Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:38:52 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 54
#KOTWART0154
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 18, 2013
இன்னும் மனதில் நிற்கிறார்....!
இந்த பக்கம் 2577 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒரு 7 அல்லது 8 ஆண்டிருக்குமென நினைக்கிறேன். வறிய குடும்பமொன்று நம் KMT யில் அட்மிட்டாகி - அவர்கள் சக்திக்குட்பட்டவரை காசு செலவு பண்ணி - மருத்துவம் பார்க்கிறார்கள். அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகும் அன்று ஏறத்தாள அய்யாயிரத்தி ஒருநூறு ரூபாய் கட்டசொல்லி பில் வருகிறது KMT அலுவலகத்திலிருந்து. அவர்களால் அவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாத சூழல்.

என் தங்கை மூலம் எனக்கு இச்செய்தி கிடைக்கிறது. அச்சமயம் தாயகத்திலிருந்த நான் KMT விரைந்து அக்குடும்ப நிலையை அறிந்தேன். அங்கு KMT அலுவலகம் சென்று அவர்கள் சூழலைச்சொல்லி தொகையை கொஞ்சம் குறைக்கலாமே என்றேன். “அதற்கவர்கள் ஐநூறு, ஆயிரமென்றால் ஏதாவது பண்ணலாங்க. ஏறத்தாள அய்யாயிரம் ரூபாய்ங்க என்றனர். “இந்த மாதிரி PATIENT களுக்கு ZAKATH FUND திலிருந்து ஏதாவது செய்யலாமே என்றேன்” அதற்கவர்கள்; ‘ஹாஜியார் வந்த பிறகுதான் அதை கேட்கணும்' என்றார்கள்.

காத்திருந்தேன் ஹாஜியார் வரும்வரை. லுஹர் பாங்குக்கு சற்று முன்பு வந்தார் ஹாஜியார். PATIENT உடைய குடும்ப சூழலை அவரிடம் கூறினேன். கவனமாக கேட்டார். அலுவலரை அழைத்தார். எவ்வளவு..? என வினவினார். அலுவலர் தொகையை சொன்னார். பிறகு என்னிடம்; “சரிங்க... பாதி தொகையை ZAKATH FUND டிலிருந்து நாங்க கட்டிவிடுகிறோம். மீதியை எப்படியாவது முயற்சிபண்ணி அவர்களை கட்டச்சொல்லுங்கள்” என்றார்.

ஹாஜியார் அதைக்கூட அவர்களால் கட்டமுடியாது. அதை நான் பொறுப்பேற்கிறேன். அவர்களை அனுப்பிவிட்டு வந்து அப்பணத்தை நான் கட்டுகிறேன் எனக்கூறி அந்த PATIENT இருக்கும் வார்டுக்கு சென்றுவிட்டேன்.

அவர்களை ஆட்டோவில் அனுப்பி விட்டு அந்த மீதி பணத்தை கட்ட அலுவலகம் சென்றேன். ஹாஜியார் வெளிமணலில் நாற்காலியில் அமர்ந்து ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரை கடக்க முயற்சிக்க “தம்பி இங்க வா...” அழைத்தார் ஹாஜியார். “அவங்கள அனுப்பீட்டீங்களா...” எனக்கேட்டார். “ஆம்...” என்றேன்.

“வாப்பா, நீ யார் வூட்டு புள்ளே...” எனக்கேட்டார். என்னைப்பற்றி சொன்னேன். மேலும் சொன்னேன், நாங்கள் எம் மன்றம் மூலம் நலிந்தோருக்கு நிறைய உதவிகள் செய்கிறோம், நம்ம KMT க்குகூட இன்னின உதவிகளை செய்துள்ளோம், இன்னும் சில செய்திகளும் சொன்னேன். அவர் அனைத்தையும் “ம்” போட்டு கேட்டுக்கொண்டார்.

“இப்ப எங்க பணம் கட்டவா போறீங்க...”, “ஆமாம்” என்றேன். “சரி...” என்றார்.

நான், கட்ட வேண்டிய மீதி பணத்தை எடுத்து அந்த PATIENT உடைய பில்லுடன் இணைத்து CASH கவுண்டரில் கொடுத்தேன். CASHIER சொன்னார் “அந்த பில்லுடைய முழுத்தொகையையும் ZAKATH FUND டிலிருந்து கட்டும்படி ஹாஜியார் சொல்லிவிட்டார், அந்த பில் அப்பவே CLEAR ஆகிவிட்டது” என்று.

உடனே நான் CASH COUNTER ரிலிருந்து ஹாஜியாரை திரும்பிப்பார்த்தேன். அவர் சுவராஷ்யமாக அந்த நபருடன் சாதரணமாக பேசிக்கொண்டிருந்தார். “நான் மனதில் சொல்லிகொண்டேன்; எவ்வளவு நல்ல மனிதர். அந்த ஏழையின் நிலை அறிந்து உதவியுள்ளாரே’ என்று.

படியிறங்கி ஹாஜியாரிடம் சென்று “ஜஸாகல்லாஹ்.......” சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு; “தம்பி அந்த பணத்தை அவங்களுக்கே கொடுத்துடு, துவா செய்யச்சொல்லு...” என்றார். “சரி ஹாஜியார்...” என்று சொல்லிவிட்டு நகன்றேன்.

உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் நமதூரில் என்று எனதுள்ளம் சொல்லிக்கொண்டே வந்தது. நான் அறிந்து இதுபோல் அவர் பலருக்கு உதவியுள்ளார்.

இரக்கமுள்ளோர் இறப்பதில்லை. அவர் உயிர் வீழ்ந்தாலும், அவர் செயல் வாழ்கிறது.

அன்று என்னை விசாரித்த உவைஸ் ஹாஜியார் இன்னும் என் கண் முன் நிற்கிறார்...!

“அவனிடமிருந்தே வந்தோம்... அவனிடமே திரும்புகிறோம்...” மறைந்த அன்னாரின் ஆத்மா சாந்தி பெறட்டும்.

----------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 17 அன்று காலமான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் பற்றிய கட்டுரை

[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 5:30 pm / 18.12.2013]

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) on 18 December 2013
IP: 5.*.*.* | Comment Reference Number: 32078

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்..நல்லதோர் உண்மையான கட்டுரை ..நமது ஊரில் பணக்காரர்களிடம் பணம் இருப்பது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை ....ஆனால் மர்ஹும் ஹாஜியார் அவர்கள் போன்று இது போன்ற நற் சேவை செய்து எல்லோர்களின் மனதில் நிற்க வேணும் ....அதான் முக்கியம்.....நானும் ஊரில் மர்ஹும் ஹாஜியார் அவர்களின் நல்ல சேவைகள் பற்றி பல கேள்வி பட்டு ....அவர்களின் ஹக்கில் துவா கேட்டு உள்ளேன்....

நமது ஊர் பணக்கார்கள் மர்ஹும் ஹாஜியார் அவர்களை பின்பற்றி பொது மக்களுக்கு பல நல்ல உதவிகளை செய்திட வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் .......

இக்காலதில் எல்லோர்களிடமும் பணம் இருக்கலாம் ....ஆனால் நல்ல மனம் வேண்டுமே ......இடை காலத்தில் கொஞ்ச பணம் கையில் வந்து விட்டால் என்ன ஆட்டம் போடுகிறார்கள் ....அவர்கள் எல்லாம் மர்ஹும் ஹாஜியார் அவர்களின் பொது நல ..நல்ல காரியங்களை பார்த்தாவது ...பொறமை கொள்ளாமல் அவர்களும் இது போன்று பல நல்ல நற் காரியங்கள் ஊர் மக்களுக்கு செய்ய வல்ல இறைவன் அருள் புரியட்டும் .........

தங்களின் கட்டுரை மூலம் மர்ஹும் ஹாஜியார் அவர்கள். பொது மக்களின் மதிப்பில் உயர்ந்தும் ..+..அனைவர்களின் உள்ளதிலும் உயர்ந்தும் விட்டார்கள்.வல்ல இறைவன் ஹாஜியார் அவர்களுக்கு சொர்க்கத்தில் அவனின் உன்னதமான உயர்ந்த பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: A.Lukman (chennai) on 18 December 2013
IP: 27.*.*.* India | Comment Reference Number: 32082

அஸ்ஸலாமு அழைக்கும்.

ஹாஜியார் அவர்களின் கொடை தன்மைக்கு மற்றொரு உதாரணம்.

2 மாதங்களுக்கு முன் ஊரில் ஹாஜியார் அவர்களிடம் கோமான் தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான furniture பொருட்களை எங்கள் ஜமாஅத்தை சார்ந்தவர்களே வாங்கி கொடுத்துவிட்டோம், இப்போது நாய்க்கடி, பாம்புக்கடி விஷ முறிவு மருந்துகள் வைப்பதற்கு குளிர்சாதனப்பெட்டி தேவை என்றதும், மறுநாளே அதை வாங்கி கொடுத்துவிட்டார்கள். அதில் அன்பளிப்பு என்று அவர்களின் பெயரை போடுகிறோம் என்றதையும்ன் அப்படி செய்ய வேண்டாம் என மறுத்துவிட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: peena abdul rasheed (Riyadh) on 18 December 2013
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32086

மறைந்தவர் பற்றி இந்த தருணத்தில் தம்பி அரபி சுஹைப் கட்டிரை கண்ணை கரைய வைத்தது. நம் அல்லாஹ் அவர்ஹளுக்கு நற் சுவன பதவியை தருவானாக அமீன். இது போல் நமது பாசீன் ஹஜியார் அவர்கள் யாருக்கும் அறியாமல் பல பல உதவி செய்வதாக ஊரில் பல நபர்கள் சொல்ல அறிந்தேன். இது போல் பல பல நம் ஊர் நபர்கள் பல பல நபர்களுக்கு உதவி இருகிறார்கள். இறைவன் இவர்களுக்கு நல்ல சுகத்துடன் வாழ கிருபை புரிவானாக அமீன்.

பீனா அப்துர் ரஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. பலர் தனது மனதிலேயே கட்டுரை....!
posted by: தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 18 December 2013
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32090

சகோதரர் அரபி ஷுஅய்ப் அவர்களே....! தாங்கள் கட்டுரை எழுதி அதன் மூலம் இந்த புனிதரை பற்றி வெளி படுத்துறீர்...! ஆனால் இவர் இருந்த போதும் - மறைந்த பின்னும் பலர் தனது மனதிலேயே இந்த புனிதரை கட்டுரையாக வைத்துள்ளார்கள்...!

வல்ல இறைவன், மர்ஹூம் பெருந்தகை எளியவனின் துயரத்தை உணர்ந்த அவர்களது பிழைகளைப் பொருத்து, மேலான சுவனபதியை அருள்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: palappa A.K.Muhyiadeen Abdul kader (chennai) on 19 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32108

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல மனிதர்களுக்கு அவர்களின் மரணம் தீர்க்க தரிசனமாக இறைவனால் அறிவித்து கொடுக்கப்படும் என்பது கணம் கண்ணியத்திற்குரிய ஹாஜியார் அவர்கள் மூலம் அறிய முடிந்தது.

சேவைச் செம்மல் மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கனவான் தலைமைப் பொறுப்பேற்ற காயல் பட்டணம் முஸ்லிம் நாட்டாண்மை ஐக்கியப் பேரவையின் தலையாயப் பணிகளில் ஒன்றான காயல் பட்டணம் முத்துச் சாவடி வகைக்காக ஏற்கனவே கொடுத்த நன்கொடைகளோடு கூடுதலாக மேலும் தங்களின் நன்கொடையைக் கொடுத்ததோடு நில்லாமல் சென்னையைப் பொறுத்தவரையில் எனது மூத்த சகோதரர் ஜனாப் அல்ஹாஜ் எ.கே.யாசீன் அவர்களின் வாயிலாக காயல் வாழ் சென்னை பிரமுகர்களிடமும் நன்கொடை பெற அசுர வேகத்தில் செயல்பட்டதை என்னும்பொழுது மறுமைப் பயணத்திற்கு தங்களை ஆயதப்படுத்தியிருகிறார்கள்!

"நினைத்தாலே நெஞ்சம் சஞ்சரிகின்றது.இறைவனை எல்லோரும் நேசிக்கலாம் ஆனால் இறைவன் நேசிப்பது அவனது ஏவல்,விலக்குதல்களை,பின்பற்றி நடந்த,அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்கள் மட்டுமே ஆவார்கள். கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களையும்,நம்மையும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்!ஆமீன்.

வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா எ.கே.முஹியியதீன் அப்துல் காதர்.
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...மனிதருள் மாணிக்கம்
posted by: NETCOM BUHARI (CHENNAI) on 21 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32137

நல்ல தொரு 'மனித நேயரை ' இந்த மண் இழந்து விற்றது. ஆனால் இவர்கள் விட்டு சென்ற தியாகம் எங்களால் ஒரு நாலும் மறக்க முடியாது. அல்லாஹு தலா இவரின் மறுமை வாழ்கையை பிரகாசமாக ஆக்கி வைப்பான்னாக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved