Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:28:15 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 16
#KOTWART0216
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 7, 2013
சில மின்னல் பொழுதுகள் ...
இந்த பக்கம் 1125 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

1.

முங்கிக்
குளித்த ஆறு
மூழ்கிப்போனது..!
அள்ளிச்செல்லும்
ஆற்று மணல்
சிதைக்கப்பட்ட
நதியின் சடலங்கள்..!

2.

அகல் விளக்கில்
ஏற்றி வைத்த
நட்சத்திரங்கள்
இருளைத்தின்று..
செரிமானம் ஆகாமல்
காற்றில் தள்ளாடுகின்றன..!

3.
வருடம் என்னும்
செடியில் இருந்து
நாள் என்னும்..
பூக்கள்
உதிர்ந்துக் கொண்டே
இருக்கிறது..!

4.

முடிவை
அறிவித்து விட்டு
தொடங்கும்..
ஆட்டத்தின் பெயர்
வாழ்க்கை..!

5.

நீதிபோதனைகளால்
நிரம்பிய மண்கலயம்
வாழ்க்கை..!

காலம் -
பிழைப்பின்
காலில் போட்டு அதை
உடைத்து விடுகிறது..!

6.

மரணம் சாகாமல்
அப்படியே இருக்கிறது
வாழ்க்கை தான்
செத்துப் போகிறது..!

7.

இரசாயனக்
கழிவுகளால்
பூமி நஞ்சானது..!

நஞ்சு -
பிறந்த குழந்தை மீது
மீண்டும் பிறக்கிறது
புற்றுநோயாக..!

8.

சொற்களால்
ஜோடித்து வைக்கப்பட்ட
அன்பின் கண்ணாடியில்
மெளனம் கல்லெறிகிறது..!

9.

வந்து கொண்டே
இருந்த இரதம்
வழியில் நின்றது..!

ஒளிரும் தெய்வம்
இருளில் மூழ்கியது..!
பக்தனின்
குரல் கேட்டது..!
“பெட்ரோல்
தீர்ந்தது ஸ்வாமி..!”

10.

விஞ்ஞானியால்
நிலாவில்
கால்பதிக்க மட்டுமே
முடிந்தது..!
பாட்டி மட்டுமே
அங்கும் வடை
சுட்டுக்கொண்டிருக்கிறாள்..!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வாசகர்கருத்து.
posted by: kamalmusthafa (abhaksa) on 08 December 2013
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31876

சில மின்னல் பொழுது போல் என்னை சிந்திக்க வைத்த இலக்கியம் கவிங்கர் அமீர் அப்பாஸ்சின் இலக்கியம் அனைத்தும் மனிதர்களை சிந்திக்க வைக்கும்

அதில் உள்ள கடைசி இலக்கியம் என்னை 40வருடம். பின்னோக்கி சிந்திக்கவைத்தன

அனைத்து தாய்மார்களும் தன்குழந்தைக்கு நிலவை காட்டி சோறூட்டும் போது சொல்லும் கதைதான் அது வருடம் என்னும் செடியில் இருந்து நாள் என்னும் பூக்கள் உதிர்ந்தாலும் கூட நினைவுகள் என்ற நிலத்தி அது படர்ந்து கிடக்கின்றன

கடந்து வந்த பாதையை பின் நோக்கி பார்த்தல் புரியும் எவளவு கஷ்டத்தை தாங்கி இருக்கிறது நம் இதயம் என்று

முடிவை அறிவித்து தொடரும் ஆட்டத்தில் கூட வெற்றி என்பது ஒருவருக்கு நிச்சயம் உண்டு சிந்திக்க துண்டும் இலக்கியம்.

இது மேலும் பல இலக்கியத்தை படைக்க. கவிங்கர் அமீர் அப்பாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. முத்துக்கள் பத்து!
posted by: kavimagan (doha-qatar) on 13 December 2013
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 31945

​அற்புதமான கவிதைகள்.....அழகான சிந்தனை...
வாழ்ந்த,வாழும் கவிஞர்கள் மனத்திரையில்
வந்து போகின்றார்கள்.

அகல் விளக்கில்
ஏற்றி வைத்த
நட்சத்திரங்கள்
இருளைத்தின்று..
செரிமானம் ஆகாமல்
காற்றில் தள்ளாடுகின்றன..!

எனது உள்ளத்தில்
ஏற்றி வைத்த
உங்கள் கவிதைகள்
உழன்று உழன்று ....
உறங்க விடாமல் என்
இரவுகளை ஆக்கிரமிக்கின்றன...!
அமீர் அப்பாசின்
சிந்தனைத் துளிகள்
அனைத்தும் அற்புதம்...
மொத்தத்தில்
முத்துக்கள் பத்து.... ​


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 14 December 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31954

அஸ்ஸலாமு அழைக்கும்

உரைநடை கவியாக இருந்தாலும் அதில் எதார்த்த கவி நடை உள்ளது. இது போல கருத்துகளை மக்களிடம் எதார்த்தமாக கூறும்போது அதில் தாக்கம் தானாக வந்துவிடும் .

மனித சமுதாயம்
தனக்கு தானாக
ஆற்றில் படு
குழி தோண்டுதே!

இருந்த வீட்டை
விட்டு கண்ணீர்
விட்டு கொண்டு
போகுறாள் வண்டியில்
மணல் பெண் !

நம் காயல் மக்களிடம் கவித்துவம் சாதாரணமாக குடிகொண்டுளது . காரணம் நாம் உண்மையான் தமிழ் மக்கள் தமிழ் தான் நம்முடைய தந்தை மற்றும் தாய் மொழியும் என்னற்ற தமிழ் கவிகளை தந்த ஊர் நம் காயல் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved