Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:24:48 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 109
#KOTWART01109
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 10, 2016
திமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
இந்த பக்கம் 3617 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணத் துவங்கியவுடன் நினைவுக்கு வருவது - கை ரிக்ஷா ஒழிப்பு முதல், காப்பீட்டுத் திட்டம் வரையிலான கலைஞரின் கணக்கற்ற சாதனைகள் மாத்திரமல்ல! கடந்த ஐந்தாண்டு காலமாக செயலற்றுக் கிடக்கும் ஒரு மக்கள் விரோத அரசின் காணொளி ஆட்சியும் கூட!

குமாரசாமியின் கால்குலேட்டரில் கை நழுவிப் போன நீதி, ஆச்சாரியாவின் அசுரப் பிடியில் பெங்களூரின் காராக்கிரகக் கதவுகளை மீண்டும் திறந்துவிடக் கூடும். ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வருமேயானால், மீண்டும் ஒரு பொம்மை அரசாங்கம், எல்லா நிலையிலும் - எல்லாத் துறைகளிலும் செயலற்ற தன்மை வியாபித்துவிடும்.

நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில் 6 முனைப் போட்டி, 7 முனைப் போட்டி என்று சொல்வதெல்லாம் யதார்த்தத்திலிருந்து மாறுபட்ட விவாதமாகும். மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்தின் வருகைக்குப் பிறகு மனநலம் குன்றிய கூட்டணியாக மாறி - வைகோ, பிரேமலதா போன்றோரின் பொறுப்பற்ற பேச்சுக்களாலும், செயல்களாலும் கரைந்து காற்றோடு கலந்து, களத்திலேயே இல்லாமலாகிவிட்டது.

ஆளும் அண்ணா திமுகவின் மக்கள் விரோதக் கொள்கைகளால் இன்று அவர்களது அமைச்சர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் எங்குமே போய் வாக்கு சேகரிக்க இயலாத படி, பொதுமக்கள் அவர்களை ஊரை விட்டே விரட்டியடிப்பது அன்றாடம் செய்தித்தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

சாலைகள் அமைப்பது, பள்ளிக்கூடங்கள் - அணைகள் - பாலங்கள் கட்டுவது என இவையாவும் ஓர் அரசாங்கத்தின் வழமையான செயல்பாடுகளே. இந்தச் சமூகத்தையே புரட்டிப் போடும் பல்வேறு சமூக நீதித் திட்டங்களை கடந்த கால கலைஞர் அரசு திறம்பட செய்து முடித்தது. குறிப்பாக முஸ்லிம்களுக்காக 3.5 சதவிகிதத்தை இடஒதுக்கீடாகத் தந்தது, கலப்புத் திருமண சட்டம், விதவைகள் மறுவாழ்வுத் திட்டம், மனிதரை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாவை தடை செய்தது, அனைவரும் அர்ச்சகராகும் சமநீதித் திட்டம், சமத்துவபுரங்கள், உழவர்களே விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உழவர் சந்தைகள் - என்று எழுதிக்கொண்டே சென்றால் தேர்தல் நாள் வந்துவிடும்.

ஏறத்தாழ எல்லாக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வெளிவந்துவிட்ட நிலையில், கல்விப் பணிக்கும் - விவசாயத்திற்கும் அன்றி வேறெதற்கும் இனிக்கும் இலவசங்களை நாக்கில் தடவாமல், இருண்டு கிடக்கும் தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான அனைத்து அம்சங்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது.

அதில் முதன்மையானது மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழிதான். நடந்துகொண்டிருக்கும் ஜெயலலிதா ஆட்சியில் எந்தளவிற்கு மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து, அதற்காக தனிப் பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு, மது விற்பனை அதிகரிக்க கலெக்டர் முதல் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் வரை பாடுபட்ட வரலாறு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திற்கும் வாய்த்திடவில்லை. மதுவிற்கெதிரான பாடல்களைத் தந்ததற்காக ஓர் எளிய கலைஞன் கோவனை தேச விரோத சட்டத்தில் கைது செய்ததும், அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த - மதுவுக்கெதிரான மாணவர் போராட்டத்தை - காவல்துறையின் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டு நசுக்கியதும், மதுவுக்கெதிரான போராட்டத்தில் தனித்தன்மையுடன் முனைந்து நின்ற சசிபெருமாளை கோபுரத்தில் ஏற்றி - அவரே தற்கொலை செய்துகொண்ட காட்சியும் அரங்கேற்றப்பட்டது இந்த அரசால். இந்த லட்சணத்தில் இவர்கள் படிப்படியாக மதுவைக் குறைப்பார்களாம்.

கடந்த ஐந்தாண்டு காலம் கலைஞர் அரசு உற்பத்தி செய்த மின்சாரத்தை விட ஒரேயொரு மெகாவாட் அதிகமாக இந்த அரசு மின் உற்பத்தி செய்தது என்பதை மின்மிகை மாநிலம் என்று கதையளக்கும் கண்ணியவான்கள் நிரூபிக்கத் தயாரா?

கடந்த ஐந்தாண்டு காலமாக - தான் வசிக்கும் சென்னை மாவட்டம், தனது உல்லாசபுரியைத் தாங்கி நிற்கும் நீலகிரி மாவட்டம் – இந்த இரண்டு மாவட்டங்களையும் தவிர, இந்த முதலமைச்சர் வேறு எந்த மாவட்டத்திற்கேனும் சென்றதுண்டா? தனது மக்களைக் கூட, அவ்வளவு ஏன்? மந்திரிகளையும், அதிகாரிகளையும் கூட சந்திப்பதற்கு நேரம் தராத இவரது கதை, மத்திய மந்திரி ப்யூஷ் கோயலின் பட்டவர்த்தனமான குற்றச்சாட்டில் பட்டம் போல் பறக்கிறது.

கடந்த ஐந்தாண்டு காலமாக ஒரேயொரு குடும்பத்திற்குக் கூட ரேஷன் அட்டையைப் புதிதாக வழங்காத இந்த அரசு, ரேஷன் ஒன்றுக்கு ஒரு மொபைல் இலவசமாகத் தருவதாகக் கூறுவது - சாதமே போடாமல் சாம்பார் ஊற்றுவது என்று சொல்வது போலத்தான்! சர்வதேச தொழில் வீதிகளில், தரம் குறைந்தது என்ற சான்றிதழுடன் குப்பைத் தொட்டியில் வீசப்படும் இயந்திரங்களையெல்லாம் ஒன்றிணைத்து, இவர்கள் தரப்போகும் மொபைல் தொலைபேசியால் எத்தனை உயிர் போகப்போகிறது என்பதை இன்றே அரூடம் சொல்ல இயலாது. ஆனால் நாம் முன்வைக்கும் கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் மாத்திரம் தமிழ் மக்களின் தலைகளில் ஒன்றரை லட்சம் கோடி கடன் சுமையைச் சுமத்திய இந்த அரசுக்கு இன்னமும் இலவச திட்டங்களைச் செயல்படுத்த எங்கிருந்து நிதி வரும்? இதற்கும் அறிவுஜீவிகளான அவர்களது அடிபொடிகள் விடை தரட்டும்!

நீதிமன்றத் தீர்ப்பால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறைச்சாலைக்குச் சென்று வந்த பிறகும், இவரது ஆணவம் கொஞ்சமும் அடங்கவில்லை என்பதை, அண்மைக் காலத்தில் இவர் அறிமுகப்படுத்தியிருக்கும் இரட்டை மேடைகள் சாட்சி பகர்கின்றன.

இதற்கெல்லாம் மேலாக, இந்தத் தேர்தலில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, சமுதாயத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், “12 முஸ்லிம்களேனும் சட்டமன்றத்திற்குச் செல்லும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்” என்று கலைஞரிடம் முன்வைத்த கோரிக்கையை அவர் அப்படியே ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாக இன்றைக்கு திமுக கூட்டணியில், கிட்டத்தட்ட 15 முஸ்லிம்கள் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

1967இல் அண்ணா காலத்தில் அமைந்த ஆரோக்கியமான சட்டமன்றம், திமுகவை ஆளுங்கட்சியாகவும், காங்கிரஸை எதிர்க்கட்சியாகவும் கொண்டு அமையவிருக்கிறது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த அடுக்கடுக்கான சாதீய ஆவணக் கொலைகள், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, மக்களையே சந்திக்காத மக்கள் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள் சுதந்திரத்தின் கழுத்து நெறிப்பு, ஆட்சியின் எல்லா மட்டங்களிலும் ஊழல் என்ற நிலைகள் மாறி, மீண்டும் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க, இம்முறை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டியது அவசியம் என உணர்ததுக்கிறது.

நாடெங்கிலும் திமுகவின் அலை வீசுவதாக அனைத்து ஊடகங்களும் கணிக்கின்றன. 93 வயது சிங்கம் கர்ஜிக்கத் துவங்கியவுடனேயே, சில்லறைகளின் சலசலப்பு அடங்கிவிட்டது. அந்தகார இருளகற்றும் சூரியன் வலம் வரத் தொடங்கியதும், சந்து முனைகளில் சிந்து பாடும் சோடியம் வேப்பர் விளக்குகள் ஒண்டி ஒளிந்துகொண்டன.

ஆட்சி மாற்றத்திற்கான பொதுமக்களின் தாகம் மே 19இல் தணிந்துவிடும். ஆறாவது முறையாக, அன்னைத் தமிழகத்தின் அரியணையை அலங்கரிக்கவிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் - சொன்னதையும் செய்வார்; சொல்லாததையும் செய்வார் என்று நம்பிக்கை வைப்போம்! திமுக கூட்டணிக்கே வாக்களிப்போம். நல்லாட்சி மலர நாமும் ஒரு வித்தாவோம்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கவிஞரும் கலைஞரும்
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 10 May 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43712

இந்த நாட்டின் வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை, இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க படுபவர் அகவை 75ஐ தாண்டி நிற்கிறார். பிரதமராக தேர்ந்தெடுக்கப் படுபவர் ஒய்வு பெறும் வயதின் எல்லையை தாண்டி நிற்கிறார். மாநிலத்தின் முதலமைச்சராக அல்லது முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குபவர் அகவை 90 ஐயும் தாண்டி நின்றாலும் அவரையும் மக்கள் அங்கீகரிக்கிறார்கள்.

இளைஞர்கள் 100 பேரை தாருங்கள் அவர்களை இந்த நாட்டின் சிற்பிகளாக்கி காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொன்னார். இஸ்லாத்தின் ஓரிறை கொள்கையை மக்கள் முன் அறிவித்தவர் ஒரு 40 வயது இளைஞர். அவரைப் பின்பற்றிய தோழர்கள் இளைஞர்கள். அந்த இறை தூதர் இளைஞர்களே என்ற பொருள்படும் YA MAUSHARASH SHABAAB என்றுதான் அவர்களது தாய்மொழியான செம்மொழியான அரபியில் அழைத்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஒரு இளைஞர் .

துரதிர்ஷ்டவசமாக நம் இளைஞர்கள் அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்கள் தங்களை முன்னிலைப் படுத்துவதும் இல்லை அவர்களை முன்னுக்கு வருவதற்கு அதன் வயதான தலைவர்கள் அனுமதிப்பதும் இல்லை. ஒதுங்கி வழிவிடுவதும் இல்லை. பெருந்தலைவர் காமராஜ் மட்டும் விதிவிலக்காக தெரிகிறது. அவர் K PLAN என்று ஒன்றைக் கொண்டுவந்து தன்னையே அதற்கு முதல் பலியாக்கி இளைஞர்களை வாருங்கள் என்று அழைத்தார்.பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை ,தம்பி வா தலைமை தாங்க வா என்று அழைத்தார்.

அதன்பிறகு கலைஞராகட்டும் புரட்சி தலைவராகட்டும் புரட்சி தலைவியாகட்டும் மக்கள் நலக் கூட்டணியும் முதல்வர் வேட்பாளரான புரட்சி கலைஞராகட்டும் எல்லோருக்கும் தாங்களே முதல்வர் ஆக வேண்டும் என்ற வேட்கை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இவர்கள் எல்லோருடைய தேர்தல் அறிக்கைகளிலும் இலவசம் என்ற விஷம் தோய்ந்த தேன் கலக்காமல் இல்லை.மக்களும் கொள்கை லட்சியம் என்ற அளவுகோலை தாண்டி இலவசங்களை மையமாக வைத்து தான் தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள்.

கலைஞர் அளித்த இலவச வண்ண தொலைக் காட்சி பெட்டியை வேண்டாம் என்று என்னை போன்று உங்களை போன்று விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே. மிக்சியும் கிரைண்டரும் மின்விசிறியும் மடிக் கணினியும் தந்த மகராசி என்று அம்மாவை வாழ்த்தாத குடும்ப அட்டைதாரர்கள் உண்டா ஊழல் ஒழியவேண்டும் என்று கூக்குரலிடுபவர்கள் அதிமுகவையும் திமுகவையும் அதிலிருந்து பிரிக்க முடியுமா நெருப்பில் பெரிய நெருப்பு சிறிய நெருப்பு பாவத்தில் பெரிய பாவம் சிறிய பாவம் என்று இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் நெருப்பு சுடும் பாவம் சுடும் நெருப்பில் நம்மை தள்ளும்.

நமது தொகுதியில் முன்பு போட்டி இட்டவரா இவர் அப்படியானால் அவர் இந்த தொகுதிக்கு நமது ஊருக்கு என்ன நன்மைகள் செய்துள்ளார் என்று பார்த்து அவரை தேர்ந்தெடுக்கலாம். மற்றப்படி புது முகங்களாக யார் நின்றாலும் அவர்களின் பொது நல சேவைகளை கருத்தில் கொண்டு நமது வாக்குகளை பதிவு செய்யலாம் .நமது தொகுதி வேட்பாளரை பார்க்கும்போது கவிஞர் அவர்கள் சொல்லும் கலைஞர் வேட்பாளருக்கு நமது வாக்குகளை அளிக்கலாம் .

மற்றப்படி கலைஞர் பட்டினம் கவிஞர் பட்டினம் இது காயல்பட்டினம் என்பதெல்லாம் ஒரு மாயைதான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. பழம் கனிந்து.....
posted by: muthuwappa (al khobar) on 10 May 2016
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43714

மனநலம் குன்றிய கூட்டணிக்காக தான் பழம் கனிந்து பாலில் விழ காத்திருந்தாரோ பழம் பெரும் தலைவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. நன்றியுடைய முஸ்லிம்கள்!..
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 10 May 2016
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43715

முஸ்லிகளாகிய நாம் இந்திய திருநாட்டில் சுமார் 20% சதவீதம் வாழ்கிறோம், இந்த20%சதவீததிற்குறிய பிரதிநிதிகளை நம் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ நாம் பெற்றுக்கிறோமா என்றால் இல்லை!

உதாரணத்திற்கு சட்டமன்றத்தைப்பொருத்தவரை 22லிருந்து 23 இடங்களிலாவது நம்முடைய பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.அதற்குறிய அந்தஸ்த்தை,மரியாதையை,உரிமையை எந்த பெரிய அரசியல் கட்சிகள் நமக்கு தந்திருக்கிறார்கள் என்பதை நாம் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம்!

தற்போதுள்ள நிலையில் ஆண்டுகொண்டிடிருக்கும் கட்சியையோ,ஆழ முயலும் பெரிய கட்சியையோ எடுத்துக்கொண்டால் .தி.மு.க ஒன்றுதான் நம்முடைய சமுதாயத்திற்கு மதிப்பளித்து சுமார் 15 முஸ்லிம்களை சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என்ற ஒரு பெருந்தன்மையோடு நமக்கு அங்கீகாரம் தந்திருக்கிறார்கள் அல்ஹம்திலில்லாஹ்! .

சிறுபான்மை சமுதாயத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடும், இஸ்லாமியர்களுக்கும் அவர்கள் இதயம் குளிர தம்மால் இயன்ற உதவிகளையும்,பாதுகாப்பையும் கொடுக்கவேண்டும் என்ற ஒரு புண்ணிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த 15 முஸ்லிகளுக்கு வேட்பாளர் என்ற அந்தஸ்த்தை அளித்து அரியணை ஏற்றி அழகு பார்க்க வேண்டுமென்கின்ற ஆசை!

இதுவரை எந்த கட்சியும் தந்திடாத முஸ்லிம்களுக்குறிய இடஒதுக்கீட்டை, தி .மு.கவின் தலைவர் கலைஞர் ஒருவரே நமக்களித்து நம் சமுதாயத்தை களிப்புக்குள்ளாக்கியவர்!

எந்த சூழ்நிலையிலும் உங்கள் பாதுகாவலனாக இனி இருப்பேன் இதற்கு முன் நடந்துவிட்ட பல கசப்பான சம்பவங்களான பிஜேபி யுடன் கூட்டு போன்ற ஒருசில சம்பவங்களால் பல முஸ்லிம்கள் மனவேதனை அடைந்ததையும் நானறிவேன்.அத்தவறுகளுக்காக நான் உளமுருக வருந்துவதோடு இனி அதுபோன்ற எந்த தவறும் எதிர்காலத்தில் நடைபெறாது என்ற உறுதிமொழியை தருகிறேன் என்று நம் காயல்மண்ணில் நடந்த மாபெரும் கூட்டத்தில் முறையிட்ட ஒரு ஒப்பற்ற தலைவர்தான் கலைஞர் அவர்கள்!

களத்தில் தி .மு.க அணியை எதிர்க்கும் பெரிய அணியாகிய அ தி மு க அணியின் தலைவி ஜெயலலிதா அவர்கள் தங்களின் இந்த ஐந்தாண்டுகால ஆட்சி காலத்தில் நமக்கு கிடைத்த இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த ஒரு எள்ளளவு கூட உதவினார்களா என்றால்,இல்லாவே இல்லை.மாறாக ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு கொடுக்க ஒதுக்கிய இடஒதுக்கீட்டை வன்மையாகவும்,வெளிப்படையாகவும் எதிர்த்தவர்தான் இந்தஅம்மையார்.சென்ற பாராளுமன்ற தேர்தலில் குமரியில் பேசும்பொழுது நான்தான் 3.5 சதவீதம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை கொடுத்தேன் என்று பகிரங்கமாக பொய்யை பகிர்ந்தவர்தான் இந்த பெண்மணி!

சென்ற தேர்தலில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து விட்டது தி.மு.க என்று கூப்பாடிட்டு ஆட்சிக்கு வந்த அம்மையார் அவர்கள்தான் பல முறைகேடு வழிகளிலும் பலகோடி சொத்துகளை சேர்த்தது பிடிபட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை 100 கோடி அபராதம் என்று தீர்ப்பாகி, இந்தியாவிலேயே ஆட்சியில் இருந்த ஒரு முதலமைச்சர் சிறைத்தண்டனை அடைந்த பெருமையை பெற்றவர்.பின்னர் எப்படி வெளியே வந்தார் என்பதை இந்த நாடே அறியும்!

சென்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை அனைத்து திசையிலும் வீசிக்கொண்டிருக்கும் போது கூட,சிறுபான்மை சமுதாய பாதுகாவலனாக இருப்பேன் ,மதவெறி கட்சிகளை மண்தோண்டிப்புதைப்பேன் என்ற சூளுரைக்கொள்கையோடு களம் இறங்கியவர்தான் முத்தமிழ் தலைவர் கலைஞர் அவர்கள்!

உண்மையிலேயே 2G ஸ்பெக்ட்ரம் என்று சொல்கின்ற கற்பனை ஊழலுக்கும் தி.மு.க விற்கும் தொடர்பு இருந்திருக்குமேயானால் தங்கள் சுயநலம் கருதி,தங்கள் வழக்குக்கு சாதகம் தேடி பிஜேபி யை அல்லவா ஆதரித்து இருக்கவேண்டும் தி.மு.க.

ஆகவே,காயல் நகர கண்மணிகளே நம் சமுதாய சகோதரர்கள் 15 பேர்களும் வெற்றிபெற்று வீறு நடையோடு சட்டமன்றம் சென்றால், நம்மினம் எந்த அளவிற்கு கௌரவத்தையும் மரியாதையும் பெற்று மிளிரும், அதனால் நம் சமுதாய மக்களுக்கு பல,பல நன்மைகள் வந்தடைய வழிபிறக்கும்.அடுத்த தேர்தலில் நம்மினத்தை நாடி ஓடிவருவார்கள் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும்!

அப்படிப்பட்ட புண்ணிய உதவியை செய்த தலைமையின் ஆசிபெற்ற வேட்பாளரான மனிதநேயரும், வரியவர்களையும், வறுமையில் வதங்கும் ஏழைகளையும் அவர்கள் இடம்தேடி ஓடி உதவக்கூடிய உத்தம குணத்தின் சீலர் அண்ணாச்சி அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டியது நமதுகடமையாகும். அதுதான் முஸ்லிம்களின் நன்றியுணர்வு மட்டுமல்ல,எங்கள் இனத்திற்கு உதவியாகவும், பாதுகாப்பாக்கவும் இருக்கும் தலைமைக்கு எங்களின் இதயசுத்தியோடும் உண்மையுடன்கூடிய நன்றியுணர்வோடும் நடப்போம் என்பதை இப்பரணியறிய பறைசாற்றும் ஒரு பிரதிஉபகார முன்மாதிரியாகும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...நாட்டுக்கு சேவை செய்த நாகரிக கோமாளி வந்தானய்யா
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 11 May 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43717

 தமிழக தேர்தலில் மொத்தம் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்துகள் உள்ளன. அவருக்கு அடுத்து சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு ரூ.170 கோடிக்கு சொத்துகள் உள்ளன.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 3-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.113 கோடி.

கட்சிவாரியாக அதிமுக 156, திமுக 133, பாமக 72, பாஜக 64, தேமுதிக 57, காங்கிரஸ் 32, வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத் துள்ள கோடீஸ்வரர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக மதிப்பிடும் போது பெரிய கட்சிகளின் வேட்பாளர் களது சராசரி சொத்து மதிப்பு ரூ.4.35 கோடியாக உள்ளது.

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் கருப்பன், திருக்கோவி லூர் பாஜக வேட்பாளர் தண்டபாணி ஆகியோர் தங்களுக்கு எவ்வித சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மொத்த வேட்பாளர்களில் 114 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 284 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

283 பேர் மீது கிரிமினல் வழக்கு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 157 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 5 பேர் மீது கொலை வழக்கும் 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

கட்சிவாரியாக திமுக 68, பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, காங்கிரஸ் 10, பாஜக 26, மார்க்சிஸ்ட் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

சுமார் 28 தொகுதிகளில் மூன் றுக்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர.

அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் வாழ்க இந்திய ஜனநாயகம் வாழ்க.

புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர் தலில் மொத்தம் 344 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 343 வேட்பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வரர்கள். கட்சி வாரியாக என்ஆர் காங்கிரஸ் 21, காங்கிரஸ் 18, பாஜக 8, அதிமுக 18, பாமக 5 மற்றும் 16 சுயேச்சை கோடீஸ்வர வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.49 கோடி.

94 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 204 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை அளிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக 68 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. கட்சி வாரியாக பாஜக 8, என்ஆர் காங்கிரஸ் 8, காங்கிரஸ் 6, அதிமுக 6, பாமக 6, நாம் தமிழர் கட்சி 3 மற்றும் 11 சுயேச்சை வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. திமுக..
posted by: hasbullah mackie (dubai) on 11 May 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43718

மது விலக்கு அமுல் படுத்த போகிறோம் என்று சொல்லுவது ஒரு வேடமாகவே தெரிகிறது..

மது பாட்டிலை மொத்தமாக தமிழ் நாட்டிற்கு தற்போது சப்ளை செய்து கொண்டிருப்பதே இந்த திமுகவினர் தான்.. சமீபத்தில் கிடைத்த தகவல்.. (ஜெகத்ரட்சகன் திமுக வின் முக்கிய புள்ளி.. இவர்கள் உண்மையிலேயே மதுவை ஒலிப்பவர்கள் என்றால் எப்போவே நிறுத்தியிருக்கலாமே... ?? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இதை செய்வோம் என்று பிரசாரத்தில் ஸ்டாலின் கூறியது நினைவிற்கு வருகிறது..

குடும்ப ஆட்சி , கோடிக்கணக்கான சொத்துக்கள் கலைனர் மற்றும் அவரது மனைவி மக்கள் பெயரில்.. அவர்கள் அடிக்காத கொள்ளைகளா?? மேலும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் விசாரணை இல்லாத அப்பாவி முஸ்லிம் மக்களை பற்றி வாய் திறக்காமல் நடிக்கும் இந்த கட்சிக்கா வாக்களிக்க வேண்டும்?? சிந்தித்து பாருங்கள்... இதற்கு அதிமுகவினரும் விலக்கல்ல. இரண்டு கட்சிகளும் சேர்ந்து மக்களை மொட்டையடிக்கும் விதமாக தான் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் இவர்களால் நம் சமுதாயதிருக்கு எந்த நன்மையையும் கிடைக்காது.

சிறை வாசிகளை விடுதலை செய்வது பற்றியோ இட ஒதுக்கீடு அதிகரிப்பு பற்றியோ ஒரு செய்தியும் தேர்தல் அறிக்கையில் இல்லை.. மக்கள் நலக்கூட்டணி விஜயகான்தை சேர்த்ததோடு வலுவிழந்து போயி விட்டது.... திமுக கூட்டணியில் நிற்கும் பேராசிரியர் ஒருவர்.. இட ஒதுக்கீடு மற்றும் சிறை வாசிகளை பற்றி தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லையென்றால் இவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சபதம் போட்டு விட்டு மீண்டும் அவரிடமே சேர்ந்துள்ளனர்..

முஸ்லிம்கள் சேர்ந்து ஒரே கட்சியாக தனியாக நின்று ஜெயக்காமல் போனாலும் கூட அடுத்த எலெக்ஷனில் நின்று வெற்றி பெற வாய்ப்பாக அமைந்திருக்கலாம்.. எஸ் டி பி கட்சியும் இதே நிலை தான்.. ஒரே இடத்தில இரண்டு முஸ்லிம்களுக்குள் போட்டி .. விட்டு கொடுப்பது என்பது இரண்டு அணியிலும் இல்லாத தன்மை. இதெல்லாம் பிஜேபி கோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ சாதகமாக வாக்குகள் போயி சேரும் என்ற நிலை உள்ளது..

பொறுத்திருந்து பாப்போம் .. ஒரு வாரத்திற்குள் .இன் ஷா அல்லாஹ்.. .. நல்லவர்கள் ஆட்சியில் அமர துஆ செய்வோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. சிறுபான்மை மக்களுக்கு தீவிரவாதிகள் என்ற பட்டம்...
posted by: தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) on 11 May 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43723

சிறுபான்மை மக்களுக்கு தீவிரவாதிகள் என்ற பட்டத்தை சூட்டி அழகு பார்த்த கட்சி...

சிறுபான்மை மக்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடுகள் கிடைக்க விடாமல் ஆக்கிய கட்சி....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved