Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:16:03 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameK S MUHAMED SHUAIB
PlaceKAYALPATINAM
Approved Comments178
Rejected Comments14
கருத்துக்கள்
எண்ணிக்கை
178
பக்க எண்
1/18
பக்கம் செல்ல
செய்தி: முட்டினால் மோட்சம்தான்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முட்டினால் மோட்சம்தான்! (...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [25 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16210

செய்தியாளரின் கருத்து உண்மைதான். ஆத்தூரில் இப்படித்தான் ஒரு பேருந்து நிலையம் வீணாய் போய்விட்டது. பேருந்து நிலைய சாலைகளும் மிக மோசமாய் இருக்கின்றன. ஆனால் செய்தியாளர் சொல்வது போல எல்லா நேரமும் இது போன்று போகவில்லை இரவு நேரங்களில் மட்டும் சில பேருந்துகள் இது போன்று முறைகேடாக போகின்றன.

பேருந்து அல்லாத கனரக வாகனங்களை பொருத்தமட்டில் செய்தியாளர் சொல்வது உண்மைதான், அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செந்தூர் விரைவு வண்டி! கூடுதல் பெட்டி, கூடுதல் நிறுத்தம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:செந்தூர் விரைவு வண்டி! கூ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [25 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16209

"துடப்பத்திற்கு பட்டு குஞ்சமா..."என்பார்கள். அதுபோல செந்தூர் விரைவு வண்டிக்கு கூடுதல் நிறுத்தம் என்பது செம ஜோக் இந்த வண்டியை விட்டதன் நோக்கம் திருசெந்தூர் பகுதி மக்கள் சென்னை செல்ல ஒரு ரயில்வண்டி வேண்டும் என்பது மட்டும்தான். மற்றபடி அவர்கள் பயணிக்கும் பிரயாண நேரம் என்ன.. அந்த வண்டி உண்மையிலேயே "விரைவு வண்டி"தானா,,, என்பதெல்லாம் அரிக்கமேடு ஆராய்ச்சிக்கு உரிய விஷயங்கள்.

நான் சமீபத்தில் இந்த தொடர் வண்டியில் பயணம் செய்யும் "பேறு"பெற்றேன். வெறுத்துப்போனேன். வருகிற வண்டிக்கெல்லாம் இடம் கொடுத்து மிக நல்ல பிள்ளையாய் ஒதுங்கி நின்று அரைமணி நேரம் ஓட்டம் பத்து நிமிஷம் ரெஸ்ட் என்கிற கதையாய் இந்த வண்டி நின்று நின்று போனது.

ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இந்த வண்டியை தவற விட்டவர்கள் ஓடிவந்தே இந்த வண்டியை இடையில் பிடித்து விடலாம். பக்கத்தில் ஏதாவது ஒரு வண்டிக்கு இடம் கொடுத்து தேமே என்று இது நின்றிருக்கும். நம்மில் நிறைய பேருக்கு வண்டியின் ஒட்டத்தில்தான் தூக்கமே வரும். இடையிடையே வண்டி மூச்சு வாங்கி நிற்ப்பதால் தூக்கமும் தொலைந்து விடும்.

இந்த லட்சணத்தில் இது திருப்பாதிரிபுலியூரில் வேறு நிற்குமாம் அட...கஷ்ட காலமே...இந்த வண்டிக்கு வந்த சோதனைதான் என்ன...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற அங்கத்தினருக்கு ஜமால் மாமா விருந்து! மீட்டர் அறை வழக்கை திரும்பப் பெற இசைந்தமைக்கு நகர்மன்றத்தினர் நன்றி தெரிவித்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற அங்கத்தினருக்கு ...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam) [24 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16185

ஜமால் மாமா எப்போது கலைஞர் ஆனார்..? மஞ்சள் துண்டும், கருப்பு கண்ணாடியும் அசல் கலைஞரேதான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியர்களின் புத்துணர்வு முகாம்! திருச்செந்தூர் தோப்பில் இன்பச் சிற்றுலா!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசி...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [18 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16025

மிக நல்ல ஏற்ப்பாடு. பாராட்டுக்கள்.... ஆசிரியர்களிடம் ஒரு "குருபக்தி" வேண்டும் என்பதால் எங்கள் கால ஆசிரிய மாணவர் இடையே ஒரு அனுசரிக்கப்பட்ட இடைவெளி காணப்படும். ஒரு ஆசிரியர் மாணவரிடம் சற்று சிரித்து பேசி விட்டாலே அது பெரும் பாக்கியமாக கருதப்படும்.

ஆனால் இன்றைய ஆசிரியர்கள் மாணவர் உறவு "நண்பர்கள்" உறவு போலவே அறியப்படுகிறது. இது கற்பதற்கு ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி தரும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோர் இளைய வயதினர். கல்லூரியில் கற்றுவிட்டு ஒரு பி.எட் பட்டமும் வாங்கி விட்டு நேரடியாக ஆசிரிய பணிக்கு வந்து விடுகின்றனர். ஒரு பிளஸ் டூ படிக்கும் மாணவனின் வயதைக்காட்டிலும் ஒரு நாலோ ஐந்தோ வயது அதிகமானவராகத்தான் அந்த வகுப்புக்கு ஆசிரியராக வருகிறார். எனவே வயது இடைவெளி குறைவதால் பழகும் இடைவெளியும் குறைகிறது.

இதுபோன்ற சுற்றுலாக்கள் இதன் காரணமாகவே இனிமையாக அமைந்து விடுகின்றன.

எல்.கே பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம்! ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [15 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15946

நமது நகராட்சி தலைவியின் வெளிப்படையான நிர்வாகம் குறித்தான அடுத்தகட்ட நகர்வு பாராட்டத்தக்க ஓன்று. அவரது இந்த ஆத்மார்த்தமான முயற்சிக்கு நமது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

இங்கே வலைப்பக்கங்களில் தமது கருத்துக்களை முன்வைப்போர் தலைவியின் தொடர் செயல்பாடுகளை கண்டறிந்த பிறகு அது குறித்து பேசுவதுதான் சரியாக இருக்கும்

அவர் போகவேண்டிய பாதை நீண்டது. பக்கத்துணையாக நாம் இருப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குடிநீர் வினியோக அளவீட்டு...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [15 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15944

பொதுநலன் கருதி தனக்கு சொந்தமான இடத்தை நகராட்சியின் பயன்பாட்டுக்கு அன்பளிப்பு செய்த ஜமால்மாமா மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் இந்த கொடை பாராட்டுக்குரியது.

என்றபோதிலும் சட்டத்தையும் பொது நிர்வாகத்தையும் பேணி நடக்கவேண்டிய ஒரு அரசு சார்ந்த நிறுவனம் இப்படி தானடித்த மூப்பாக நடந்து கொள்வது என்ன நியாயம்..? அவ்வாறானால் சட்டம் ஒழுங்கு அது இது எல்லாம் மக்களுக்குத்தானா..?இவர்களுக்கு இல்லையா...?

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் யாரேனும் ஒருவர் நிலத்தை ஆக்கிரமித்து ஒரு குடிசையோ அல்லது கட்டிடமோ கட்டினால் நகராட்சி நிர்வாகம் சும்மா இருக்குமா...? அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட ஆசாமி கம்பி எண்ண வேண்டியதிருக்குமே.... இல்லையா...

ஜமால் மாமா பாராட்டப்படவேண்டியவர். அதில் சந்தேகமே இல்லை. அதேசமயம் நகராட்சி நிர்வாகம் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை பெயர் திருத்தப் பணிகள்! நகர்மன்ற உறுப்பினர்களும் துணைப்பணி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நியாய விலைக் கடைகளில் குட...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [15 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15939

குடும்ப அட்டைகளில் புதியபெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பானவற்றை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலேயே செய்து கொடுப்பதாக இங்கே செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் குத்துக்கள் தெரு ரேஷன் கடையில் புதிய தாளை மட்டும் ஒட்டித்தந்து பெயர் சேர்ப்பது தொடர்பான காரியங்களுக்கு தாலுகா அலுவலகத்திலிருந்து பணியாட்கள் வருவார்கள் என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை..?

ஒருவேளை போதிய பணியாட்கள் இல்லை என்பதால் அப்படி சொன்னார்களா...?

வேலைக்கு மாய்ச்சல் பட்டு அவர்கள் இப்படி சொன்னால் இழப்பு பொதுமக்களுக்கு அல்லவா...!

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடி தீர்வு காணுமாறு வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பருவ மழையால் சேதமுற்றுள்ள முக்கிய சாலைகளை சரிசெய்ய, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளரிடம், நகர்மன்றத் தலைவர் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பருவ மழையால் சேதமுற்றுள்ள...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [12 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15865

கே.டி.எம் தெரு சாலை குண்டும் குழியுமாக இருப்பதோடு ஆட்டோ பயணிகள் பயணம் செய்ய ஏற்றதாகவும் இல்லை

நான் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு கே.எம்.டி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திருப்ப ஆட்டோவில் ஏறி வந்து கொண்டிருந்த போது கே.டி.எம் தெரு ஆதிலிங்கம் கடையில் ஒரு பொருள் வாங்கவேண்டி இருப்பதால் ஆட்டோவை கே.டி.எம் தெரு வழியாக விடுமாறு சொன்னேன். ஆட்டோகாரர் அதற்க்கு சம்மதிக்கவில்லை.

அந்த வழியாக சென்றால் தனது ஆட்டோ பழுதாகிவிடும் என்றும் அதற்க்கு செலவு செய்ய தன்னால் முடியாது என்றும் சொன்னதோடு அரசாங்கத்தையும் திட்டி தீர்த்தார்.

ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத சாலைகளைத்தான் அரசு போடுகிறது. எனவே நமது நகராட்சி தலைவி அவர்கள் சாலைகள் அமைக்கப்படும் போது அது தரமான முறையில் போடப்படுகிறதா...?என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வார்ட் கவுன்சிலரும் இதில் அக்கறை காட்டவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நள்ளிரவு முதல் கனமழை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நள்ளிரவு முதல் கனமழை!...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [11 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15835

மழை நீர் வடிகால் அமைப்பு இந்தியாவில் எங்குமே சரியாக செயல்படுத்த படவில்லை என்ற சகோதரர் மஹ்ரூபின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர் கேரளாவில் சென்று பார்க்கட்டும். எவ்வளவு மழை பெய்தாலும் ரோட்டில் ஒரு சொட்டு நீர் தேங்காது. நமது தமிழ் நாட்டிலேயே மழை நீர் தேங்காத எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. நமது பகுதியில் அரசு போடும் ரோடு அந்த லட்சணத்தில் இருக்கிறது.

சாலைகளை போடும் போதே சரியாக போடாமல் ஏனோ தானோ என்று போடுவதால் சிறிது காலம் சென்ற பிறகு அந்த சாலைகளில் பள்ளம் விழுந்து விடுகிறது.

மேலும் குடிநீர் லைனுக்குக்காக ரோட்டை தோண்டுபவர்கள் அதை சரியாக மூடாமல் மேலோட்டமாக மண்ணை போட்டுவிட்டு போய்விடுகிறார்கள் இதெல்லாம்தான் தெருக்களில் நீர் தேங்க காரணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாளை (ஜனவரி 10) மாதாந்திர பராமரிப்பு மின்தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நாளை (ஜனவரி 10) மாதாந்திர...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam) [09 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15767

தினமும் ஆறுமணி நேர மின்தடையால் மக்கள் வேதனைப்பட்டு நொந்து சாகிறார்கள். இந்த லட்ச்சனத்தில் மாதாந்திர பராமரிப்புவேறு.

நான் நினைக்கிறேன் இது மாதாந்திர பராமரிப்பும் அல்ல.ஒரு மண்ணாங்கட்டியும் அல்ல. அந்த சாக்கில் இன்னும் கொஞ்ச நேரம் மின்தடையை கூடுதலாக ஏற்படுத்தி அரசாங்கத்தில் நல்ல பேர் வாங்க நினைக்கும் அதிகார வர்க்கத்தின் செயலாக கூட இருக்கலாம்.

அதற்காக நண்பர் பி. எஸ். அப்துல் காதர் அவர்கள் சொல்வது போல கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரிப்பதும் தவறு. அது நமது தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொண்டது போல.

அணுமின் உலை பற்றி நண்பர் பி. எஸ் தெரிந்துதான் சொல்கிறாரா? முப்பாதாயிரம் ரூபாய் செலவிட்டு மூன்று பைசாவுக்கு மின்சாரம் தருவோம் என்கிறாரே நமது பிரதமர ...இது அறிவு பூர்வமானதா...?

சோவியத் யூனியனில் செர்நோபில் அமெரிக்காவின் மூன்று மைல் தீவுகள் இவைகளில் ஏற்ப்பட்ட பேரழிவுகள் போபாலில் ஏற்ப்பட்ட சகிக்கமுடியாத கொடூரம் சமீபமாக ஜப்பான் புகுசிமாவில் ஏற்ப்பட்ட அணுஉலை விபத்து இவைகளை பார்த்த பிறகுமா நண்பர் பி. எஸ் அணு உலைக்கு வக்காலத்து வாங்குகிறார்...? இது பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

நண்பர் கேட்டுக்கொண்டால் சொல்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
178
பக்க எண்
1/18
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved