Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:46:46 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namemackie noohuthambi
Placekayalpatnam
Approved Comments698
Rejected Comments36
கருத்துக்கள்
எண்ணிக்கை
698
பக்க எண்
1/70
பக்கம் செல்ல
செய்தி: COVID 19: ரமழான் மாதம் ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நாட்களில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறையால் அறிவிப்பு! “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமி
posted by mackie noohuthambi (kayalpatnam) [25 April 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46504

முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமியாக இருக்கிறது என்று முக்தர் அப்பாஸ் நக்வி என்ற பிஜேபி அமைச்சர் மிக தெளிவாக சொல்லிவிட்டார்.

இனி பள்ளிவாசல் என்ன நோன்பு என்ன பெருநாள் என்ன எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது. காவல் துறை செய்தியும் இந்த கூற்றை உறுதிப்படுத்துகிறது....

வேடிக்கையான மனிதர்கள் வேடிக்கையான உலகம்.

இங்கு காரோண வைரஸ் அதன் தாக்கத்தை அதிகப் படுத்தியுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து இந்த வைரஸ் பரவ முஸ்லிம்களே காரணம் என்று சொல்கிறார்கள். இப்போது முஸ்லிம்களுக்கு தேவை பொறுமை மட்டுமே அவர்களுக்கு தேவை அல்லாஹ் மட்டுமே அவனே எல்லோரையும் இந்த இழி நிலையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்து அருள் புரிவானாக வீடுகளை இறை இல்லங்களாக மாற்றுவோம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம். கொடிய நோயும் இந்த நாட்டிலிருந்து வெளியேறவும் முஸ்லிம்களுக்கு உதவி செய்யும் நல்லாட்சி மலரவும் து ஆ செய்வோம். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: COVID 19: நாளை முதல் அரசு மருத்துவமனை இயங்கும்! சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயல்பட்டினத்தில் இயங்கி வரும் ஒரே இணையதளம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 April 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46502

நன்றி மீண்டும் வருக ..

நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த இந்த இணையதள ஆசிரியர் மீது எனக்கு நேரடி தொடர்பு இருந்ததால் அவரிடம் கேட்டேன் ஏன் இந்த தேக்க நிலை? latest news தரும் நீங்கள் late news (மறைந்தவர்கள் செய்தி மட்டும் போடுகிறீர்கள் )என்ன நடந்தது என்று கேட்டேன் அவர் கொஞ்சம் பிஸி என்று சொன்னார். இப்போது மீண்டும் களத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாடு காணாத ஊரடங்கு நான் எனது 70 அகவையை தாண்டி வந்திருக்கிறேன், இலங்கையிலும் இப்படி ஒரு ஊரடங்கை நான் பள்ளிக்கு செல்லும் காலத்தில் அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் இப்படி ஒரு கடுமையான கொடுமையான ஊரடங்கை நான் சந்தித்ததில்லை.

மத ரீதியாக நோய்கள் வருவதில்லை அது CAA சட்டங்கள்போல் இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து வரும் நோய்கள் அல்ல. நமது முதல்வர் அவர்கள் சொல்வதுபோல் ''நோய் நேரம் பார்த்து ஆள் பார்த்து வருவதில்லை. நோய் வந்துவிட்டால் அதை எப்படி நீக்குவது என்று யோசிக்க வேண்டும் மருத்துவர்களை அணுக வேண்டும் அவர்கள் சொல்படி அவர்கள் தரும் மருந்துகளை சாப்பிட வேண்டும்''. இன்னும் ஒன்று அவர் சொல்ல தவறியது நீங்கள் வணங்கும் இறைவனிடம் இந்த நோயிலிருந்து என்னையும் ஏன் குடும்பத்தையும் இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் நீ காப்பாற்று இறைவா என்று இரு கரம் ஏந்தி பிரார்திக்கவேண்டும்.

நமது நாடு ஆன்மீக நாடு. பல மதங்கள் இங்கு இருந்தாலும் அவரவர்கள் மதத்தை பின்பற்ற அவர்களுக்கு பூரண உரிமை உண்டு. ஆனாலும் மக்கள் நலம் கருதி அரசு சொல்லும் யோசனைகளை கேட்டு எல்லா மதத்தினரும் கட்டுப் பட்டு அவரவர்கள் மத அனுஷ்டானங்களை பொது வெளியில் செய்வதை நிறுத்திவிட்டு அவரவர்கள் வீட்டிலேயே அதை செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த நாட்டின் பிரதமர் இன்னும் அந்த இஸ்லாமிய மதத்தை - அந்த வெறுப்புணர்வை காட்டியே மக்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். காயல்பட்டினத்தில் ஒருவருக்கு நோய் என்றால் அவரை மட்டும் தனிமைப்படுத்தலாம் அவர் வாழும் முழு தெருவையும் அதன் மக்களையும் தனிமைப் படுத்துவதில் நமது ஆட்சி தலைவருக்கு நமதூரின்மீது இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சி எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை.

ஆட்சி தலைவரும் ஒரு மனிதர்தான் மனித நேயம் நிறைந்திருக்க வேண்டிய நமது ஆட்சி தலைவரே நமதூருக்கு எதிராக நமதூர் மக்களுக்கு எதிராக பல சட்டங்களை திணிக்கிறார் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.முஸ்லிம்களுக்கு ஆயுதம் ஏந்த தெரியாது என்பதல்ல அவர்களை இஸ்லாம் அப்படி வார்த்தெடுக்கவில்லை வளர்த்தெடுக்கவில்லை.

எங்களுக்கு சொல்லப் பட்டதெல்லாம் நபிகள் நாயகம் போதித்ததெல்லாம். உங்களுக்கு துன்பம் சோதனை வரும்போது பொறுமையாக இருங்கள் உங்களுக்கு இன்பம் வரும்போதும் நல்வாழ்வு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் . ''இறைவா எங்கள் பாவங்களால் இந்த சோதனையை நீ தந்திருந்தால் எங்களை மன்னித்து இந்த நோயை எங்கள் ஊரிலிருந்தும் இந்த நாட்டிலிருந்தும் நீ அகற்றி விடு எல்லோருக்கும் நீ நல்ல சுகத்தை கொடு'' என்று பிரார்த்திக்கிறோம்.

நோய் மதம் சார்ந்து வருவதல்ல அதை நீக்குவதற்கு மருந்து குடிக்கலாம் . மாலையில் கை தட்டுவதாலோ இரவில் விளக்கை அணைப்பதாலோ எந்த நோயும் நீங்கிவிடும் என்று எந்த ஆன்மீக தலைவரும் நமக்கு போதிக்க வில்லை. மாண்பு மிகு ஆட்சித்தலைவர் அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல எல்லோரையும் உங்கள் சொந்தம்போல் நேசியுங்கள் அவர்கள் துன்பங்களை நீக்க அல்லும் பகலும் பாடுபடுங்கள். காய்தல் உவத்தல் அகற்றி உங்கள் சேவை எல்லா மதத்தினரையும் வந்து அடையட்டும். இறைவன் உங்களுக்கும் நல்ல சுகத்தை தருவானாக.

தீதும் நன்றும் பிறர் தர வாரா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு!! காலம் & அலைவரிசை விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..''.மண் மிட்டாய்'' தந்த மண்ணின் மைந்தன் வாழ்க !
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 March 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46498

மர்ஹபா ....மர்ஹபா ..சாளை பஷீர் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .மிட்டாய் என்று தாளில் எழுதினால் இனிக்குமா..இனிக்கிறதே எப்படி?.

''தேன் என்ற சொல் தித்தித்திடுமா என்றும் தேள் என்ற சொல் கொட்டிவிடுமா.?'' என்று ஒரு பாடல் நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் மண் மிட்டாய் என்று பெயரிட்டு அது அகில இந்திய வானொலி வரை சென்று தமிழக மக்கள் மனங்களை இனிக்க செய்திருக்கிறது என்றால் அந்த சொல்லுக்கு இனிப்பு வடிவம் கொடுத்த ஷாளை பஷீர் அவர்களை இந்த ஊரே வாழ்த்த கடமை பட்டிருக்கிறது.

தமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவையெல்லாம் அலைய விட்டேன் கண்ணை ..என்று பேரறிஞர் அண்ணாவை அங்குமிங்கும் தேடிய இசை முரசு நாகூர் ஹனீபா இப்போதிருந்தால்....பிறைகொடியான் மஹ்மூது ஹுசைன் இப்போது இருந்திருந்தால் ....சாளை பஷீர் அவர்களை கவிதையால் புகழ்ந்திருப்பார்கள்.ஆனால் என் போன்றவர்களுக்கு அந்த திறமை சூனியமாக இருப்பதால் ஷாளை பஷீர் அவர்களை உளமார வாழ்த்துகிறேன் அவர்கள் தமிழ் சேவை தொடரட்டும்.

நமதூர் பாரம்பரிய மிக்க கவிஞர்களை பெற்றெடுத்த ஊர்...வரகவி புலவருக்கு விழா எடுத்தபோது அப்துஸ் சமத் அவர்கள் சொன்னார்கள்...''காயல்பட்டினம் வரகவியை மட்டுமா பெற்றிருக்கிறது வரையற்ற கவிஞர்களையல்லவா பெற்றிருக்கிறது'' என்று சொன்னார். ஒரு படி மேலே சென்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொன்னார்கள் ''காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் கல்லும் கூட கவி பாடும் கவிஞர்கள் வந்திருக்கிறோம் காவியங்கள் பிறக்காதோ'' என்று சொன்னார்.

சமீப காலத்தில் இப்படி ஒரு மிட்டாய் கதை வந்ததில்லை. அதுவும் மண் மிட்டாய் ஆச்சரியமாக இருக்கிறது துரதிர்ஷ்ட வசமாக இன்று மதிய வேளையில் தான் இந்த பதிவை பார்த்தேன்.மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் வேட்கை எனக்கு புரிகிறது. ஆனால் இந்த மண் இப்படிப்பட்டவர்களை வாழ்த்துவதற்கும் அவர்களுக்கு அங்கீகாரம் தருவதற்கும் ஏனோ தயங்குகிறது.

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை

சிப்பிக்குள்ளே இருந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை எங்கே நன்மைகள் உண்டோ அவற்றை தேடித் பெறுவதே நமக்கு மகிமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் பதிவுக்கு “மெகா / நடப்பது என்ன?” விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தவறான தகவல்கள் வதந்திகள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 February 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46494

whatsapp எவ்வளவு நல்ல விஷயங்களை சொல்கிறதோ அதற்கு அதிகமாக பஸாதுக்கள் தவறான தகவல்கள், உண்மைக்கு புறம்பான தகவல்களை forward செய்து மக்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.இது நமது மார்க்கத்தில் முற்றிலும் தடுக்கப் பட்டுள்ளது என்பது இவர்களுக்கு தெரியாதா நாம் முதலாவதாக தகவல் கொடுக்கிறோம் என்ற பெருமை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

சொல்லும் தகவல்களில் தனது பெயர் போன் நம்பர் எதுவுமே குறிப்பிடுவதில்லை. இது ஒரு மொட்டை கடிதம் எழுதுவதைவிட கேவலமானது. அண்ணாந்து படுத்துக்கொண்டு தன் முகத்திலேயே துப்பும் அசிங்கமான வேலை.

இந்த இணையத்தளம் இப்போது கொடுத்துள்ள தகவல்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.குழுமங்களாக சேர்ந்துகொண்டு இந்த செய்திகளை சொல்கிறார்கள்.அவ்வப்போது இதற்கு எதிர்ப்பை அல்லது விளக்கத்தை இந்த இணையம் சொல்லமுடியுமா..அவர்களுக்கு வேறு வேலை இல்லையா.

எனவே தவறான ஆதாரமில்லாத தகவல்களை forward செய்யாதீர்கள். வதந்திகளை பரப்பாதீர்கள். அது இத்தோடு முடிந்து விடாது. மறுமையில் கேள்விகணக்கில் சேர்க்கப்படும் என்பதை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொழிலதிபர் காலமானார்! பிப். 11 அன்று நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மரணம் சொல்லிக் கொண்டு வருவதில்லை
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 February 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46490

சகோதரர் அவர்களுடைய வபாத் செய்தி கேட்டு அவருடைய இல்லம் சென்றேன் . அவரது கனவு இல்லம் கடல்போல் விரிந்திருந்தது அவரது ஜனாசாவில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய கமாலுதீன் மதனி என்று நினைக்கிறேன். மர்ஹூம் அவர்களின் மார்க்கப் பணிகளை விலாவாரியாக நினைவு கூர்ந்தார். அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அவர் இல்லம் மட்டும் அல்ல அவர் உள்ளமும் விசாலமாக இருந்திருக்கிறது.

ஒரு நாள் முன்னர்தான் தன் மகனுக்கு வீடு கட்டி அதை மகன் பெயருக்கு எழுதி வைத்தார் என்ற செய்தி அவர் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் மார்க்க நெறியுடன் தனது இறுதி பயணத்தை உறுதி செய்திருக்கிறார். நாம் ஏனோ அந்த விஷயத்தில் பொடுபோக்காக இருக்கிறோம். எத்தனை முடுக்கு சண்டைகள் எத்தனை பாக பிரிவினை சண்டைகள் பற்றி நாம் தினம்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மரணமடைந்தவரை நல்லடக்கம் செய்யும் இடத்தில கூட நமது உலக பேச்சுக்கள் தொடர்கின்றன நமது அலைபேசிகள் அலறுகின்றன. தல்கீன் ஓதினாலும் சரி இந்தமாதிரி அறிவுரைகள் வழங்கினாலும் சரி எல்லாம் நமது அடுத்த எட்டை எப்படி நகர்த்த வேண்டும் என்று கவலைப் படுவதில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த சகோதரரின் மண்ணறையை விசாலமாக்குவானாக. அவருடைய பாவங்களை மன்னிப்பானாக அவருக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.அவர் விட்டுச்சென்ற நற்பணிகளை அவரது மகன் துபைல் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய அல்லாஹ் அவருக்கு நல்லருள் புரிவானாக மர்ஹூம் அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக.

வாழ்வதற்கு பொருளும் வேண்டும் வாழ்வதில் பொருளும் வேண்டும்

மக்கி நூஹுத்தம்பி & குடும்பத்தினர்கள் 7530075337


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகரில் ஒருவழிப்பாதை கடைப்பிடிப்பைக் கண்காணிக்க நான்கு சந்திப்புகளிலும் காவலர்களை நிறுத்திடுக! மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் “மெகா / நடப்பது என்ன?” கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 February 2020]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46487

''திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம்போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'' என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

பொது மக்கள் ஒத்துழைப்பு கடமை உணர்வு தவறு செய்கிறோம் அது மீறுகிறோம் என்ற மனசாட்சி உறுத்தல் இவை யாவும் இல்லாத ஊராக நமதூர் ஆகிவிட்டது அதிகாரிகளும் அப்படியே ஆகிவிட்டார்கள்.

தினசரி நாளிதழ்களில் வரும் செய்திகளை பாருங்கள். தமிழ்நாடு தேர்வாணையம் பரீட்சையில் எப்படி எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஊழலை கண்டுபிடிக்க அதற்கு மேலுள்ள அதிகாரிகளும் நியமிக்கப் பட்டே இருக்கிறார்கள்.

ஒரு அமைச்சர் ஒரு பழங்குடி மாணவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிடும்படி வற்புறுத்தும் அளவுக்கு நாட்டில் எல்லா விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. நள்ளிரவில் ஒரு நாட்டின் ஜனாதிபதியை எழுப்பி ஒரு கையெழுத்து போட சொல்லவும் ஒரு மாநிலத்தின் ஆளுநரை அதே இரவில் எழுப்பி அவரிடம் கையெழுத்து போட சொல்லவும் விடியலில் ஒரு புதிய ஆட்சி அமைக்கவும் இந்த நாட்டில் முடிகிறது என்று சொன்னால் இந்த சாதாரண ஒரு வழிப்பாதை விஷயத்தை எப்படி நடைமுறை படுத்த முடியும். எல்லோருக்கும் குளிர் விட்டு போய் விட்டது.

தவறு நடப்பதை பார்த்து பொறுக்காமல் சிறு நீர் கழிக்க சென்றவருக்கு சிறு நீர் இரத்தமாக போனது அடுத்த நாள் அதே தவறு நடப்பதை பார்த்தவர் சிறு நீர் கழித்தபோது அது மஞ்சள் நிறமாக இருந்தது. அதே தவறு அடுத்த நாளும் நடந்ததை பார்த்து விட்டு சிறு நீர் கழித்தபோது அது வெறும் சாதாரண நீராக வெளியேறியது என்று ஒரு ஆலிம் பெருந்தகை சொன்னது இப்போதும் எனக்கு ஞாபகம் உள்ளது. அப்படி ஒரு தவறு தொடர்ந்து நடப்பதும் அதை கண்டுகொள்ளாமல் நாம் செல்வதும் வாடிக்கையாகி போய்விட்டது.

என்றாலும் இப்படி ஒரு கூட்டம் இருந்து இதை இணையத்தளம் மூலம் அவ்வப்போது நினைவுறுத்துவது அதை தடுக்க தங்களால் ஆன முயற்சிகள் மேற்கொள்வதும் பாராட்டத்தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஐக்கியப் பேரவை சார்பில் பொதுக்கூட்டம்! நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வரலாற்று சிறப்பு மிக்க ஓர் பொதுக் கூட்டம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 February 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46482

காயல்பட்டணம் வரலாற்றில் மட்டுமல்ல முஸ்லீம் ஐக்கிய பேரவை வரலாற்றிலும் ஒரு மைல்கல்லாக இந்த பொதுக் கூட்டத்தை நான் பார்க்கிறேன்

மேடையிலே அமர்ந்திருக்கின்ற பழைய முகங்களை விட ஒரு வித்தியாசமான முகங்கள் இந்த கூட்டத்தை வசீகரிக்கின்றன.

உலக நாடுகளில் ''மஹ்லரி'' என்ற சிறப்பு பெயருடன் வலம் வரும் அஹமது அப்துல் காதிர் ஆலிம் அவர்கள், அதே மஹ்லறாவில் தனது மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொண்டு மஹ்லரி என்ற பட்டத்தையும் பெற்று மக்களிடம் செல்வாக்கு மிக்க சொல்வாக்கு மிக்க ஆலிமாக திகழும் அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள், 150 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமை பீடமான ஜாவியாவின் முது பெரும் முதல்வர் சாதாரண தோற்றத்துடன் வலம் வரும் முஹம்மது பாரூக் ஆலிம் பாஸி அவர்களும் ஒரே மேடையில் எல்லோருடைய கண்களும் வியக்கும் வண்ணம் அமர்ந்திருக்கும் ஒரு அற்புதமான காட்சியை படமாக்கி இங்கு வெளியிட்டிருப்பதையும் நிதர்சன உண்மையையும் நான் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்.

ஆயத்துல் குர்ஸி என்ற அற்புத மாமருந்தை அல்லாஹ் திருமறையில் அருளியிருந்தாலும் அதை நபி தோழர் ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தவன் அபுல் ஹிக்கம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஷைத்தான் என்று அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஒருவன்தான் என்று உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள். அப்படிப் பட்ட ஒரு ஷைத்தானின் வழி தோன்றலான அல்லது மறுபதிப்பான நரேந்திர மோடி இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்.

மந்தரையின் சூழ்ச்சியினால் மனம் மாறி கைகேயி மஞ்சள் குங்குமம் இழந்தால். வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள் பஞ்ச பாண்டவரை பகைத்து மாண்டார்கள். என்று இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அந்த வழியில் அமித்ஷாவின் சூழ்ச்சியால் நரேந்திர மோடி தறி கெட்டு ஆவணம் தலைக்கேறி இன்று முஸ்லிம்களுக்கு எதிரான தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். முத்தலாக் சட்டம், அயோத்தியில் பாபர் மசூதியை தரைமட்டமாக்கி விட்டு நீதி மன்றம் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து அவர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தற்காலிக வெற்றியை பெற்றிருப்பதாலும் தமிழக ஆட்சியாளர்கள் புரட்சி தலைவி அவர்களின் போர்க்குணத்தை புறந்தள்ளி விட்டு மோடி அரசின் தமிழக கிளையாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதால் இன்று சட்டமாகியுள்ள அந்த போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் பாஷையில் சொல்வதானால் ''விநாச காலே விபரீத புத்தி'' என்றுதான் இதை சொல்லவேண்டும். ஒரு மனிதனின் ஆணவத்துக்கு முடிவு காலம் நெருங்குவதையே இது காட்டுகிறது. அதே நேரம் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை ஒரே குடைக்குள் கீழ் கொண்டு வந்திருக்கும் ஓர் அற்புதமான செயலும் இங்கே அரங்கேறி இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.

இந்த ஒற்றுமை தொடரட்டும்.
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
என்ற தாரக மந்திரம் திக்கெட்டும் முழங்கட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல் பிறைக்கொடியானின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காலத்தை கடந்தநிகழ்ச்சி அறிவிப்பு
posted by mackie noohuthambi (kayalpatnam) [24 January 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46478

சென்னையில் ஒரு ஆலிம் பேசினார்கள் என்று ஒரு நண்பர் என்னிடம் ஹாஷ்யமாக சொன்னார்

'' ரபீயுல் ஆஹிர் மாதம் அது நபிகள் நாயகம் அவர்கள் ரபீயுல் அவ்வலிலே பிறந்தார்கள். ரபீயுல் அவ்வலிலே'' பிறந்த பெருமானாருக்கு ரபீஉல் ஆகிரிலே விழா எனவே பெருமானார் காலத்தை கடந்தவர்கள்'' என்று பேசினாராம். இது எப்படி இருக்கிறது . அதே போல் 2019 ஆகஸ்ட் மாதம் நடந்த நிகழ்ச்சி இன்று உங்கள் இணையதளத்தில் வெளிவருகிறது. நானும் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேனே, இந்த மாதம் 16m திகதி நடந்ததோ என்று கைசேதப்ப பட்டேன் ஊரிலேயே சுட சுட செய்திகளை தந்து கொண்டிருந்த ஒரே ஒரு இணையத்தளம் இது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. .மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் சிலிர்த்து எழுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்ததால் சென்ட்ரல் வங்கியில் பரபரப்பு! வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வதந்திகளை பரப்புவது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட ஒன்று
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 January 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46475

ஒரு நபி தோழர் அவர்கள் உறங்கி கொண்டிருந்தார். அவர் அருகில் அவரது சாட்டை இருந்தது இன்னொருவர் அதை விளையாட்டுக்காக எடுத்து மறைத்து வைத்திருந்தார். நபி தோழர் கண் விழித்து பார்த்தபோது திடுக்கிட்டு அங்குமிங்கும் பார்த்தார் இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள் ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லீம் திடுக்கிட வைப்பவர் அவர் நம்மை சார்தவர் அல்ல என்று சொன்னார்கள் என்று ஒரு ஹதீது படித்த ஞாபகம்.

அப்படியானால் இப்படி ஒரு ஊர் மக்களையே தன் whatsapp செய்தி மூலாம் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புவது எப்படி ஒரு உண்மையான முஸ்லிமுக்கு தகுதியாகும். இந்த தவறான தகவலை பரப்பியவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய பெயர் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி செய்ப்பவர்கள் கவனித்து நடந்து கொள்வார்களாக அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. ஆண்டு எவ்வளவு பெண்களுடைய லுஹர் அஸர் தொழுகைகள் கலாவாக்கி விட்டது என்பதை இவர்கள் அறிவார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “மெகா” அமைப்பில் புதிய உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் பகிர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நல்ல செய்தி..ஆனால்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 January 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46474

நல்ல செய்தி ஆனால் நமது நாட்டில் பிரதமர்கள் ஆளுநர்கள் ஜனாதிபதிகள் எல்லோருமே தங்கள் இளமையை முடித்து விட்டு முதுமையில் ஓட ஆட முடியாமல் இருப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். நமது பொது தொண்டு நிறுவனங்களிலும் பறக்கத்துக்காக ஆட்களை போடுகிறார்கள் அவர்களால் கூட்ட நேரத்துக்கு வருகைதர அவர்கள் உடல்நலம் இடம் கொடுப்பதில்லை.வெகு நேரம் காத்திருந்து தீர்மானங்கள் நிறைவேற்றி முடிக்கும் வரை காத்திருக்கவும் முடியவில்லை. சில தீர்மானங்களை எதிர்த்து பேசவும் முடியவில்லை, ''பெரிசு பேசாமல் இரு'' என்று சொல்லும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது எனவே உறுப்பினர்கள் சேர்க்கும் படிவத்தில் வயது குறிப்பிடப் படவில்லை. ஆர்வம் இருந்தாலும் செயல்பட முடியாதவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர்களை தேர்ந்து எடுங்கள்

என்னிடம் 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை செதுக்கும் சிற்பிகளாக அவர்களை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொன்னார் அதையும் தாண்டி நபிகள் நாயகம் அவர்கள் YAA MAUSHARA SHABAAB என்று இளைஞர்களைத்தான் அழைத்தார்கள் நாம் நபி தோழர்களை ஏதோ வயது முதிர்ந்தவர்கள் போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவர்களெல்லாம் இளைஞர்களாகவே இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் அவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல இளமை காலங்களிலேயே சமூக சேவைகளில் தன்னை இணைத்து கொண்டவர்கள் அல் அமீன்/ சாதிக் என்ற உயர் மதிப்பையும் பெற்றிருந்தார்கள் அவர்கள் நபி பட்டம் கிடைக்கும்போது அவர்களுக்கு வயது 40 தான் 25 வயதிலேயே வியாபாரத்தில் கெட்டிக் காரராக இருந்து அன்னை கதீஜா அவர்களின் நன் மதிப்பை பெற்று அவர்களையே மணக்கவும் செய்தார்கள் இதெல்லாம் இளமை காலத்தை நினைவூட்டும் சாதனைகள். இளைஞர்களை தேர்ந்தெடுங்கள் வெற்றி பாதையில் வீறு நடை போடுங்கள் .

''இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி'' என்று ஒரு கவிஞன் பாடுகிறான் அதுவே நிதர்சன உண்மை.

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
698
பக்க எண்
1/70
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved