Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:03:36 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 12
#KOTWART0112
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 23, 2012
பார்வை படாத பக்கங்கள்!
இந்த பக்கம் 4158 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒவ்வொரு வருடமும் வழமையாக தொற்றிக் கொள்ளும் பரபரப்பு இந்த வருடமும் மார்ச் மாதம் +2 தேர்வுகள் ஆரம்பமான அன்றே நம் குழந்தைகளை மட்டுமின்றி அவர்தம் பெற்றோர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

ஒரு வருட காலமாக இரவு பகலாக கற்றுக் கொண்ட பாடங்களை ஒரு சில மணித்தியால நேர எல்லைக்குள் தேர்வு மையத்தில் வெளிக் கொணர வேண்டிய நெருக்கடியில் நம் குழந்தைகள் - ஒரு புறம்.

தேர்வுக்கு நல்ல முறையில் முகங் கொடுத்து சிறந்த பெறுபேறுகள் பெற வேண்டுமே என்ற பிரார்த்தனையோடு, குழந்தைகளின் முகங் காண வீட்டு வாசலிலே கவலையோடு காத்திருக்கும் பெற்றோர்கள் - மறுபுறம்.

இது போன்ற நிகழ்வுகள் தேர்வுகள் முடிவுறும் இறுதி நாள் வரை தொடர்கிறது. நாட்கள் ஒவ்வொன்றும் ஊர்ந்து செல்வதைப் போன்ற உணர்வு. சாதாரண பொழுதில் பறந்து சென்று விடும் நாட்கள் தேர்வு காலங்களில் மட்டும் ஆற அமர்ந்து ஓய்வெடுத்து ஊர்ந்து செல்வதை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே உணரக் கூடிய காலமிது.

எழுதிய தேர்வுகளில் சிறப்பு சித்தியடைந்து உயர்கல்வி கற்க வேண்டுமே என்ற கல்விக் கனவுகளுடன் 466 குழந்தைகள். சிறந்த வாழ்க்கை குழந்தைகளுக்கு அமைந்திட வேண்டும் என்ற எதிர்கால கனவுகளுடன் இவர்களது பெற்றோர்கள்.

இவர்களின் இந்த கனவுகள் கரை சேருமா? இதற்கான விடை மே மாத அளவில் வெளியாகும் +2 தேர்வு முடிவுகளில் பிரதிபலிக்கும். இன்ஷா அல்லாஹ் அதனைத் தொடர்ந்து சிறந்த பெறுபேறுகள் பெற்று திறமை சித்தி அடைந்த குழந்தைகளினதும், பெற்றோரினதும் ஆனந்தத்திற்கு அளவிருக்காது. இது மட்டுமா?

கல்விக்கான பெருவிழாவே நடத்தப்பட்டு அதில் பாராட்டு பத்திரங்களும், பணப்பரிசுகளும் வழங்கப்பட்டு மனம் குளிர்விக்கப்பட்ட தங்களின் எதிர்காலக் கல்விப் பயணம் தொடர்ந்திட அங்கீகாரம் கிடைத்துவிட்ட ஆனந்த மழையில் நனைந்திருக்கும் சாதனைக் குழந்தைகள் - ஒரு பக்கம்.

எல்லோரையும் போலவே பைகளில் புத்தகங்களையும், நெஞ்சினிலே கனவுகளையும் சுமந்து சென்ற குழந்தைகளில் ஒரு சாரார், தங்களின் விருப்பத்திற்கு மாறாக சமூக/பொருளாதார/குடும்பச்சூழல் போன்ற காரணிகளின் அழுத்தத்தால் தேர்வில் தோல்வி கண்ட அதிர்ச்சியில் மனம் சிதைந்து போன குழந்தைகள் - மறுபக்கம்.

உயர்கல்விக் கனவுகள் கானல் நீராய் கரைந்து விட்ட இவர்களின் கண்ணீர் குமுறல்கள் நம் சாதனை விழாக்களின் ஆரவாரத்தில் அடங்கிப்போனதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் எத்துணை எத்துணை கனவுகளுடன் கல்விக்கூடம் சென்றிருப்பார்கள். இவர்களின் பெற்றோர்கள் ஆசை ஆசையாய் இவர்களைச் சுற்றி எத்துணை எத்துணை எதிர்ப்பார்ப்புகளை விதைத்திருப்பார்கள்.

பன்னிரண்டு ஆண்டு கால உழைப்பும் தகர்ந்து விட்டதே. இனி அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாது அனாதரவாக விடப்பட்ட இவர்களுக்கு சரியான தீர்வை முன்வைப்பதா? அல்லது இவர்களை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதா? குடும்பத்தில் ஒருவர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் போது கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதில்லையா?

நமதூர் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் கலந்து கொண்ட சமீபத்திய கல்விசார் நிகழ்வொன்றில் +2 தேர்வில் தவறிய குழந்தைகளின் எதிர்கால நிலை பற்றிய கலந்துரையாடலின் போது நமதூர் கல்விக் கூடத்தின் தலைமை ஆசிரிய பெருந்தகை ஒருவர் பதிவு செய்த முத்தாய்ப்பான கருத்துக்கள் கூர்ந்து நோக்கக்கூடியது.

"என்னைப் பொறுத்துவரை இது நாள் வரையிலும் +2 இல் தவறிய மாணவர்களை எமது பள்ளியின் 100% தேர்ச்சி சாதனையை எட்ட முடியாமல் தடையாக இருந்தவர்கள் என்ற ரீதியிலேயே நோக்கினேன். அவர்கள் என் கண் முன் வந்தாலே வெறுப்பும், கோபமும் தான் வெளிப்படும்.

இங்கே நாங்கள் சிந்திக்காத கோணத்தில் எங்களை சிந்திக்க தூண்டி இருக்கிறீர்கள். தோல்வியால் துவண்டு விட்ட மாணவர்களை வெறுத்து ஒதுக்கி விடாமல் இரக்கம் காட்டி அரவணைத்து அவர்களின் எதிர்கால சுபிட்சத்துக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இனி செய்திடுவேன்"
என்று உறுதிப்படக் கூறினார்.

எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். ஒரு சிறந்த கல்வி மான். எவ்வித தயக்கமுமின்றி யதார்த்தமான தனது கருத்தை பதிவு செய்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது.

சமூகத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான குழந்தைகள் பல்வேறு சூழலில் வீட்டிலும், வெளியிலும் காயப்படுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

அறிவாற்றல்மிக்க கல்விசார் ஒழுக்கமிக்க ஓர் சமூக அமைப்பை உருவாக்கிட, இறைவனால் வழங்கப்பட்ட ஒப்பற்ற மனித வளத்தையும், பொருளாதார வளத்தையும் இறை திருப்தி நாடி பயனுள்ள வழியிலே முதலீடு செய்து கொண்டிருக்கும் சமூக கரிசனையாலர்களே! உங்களின் கருணையான பார்வையை இவர்கள் பக்கமும் சற்று திருப்புங்கள்.

நாளைய உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம், நம் குழந்தைகள் தோல்வியால் தடுமாறி - திசைமாறிப் போய்விடாமல் சரியான பாதையில் தமது இலக்கை அடைந்திட உதவிடுவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

பின்னடைவுக்கான காரணிகளை இனங்கக்கண்டு, அதனைக் களைந்து மனதளவிலும், செயலளவிலும் இவர்களை கட்டியெழுப்பி அடுத்த கட்ட நகர்வுக்காக களம் அமைத்து வழி நடத்திட - நமக்கு ஆழமான பார்வையும், அதை ஒட்டிய ஆக்கப்பூர்வமான செயற்திட்டமும் அவசரமாகத் தேவை.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: mackie noohuthambi (colombo) on 23 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20991

அட்டகாசமான மன அழுத்தங்கள். தோல்வியில் துவண்டு விட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராக உங்களை பார்க்கிறேன். சில வருடங்களுக்கு முன் காயிதே மில்லத் நற்பநிமன்றதில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நான் இந்த கருத்தை சொன்னேன். வெற்றி பெற்றவர்களுக்கு வெண் சாமரம் வீசி வாழ்த்துகிறோம். தோல்வியில் துவண்டுவிட்டவர்கள் அவர்கள் தோற்பதற்கு என்ன காரணம் என்று கண்டறிந்து அவர்களையும் கை தூக்கி விட வேண்டாமா என்று கேட்டேன்.

சமீபத்தில் நான் படித்த THE POWER OF POSITIVE THINKING என்ற புத்தகத்தில் நான் இந்த வயதிலும் கற்றுக்கொண்ட பாடம் THE ONLY WISE RATE AT WHICH TO LIVE IS GOD'S RATE. GOD GETS THINGS DONE AND THEY ARE DONE RIGHT AND HE DOES THEM WITHOUT HURRY HE NEITHER FUMES NOR FRETS. HE IS PEACEFUL AND THEREFORE EFFICIENT. IF YOU THINK YOU CAN DO, YOU ARE RIGHT. IF YOU THINK U CANNOT DO, YOU ARE RIGHT.

தெளிவான திட்டம், கடும் உழைப்பு, விடா முயற்சி, இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வானம் வசப்படும் தூரம்தான். மாணவ மாணவிகள் இதனை கருத்தில் கொண்டு படியுங்கள். தஹஜ்ஜத் தொழுகை ஒரு சரியான அவ்டதம். நாம் கேட்கும் பிரார்த்தனைக்கு அல்லாஹ் நம்மை அருகிவந்து நிறைவேற்றி தருகிறான், தேவை இறைவன் மேல் அபரிமிதமான நம்பிக்கை. அடுத்து மன ஓர்மை. நாம் ஈடுபடும் வேலையில் படிப்பில் ஒன்றிவிடுவது. இவற்றுக்கு தடையாக இருக்கும் எவற்றையும் பெற்றோர்கள் செய்யாமல் இருப்பது பெரும் உதவியாக இருக்கும் .

நண்பர் புகாரியின் ஆதங்கம் புரிகிறது, உங்கள் கருத்துக்களோடு எனக்கு 100 % உடன்பாடு. மாற்று ஏற்பாடுகளை முன் வையுங்கள் ஊர் கூடி தேரிழுப்போம் எனபது போல் ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள். வித்தியாசமாக சிந்திப்போம் சிந்திக்கதூண்டுவோம். வெற்றி பெறுவோம். பரீட்சைகளில் அபரிவிதமான வெற்றி கிட்ட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நன்றியுடன் நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: hyder (colombo) on 23 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20992

கட்டுரை அருமை'.தமிழ் நாதம்'மக்கி நூஹு தம்பி அவர்களின் யோசனை மாணவ சமுதாயத்தின் விடியல் பயணத்தின் முதல்படியாக இருக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: NIZAR AL (kayalpatnam) on 23 March 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 20993

இப்படி ஒரு கட்டுரையை புஹாரி காக்காவிடம் இருந்து பெறுவது மிகுந்த சந்தோசமளிக்கிறது.வெற்றியாளர்கலை மட்டுமே புகழ்ந்தும் அவர்களை முன்னேற்றவளிகள் ஏற்படுத்தும் காலத்தில் தவரியர்கள் பற்றியும்,அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள்,ஆறுதலான வழிகள் ஏற்படுத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்க வலியுர்திஉல்ல இக்கட்டுரை சிறந்ததும் தொலைநோக்குபார்வையும் உள்ளதாகவும் அமைந்துள்ளது.புஹாரி காக்காவுக்கு தம்பியின் வாழ்த்துக்கள்.

NIZAR,DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: A.R.Refaye (Abudhabi) on 23 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20994

கட்டுரையாளருக்கு மனமுவந்த பாராட்டுக்களும்,கூடவே வாழ்த்துக்களும்,தங்களிடம் இருந்து இதுபோல் பல நல்ல ஆக்கங்களை எதிர்ப்பார்க்கிறோம்.

வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்கு !!!!!!
தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்கு!!!!!!!!!!!
என்பது இக்கட்டுரையின் மூலம் உணரத்தப்பட்டதாய் உணர்கிறேன்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: s.e.mohideen abdul cader (bahrain) on 23 March 2012
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 20995

MASHALLAH , NICE TO READ AS WELL AS WIDE THINKING TO HEAL THE FAILED STUDENTS TO LEAD IN THE RIGHT PATH AGAIN . I FEEL THAT GOOD MAN IS THINKING ALWAYS IN GOOD WAY TO WARM OTHERS. DEAR FRIEND S.I. BUHARY I KNOW YOU AS LONG AS YOU ARE NICE , BROAD MINDED AND GENTEL MAN. ALMIGHTY ALLAH MAY GIVE YOU LONG LIFE WITH SOUND HEALTH.

WASSALAM.
S.E.MOHIDEEN ABDUL CADER


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: Lebbai (Riyadh) on 24 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20996

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான கட்டுரை வழங்கிய புஹாரி காக்கா அவர்களுக்கு நன்றி.

பதினான்கு அல்லது பதினைந்து வருட உழைப்புக்கு பின் எழுதும் தேர்வில் தோல்வி அடைந்தால், அதற்கு அவர் தம் "திறமின்மை" என்பது மட்டும் ஒற்றை காரணியல்ல, அதன் பின் சமூக/பொருளாதார/குடும்பச்சூழல் போன்ற காரணிகளின் அழுத்தம் உள்ளது என்று தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: Kaker K.M (Dubai) on 24 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20997

பார்வை படாத பக்கங்கள் கட்டுரயை வெளியிட்டு பார்வையில் படவேண்டிய எழுத்தாளர்களை முகம்காட்டும் kayalpatnan.com க்கு பாராட்டுக்கள்! மேலும் ஒரு மாணிக்கத்தை கண்டுபிடித்து மணிமண்டபம் கட்டி உள்ளீர்கள். ஆசிரியரின் கருணை உள்ளத்திற்கு பாராட்டுக்கள்! வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. பார்வை படவேண்டிய தருணம் இது!!
posted by: Salai. Mohamed Mohideen (USA) on 26 March 2012
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20998

கவனத்தில் கொள்ளவேண்டிய நியாயமான அக்கறை / கவலை. பொதுவாக, வெற்றி பெற்றவர்களை ‘அண்ணாந்து’ பார்க்கும் நாம், தோற்றவர்களை 'ஏறெடுத்துக் கூட' பார்ப்பதில்லை. இதற்க்கு மாணவ சமுதாயம் மட்டும் விதி விலக்கா என்ன?

ஒரு தடவை 'படிப்பில்' சறுக்கி விட்டோம் என்பதற்க்காக ‘வாழ்வில்’ தோற்று விட்டோம் என்று 'மனம்' தளர்ந்த விட்ட அம்மாணவர்களை... அம்மாணவ மணிகளை பெற்றவர்களும், உறவினர்களும், இச்சமுதாயமும் 'தன்பங்குக்கு'… அவர்களை ஒரு கிள்ளு கிரையாகத்தான், ஒரு அற்ப பிரவியாகத்தான் பார்க்கிறார்கள். ஏதோ 12 - ஆம் வகுப்பில் தவறி விட்டால், அவர்கள் 'தலையெழுத்து' முடிந்துவிட்டதாக எண்ணி... ஒன்று 'விட்டோடு கிட' அல்லது எங்கேயாவது / ஏதாவது பொழைப்பை பார்க்க (நகை கடைக்கு?) போ என்று விட்டு (துரத்தி?) விடுகின்றோம். ‘மறு வாய்ப்பு’ அளிக்கப் படாததினால் திசை மாறியப் பறவைக ளின் ‘மனக் குமுறல்கள்’ நம் காதில் விழாமல் இல்லை.

ஒரு முறை படிப்பில் தோற்றவர்களும், மறுமுறை தேர்ச்சி பெற்று 'சாதித்த' பல வரலாறுகள் இத்தரணியில் உண்டு. ஒரு தடவை தோற்று விட்டோம் என்றால்...வாழ்க்கை / படிப்பு அத்தோடு முடிந்து விட்டது அல்ல என்பதனை முதலில் ‘பெற்றவர்களுக்கும்’ பின்னர் 'அவர்களுக்கும்' உணர்த்தி இன்னொரு வாய்ப்பை நிச்சயம் வழங்க வேண்டும்.

இப்படியே பலவருடம் (?) பேசிக்கொண்டே இருப்பதினால் எவ்வித பலனுமில்லை... இதன் ‘விடியலை’ நோக்கி உடனே பயணிக்க வேண்டிய தருணம் இது.

நமதூரில் கடந்த 5 வருடத்தில் மட்டும், மொத்தம் 68 மாணவர்கள் 12 std - ல் 'பெயில்' ஆகி இருக்கிறார்கள். அதிக பட்சமாக கடைசியாக நடைபெற்ற (2011 ) தேர்வில் மட்டும், 24 பேர் தேர்ச்சி பெறாதவர்கள். 2011 - ல் பெயிலானவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 'டபுள்' ஆகியுள்ளது. இவர்களின் தற்போதைய நிலைமை என்ன...இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை முதலில் சேகரிக்க வேண்டும். தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி... இதில் தளர்ந்து போவதற்க்கு ஒன்றுமே இல்லை என்று அவர்களை ஊக்கபடுத்தி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி உதவிக்கரம் நீட்டி... அவர்கள் கோட்டை விட்ட பாடத்தை திரும்ப எழுத வைத்து அவர்களையும் ஒரு பொறியியல் வல்லுனர்களாகவோ அல்லது பட்டதாரிகளாகவோ நிச்சயம் உருவாக்க முடியும்!!

வெற்றி பெற்றவர்களுக்காக மடிக் கணினி, ஊக்கத்தொகை, ஹஜ்/உம்ரா என்று வாரி வழங்கும் அதே நேரத்தில். அப்பணத்தில் ஒரு சிறு பகுதியை 'இவர்கள்' மீதும் கொஞ்சம் அக்கறை எடுத்து செலவு செய்வோமேயானால் அவர்களுடைய வாழ்வும் மேம்படும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: Zubair Rahman-AB. (Doha-Qatar) on 26 March 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20999

ஏன்??? என்கிற கேள்விக்கு பதில் அளிப்பதை விட , அந்த கேள்வியே இல்லாமல் ஆக்கிவிட்டால் பதிலின் அவசியம் அங்கு தேவைப்படாது . வெற்றியின் சந்தோசத்தைவிட தோல்வியின் மனஅழுத்தம் மிக மோசமானது .

புஹாரி காக்கா அவர்களின் "பார்வை படாத பக்கங்கள் " தோல்வியை களைந்து வெற்றிக்கு வழி வகுக்கும் சிறந்த பதிவு . என்னுடைய வாழ்த்துக்கள் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 27 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21000

நண்பர் எஸ்.ஐ புகாரி அவர்களின் கட்டுரை மிக அருமை .அவர் இலங்கை தொடர்புடையவர் என்பதால் இலங்கை தமிழும் அவரது ஆக்கத்தில் துள்ளி விளையாடுகிறது.

நண்பர் இம்மாதம் (மார்ச் )வெளியாகியுள்ள "காலச்சுவடு"இதழில் வந்துள்ள பெருமாள் முருகனின் "மொழி ..அதிகாரம்..ஆசிரியர் "என்ற கட்டுரையை அவசியம் வாசிக்க வேண்டும். அதில் அவர் எழுதியுள்ள கருத்துகளுக்கு நிறைய ஆதாரம் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: kithuru mohamed abbas (Dammam) on 30 March 2012
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21001

அஸ்ஸலாமு அழைக்கும் நமது சஹோதரர் புஹாரி அவர்களின் கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது பரீட்சையில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் பைல் ஆகிய சப்ஜெக்டை திரும்பி எழுதி பாஸ் ஆகவேண்டும் என்ற ஆர்வம் எந்த கட்டுரை பார்த்தவுடன் மாணவர்களுக்கு அதிமாக வரும் காயல் ஆண் தி வேபுக்கு நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: M.Fauz (AlAin) on 31 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21002

அஸ்ஸலாமு அலைக்கும்.

என் நண்பர் புஹாரியின் கருத்து வெகு ஜோர். ஒரு "ஒ" கூட போடலாம்.

Fauz அல் ஐன். U A E .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH -S.ARABIA) on 05 April 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21003

நண்பர் புஹாரி உடைய இந்த கட்டுரை நிச்சயம் எல்லோராலும் சிந்திக்க , அதன் படி செயல் பட வேண்டிய ஓன்று தான்.

நண்பர் புகாரி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .எல்லோரும் இந்த முறையில் சிந்திக்க தொடங்கினால் நல்லதே நடக்கும் .

வல்ல நாயன் நம் எல்லோர்களையும் நல்லதை மட்டும் நாடி நன்மையின் பாதையில் வழிநடக்க அருள் புரிவானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. Re:பார்வை படாத பக்கங்கள்!...
posted by: mohamed ali.sm (Colombo) on 07 April 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 21004

வெள் சிட் புஹாரி ஷாப்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved