Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:56:22 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameK S Muhamed shuaip
PlaceKayalpattinam
Approved Comments101
Rejected Comments9
கருத்துக்கள்
எண்ணிக்கை
101
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
எழுத்து மேடை: மனதின் ஒலி...! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaip (Kayalpattinam ) [28 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29780

தம்பி சாளை பஷீர் அவர்களின் இசைத் தாலாட்டு என்னையும் தாலாட்டியது. இஸ்லாத்தில் இசை கூடுமா ..? கூடாதா.. என்கிற வாதப் பிரதிவாதங்களைக் கடந்து, இசை மனிதனின் மெல்லுணர்வுகளைத் தூண்டி, அவனை நிஜ உலகிலினில் இருந்து வேறொரு உலகிற்கு அவனைக் கடத்தி செல்கிறது என்கிற உண்மை இன்றுவரை எவராலும் மறுக்கப்படாத உண்மை.

இசைக்கு மதமில்லை மொழியில்லை... ஆனால் அது நாம் அறிந்த மொழியோடு தவழ்ந்து வரும்போது அது கிளர்த்தும் உண்மை அளப்பரியது. அதையே தனது கட்டுரையில் அழகாக வடித்திருக்கிறார் தம்பி பஷீர்.

இசையை இசையாக மட்டுமே பார்க்கும்போது பிரச்சினை இல்லை. அதை வேறொன்றோடு சம்பந்தப்படுத்தி அதற்க்கு ஒரு புனித சாயம் ஏற்றும்போதுதான் எல்லா பிரச்சினைகளும் ஓடோடி வருகிறது. நிறைய இடங்களில் இசை மதத்தோடு தொடர்புடையது. சில மதங்களின் வழிபாட்டு நிகழ்வே கூட இசைவடிவமானதுதான். அது குறித்து நாம் எதுவும் சொல்வதற்கில்லை .

கண்ணியமான -அளவு மீறாத இசைவடிவங்களை இஸ்லாம் என்றுமே வெறுத்ததில்லை. மனித உணர்வுகளை அதன் அடிப்படையில் மதிப்பது இஸ்லாம். இசையும் மனித உணர்வுகளின் ஒரு அடிப்படை என்பதால் அதை இஸ்லாம் ஏற்றுக்கொண்டுள்ளது .

இறைமறையை ராகமிட்டு ஓதுவது, பாங்கொலியை இசை பொருந்த ஒலிப்பது இன்னோரன்ன உதாரணங்களை இங்கு பட்டியலிடலாம் .

இவைகளை தனது கட்டுரையில் பொருத்தமாக விளக்கியுள்ள தம்பி பஷீர் பாராட்டுக்குரியவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: காயலும்... கால்பந்தாட்ட ரசனையும்...! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam ) [26 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27592

காயலின் கால்பந்து விளையாட்டின் நினைவலைகளை கட்டுரை ஆசிரியர் மிக சுவையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அறுபதுகளில் பிறந்த என் போன்ற பலருக்கும் இந்த கால்பந்து விளையாட்டு குறித்த சுவையான அனுபவம் இருந்தே தீரும். ஏனெனில் இது ஊர் கொண்டாடும் திருவிழா. இன்றைக்கு வேண்டுமெனில் இளைஞ்சர்களின், வாலிபர்களின் கவனம் கிரிகெட்டை நோக்கி திரும்பி இருக்கலாம். ஆனால் இந்த ஊர் மக்களின் நெஞ்சகங்களில் எப்போதும் வற்றாத ஜீவ ஊற்று இந்த கால்பந்து விளையாட்டு .

இருபத்து ஐந்து பைசா டிக்கெட்டில் தரை டிக்கெட் வாங்கி பார்த்த எனது மிகச் சிறு வயது அனுபவத்தோடு இது தொடங்குகிறது. பதினைந்து ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டும் வாங்கியிருக்கிறேன். நடிகர் முத்துராமன் ஒரு கால்பந்து ஆர்வலர் .அவர் ஒருமுறை இந்த விளையாட்டு மைதானத்துக்கு வெள்ளை பாண்ட் ,வெள்ளை சட்டையுடன் வந்தார் .அவருக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர் .

மற்றபடி எம் ஜி ஆர் ,கருணாநிதி ,ராஜீவ்காந்தி போன்றோர் அவர்களின் அரசியல் தேவை கருதி இங்கு பொதுக்கூட்டம் பேச வந்தவர்கள் .

அப்போதெல்லாம் இடைவேளையின்போது அடுத்தநாள் என்ன ஆட்டம் என்பதை ஒரு ப்ளாக் போர்டில் எழுதி அதை U S C மைதானத்தில் வேலை பார்க்கும் ஒரு கருப்பு கண்ணாடி அணிந்த வாட்ச்மேன் மைதானத்தை சுற்றி கொண்டுவருவார் .நாங்கள் அதில் பொடி கற்களை விட்டெறிவோம் .

அப்போதெல்லாம் மர்காசியஸ் நாசேரத் அணியும் பட்டணம் லெவன்ஸ் வீரபாண்டியன் பட்டணம் அணியும் மோதினால் அன்று ஆட்டம் தூள்பறக்கும். இந்தியா --பாகிஸ்தான் அணிகள் மோதிய கதைதான். கைகலப்பு நிச்சயம் உண்டு. சிறுவர்களாகிய எங்களுக்கும் அதுதானே வேண்டும்.

பாலகிருஷ்ணன் என்பவர்தான் நீண்ட நாட்களாக நடுவராக வேலை பார்த்தார். அணிகள் தப்பாட்டம் ஆடிய உடன் அவர் விசில் ஊதுவதும்.. எதற்காக தான் விசில் ஊதினேன் என்பதை அவர் இருக்கும் இடத்திலிருந்தே சைகையால் காண்பிப்பதும் பெரும் சுவாரஸ்யமாக இருக்கும்.

ஸ்கோர் போர்டை அப்போது பெவிலியனில் மேலே ஒரு பக்கமாக மாட்டி வைத்திருப்பார்கள். என்னதான் தனது அபிமான அணிகள் கண்ணுக்கு எதிரே கோல் போட்டாலும் ..ஸ்கோர் போர்டில் எண்களை மாற்றும் வரை ரசிகர்கள் நம்பமாட்டார்கள் .

"ஏய்.....நம்பரை மாத்துடா .....!என ரசிகர்கள் கூச்சலிடுவார்கள்.

இன்னும் ஏரளாமான நினைவுகள் உண்டு .அதை மற்றவர்களும் இங்கு கொஞ்சம் பகிர்ந்து கொள்ளட்டும் .

பாபி டாரின் இசை பற்றி எழுதியுள்ளார் ."கம் செப்டம்பர் "என்ற ஆங்கில படத்தின் தமிழ் வடிவம்தான் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற "அன்பே வா"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஆடு வாழ்க்கை! (பாகம் 1) [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpattinam) [11 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27383

தம்பி பஷீர் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை .இதில் நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை

இது குறித்து நான் முன்பே "திரை கடலோடி தேடியது என்ன ?" என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளேன் .



இது ஒரு வாசக புரிதலுக்காக மட்டுமே இங்கு குறிப்பிடப்படுகிறது வேறு எந்த உள்நோக்கமும் இதற்க்கு இல்லை.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப். 06, 07 தேதிகளில் காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா! 50 ஆயிரம் பேர் திரண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே.எஸ் .முஹமத் ஷூஐப் (காயல்பட்டினம் ) [12 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26836

மாநாடு குறித்த எனது தனிப்பட்ட கருத்து இது. தப்லீக் இயக்கமே ஒரு பிரசார இயக்கம்தான். அவர்களின் முழு நேரப்பணியே கூட அதுதான். இரண்டு பேர் ,நான்கு பேராக அழைப்பு பணியில் ஈடுபடும் -அதையே தனது வாழ்நாள் நோக்கமாகக கொண்டிருக்கும் ஒரு இயக்கத்துக்கு ஏன் இது போன்ற பிரமாண்டமான மாநாடுகள்....?

பொதுவாக மாநாடுகள் என்பதே கூட்டத்தைக்கூட்டி தனது ஆள் வலிமையை பிறருக்கு உணர்த்தும் ஒன்றாக போய்விட்டது. மற்றபடி எல்லா இடங்களிலும் பேசுவதைத்தான் மாநாட்டிலும் பேசுகிறார்கள்.

இதை உணர்ந்துதான் முதல்வர் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் மாநாடு போடுவதையே நிறுத்திவிட்டார்.

அனாவசியமான பொருட்செலவும் வீணாகும் மனித சக்தியையும் தவிர இது போன்ற மாநாடுகளால் வேறு எந்த பலனும் இல்லை.

இது தப்லீக இயக்கத்துக்கு மட்டுமல்ல பிற எல்லா இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பொருந்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப். 06, 07 தேதிகளில் காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா! 50 ஆயிரம் பேர் திரண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S muhamed shuaib (Kayalpatinam) [12 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26832

உண்மையாகவே பிரமாண்டமான எற்ப்பாடுதான். மக்கள் திரள் திரளாக வந்து குவிவதை காண முடிந்தது. சுவரொட்டி, துண்டுபிரசுரம் போன்ற ஏற்பாடுகள் இல்லாவிடினும் நீண்ட நாட்களுக்கு முன்பே வாய்மொழி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பிரம்மைகளை களைவதற்கு முதலில் தப்லீக இயக்கத்தினர் முன்வரவேண்டும். யாருக்குமே யாருமே சொல்லாவிட்டால் பிறகு எப்படி இவ்வளவு கூட்டம் சேர்ந்தது..?எல்லோரும் ஒரே சமயத்தில் கனவு கண்டார்களா....என்ன...!

அரங்கு நிறைய மக்கள் அமர்ந்திருக்க ..எங்கே மேடை இருக்கிறது... அதில் யார் பேசுகிறார்கள் என்று எதுவும் புரியவில்லை. நீண்ட முயற்சிக்கு பிறகுதான் ஒருவாறு மேடை இருக்கும் திசையை யூகித்து உணரமுடிந்தது...

மேடைக்கு ஆடம்பர அலங்காரம் எதுவும் தேவையில்லைதான். ஆனால் மேடை தனித்து தெரியுமாறு அமைந்திருக்கவேண்டும். அதுபோல யார் பேசுகிறார்கள் என்று அறிவித்தால் என்ன குடிமுழுகி போய்விடும்..? இதையெல்லாம் ஆடம்பர அனாவசியம் என்று நினைத்தால் பெரும் பொருட்செலவில் மக்களை கூட்டியிருக்கும் இந்த மாநாட்டையும் கூட நாம் அப்படியே சொல்லிவிட்டு போய்விடலாம்.

எனவே தப்லீக் இயக்கத்தினர் காலத்துக்கு பொருந்தாத இது போன்ற சில நடைமுறைகளை இனியாவது கைவிடவேண்டும்.

மற்றபடி தப்லீக் மாநாடு நமதூர் வரலாற்றில் ஒரு மைல்கல்தான்... அதில் சந்தேகமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [23 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26424

"வெள்ளிக்கிழமை நகராட்சி தலைவியின் பேச்சுக்கு பதில்கொடுக்கும் வகையில் துண்டு பிரசுரம் வருகிறது ..." என்று சொன்னார்கள் நானும் தலைவியி பேச்சுக்கு வரிக்குவரி பதிலடியாக ஒரு பத்து பக்கம் கொண்ட விலாவாரியான பதிலை எதிர்பார்த்தேன்.

அது என்னடாவெனில் காலையில் தினமணி பேப்பரை பிரிக்கும் போது அதிலிருந்து விழுந்த பிரசுரம்தான் மேற்படி உறுப்பினர் அஜ்வாத் அவர்களின் ஒன்ற்மே இல்லாத "சினிமா நோட்டிஸ் 'பதில் துண்டு பிரசுரம்.

சரி..சரி...மற்ற உறுப்பினர்களின் விளக்கமெல்லாம் என்னாச்சு...'ஜும்மாக்கு ஜூம்மா தவணை முறையில் வெளியாகுமோ...?

அவரது "மாபெரும் விளக்கம் "குறித்து எழுத ஒன்ற்மே இல்லை. சிறு பிள்ளைகளை அடிக்கு பயந்து உளறுகிறான் ..என்போமே ...அந்த வகை பதில் இது. இதற்க்கு நேரத்தை செலவழித்து பதில் எழுதிக்கொண்டிருப்பதே வீண் முயற்சியாகும்.

தலைவி அவர்கள் முன்வைத்த ஆணித்தரமான குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் பதில் எதுவும் இல்லை. அந்த உறுப்பினர்களில் பலர் எப்போது அல்லாமாக்களாகவும் ..ஹாபில்கலாகவும் மாறினார்கள் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் அவர்களில் பலர் மார்க்க நூல்களை விழுந்து விழுந்து படிப்பதாக கேள்வி. "சாகும்வரை உண்ணா விரதம் "கூடுமா..."கூடாதா ..?என்று பலர் ஆராய்ச்சியில் இறங்கிஉள்ளார்களாம்.

அவர்கள் செய்யும் "மக்கள் பணி"யை விட இது சிறந்தது.

கேட்ட கேள்விக்கு பதில் தருவதை விட்டு விட்டு உண்ணா விரத ஆராய்ச்சியை இவர்கள் தொடங்கியதில் இருந்தே ஒன்றை நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: காயலின் களறிச் சோறு! ஓர் அலசல்!! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [12 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22040

தம்பி சாஜித் சொல்லும் "கலோரி "உண்மையல்ல. ஒரு பெரும் பரபரப்பான நிகழ்வு நடப்பதை "களறி"என்பார்கள் இது தமிழின் பழைய சொல். சாஜித் சொல்வது உண்மையானால் "இரத்தக்களரி "ஆகிவிட்டது என்கிறார்களே...அதை எப்படி பொருள் கொள்வது ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:எங்கே செல்கிறது தமிழகம்? அப்பாவிகளைத் தாக்குவது அக்கிரமம் அல்லவா?? [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [08 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21971

(தொடருகிறேன் )

அங்கு (ஈழத்தில் )வெந்ததை தின்று, விதிவந்தால் சாவோம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிற மிச்ச சொச்ச தமிழர்களையும் இவர்கள் கணக்கில் எடுக்கவில்லை,இங்கிருந்து பிழைப்பு நிமித்தம் இலங்கை போய்வரும் இந்திய தமிழர்களின் நலனையும் இவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.

இப்படித்தான் எம்.ஜி ஆர் புதிய கட்சி ஆரம்பித்தபோது அவர் மலையாளி என்கிற வெறுப்பில் சென்னையில் உள்ள மலையாளி டீ கடைகளை ஒரு முட்டாள் கும்பல் அடித்து நொறுக்க, அடுத்த நாளே அதன் எதிர்வினை திருவனந்தபுரத்தில் தெரிந்தது.

வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடமிருந்து இந்த இயக்கங்களுக்கு நிறைய பணம் வருகிறது. இதை வைத்துக்கொண்டுதான் இவர்கள் இந்த போடு போடுகின்றனர். மத்திய அரசு இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழக மக்கள் இவர்களின் இந்த கோர நாடகத்தை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். எப்போதுமே சண்டை சச்சரவில் ஈடுபாடு கொண்டு அழியும் சில கல்லூரி இளவட்டங்களும், தமிழ்,தமிழன் என்று வறட்டு பெருமை பேசித்திரியும் சில உருப்படாத ஜென்மம்களும்தான் இது போன்ற கீழ்த்தரமான காரியத்தை செய்துள்ளார்கள்.

மக்களின் புறக்கணிப்பில் இவர்கள் கூடிய சீக்கிரமே காணாமல் போவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:எங்கே செல்கிறது தமிழகம்? அப்பாவிகளைத் தாக்குவது அக்கிரமம் அல்லவா?? [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [08 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21969

சிந்திக்கும் ஒருவர் பிறரின் சிந்தனையை தூண்டும் விதத்தில் எழுதியுள்ள சிறப்பான கட்டுரை இது.இங்குள்ள சில "தமிழ் தீவிர "அரசியல்வாதிகள் ,தங்களுக்கு பிழைக்க வேறுவழியின்றி இலங்கைத்தமிழர் பிரச்சினையை பிடித்துக்கொண்டு தொங்குகின்றனர். பிரபாகரன் இறந்தபிறகும் அவர்கள் இதை விடுவாதாக இல்லை. இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டது வேதனை அளிக்கும் நிகழ்வுதான். அதை யாரும் மறுக்கவில்லை. எனினும் அண்டை நாடான இந்திய தமிழர்களால் இதற்க்கு என்ன தீர்வு கண்டுவிட முடியும் ?

நிறைய பேர் பரிதாப பட்டார்கள். வேதனை பட்டார்கள். அவர்களால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். இந்திய அரசும் அதை கண்டுகொள்ளவில்லை. அன்றைய மாநில (தி.மு.க )அரசும் எதையும் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் போராட வேண்டுமெனில் நியாயமாக மத்திய அரசை எதிர்த்தும்,அன்றைய மாநில அரசின் முதல்வராக இருந்த கருணாநிதியை எதிர்த்துதான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு அப்பாவி இலங்கை யாத்திரீகர்களை எதிர்த்து ஏன் போராட வேண்டும் ?இல்லையெனில் இலங்கைக்கு போய் ராஜபக்சேயை எதிர்த்து போராட போகட்டும்.

நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் இன்னும் இரண்டு மூன்று பெரியார் திராவிட கட்சிகள் இவைகளுக்கு வேறு வேலையே இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு,தமிழர்களுக்காய் கட்சி நடத்திக்கொண்டு இவர்கள் அல்லும் பகலும் அனவரதமும் பேசுவதும்,ஓலமிடுவதும் பிரபாகரனை பற்றியும், செத்துமாண்ட விடுதலை புலிகளைப்ப்ற்றியும்தான் (இதில் சீமானும் ஒருவர் ) இதில் என்ன ஒரு பெரிய சோகம் எனில் இன்று ஈழத்தில் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் எந்த ஒரு ஈழத்தமிழனும் "தனி நாடு "கேட்கவில்லை. பூமியே வீடாக, ஆகாயமே கூரையாக கொண்டு தினம் தினம் செத்து பிழைக்கும் அந்த அப்பாவிகள் தங்களை நிம்மதியாக வாழவிட்டால் பொது என்கின்றனர்.

ஆனால் இங்கு மேடையில் தினம் தினம் சிங்கநாதம்தான் "ஈழம் அடைந்தே தீருவோம் "அடப்பாவிகளா...உங்கள் ஈழம் வரும்போது அதில் வசிக்க ஒரு தமிழன் கூட உயிரோடு மிஞ்சமாட்டாண்டா...(எழுதுகிறேன் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் முஹம்மது தம்பிக்கு வாழ்நாள் சாதனை விருது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [07 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21937

டாக்டர் மாமாவுக்கு எனது இதையபூர்வமான வாழ்த்துக்கள்...!"மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவைக்கு சமமானது "என்பார்கள். உங்களது மக்கள்பணி என்றேண்டும் தொடர வாழ்த்துக்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
101
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved