|
|
அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | மார்ச் 18, 2017 | 17:00 | ஆறாம்பள்ளி | | | ஷிஃபா அறக்கட்டளை சார்பில், “மக்கள் மருந்தகம் - GENERIC MEDICAL SHOP” திறப்பு விழா! | | |
| ஷிஃபா அறக்கட்டளை சார்பில், மார்ச் 18 அன்று “மக்கள் மருந்தகம் – GENERIC MEDICAL SHOP” திறப்பு விழா!
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் சார்பில், 18.03.2017. சனிக்கிழமையன்று, “மக்கள் மருந்தகம் - Generic Medical Shop” திறப்பு விழா காணவுள்ளது. இதுகுறித்து, ஷிஃபா நிர்வாக அலுவலர் ‘கண்டி’ ஸிராஜ் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
உலக காயல் நல மன்றங்களின் அனுசரனையில், நம் காயல் மாநகரில் மருத்துவ சேவையாற்றும் அமைப்பு ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் அறக்கட்டளையாகும்.
ஆங்கில மருந்துகளை - பொதுவான மருந்துக் கடைகளில் பெருந்தொகை கொடுத்தே வாங்க வேண்டிய இக்காலத்தில், அதை விட பன்மடங்கு குறைவாக - பொதுமக்கள் மிகவும் மலிவான விலையில் மருந்துகளைப் பெறும் வகையில் மத்திய அரசின் திட்டத்தைப் பயன்படுத்தி, பிரதம மந்திரி “மக்கள் மருந்தகம் “ எனும் ஜெனெரிக் மருந்து கடை - ஷிஃபா அறக்கட்டளை மூலம், பின்வரும் விபரப்படி இன்ஷாஅல்லாஹ் திறக்கப்படவுள்ளது:-
நாள்:
18.03.2017. சனிக்கிழமை
நேரம்:
17.00 மணி
நிகழ்விடம்:
ஆறாம்பள்ளி, காயல்பட்டினம்.
தலைமை:
டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்
(தலைவர், ஷிஃபா அறக்கட்டளை)
“மக்கள் மருந்தகம்” நிறுவனத்தைத் திறந்து வைப்பவர்:
அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்
(சட்டமன்ற உறுப்பினர், கடையநல்லூர் தொகுதி.)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.M.முஜாஹித் அலீ |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|