Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:26:45 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 90
#KOTWART0190
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 14, 2014
எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப் போலவே இருப்பான்!
இந்த பக்கம் 2037 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தனிநபர் சொத்து உரிமைகளில் பல்வேறு மதத்தினர் அவரவர் சட்டப் படி உரிமை கொண்டாட வழிமுறைகள், பழக்கவழக்கங்கள் உண்டு. ஆனால் பொது நிறுவனத்திலோ அல்லது ஜனநாயக அரசிலமைப்பிலோ அதுபோன்ற வாரிசுரிமைகள் இல்லை. முற்காலத்தில் அரசர்களில்லை. அரசர்களில்லாததால் போர்களில்லை. ஆனால் நாடுகளை ஆட்சி செய்ய அரசர்கள் வந்ததும் மன்னர்களின் மண்ணாசை ஆர்வத்தால் போர்கள் நடந்தன.

ஐரோப்பிய நாடுகளில் மற்ற நாட்டு மக்களுக்கில்லா மகிழ்ச்சி போலந்து நாட்டு மக்களுக்கு இருந்ததாம். காரணம் அங்கே மன்னர் ஆட்சி இல்லையாம்.

உலக ஆட்சி முறைகளுக்கு முன்னோடியான கிரேக்க நாட்டில் கடிவாளமில்லாத அதிகாரத்தினை சில ஆட்சியாளர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன என்று வரலாறு கூறுகின்றது.

இரண்டாம் உலகப் போரில் மன்னர் ஆட்சியின் மகுடங்கள் சரிந்து, மக்கள் ஆட்சி பல்வேறு நாடுகளில் மலர்ந்தது. மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் மூலம் ஆட்சி செய்வதுதான் ஜனநாயகம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தலைவர்கள் அகிலத்தில் உண்டு. அவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை, உறவினர்களை வாரிசாக நியமனம் செய்ததில்லை.

வாரிசுகளின் அரசியல் தலையீட்டால் பல்வேறு தலைவர்கள் பதவியிழந்த சம்பவங்களும் உண்டு. தலைமைப் பதவியை ஏற்ற வாரிசுகள் சர்வாதிகாரிகளாக மாறி சிம்மாசனங்களை இழந்தவர்களும் உண்டு. அவ்வாறு பதவியிழந்ததற்கு முக்கிய காரணங்களாக அமைந்தது:

1) வாரிசுகள் மைனர்களாகவும், முன்னனுபவமில்லாமலும் குழப்பமான அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

2) வாரிசில்லாத ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், மாட்சிமை அமைந்தவர்களாகவும் இருந்ததால் மக்கள் மற்றவர்களைத் தேர்ந்தடுத்தது.

வாரிசுகள் என்பது புகழுக்காகவோ, பதவி சுகத்திற்காகவோ, தங்களுக்குள்ளே இருக்கும் குரோதத்தை பதவியால் பழி தீர்த்துக் கொள்வதற்காகவோ அல்ல. மக்களை உண்மையான - நேரான வழியில் நடத்திச் செல்லவே பயன்படும் என்றால் மிகையாகாது.

இறைவழி வந்த யூத, கிருத்துவத்திலோ அல்லது இஸ்லாமிய மார்க்கத்திலோ வாரிசு உரிமை இல்லை. எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூட தன் கடைசி வாழ்நாளில் என் வாரிசு இவர்தான் என்று யாரையும் சுட்டிக் காட்டவில்லை. அனைத்து மக்களையும் அனைத்துச் செல்லும் திறமையை அவர்களிடம் எல்லாம்வல்ல அல்லாஹ் வழங்கி இருந்ததால், பெருமானார் அவர்கள் யாரையும் வாரிசு என்று சுட்டிக்காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம்கள் ஆளும் பல்வேறு அராபிய, வளைகுடா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அனுபவமில்லா வாரிசுகளை நியமித்ததால் உள்நாட்டுக்குள்ளே குழப்பம், வெளிநாட்டு மிரட்டல், அந்நிய நாடுகளின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு வழிவிட நேருகிறது. செல்வமிருந்தும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் உதவிக்கு மேற்கத்திய நாடுகளை நாட வேண்டியிருப்பது கேவலமில்லையா? மக்கள் பணி மறந்து மயக்கத்தில் இருப்பதனால் இந்தப் பரிதாப நிலை இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் எப்படியெல்லாம் அவர்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளார்கள் என்று!

அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்களைத் தட்டி எழுப்பி, அவர்களுடைய உரிமைக்காக தன்னுயிர் கொடுத்த மார்டின் லூதர் கிங், சொந்த நாட்டில் வெள்ளை இன மக்களால் பல இன்னல்கள் பட்டு கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்த தென் ஆப்ரிக்க சிங்கம் நெல்சன் மண்டேலா, காலனி ஆதிக்கத்திலிருந்து அன்னியப் படைகளை விரட்டிய துருக்கி நாட்டைச் சார்ந்த முஸ்தபா கமால் அட்டா துர்க், எகிப்தைச் சார்ந்த கமால் அப்துல் நாசர், இந்தியா, பாகிஸ்தானைச் சார்ந்த மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா போன்றோர் தங்கள் வாரிசுகளாக யாரையும் சுட்டிக் காட்டவில்லை என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

ஆனால் அதன் பின்னால் வந்த ஆட்சியாளர்கள் தங்கள் வாரிசுகளை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அடையாளம் காட்டியதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன என்பதை நாம் அறிவோம்.

இந்திய அரசியலில் மற்றவர்களுக்கு முடிசூட்டும் தலைவராக இருந்த காமராஜர், தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர் டாக்டர் அம்பேத்கர், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்த கண்ணியமிகு காயிதே மில்லத், பகுத்தறிவுப் பகலவன் பேரறிஞர் அண்ணா போன்றோர் தங்களுடைய வாரிசு இன்னார்தான் என்று சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அந்தப் பெரியார்களின் பெயரில் கட்சி நடத்தும் சிலர் தாங்கள்தான் வாரிசு என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அந்தப் பெரியார்களின் கொள்கைகளைக் காற்றில் பறக்கச் செய்யும் பரிதாபத்தை நீங்கள் காணலாம்.

எங்கெல்லாம் அரசியல் வாரிசாக தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அடையாளம் காட்டுகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் தோல்விகளை அன்றாட அரசியல் வானில் காணலாம். உதாரணத்திற்கு ஹரியாணா மாநிலத்தில் முன்னாள் துணை பிரதமர் தேவிலால் வாரிசு ஓம் பிரகாஸ் சௌட்டாலா, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் முன்னாள் முதல்வர் மனைவி ராப்ரி தேவி, முன்னாள் துணைப் பிரதமர் சரண் சிங் மகன் அஜீத் சிங், கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவகௌடா மகன் குமாரசாமி போன்றவர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய கட்சியின் செல்வாக்குகளெல்லாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையானது அனைவருக்கும் தெரியும்.

பிள்ளைகள் கேட்டு அடம் பிடிக்கின்றார்களே என்று அவர்கள் தின்பதற்காக பஞ்சு மிட்டாய், பாப்கார்ன், விளையாட பலூன், பார்பி பொம்மை அல்லது ஐ.பேட் போன்றவற்றை தந்தைமார்கள் வாங்கிக் கொடுக்கலாம். அதற்காக பிள்ளைகள் கேட்கின்றதே என்று படுக்க இலவம் பஞ்சு மெத்தை, ஏ.சி. மெசின் பெட் ரூம், கொப்பளிக்க பன்னீர், குளிக்க கழுதைப் பால், குடிக்க ஒட்டகப்பால், பயணம் செய்ய ஆடி.கார் போன்றவற்றை சாதாரண குடிமகன் வாங்கிக் கொடுக்க முடியுமா? முடியாதல்லவா? ஆகவே தந்தையார் உயர்பதவியில் இருந்தால் அவர் மகன் தந்தை போன்று உழைத்து முன்னுக்கு வர ஆசைப்பட வேண்டுமே தவிர, தந்தையின் சிம்மாசனமே வேண்டும் என்று ஆசைப்படுவது பேராசையில்லையா?

அதேபோன்று, ஒரு இமாம் திருக்குர்ஆனை - ஹதீஸ்களை அதிகமாகத் தெரிந்தவர், சிறப்பாக சொற்பொழிவாற்றுபவர்தான். ஆனால், அதனைப் பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் முஸ்லிம்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு முஸ்லிம்களை அடகு வைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்தவரா என்று சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொழுவதற்கு நியமிக்கப் பட்ட இமாம் பள்ளிவாசலுக்கு நானே எஜமான், எனக்குப் பின்பு என் சிறு வயது மகனே வாரிசு என்று 'உழுதவனுக்கே நிலம் சொந்தம்' என்ற அடிப்படையில் சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்?

அரசியல் போன்றே மதத் தலைவர்களும் தங்கள் வாரிசுகளை நியமனம் செய்வதால் மக்கள் மனதில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் ஏற்பட்டிருப்பதை இரண்டு உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்.

1) முகலாய பாரம்பரிய சின்னமாக தலைநகர் டெல்லியில் உள்ளது ஜும்மா மஸ்ஜித் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நானும் முதன்முறையாக 1979ஆம் ஆண்டு பார்த்துப் பரவசப் பட்டிருக்கின்றேன். அங்குள்ள இமாம் புஹாரி தனது 19 வயது மகனை தனது வாரிசாக நியமித்துள்ளார். அது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானதல்லவா? அந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றது மக்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

2) பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஆசிரமம் அமைத்து ஆட்சிமை நடத்திய திவ்ய ஜோதி சுவாமி அவர்கள் சென்ற நவம்பரில் மரணம் அடைந்து விட்டார். அந்த ஆசிரமத்தைச் சார்ந்த பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட அவருடைய மகன்களிடையே வாரிசு போட்டி ஏற்பட்டதால், இறந்த சாமியின் உடலை ‘ப்ரீசர் பெட்டியில்’ வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சாமியார் மீண்டும் உயிர் பெற்று மக்களுக்கு பூஜைகள் நடத்த யார் வாரிசு என்று அடையாளம் காட்டுவாராம்... இந்த வழக்கும் பஞ்சாப் உயர்நீதிமன்றம் வரை சென்று, உயர் நீதிமன்றமும் சென்ற நவம்பர் மாதத்திற்குள் அவருடைய உடலை அப்புறப்படுத்தி தகனம் செய்ய ஆணை பிறப்பித்தும், இன்னும் அந்தப் பிரேதம் பாதுகாக்கப்பட்டு வருவதாக பத்திரிக்கைச் செய்திகள் படம் பிடித்துக் காட்டுகின்றன என்பது என்னே வேடிக்கையான செயல்!

தமிழக முஸ்லிம் கட்சிகளில் சிலர் கண்ணியமிகு காயிதே மில்லத், அதற்குப் பின்பு வந்த சிராஜுல் மில்லத் ஆகியோருடைய உண்மையான வாரிசு நாங்கள்தான் என்று பெயரளவில் லெட்டெர் பேடு வைத்து அரசியல் நடத்தி தேர்தல் நேரத்தில் பத்தோடு பதினொன்றாக இருப்பது எந்த விதத்திலும் இதுவரை பலனளிக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்தத் தலைவர்களின் குடும்பச் சொத்துகளுக்கு அவர்கள் வாரிசுகளாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூதாயத்திற்கும் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?

அதேபோன்றுதான் இமாம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் பணியாளர் ஆவார்கள். அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கே எஜமானர்களாக ஒருபோதும் ஆக முடியுமா?

ஆகவே தனிப்பட்ட குடும்ப மற்றும் சொத்துப் பங்கீடு செய்வதில் வாரிசுகள் செல்லுபடியாகுமே தவிர அரசியல் வானிலோ, மத சம்பிராய சடங்குகளிலோ அதுபோன்ற செயல் போணியாகாது என்றால் சரிதானே!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எனக்கொரு மகன் பிறப்பான்..
posted by: mackie noohuthmbi (kayalpaattinam) on 15 December 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38450

"எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னை போலவே இருப்பான்'
என்பதோடு நிறுத்திக் கொண்டால் பரவா இல்லை.

"தனக்கொரு பாதையை வகுக்காமல்
தன் தலைவன் வழியிலே நடப்பான்"
என்ற கொள்கையுடன் வாரிசாக அரியணையில் அமர்ந்தாலும் பரவா இல்லை.

இவற்றை எல்லாம் தாண்டி தன் தந்தை பெயரை கெடுப்பதில் - தன் தந்தையின் வழிமுறையே தவறு என்று தண்டோரா அடித்து "என் வழி தனி வழி" என்று முடிசூட நினைப்பதுதான் தவறாக இருக்கிறது.

அரசியல் தலைவர்களில் பல ரகம் உண்டு. திருமணம் ஆகாமலே தலைவராக ஆகி தொடர்ந்து அந்த பதவியிலேயே இருந்து ஒய்வு பெறுபவர்கள். திருமணம் ஆகாமலே தலைவராகி தொடர்ந்து அந்த பதவியில் இருக்கும்போதே இவ்வுலகை விட்டு மறைந்து விடுவது. திருமணம் ஆனாலும் தன் மனைவி எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் அல்லது அதை உலகுக்கு அறிவிக்காமல் தலைவர் ஆகி விட்ட பிறகு மனைவியே தன் கணவர் இவர்தான் என்று அடையாளம் காட்டுவது - திருமணம் ஆகியும் வாரிசுகள் இல்லாமல் தலைவராகி மறைந்து விடுவது - திருமணம் ஆகியும் வாரிசு இல்லாமல் தலைவராகி நீண்ட நாளைக்கு பிறகு ஒரு வளர்ப்பு மகனை மக்களுக்கு மத்தியில் அறிமுக படுத்தி, அவனுக்கு பல கோடி செலவில் திருமணம் செய்து வைத்து பின்னர் அந்த வளர்ப்பு மகன் இந்த தாயையும் கூட்டிக் கொண்டு சிறைவாசம் செல்வது . தலைவராகி, மணம் முடித்து, மனைவிகளும் துணைவிகளும் வாரிசுகளும் நிறைந்திருந்து நிம்மதி இல்லாமல் வாழும் தலைவர்கள் - இப்படி வாரிசுகள் பிரச்சினை பலவாறாக தலை தூக்கி இந்த தமிழ்நாட்டின் அரசியலை படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறதை மிக இரத்தின சுருக்கமாக நகை சுவையுடன் எடுத்து எழுதியுள்ள பெரியவர் முஹம்மது அலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒரு காவல் துறை அதிகாரிகள் அந்த காக்கி சட்டைக்குள் ஒரு கலைஞன், ஒரு கவிஞன், ஒரு எழுத்தாளன் மறைந்திருப்பதை நீங்களே வெளிப் படுத்தியிருப்பது ஒரு புதுமை. கடுமையான உள்ளம், கொடுமையான தோற்றம் நம்மை பிடித்து விட்டானே இனி நம்மை அடித்து சின்னா பின்னமாக்கி விடுவானே, என்னென்ன சட்ட விதிகளுக்குள்ளே நம்மை FIR எழுதி உள்ளே தள்ளுவானோ என்றுதான் காவல் துறை அதிகாரிகளைக் கண்டவுடன் ஒரு சாமான்யன் பயப்படுகிறான். அந்த அதிகாரிகள் இன்னொரு உள்ளம் இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியுள்ளது. காவல் துறை அப்படிதான் செயல்படுகிறது. போலீஸ் உங்கள் தோழன் என்பதெல்லாம் வெறும் ஏட்டில்தான். வாய்மையே வெல்லும் என்ற வசனத்துடன் காந்தி மகானின் சிரித்த உருவப் படத்துடன் தலைக்கு மேலே கொழுவி இருக்கும் ஒரு போர்டுக்கு கீழே அகன்ற மேசை சுழல் நாற்காலி குளிரூட்டப் பட்ட அறையில் அட்டகாசமாக அமர்ந்து இருக்கும் அந்த காவல் துறை அதிகாரி, கொஞ்சமும் இரக்கமில்லாமல் இலுதிவரப்பட்டவனை தனது பூட்ஸ் காலால் நெஞ்சில் எதி மிதிப்பதும் இதயத்துக்கும் இவர் எழுத்துக்கும் சம்பந்தமில்லாமல் அவர் நடக்காத ஒன்றை நடந்ததாக அவன்மேல் குற்றப் பத்திரிக்கை எழுதுவதும் நானே அனுபவித்த ஒரு நிகழ்வு.

இவர்களை நினைக்கும்போது சகோதரர் முஹம்மது அலி அவர்கள் அந்த துறையில் எப்படி இவ்வளவு காலம் பணியாற்ற முடிந்தது என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.

கல்லுக்குள் ஈரம் இருப்பது பொய்யில்லை என்பது இப்போது புரிகிறது. உங்கள் வாரிசுகள் இந்த பணிக்கு வரக் கூடாது என்று நீங்கள் நினைத்ததால்தான் வாரிசுகளின் நிலை பற்றி உங்களால் இப்படி ஒரு அழகான கட்டுரையை எழுத முடிந்துள்ளது. வாழ்த்துக்கள்.

உங்கள் பொருள் செல்வங்களும் குழந்தை செல்வங்களும் இந்த உலகத்தின் அலங்காரங்கள்

நிச்சயமாக உங்கள பொருள் செல்வங்களும் குழந்தை செல்வங்களும் உங்களுக்கு சோதனைதான். இரண்டுமே அல்லாஹ் சொல்லும் அற்புதமான வேத வரிகள்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். இது அழகிய தமிழ் மகன் இந்த உலகத்தில் சொன்ன அற்புத நீதி வசனம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: Mohamed Ali (Chennai) on 17 December 2014
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38492

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் நூகுதம்பி உங்களுடைய கருத்துக்கள் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது பாராட்டக்கூடியது.

உங்களுடைய பதிவுகளை என்னுடைய சக நண்பர்களிடம் காட்டினேன், அவர்களும் உங்கள் ஞாபகசக்தி கண்டு வியப்பதுண்டு.

நான் காவல் துறையில் சந்தர்ப்ப வசத்தால் வந்து விட்டேன். நான் ஒரு சிவில் செர்வன்ட்டாகத் தான் வரப் பரீட்சை எழுதினேன். இருந்தாலும் கிடைத்ததினை ஏற்று பணிபுரிந்ததில் சில ஏற்றத் தாழ்வு இருந்தது, எப்படி ஒருவர் வாழக்கையில் இருக்குமே அதுபோல.

அதுவும் சிறுபான்மையினனாக இருந்த எனக்கு சோதனை காலாம் ஏராளாம். ஆகவே தான் என் மகன்கள் இருவரையும் என் மனைவி வற்புறுத்தினாலும் அவர்களை அரசு பணிக்கு வேண்டாம் என்று சொல்லி பட்டம் பெற்று வெளிநாடுகளில் சிறப்பாக பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் துணையுடன் ஏற்பாடு செய்ய முடிந்தது.

எனது மனதுக்கு சரியானது எது என்று நினைத்து அது சமூதாய விழிப்புணர்வு ஏற்படும் என்றால் அதனை சொல்ல என்று தயங்கியது இல்லை உங்களைப் போன்ற நேர்மையான கருத்துக்களை சொல்லும் வாசகர் இருக்கும்போது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved