Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:50:24 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 61
#KOTWART0161
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 21, 2014
யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
இந்த பக்கம் 1275 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre ..."

"நான் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளேன். ஆனால் - ஒரு திருடரையோ, ஒரு பிச்சைக்காரரையோ நான் காணவில்லை. இந்த நாட்டில் பெரும் செல்வதை நான் கண்டுள்ளேன். ஒழுக்க நெறியும், திறமையும் இங்கு மிகுந்து உள்ளது ...


மூலம்: 02.02.1835இல் பிரிட்டன் பார்லிமெண்டில் மெக்காலா பிரபு ஆற்றிய உரைப்பதிவு.

இந்தச் சூழ்நிலை தான் 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவியது!

----------------------------------------------------------------------

மூன்றடுக்கு ஆட்சி முறை (Three-Tier Administration) கொண்ட நாடு நம் நாடு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்று.

ஆனால் சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளாகியும் எந்தவோர் ஊரோ, நகரமோ தனது அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள், மருத்துவ வசதி, மின்சாரம், கல்வி போன்றவற்றில் தன்னிறைவு அடைந்ததாகக் கொக்கரிக்க இயலாத நிலை.



உள்ளாட்சி நிறுவனங்களுக்கு நாம் செலுத்தும் வரி இனங்கள், மாநில அரசுக்கு நாம் செலுத்தும் வரி இனங்கள், மத்திய அரசுக்கு நாம் செலுத்தும் வரி இனங்கள், உலக வங்கியிலிருந்து பெறப்படும் கடன்தொகை ஆகியன முறையாகக் கையாளப்படவில்லை.

முறையற்ற வகைகளில் கையாளப்பட்டு, கறுப்புப் பணமாக - வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. நாம் செலுத்தும் வரி இனங்கள் முறையாகக் கையாளப்பட்டிருந்தால், நம் நாட்டின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் தொலைநோக்கு அடிப்படையில் தன்னிறைவு அடைந்திருக்கும்.



இந்திய அரசமைப்புச் சட்டம் நம்மால் இயற்றப்பட்டது. நமக்கு நாமே அமைத்துக்கொண்டது. அச்சட்டத்தின்படி, நம் நாட்டில் - பிரதிநிதித்துவ ஜனநாயகம் (நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம்) நடைபெறுகிறது.

ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாக இல்லை. மாறாக, கட்சித் தலைமையின் மனப்போக்குக்கு உகந்த வகையில் செயல்படுகின்றனர். வெளிப்படைத் தன்மையற்றவர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும், க்ரிமினல் குற்றவாளிகளாகவும் உள்ளனர்.



மக்கள் பிரதிநிதி என்பவர் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் உணர்ந்தவராக இருத்தல் வேண்டும். எளிமையானவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். நம்மில் ஒருவராய், நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களுள் ஒருவராய், மக்களோடு மக்களாய் வாழ்பவராக இருத்தல் வேண்டும். சிந்திக்கத் தெரிந்தவராகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட ஆயத்தமாக உள்ள போராளியாகவும் இருத்தல் வேண்டும்.



எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது, சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவராகவும், மக்கள் பிரச்சினைகளுக்காக அனைத்து தியாகங்களையும் செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவராகவும் இருத்தல் வேண்டும்.

அண்மையில் டெல்லியில் பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சி, மக்களை மையப்படுத்தி பல முடிவுகளை எடுத்தது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. மக்களை மையப்படுத்தி, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உண்மையான - நேர்மையான - வெளிப்படைத் தன்மையுடன் செயல்படக்கூடிய நம்மில் ஒருவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுப்பதன் மூலம், நம்மை நாமே அதிகாரப்படுத்திக் கொள்வோமாக!

மனுதாரராக வாழ்ந்தது போதும்!
மன்னராக மாறுவோம்!!
நம்மை நாமே வலுப்படுத்துவோம்!!!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 22 March 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33864

அஸ்ஸலாமு அலைக்கும் ,

தன் பெயருக்கு தகுந்தமாதிரி சிறிய கட்டுரையை தந்து அதற்குள் சீரிய சிந்தனைகளை புதைத்துள்ள டாக்டர் எம். வள்ளுவனுக்கு பாராட்டுகள் .

இந்திய சட்ட புத்தகத்தில் உள்ள முக்கிய சாராம்சத்தை எடுத்து காட்டியதற்கு நன்றி .

ரத்தக்காட்டெரி நரன் தின்னி மோடியை கொண்டு ( பிரதமர் வேட்பாளரர் ) என்று கூறி நம் இந்திய சட்ட சாசனத்தை தகர்க்க நினைக்கும் ஹிந்துத்துவ பிஜேபி கூட்டத்தை இந்த நாட்டின் நீதி மன்றங்களும் , அரசு அதிகாரிகளும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் நம் ஜனநாயகத்தில் மற்றும் சமூக நீதிகளில் அக்கரை கொண்ட எங்கள் இந்திய சமூகம் ஒன்று இணைந்து அதனை முறியடிப்பாம் கூட்டாட்சியை நிலை நிறுத்துவோம் காட்டாட்சியை அமைய வீடமாட்டோம் .

ஜனநாயகத்தை , பணநாயகமாக்கி , பிணநாயகமாக்க நினைக்கும் பாசிச காரியத்தை ஒற்றுமையாக .முரியடிப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved