Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:52:06 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameEassa Zakkairya
PlaceKayalpatnam
Approved Comments61
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
61
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
எழுத்து மேடை: அவங்க அப்டித்தான்! நாங்க இப்டித்தான்!! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாற்றம் ஒன்றே மாறாதது!
posted by Eassa Zakkairya (Kayalpatnam) [21 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42523

வல்ல நாயன் துணை வேண்டி!

இந்தக் கட்டுரையை எழுதிய ஆசிரியர் இந்த ஊரின் நலன் காக்க சாட்டையைக் கடுமையாகச் சுழலவிட்டு, ஒப்பீடு முறையில் - கடந்தகால சம்பவ நினைவைக் காட்சியும் படுத்தி, “யார் காரணம்?” எனக் கேள்வியை நம்மை நோக்கி எதிர்க்கிறார்.

அது மட்டுமல்ல! “இத்தனை பாரம்பரியம், நீண்ட புகழுக்கும் சொந்தக்காரர்களான காயலிலிருந்து நகர்மன்றத்தை மீட்டெடுக்க முடியாதா?”என்று கேள்வியைக் கேட்டதோடு மட்டுமல்லாமல், நிதர்சன உண்மையைப் பதிவும் செய்திருக்கிறார்.

பொதுவாக ஒரு விஷயம் சொல்லப்படுவதுண்டு. அறிவாளிகள் (மனசாட்சியுள்ளவர்கள்) ஒரு பிரச்சினையின் அடி நாதமாக விளங்கக் கூடிய வேரைச் சிந்திக்கிறார்கள்.

இப்படித் தோன்றுகிறது எனக்கு:- சிலர் நல்லவர்கள் என்ற பெயரில், ஊரின் நலம் காப்பதைப் போல நடித்துக்கொண்டு, பரந்து விரிந்து ஊன்றி வளரும் ஆல மரத்தின் அடியில், தண்ணீருக்குப் பகரமாக திராவகத்தை ஊற்றுகின்றனரோ என்று! ஆனால் ஒன்றை இங்கு எழுதுவது பொருத்தமாக அமையும். தவறாகப் பொருள் கொள்ள மாட்டீர்கள் என்ற அடிப்படையில்! தற்போதைய நகர்மன்றத் தலைவர் இந்த நகர்மன்றத்திற்கு வந்த பிறகுதான், நகராட்சியில் எத்தனை காரியங்கள் நடக்கின்றன? எவ்வளவு பணம் அரசிடமிருந்து நமக்கு வருகிறது? அவை எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்ற விபரமெல்லாம் நமக்கு வெளிப்படையாகப் புரிகிறது.

பொறுப்புணர்ச்சியுள்ள ஒரு தலைமை நமக்குக் கிடைத்திருக்க, அதற்குத் துணையாக இருக்க வேண்டியவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும், சந்தேகமும் நமக்கு எழுகிறது.

இன்னும் சொல்ல வேண்டுமெனில், இந்த நகர்மன்றத்தில் ஒவ்வொரு வார்டின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட - மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய நமது கவுன்சிலர்கள் தலைவியுடன் ஏன் வேறுபடுகிறார்கள் என்ற காரணம் புரியாமலே போகிறது.

இக்கட்டுரையின் ஆசிரியர், வரும் நகர்மன்றத்திலாவது ஒரு 18 பேரை நல்லவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சாடியிருக்கிறார் என்றால், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் நல்லவர்கள்தானா என்று நம்மை சந்தேகிக்க வைத்துவிட்டார்.

ஒரு பிரச்சினை நம்மிடையே வந்துவிட்டால், பிரச்சினைக்குரிய இரு சாராரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, பிரச்சினையின் உண்மையான மூல காரணகர்த்தாக்கள் யார் என்று சிறிதும் விசாரிக்காமல், மார்க்க அறிஞர்களே மார்க்க மேடைகளில் தவறான தகவல்களை அளித்து, கண்டிப்பதையும் நாம் பார்க்கிறோம்.

சமூக சிந்தனை உள்ளவர்கள், இந்த ஊருக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த ஊருக்கு உழைக்கக் கூடியவர்கள் இந்த ஊரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவராகத்தான் இக்கட்டுரையாளரையும் நான் பார்க்கிறேன்.

அதற்குச் சான்றாக, என் நினைவு சரியாக இருக்குமேயானால் - சற்றொப்ப இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள், நமதூர் சீதக்காதி திடலில், அருள்மறை திருக்குர்ஆனைக் கையில் உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “அஞ்சுவதும், அடிபணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே!” என்று சூளுரைத்தார்களே அந்தப் பெண்ணிடம் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நல்ல விஷயங்கள் நடப்பதற்கு நாமே பொறுப்பெடுக்க வேண்டும். தலைவர், உறுப்பினர்களை நல்லவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தான் உள்ளது. அல்லாஹ் நம்மையும் கேட்பான் என்ற பயத்தோடு தலைவர் அவர்கள் செயல்படுகிறார்கள். அதே உணர்வு இந்த நகரில் உள்ள அனைவருக்கும் வர வேண்டும்.

இந்த நேரத்தில் மன வருத்தத்தோடு - ஒரு நகர்மன்றத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இன்றைய தலைவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற உண்மை மட்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நகர்மன்றத் தலைவர் அவர்கள் இதைச் செய்வார்களா என்று எனக்குத் தெரியாது. இந்த விஷயங்களைக் குறித்து ஒரு கேள்வி - பதில் நிகழ்ச்சியை இதே சீதக்காதி திடலில் ஏன் நடத்தவில்லை? மக்கள் கேட்கிறார்களே... “எங்களுக்கு அதெல்லாம் தெரியாது... அது உங்களுடைய பிரச்சினை” என்று? நான்கு ஆண்டுகள் எங்களுக்கு சாலைகள் சரியில்லை என்கிறார்களே? அதற்கான தீர்வை அவர்கள் உங்கள் வாயிலிருந்து நேரடியாகக் கேட்க வேண்டும்தானே? அதற்கான ஒரு நிகழ்ச்சியை முன்பு போல இதே ‘மெகா’ ஏற்படுத்துவார்களேயானால் மக்களுக்கு உண்மையான விழிப்புணர்ச்சி ஏற்படும். சில விஷயங்களை இழந்துதான் ஒரு நீண்ட விடிவுகளுக்கு நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இப்பொழுது நம் தலைநகரம் சென்னை சந்தித்திருக்கிற அதே கேடுகளையும், கபளீகரத்தையும் நாமும் சந்திக்க நேரிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

“சில விஷயங்கள கண்டும் காணாமத்தான் போவனும்! ஏன் தலைவி இப்படி பண்ணுறாங்க?” என்று சொல்கிறபொழுது, தலைவர் அவர்கள் எல்லா விஷயத்தையும் ஆதாரத்துடன் பேசுகிறார்கள். அதிகாரிகள் ஏன் அவர்களுக்கு உடன்பட மறுக்கிறார்கள் என்பதும் நமக்குப் புரியாமலே போகிறது.

வருங்காலங்களில்தான் மக்கள் ஒன்றே இதற்குத் தீர்வு அளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் - மாற்றம் ஒன்றே மாறாதது எனும் சிந்தனையோடு!

நீந்துவது சாக்கடையிலாயினும், நீந்தத் தெரியும் என்கிற காரணத்தால் சாக்கடையில் இந்த நகர்மன்றத் தலைவியவர்கள் நீந்திக்கொண்டே இருக்கிறார்கள். காயலின் சில பொக்கிஷங்களை மீட்டெடுப்பதற்காக என்கிற வேள்வியில் அவரது முயற்சிகள் தொடரவும், வெல்லவும் எனது பணிவான வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் காலமானார்! நவ. 23 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Eassa Zakkairya (Jeddah) [23 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38253

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பொதுச்சேவையில் இணைவோம் வாரீர்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Milk
posted by Eassa Zakkairya (Jeddah) [05 November 2014]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 38018

"தாய் பாலுக்கு விலை பேசும் கலியுகத்தின் தாய் மடுவாக A L S மாமா" அவர்களுக்கு கிருபையுள்ள ரஹ்மான் நீடித்த ஆயுளையும் நிலையான பரகத் தையும் தந்தருள் புரிவானாக - ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இளங்கலை அரபி மொழி பாடத்தில், காயல்பட்டினம் மாணவி பல்கலை. அளவில் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Congrates
posted by Eassa Zakkairya (Jeddah) [01 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37969

வாழ்த்துக்கள்

தீராத கல்வி தாகம் கொண்ட அன்பு காக்கா எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் அவர்கள் - எதையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள் - நான் அதிகமாக கவனம் இல்லாமல் இருந்த இந்த இணையத்தை "காயல்பட்டினம்.காம் " தவறாமல் படிக்க தூண்டியர்வர்கள் - இளைய தலைமுறையோடு சமர் புரிந்து எல்லா தலத்திலேயும் பயணிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் (குறிப்பு :- முக்கால் பகுதி ஆலிம் பட்டம் பெற எமது மதரசா ஜாவியாவில் ஓதியர்வர்கள் -)குடும்ப சுமை தாங்கி - புறப்பட்டார்கள் கடல் கடந்து

எங்கள் அன்பு காக்கா எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் (ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்) அவர்களுக்கும்; "துணை" புரிந்தோர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் மென்மேலும் பரகத் பொதிந்த வாழ்வை தந்தருள் புரிவானாக -ஆமின்

"கனவு நாம் நம்மை நோக்கும் தளம் " (இங்கே "மகள்" தந்தையின் இரகசியமாக இருந்து இருக்கிறார்கள் "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...NAAN YEAN
posted by Eassa Zakkairya (Jeddah) [29 October 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37926

நான் ஏன் இந்த கட்டுரையை படிக்க மறந்தேன் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் - அருமை கட்டுரையாளர் காயலின் சரித்திரத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டார் - என்ன ஒரு அற்புதமான ஈடுபாடு - மட்டுமில்லாமல் "ஆர்கானிக் மாமாவை " திசை திருப்பி நாளைய காயலின் வரபோகும் இளைய விஞ்சானி உருவாக்கும் திட்டத்திற்கு முதன்மை திசைகாட்டியாக தன்னை அறிந்தோ அறியாமலோ தன்னை உருவகபடுத்தி கொண்டார் .

"உணவே மருந்து" ஒரு புதிய விடியலை நோக்கி - என்ன சொல்ல - அற்புதமான ஆக்கம் - வல்ல நாயன் ஆசிரியர் மற்றும் ஆர்கானிக் மாமா ஆகியோருக்கும் நீடித்த ஆயுளை கொடுபானாக -ஆமீன்

நன்றி உணர்வோடு : நம்மாழ்வார் "இயற்கையின் சுவாசம்" அடுத்தவர்கள் சுவாசிக்கவேண்டி ஒரு விவேகமான கூட்டத்தை உருவாக்கி சென்றுள்ளார் .

"சிலர்களே உரமாக மாறுகிறார்கள்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
காயல் வரலாறு :காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நீண்ட
posted by Eassa Zakkairya (Jeddah) [27 October 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37894

ஒரு நீண்ட பயணத்திற்கான முன் ஏற்பாடுகள் - ஆசரியர் அவர்கள் நாளைய தலைமுறைக்கு எதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று சாட்டையை எல்லா புறமும் அக ஒழுக்கம் பெறவேண்டி சுழற்றுகிறார்; நன்றி உணர்வோடு நல்ல உள்ளங்களை நினைவும் கூறுகிறார் - அருமையான உணருபூர்வமான பதிப்பு -

கிருபை உள்ள ரஹ்மான் ஆசரியர் அவர்கள் மீது அருள் மழைபொழி வானக -ஆமின்

"சமூகம் என்கிற கூட்டு முயற்சி " (சில கருப்பு ஆடுகள் அந்த கூட்டு முயற்சியை சிதைகிறார்கள் ) அடி வேரிலே திரவகத்தையும் சேர்த்தே ஊத்துகிரார்கள்-


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
காயல் வரலாறு :காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Eassa Zakkairya (Jeddah) [27 October 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37893

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் மழை பொழிவானாக -ஆமின்

அருமையான, செழுமையான பதிப்பாகவும் மனதுக்குள் மழை துளி விழுந்ததாக நாம் இதை உணருகிறோம் .

எந்த ஒரு சமூகமும் தனது துவக்கத்தை அறியாதவரை உணர்வு பெற்ற சமூகமாக மாறுவதில்லை .

நன்றி உணர்வோடு நம் முன்நூர்களை (நூர்) நினைவு கூறவேண்டும் -அதற்கு அல்லாஹ்விடமே நாம் பிராத்தனை செய்யவும் வேண்டும் . வல்ல நாயன் நம் அனைவர்களும் அந்த பொக்கிஷத்தை தந்து அவனை அறிகின்ற "விலாயத்" உடைய அருளை தருவானாக - தருவான் என்று கூறி

"வரலாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது " (பல நேரங்களில் நாம் விரும்பாததையும் வரலாறு பதிவு செய்யும் - பொதுவாக )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியர் முஸ்தாக் அஹ்மதுவின் மாமியார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Eassa Zakkairya (Jeddah) [13 October 2014]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 37704

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம்ma அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்

கிருபை உள்ள ரஹ்மான் அன்னவர்களின் கப்ரை ஒளி பெரசெயவனாக- ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலரின் சகோதரர் காலமானார்! இன்று (அக். 12) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Eassa Zakkairya (Jeddah) [13 October 2014]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 37703

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்

கிருபை உள்ள ரஹ்மான் அன்னவர்களின் கப்ரை ஒளி பெரசெயவனாக- ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவு தருவாயில் அம்மா உணவகப் பணிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஆன்மிக கனவும் ; அக்னி பாரதியின்
posted by Eassa Zakkairya (Jeddah) [22 September 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 37419

ஆன்மிக கனவும் ; அக்னி பாரதியின் கனவும் நிறைவேற போகும் தருணம் இது ; உணவு மனிதனின் நாடி நரம்புகளை ஊடுருவகூடியது ; விருந்தாளி இல்லாமல் உணவு உண்ணாத நபி இப்ராகிம் (அலை) ; பல அகமிய ரகசியங்கள் பொதிந்த உணவு கொடுத்தல் யார் செய்தாலும் அல்லது அதற்க்கு துணையாக இருப்பவர்களுக்கும் இயற்கையின் அருள் உண்டு ;


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
61
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved