Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:23:59 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 27
#KOTWART0127
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 30, 2012
ஒரு தாயின் தாக்கம்!
இந்த பக்கம் 3700 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எல்லாப் புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!

இங்கே நான் ஒரு நகர்மன்றத் தலைவியாக அல்லாமல், ஒரு தாயாக - 1000 மழலைகளுக்குக் கல்வி கற்றுத் தந்த ஓர் ஆசிரியையாக, எனது உள்ளத்து உணர்வுகளை இந்த மண்ணின் மக்களோடு மனதார பகிர்ந்து கொள்கிறேன்.

மார்ச் மாதம் 21ஆம் தேதி சென்னையில் நடந்த DCW தொழிற்சாலை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில், நமது நகராட்சியின் சார்பாக கலந்து கொள்வதற்கான பயண வாய்ப்பு - எதிர்பாராத விதமாக குறுகிய கால அவகாசத்தில் அமைந்தது. சென்னையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சார்ந்த உயரதிகாரிகள் முன்னிலையில், ஒரு தலைவியாக இல்லாமல், ஒரு தாயாக மனதில் தேக்கி வைத்திருந்த வேதனைக் குமுறல்களை வேண்டுகோள்களாக விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.

எனது நான்கு வயது மகளை அவர்கள் முன்பு நிறுத்தி “இந்தக் குழந்தை வயிற்றுப் பசியாற உணவுப் பொருள் எதுவும் எடுத்து வர மறந்த நான், அது நிம்மதியாக மூச்சு விட இன்ஹாலரை என்னுடன் மறவாமல் எடுத்து வந்துள்ளேன் பாருங்கள்” என்று கூறி, இன்ஹாலரைக் காட்டினேன்.

DCW தொழிற்சாலையின் நச்சுப் புகையை சுவாசித்து சுவாசித்து எங்கள் பிஞ்சுகளில் இரத்தம் எல்லாம் நஞ்சாக மாறி 10 மாதம் சுமந்து பெற்றேடுத்த தாய்குலங்களின் நெஞ்சங்களில் சொல்ல முடியாத வேதனைகளை சுமந்து கொண்டிருக்கிறோம்.

எமது பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு மழலைகள் உற்சாகத் துள்ளளோடு ஓடியாடி விளையாடி மகிழும் சமயம் அவர்களது ஒவ்வொரு அசைவையும் ரசித்து சந்தோஷிக்கும் நாங்கள், வீசிங் (இளைப்பு) பிரச்சனையின் காரணமாக இந்தக் குட்டி குழந்தைகள் ஆடாது அசையாது, கண் விழிகள் பிதுங்க, மூச்சுமுட்டிப் போய் அமர்ந்திருக்கும் காட்சியை கண்டு காலங்காலமாக உள்ளுக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஊர் குழந்தைகள் நல மருத்துவர் “உங்க பிள்ளை நல்லா இருக்கனும்னா இந்த ஊரை விட்டு தூரமா செல்லுங்க” என்று வேதனையோடு கூறுகிறார். வீட்டுக்கு வீடு வாசற்படியாக ஒவ்வொரு வீட்டின் சந்தோஷத்தையும், நிம்மதியையும் சேர்த்தே அரித்து உருக்குலைக்கும் புற்றுநோய்க்கும், இன்னும் பல நோய்களுக்கும் கண் முன்னே தெரியும் காரணமாக DCW தொழிற்சாலையின் மாசு இருக்கிற பட்சத்தில், எங்கள் சந்ததிகள் நலமாக வாழ - நோயின்றி வளர, தயவுசெய்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தலைவியாக கலந்து கொள்ள வந்த நான் - காயல் மாநகரின் அனைத்து தாய்குலங்களின் சார்பாகவும் எனது வேண்டுகோள்களை ஒரு தாயாக கண்ணீருடன் சமர்ப்பித்துவிட்டு திரும்பினேன்.

நாம் விட்டுப்போகும் விலைமதிக்க முடியாத சொத்தான நம் சந்ததிகளின் ஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரமே ஆட்டம் கண்ட பிறகு, அடுக்கு மாடிகளா மகிழ்ச்சி தரும் நமக்கு...? ஆயுளே அல்பமாகிவிட்ட பிறகு நிலபுலன்களா நிம்மதி தரும் நமக்கு...?? அங்கங்கள் நலமில்லாது போன பிறகு தங்கங்களா பெருமைதரும் நமக்கு...??? நிச்சயம் இல்லை!

காலங்கள் கடந்து நிற்கும் உயிர் போராட்டத்தின் உன்னதச் சுவடுகளை நம் சுவாசம் கலந்த மண்ணில் - நம் சந்ததிகளுக்காகப் பதித்துச் செல்வோம். நாம் ஒவ்வொருவரும் கண்ட இறப்புகளிலிருந்து, போராட்ட உணர்வுகளை “ஃபீனிக்ஸ்” பறவையாக நாம் பிறந்த ஊரில் உயிர்த்தெழச் செய்வோம். நம் ஊர், நம் மக்கள், நம் நலன் என்று ஓரணியில் ஒன்றுபட்டு நின்று போராடும் மக்கள் சக்தி இறையருளால் வெற்றிபெறும்.

நிகழ்காலம் - மாதமிருமுறை பத்திரிக்கையின் டிசம்பர் 1 - 15 இதழில் வெளியான கட்டுரை

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 30 November 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24235

எல்லாம் வல்ல இறைவன் அருளால்,நாம் இனிமேல் ஒன்றுபட்டு போராடினால், நிச்சயம் நம் மழலையர் வாழ்வில் ஒளிவீச செய்திட முடியும்.

ஒரு பஞ்சாயத்து தலைவியாக இல்லாமல், பெற்ற தாயின் உணர்வோடு உங்கள் தாக்கத்தினை பதித்தமைக்கு முதல்கண் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. ஒரு தாயின் தாக்கம்..... பல நோயிகளுக்கு தாகமாகட்டும்.
posted by: s.s.md meerasahib (riyadh) on 30 November 2012
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24240

அஸ்ஸலாமு அலைக்கும். ஐ. ஆபிதா ஷேக் அவர்களே...... தாங்களின் ஒரு தாயின் தாக்கம் கட்டுரை மிக அருமை என்று சொல்வதைவிட பலதாயின் ஏக்கம்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள். துவாக்களுடன் கூடிய ஓராயிரம் நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன். உங்களின் இந்த தாக்கம் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றித்தந்தால்....... அதுவே... நம் மக்களை நோயிகள் அண்டமுடியாமல் தாகித்து மடியும். இன்ஷா அல்லாஹ். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Deen (Hkg) on 30 November 2012
IP: 59.*.*.* Hong Kong | Comment Reference Number: 24251

கருத்து பதிக்கும் கட்டுரை அல்ல

இது ஒவ்வொரு தாயின் கருவறையின் தாக்கம் ........

நாளை பிறக்கும் எம் சந்ததியின் நிலையை எண்ணிப்பார்க்க வைத்த ..................

எழுத வார்த்தையில்லை .............. கண்ணீருடன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) on 30 November 2012
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24253

அஸ்ஸலாமு அலைக்கும்

எங்கள் மரியாதைக்குரிய .நகர் மன்ற .தலைவி. I.ஆபிதா ஷேக் அவர்களின் கட்டுரையை படித்து மனம் நெகில்தேன்......நான் என்ன .... நம் ஊர் ஒவ்வொரு குடி மகனும் கண்டிப்பாகவே இந்த கட்டுரையை படித்து மனம் மகிழ்ந்து இருப்பார்கள் ......இதில் சந்தேகமே இல்லை ....

தங்களின் இக்கட்டுரையின் தலைப்பே மாஷா அல்லாஹ் >>> எங்கள் யாவர்களையும் தங்களின் பக்கம் ஈர்த்து விட்டது <<<

தங்களின் இந்த சொல்லும் அருமையானது >>>> நாம் விட்டுப்போகும் விலைமதிக்க முடியாத சொத்தான நம் சந்ததிகளின் ஆரோக்கிய வாழ்வு <<<< என்பது ரொம்பவும் யதர்த்தமான உண்மையே .......

மேலும் தங்களின் சிறு குழந்தையையே சுட்டி காட்டிய தங்களின் மனசே உண்மையில் '' ஒரு தாயின் தாக்கம் '' தான் ...தாங்கள் நம் ஊர் மக்களின் மேல் வைத்து உள்ள பாச உணர்வுக்கு எங்களின் மனமார நன்றியை தான் காணிக்கையாக வேணும் .....

>>>நம் ஊர் நகர்மன்றமும் சரி ....நம் ஊர் மக்களும் சரி ....தங்களை தலைவியாக பெற்றமைக்கு ரொம்பவும் பெருமை படுகிறோம் .....வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் .....

தங்களின் நேர்மைக்கும் ....தாங்கள் நம் ஊரின் முன்னேற்றத்துக்கும் ...நம் ஊர் மக்கள் மேல் வைத்து உள்ளமைக்கும் கிடைக்கின்ற பரிசு தான் ...நம் ஊர் மக்களின் சப்போட்டு .....

>>>தங்களின் வளர்சியும் .....தங்களின் நம் ஊருக்கான சேவையும் ....முழு வெற்றி அடைய ... மனதார வாழ்த்தி .... துவா செய்கிறேன் ......

தாங்கள் இன்னும் இந்த நாசமா போன >>DCW << தொழிற்சாலை விசயத்தில் முழு கவனம் செலுத்தி நம் ஊர் மக்களின் நல் வாழ்வுக்காக நம் நகர் மன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து ....செயல் படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ....

தங்களின் சொல் போல் ...நம் ஊர் நம் மக்கள் யாவர்களும் ... நம் ஊர் நலன் என்று கருதி ஓரணியில் ஒன்றுபட்டு நின்று முழுமையாகவே போராட வேணும் .....நம் ஊர் மக்கள் சக்தி நிச்சயமாகவே இறையருளால் வெற்றி பெறுவோம் .....இது நிச்சயம் ... நடக்கும் ....நம் ஊர் மக்களின் ஒட்டு மித்த குரலுக்கு கண்டிப்பாகவே நம் மத்திய / மாநில அரசுகள் செவி சாய்க்கும்.....

>>>>>மக்கள் சக்தி முன் எதுவுமே தோற்றதாகவே சரித்திரம் இல்லை....ஆதலால் நம் பயணத்தின் வெற்றி நிச்சயம்....... வஸ்ஸலாம்

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: suaidiya buhari (chennai) on 30 November 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 24270

இந்த கட்டுரை படிக்கும் பொழுது ஒரு தாய் தன் சொந்த பிள்ளை அரவணித்து பாதுகாப்பு கோர்வது போண்டு உள்ளது.

உன் அன்பு தோழி
suaidiya


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. தாய்பாசம்
posted by: sheit (kayalpatnam) on 01 December 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24273

ஒரு தாயின் பரிதவிப்பும் பாச உணர்வும் எப்படி சொல்ல? கண்ணீர் மல்க செய்கிறது.

அணைத்து தாய்மார்களின் பாசத்தையும் கொட்டிக் குவித்த ஒரு தாயின் உணர்வு இதயத்தை பிளக்கிறது. வல்லோனிடம் கண்ணீருடன் பிரார்த்திக்கிறேன்.

சேட்
காயல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. தாயுமானவள்!
posted by: kavimagan (qatar) on 01 December 2012
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24285

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் சூழ்ந்தாலும், தனது மக்களை காப்பாற்றப் போராடும் தாய்க்கு நிகரான இனியொரு ஜீவன் இந்த உலகில் இல்லை.

பெற்ற மக்களே தன்னைத் தூற்றினாலும், துன்பம் தந்தாலும், அதனை ஒரு பொருட்டெனக் கருதாமல், அவர்களது நல்வாழ்வினை மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவள் தாய்.

அப்படிப்பட்ட ஒரு தாயின் மனநிலையில் இருந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, நமது தாய் பூமியை மாசுபடுத்தும், சமூக விரோத சக்திகளின் கண்களைத் திறக்கட்டும்.

நீ தலைவி மட்டுமல்ல! தாயுமானவள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: mofamalik (kayalpatnam) on 01 December 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 24294

அஸ்ஸலாமு அலைக்கும் "ஒரு தாயின் தாக்கம்" தலைப்பே மிகவும் அருமை...தன்னுடைய உள்ளத்தின் உணர்வுகளை மிகவும் அற்ப்புதமாக வெளிபடுத்தியுல்லார்கள்.

"""""காலங்கள் கடந்து நிற்கும் உயிர் போராட்டத்தின் உன்னதச் சுவடுகளை நம் சுவாசம் கலந்த மண்ணில் - நம் சந்ததிகளுக்காகப் பதித்துச் செல்வோம். நாம் ஒவ்வொருவரும் கண்ட இறப்புகளிலிருந்து, போராட்ட உணர்வுகளை “ஃபீனிக்ஸ்” பறவையாக நாம் பிறந்த ஊரில் உயிர்த்தெழச் செய்வோம்"""" என்ன ஒரு அருமையான வரி.............

தாய்மையான மென்மையான தலைவி அவர்களுக்கு உங்களிடம் படித்த மாணவியின் நெஞ்சார வாழ்த்துக்கள்..... ........இன்னும் உங்கள் சேவை தொடரவேண்டும் .......

யா அல்லாஹ் இந்த ஊர் மக்களை உன்னை அன்றி வேறு எவராலும் காப்பாற்ற முடியாது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. தங்கத்தால் இமயம் செய்து தந்திடினும் தாயன்புக்கு ஈடேது இவ்வுலகில்...?
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 02 December 2012
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24305

சேர்மன் ஐ.ஆபிதா அவர்களின் இக் கட்டுரை வெளிவந்த நாள் முதல் இன்று வரை நான் படிக்கவே இல்லை! சரி இது ஏதோ பஞ்சாயத்து மேட்டராக இருக்கும். ஒன்ணு டெண்டர் விடுறதெ பத்தி இருக்கும் அல்லது திடக்கழிவு குறித்து இருக்கும் என வாசிப்பதை தவிர்த்து வந்தேன். இன்று எனக்கு விடுமுறை நாள் சரி என்னதான் எழுதியிருக்காங்கன்னு பார்ப்போமே? என அரை மனதோடு வாசிக்கத் துவங்கினேன்.

கட்டுரையைப் படித்து முடித்ததும் இதயம் கனத்தது. கண்கள் கசிந்தன. இது ஒரு தாயின் குமுறல் மட்டும் அல்ல! ஆயிரக்கணக்கான தாய்மார்களின் உள்ளத்தின் கொதிப்பு! ஒரு பத்து நிமிடங்கள் தனியாகப் போய் உட்கார்ந்து விட்டேன். அவர்களின் ஆதங்கம், ஒரு தாய்க்கே உரித்தான அக்கறை, சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக எடுத்துரைத்த விதம், மனதைத் தொட்டு சிந்தையில் ஊடுருவிய வார்த்தைகள். மகளுக்கு உணவை மறந்தாலும் மருந்தை மறக்காமல் கொண்டு வந்த நிகழ்வு, அந்த பிஞ்சு மழலைகள் படும் பாடு, இவையாவும் என் மனக்கண் முன் வந்து நின்று என்னைக் கொல்லாமல் கொன்றது.

யா அல்லாஹ் இந்த தாய் மற்றும் இது போன்ற தாய்மார்களின் குமுறல்களை நீ செவியுற்று எங்கள் சந்ததிகளின் சீரான வாழ்வுக்கு வழி காட்டு வல்லோனே!

அநியாயம் செய்து வரும் DCW அரக்கனை அடியோடு எம் மண்ணிலிருந்து எடுபட்டுப் போகச் செய்தருள் நாயகனே!

மழலைகள் படும் பாட்டையும், பெரியவர்கள் படும் சொல்லவொண்ணாத வேதனைகளும், வீட்டுக்கு வீடு புற்று நோயின் குடிபுகல் மூலம் விலைமதிப்பில்லா இன்னுயிரை இழந்து வருகின்றோமே? இதற்கோர் முடிவை உன் புறத்திலிருந்து இறக்கியருள் ரஹ்மானே!

எம்மையும் எமதூர் மக்களையும் உன் மேலான பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து, வரும் பிணிகளிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும், முசீபத்துக்களில் இருந்தும் காப்பாற்றியருள் கருணையாளனே! ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்! யா அர்ஹமர்ராஹிமீன்! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:...உருக்கமானக் கட்டுரை
posted by: Palappa Muhiyyadheen Abdul Kader, (mannady) on 02 December 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24319

அஸ்ஸலாமு அலைக்கும் காயல் நகரத் தலை மகளே!

இதுவரை உங்களை நகர் மன்றத் தலைவியாகப் பார்த்த நான் முதன் முறையாக சேய் நலன் நாடும் கருணைத் தாயாக மட்டுமல்லாமல் புரட்சிகர எழுத்தாளராகக் கண்டு மனம் நெகிழ்ந்தேன் ஒரு கணம் நிலை குலைந்தேன்.

காரணம் தங்களின் கட்டுரையைப் படித்ததும் கண்ணீர் வந்தது,செந் நீரும் சிந்தி விடுமோ என அச்சப்படுமளவிற்கு ஆளானேன்.இருப்பினும் மனதைத் தேற்றியவனாக காயல் நகருக்கு இப்படி ஒரு கள்ளங் கபடமற்ற கைக்கிளைக் கிடைத்ததை எண்ணி பரவசமடைந்தேன்.

மேலும் இந்தக் கட்டுரையைக் கூட குடியரசுத் தலைவரில் ஆரம்பித்து புரோட்டோக்கால்ப்படி அனைத்து ஆட்சி முறை அரசு,அரசுத் துறைகளுக்கும்(சுற்றுச் சூழல் துரு உட்பட) விண்ணப்பப் படிவத்தில் இணைத்து அனுப்பினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

காரணம் கல் மனமும் கரையத் தக்க வகையில் ஒரு பாதிக்கப்பட்டத் தாயாகவும்,நகர் மன்றத் தலைவியாகவும் இருந்து கணத்த நெஞ்சத்தோடு கட்டுரையை வரைந்துள்ளார்.என்பது குறிப்பிடத் தக்க சாரம்சமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தனிப் பெருங் கருணையாலும்,தாஹா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் நல்லாசியாலும்,நாயகத் தோழர்களின்(ரலியால்லாஹு அன்ஹும்) நர்க் கிருபையும்,இறை இமாம்கள்,இறை நேசச் செல்வர்களின்(ரலியாள்ளஹு அன்ஹும்) இனிய துஆ பறக்கத்தாலும் வெற்றி கிடைக்கும்.

இப்படிக்கு

பாலப்பா முஹிய்யதீன் அப்துல் காதர் P A k ,

கேம்ப்-மன்னடி,

சென்னை,

தொடர்புக்கு-044-25266705,9751501712


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:...SALUTE
posted by: M.FAUZ (ALAIL. UAE) on 08 December 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24424

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம் ( ஊர்) மக்களுக்காக பேசிய தாய்க்கு என் சலுட் (SALUTE )
ம. பவுஸ்
AL AIN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved