Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:48:45 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 106
#KOTWART01106
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 2, 2016
ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்?
இந்த பக்கம் 3018 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர் வரும் மே 16ம் நாள தமிழக சட்டமன்றத்திற்க்கு பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சிகளின் பிரச்சாரங்களும்... வேட்புமனுத் தாக்கலும்... ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளும்... வெளிவந்து தேர்தல் களத்தை பரபரப்பாக இயங்க வைத்த வண்ணம் உள்ளது...

மக்களின் எண்ணங்களும்... கட்சித் தொண்டர்களின் செயல்பாடுகளும் அந்த மே-16 ஐ நோக்கியே குவிந்திருக்கின்றன.

பிரதான அ தி மு க - தி மு க தவிர கிட்டத்தட்ட ஆறு முனைப் போட்டி தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. இவ்வாறான ஒரு சூழல் இதற்கு முன்பு தமிழகத்தில் ஏறப்பட்டதில்லை... என்றே நினைக்கிறேன்...!

குறிப்பாக விஜயகாந்த் மற்றும் வைகோ தலைமையிலான மக்கள்நலக் கூட்டணி வாக்காளர்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையத் தோற்றுவித்திருக்கிறது...!

இத்தனை கூட்டணிகளுக்கு மத்தியில் தமிழகததில் பாரம்பர்ய செல்வாக்கு உள்ள... தமிழகத்தின் அரசியல் பிரதான நீரோட்டத்தில் இரண்டறக்கலந்துள்ள தி மு க - அ தி முக கூட்டணிகளும களத்தில் இருக்கின்றன...

தி மு க அணியைக் கூட்டணி என்றுசொல்லலாம் ..காங்கிரஸ்...ம ம க ..முஸ்லிம் லீக் ..புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அக் கூடடணியில் இணைந்து போட்டியிடுகிறது...

ஒப்பீட்டளவில் ... அ தி மு க அணியைக் கூட்டணி என்று சொல்ல முடியாது.தன்னோடு ஒத்துழைக்கும் சில தனிநபர்களின் கட்சிகளுக்கு ஏழு இடங்களை ... அதுவும் தனது சொந்த சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையோடு ...ஒதுக்கியிருக்கிறது...

ஆக... அ தி மு க என்ற இன்றைய தமிழகத்தின் ஆளுங்கட்சி கூட்டணியின்றி தனியாகத்தான் களத்தில் நிற்க்கிறது என்று கூடச் சொல்லலாம்...!

மற்ற கூட்டணிகளை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தாலும் கூட தமிழகத்தின் இந்த இரண்டு பிரதான அணிகளுள் ஏதாவதொன்றையே மக்கள் தேர்ந்தெடுக்க் கூடிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.

இவைகளுள்...எந்த அணி ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்படும்...? யாரது ஆட்சியில் மக்கள் தங்கள் தொழிலை...வியாபாரத்தை...வேலையை ...பார்த்துக் கொணடு நிம்மதியாக வாழ முடியும்...?

யாரது ஆட்சி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது...?

தமிழகத்தின் வாழ்வாதாரம் மேம்பட எந்தக் கட்சி பூரணமாக உழைக்கும்...? கடந்த காலங்களில் எந்தக் கட்சி உழைத்தது...? ...என்று இன்னோரன்ன செயல்பாடுகளை சீர்தூக்கி ஆராயும் போது.....அது மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள.. எதிர் காலத்திலும் அமையப்போகிற அ தி மு க ஆட்சியே ..என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்த ஆட்சியில் பெரும்பாலான மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன...

சாலப் பரிந்தூட்டும் தாயாக மாண்புமிகு அம்மா அவர்கள் மக்களுக்கு வேண்டிய திட்டங்களை ....அவர் சொல்லியதும் ...சொல்லாததுமாக நிறைய ஏற்படுத்தித் தந்துள்ளார்...

சென்ற ஆட்சியில் கடுமையாக பயமுறுத்திய மின்வெடடு அறவே இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது...அனல் மின் நிலையங்களின் சீரான மின் உற்பத்தி..காற்றாலை உற்பத்தி..மற்றும் தனியாரிடமிருந்து மின் கொள்முதல் போன்ற துரித செயல்பாடுகளினால்...இன்றைக்கு மின்வெட்டு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.ஒரு பத்து நாட்களுக்கு முன்பு கூட 15,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழக மினவாரியம் அதன் உச்சபட்ச திறமையை எட்டியிருக்கிறது.

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு நிதி சென்ற ஆட்சியில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்ததை மாற்றி ஒவ்வொரு குடும்பத்தற்க்கும் நான்கு லட்சம் ரூபாய் என மாற்றி அமைத்தது...

தமிழகம் முழுக்க ஆதி திராவிட மாணவர்களுக்கு புதிய தங்கும் விடுதிகளைக் கட்டியது...

அவர்களுக்கான் உணவுப் படியை அதிகரித்தது...

முதியோர் பென்ஷனை ரூ 500 லிருந்து ரூ 1000 மாக அதிகரித்தது...

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவச மடிக் கணிணி...

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

நாட்டிலேயே முதன் முறையாக இரு சக்கர ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தியது...

இன்னும் பல மக்கள் நலத் திடடங்களான அம்மா உணவகம்..அம்மா குடிநீர்...அம்மா உப்பு...குறைந்த விலையில் அம்மா சிமெண்ட்

குறைந்த விலையில் மக்கள் பயன் பெற பண்ணைப் பசுமைக் காய்கறிக்கடைகள்...

பள்ளி கல்லூரிகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமித்தல்...

காவல்துறையில் இளம்காவலர் படை என ஏற்படுத்தி வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளித்தல்...

தமிழக மக்களின் வாழ்வோடு தொடர்புடைய காவிரி..முல்லைப் பெரியார் போன்றவற்றில் சட்டத்தின் துணை கொண்டு மாநில உரிமையைப் பாதுகாத்தல்...

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலத்தில் அநியாயமாக சிறை வைக்கப்பட்ட 275 தமிழர்களை தமிழக அரசு வழக்கறிஞர்களின் துணையோடு சிறை மீட்டது... ஈழத்தமிழர்களின் துயரம் துடைக்க சட்டமன்றத் தீர்மானங்கள்...

வக்ஃப் வாரியத்திற்க்கு ஒரு கோடி நிதி அளித்தது...

தனியாரிடமிருந்த வக்ஃப் சொத்துக்களை மீட்டது...

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு முப்பது லட்சம் மானியம்...

சிற்சில சம்பவங்களைத் தவிர்த்து சிறப்பாகப் பேணப்பட்டு வரும் சட்ட ஒழுங்கு...

தவறு செய்பவர்கள அமைச்சரகளே ஆயினும் தயங்காமல்நடவடிக்கை...

காவல் துறையில் அநாவசியமான கட்சிக்காரர்களின் தலையீட்டை அடியோடு ஒழித்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது... ஏழைப் பெண்களின் திருமணத்திற்க்கு நான்கு கிராம் தங்கமும்... ஐம்பதாயிரம் ரூபாய் பண உதவியும்... செய்தது...

தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு கலைக் கல்லூரிகளை துவக்கியது...

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசுடமையாக்கி அங்கு பணி புரியும் ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பு கொடுத்தது...

இன்னும் கிராமப்புற விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற இலவசஆடுகள் கொடுத்தது...

இலவச மிக்சி கிரைண்டர் மின்விசிறி...

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் பங்குகளை தமிழக அரசே வாங்கி அது தனியார்.கைகளுக்குப் போகாமல் பாதுகாத்தது...

...இப்படியாக இந்த அரசின் மக்கள் நலத்திட்டங்களை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டேபோகலாம்...

நமதூரை முன்னிறுத்திப் பார்த்தாலும் கூட கடந்த எந்த அரசுகளும் செய்யாத பல நல்ல திட்டங்களை இன்றைய அ தி முக அரசு செய்துள்ளது...

கடந்த தி மு க அரசால் சும்மா வெற்று வாய்ஜால அறிவிப்பாக நின்று போன பொன்னன்குறிச்சி இரண்டாம் பைப்லைன் திட்டத்தை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசின் பங்களிப்பும் சேர்ந்து ரூ.முப்பது கோடி செலவில் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

தீவுத் தெரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளக்கு ரூ.90 லட்சம் செலவில் புதிய கட்டிடம்...

நமது நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்...

புகலிட.மைய்யமாக கொம்புதுறையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டிடம்...

கோமான் தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...

அம்மா உணவகம்...இந்தப் பகுதியில் நமதூரைத் தவிர்த்து வேறு எங்கும் கிடையாது...

நகரின் சீரான மின் விநியோகத்தைக் கருத்தில் கொண்டு ஆறு புதிய மின் மாற்றிகள்... (டிரான்ஸ்பார்மர்கள்)

மக்களின் பங்களிப்போடு நமதூரில் துணை மின் நிலையம்...

நகராட்சி மூலமாக குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பயோகேஸ் திட்டம்...

எட்டாயிரம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கியது...

நோன்புக் கஞ்சி தயாரிக்க அரசு சார்பில ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் இலவச அரிசி...

பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி...பள்ளிவாசல் மோதினாருக்கும் இலவச.சைக்கிள்...கிட்டத்தட்ட நாற்பது மோதினார்களுக்கு நமதூரில் வழங்கப்பட்டுள்ளது...

இலவச திருமண உதவித் திட்டத்திலும் நமதூரைச் சார்ந்த பல பெண்கள் பயனடைந்திருக்கறார்கள்

அரசு பொது நூலகத்திற்க்கு மக்களின் பங்களிப்போடு புதிய விசாலமான கட்டிடம் ...

..இவ்வாறு பற்ப்பல உதவிகளை நம்மவர்கள் இந்த அரசால் பெற்று வருகின்றனர்...

சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையில் இந்த ஆட்சியில் எவ்வித தொந்திரவுமின்றி பயமின்றி வாழ்கின்றனர்...

நமது முதல்வர் குறித்து எதிர்க் கட்சியினரால்...அவர் மோடியின் நண்பர் என்றும் ...இந்துத்வா கொள்கையில் பிடிப்புள்ளவர் ...என்றும் எவ்வித ஆதாரமுமின்றி காலாகாலமாக பரப்புரை செய்யப்பட்டு வரும் ஒரு சூழலில் ...இவைகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இங்கு சிறுபான்மையினர் எல்லா உரிமைகளையும் பெற்று பயமின்றி வாழ்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்...

எஸ் பி பட்டினம்...ஆம்பூர்...ஏர்வாடி போன்ற இடங்களில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளிலும் கூட ...அரசு பாரபட்சமின்றி செயல்பட்டு சிறுபான்மையினரின் காவலனாகவே இருந்துள்ளது...

நமதூரில் கே எம் டி ரோடிலுள்ள நமதூர்ப் பிரபல தனவநதரின் வீட்டுக்கு முன்பு சில சமூக விரோதிகள் சமூக நிம்மதியைக் குலைக்கும் பொருட்டு திடீரென ஒரு கோவிலை அங்கு நிர்மாணித்த போது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு வேகமாகச் செயல்பட்டு .. அந்தக் கோவிலை அப்புறப்படுத்தியதோடு..மக்களிடையே சுமுக ஒற்றுமையை நிலைநாட்டி...பதற்றத்தையும் போக்கியது...!

இப்படியாக பல நன்மைகளையும் ..அரசு நல.உதவித் திட்டங்களையும் பெற்றுத்தந்து...நமது மக்களுக்கும்...சமூகத்துக்கும் பாதுகாவல் அரணாக நிற்க்கும் இந்த அ தி மு க அரசுக்கு எதிர் வரும் தேர்தலில் இன்னொரு வாய்ப்பளிப்பது நமது கடமையாகும்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) on 02 May 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43661

எனது ஓட்டு என்றும் இரட்டை இலைக்கே. மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, தமிழகம் மேலும் வளம் பெற, வலம்மான வளர்ச்சி பாதையில் தமிழகம் சென்று அடைய அனைத்து மக்களையும் இந்த தேர்தலில் இரட்டை இலைக்கே வாக்களிக்க சொல்வோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:.வாக்குரிமை கொண்டு வஞ்சகர்களின் நெஞ்சங்களில் நஞ்சூட்டுவார்கள், ..
posted by: A.R.Refaye (Abudhabi) on 02 May 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43663

தமிழக அரசியல் மிக வியப்பானது ஆதரவு அலை , அனுதாப அலை,வானளவு தரும் தேர்தல் வாக்குறுதி, எல்லாவற்றிக்கும் மேலாக வோட்டுக்கு நோட்டு,நடு நிசியில் பாட்டில்களின் நடுவே நடக்கும் தொண்டர்களின் களியாட்டம். ஐந்து ஆண்டுக்கொருமுறை வரும் இந்த ஜனநாயக திருவிழாவில் குளிரூட்டப்பெற்ற தேரில் தெருவில் பயணித்து வரும் அரசியல் தலைவர்களை இனம் கண்டு தேரிலிருந்து அவர்களை தெருவில் விட்ட கதைகள் ஏராளம்!!

அப்படிப்பட்ட ஒரு திருவிழா மீண்டும் வருகிற மே 16 நடக்க உள்ளது இப்பெருவிழாவில் பொதுமக்கள் அவரவர்களின் வாக்குரிமை கொண்டு வஞ்சகர்களின் நெஞ்சங்களில் நஞ்சூட்டுவார்கள், மே 19ம் அன்று நயவஞ்சகர்கள் வீட்டில் முடங்கியும் ,நல்லவர்கள் ரோட்டில் மீண்டும் தேரில் பவனி வரும் தேரோட்டதை காண ஆவலாய் உள்ளோம் .

இலையை அடித்து ஆட்டுக்கு போடுவோம் பின்னர் அந்த ஆட்டை அடித்து இலையில் போடுவோம் உண்டுகளிப்போம்.

வாழ்க தமிழக மக்கள்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 03 May 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43667

சகோதரர் ஷுஐப் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று அம்மா அவர்கள் அரியணை ஏறவேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.

சகோதரர் S .I அப்துல் காதர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று கலைஞர் அவர்கள் அரியணை ஏற வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.

சகோதரர் சதகதுல்லாஹ் அவர்கள் மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெற்று புரட்சி கலைஞர் விஜயகாந்த் அரியணை ஏறவேண்டுமென்று ஆசைப் படுகிறார்கள்.

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும். என் வீட்டுக் கண்ணாடி என் முதுகை காட்டாது இக்கரைக்கு அக்கரை பச்சை

என்று ஒரு கவிஞர் பாடுவார். ஆக அவரவர்கள் ஆதரிக்கும் கட்சிகளின் குறைகள் அவர்களுக்கு தெரியாது மற்றவர்கள்தான் அதை தோலுரித்துக் காட்டுவார்கள். சூடு பிடித்திருக்கும் தமிழக தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டும் பணப் பட்டுவாடாவை நடத்திக் கொண்டும் இலவசங்களை வழங்கிக் கொண்டும் ஒட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கெல்லாம் ஆன்மீக தலைவர் அரசியல் தலைவர் நமது நபிகள் நாயகம் ஒரு செய்தியை சொல்லி தருகிறார்கள்.

நமது தொகுதியில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்களில் நமக்கு சேவை செய்தவர்கள் முன்பு களத்தில் நின்று வென்று தொடர்ந்து சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கலாம். அல்லது புதியவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் என்ற ஆசையும் இருக்கலாம். அந்த வகையிலேயே மே 16ம் திகதி காலை இன்ஷா அல்லா நாம் வாக்கு சாவடிக்கு சென்று நமது வாக்குகளை பதிவு செய்வோம்.

அந்த நேரத்தில் நாம் அல்லாஹ்விடம் ஒரு து ஆ இறைஞ்சுதலை அவன் முன் வைக்க வேண்டும் அதைதான் நபிகள் நாயகம் சொல்லித்தந்தார்கள். அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவருக்குதான் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பான் அவன் யாரிடமிருந்து அந்த ஆட்சியை பறித்துக்கொள்ள நாடுகிறானோ அதை வெகு சுலபமாக பறித்துக் கொள்வான். இது அவனுக்கு ஒரு விஷயமே அல்ல.ஒரு விஷயம் ஆக வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் அவன் சொல்வதெல்லாம் ''ஆகி விடு'' என்பது மட்டும்தான் அது ஆகிவிடும்.

எனவே அந்த வாக்குப் பதிவுக்கு செல்லும் இஸ்லாமிய தோழர்கள் ஓத வேண்டிய து ஆ வை மறந்து நான் நினைப்பதுபோல் தான் நடக்கும் நான் ஆசைப் பட்ட கட்சிதான் வெற்றிபெறும் நான் நினைக்கும் தலைவர்தான் முதலமைச்சர் ஆவார் என்று நினைக்காமல் அல்லாஹ் நினைப்பது தான் நடக்கும் என்று திட்டமாக அல்லாஹ் பேரில் நம்பிக்கை வைத்து இந்த து ஆ வை ஓதுங்கள்.

ALLAAHUMMA LAA THUSALLITH ALAINA MANN LAA YARHAMNAA VALAA YAKHAAFUKA FEENA.

இந்த து ஆவை ஓதினால் நாம் நினைக்கும் ஆட்சி முஸ்லிகளுக்கு உதவி செய்யும் ஆட்சி அமையும். அல்லாஹ் ரசூலை பின்பற்றிய நன்மையையும் கிடைக்கும்.

நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

அல்லாஹ் நாமம் வாழ்க நபிகள் நாயகம் நாமம் வாழ்க...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: M.S.K. SULTHAN (Dubai) on 03 May 2016
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43669

அஸ்ஸலாமு அலைக்கும்

சுஐபு காகா கட்டுரை வாசிப்பதில் நானும் ஒருவன். ஆனால் அவர் ஒரு தலை பட்சமாஹா ஆதரித்து ஓட்டு போட சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.

இந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.

அம்மா அவர்களின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் தூக்கதிலும் துக்கத்திலும் தான் இருந்தது. அவர்களின் அமைச்சரவை குனிந்து கொண்டேதான் செயல்பட்டதே தவிர வேற ஏதும் சொல்லும்படியாக இல்லை.

அம்மா ஆட்சிலும் மின் வெட்டு அதிகமாகவே இருந்தது.பால் விலை, பஸ் கட்டணம், பருப்பு விலை, பல திட்டங்களை சொன்னார்கள் சில திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. முதலில் மக்களை சந்திக்க சொல்லுங்கள். ஹெலிகோப்டேர்ல சுத்தி மக்களின் வரி பணத்தை வேஸ்ட் பண்ணுவது, ஆணவ திமிரில் அமைச்சரவையை ஆட்டி படைப்பது, மொத்தத்தில் அதிமுக ஆட்சி சொன்னாங்களே செய்ந்சாங்கள

இந்த முறையும் அம்மா வந்தால் தமிழ்நாடு இறைவனாலும் காப்பற்ற முடியாது.

வரி பணத்தை வேஸ்ட் பண்ணுவதில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை

கருப்பு துணியை கண்ணில் கட்டி கொண்டு உலகம் இருண்டு கிடக்கிறது என்று சொல்கின்ற குஊட்டம் தான் அம்மா அமைச்சரவை.

சிந்தித்து ஓட்டு போடுவீர் மக்களே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
M.S.K. SULTHAN
DUBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...சுல்தான் காக்கா அவர்கள் என்னை மன்னிக்கவும்
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 03 May 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43670

சகோதரர் ஷுஐப் அவர்களின் கட்டுரைக்கு விமர்சனம் எழுதியுள்ள சுல்தான் காக்கா அவர்கள், அம்மா ஆட்சி வந்தால் ''இந்த தமிழகத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். நவூது பில்லாஹி மின்ஹா.

இந்த வசனம் அரசியல்வாதிகள் மிக சாதாரணமாக சொல்வார்கள். ஆனால் அல்லாஹ்வையும் ரசூலையும் மறுமைநாளையும் நம்பும் நாம் அல்லாஹ்வின் வல்லமையை முழுமையாக நம்பும் நாம் அந்த வார்த்தைகளை மறந்தும் சொல்லக் கூடாது. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.

இந்த தவறை இந்த இணையத்தளத்தில் சுட்டிக் காட்டியதற்காக என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல 4 காரணங்கள்
posted by: Muthu Magdoom VSH (Jeddah) on 04 May 2016
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43671

அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல 4 காரணங்கள் :

1. உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒரு வேளை ஜெயலலிதா வுக்கு எதிராக வந்தால், மீண்டும் ஒரு 5 ஆண்டுகளுக்கு பொம்மை முதல்வர் ஆட்சி நடக்கும். தமிழ்நாடு இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி போய்விடும். குறிப்பாக தொழில்கள் அனைத்தும் முடங்கி விடும்.

2. ஒரு முன்னாள் முதல்வர் திரு. ஓ.பி.எஸ் அவர்கள் ஜெ. வேட்புமனு செய்ய வந்த போது தரையை தொட்டு வணங்கியது ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ் இனத்தை கேவலமாக பார்க்க வைத்தது.

அ.இ.அ.தி.மு.க.அடிமைகள் செய்யும் கேவலமான செயல்களால் தமிழ்நாட்டில் ஆண் மகன் என்ற ஒரு இனமே இல்லை என்பது போல ஆக்கி விட்டார்கள்.

3. சென்னை மழை காலத்தில் மட்டும் அல்ல, அப்துல் கலாம் சாவுக்கு கூட போகாத ஒரு முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் எதாவதும் ஒரு மாவட்டம் வந்து இருக்கிறாரா ? கடவுளின் மீது சத்தியமாக, மக்கள் மீது ஒரு சிறு துளியும் அக்கறை இல்லாத ஒரு முதல்வருக்கு வாக்களிக்கலாமா ?

4. இதுவரை எந்த ஒரு மக்கள் போராட்டத்துக்கு மதிப்பு அளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி இருக்கிறார்? இதுவரை எந்த ஒரு அமைப்போ அல்லது சங்கமோ ஏதேனும் ஒரு பிரச்சினைக்காக முதல்வரை நேரில் சந்தித்து பேசி மனு கொடுத்த துண்டா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. உலக முதலீட்டளர்கள் மாநாடு... பகல் கொள்ளை...
posted by: hasbullah mackie (dubai) on 04 May 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43673

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான மின்வெட்டு அமலுக்கு வந்தது தொழிற்சாலைகள் மூடியது யாராலும் மறந்து இருக்க முடியாது...

முதல் முறையாக பவர் இல்லாமலே யூனிட் விலையை உயர்த்தியது... பால் விலையை கடுமையாக உயர்த்தியது.. பேருந்து கட்டண உயர்வு... வந்தவுடனே திமுக வை பலி வாங்கும் எண்ணத்திலே மக்கள் பணத்திலே கட்டிய கட்டிடங்களை எல்லாம் மானத்திற்காக வேண்டி சீரழித்து.. சமசீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்தது..

இப்போது சொல்லி வரக்கூடிய படி படியாக மது விலக்கு என்பதை ஆட்சிக்கு வந்த பிறகு அமுல் படுத்தியிருக்கலாமே?? அப்படி செய்திருந்தால் மதுவை ஒழித்திருக்கலாமே.. ?? ஏன் அதை செய்யவில்லை? எவ்வளவு போராட்டகள் நடந்தும் கண்டு கொள்ளாமல் விட்டது...

மக்களுக்காக நான், உங்களுக்காகவே நான்.. ஒரு தாய்க்கு தான் மகனின் அருமை தெரியும்.. அது உண்மையாக இருந்தால் எப்படி இதை ஒளிக்காமல் இருந்திருப்பார்.. ஒட்டு வங்கிக்காக வேஷம் போடுவது தெளிவாகின்றது. மழை வெள்ளத்தில் கிடைத்த கோடி கணக்கான மக்கள் பணம் எங்கே போனது ?? உலக முதலீட்டார்கள் என்று நடத்தி பல கோடி திட்டங்கள் தமிழ் நாட்டில் வரப்போகிறது என்று படம் காட்டினார்களே.. ? அது என்ன ஆனது ? அந்த கோடிக்கணக்கான செலவினால் என்ன பயன்../??

தனது ஆடம்பர வாழ்க்கைக்காக மக்கள் பணத்தில் ஹெலிபேட் உண்டாக்குவது.. கோடை நாட்டு எஸ்டேட் போயி ரெஸ்ட் எடுப்பது.. மழையினால் பாதிக்கப்பட்டவர்களை காரில் இருந்து இறங்கி சந்திக்க முடியவில்லை.. அனால் சோ என்பவருக்கு சுகமில்லை என்றவுடன் இறங்கி போக முடிகிறது.. இப்போது தேர்தல் என்று வரும் பொது இறங்கி பல இடங்களுக்கும் செல்லுவது.. இப்போது மட்டும் எப்படி முடிகிறது??

இப்படியெல்லாம் குணா சித்திரம் கொண்டுள்ள.. அம்மையாரின் ஆட்சி இனியும் தொடர்ந்தால் கலி காலம் தான்.. ஸ்டிக்கர் கலாச்சாரம் தான் இனி நடக்கும்.. அராஜகம் அரங்கேறும்.. திமுக கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது திமுக ஆட்சியில் தான்.. முஸ்லிம்களை பர பட்சமாக குண்டர் சட்டத்தில் போட்டது.. குடும்ப ஆட்சி நடக்கும்.. கோடி கணக்கான மக்கள் பணம் குடும்பத்திற்கு செல்லும்.. ஆக மொத்தம் இரு திராவிட கட்சிகளும் மக்களை மடையர்களாக ஆகினார்கள் கடந்த காலங்களில்.. இதை தவிர்த்து மக்கள் நல கூட்டணி ஓரளவு பரவாக இல்லை என்றே சொல்லலாம்.. மக்களால் அடையாளம் காணப்பட்ட இவர்களை விட நல்லவர்கள் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததால் அவர்கள் வெற்றி வாய்ப்பு குறைவு தான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: M.S.K. SULTHAN (Dubai) on 04 May 2016
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43674

எனது தவறை சுட்டி காட்டிய மக்கி நூஹுதம்பி காகா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அந்த வார்த்தை என்னையும் அறியாமல் கோபத்தில் வந்தது.

அல்லாஹ்விடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வாய் தவறி இது போன்ற வார்த்தைகள் சொல்லாமல் இருக்க இறைவன் பாதுகாப்பானாக ஆமீன். நீங்கள் தான் என்னை பெரும்தன்மையாக மன்னிக்க வேண்டும்.

Admin அவர்களே

அந்த வார்த்தையை edit பண்ணிருக்கலாமே

M.S.K. SULTHAN
DUBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...
posted by: Mohideen (Jeddah) on 04 May 2016
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43677

அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல இந்த ஒரு காரணமே போதும்

MLAக்கள் அடிமைகளாக இல்லமால் சுயமரியாதையுடன் இருப்பார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved