Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:43:54 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 52
#KOTWART0152
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 28, 2013
காமன்வெல்த் அரசியல் விளையாட்டுக்கள்!
இந்த பக்கம் 1972 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விளையாட்டு வினையானது என்பார்கள். அண்மையில் கொழும்புவில் நடந்த காமன்வெல்த் உச்சி மாநாடு அந்த அமைப்பின் கீழ் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் போல யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்துள்ளது. ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தின் மூலம் முன் வைக்கப்பட்ட எந்தக் கோரிக்கைகளும் நிறைவேறவில்லை.

“இந்த சர்வதேச மாநாடு கொழும்புவில் நடந்தால் விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் நடந்த மனித உரிமைகள் குற்றங்களை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ராஜபக்ச அரசுக்கு அங்கீகாரம் அளிப்பது போலாகிவிடும்... ஆகையால் அங்கே மகாநாடு நடக்கக் கூடாது... இன்னும் சொல்லப்போனால், காமன்வெல்த் அமைப்பில் இருந்தே இலங்கை நீக்கி வைக்கப்பட வேண்டும்... இந்தியா பங்கேற்கக் கூடாது... போர்க் குற்றங்களைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்...”

இவைதான் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் கோரிக்கைகளாக தீர்மானங்கள் மூலமாக வலியுறுத்தப்பட்டன.

மாநாடு இலங்கையில்தான் நடந்தது. அடுத்த உச்சி மாநாடு நடத்த வேண்டிய மொரிஷியஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் - அங்கே வாழும் இலங்கை தமிழர்களின் அழுத்தம் காரணமாக - போகவில்லை. இந்திய பிரமதர் மன்மோகன் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்து, கடைசியில் பங்கேற்க வேண்டும் என்ற தனது முடிவை, 2014இல் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு மாற்றி, தனக்குப் பகரமாக வெளி விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை மாநாட்டிற்கு அனுப்பியதன் மூலம் இந்தியா பலவீனமான நாடு என்பதை உலகுக்குப் பறைசாற்றியுள்ளார்.

மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்தில், தான் போகாததற்கான காரணத்தைக் கூட மன்மோகன் குறிப்பிடாததால், இலங்கை அவருக்கு உள்ள அரசியல் அழுத்தங்களைப் புரிந்து கொண்டு இந்த விடயத்தைப் பெரிதாக்கவில்லை.

மாறாக, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் மாநாட்டில் பங்கேற்றது மட்டுமில்லாது, யாழ்ப்பாணம் சென்று, அங்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல் அமைச்சர் விக்னேஷ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்த அதே நேரத்தில், போர் குற்றம் புரிந்தவர்கள் மீது மேலும் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அடுத்து மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கூட்டத்தில் சர்வதேச விசாரணை கோரப்படும் என்று ராஜபக்சவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதை, இதைத்தான் மன்மோகனும் செய்ய நினைத்தார், ஆனால் அரசியல் காரணங்களால் செய்ய முடியவில்லை என்று - அதுவும் வெளி மண்ணில், புலம்பி இந்தியாவுக்கு இருந்த கொஞ்சநஞ்சம் மானத்தையும் குர்ஷித் வாங்கி உள்ளார்.

“”””இந்த மிரட்டலுக்கு எல்லாம் மசிய மாட்டோம்... நாங்கள் அமைத்த உண்மை அறிதல் கமிஷன் அவற்றைப் பற்றி விசாரணை செய்து வருகிறது... அதற்கு காலக்கெடு எல்லாம் வைக்க முடியாது...””” என்று ராஜபக்ச கூறினாலும், இது அவருக்கு ஒரு பின்னடைவுதான். மாநாட்டு முடிவில் நிறைவேற்றபட்ட - கொழும்பு பிரகடனத்தில், இலங்கைக்கு எதிராக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இறுதிகட்ட போரில் புலிகள் அமைப்பின் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராகப் பணிபுரிந்த ஷோபா எனும் இசைப் பிரியா, போர் முடிந்த பின் இராணுவத்தால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை இங்கிலாந்து தொலைகாட்சியான ‘சேனல் 4’ ஒளிபரப்பியது இலங்கைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

முடிவில் யாருக்கு என்ன கிடைத்தது என்பதைக் கூர்ந்து ஆராய்ந்தால், இலங்கைக்கு எதிரான கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்களால், அது எந்த அளவுக்கு நீர்த்துப் போயிருக்கிறது என்பது புரியும்.

முதலில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் அத்துமீறிய செயல் ஆகும். பாகிஸ்தான் தேசிய சட்டசபையில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியபோது இந்திய நாடாளுமன்றம் பதிலுக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றவில்லையா? காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் தேசிய சபை தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுதலாகும். தமிழ்நாடு சட்டசபை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் “அது மட்டும் தொப்புள்கொடி உறவா?” என இலங்கை கேட்காதா?

இலங்கையில் அமைதி ஏற்பட, அங்குள்ள தமிழர்கள் சம உரிமையுடன் வாழ, 1987இல் - அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் செய்து கொண்டஒப்பந்தத்தைக் காப்பற்ற, 1200 இந்திய இராணுவ வீரர்கள் உயிர்நீத்திருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட மாகாண சபைகள் இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த சபைகளுக்குக் கொடுக்கப் பட வேண்டிய அதிகாரங்கள்தான் இன்னும் வழங்கப்படவில்லை.

போர் முடிந்துவிட்டாலும், தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒப்பந்ததின் கீழ் இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13ஆவது திருத்ததில் கண்டுள்ள அதிகாரப் பரவலாக்கல்தான் அடிப்படையாக அமையப்போகிறது என்பதை கொழும்பு அறியும். ஆகையால், மற்ற நாடுகள் போல இல்லாமல், இந்தியாவுக்கு இலங்கையின் விவகாரங்களின் அக்கறை காட்ட தார்மீக உரிமை உள்ளது. பிரச்சனை அதுவல்ல. இந்தியாவுக்கு உள்ள அக்கறையை இலங்கையே ஏற்றுக்கொள்ளும். அதற்காக இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் இந்தப் பிரச்சனையில் நுழைவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழக சட்டசபை இந்திய அரசுக்குத்தான் கோரிக்கை வைத்தது எனலாம். பங்களாதேஷ் இந்தியாவின் கோரிக்கை ஏற்று அங்கே உள்ள ஹூஜி (Harkat-ul-Jihad-al-Islami-HuJI) என்ற தீவிரவாத இயக்கத்தின் தளங்களை எல்லாம் அழித்து, இருபதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை டில்லியிடம் ஒப்படைத்தது. பிரதிபலனாக தீஸ்தா நதி பங்கீடு பற்றி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விழைந்தது. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜீயின் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் திரும்பினார்.

எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் செய்து வரும் அத்துமீறல்களையடுத்து, ஜம்மு -கஷ்மீர் சட்டசபை - இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. அதேபோன்று பிஜேபி கட்சியும் - பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரமதர் நவாஸ் ஷரீஃபை சந்திக்கக் கூடாது என்று கூறியது. ஆனால் பிரதமர் கேட்கவில்லை.

இந்தியாவின் வெளி விவகாரக் கொள்கை - மாநிலங்களிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு ஏற்ப மாறினால், எந்த அண்டை நாட்டுடனும் நல்லுறுவைப் பேணிக் காக்க முடியாது.

சட்டசபை தீர்மானத்தில் கண்டுள்ள கோரிக்கைகள் எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராதவை என்பதைத் தெரிந்திருந்தும், ஒரு விவாதம் கூட இல்லாமல் அது நிறைவேற்றப்பட என்ன காரணம்? அப்படிச் செய்தால்தான் அது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளைப் பிரதபலிப்பதாக வெளி உலகம் நம்பும. தமிழனாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, “நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை” என்று கூறினால், நான் தமிழ் இன துரோகி. இது என்ன ஒரு ஃபாசிஸ போக்கு?

1983இல் நடந்த இனக் கொலைக்கு பிறகு, லட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவிலும் மற்றும் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தபொழுது, மொரார்ஜி தேசாய் ஒருவர்தான், “நாம் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தீவிரவாதத்தை வளர்த்தால், பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை எதிர்க்க தார்மீக உரிமை இல்லாமல் போய்விடும்” என்று எச்சரித்தார். அவருக்கு யாரும் அன்று கருப்புக் கொடி காட்டவில்லை. அவர் சொல்லை இந்திரா கேட்கவில்லை. துரதஷ்டவிதமாக அதன் பலனை அவர் மட்டுமல்லாமல் அவர் மகன் ராஜீவ்காந்தியும் அனுபவித்தார்.

ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991இல் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பிறகு, இலங்கை பிரச்சனை எந்த ஒரு தேர்தலிலும் தமிழ்நாட்டில் எதிரொலிக்கவில்லை. மீண்டும் தலைதூக்கியது மே 2009இல், இலங்கை - வன்னியில் நடந்த இறுதிகட்ட போரின்போதுதான்.

தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல அப்பொழுது நாடகமாடிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர், இப்பொழுது இந்தப் பிரச்சனையைக் கையில் எடுப்பது 2014இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டுதான். தமிழர்களைக் காக்க பிரபாகரன் இல்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலனுக்காக இந்தப் பிரச்சனையைத் தீவிரமாகக் கையாள்வது, அங்குள்ள சிங்கள் இனவாதிகளின் கைகளைத்தான் வலுப்படுத்தும்.

அதனால் இன்னொரு 1983 அங்கு ஏற்படும் என்று பொருள் இல்லை. சிங்களவர்கள் கை சுட்டுக் கொண்டவர்கள். அதனாலதான் இறுதிப் போரின்போது கூட, யாழ்ப்பாண மக்களுக்கோ அல்லது கிழக்கு, கொழும்பு போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இறுதிப் போர் வன்னி பிரதேசத்தில்தான் நடந்தது. அங்குள்ள தமிழ் மக்கள்தான் - முன்னேறி வந்த இலங்கை ராணுவத்துக்கும், அதை எதிர்த்துப் போராடிய புலிகளுக்கும் இடையே மாட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கில் இறந்தனர்.

இனப் போர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. கடைசி மூன்று ஆண்டுகளில் நடந்த இறுதி யுத்தத்தில் தான் 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது ஐ.நா. சபை அமைத்த நிபுணர்களின் மதிப்பீடு. அதே குழு, “மனித உரிமை மீறல்கள் இரண்டு பக்கமும் நடந்துள்ளது... புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றால், இலங்கை அரசும் மக்கள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனை போன்ற இடங்களில் விமானம் மூலம் குண்டு வீசியும் மற்றும் ஷெல் அடித்தும் அப்பாவி பொதுமக்கள் சாவுக்குக் காரணமாகி விட்டது” என்று கூறியுள்ளது.

பிரபாகரன் தனி ஈழத்துக்காக அந்த மண்ணிலியே அந்த மக்களுடனேயே கடைசி வரை போராடி உயிர் நீத்துவிட்டார். அவர் தீவரவாதியா அல்லது விடுதலைப் போராளியா என்பதை சரித்திரம் தீர்மானிக்கட்டும். அவர் இயக்கமே அவருடன் அழிந்துவிட்டதால், அவர் செய்த குற்றங்களைப் பற்றிப் பேசிப் பயன் இல்லை.

ஆனால், போரில் வென்ற களிப்பில் இருக்கும் ராஜபக்ச அரசு இப்பொழுதே தனது எதேச்சாதிகாரப் போக்கால் சிங்களர்களுடைய ஆதரவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. கிழக்கில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களும், பெளத்த மத வெறியர்களுடன் ஏற்பட்டு வரும் மோதல்களால் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழர்கள் என்றுமே அவரை ஆதரிக்கவில்லை.

தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி, ஈழப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டால்தான் அங்கே நிரந்தர அமைதி ஏற்படும்.

அதேபோல், அது போர்க் குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிக்காத வரை, இலங்கை அரசு சர்வதேச அரங்கின் பார்வையிலிருந்து தப்ப முடியாது. அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள மனித உரிமை மாநாட்டில், இலங்கை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும். அப்பொழுது இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.

----------------------------------------------------------------

சு.முராரி - தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது அனுபவத்தைத் துவக்கிய இவர், 1984 ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழின் தமிழக செய்தியாளராக சென்னையில் இருந்து சேவை புரியத்துவங்கினார்.

இக்காலக்கட்டத்தில் இலங்கைக்கு பல பயணங்கள் மேற்கொண்ட இவர், தனது பயணங்களின்போது - தமிழ் மற்றும் சிங்கள தலைவர்கள் பலரை சந்தித்தார். ஈழப் போராட்டம், தாய்லாந்து நாட்டில் நடந்த விடுதலை புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை, 1987 முதல் 2010ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த அனைத்து தேர்தல்கள் ஆகியவற்றை இவர் நேரடியாக செய்திகளை சேகரித்து ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

மேலும் DECCAN HERALD பத்திரிகையில் பணிபுரியும்போது பல சர்வதேச நிகழ்ச்சிகள், சார்க் மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ள இவர், கஷ்மீர் மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமாக இருந்த 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில், JKLF அமைப்பின் தலைவர் யாஸீன் மாலிக்கை நேர்காணல் செய்ய கஷ்மீர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழில் இருந்து இவர் ஓய்வுபெற்றார்.

கடந்த ஆண்டு தனது இலங்கை அனுபவத்தை, "The Prabhakaran Saga: The Rise and Fall of an Eelam Warrior" எனும் தலைப்பில் புத்தகமாக முராரி எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை Sage Publications நிறுவனம் வெளியிட்டது. பரவலாக வரவேற்பு பெற்ற இப்புத்தகத்தை, தற்போது முராரி தமிழாக்கம் செய்து வருகிறார்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: சாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை) on 29 November 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 31723

நிதானமாகவும் நடு நிலைமையுடனும் எழுதப்பட்ட கட்டுரை. முராரிக்கு பாராட்டுக்கள் !

உணர்ச்சி வெறியும் அதி தீவிர போக்கும் மலிந்துள்ள தமிழ் நிலமானது இது போல அமைதியாக சிந்திக்க பழக வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: S.M.I.Zakariya (chennai) on 29 November 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31724

வாழ்த்துக்கள் முராரி அவர்களுக்கு. அரசியல் சதுரங்கத்தில் எல்லா அரசியல்வாதியும் தனக்கு என்ன கிடைக்கும் என்பதைத்தான் பார்க்கிறார்கள் என நினைக்கும் போது நாம் எங்கே சென்று கொண்டு இருக்கிறோம் என கவலை ஏற்படுகிறது

ராஜேபக்சே உண்மையில் ஒரு கொடுங்கோலனா இல்லை அவர் சந்தர்பத்தால் அவ்வாறு ஆக்கபட்டரா விளக்கினால் நன்றாக இருக்கும் .ஏனன்றால் போர் நடந்த பகுதியை தவிர மற்ற பகுதிகளில் அமைதி நிலவியதாக கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

துக்ளக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையில் அமைதி நிலவுவதாக ஒரு கட்டுரை பார்த்தேன். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் முரளிதரனும் இதையே பிரதிபலித்து இருந்தார். தற்போது இலங்கையில் அமைதி நிலவுகிறதா என் விளக்கவும். அந்த மக்கள் சுதந்திரமாக இருகிறார்களா எனவும் விளக்கினால் நனறாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. பயங்கரவாதியும் தீவிரவாதியும் ஒன்றல்ல
posted by: Abdul Wahid S. (Kaayalpattinam) on 29 November 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31725

(Part I)

தமிழ் மீடியாக்கள் (Both Print & Electronic) கால காலமாக செய்துவரும் (மொழியாகத்) தவறை கட்டுரை ஆசிரியர் திரு முராரி அவர்களும் செய்துள்ளார்.

"Terrorism ", "Terrorist " போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு "பயங்கரவாதம்", "பயங்கரவாதி" என்றே அர்த்தம் கொள்ளவேண்டுமே தவிர "தீவிரவாதம்", தீவிரவாதி என்ற அர்த்தம் அல்ல.

தீவிரவாதம், தீவிரவாதி என்பதற்கு "Extremism ", "Extremist " என்பதே சரியான

All Extremists are not terrorists but all terrorists are extremists.

"பிரபாகரன் ....... அவர் தீவரவாதியா அல்லது விடுதலைப் போராளியா என்பதை சரித்திரம் தீர்மானிக்கட்டும்". (C & P )

இங்கு கேட்கப்படவேண்டிய கேள்வி "பயங்கரவாதிய அல்லது விடுதலை போராளியா ? இதற்கு சரித்திரம் தீர்மானிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. பிரபாகரனும் அவருடைய இயக்கமும் சிங்கள இராணுவத்தை மற்றும் எதிர்த்து போரிட்டு மடிந்திருந்தால் நிச்சயமாக அவரை ஒரு விடுதலை போராளியாக இவ்வுலகம் அடையாளம் கண்டிருக்கும். ஆனால் எண்ணற்ற ஒரு பாவமும் அறியாத தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை கொன்று குவித்துள்ளது. மேலும் இந்திய உட்பட 32 நாடுகள் LTTE ஐ terrorist organization என்று அறிவித்துள்ளது. ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவர் விடுதலை போராளியாக கருதப் படமாட்டார். மாறாக ஒரு பயங்கர வாதியாகவே கருதப்படுவார்.

"முதலில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் அத்துமீறிய செயல் ஆகும்". (C & P).

நியாயப்படி பார்த்தால் ஐ. நா. சபை, அல்லது காமன் வெல்த் நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானகளை நிறைவேற்றி இருக்க வேண்டும். அதற்க்கு பல முன்னுதாரங்கள் இருக்கின்றன. குறைந்த பட்சம் இந்திய அரசு இந்த தீர்மானங்களில் பலவற்றை நிறைவேற்றி இருக்க வேண்டும். இவர்கள் செய்ய தவறியதைத் தான் தமிழக சட்டசபை செய்துள்ளது.

கட்டுரை ஆசிரியரின் கருத்துப் படி யார் யாரெல்லாம் இத்தகைய தீர்மாங்களை நிறைவேற்றவேண்டும்? அல்லது யாருமே நிறைவேற்ற கூடாதா? என்பதை விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

காமன் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான், 2 முறையும், .:பிஜி 2 முறையும் நைஜீரிய ஒரு முறையும் காமன் வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து தற்காலிகமாக தூக்கி எறியப்பட்டு பிறகு (சில வருடங்களுக்குப் பின்) சேர்த்துக் கொள்ளப்பட்டது . இந்த மூன்று நாடுகளுமே எந்த இனப்படுகொலைகளிலும் ஈடுபடவில்லை.

உதாரணத்திற்கு .:பிஜி 2 முறை வெளியேற்றப்பட்டதற்கு காரணம், அங்கு வம்சாவளி இந்தியர்கள் மண்ணின் மைந்தர்களாக கருதப்படும் (Native Fijians) .;பிஜியர்களை விட எண்ணிக்கையில் அதிகமாகி விட்டதால் ..;பிஜியர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த வம்சாவளி பிரதமரை இராணுவ துணையுடன் சிறை பிடித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி இந்திய வம்சாவளியினர் மீண்டும் ஆட்சியை (தேர்தல் மூலம்) கைப்பற்றாதவாறு அரசு சாசனங்களை மாற்றினார்கள்.

இலங்கயில் நடந்த இனப் படுகொலையை .;பிஜியர்களின் செயலோடோ Compare பண்ணும்போது, ..;பிஜியர்கள் செய்தது Nothing. இந்த செயலுக்காக இரண்டு முறை .;பிஜி காமன் வெல்த் நாடுகளின் அமைப்பிலிருந்து வெளியேற்றப் பட்டது மட்டுமல்லாமல் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டது.

Cont......(Part-II)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:..இலங்கை சரித்திரம் தெரிந்த ஒரு நடுநிலைவாதி .
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 29 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31726

இங்கு தமிழ் ஈழம் இலங்கையில் மலர வேண்டும் என்று பேசுபவர்கள் கூச்சலிடுபவர்கள் எல்லாம் சந்தர்ப்ப வாதிகள், பச்சோந்திகள்,வெறும் முராரி ராகம் இசைப்பவர்கள் என்பதை துணிச்சலாக எடுத்து சொல்லும் ஆசிரியர் முராரிக்கு வாழ்த்துக்கள்.

வான்படை, கடல்புலிப்படை, தரைப்படை, கன்னி வெடி வைக்கும்படை என்று பல படைகளை வைத்து அடுத்தடுத்து வந்த எல்லா இலங்கை ஆட்சியர்களையும் கதிகலங்க வைத்தவர் பிரபாகரன். அவர் எடுத்து வைத்த கோரிக்கை நியாயமாக இருந்தாலும் அதனை அடைவதற்கு அவர் எடுத்து வைக்க எட்டுக்கள் தவறானவை.hitler type அணுகுமுறை. ஹிட்லர் வெற்றி பெறுவதுபோல் நிகழ்சிகள் வேகமாக நடந்தாலும் அவர் படு தோல்வியை தழுவி தன்னையே மாய்த்து கொண்டார்.

பிரபாகரன் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு மாபெரும் ஈழ தமிழ் தலைவர்களின் உயிர்களை காவுகொண்டது, தமிழ் மக்களையே கேடயமாக பயன்படுத்தியது, தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்ந்ததை பொறுக்காமல் முஸ்லிம்களை அகதிகளாக விரட்டி அடித்தது, முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை தொழுகையில் ஒன்று கூடி நின்றபோது அவர்களை மிருக வெறி கொண்டு சுட்டு தள்ளியது, இந்தியாவின் இளம் பிரதமரின் உடலை சிதைத்து சின்னாபின்னப் படுத்தியது இவை எல்லாம் இங்குள்ள தமிழின தலைவருக்கு, தங்க தாரகைக்கு, புரட்சி புயலுக்கு, நாம் தமிழர் என்ற புது முக சீமான்களுக்கு இன்னும் புரட்சி கலைஞர்களுக்கு, மனித நேயம் பேசும் இஸ்லாமிய கட்சி தலைவர்களுக்கு தெரியாது என்றால், அது அவர்களுக்கு இலங்கை சரித்திரம் தெரியாது என்று எடுத்துக் கொள்வதா, அல்லது நிஜங்களை மறைத்து நிழல்களை துதிபாடுகிறார்கள் என்று அவர்கள் பேச்சுக்களை புறம் தள்ளுவதா என்று முராரி அவர்களின் பேட்டியை படிப்பவர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள்.

அவ்வளவு பெரிய படைகளை வைத்திருந்த பிரபாகரனாலேயே தமிழ் ஈழத்தை வென்றெடுக்க முடியவில்லை, கேவலம் ஒரு சில சட்டமன்ற ஆசனங்களுக்காக விலை போகின்றவர்களா, இலங்கை தமிழர்கள் விரும்பாத ஒரு தமிழ் ஈழத்தை அங்கு விதைக்க போகிறார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க பயப்படுபவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போவோம் என்று மார் தட்டுகிறார்கள்.

முராரி அவர்களின் நூலை இந்த அட்டை கத்தி வீரர்களுக்கு இலவசமாக அனுப்பி வையுங்கள். ஏனெனில் இவர்கள் "இலவசங்கள்" அளிப்பதிலும் பெறுவதிலும் மாமன்னர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Kashmir is not Eelam
posted by: Abdul Wahid S. (Kayalpatnam) on 29 November 2013
IP: 123.*.*.* India | Comment Reference Number: 31730

Part II

"சட்டசபை தீர்மானத்தில் கண்டுள்ள கோரிக்கைகள் எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராதவை என்பதைத் தெரிந்திருந்தும்......" (C&P)

எது நடைமுறைக்கு ஒத்துவராத தீர்மானங்கள் ? தமிழக சட்டசபை "தனி ஈழம்" உருவாக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவில்லையே ?. காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக வெளியேற்றவேண்டும் என்று தானே கோரியது!.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றுதானே கோரியது. இவை இரண்டையுமே ஐ.நா. சபை மற்றும் காமன் வெல்த் நாடுகளின் அமைப்பு சக உறுப்பினர் நாடுகள் மீது விதித்துள்ளது என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.

இந்திய அரசு இலங்கை தமிழர்கள் விசயத்தில் வலுவான ஒரு முடிவை எடுத்திருந்தால் இலங்கையை மண்டியிட வைத்திருக்க முடிந்திருக்கும். காரணம் காமன் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை காமன் வெல்த் உறுப்பு நாடுகள் நன்கறியும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு இதுவரை ஒரு வலுவான பிரதமரையோ அல்லது வலுவான அரசையோ நாம் பெறவில்லை என்பது நமது துரதிஷ்டம்.

-------------------------------------

"முதலில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் அத்துமீறிய செயல் ஆகும்". (C & P)

பிற நாட்டு உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற கொள்கையை எல்ல நாடுகளும் கடைபிடித்தால், சதாம் ஹுசைன் பிடியில்தான் இன்று வரை இராக் இருந்திருக்கும். லிபியாவும் கடாபியின் கையின் கீழ்தான் தொடர்ந்து சிக்கியிருக்கும். போஸ்னியா முஸ்லிம்கள் கூண்டோடு செர்பியா பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஹிட்லர் பிடியில் ஐரோப்பாவும் ஜப்பானியர்களின் பிடியில் ஆசியாவும் சிக்கி உலக நாடுகளின் வரைபடம் மாறியிருந்திருக்கும். ஏன் வங்காள மொழி பேசக் கூடியவர்களில் பெரும்பாலானோர் இன்று வரை கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் மேற்கு பாகிஸ்தானால் பாகுபடுத்தப் பட்டிருப்பார்கள். தென் ஆப்ரிகா வெள்ளை இன வெறியர்களின் ஆளுமையின் கீழ் தொடர்ந்திருக்கும். இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு நாட்டில் அநியாயம் நடக்கும் பொது வலிமையுள்ள நாடுகள் தலையிட்டு அந்த அநியாயத்திற்கு முடிவு கட்டாமலிருந்தால் ஹிட்லர். முசோலினி, இடி அமீன் போன்ற சர்வாதிகாரிகளின் கையில் சிக்கி இந்த உலகம் சின்னப் பின்னமாகியிருக்கும்.

----------------------------------------------------------

"காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் தேசிய சபை தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுதலாகும். தமிழ்நாடு சட்டசபை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் “அது மட்டும் தொப்புள்கொடி உறவா?” என இலங்கை கேட்காதா?" (C & P)

"இலங்கை - இந்திய - ஈழம்" என்ற முக்கோணத்தை "இந்திய - பாகிஸ்தான் - காஷ்மீர்" என்ற முக்கோணத்துடன் ஒப்பிட கட்டுரை ஆசிரியர் முனைத்துள்ளார்.

(பாகிஸ்தான் உலக அரங்கில் இதை செய்ய முயன்று இந்தியாவை தனிமை படுத்தும் முயற்சியில் படு தோல்வியடைந்துள்ளது.)

The two triangles are as different as Chalk and cheese.

1) காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளந்து தனி நாடாக்கி பிறகு தன்னுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் துடிக்கிறது. ஈழ விசயத்தில் அந்த மாதிரியான பகல் கனவு இந்தியாவுக்கு இல்லை.

2) பாகிஸ்தான் காஷ்மீர் மீது உரிமை கொண்டாடுவது போல, இந்திய ஈழம் மீது உரிமை கொண்டாடவில்லை.

3)S.W.R.D. பண்டார நாயக இலங்கை பிரதமராக இருந்த காலத்திலிருந்தே தமிழர்கள் மீது இனப்பாகுபாடு கொள்கையை கடைபிடித்து வந்துள்ளது இலங்கை அரசு. அப்படி ஒரு பாகுபாட்டை இதுவரை காஷ்மீர் மக்கள் மீது இந்திய அரசு நிலைநாட்ட முயற்சிக்கவில்லை. மாறாக மற்ற மாநிலங்களுக்கு இல்லாத தனி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

(இலங்கையின் பிரச்சனைக்கு அடிப்படி காரணமே இலங்கை அரசு தமிழர்கள் மீது காட்டிய இனப்பாகுபாடுதான்)

4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களை குடியமர்த்தி தமிழர்களை அவர்கள் பகுதியிலேயே சிறுபான்மையினராக ஆக்க அன்றும் இன்றும் இலங்கை அரசு முயற்சி செய்து வந்தது. (குறிப்பாக LTTE யுடன் நடந்த போருக்குப் பின் இந்த கொள்கை தீவிரப் படுத்தப்படுகிறது என்பது International மீடியா வின் குற்றச் சாட்டு).

ஆனால் காஷ்மீரில் பிற இந்திய மாநிலத்தவர்கள் குடியேறி காஷ்மீரிகள் சிறுபான்மையினர்களாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமையை காஷ்மீரிகள் அல்லாத மக்களுக்கு இந்திய அரசு (காஷ்மீர் மன்னருடன் ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படியில்) மறுத்துள்ளது.

அதனால் காஷ்மீரை ஈழத்துடன் ஒப்பிடுவது முறையல்ல.

Cont... Part III


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: S.M.I.Zakariya (chennai) on 30 November 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31740

வாஹிது காக்கா எதையோ சொல்லவந்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார் என எண்ணுகிறேன். காஷ்மீர் பிரச்சினையும் இலங்கை பிரச்சினையும் ஒன்றல்ல என்று சொல்வதற்காக எங்கெங்கோ செல்கிறார். கட்டுரையாளர் காஷ்மீர் பிரச்சினையில் எவ்வாறு பாகிஸ்தான் தலையிடுவது சரியான முறை இல்லையோ அவ்வாறே இலங்கை பிரச்சினையில் தமிழ் நாடு தலையிடுவது சரியெல்ல என குறிப்பிடுகிறார் இது நியாமான கருத்துதான் . மேலும் தமிழ் நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் அது ஒரு நாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது நல்ல முன்னுதாரணம் அல்ல ஆனால் இந்த கருது சரியெல்ல என்பதற்காக கஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்து ஒரு சார்பு நிலையை கையாள்கிறார்.

பேசவேண்டுமென்றால் முதலில் காஸ்மீரில் என்ன நிலைமை நிலவுகிறது என்பதை பற்றியும் மக்கள் அங்கு சுதந்திரமாக வாழ்கிறார்களா அல்லது மாற்றான் தாய் பிள்ளையை போல் பார்க்கபடுகிறார்களா மனமாற்றம் அடைந்த போராளிகள் கூட எவ்வாறு நடத்த படுகிறார்கள் 1949 ல் ஐக்கிய நாட்டு சபையில் கஷ்மீர் பற்றிய தீர்மானம் என்ன ஆயிற்று என்பதை பற்றி கூட பேசலாம் மேலும் கூட பேசலாம் இதற்கே கத்தியா அல்லது முழு comments உம் அம்போவா என தெரிய வில்லை. ஆகையால் இதோட விட்டு விடுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Lesson learnt from history.
posted by: Abdul Wahid S. (Kaayalpattinam) on 30 November 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31741

Part III

"இந்திய பிரமதர் மன்மோகன் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்து, கடைசியில் பங்கேற்க வேண்டும் என்ற தனது முடிவை, 2014இல் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு மாற்றி, தனக்குப் பகரமாக வெளி விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை மாநாட்டிற்கு அனுப்பியதன் மூலம் இந்தியா பலவீனமான நாடு என்பதை உலகுக்குப் பறைசாற்றியுள்ளார்". (C&P)

ஆசிரியரின் இந்த கூற்று முற்றிலும் உண்மை.

----------------------------

1983இல் நடந்த இனக் கொலைக்கு பிறகு, ......... (C & P)

கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட மாதிரி இனப் படுகொலை 1983 இல் ஆரம்பிக்கவில்லை. 1950 களின் இறுதியிலிருந்தே தொடங்கிவிட்டது.

பிரிட்ஷ் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தவரை சிங்க-தமிழ் மக்களிடையே பெரிதாக பிரச்சனை ஏதும் எழவில்லை. ஆங்கிலம்தான் Official Language ஆக இருந்தது. தமிழர்கள் பகுதியில் அதிகமான ஆங்கிலப் பள்ளிகள் இருந்தன. தமிழர்கள் சிங்களர்களை விட திறமையாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களாக இருந்தனர். ஆங்கிலப் புலமையின் காரணமாக சிங்களர்களைவிட அதிக சதவிகிதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழர்கள் Civil Servants ஆங்கிலேயர்களால் ஆக நியமிக்கப் பட்டனர்.

S.W.R.D. பண்டார நாயக 1956 இல் ஆட்சியை பிடித்தவுடன் "The Sinhala Only Act" என்ற சட்டத்தை கொண்டு வந்து சிங்கள மொழியை Official Language ஆக மாற்றினார். தமிழர்களை பதவி இறக்கம் செய்யும் படலம் ஆரம்பித்தது. தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இரண்டாம் வகுப்பு குடிமகனாக நடத்தப்பட்டமையால் வெகுண்டெல ஆரம்பித்தனர். ஆயுதமின்றி தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்திய தமிழர்கள் சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்டனர். பண்டார நாயக (புத்த பிட்சுவால் 1959 இல் சுடப்படுவதற்கு முன்னாள்) தமிழர்களை சிங்கள கும்பல்கள் கொலை செய்வதிலிருந்து காக்க தவறிவிட்டார்.

இதுதான் இலங்கை பிரச்சனைக்கு மூல காரணம்.

-------------------------------------------

"புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றால், இலங்கை அரசும் மக்கள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனை போன்ற இடங்களில் விமானம் மூலம் குண்டு வீசியும் மற்றும் ஷெல் அடித்தும் அப்பாவி பொதுமக்கள் சாவுக்குக் காரணமாகி விட்டது” என்று கூறியுள்ளது." (C&P)

புலிகள் செய்த படுகொலைகளுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது. காரணம் புலிகள் மாண்டுவிட்டனர். அனால் இலங்கை அரசு செய்த படுகொலைக்கு குற்றவாளி கூண்டில் நிறுத்தி ராஜ பக்ச்சேயிர்க்கும் அவரின் இராணுவத்திற்கும் தண்டனை வழங்குவதைத் தவிர வேறு என்ன பரிகாரம்.?

---------------------------------------

"தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி, ஈழப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டால்தான் அங்கே நிரந்தர அமைதி ஏற்படும்." (C & P)

Yes very True. தமிழர்களுக்கு சம உரிமை வழங்காமல் இரண்டாம் வகுப்பு குடிமகனாக தொடர்ந்து நடத்தப்பட்டால் நிரந்தர அமைதி ஏற்பட வைப்பு இல்லாமல் மட்டும் போகாது, பல பிரபாகரன்கள் உருவாகுவார்கள். காலப்போக்கில் பல அமைப்புகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் என்பது வரலாறு நமக்கு அறிவுறுத்தும் பாடம்.

--------------- END ------------------------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: Rilwan (Texas) on 04 December 2013
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31801

சகோ. அப்துல் வாகித் பதில்கள் அருமையானவை.

கட்டுரை ஆசிரியர் மன்மோகன் சிங்கிற்கு ஏன் சப்பை கட்டு கட்டுகிறார் என்பது புரியவில்லை.. டேவிட் கமரூன் செய்ததை மன்மோகன் சிங் செய்வதற்கு காமன்வெல்த் வரும் வரை காத்திருக்கத்தேவை இல்லை.. கொலோம்போ வில் இல்லாதா ரா அதிகாரிகளா? ஒபாமா நினைத்தால் ஆப்கான் வரை யாருக்கும் சொல்லாமல் போயி வருகிறார்.. நம் பிரதமருக்கு உள்நாட்டில் ஒரு பேரிடர் வந்தாலே ஏதோ ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி விமானத்தில் தான் பார்வை இடுவார்..

டேவிட் காமரூன் செய்ததற்கும் மண் மோகன் சிங் செய்ய நினைத்ததாக ஆசிரியர் கற்பனையாக கூறுவதற்கும் ஒரே வித்தியாசம் - Attitude. Attitude towards the people!!! Attitude towards the subjects!!!. Our ruling elites have such a supremacist view, rather it is right to say,illuminati world view!! That is the problem.

இவர்களுக்கு பதவி சுகம் அனுபவித்து அனுபவித்து மக்கள் பிரச்சினை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே தெரிகிறது.

Let make it clear. I don't think any of us support LTTE or LTTE's policies, but none of that justifies Srilankan government's policies and indeed there was a big difference between LTTE and Srilankan government. Whereas we know LTTE was a terrorist organization, did Srilankan government and its leadership behave like a civilian government?

பாகிஸ்தான் மற்றும் பிஜி நாடுகளை Commonwealth அமைப்பில் இருந்து வெளிஎற்றபட்டதில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என்று ஆசிரியருக்கு தெரியாதா? பிஜி நாட்டில் மகேந்திர சவுத்ரி அரசு கவில்கப்பட்ட போது வாஜ்பாயி அரசு வெளிப்படையாக தலையிட்டதே?

தமிழ்நாடு அரசியல்வாதிகள் கழுதைகள் தான்.. அதற்காக இலங்கை அரசின் தவறுகளை ஆதரிப்பதின் நோக்கம் என்ன?

அன்று தமிழர்கள் .. இன்று முஸ்லிம்கள் என சிறுபான்மை மக்களை நோக்கி நெருக்குதல்கள் வைக்கபடுகின்றன. இன்று வரை சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுத்த எவரும் கைது செய்யப்படவில்லை..

ஆசிரியருக்கு இலங்கையின் white wan problem தெரியுமா? திடீர் திடீர் என எதிர் கட்சியினரும் பதிரிகயாலர்களும் காணாமல் போவதும் அவர்கள் பிணம் கூட கிடைக்காமல் போவதும் எப்படி ஆசிரியருக்கு தெரியாமல் போயிற்று புரியவில்லை.

ஒருவர் ஜனாதிபதி.. சகோதரர் வெலிஉரவுதுரை அமைச்சர்.. இன்னொரு சகோதரர் சபாநாயகர்... மகனுக்கு முக்கிய பதவி.. ஆகா.. டெல்லி அரசியலை கோலோம்போவில் சரியாக செய்கிறார்கள்..

Rajapakshe playing right into the kleptocratic politics hovering over the sub-continent in the past fifty years wherein the ruling elites making their valiant effort to create a hierarchical society.

For these elites in India, Srilanka or anywhere in the sub-continent, people means subjects - not citizens.

Unfortunately, some elite journalists also playing hand in hand with this system. No wonder why Indian media got flacks from think tanks for lack of independent thinking and any desire to uphold democracy.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved