Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:12:01 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 28
#KOTWART0228
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 10, 2014
அன்று போல் என்று வரும்...?
இந்த பக்கம் 2884 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிஞ்சு வயதில்
கொஞ்சி ஆடிய ஆட்டங்களை
கொஞ்சமும் மறக்க முடியவில்லையே...?
அன்று போல் என்று வரும்
என்ற ஏக்கம்
ஏனோ குறைவதில்லை!

கச்சை கட்டிக் கொண்டு
குச்சிக் கம்பு ஆடியதை
நெஞ்சம் மறக்கவில்லை!
வண்ண வண்ண
பட்டம் பலவிதம் செய்து
பறக்கவிட்ட காட்சி!
பட்டாம்பூச்சி போல்
கண்ணுக்கு எதிரே
பறந்து வந்து பகரும் சாட்சி!!

கழுதை சவாரியால்
ஏற்பட்ட தழும்புகள்
இன்னும் மறையவில்லை!
டப்பாவில் பொத்தல் போட்டு
மெழுகுவர்த்தியை விளக்காய் வைத்து
சந்து பொந்து சுற்றித் திரிந்து
நாய்களை அடித்த சம்பவம்
நன்றாய்ப் பதிந்துவிட்டன மனதில்!

கொச்சைக் கயிற்றைப் பேருந்தாக்கி
கோட்டைச் சுவர்களைப் பேருந்து நிறுத்தமாக்கி
கொண்டாட்டமாய்ப் பயணம் புரிந்ததை
நினைத்து என் மனம்
இன்னும் பேரின்பம் அடைகிறது!

வானம் அருள் மழை பொழிந்தபோது
மாடி இல்லத்து குழாய்களில்
அருவி போல் கொட்டிய நீரில்
ஆர்வமாய் நீராடிய சம்பவம்
அலைபோல வந்து செல்கிறது!

அணியமைத்து ஆர்வமாய்
ஆடிய கால்பந்தாட்டம்
நித்திரைப் பொழுதிலும்
முத்திரை பதிக்கின்றது!

இருட்டு வேளையில்
திருட்டுத் தனமாய்
திரைப்படம் பாக்கச் சென்றதை
நினைத்தால் இன்றும்
நெஞ்சம் படபடக்கிறது!

மும்முரமாய் தினமும்
பம்பரம் ஆடிய நினைவுகள்
சுற்றிச்சுற்றி வருகின்றன!

சாலையில் வட்டமிட்டு அதில்
புளியங்கொட்டையைக் குவித்து வைத்து
கெண்டு ஆடிய ஆட்டமெல்லாம்
இன்றும் இனிதாய் இனிக்கிறது!

அடுத்தவர் வீட்டின்
அழைப்பு மணியை அழுத்திவிட்டு
அர்ச்சணை பெற்றோராக
ஓடி ஒளிந்த காலங்கள்
இன்று வரை மனதில்
ஓடிக்கொண்டே இருக்கிறது!

ஏழு கல் ஆட்டம்
என்றேனும் மறக்க முடியுமா?
காக்கை அப்பப்பா
ஜேப்தட்டு ஒரு
கலக்கலான ஆட்டமப்பா!

கண்களைப் பொத்திக்கொண்டு
மல்லிகைப் பூ ரோஜாப்பூ
மெல்ல வந்து தொட்டுக்கோயென
முகம் மலர்ந்து ஆடிய ஆட்டம்
இன்னும் மணமாய் வீசுகிறது!

குருவி பற பற
கொக்கு பற பறவென
ஆசையாய் ஆடிய விதம்
பொக்குவின் மனதில்
ஓசையாய் ஒலிக்கின்றது!

மணல் சிற்பம்
மனதை விட்டும் மறையாது!

கபடி ஆட்டம்
காலத்தால் கரையாது!

வாலிபால் ஆட்டம்
வாழ்நாளெல்லாம் மறக்காது!

சமுத்திரக் குளிப்பு
நெஞ்சம் பகரும் குறிப்பு!

கண்ணாமூச்சி விளையாட்டு
என்னே அருமை!

கள்ளன் போலிஸ் விளையாட்டில்
கரையும் நேரமே தெரியாதே!

கொலை கொலையா முந்திரிக்கா
அலை அலையாய்
இதயத்தை ஆர்ப்பரிக்கிறது!

மழைக்காலத்தில் விட்ட
காகித ஓடம்
மனதெல்லாம் மிதக்கிறது!

தூண்டில் போட்டு
மீன் பிடித்த நினைவை
கிணறுகள் தூண்டி விடுகின்றன!

உப்பு மூடை ஆட்டம்
இன்றும் கூட ஆட நாட்டம்!

அதிர வைக்கும்
குதிரை விளையாட்டு
மனதில் பாயும் ஆனந்தம்!

மறக்க முடியவில்லையே...
அன்று ஆடிய ஆட்டத்தை!

இன்று ஆட முடியவில்லையே...
எவரிடம் விவரிப்பேன்
எனதிந்த ஏக்கத்தை? இனி
அன்று போல் என்று வரும்...?!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Kaleel (Chennai) on 10 September 2014
IP: 124.*.*.* India | Comment Reference Number: 37158

பொக்குவின் கவிதை அருமை !! அருமை !!

இன்று ஆட முடியவில்லையே என்பது உனது ஏக்கம். ஆடுவதை பார்க்கவும் முடியவில்லையே என்பது எனது ஏக்கம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. மலரும் நினைவுகள்
posted by: V.M.T.MOHAMED HASAN (HONG KONG) on 11 September 2014
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 37160

அஸ்ஸலாமு அலைக்கும்.

மச்சான் பழைய நினைவிற்கு எங்களை எடுத்து சென்று விட்டாய், நன்றி.

அது ஒரு அற்புதமான காலம், மலரும் நினைவுகள்.

அறியாமல், விளையாட்டு தனமாக சிறு தவறுகள் செய்து விட்டோம். அல்லாஹ் பிழை பொருப்பானாக, ஆமீன்.

நமது இளமை கால சமுதாய சேவைகளை கவியாக எழுதுங்கள்.

உனது நண்பன்
V.M.T.முஹம்மது ஹசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: P.S. ABDUL KADER (KAYALPATNAM) on 11 September 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37161

பொக்குவின் தாகம் புரிந்துவிட்டது. தான் இளம்வயதில் ஆடியதையும், விளையாடியதையும் வர்ணித்த கவிதை கண்டு பூரித்தேன்.

இன்னும் நீன் விளையாடிய ஆட்டங்களை விட்டு இருகிரா, அடுத்து விட்ட ஆட்டத்தை தொடர்கவிதையாக எதிர்பார்கிறேன்.

அதோடு இன்றைய மக்களின் மின்பொருள் உபயோக ஆட்டத்தையும் சித்தரித்து கவிதை தொகு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. இளமையாட்டம்
posted by: Pirabu Zainul abdeen (Dubai) on 11 September 2014
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37165

இரண்டு நிமிடம் இந்த பதிவை படித்ததில் நம்மை இருபது ஆண்டுக்கும் முன்னால் கொண்டுபோய் விட்டது என்றால் மிகையாகது.

எவ்வளவு மாற்றங்கள் இந்த குறுகிய காலத்தில். எவ்வளவு இழப்புகள். மாற்றம் ஒன்று தானே மாறி கொண்டு இருக்கும்.

வேற ஊர்களில் எப்படி என்று தெரியாது அனால் நம்ம ஊரில் அதுவும் தெருவுக்கு தெரு seasonal games நம்மை குதுகூல படுத்தும்.

விடுமுறை என்று வந்தால் இரு வேலை உணவுக்கும் மட்டுமே வீட்டில் தஞ்சம் புகுவோம். ரோட்டில் காட்டானை போல சுற்றிய காலம் அது. நினைக்கும் போதே எவ்வளவு சந்தோசம். எவ்வளவு ஆனந்தம்.

இப்படி எவ்வளவோ .....

எழுத்தாளர் பொக்கு முஹம்மத் மொஹிதீன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் எம்மை இளமை பருவத்தின் அழகை அசை போடா வைத்ததற்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by: S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) on 11 September 2014
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37170

"அஸ்ஸலாமு அலைக்கும்."

நண்பன் மம்மி எழதியது, சிறு வயதிற்கு சென்று வந்தது போல் உள்ளது, சுமார் 22 வருடம் கடந்து என் கைபேசி இலக்கத்தை எடுத்து உரையாடி மகிழ்ந்தது எனக்கு உண்மையில் மகிழ்ச்சி!!!!! அத்துடன் கால் பந்து விளையாட்டில் உனக்கு நான் தண்ணீர் காட்டியதை மறந்து விடாதே! அத்துடன் நீ வேறு யாருக்கோ கல்லை விட்டு என் மண்டை உடைத்ததை, தெரு கூடி, உன்னை தேடி, சத்தம் போட்டது மற்றக முடியாத உண்மை மம்மி அப்பா!!!

அன்புடன் உன் பாலிய நண்பன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. AWESOME
posted by: Muhammadh Abubacker (Muscat) on 11 September 2014
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 37171

இன்று ஆட்டம் மற்றும் மறையவில்லை, மரியாதை, ஒழுக்கம் என அனைத்தும் மறைந்து வருவது வருதமானதுதான்.

இதுவெல்லாம் மறைந்ததற்கு என் மனதில் படும் முக்கிய காரணம் உலகளாவிய மாற்றங்களும், நம் மக்கள் தொழில் துறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, காரணம் பல சொல்லி பிள்ளைகளுக்கு பெற்றோரின் தொழிலில் இடுபடுத்தாதுதான். படித்தால் மட்டுமே வாழ்வு என்று சொல்லி முதலாளிகளாக இருந்தானாம் தொழிலாளர்களாக மாறிவிட்டோம்.

LKG - ல் இருந்தே படிப்பு படிப்பு என இன்று குழைந்தைகள் படும் பாடு வருத்தத்திற்கூறியதே. இதற்கு இன்றைய பெற்றோர்களில் எவரும் விதிவிலக்கல்ல. குறிப்பிட்ட பருவம் வரை நாம் எந்த கவலையும் இல்லமால் இருந்தோம் (எப்படியும் தோல் அல்லது கல் வியாபாரம்).

இன்றைய குழந்தைகளுக்கு சந்தோசம், மகிழ்ச்சி, அல்லது கவலையின்மை என்றால் என்னவென்று தெரியுமா என்பதே மிகப்பெரிய கேள்வி.

நவீன மாற்றத்தால் இயற்கையின் பரிசுகளை (உ.ம். தண்ணீர்) விலைக்கு வாங்கும் நிலை. தேவைக்கும், சுகத்திற்கும் வைத்து இருந்த நிலம் இன்று வியாபார பொருள்.

மாற்றம் ஒன்றே மாறாதது. இன்ஷாஅல்லாஹ், பழைய காலங்கள் திரும்பும் என்ற நம்பிக்கையில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. தம்பி முஹம்மத் மொஹிதீன் உடைய ஆக்கம் அருமையிலும் அருமை
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 11 September 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37172

இப்போதுள்ள இளைஞர்கள் இதைப்படித்தால் என்னமோ கிரிக்கி இருக்கிறாரே,இதெல்லாம் என்ன என்று கேட்கும் அளவிற்கு இந்த விளையாட்டெல்லாம் ஒரேடியாக ஓடிஒழிந்து மறைந்து விட்டது!

இவையெல்லாம் வெறும் விளையாட்டுமட்டுமல்ல,அதை விளையாடும் பொழுது ஏற்பட்ட இனபுரியா சந்தோசம் உற்சாகம் அதை வாழ்நாளில் எப்பொழுது நினைத்துப்பார்த்தாலும் ஒரு ஏக்கம் கலந்த ஏமாற்றம்.இந்த இளமைபருவத்திற்கு திரும்ப எந்த வழியும் இல்லையா என்னிறைவா என்று நடக்க முடியா அந்த பசுமை கால நினைவுக்காக நம் மனதை பைத்தியமாக்கும் உணர்வு.

ஆனால் இப்பொழுதுள்ள இளைஞர்களிடம் என்னத்தை பார்க்கமுடிகிறது, இருபத்திநாலுமணி நேரமும் கைப்பேசியும் கனணியை கைப்பிடித்தலும் தான் அவர்கள் பொழுதுபோக்கு உலகம், விளையாட்டு, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து அவர்கள் இளமைபருவத்தை எண்ணிப்பார்த்தாலும் அதில் வெறும் வெறுமையையும்,எந்த மகிழ்வும் இல்லாமை என்ற இயந்திர இயக்க நிகழ்வைத்தான் அவர்களால் குறிப்பிட முடியும்!

தம்பி முஹம்மத் மொஹிதீன் உடைய ஆக்கம் அருமையிலும் அருமை. என்னை எங்கேயோ இழுத்துக்கொண்டு போனது மட்டுமல்ல எதைஎதையோ நினைத்து இனம் புரியா மகிழ்வில் மிதந்த நான் ,அப்படியா அசந்து விட்டேன் அரைத்துளி ஆனந்த கண்ணீர் விழிக்கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்து விட்டது. என்னிதைய பாராட்டுக்கள் தம்பிக்கி. இன்னும் எழுது ஏனைய தலைப்புக்களில்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்! . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) on 11 September 2014
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37174

நண்பன் பொக்கு கவிதை மிக அருமை. அந்த நாள் நினைவுகள் ஊசலாடியது.நன்றி நண்பனே .தொடரட்டும் நின் கவிப்பணி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:... அருமை
posted by: HUSSAIN HALLAJ (YANBU - KSA) on 11 September 2014
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37178

அஸ்ஸலாமு அலைக்கும்.

அருமை காக்கா,

உங்கள் கவிதை எதுகை மோனை நடை சூப்பர் . எனது HIGHLIGHT PART இது தான் .

குருவி பற பற
கொக்கு பற பறவென
ஆசையாய் ஆடிய விதம்
பொக்குவின் மனதில்
ஓசையாய் ஒலிக்கின்றது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் ..
posted by: musthak ahamed (kuwait) on 14 September 2014
IP: 204.*.*.* United States | Comment Reference Number: 37227

அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள்

வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
விளையாடி உடலையும்
விருந்தோம்பி மனதையும்
பலப் படுத்திக் கொண்டார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை
மருந்தின்றி -
சுற்றுச் சூழலை சொந்தமாக்கி
வளர்த்துக் கொண்டார்கள்

சிறியார்கள் மரியாதையையும்
பெரியவர்கள் அன்பையும்
பரிமாறி - பரிமாறி - இரத்தம் தாண்டியும்
பந்தம் வளர்த்தார்கள்

இன்றும் இரும்பாய் - காக்கும்
இந்த ஊருக்கான சுவர்
ஒற்றுமையை கொண்டே கட்டப்பட்டது.

ஆம்
அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் தான்.

எந்த சொல்
எந்த வார்த்தை
ஆத்மாவின் அந்தப்புரத்தை
வருடிச் செல்லுமோ
அதுவே கவிதை
எனில்
நண்பரின் கவிதை
அதை ஆர்ப்பாட்டமாகவே
செய்து முடித்திருக்கிறது..........

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:...
posted by: hafiz seyed ismail azhari (kayalpatnam) on 14 September 2014
IP: 223.*.*.* India | Comment Reference Number: 37243

உங்களை என் சாச்சப்பா என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் ஒரு முத்தான கவிதையை உங்களில் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன். மாஷாஅல்லாஹ்! மிகவும் அருமை!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. கவிதை அருமை .
posted by: salih.sma (sakaka, ksa) on 14 September 2014
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37244

அஸ்ஸலாமு அழைக்கும்....

என் காகா வின் கவிதை அருமை ...

படித்ததும் என் மனதில் ஒரு சந்தோஷம் இருந்தும் ஒரு வருத்தம் .. இப்படி பட்ட அனுபவங்கள் வரும் தலைமுறைக்கு கிடைக்காமல் போவதை விட தெரியாமல் போகிடுமோ என்பதும் ..

நண்பன் முஹம்மத் அபூபக்கர் சொல்வதும் மிக சரியானதே.. முதலாளி தனத்தை விட்டும் தொழிலாளியாகி கொண்டு இருக்கிறோம்...

வரும் காலங்களிலாவது முதலாளியாக முயற்சிப்போம் ....

வல்ல அல்லா துணை புரிவனாக...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. நெஞ்சம் மறப்பதில்லை...அதன் நினைவை வெறுப்பதில்லை....!
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) on 14 September 2014
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 37249

இந்த கவிதைக்கு நான் மூன்று முறை கருத்தெழுதி அது திருப்தி படாததால் அழித்துவிட்டேன். இது என் எழுத்துப்பணியில் ஏற்பட்ட தொய்வா? அல்லது அந்த அளவிற்கு இக்கவிதை என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? என சொல்லத் தெரியவில்லை.

இதே தளத்தில் நான் எழுதிய ”காயலின் காணாமல் போன விளையாட்டு” எனும் கட்டுரைக்கு நான் எடுத்துக்கொண்ட நாள் அவகாசமும், வரிகளும் சற்று அதிகம்தான். நான் பக்கம் பக்கமாக சொன்ன அத்தனை நிகழ்வுகளையும் ஒரே ஒரு கவிதை மூலம் பகிர்ந்து பரவசப்படுத்திவிட்டார். யார் இந்த பொக்கு? இவ்வளவு நாள் எங்கிருந்தார்? ஏன் எழுத்து மேடைக்கு வர இத்தனை தாமதம்? இப்படி எண்ணங்களை அலைபாய வைத்து விட்டார்.

வரிகளில் வடித்திருக்கும் வார்த்தை நயமும் வளமான நடையும் பொருத்தமான சொல்லும் கோர்த்தெடுத்த முத்தான கவிதை எனலாம்! பாராட்டாமல் இருக்க இயலாது. பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த காலம் அது! சொல்லித்தரவா வேண்டும்? கூடி விளையாடு பாப்பா எனும் பாரதியின் கூற்றை மெய்பித்தவர்களாயிற்றே நாம். நண்பர் பொக்கு தங்களின் எழுத்தில் ஓர் ஈர்ப்பு உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். கவிதையோடு நின்றுவிடாமல் கட்டுரைகளும் எழுத முன் வாருங்கள். முதல் கவிதையிலேயே நான் தங்களின் ரசிகனாகவிட்டேன். வாழ்த்துக்கள்….!

அன்புடன்,
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved