Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:25:09 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 25
#KOTWART0125
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 29, 2012
சுற்றுச்சூழலும், தொழில் மயமாக்குதலும்!
இந்த பக்கம் 1945 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தொழில் மயமாக்குதல் என்பது, அந்தத் தொழிலால் சுற்றுவட்டாரமும், அதன் மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தானே ஒழிய, அதே தொழிற்சாலையால் அதனருகில் இருக்கும் ஒரு சமூகமே பாதிக்கப்படும்போது இயற்கையிலேயே எதிர்ப்பு எனபது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.

கேன்சர் என்ற கொடிய ஆட்கொல்லி வியாதிக்கு DCW தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்படும் சுகாதாரக்கேடான வாயுக்களும், நமதூர் கடலில் கலக்கும் அத்தொழிசாலையின் அமிலக் கழிவுகளும் முக்கியமான காரணிகள் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

கேன்சர் நோயின் ஆபத்துக்களையும், அதனால் ஒருவர் படும் அவஸ்தைகளையும் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதையும் விட வீட்டில் ஒருவருக்கு கேன்சர் என்ற வியாதி வந்துவிட்டால் அவரைச் சார்ந்துள்ள குடும்பமே பொருளாதார ரீதியில் தரைமட்டமாகி விடுகிற அவலங்களை நம்மில் கண்கூடாகக் காணாதவர் மிகவும் அரிது..

இப்படிப்பட்ட ஒரு நோய்க்கு அடித்தளமாக இருக்கும் DCW தொழிசாலை ஓன்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு, எந்தவித சுகாதாரக் கேடும் இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்டால், அதன் படி இயங்கட்டும் அல்லது அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலை - அது நமதூர் நகராட்சிக்கு எவ்வளவு வருமானம் ஈட்டும் நிர்வாகமாகவும் இருந்தாலும் சரி. அது நமக்கு வேண்டவே வேண்டாம்.

வெளிநாடுகளில் வசிக்கும் எங்களைப் போன்றோர் அல்லாஹ்வுக்கு அடுத்து நமதூரில் நிலவும் இயற்கையான சூழலை நம்பிதானே எங்கள் குடும்பங்களை அங்கே விட்டுவிட்டு பிரிந்து இருக்கிறோம்? இப்போது அதற்கே ஒரு தொழிற்சாலையால் ஆபத்து என்கிறபோது, நமது வாழ்வாதாரத்தை மீட்டுப்பெற இப்படிப்பட்ட ஒரு போராட்டம் மிகவும் இன்றியமையாத ஒன்று.

எனவே, இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்வது என்பது நமது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உரிமையையும், எதிர்கால சந்ததியினரின் சுகாதாரத்தையும் காத்திட நாம் எடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இருக்கும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குரல் தமிழக மற்றும் இந்திய அரசாங்கங்களின் கவனங்களை ஈர்க்கும் முகமாக, ஒட்டுமொத்த ஊரும் திரண்டு நமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் பல பிரிவினைகளைப் பார்க்கும் நேரம் இதுவல்ல!. காயலர்கள் என்ற ஒரு குடையின் கீழ் நமதூரின் அருகாமையில் இருக்கும் சகோதரர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு, அறவழியில் போராடுவோம்! இறையருள் கொண்டு வெற்றிபெறுவோம்! நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம் - இன்ஷா அல்லாஹ்.

நிகழ்காலம் - மாதமிருமுறை பத்திரிக்கையின் டிசம்பர் 1 - 15 இதழில் வெளியான கட்டுரை

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 30 November 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24239

உங்கள் ஒவ்வொருவரின் கட்டுரையும் அதில் எடுத்து வைத்த கருத்தும் உண்மையானவை! இதை இத்தோடு விட்டு விடாமல், உலகமே வியக்கும் வண்ணம் நமது மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்து முற்றிலுமாக இந்த தொழிற்ச்சாளைதனை ஒழித்துக் கட்ட வேண்டும்!

நம் சுற்று வட்டார மக்களுக்கு சாவு மணி அடிக்கும் இந்த ஆலை மூடப்படும்வரை KEPA இவங்களுக்கு சரியான ஆப்பு வைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த வெற்றி வீரியமடைய நம் சுற்றுவட்டார மக்கள் அனைவர்களும் ஒரு குடையின் கீழ் நின்று மீண்டும் போராட வேண்டும்.

ஊரே ஒன்று பட்டு நேற்று போராடியமைக்கு மிக்க நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) on 30 November 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24261

சுற்றுச்சூழலும், தொழில் மயமாக்குதலும்! என்ற கட்டுரையை எழுதும் அன்புள்ளங்கள் பணியாற்றும் அமீரக நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் DCW வின் மீது உள்ள விஷ கழிவு நீர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுக்கள் கொடுத்தீர்களா...?

புகார் மனுக்கள் கொடுத்து இருந்தால் பாராட்டுக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. ஓற்றுமை
posted by: sheit (kayalpatnam) on 01 December 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24272

அஸ்ஸலாமு அலைக்கும்,

தலைவரின் கட்டுரை நிதர்சனமானது. அருமை, காயலர்கள் உலகளாவி இருக்கின்றோம் இந்தியா தூதரங்களில் நம் கோரிக்கையை ஒட்டுமொத்தமாக தெரிவித்தால் இன்னும் வலுவாக இருக்கும்.

அதேமாதிரி அணைத்து காயலர்களும் ஒரேநேரத்தில் உலகின் அணைத்து பாகங்களிருந்தும் நம் எதிர்ப்பை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், முதல்வருக்கும் தெரிவித்தால் நம் எதிர்ப்பு இன்னும் பலமாக இருக்கும்.

கடையடைப்பு இதுவரை எந்த அரசியல் கட்சியும் சாதிக்காத சாதனை அல்ஹம்துலில்லாஹ், புன்னைகாயல் முதல் திருச்செந்தூர் வரை உள்ள மக்களையும் நம் அணியில் சேர்த்தால் நம் அணிக்கு இன்னும் வலு சேர்க்கும்.

பொறுப்பாளர்களின் கடின உழைப்பு அயராத முயற்சி ஏறும்புகளைபோல் சுறுசுறுப்பு மறக்க முடியாது அனைவர்க்கும் இம்மைக்கும் மறுமைக்கும் துவா செய்கிறேன்

சேட்
காயல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: Salai Sheikh Saleem (Dubai) on 01 December 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24302

அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் . CFFC யின் ஆய்வறிக்கைகளை கொண்ட ஒரு தொகுப்பை கிட்டத்தட்ட 300 க்கும் மேற்ப்பட்ட காயலர்களின் கையெழுத்துக்களுடன் அபுதாபியில் உள்ள இந்தய தூதரகத்தில் சமர்ப்பித்த முதல் காயல் நல மன்றம் அமீரக காயல் நல மன்றம் என்பதை இங்கே பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

இப்போது ஒரு வேண்டுகோள் வந்துள்ளது அதையும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும் காரணம் துபாயில் உள்ள இந்திய கவுன்சல் அலுவலகத்தில் கவுன்சல் வேலைகளை தவிர்த்து பொதுவான எந்த முறையீடும் கொடுக்க முடியாது என்பதனால். தற்போது விடுமுறை காலம் என்பதால், வேலை நாட்களில் மனு சமர்ப்பிக்கப்படும்.

அமீரக காயல் நல மன்றங்கள் நமதூர் நலன்களிற்காக என்றென்றும் முன்னணியில் நின்று செயல்படும் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved