Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:29:02 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameசாளை பஷீர்
Place காயல்பட்டினம்
Approved Comments115
Rejected Comments9
கருத்துக்கள்
எண்ணிக்கை
115
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
செய்தி: தப்லீக் ஜமாஅத் காயல்பட்டின் நகர தலைவர் காலமானார்! இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...என்றும்.......
posted by சாளை பஷீர் ( காயல்பட்டினம்) [03 June 2019]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46422

எனது சிறு பருவத்து நண்பனும் உறவினரும் காயல்பட்டினம் ஜமாஅத்துத் தப்லீக்கின் அமீருமாகிய ஹிஷாம் நேற்றிரவு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான்.

சிறு வயதில் வெண் குதிரையைப்போல இருப்பான். பேரழகன்.

நீல நிற காற்சட்டையிலிருந்து புறப்படும் பட்டைகள் அவனின் முதுகின் குறுக்காக தோள்பட்டை வரை ஓடும். இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என எனக்கு கேட்கத் தோன்றியதில்லை

பூச்சை ஹிஷாம் என எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அழைப்போம். பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம்..பத்தாம் வகுப்பு தேர்வுக்கு இரவு அவன் வீட்டில் தங்கி பல நாட்கள் படித்திருக்கின்றேன்.

பத்தாம் வகுப்பு தேர்வில் அவன் சுணக்கமடைந்தான். அது அவனை மனதளவில் பெரிதாக உறுத்தியது. நான் மேனிலைக்கல்வியை வேறு பள்ளிக்கூடத்தில் தொடர்ந்ததால் மெதுவாக எங்களுக்குள் தொடர்பு குறையத்தொடங்கியது.

எனக்கு முன்னர் அவனுக்கு திருமணம் நடந்தது. கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தியிருந்தான். உறவுகள் பேணலில் அவன் முதல் ஆள்.அன்று நான் வாழ்ந்த இயக்க வாழ்க்கையின் பித்தில் தனிப்பட்ட அந்தரங்க உறவுகளின் நெருக்கத்தை பொருட்படுத்தாத ஓட்டத்தை ஓடிக் கொண்டிருந்தேன். திருமணத்திற்கு போகவில்லை.

அடுத்தாற்போல அவனை சந்தித்தேன். நான் வராதது குறித்து மிகவும் வருந்தினான். அந்த வருத்தம் தோய்ந்த முகம் எனது மனதிற்குள் அப்படியே தங்கி விட்டது.

படிப்பாகட்டும் தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும் அவனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீரா ஏக்கங்களை கடப்பதற்காகத்தான் தப்லீக்கின் பாதையை அவன் தேர்ந்தெடுத்தாக நான் புரிந்து கொண்டேன். முழு நேரமாக அதில் ஈடுபட்டான்.

அன்று நான் எனக்கான பாதையில் மிக மும்முரமாக இருந்த போதும் அதன் முரண்கள் எங்கள் இருவருக்கு நடுவிலும் எந்த பேதத்தையும் உண்டுபண்ணியதில்லை. அவனும் தப்லீக்கில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தபோதிலும் என்னை ஒரு நாளும் அதன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்ததில்லை.

சாலையில் சந்திக்கும்போது கைகளை பற்றிக் கொண்டு நலம் விசாரிப்பான். மிகக் குறைந்த சொற்கள்தான். அவன் படிக்கும் காலத்திலும் தப்லீக் அமீராக ஆன போதும் சரி தனது உணர்வுகள் மொத்தத்தையும் சிறிய தொடுகையின் வழியாக கடத்தி விடுவான். உணர்வுகளின் மனிதன்.

பத்து நாட்களாகத்தான் உடல் நலிவு. தனது புறப்பாடு நெருங்கிவிட்டதை ஆன்மாவின் உட்குரல் அவனுக்கு அறிவித்திருக்கும் போலும். கலக்கமில்லா தெளிவுடன் விடை பெறும் சொற்களை சொல்லியிருக்கின்றான்.

ஒரு மாதத்திற்குள் இரண்டு பிரிவு குறிப்புக்கள் . எனக்காக நானே எழுதுவது போல உணருகின்றேன்.

வாழ்வையும் இறப்பையும் படைத்த றப்பே ! எங்களையும் அவனையும் மன்னிப்பாயாக ! அவனின் மண்ணறையை விரிவாக்கி ஒளியால் நிறைப்பாயாக! கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக !

அவனது பிரிவின் மூலம் எங்களை தீரா இழப்பில் ஆழ்த்தி விடாதே!

அவனது குடும்பத்தினரை இழப்பின் வலியிலிருந்து மீட்பாயாக!

உயர்வான சுவனத்தை எங்களுக்கும்அவனுக்கும் பரிசளிப்பாயாக!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கடற்கரைகளின் குரல்! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தம்பிக்கு மறுமொழி
posted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [15 May 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46413

அவரின் எழுத்துக்களின் காரணமாக சொந்த ஊரான தேங்கா பட்டினத்திலிருந்து பேட்டைக்கு அவர் குடியேற நேர்ந்தது. வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: வடகிழக்கிந்தியப்பயணம் 9 – நிறைவுப்பகுதி [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஆசிரியர் குறிப்பு
posted by சாளை பஷீர் (மூர் தெரு, மண்ணடி, சென்னை) [16 April 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46137

வட கிழக்கிந்தியப்பயணக் கட்டுரை இறைவனருளால் இனிதே நிறைவு பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் . இதை வாசித்து ஊக்குவித்த தோழமைகள், அன்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்.

நேரிலும் இணைய தளத்திலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு;

1 மொழி நடையை எளிதாக்கலாம்
2 . மகளிரின் படங்கள் கூடுதலாக இடம்பெறுகின்றது.

1 . மொழி நடையை பொருத்த மட்டில் இது எனக்கென்று நான் வரித்துக் கொண்டது. இந்த நடையில்தான் நான் நினைப்பவற்றை ஓரளவிற்கு சொல்ல முடிகின்றது. தொடர் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு எனது நடை எளிமையாகத்தான் இருக்கும் . வாசிப்பில் நமக்கிருக்கும் தொடர்ச்சியின்மைதான் எனது எழுத்து நடையை கடினம் போல தோன்றச் செய்கின்றது.

இதை நாம் அன்றாடம் பயிலும் அறிவியல் தொழில் நுட்ப, சட்ட, மருத்துவ பாடங்களிலும் காண முடிகின்றதே. இந்த பாடங்களில் உள்ள மொழியை தொழில் நுட்ப சொல்லாட்சியை நாம் எளிமைப்ப்டுத்த கோருவதில்லை. மாறாக நாம் அவற்றை முயன்று கற்று அந்த கடினத்தை கடக்கின்றோம்.

எளிய எழுத்து நடையில் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் ரசனையின் எல்லா சாத்தியங்களையும் தொட்டு விட முடியாது. மேம்பட்ட ரசனைக்குள் நுழையு விரும்புவோருக்கு இந்த தடை என்பது சிறிய தொடர் முயற்சியில் தகரக் கூடியதே.

2 . வடகிழக்கு இந்தியாவில் தொடங்கி தென்கிழக்காசியா வரை சமூக பொது வெளிகளில் பெண்களின் ஆட்சிதான். பொதுவாக இந்த பிராந்தியங்களில் புழங்குபவர்களுக்கு இந்த நடப்பு தெரியும். மணிப்பூரில் அன்னையர் அங்காடி என்றே பெயரிட்டுள்ளார்கள். வடகிழக்கு மகளிரின் ஆடை ஒப்பனைகள் பெரு நில இந்தியாவிலிருந்து மாறுபடுவதும் இவை எல்லாவற்றுடன் சேர்த்து ஒரு படைப்பாளி எழுத்தாளன் என்ற வகையில் அழகியதும் சிறந்ததும் என் படைப்பு மூளையை கவர்வதென்பது இயல்பானதே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திரும்புதோ பாரம்பரியம்? (!?) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பூக்களின் கழுத்தில் மாலையா ?
posted by சாளை பஷீர் (மண்ணடி, சென்னை) [17 March 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46064

நமது மரபுடையில் மாலையணிந்த பிஞ்சுகளை பார்க்கும்போது மனமும் அறிவும் இளகி மென்மையாகி விடுகிறது.

மானுடத்தின் துளிர் மனிதப்பிஞ்சு என எத்தனை சொற்களை கொண்டு வர்ணித்தாலும் ஆற்று நீர் மலைக்கு திரும்ப முடியாதைப்போலஅவர்களின் குழந்தைமைக்குள் நாம் ஒரு போதும் திரும்பிச் செல்லவியலாது.

சிறு முத்தத்தின் வழியாக எளியதொரு அணைப்பின் வழியாக அந்த குருத்துக்களின் தடுமாறும் எட்டுக்களின்வழியாக எதிர்காலத்தின் எட்டாத்தொலைவில் உருக் கொள்ளும் நமது பண்பாட்டின் அசைவை பார்த்து மனம் நிறையலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஊரு விட்டு ஊரு வந்து... பயணத் தொடர் (பாகம் - 2) [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [14 March 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46061

சாளர முகப்புடன் வீடுகளின் படங்கள் மிக அருமை.

சித்திரத்தின் வழியாக அந்த ஊருக்குள் என் கனவிற்குள் நுழைந்துவிட்டது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மீண்டும் மகிழ்வித்தது இதமழை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [26 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40247

இந்த செய்தியில் உள்ள முதல் ஒளிப்படம் ஆயிரம் கவிதை சொல்கின்றது. இதை பேசும் படத்தில் கொண்டு வந்திருக்கலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோமான் ஜமாஅத் முன்னாள் நிர்வாகி காலமானார்! இன்றிரவு 8 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [21 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39740

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

தன் அருமை தகப்பனாரை இழந்து வாடும் என் பள்ளிக்கால நண்பன் ஆதம் & குடும்பத்தினரின் துயரை அல்லாஹ் நீக்குவானாக ! மறைந்த அன்னாரின் ஈருலக வாழ்க்கையையும் ஒளிமயமானதாக்கி வைப்பானாக ! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாகர்கோவிலில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில், காயலரின் படத்திற்குப் பரிசு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [10 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39547

சுபுஹான் ஹாஜி. படங்கள் மதி மயக்குகின்றன. எழுத்தால் பாராட்ட தெரியவில்லை. படத்திற்கு படத்தால்தான் பாராட்ட முடியும் போல


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு! சமையல் ஏற்பாடுகளுடன் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!! முழு அசைப்படப் பதிவுடன்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [02 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39406

இவ்வளவு நாள் நகர்மன்றத்திற்குள் கமுக்கமாக செய்ததை இன்று பகிரங்கமாக செய்திருக்கின்றார்கள் நகர்மன்ற உறுப்பினர்கள். பாராட்டுக்கள்.

உங்கள் கணக்குகளும் கமுக்கமான நடவடிக்கைக்ளும் உரிய இடத்தில் தீர்க்கப்படாமல் போகாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பயோகேஸ் திட்ட அமைவிடம் தொடர்பாக, ‘மெகா’ பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [07 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38767

ஆற்காட்டில் மட்டும் இந்த திட்டம் சக்ஸஸ். மற்ற இடங்களில் இது தோல்வி என எதை வைத்து அப்துர்ரஜ்ஜாக் சொல்கின்றார்?

மற்ற நகராட்சிகளில் இந்த திட்டம் தோல்வி என தானே முடிவிற்கு வரும் அப்துர்ரஜ்ஜாக் அவர்கள் தனது கருத்தின் இறுதியில் தோல்வியடைந்த திட்டத்தை நிறைவேற்ற அதிமுக தொண்டர்கள் ஏன் போராட அழைக்கின்றார் என தெரியவில்லை. தோல்வியடைந்த திட்டத்தையா தமிழக அரசு மாநிலம் முழுக்க முன்னெடுக்கின்றது ?

அடுத்த ஊரில் போய் ஏன் குப்பை தட்ட வேண்டும் ? நமதூரில் உள்ள அரசு நிலத்தில் தட்ட வேண்டியதுதானே? (C&P)

திட்ட அமைவிடத்திற்கு சரள் சாலையில் குப்பை ஊர்திகள் வர முடியுமா ? தார் சாலைதான் வேண்டும் என பின்னர் மெல்ல கோரிக்கைவரும். வராது என சொல்ல முடியுமா ?

குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் உள்ள நிலங்களின் விலை ஏறாது என்றால் அந்த நிலத்திற்கு மதிப்பு குறைவு என்றுதானே பொருள். அப்படி மதிப்பு குறைந்த இடம் அது என்றால் அந்த இடைத்தடுக்கு நிலத்தின் ( buffer zone ) உரிமையாளர்கள் ஏன் நீதிமன்ற தடையாணை கோர வேண்டும் ? மதிப்பு இல்லாத இடத்தை பொது நோக்கத்திற்கு விட்டுக் கொடுப்பதில் என்ன சிக்கல் ?

ஒரு இடத்தில் இடைத் தடுக்கு மண்டலம் இல்லை என்பதற்காக மற்ற இடத்தில் வரக்கூடாது என்பது சரியான வாதமில்லை. சுற்றாடல் துறை இது போன்ற திட்டங்களுக்கு இடைத்தடுக்கு மண்டலம் ஏற்படுத்தவில்லையென்றால் இசைவு தருமா ?

ஏராளமான அரசு இடங்களும் புறம்போக்கு இடங்களும் இருக்க ஏன் தனியார் ஒருவர் நன்கொடையாக நிலம் வழங்க வேண்டும் ? என்ற தீராத வினாவிற்கு தனியாள் மீதான காழ்ப்புணர்வு என பழி போட்டு திசை திருப்புவது முறையில்லை.

நமதூர் செல்வந்தர் அவர்கள் நன்கொடை கொடுத்த இடத்தின் அருகில்தான் DCW ஆலையின் மாசு கடலில் கலக்கின்றது. இந்த நிலையில் உயிரி வாயு திட்டமும் அங்கு வருவது நலவு பயக்குமா ?

திட்ட அமைவிடத்தை நான் நேரில் சென்று பார்த்திருக்கின்றேன். அந்த இடம் கொம்புதுறை ( கடையக்குடி ) யிலிருந்து கிட்டதட்ட இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் ஒழுங்கான உள்கட்டமைப்பு இல்லாத இடத்திலேயே அமைந்துள்ளது.

உயிரி வாயு மின் திட்டத்திற்கான நன்கொடை இடத்தை பொது மக்கள் போய் பார்ப்பதற்கு மெகா அமைப்பினர் ஊர்தி வசதி ஏற்பாடு செய்தால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
115
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved