032

மாஷா அல்லாஹ் !!! மிகவும் அருமையான தகவல் ஒய்வு நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது நம் அனைவரின் கடமை. நாளை இறைவனிடம் அதை பற்றி பதில் கூற வேண்டும்..அதற்குரிய வழி முறைகளை அழகிய முறையில் கூறி இருக்கிறார்கள்..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: Zainab Asiya (kayalpatanam) on 13 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21033

அஸ்ஸலாமு அலைக்கும்.. எனதன்பின் வாப்பாவிற்கு வாழ்த்துக்கள்.. இது வெறும் கட்டுரை மட்டும் அல்ல எனது தந்தையின் செயல்முறை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 13 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21034

மாற்றி யோசியுங்கள்! விடுமுறையில் விதையுங்கள்!.

வாழ்த்துக்கள் புகாரி அவர்களே. காலத்துக்கு தேவையான கட்டுரைகளை இணைய தளத்தில் பதிவு செய்து மக்கள் உள்ளங்களில் செய்திகளை பதிவு செய்வதுடன் உங்கள் உருவத்தையும் எழுத்து இயலையும் பதிவு செய்துகொண்டிருக்கிறீர்கள்.

வீடுகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றுக்கு புது மெருகூட்டும் தொழில் வல்லுனராக நீங்கள் வலம் வருவதை ஒரு சிலர்தான் அறிவார்கள். ஆனால் பொது வாழ்க்கையிலே நீங்கள் காலடி எடுத்து வைக்கும்போது ஊரே உங்களை உற்று நோக்குகிறது. மக்கள் உள்ளங்களையும் பெற்றோர் உள்ளங்களையும் ஊடுருவி பல நிதர்சன உண்மைகளை திருமறை வசனங்களுடனும் திருநபி வழி முறையுடனும் நீங்கள் எடுத்தாண்டிருக்கும் பாங்கு போற்றுதலுக்குரியது.

விடுமுறையை கழிக்க வித்தியாசமான வழிமுறைகளை சொல்லி இருக்கிறீர்கள். இதை ஒரு சிறு கைநூலாக, இலவச வெளியீடாக உங்கள் இல்ல திருமண நாளில் வெளியிட்டால் அது ஒரு சிறந்த நினைவு பரிசாக அமையும் எனபது எனது தாழ்மையான கருத்து

தொடர்ந்து எழுதுங்கள்.

" மூன்றாம் பிறையே, நீ ஒரு சிறிய வெள்ளி கீற்றாக இருக்கிறோமே என்று கவலைப்படாதே, உனக்குள் ஒரு பூரண நிலவு ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே" என்று ஒரு கவிஞன் பாடுவான். அந்த கவிதையின் ஊற்றுக்கண்ணாக நீங்கள் இருப்பதை எண்ணி புளகாங்கிதம் அடைகிறேன்.உங்கள் எழுத்துக்களால் ஒரு தனி மனிதன் பயன்பெற்றாலும் போதும், உங்கள் எழுத்து பயணம் ஒரு மைல் கல்லாக அமைந்து விடும்.

ஆயிரம் பக்கங்கள் உள்ள காவியம் ஒவ்வொரு வரியாகத்தான் எழுதப்படுகிறது.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 13 May 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21035

அருமையான கருத்துக்களை உரிய நேரத்தில் பதிந்துள்ள ஆசிரியர் அவர்கள், இது போன்ற இன்னும் பல தேவையான கட்டுரைகளை உரிய நேரத்தில் தரவேண்டும்.

இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் நம் நகரின் அணைத்து பெற்றோர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஏனென்றால் ஒருநேரத்தில் இவையனைத்தும் நமது உம்மா மற்றும் உம்மம்மா மார்களிடம் இலவசமாக சிறுபிராயம் முதல் கிடைத்தது. இன்றோ இவை பெற்றோர்களிடமிருந்து கிடைப்பது அரிதாகவே உள்ளது.அவர்களுக்கும் காலசூழ்நிலைக்கேற்ப வேலைப்பளு, மற்றும் இரவோ தொல்லைக் காட்சியின் தொடர் நாடகங்கள் என நாட்கள் கழிகிறது. சில வீடுகளில் விசுவாசமுள்ள சில வேலைக்காரி தான், தத்தெடுத்த பிள்ளையை வளர்ப்பது போல் விசுவாசமாக வளர்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நகரில் சில பகுதிகளில் ஹாமிதிய்யா போன்ற முன்னணி மார்ககல்வி நிறுவனங்கள் இப்பணியை உரிய காலத்தில் செய்கிறது.

ஆசிரியர் குறிப்பிட்டது போல் சிறு பிராயத்தில் ஒழுக்கம் , இறையச்சம் ,மார்க்க கல்வி, பிறருக்கு உதவும் சிந்தனை இது போன்ற நல்ல காரியங்களை பிஞ்சு மனதில் விளைத்தால் பிற்காலத்தில் நல்ல ஒழுக்கமுள்ள அறிவாளியாக வருவார்கள் என்பதில் எல்லளவும் சந்தேக மில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: Ahamed Bin Farook 48 (Chennai) on 13 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21036

அஸ்ஸலாமு அலைக்கும் புஹாரி காக்கா...அசத்தலான ஆக்கம் போங்கள்..மாஷா அல்லாஹ் ஒரு சிறந்த வர்தகராக பார்த்த உங்களை தற்பொழுது இந்த காயல் மாநகரின் ஒரு சிறந்த படைப்பாளியாக பார்க்க முடிகிறது...மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பனி.உங்களுடன் நாங்களும் இருப்போம் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. நல்ல மண், தரமான விதை,தகுந்த நேரத்தில் விதைத்தால் பலன் தரும் மகசூல்...!!!
posted by: ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா) on 13 May 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21037

விடுமுறையில் நடைமுறைப்படுத்தும் நல்ல விஷயங்களை இக் கட்டுரை ஆசிரியர் நச்சென்று சொல்லியுள்ளார். நன்மையான பல காரியங்களை இரயில் பெட்டிகள் போல ஒவ்வொன்றாய் இணைத்து இத் தொடர் வண்டியை இழுத்துச் செல்ல மாநபிகளாரின் அழகிய வார்த்தைகளை இன்ஜின் ஆக்கி நம்மை நன்மையின் பக்கம் அழைத்துச் செல்கின்ற ஆசிரியரின் விதம் அற்புதமாக உள்ளது.

இவர் வீட்டுக்கு மட்டும் வர்ணம் பூசவில்லை. மாறாக பெற்றோர்கள்,பிள்ளைகள், வாசகர்கள் மனதிலும் வர்ணம் பூசி அழகு பார்க்கின்றார் ஆசிரியர். இன்னும் பயனுள்ள பல ஆக்கங்கள் உங்கள் கைவ(ர்)ணத்தில் மிளிர வாழ்த்துக்கள்...!!!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. அவசியமான சிந்த்தனைகள் ..
posted by: M Sajith (Dubai) on 15 May 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21038

இன்றைய காலத்தேவையை கருத்தில் கொண்டு மிகவும் அவசியமான சிந்தனைத் தூண்டல்...

வருடம் முழுவதும் பரீட்சைக்கு பயிற்சி, வருட முடிவில் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அதைத்தொடர்ந்த்து வேலைகிடைக்க பயிற்சி, கிடைத்த வலையை தக்கவைக்க பயிற்சி என இவைகள் தாம் எல்லாமும் என ஒருவரை ஒருவர் முட்டிமோதியாவது முன்னுக்கு வரவேண்டும் என பரிதவித்து திரியும் காலத்தில்...

வாழ, அதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ பயிற்சி செய்யுங்கள் என்ற அறிவுரை மிகவும் பிடித்திருந்த்தது...

வாழ்த்துக்கள் என்பதைவிட நன்றி சொல்வதுதான் பொருத்தமாக இருக்கமுடியும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: rumana. (kayalpatnam) on 16 May 2012
IP: 14.*.*.* India | Comment Reference Number: 21039

மாஷாஅல்லாஹ் மிக அருமையான கட்டுரை. ஒரு குடும்பத்திற்கே அறிவுரை உங்களுடய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .இது போன்ற பயனுள்ள கட்டுரையை தந்தாள் மிகவும் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:விடுமுறையில் விதையுங்கள்!...
posted by: K S Muhamed shuaib (Thiruchnthoor ) on 17 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21040

அருமை சகோதரர் புகாரி அவர்கள் நல்ல சிந்தனையை விதைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

விடுமுறை எனபது வீணே கழிவதற்கு அல்ல. ஒரு நெடுஒட்டத்தில் சிறிதே நின்று நம்மை இளைப்பாறி கொள்ளும் இடமே விடுமுறை. இதை பயனுள்ள வகையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த நாட்களில் "கல்வி"என்று எதுவும் கற்றால் கூட அது மிகவும் எளிய முறையில் அதிகமும் "பளு"இல்லாத கல்வியாகவே அது இருக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை விடுமுறை காலத்தில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்க்கே முதல் இடம் கொடுப்பேன். அது ஒன்றுதான் உடலையும் மனதையும் ஒரே சமயத்தில் "ஆற்றுப்படுத்தும்".

நல்ல கருத்துக்கள்.புகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. அன்பை வெளிப்படுத்துங்கள்!
posted by: Firdous (Colombo) on 24 May 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 21041

அருமையான கட்டுரையை படைத்த உங்களுக்கும், உங்களிடம் எழுத்தாற்றலை வித்திட்ட எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

நம்மில் பலர் உள்ளே அன்பை தேக்கி வைத்து பிள்ளைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறோம். அன்பை நம்மிடமே புதைத்து வைத்தால் அது புதைந்தே போகும். இன்ஷாஹ் அல்லாஹ் இம்மாதிரி கட்டுரைகள் மூலம் நாம் விழிப்புணர்வு பெற்று நம் அடைக்கலத்தை அன்பின் அடைக்கலமாக மாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக.

உங்களது எழுத்து சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved