Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:21:05 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 45
#KOTWART0145
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 4, 2013
சவூதி மன்னரின் ரமழான் ஈகை!
இந்த பக்கம் 2655 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சவூதி மன்னர் அப்துல்லா அவர்கள் சுமார் 1.4 பில்லியன் சவூதி ரியாலை (1 பில்லியன் என்பது 100 கோடியாகும்) பயனாளிகளுக்கு கிடைக்கும் படி அரசு கருவூலத்திற்கு ஆணையிட்டுள்ளார். இதன் படி இப் பயன்பெறும் தகுதி உள்ளவர்களின் ரமழான் மற்றும் ஈத்பெருநாள் செலவீனங்களையும் ஈடுகட்டக் கூடிய முறையில் இது இருக்கும்.



இதுபற்றி சமுக நலத்துறை அமைச்சர் யூசுப் அல் - ஒதைமீன் கூறும்போது, இவ்வுத்தரவு கிடைத்து 72 மணித்தியாலயங்களில் அப் பணம் பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்றார்.

“இது வறியவர்களுக்கு மாதா மாதம் தரும் உதவிப் பணத்திலிருந்து வேறுபட்டது. நோயாளிகள், வயதில் மூத்தவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், அனாதைகள், சிறையில் இருப்பவர்களின் குடும்பங்கள் போன்ற நலிந்த மக்கள் பலர் இதன்மூலம் பலன் அடைவர். இவர்கள் சமுகநல அலுவலங்களுக்கு வந்து இப்பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய வங்கி கணக்கிற்கு உடனடியாக அது செலுத்தப்பட்டு விடும்” என்றார் யூசுப் அல் - ஒதைமீன்.

இது நிற்க, மன்னர் அப்துல்லா 250,000 குர்ஆன் பிரதிகளை, சவூதி அரசின் இஸ்லாமிய விவகார அமைச்சோடு தொடர்புடையை வெளிநாட்டில் உள்ள இஸ்லாமிய மையங்களுக்கு பகிர்ந்து கொடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி சவூதி தூதுவராலயங்கள் மூலம் அவை வெளிநாடுகளில் விநியோகிக்கப்படும்.

இக்குர்ஆன் பிரதிகள் மதீனாவில் உள்ள மன்னர் பஹத் பெயரில் உள்ள அச்சத்தில் அச்சிடப்படும். இவ் அச்சகத்ததை இஸ்லாமிய விவகார அமைச்சு நேரடியாகக் கவனிக்கிறது. இங்கு குர்ஆன் பிரதிகள் அச்சிடலோடு, அதன் மொழி பெயர்ப்போடு வேறு பல இஸ்லாமிய நூல்களும் இங்கு அச்சிடப்படுகின்றன. மன்னர் அப்துல்லா சவூதி எயார்லைனுக்கு இப்பிரதிகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.

மத்தஃப் மேம் பாலம் திறப்பு

கஃபதுல்லாவைப் பொறுத்தவரையில் இந்த வருட ரமழானின் சிறப்பு அம்சம் யாத்திரீகர்கள் தவாபு செய்வதற்கான மத்தஃப் எனும் மேம் பாலம் திறக்கப்பட்டதாகும். மன்னர் அப்துல்லாவின் பணிப்புரையின் கீழ் மஸ்ஜிதுல் ஹரம் பெரிய பள்ளியின் கத்தீபும், புனித பள்ளிகள் இரண்டின் நல விவகார சபையின் தலைவருமான ஷேக் அப்துல் ரஹ்மான் அல் - சுதைஸ் அவர்களால் பிறை 17 வியாழன் அன்று திறந்து வைக்கப்பட்டது.



12 மீட்டர் அகலமும் 13 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மேம்பாலம் 1700 சக்கர நாற்காலியாளர்களை ஒரு மணி நேரத்தில் கொள்ளும் வசதி கொண்டது என்று சுதைசி தனதுரையில் குறிப்பிட்டார். இப்பாலம் தற்போது மூத்த வயதினர்களுக்கும், சக்கர நாற்காலி பாவிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட் டுள்ளது.

சென்ற நவம்பர் 15ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான் முடிவடைந்து தற்போது தற்காலிகமாக இது திறக்கப்பட்டுள்ளது. முழு வேலையும் 2015 பூரண மாகியதும், ஒரு மணித்தியாலயத்திற்கு சுமார் 105,000 யாத்திரிகர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். இதனால் ஹஜ் காலங்களிலும் பெருமளவு சனநெரிசலை தவாபு செய்பவர்கள் தவிர்க்கமுடியும்.

இதே வேளையில் 12,000 சக்கர நாற்காலிகளும் 110 மின்சார சக்கர நாற்காலிகளும் தவாபு செய்பவர்களுக்கு கட்டணமின்றி தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை போக மேலதிகமாக 521 மின்சார சக்கர நாற்காலிகளை வாடகைக்கு எடுக்கவும் முடியும். இந்த நாற்காலிகளை தள்ளுவதற்கு இரவு பகல் எந்நேரமும் போதியளவு தொண்டர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

“இந்த பாலம் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. பின்னால் இருந்து சக்கர நாற்காலிக்காரர் மோதிவிடுவார் என்ற பயமில்லாது கஃபாவைச் சுற்றி நாங்கள் தவாபு செய்ய இது வசதியாக இருக்கிறது” என்று கூறியவர் துருக்கியைச் சேர்ந்த முதியவர் கரீம் அஹ்மத்.

‘தவாபை இலகுவாக்க சவூதி அரசு செய்த இந்தப் பணியை நான் மிகவும் மெச்சுகிறேன். சக்கர நாற்காலிகாரர்களையும் கால்நடைக்காரர்களையும் பிரித்து வைத்துள்ளதானது நடப்பவர்கள் விரைவாக தங்கள் தவாபை செய்து முடிக்க ஏதுவாக இருக்கும் என்று கூறியவர் வேறு யாருமல்ல இலங்கையைச் சேர்ந்த முகம்மது அக்பர்.

நாற்காலி தள்ளும் இளம் தொண்டன் அப்துல்லா தான் செய்யும் பணி தனக்கு மனநிறைவத் தருகிறது என்றார். முதியவர்களையும் இயலாதவர்களையும் தவாபு செய்வதற்கு நான் உதவுவது மூலம் அல்லாஹ் எனக்கு நிறையக் கூலி தருவான் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

மக்கா ஹரம் பாதுகாப்பு குழுவின் கமாண்டர் மேஜர் ஜெனரல் யஹ்யா அல் ஸஹ்ரானி கூறும் போது பாலமும் அதனை பாவிப்பவர்களும் அதன் சுற்றுப்புறமும் எங்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டே வரும். பாதுகாப்பு பணியாளர்கள் நிறைய எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். மேலும் பாலத்தை கட்டிய நிறுவனம் தனது பொறியியலாளர் குழு ஒன்றையும் எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளது என்று சொன்னார்.

இதுபோக அரசு தந்த ஒரு குறிப்பின்படி இந்த புனித ரமழான் காலத்தில் 50 லட் சம் நோன்பாளி யாத்திரிகர் களை எதிர்பார்ப்பதாக அது விளம்பியது.

Friday Mosque

மதீனா செல்லும் யாத்திரி கர்கள் விரும்பி விஜயம் செய்யும் இடங்களில் முக்கிய மானது, ஆங்கிலத்தில் Friday Mosque என்றும் முன்பு Atekam Mosque என்றும் அதற்கு முன்பாக பள்ளத்தாக்கு மஸ்ஜித் என்றும் அழைக்கப்படும் மஸ்ஜித் ஆகும். இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் மக்காவை விட்டு ஏகியபின் முதல் முதலாக ஜூம்மா தொழுகையை நடாத்திய மஸ்ஜித் இதுவே ஆகும். இது கூபா மஸ்ஜிதிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. ரனவ்னா பள்ளத்தாக்கின் அடியில் இயற்கை வனப்புமிக்கதாக இது அமையப் பெற்றுள்ளது.

இந்த மஸ்ஜிதீன் கூரையானது ஹிஜ்ரி 09ம் வருடம் (கி.பி 630)ஷம்ஸ் அல்தின் கவூன் என்பவரால் திருத்தம் செய்யப்பட்டது. இம்மஸ்ஜித் முதலாவதாக புனருத்தானம் செய்து மீளக்கட்டப்பட்டது உமர் பின் அப்துல் அசீசின் ஆட்சியில், இரண்டாவதாக அப்பாசித் அவர்களின் ஆட்சி காலத்தில், அதாவது ஹிஜ்ரி 155 முதல் 159 வரை, மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இம்மஸ்ஜித் ஒரு சிறிய குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது 8 மீட்டர் நீளம், 4.5மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரம் என்ற அளவிலேயே இருந்தது. செங்கற்களால் செய்யப்பட்ட 8 மீட்டர் நீளத்தில் மீனாராவும் இதற்கு இருந்தது. வடபுறத்தில் 8 மீட்டர் நீளம் 6 மீட்டர் அகலம் கொண்ட சிறிய மண்டபமும் இருந்தது.

துருக்கி ஒட்டமான் ஆட்சி காலத்தில் சுல்தான் பேசயித்தின் பணிப்புரையில் 14ம் நூற்றாண்டின் மத்தியில் இந்த மஸ்ஜித் விஸ்தரிக்கப்பட்டு புனருத்தானம் செய்யப்பட்டது. பின்பு ஹிஜ்ரி 1412ல் சவூதி ஆட்சியாளரின் கட்டளைப்படி இம்மஸ்ஜித் பெரிதாக வடிவம் பெற்றது. இன்றைய இம் மஜ்லிஸின் தோற்றமானது ஆரம்ப கால மஜ்லிஸைவிட பல மடங்கு பெரியது, நவீனமானது.

கியாம் அல்லை தொழுகை

ரமழான் 20 முதல் சவூதியெங்கும் உள்ள பள்ளிவாயல்களில் “கியாம் அல்லை” தொழுகை ஆரம்பமாகிவிட்டது. மஸ்ஜிதுகள் அனைத்தும் பராமரிப்பிற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் ஊழியர்களை முழுநேர பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். மஸ்ஜிதுகளை சுத்தமாக வைப்பதோடு எந்த நேரமும் மின்சாரமும் தண்ணீரும் தடையில்லாது கிடைக்கும்படி செய்வது இவர்களது பிரதான கடமை.

ரமழான் கடைசி 10 தினங்களில் சகல மஸ்ஜிதுகளும் இரவு பகலாகத் திறந்திருக்கும். இரவு நேரத்தில் குர்ஆன் ஓதுபவர்களும் வணக்கங்களில் ஈடுபடுவர்களும் எந்த இடையூறும் இன்றி தங்களது பணியைத் தொடரலாம். பெண்களுக்கென தனியாக இடவசதி இல்லாத மஸ்ஜிதுகள், தற்காலிக தடுப்புகளை அமைத்து கொள்ளலாம்.

சுமார் 1,500 மஸ்ஜிதுகளில் பராமரிக்கும் ஒரு தனியார் நிறுவன முகவர் கூறும் போது “எங்களது ஊழியர்களுக்கு இரவில் கடைசி வரை பணியில் இருக்கும்படி கட்டளையிட்டு இருக்கிறோம். இவர்களது பணி மஸ்ஜிதுகளை சுத்தமாக வைத்திருப்பது, சகல மின் விளக்குகளும் சரியாக எரிகிறதா எனப்பார்ப்பது, மின்சாரத்தை தடை ஏற்படாது கவனிப்பது, ஒவ்வொரு குழாயிலும் தொடராக தண்ணீர் வருகிறதா என்று கவனிப்பதுமாகும்” என்று குறிப்பிட்டார்.

பெரிய மஸ்ஜிதுகளுக்கு 10 ஊழியர்களும் சிறிய மஸ்ஜிதுகளுக்கு இரண்டு ஊழியர்களும் போதும் என்று அவர் மேலும் கூறினார். தலைநகர் ரியாத்திலும் மற்றும் உள்ள பிரதான நகரங்களில் சில பெரிய மஸ்ஜிதுகள் அரச குடும்பத்தவர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுவது குறிப்பிடப்படவேண்டும். முஸ்லிம் விவகார அமைச்சு 5,000 மஸ்ஜிதுகளை தங்கள் பொறுப்பில் பராமரிக்கிறது.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அவாள் கொடுக்கிறாள்...! - இவாள் கொடுக்க முடியவில்லை...!
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 04 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29203

சவூதி மன்னரின் அணைத்து தகவலையும் தந்த துரை அவர்களுக்கு ... நன்றி...

எண்ணெய் வளம் அதிகம் அதான் அவாள் அணைத்து வசதிகளையும் அணைத்து மக்களும் பயன் பெற கொடுக்கிறாள்...!

நம் நாட்டில் ஊழல் வளம் பெருத்து ஆறாக ஓடுகிறது ஆகையால் இவாள் கொடுக்க முடியவில்லை...!

வெள்ளைக்காரனை துரத்திய நம் முன்னோர்கள்
கொள்ளைக்காரனிடம் நாட்டை கொடுத்து விட்டார்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...சிறப்பான நாளில் வெளிவந்துள்ள சிறப்பான கட்டுரை
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 04 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29205

ஷாஹ்ஜஹான் துறை அவர்கள் பார்பதற்கு ஒரு சாதாரண ஆளாக, ஆர்பாட்டம் இல்லாத ஆளாக தெரிந்தாலும், அவர்கள் ஒரு நிறைகுடம் என்ற உண்மை அவர்கள் எழுதும் கட்டுரைகள் மூலம் தெரிய வருகிறது.

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து".

இவ்வளவு வேலைகளையும் செய்து கொண்டு, இவ்வளவு செல்வங்களையும் வாரி வழங்கி கொண்டு, தன்னை KHAADHIMUL; HARAMAIN இரு பெரும் ஹரம்களின் ஊழியன் என்று தன்னை அழைத்து கொள்ளும் ஒரு மா மன்னன் எங்கே, சின்ன ஒரு TUBE LIGHT டை பள்ளிவாசலில் பொருத்திவிட்டு, தன பெயரை அதில் சுற்றிவர எழுதி வெளிச்சம் வர தடையாக இருக்கும் நம் தலைவர்கள் எங்கே?

புனித கவ்பாவையும் நபிகள் நாயகம் ரவ்லாவையும் மீண்டும் தரிசித்து வரும் பாக்கியத்தை அல்லாஹ் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. இது தான் உலகம்
posted by: T.M.RAHMATHULLAH (Kayalpatnam.) on 05 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29210

السلام عليكم و رحمةالله وبركاته

KPM .com நேயர்களே மலைக்கவேண்டாம் . எல்லாம் அல்லாஹ் வின் அருளில்தான் நடக்கிறது.என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஒரு அபூர்வமான செய்தி என்ன என்றால், இதே சவூதி அரசாங்கத்துக்கு சுமார் 70 ஆயிரம் இலங்கை ரூபாய் காயல் மக்களும் இலங்கை மக்களுமாக வசூல் செய்து இம்பீரியல் பெங்க் மூலம் DD எடுத்து சவூதி அரசாங்கத்துக்கு மானியம் அனுப்பிய அத்தாட்சி இன்றும் இருக்கிறது . இதற்க்கு உறுதுணையாக நின்று சேவை செய்தது நமதூர் கனவான்களான கொழும்பு PSKV .PALLAK LEBBAY& CO வைசஆர்ந்த கணம் .மர்ஹூம் பி. எஸ்.அப்துல் காதிர் ஹாஜி,எஸ் .ஓ ஹபீப் ஹாஜி போன்றோரும் இலங்கை டாக்டர் கலீல் போன்றோரும் இணைந்து செயல்பட்ட ஒரு சங்கத்தின் மூலம் அனுப்பினார்கள்.

ஏனெனில் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் 1945 ல் யுத்தம் காரணமாய் உலகில் எல்லா நாடுகளிலும் கடுமையான வறுமை ஏற்பட்டுவிட்டது..உணவுக்கு வழி இன்றி இருக்கும்போது ஹஜ்சுக்கு எங்கே போவது ? ஹாஜிகளின் வருவாயே எதிர்பார்த்து ரெவின்யூ வாங்கிய சவூதி அரசாங்கம் உலகில் பல நாடுகளிலும் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பியது .அல்லாஹ்வின் நாட்டம் எத்தனையோ நாட்டு உதவிகளுடன் நமக்கும் இந்த நர்ச்சந்தர்ப்பத்தை தந்தான்.அல்ஹம்துலில்லாஹ்!

இப்போது...?!!

இதுதான் உலகம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...மெய்சிலிர்க்க விற்கும் செய்தி.
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 05 August 2013
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29219

ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்கள் இங்கே பதிவு செய்துள்ள செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. இதே போல்தான் ஈராக் குவைத் யுத்தத்தின்போது சவூதிக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் "அன குவைத்தி" என்று பரிதாபமாக வாய் திறந்து தங்கள் இயலாமையை தெரிவித்து தெரு ஓரங்களில் சென்றிருக்கிறார்கள். ஒரு காலத்தில் சவூதிக்கு இவர்கள் வாரி வழங்கியவர்கள் என்று சொல்கிறார்கள்.

எனவே செல்வம் உள்ளவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள் அவர்கள் தாம் தேடிய செல்வம், என் கெட்டிதனதால் தான் வந்தது என்று மார் தட்டாமல், இது அல்லாஹ் எனக்கு தந்தது, அல்லாஹ்வின் பாதையில், அவன் சொன்னபடி செலவு செய்ய எனக்கு அமானிதமாக தரப்பட்டது என்று நினைக்க வேண்டும்.

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். கால சக்கர சுழற்சியில் மேலே இருப்பவன் கீழே வருவான், கீழே இருப்பவன் மேலே செல்வான். எல்லாம் அல்லாஹ்வின் கையில்.

சவூதிக்கே வாரி வழங்கிய காயலர்கள் என்ற பெருமையும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்ஹம்து லில்லாஹ்.அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கதீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: சாளை பஷீர் (சதுக்கை தெரு, காயல்பட்டினம்) on 06 August 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29230

ஸவூதி அரசு புனிதத்தலங்களை பராமரித்து வருவதும் குடிமக்களுக்கு உதவித்தொகை அறிவித்திருப்பதுவும் நல்ல செய்திகளே. ஒரு அரசின் அடிப்படைக்கடமையும் கூட .

உதவிகள் எல்லாம் சரிதான். சுரண்டலற்ற , வெளிப்படையான , ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடி வருடாத , காவல் துறையின் கெடுபிடியற்ற ஒரு அரசு என ஸவூதி அரசை கூற முடியுமா ?என்பதும் உதவித்தொகையைப் போலவே பில்லியன் டொலர் கேள்விதான் .

எகிப்தில் ஜன நாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரசின் கவிழ்ப்பை மிக முதலில் ஆதரித்த அரசும் ஸவூதிதான் என்பதை மறக்க இயலுமா ? அமெரிக்க , யூத வல்லாதிக்கங்களின் அடாவடிகளை கள்ள மௌனம் மூலம் அங்கீகரிப்பதும் இந்த ஸவூதி அரசுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: zakariya (chennai) on 07 August 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29251

சகோதரர் ஷாஜஹான் மக்காவை பற்றி எழுதட்டும் மதீனாவை பற்றி எழுதட்டும் அங்குள்ள மச்ஜிட்களை பற்றி எழுதட்டும் ஏன் அந்த மக்களை பற்றியும் அவர்களின் மாண்புகளை பற்றியும் எழுதட்டும். ஆனால் மக்களாச்சி என்றால் என்னவென்றே தெரியாத அந்த மன்னரை பற்றி எழுத வேன்றாம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. இக்கட்டுரையில் விடுபட்டவை.......
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 10 August 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29370

இக்கட்டுரையில் விடுபட்டவை.

சத்தியத்தை மனசாட்சியுடன் பேச அங்குள்ள ஆலிம்களுக்கு தடை. மீறி பேசினால்...... ஒன்று பாதாள சிறை, அல்லது நாடு கடத்தல்.

மற்றொன்று பணியிலிருந்து தூக்கி எறிதல்.

மன்னர் குடும்பங்களின் வீண் விரயத்திற்கு ஒரு அளவு இல்லை. மன்னராட்சிக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது என்பதால்தான் அவ்வப்போது இதுபோன்ற உதவிகள்.

சவூதியில் பணிபுரியும் எண்ணற்ற வெளிநாடு வாழ் மக்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சவூதி மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவும் தம் முடியாட்சியை பாதுகாப்பதர்கன்றி வேறெதற்கு.

இஸ்லாத்தை நிலைநாட்ட எனக்கூறிக்கொண்டு திருக்குர்ஆன் அச்சடிப்பு என்றெல்லாம் அள்ளி வழங்கி வெளிவிவகாரங்களில் அமெரிக்காவோடும் யூத நசாராக்களோடும் கள்ளக்காதல் வைத்திருக்கும் சவூதி அரசை என்னென்று சொல்வது.

நூஹு தம்பி மாமாவுக்கு ஒரு தகவல். விளம்பரமில்லாத ஒரு மன்னர் என கருத்து கூறி இருந்தீர்கள். கொஞ்சம் அவர்களின் அச்சுப்பிரதிகளை எடுத்து விளம்பரம் இருக்குதா இல்லையா எனப் பார்த்துச் சொல்லுங்கள். அவர்களின் வானொலி, டிவி நிகழ்ச்சிகளை ஒரு பத்து நிமிடம் பார்த்து விட்டு அதில் எத்தனை முறை ஃஹாதிமுல் ஹரமைனிஷ் ஷரீஃபைன் எனக்கூறுகிறார்கள் எனப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 27 August 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29739

Janab எம்.எஸ்.ஷாஜஹான் kaka Assalamu Alaikum

What that amount and wealth which was given to the public is not his own Money that is belong to the Land of Saudi which is from OIL AND DATES ALSO particularly from the exparts blood and sweaty . lot of new buildings sorounded by Haram Sherif on construction which are all mainly for commercial pourpose only slowly slowly they are changing the Islamic structure because they only want ishraaf and enjoing the Income from Holy visiters .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved