Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:48:28 AM
திங்கள் | 7 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1894, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:26
மறைவு18:05மறைவு21:16
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:15
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 65
#KOTWART0165
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 6, 2014
அந்தோ தமிழ்நாடே! உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (தொடர் கட்டுரை பாகம் 3)
இந்த பக்கம் 1633 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ராஜீவ் காந்தியைக் கொன்றது எப்படி? ஏன்?

அது மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் வருடம், மாலை மங்கிய நேரம். சென்னை பாரிமுனை பஸ் நிலையத்திலிருந்து அந்தக் குழு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி, பல்லவன் பஸ்ஸில் புறப்பட்டது. ஹரிபாபு ஏற்கனவே கையில் பூம்புகாரில் வாங்கப்பட்ட சந்தன மாலையோடு காத்து நின்றார். சுமார் 8 மணியளவில் அங்கு சென்று சேர்ந்தனர் இரு ஆண்களும், மூன்று பெண்களும்.

சிவராசன் ஒரு பத்திரிக்கை நிரூபர் போன்று வெள்ளை குர்தா ஆடை உடுத்தி, தோளில் ஒரு பை, கையில் எழுதுவதற்கு ஒரு நோட்டு என்று தோற்றமளித்தார். தானு பச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு தொள தொள சல்வார் கமீசில் இருந்தாள். பஸ்ஸில் இருந்தபடியே மெதுவாக தனது உடுப்பைத் தொட்டுப் பார்க்கும்படி புன்முறுவலுடன் நளினியிடம் கூற, தடவிப் பார்த்த நளினி அதிர்ச்சியடைந்தாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் பஸ்ஸில் எதுவும் பேசவில்லை.

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியின் மைதானத்திற்குள் இவர்கள் நுழையும்போது அதிகமாக கூட்டமில்லை. மேடையின் அருகில் உட்கார முயன்றனர். பெண் காவலர் அனுஷ்யா குமாரி விபரம் கேட்க, ஹரிபாபு தான் பத்திரிகை புகைப்படக்காரர் என்றும், தானு ராஜீவ்காந்திக்கு மாலை போடுவதைப் படம் பிடிக்க வந்துள்ளதாகவும் கூறினார்.

"ராஜீவ்காந்தி 10 மணியளவில்தான் வருவார்... ஆகவே நீங்கள் சற்று பிந்தி வரலாம்” என்று அனுஷ்யா சொல்ல, மெதுவாக மூன்று பெண்களும் வெளியேறினார்கள். நளினிக்கும், தானுவுக்கும் உதவியாக வந்தது சுபா. சிவராசன் பத்திரிகை நிருபர்கள் பக்கம் சென்றுவிட்டார். இவர்களுக்கிடையே தொடர்பு இல்லை.

சற்று நேரம் சென்றதும், அங்கிருந்த காங்கிரஸ் பெண் ஏற்பாட்டாளர் லதா கண்ணனிடம் தாங்கள் ராஜீவ் காந்திக்கு மாலையிட வந்துள்ளதாகக் கூறி, ஏற்பாடு செய்து தரும்படி நளினி கேட்டார். அவர் அனுஷ்யாவிடம் சொல்ல, கையில் மாலையை வைத்திருந்த தானுவை ஓரிடத்தில் உட்காரச் சொன்னார் அவர். அவள் அமர்ந்தாள். மற்ற இரு பெண்களும் மவுனமாக சற்று தொலைவில் சென்று பாதுகாப்பாக அமர்ந்தனர்.



ஏற்கனவே இந்தக் குழு அப்பிரதேச காங்கிரஸ் அரசியலாளரான திருமதி மரகதம் சந்திரசேகருடன், சாந்தன் மாறலாக ஒரு ‘காங்கிரஸ் உறவை’ உண்டாக்கியிருந்தது. சாந்தன் தனியாக வந்து, காங்கிரஸ் ஆதரவாளர்களோடு கலந்து நின்றார். சிரித்த முகத்தோடு அவர் ராஜீவ் காந்தியை வரவேற்பதைப் புகைப்படத்தில் காணலாம்.



இலங்கை இனப்பிரச்சினையில் ராஜீவ் காந்தி உண்டாக்கிய ‘இலங்கை - இந்தியா உடன்படிக்கை 1987’ஐ பிரபாகரன் ஏற்கவில்லை. இலங்கைப் போராளிகள் தமிழ்நாட்டை யுத்த பூமியாக்குவதை வட இந்திய அரசியல் தலைவர்கள் தடுக்க விரும்பினர். இந்த துப்பாக்கி கலாச்சாரம் நாளை தமிழகத்தை ஒரு சீக்கியர்களின் காலிஸ்தான் போல, தனிநாடு கோரிக்கைக்கு வழியமைத்து - இந்தியாவை மீண்டும் துண்டாடி விடும் என்று அஞ்சினர்.

ஆகவே - இந்த இளம் தலைவர், நிலைமை கட்டு மீறிப் போகுமுன் ஒரு சுமூக நிலையை உண்டாக்கிவிட வேண்டும் என்று விரும்பினார். அதற்காக போராட்டக் குழுவினர்களுக்கு நிறைய பண உதவிகளையும், வேறு சலுகைகளையும் தருவதாக வாக்களித்தார்.

‘என் வழி தனி வழி’

ஆனால், பிரபாகரன் மட்டும் ராஜீவ் காந்தி உண்டாக்கிய ‘இலங்கை - இந்தியா உடன்படிக்கை 1987’ஐ ஏற்கவில்லை. ‘என் வழி தனி வழி’ - தமிழ் ஈழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டேன் என்றார். அதாவது, ‘அடைந்தால் மகாதேவி - இல்லையேல் மரணதேவி’ என்று வீரப்பா பாணியில் மகாதேவி பட வசனம் பேசி செயல்பட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் அதையே நிரூபித்தார்.

அவரை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒப்பந்தத்தை ஆதரிக்காவிட்டாலும், எதிர்க்க வேண்டாம் என்று அவருக்குக் கூறப்பட்டது. அதற்காக அவருக்கு பெரிய அளவில் பணமும், இயக்கத்தின் தற்காப்பு இராணுவ பலத்திற்காக ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தி தான் அணியும் கவச ஆடை - நெஞ்சில் குண்டு துளையாதபடியானது - அதையும் பிரபாகரனுக்குக் கொடுத்தார். கொடுத்ததையெல்லாம் பிரபாகரன் வாங்கிக் கொண்டார். கொடுத்ததெல்லாம் கொடுத்தான். யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான், இல்லை ஊருக்ககாக கொடுத்தான். ஆம் தமிழ் மக்களுக்காகக் கொடுத்தான். அன்று அவனுக்காகத் துடித்த தமிழகம் இன்று அவனைக் கொன்றவர்களுக்காகத் துடிப்பது ஏன்?

பத்மநாபா கொலையால், தமிழக - இந்திய அரசியலில் உண்டான கொந்தளிப்பை - விடுதலைப் புலிகளின் மீதான எதிர்ப்பை பிரபாகரன் அவதானித்தே வந்தார். ஆனால் சில நாடகளில் இது அடங்கிவிடும்... நமக்கு ஆதரவான சூழல் மீண்டும் உருவாகும் என்பது அவரது எண்ணம். தனது அடுத்த இலக்கை நோக்கி எப்படிச் செல்வது என்பதில் அவர் திட்டம் வகுக்கலானார்.

1990 அக்டோபர் மாதவாக்கில், மத்தியில் இருந்த வி.பி.சிங் அரசு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து ஆடிக்கொண்டு இருந்து ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற நிலைக்கு வந்தது. இந்த ஆட்சி முடிவுற்றால் என்னென்ன நடக்கும் என்று யூகித்த புலி இரை தேடி மெதுவாக குகையை விட்டு வெளியே வந்தது. இந்தப் புலி வேட்டைக்கு - அதாவது புலியை வேட்டையாடுவது அல்ல, புலி வேட்டையாடுவதற்கு "தமிழ்நாட்டில் கல்யாணம்” என்று பெயர் சூட்டப்பட்டது.

1990 டிசம்பரில், தற்கொலைப் படையான - கரும் பெண் புலி கூட்டத்திலிருந்து மூன்று பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர். தானு, சுபா, அதிரை ஆகியோரே அவர்கள். தானு என்ற காயத்ரி கறுப்பாக - கண்ணாடி அணிந்த - கவர்ச்சியில்லாத - குள்ளமான பெண். தமிழ்நாட்டின் சாதாரணமான நடுத்தர குடும்பத்து இளம்பெண் போன்ற தோற்றம் கொண்டவள் அவள்.

தானுவின முயற்சி தோல்வியடைந்தால், அவளுக்குப் பகரமாக செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டவள் சுபா என்ற ஷாலினி. சகல விதத்திலும் தானுவை விட பார்வையில் கூடியவள். பின்பு சிவராசனோடு பெங்களூரில் தற்கொலை செய்தவள் இவள்.

அடுத்தவள் 18 வயது அதிரை. இவள் மெலிந்த தோற்றம், சற்று வெள்ளைத் தோல்காரி. பார்ப்பதற்கு வடநாட்டுப் பெண் போன்று இருப்பாள். ஆகவே, தமிழ்நாட்டில் “கல்யாணம்” தோல்வியடைந்தால், டெல்லியில் கல்யாணம் செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட “மணப்பெண்” அவள். ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக வந்த அவளது இயற்பெயர் சோனியா. என்ன பொருத்தம்? விந்தையான உலகம்.

கல்யாணத்தை மங்களகரமாக நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு சிவராசனுக்குக் கொடுக்கப்பட்டது. யாரும் பிடிபடாதவாறு பத்மநாபா கொலையை வெற்றிகரமாக முடித்ததால், அவரது தகுதி இப்போது கூடியிருந்தது. அது மட்டுமல்ல. சிவராசன் சரளமாக ஆங்கிலத்தோடு தமிழ்நாட்டு உச்சரிப்பில் தமிழும், தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடமும் கொஞ்சம் பேசக்கூடியவர். ஹிந்தியும் ஓரளவு தெரியும். உயரம் 5 அடி 4 அங்குலம் மட்டுமே.

1987இல் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தோடு நடந்த ஒரு மோதலில் இடது கண்ணை இழந்ததால், கண்ணாடிக் கண் பொருத்தப்பட்டிருக்கும் அவர் 'ஒற்றைக் கண் சிவராசன்' என்றே அழைக்கப்பட்டார். பத்மநாபா கொலை போல எந்தத் தடயமும் விடுதலைப் புலிகள் பக்கம் வராதவாறு காரியத்தை முடிக்க வேண்டும் என்பது சிவராசனுக்கான - புலித்தலைவரின் கட்டளை.

"கல்யாண குழு"

தமிழ்நாட்டு “கல்யாண”த்திற்கென 4 பேர் கொண்ட குழுவை புலித்தலைவர் அமைத்தார். இதற்காக, சென்னையில் வசித்த பேபி சுப்பிரமணியமும், முத்து ராஜாவும் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டனர். வெடிபொருட்களைக் கையாள்வதில் விற்பன்னரான முருகனும் அதில் சேர்க்கப்பட்டார். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சில கடமைகள் கொடுக்கப்பட்டன.

பேபி சுப்பிரமணியத்திற்கு, வரக்கூடிய “மணப்பெண்ணும்” உறவினர்களும், “கல்யாண”த்திற்கு முன்பும், பின்பும் தங்கக் கூடிய ஜாகை வசதி செய்து தரும் பொறுப்பு தரப்பட்டது. முத்து ராஜாவிற்கு முறையாக யாழ்ப்பாணத்தோடு செய்தி பரிமாற்றம் செய்வதற்காக தொலை தொடர்பு வசதிகள் மற்றும் முக்கிய - அவசர செய்திகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக ‘புறாக்களை’ உருவாக்கவும், பயிற்றுவிக்கவும் பொறுப்பளிக்கப்பட்டது.

வெடிபொருள் மன்னனான முருகனுக்கு, பேபி சுப்பிரமணியனும், முத்து ராஜாவும் தங்கள் பணியைச் செவ்வனே செய்து முடித்து யாழ்ப்பாணம் திரும்பியதும், அதனைத் தன்வசம் பொறுப்பெடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டது.

அதே வேளை, இப்போது திமுக அரசு கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வந்ததானது, விடுதலைப் புலிகளுக்கு சற்று பின்னடைவைத் தந்துள்ளதால், மிகவும் கவனமாக செயல்படும்படி குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது. சிவராசனுக்கு, அனைவருக்கும் வேண்டிய பணத்தை பட்டுவாடா செய்யும் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அதற்காக 5 கிலோ தங்கம் கொண்டு வரப்பட்டு, 19.6 லட்சம் ரூபாய்க்கு அது விற்கப்பட்டது.

சுபா புகைப்பட நிலையம்

சென்னையில் முதன்முதலாக இவர்களின் வலையில் விழுந்தது நளினியின் சகோதரன் பாக்கியநாதன். இவர் திராவிடர் கழக அனுதாபி. சுபா சுந்தரம் நடத்திய சுபா புகைப்பட நிலையத்திற்கு திராவிடர் கழக இளைஞர்களும், சில பகுத்தறிவாளர்களும் வந்து போவது வழக்கம். இதை ஒரு விடுதலைப் புலிகளின் குகை என்றும் சொல்லலாம். பிரபாகரனும், சுந்தரத்திற்கு தொலைபேசியில் பேசி முத்துராஜாவிற்கு உதவும்படி கேட்டார்.

அரசியல் சஞ்சிகை ஒன்றைத் துவக்கி நடத்த வேண்டும் என்பது பாக்கியநாதனின் நெடுநாள் அவா. ஆனால், அவர் குடும்பமோ கடனில் தத்தளித்தது. பாக்கியநாதன் நளினி பணிபுரியும் அலுவலகத்திற்குத் தேவையான ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சொற்ப வருமானத்தைத் தேடிக்கொள்வார். தாயார் கல்யாணி மருத்துவமனை தாதியாகப் பணிபுரிந்தார். இவர்கள் வசித்த இடம் மருத்துவமனை தந்தது.

திடீரென மருத்துவமனை இடத்தைக் காலி பண்ணித் தருமாறு கேட்டபோது, குடும்பம் தடுமாறியது. சென்னையில் வேறு இடம் எடுக்க போதிய பணம் இல்லை. செய்வதறியாது திகைத்த நிலையில் இருந்தபோது, பேபி சுப்பிரமணியம் மெதுவாக பாக்கியநாதனை நெருங்கி, தனது பதிப்பகத்தை இயந்திரங்களுடன் விற்க விரும்புவதாகக் கூறினார்.

பாக்கியநாதனோ தன்னிடம் பணமில்லை என்றும், தவணை முறையில் தந்தால் தான் எடுப்பதாகவும் கூறினார். சுப்பிரமணியமும், “அதற்கென்ன? மாதம் 5000 வீதம் கொடுங்கள்” என்று கூறி, தனது பதிப்பகத்தை மலிவு விலைக்கு - ஆடித் தள்ளுபடி போல கொடுத்து, குடும்பத்தாரும் அங்கு வசிக்க வசதி செய்து கொடுத்தார். இதன் மூலம், பேபி சுப்பிரமணியம் அந்த முழு குடும்பத்தையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டார் - இழுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

பாக்கியநாதனுடைய வேலைகளுக்கு உதவுமாறு நளினியை பேபி சுப்பிரமணியம் தூண்டி விட, அது அவர் எதிர்பார்த்த பலனை விரைவாகவே தந்தது. அங்கு பதிப்பித்த பிரசுரங்கள் பல - இந்திய அமைதிப்படையால் விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பல விளைவுகளுக்கு ராஜீவ் காந்தியே காரணம் - பொறுப்பு என்று கூறின. அவற்றையெல்லாம் நளினி படித்தாள்.

கொஞ்சங்கொஞ்சமாக நளினியின் மூளை விடுதலைப் புலிகளின் சிந்தனையோடு ஒத்துப் போகத் துவங்கியது. அவள் ஒரு புத்தகம் தயாரித்தாள். அதன் பெயர், ‘இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள்’ என்பது. அதில், இந்திய ஊடகங்களில் வந்த - அமைதிப்படைக்கு எதிரான பத்திரிக்கை விமர்சனங்கள், படங்கள், கருத்துப் படங்கள் என பல தொகுக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலி தலைவர் எந்த உரையும் அதற்குத் தரவில்லை. ஆனால், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற மூன்று வரி ஆசிச் செய்தியை மட்டும் தந்திருந்தார்.

அடுத்து, புலிகளிடம் சிக்கியது புகைப்படம் எடுக்கும் இரண்டு இளைஞர்கள் - ரவிசங்கரனும், ஹரிபாபுவும். ஹரிபாபுவின் வேலைத்திறன் சுந்தரத்திற்குப் போதாது என்று அவரை நீக்கி விடவே, ஹரிபாபு இப்போது விக்னேஷ்வர் வீடியோ என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால், அவர் விடுதலைப் புலிகளுக்கு மிகவும் கடமைப்பட்டவராக இருந்தார். காரணம், ஹரிபாபுவிற்கு அவர்கள் நிறைய வேலை கொடுத்தார்கள். வேலைக்கு அதிகமான ஊதியமும் கொடுத்தார்கள். அது ஹரிபாபுவிற்கு நன்கு புரியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து, புகைப்படக் கலை படிப்பதற்காக பாலன் என்ற இளைஞன் வருவதாகவும், அவரைத் தன்னுடன் தங்க வைத்து கற்றுக்கொடுக்கும் படியும், சகல செலவுகளுக்கும் பாலன் பணம் தருவார் எனவும் முத்து ராஜா சொல்ல, ஹரிபாபுவும் சம்மதித்தார்.

இப்பொது பாலன் கற்றதை விட, பாலன் ஹரிபாபுவிற்கு கற்பித்ததே அதிகம். அதாவது, ராஜீவ் காந்தியால் தங்கள் மண்ணிற்கும், தங்கள் இயக்கத்திற்கும் பாரிய இழப்புகள் ஏற்பட்டன என்றும், அவர் மீண்டும் இந்தியாவின் பிரதமரானால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம் என்றும் அடிக்கடி பாலன் கூறி வர, ஹரிபாபு விரைவில் தீவிர ராஜீவ் எதிர்ப்பாளராக மாறிவிட்டார். ஆகவே, சென்னையில் இவர்கள் திட்டமிட்டபடி காரியங்கள் திருப்திகரமாக நகர்ந்து கொண்டிருந்தன - நடந்து கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் முருகன் தான் களத்தில் குதிப்பதற்குண்டான ஆயத்தங்களைச் செய்து வரலானார். சிவராசனோடு அடிக்கடி தொடர்புகொண்டு, நிலவரங்களை அறிந்து வந்த முருகன், இப்போது ஜெயகுமாரன், ரொபர்ட் பயாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களை சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். இருவருமே சிவராசனின் உடுப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிப்ரவரி துவக்கத்தில் சென்னை வந்து, போரூரில் உள்ள மைத்துனர் அறிவு என்ற பேரறிவாளனுடன் தங்கினார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ பட்டதாரியான அறிவு 1990 முதல் சென்னையில் வசித்து வந்தார்.

(அடுத்து : ஸ்ரீபெரும்புதூரில் நடந்த 'துன்ப நிகழ்வு')

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இங்கு எல்லாமே அரசியல்
posted by: mackie noohuthambi (chennai) on 07 April 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34172

மரண வீட்டில் குடும்ப தலைவனையோ தலைவியையோ பிள்ளயையோ இழந்து தவிப்பவர்கள் கண் கலங்கி நிற்பார்கள், நாம் அவர்களுக்கு ஆறுதல் சொல்வோம். இதை விட சிறப்பான ஒன்றை உங்களுக்கு இறைவன் அளிப்பான் என்று நன்மொழி சொல்வோம்.

ஆனால் தமிழ்நாட்டில் அழுவதற்கென்றே ஒரு கூட்டம் வாடகைக்கு பிடித்துக் கொண்டு வருவார்கள். அதற்கு பெயர் "கூலிக்கு மாரடிப்பது". இன்றும் வழக்கத்தில் உள்ளது. யார் வீட்டில் துக்கம் நிகழ்ந்தாலும் இவர்கள் ஒரு மணி நேரம் மரணித்தவர் பெயரை சொல்லி மார்பில் கையை வைத்து அடித்து அழ வேண்டும். இறந்தவரின் பெயர் தந்தை கணவன் மனைவி என்று யாரானாலும் அவர்களின் பெயரை முன்கூட்டியே இந்த மாரடிப்பு குழுவிடம் சொல்லி விடுவார்கள்.

ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு வீட்டில் வயதான பெண்மணி இறந்து விட்டாள். துக்கம் விசாரிக்க ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர் சென்றார். இறந்தவரின் மகனிடம் அவர் சொன்னார்" அவள் உனக்கு மட்டுமா தாய், எனக்கும் தாய், இந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் தாய், அவள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்" என்றார். இதை இன்னொரு அரசியல் கட்சியை சார்ந்தவர் பார்த்துக் கொண்டிருந்தார். என்னமாக வசனம் பேசி மக்களை கவருகிறான் என்று மனதுக்குள் பொருமிக் கொண்டார். இன்னொரு நாள் ஒரு வீட்டில் ஒருவருடைய மனைவி இறந்து விட்டாள். அங்கே இந்த இரண்டாவது நபர் போனார். "அவள் உனக்கு மட்டுமா மனைவி, எனக்கும் மனைவி, இந்த ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் மனைவி" என்றாராம். செம அடி வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தாராம். அந்த கதை நமது அரசியல்வாதிகளுக்கு பொருந்தி போகிறது. கதையான போதிலும் கருத்துள்ள பாடம்.

செத்த பொண்ணுக்கு ஜாதகம் பார்க்கிறார்கள் எல்லாமே இங்கு அரசியல்தான். புதிய தலைமுறை 10, ஏப்ரல் 2014 இதழை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved