Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:51:25 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM.S,SAYYID MOHAMMED
PlaceBangkok
Approved Comments27
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
27
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
எழுத்து மேடை: விடுதலைப் போரில் காயலர்...! [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேடுதல் தேவை
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [11 February 2016]
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 43064

காயல் பட்டினத்தில் ஒரு விடுதலைப் போராளி இருந்துள்ளார், அவர் தன் எழுத்தின் மூலம் மக்களைத் தட்டி எழுப்பியதன் விளைவாக சிறையும் சென்றுள்ளார் என்ற செய்தி அறுபது அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கே புதிய செய்தியாக உள்ளது என்றால் இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால மக்களுக்கும் எப்படி தெரிய வாய்ப்புள்ளது.

எழுத்து வழி ஏடுகளையே ஏய்த்து மாய்த்துக் கொண்டிருக்கும் சதிகார காலத்தில் சொற்கள் வழியேனும் நம்மூரில் விடுதலைப் போராளிகள் வாழ்ந்துள்ளார்கள் என்ற உண்மையை இதுகாறும் யாரும் உணர்த்தாது துரதிஷ்டமே.

இன்னும் எத்தனைப் பேர் இருந்தார்களோ தெரியவில்லை. தேடுதலில் ஈடு பட்டால் கண்டிப்பாக இருந்தவர்கள் பட்டியல் நீளும் என்பதே என்னுடைய கருத்து.

சகோதரர் அன்பில் அலாவுதீன் அழகான ஒரு தேடுதலைத் தூண்டிவிட்டுள்ளார். காயல் முன்னோர்கள் ஆன்மிகத்தில் மட்டும் இருந்து விடவில்லை, அரசியல் வாழ்விலும் விடுதலைப் போராட்டத்திலும் பங்காற்றியுள்ளனர் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் பொருட்டு வருங்கால தலைமுறையினருக்காக கண்டிப்பாக ஏடுகளில் பதிவேற்றம் செய்யப்படல் வேண்டும்.

யார் செய்வது, எப்படி செய்வது என்ற ஆலோசனையை நம்மூரில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை அணுகலாம். எழுத்தாளர்கள் தம்பி சாளை பஷீர், S.K. சாலிஹு போன்றவர்கள் இதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களை அணுகுதல் சிறந்ததாக இருக்கும் என நினைக்கின்றேன்.

ஆர்வமுடன்
M.S.செய்யிது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அன்னை கதீஜா நாயகி பெண்கள் தைக்காவில் நடைபெற்ற DCW நிகழ்ச்சி குறித்து, தைக்கா நிர்வாகம் விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டும் வருத்தமும்
posted by M.S.Sayyid Mohammed (Bangkok) [29 September 2015]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 41910

வீரியாகமாகவும் விறுவிறுப்பாகவும் சென்ற விளக்கவுரை இறுதியில் சுருதி குறைந்து வார்டு உறுப்பினரைப் பாராட்டியும், கண்டிக்காமல் வருத்தத்துடன் முடிவுரை எழுதிருப்பது பாம்பு சாகாமல் இருக்கவேண்டி தும்புக்கட்டையால் தூசிதட்டிவிட்டு நைய்யப் புடைத்து விட்டோம் என்று சொல்கிற மாதிரி உள்ளது.

அவரைக் கண்டிப்பதில் என்ன கரிசனம் வேண்டிக் கிடக்கிறது. உங்கள் முஹல்லாவிலும் தைக்காவிலும் சில நற்பணி செய்துள்ளார் என்ற நன்றி விசுவாசத்தில் அவரைத் தட்டிக்கேட்காமல் ஆத்திரப்பட்டு கண்டிக்காத நீங்கள் வருத்தப்படுவதை (தைக்கா நிர்வாகத்தை) ரோஷமுள்ள நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

M .S . செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தில் கோவிலுக்கு தீவைப்பு உட்பட பல சம்பவங்கள் தொடர்பாக மூவர் கைது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திசை திருப்பும் முயற்சி
posted by M.S.SAYYID MOHAMMED (Hongkong) [15 September 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 37254

கோயில் பீடம் உடைப்பு மற்றும் கோயில் தீவைப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டதாக வழமையாக காவல்துறை பழைய குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கின் தன்மையை மாற்றவும், உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கவிடவும் வழி செய்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

கோயில் கட்ட முன்னோட்டம்தான் வேறொரு இடத்தில் உடைப்பு, பிறகு தீ வைப்பு நடத்தப்பட்டது.

தீ எறிந்த இரண்டு மணி நேரத்திலேயே, அதுவும் அதிகாலையிலேயே கல், மணல்,சிமெண்ட், தண்ணீர், வேலையாட்கள் என குவிந்தது எல்லாம் பல நாட்கள் முன்னேற்பாடு இல்லாமல் சாத்தியமா?

காவல் துறை காவித் துறையாக உள்ளது என்பதுதான் தெளிவாகிறது.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் மகன் காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [08 September 2014]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 37092

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1435: கோமான் ஜமாஅத் சார்பில் ஸஹர் விருந்து! ஜமாஅத்தினர் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [26 July 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 36115

கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் உணவில் வேறு ஜமாத்தைச் சார்ந்த S.K. சாலிஹு எப்படி கலந்து கொண்டார் என்று யோசித்தேன். மொட்டை அடித்திருப்பதால் அழைத்திருப்பார்களோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆதரவு யாருக்கு? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திட்டமிட்டு செய்ததுதான்
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [16 April 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 34393

தம்பி அப்துர் ரசாக்கின் ஒரு கருத்தில் முரண்படுகிறேன்.

“அவர்களின் அறிவிப்பில், திமுகவை தவிர வி.சி கட்சி மற்றும் கிருஷ்ணசாமி கட்சியின் பெயரை குறிப்பிட்டவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்று செய்த செயலாக இருக்காது என்றே நினைக்கிறேன்”. (C&p)

எவ்வளவு அறிவாளிகள் கூடி 3 நாட்கள் யோசித்து எழுதப்பட்ட தீர்மானம் தெரியுமா?

முஸ்லிம் லீக் சார்பிலும், த.மு.மு.க. சார்பிலும் சமுதாயத் தலைவர்கள் எத்தனை பேர் போய் தங்கள் கௌரவம் பாராமல் த.த.ஜ.விடம் பேசினார்கள். முஸ்லிம் லீகிற்கு ஆதரவு நிலை எடுப்பதை வெளிப்படையாக அறிவித்தால் ம.ம.க. விற்கு ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்ற கேள்வி வரும். இனி அதற்கு அதில் சொல்லணும். முஸ்லிம் லீக் பொது எதிரி தான். அதைக் கண்டுக்கொள்ளாமல் போய்விடுவோம். லீகிற்கு போடுகிறவன் போடட்டும், விரும்பாதவனை நாம் தொல்லை செய்யவேண்டாம் என்ற கருத்தில் ஜாக்கிரதையாக கையாளப்பட்ட யுக்தி தான் இது.

திருமாவளவனும், கிருஷ்ண சாமியும் அனுப்பிய தூதுக்கள் அ.தி.மு.க. விற்கான ஆதரவு விளக்கிக் கொண்டதற்கு பின் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் லீகின் சார்பாக ஆரம்ப முதலே கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிறகு எப்படி மறக்கும். லீக் தனிச் சின்னத்தில் நிற்பது தெரியாதா? அப்துர் ரகுமான் இடஒதுக்கீடு கேட்டு பேசாமல் இருக்கிறாரா?

அப்துர் ரஹ்மானைவிட ஹாரூன் எந்த விதத்தில் மார்கத்தில், சமூக, சமுதாய விசயங்களில் மேலானவர். ஹாரூன் என்றாவது பாராளுமன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு பேசியுள்ளாரா? ஹாரூனை ஆதரிப்பதை நியாப்படுத்த கன்னியாகுமரி வேட்பாளருக்கு ஆதரவு. இவர்கள் என்ன முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வாங்கித் தருவதாக வாக்களித்தார்களா?

அண்ணனை மன்மோகன் சிங்கிடம் அழைத்துச் சென்றதுதான் ஹாரூன் செய்த மகத்தான பணி என்று நினைக்கிறேன்.

எனவே முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணித்த செயல் என்று நம்போமாக.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆதரவு யாருக்கு? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும்.
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [16 April 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 34387

ம.ம.க.வோ. ஹைதர் அலியோ அப்படியென்ன மன்னிப்பே இல்லாத குற்றத்தைச் செய்து விட்டனர்.

கோவை கலவரத்தின் போது நம் மக்கள் கொல்லப்பட்டதை விடவும், பொருட்கள் சூறையாட காவல்துறை பாதுகாப்பு அளித்ததை விடவும், இன்று வரை விசாரணைக் கைதிகளாக சிறையில் வாட வழிவகுத்ததை விடவும் கொடூரமான செயல்களை செய்துவிட்டனரா?

குஜராத் கலவரத்தின் போது பா.ஜ.க.வுடன் கொஞ்சி குலாவிய தி.மு.க , தான் உள்ளிருந்து அனுபவித்து வரும் பதவி சுகத்தை இழக்க விரும்பாத தி.மு.க , பா.ஜ.க.வின் அந்த பாசிச ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் ஆள உதவிய தி.மு.க, இந்த தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.விற்கு ஒரு சில சீட்கள் தான் தேவை என வந்தால், அது தி.மு.க. அ.தி.மு.க. இருவரிடமும் இருந்தால் நான் தருகிறேன் என்று முண்டியடித்தக்கொண்டு ஆதரவு கொடுக்கும் தி.மு.க. என முந்தா நாள் வரை மூச்சிற்கு மூன்னூறு முறை முழங்கிக் கொண்டிருந்தார்களே, அந்த தி.மு.க.வை விடவுமா ம.ம.க.வினர் மோசமானவர்கள்.

ம.ம.க.விடம் ஒரே ஒரு சீட் தான் உள்ளது. அது பா.ஜ.க.விற்கு ஆட்சி அமைக்க தேவைப்படுகிறது, அந்த நேரத்தில் பா.ஜ.க.வும் அவர்களிடம் ஆதரவு கேட்டால் அப்போது ஆட்சி அமைக்க, ம.ம.க ஆதரவு கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமா?

தி.மு.க.வை மன்னித்து விடலாம் ஆனால் ம.ம.க.வை மன்னிக்கவே முடியாது என்றால் அப்படி என்ன தேவனே வந்தாலும் விடமாட்டேன் என்ற குற்றத்தை செய்து விட்டனர். அண்ணனிடம் மன்னிப்பு கேட்காதவரை அல்லது அண்ணன் மன்னிக்காதவரை யாருக்கும் விமோசனம் இல்லை என்பதே நிதர்சனம்.

ம.ம.கவிற்கு எதிரான நிலைப்பாடு என்ற அண்ணனின் கோட்பாடால் ஒவ்வொரு முறையும் ஆதரவு நிலைமை மாறிப் போகிறது. இந்த தடவை ம,ம,க, தி.மு.க.பக்கம் சென்று விட்டதால் மாற்றமான நிலை எடுக்க அண்ணன் விரும்பினார். ஒப்புக்கு சப்பாணியாய் செயற்குழுவைக் கூட்டி பில்டப் கொடுத்து அ.தி.மு.க. விற்கு ஆதரவாகப் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார். ஆனால், இதற்கு மாவட்ட பொதுக் குழுவில் ஆதரவு இல்லை. கொடி பிடிக்க ஆள் இல்லை.அண்ணனுக்கு பிரஷர் கொடுத்தனர். அண்ணன், பா.ஜ.க.வை விமர்சித்து பேச ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுக்க முயன்றார். ஆனால், ஜெயலலிதாவோ, கட்சிக் காரர்களையும் பா.ஜ.க.வை விமர்சிக்கக் கூடாது என்று கட்டளைப் போட்டு விட்டார்.

மீண்டும் அண்ணன் ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுத்தார்.. போயா, உன் ஆதரவும் தேவையில்லை, கத்திரிக்காயும் தேவையில்லை. நிபந்தனை இல்லாத ஆதரவு தருவதாக இருந்தால் தா. இல்லையேல் நடையை கட்டு, உனக்காக என் கோட்பாடை எல்லாம் மாற்ற முடியாது என மறுத்துவிட்டார். வேறு வழியில்லை. ஜெயலலிதா, பா.ஜ.க.வை விமர்சித்து பேச மறுப்பதாலும், தி.மு.க.மற்ற கட்சியினர் பா.ஜ.க.வை கடும்ம்மையாக விமர்சிப்பதாலும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு வாபஸ் என பயமுறுத்தினர். (அப்போதும் தி.மு.க.விற்கு ஆதரவு என்று சொல்லவில்லை.) அதிலும் ஜெயலலிதா பணியவில்லை.

இப்போது செயற்குழுவைக் கூட்டினார். தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவே அநேகர் விரும்பினர். அண்ணனுக்கு அது பிரச்னையில்லை. ஏனெனில், ம.ம.க.விற்கு எதிரான நிலைப்பாட்டால் ஏற்பட்டது தான் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு தவிர, தி.மு,க, விற்கு எதிர் என்பதால் அல்ல. அப்படியானால் ம.ம.க.வை ஆதரிப்பது இணை வைப்பாகிவிடுமே. அது தான் ‘ம.ம.க.வை ஆதரிக்க மாட்டோம்’ என்ற நிபந்தனையுடன் தி.மு.க.விற்கு ஆதரவு.

இணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும்.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துவங்கியது மலேஷிய காயல் நல மன்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S.SAYYID MOHAMMED (GUANGZHOU(CHINA)) [04 December 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 31800

மாஷா அல்லாஹ். புதிதாக மலர்ந்திருக்கும் மலேசியா காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துக்கள்.

நம்மூரின் நலனுக்காகவும், மலேசியாவில் நம்மூர் மக்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு பெற்றுத் தரவும் குறிக்கோளாகக் கொண்டு இவ்வமைப்பு அமைய முனைந்தோர் அனைவரும் பாராட்டுக் குரியவர்கள். தர்மம் செய்வது நன்மையானதுதான். அத்துடன் தொழிலுக்கும் வேலை வாய்ப்பிற்கும் வழிகாட்டுவதுதான் சதக்கதுல் ஜாரியா.

துபாய், சிங்கப்பூர், அண்மையில் பெங்களூர் ஆகிய ஊர்களில் நம் காயல் நல மன்றங்களின் அங்கத்தினர்களின் ஒத்துழைப்பால் படித்த நம் இளைய தலைமுறையினர் நிறைய பேர் அந்தந்த ஊர்களில் வேலை வாய்ப்பினைப் பெற்று சிறப்பாக இருக்கிறார்கள்.

தொழிலிற்கும் வேலை வாய்ப்பிற்கும் நம் மார்க்கப் பின்பற்றுதலுக்கும் சாதகமான சூழலைக் கொண்ட மலேசியாவில் நம் ஊர் மக்கள் பல்கிப் பெருகி தொழிலில் சிறந்தோங்க மலேசியா காயல் மன்றம் ஒரு பாலமாக அமைந்திட துவா செய்கின்றேன்.

அல்லாஹுத் தாலா உங்கள் அனைவருக்கும் முழுமையான உடல் நலத்தையும் உங்கள் தொழில் மற்றும் வேலைகளில் மன நிறைவையும் பரக்கத்தையும் தர வேண்டி துவா செய்கின்றேன்.

வஸ்ஸலாம்.
M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மலேஷியாவில் காயல் நல மன்றம் துவக்க முன்முயற்சிகள்! மலேஷிய காயலர்கள் தொடர்புகொள்ள வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்தி வரவேற்கிறோம்
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [17 November 2013]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 31509

மலேசியாவில் காயல் நல மன்றம் அமைத்திட முனைப்பு எடுத்திருக்கும் சகோதரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் இதை அழகுபட செய்வீர்கள் என்பது உங்கள் முகங்களிலேயேத் தெரிகிறது.

வயதில் மூத்தோர்கள் யாரும் இருந்தால் அவர்களை நேரில் சென்று அழையுங்கள். மிகத் தொலைவில் இருந்தால் தொலைப் பேசியில் அழையுங்கள்.

மலேசியா தொழில் துவங்க சாதகமான நாடு. நம் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வணிகத்தில் வளமாக உள்ளனர் என்பது நீங்கள் அறிந்ததே. எனவே, புதிதாக தொழில் துறைகள் அமைக்க முனையுங்கள். நம் மக்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். உங்கள் மன்றத்தின் செயல் திட்டங்களில் இதையும் ஒன்றாக இலட்சியமாக MISSION ஆக வையுங்கள். அல்லாஹ் அதில் வெற்றியைத் தருவான்.

உலக காயல் மன்றங்களில் குழுமத்தில் மலேசியாவை வாழ்த்தி வரவேற்கின்றோம். அல்லாஹ் உங்களுடைய அனைத்து நற்பணிகளிலேயும் வெற்றியையும் மன மகிழ்வையும் தர வேண்டி துவா செய்கிறேன்.

அன்புடன்.

M.S.செய்யது முஹம்மது.
தக்வா. பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற உறுப்பினர்கள் 8 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தீராத விளையாட்டுப் பிள்ளை
posted by M.S.Sayyid Mohammed (bangkok) [03 April 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 26633

ஒரு தனி மனிதரைத் திருப்திப் படுத்த தங்கள் மூளையை அடகு வைத்து விட்டனர் நகர் மன்ற உறுப்பினர்கள். அந்த தனி மனிதருக்கு இது ஒரு பொழுதுப் போக்கு விளையாட்டு. எந்த ஒரு ஆதாயமும் அவருக்கும் இல்லை.

வேதனை என்னவெனில் எல்லோருக்கும் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். உத்தமர் சான்றிதழ் கொடுக்க அவரிடம் கப்பம் பெற்றுக்கொண்டிருக்கும் எந்த ஒரு தனி மனிதரும் முன் வருவதில்லை.

இருந்தாலும் தனக்கு பிடிக்காதவர்களை வீழ்த்த ஒரு சக்தி மனிதன் உள்ளான் என்றால் அவரை பயன் படுத்துவதில் தவறு இல்லை என்ற நிலைப் பாடு தவறை மேலும் வீரியப் படுத்தும்.

இதற்கு ஊர்ப் பெரியவர்களும் உடந்தையாக இருப்பது வேதனையிலும் வேதனை. ஊர்ப் பெரியவர்களை எதிர்த்து எத்தனை சித்து விளையாட்டுக்களை இவர் செய்துள்ளார் என்பன ஒரு பட்டியல் தரமுடியும்.

உலகமெல்லாம் காயல் நல மன்றங்கள் சிறப்புடன் செயல் பட்டுக் கொண்டிருக்கும் போது சென்னையில் மட்டும் நீர்த்துப் போய் இருப்பதற்கு என்ன காரணம், யார் காரணம். நான் நான் என்ற அகம்பாவம் கொண்டவர்தானே.

ஆபிதா அகம்பாவம் கொண்டவர் என்றால் உறுப்பினர்கள் தஞ்சம் புகுந்துள்ள மனிதர் அகம்பாவத்தில் உச்சாணியில் இருப்பவராயிற்றே.

அவருடைய விளையாட்டுக்களை நிறைவேற்ற ஆட்ட வீரர்கள் நிறைய பேர் ஒன்று சேர்ந்துள்ளனர். நேர்மை, வாய்மையுள்ள ஒரு சிலரும் அதில் அணி சேர்ந்திருப்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் நேர்மையை நிரூபித்திருக்கலாம்.

இவர்கள் தஞ்சம் புகுந்துள்ள நபர் இவர்களை எப்படியெல்லாம் கேவலப் படுத்தப் போகிறார் என விரைவில் எதிர் பார்க்கலாம்.

புராண கவியொன்று நினைவிற்கு வருகிறது.

தின்னப் பழம் தருவான்
அதைத் தின்னும் போதே
தட்டிப் பறிப்பான்
தீராத விளையாட்டுப் பிள்ளை.

அந்த விளையாட்டுப் பிள்ளையிடம் தஞ்சம் புகுந்துள்ள உறுப்பினர்களுக்காக எம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

வஸ்ஸலாம்.

M S செய்யது முஹம்மது.
பாங்காக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
27
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved