Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:14:25 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சட்டம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous Article
ஆக்கம் எண் (ID #) 2
#KOTWART052
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 10, 2013
பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம் 2011!
இந்த பக்கம் 11574 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்திய திருநாட்டின் அரசியல் சாசனம் (Constitution) - சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினர் ஆகிய பெருவாரியான மக்கள் கண்ணின் இமை போல பாதுகாக்கபட வேண்டும் என பல்வேறு சட்டங்கள் மூலம் வழிவகை செய்தது. அச்சட்டங்கள் ஜவர்ஹர்லால் நேரு பிரதமராக இருந்தது வரை பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், அதற்குப் பின் வந்த அரசுகளால் சிறுபான்மையினருக்கும், தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியது. குறிப்பாக கீழ்க்காணும் சம்பவங்களை சொல்லலாம்.

1984ஆம் ஆண்டு புது டெல்லியில் சீக்கியர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவம்; 1989ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நடந்த பகல்பூர் கொடுமை; 1992ஆம் ஆண்டில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு மும்பை போன்ற நகரங்களில் நடந்த கொலைகள்; குஜராத்தில், 2002இல் நடந்த பொய்யான கோத்ரா ரயில் விபத்து சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் மனித வேட்டை; பழங்குடி மக்களுக்காக நோய் தீர்க்க குடும்பத்துடன் பணியாற்ற வந்த பாதிரியார் டாக்டர் ஸ்டைன்ஸ், தன் மகனுடன் ஒடிசாவில் எரிக்கப்பட்ட சம்பவம்; இன்று வரை தலித் இன மக்கள், தென்னாப்பிரிக்க நிறவெறிக் கொள்கை போல, பல இடங்களில் காலில் செருப்பு அணியக் கூடாது என்ற நிலை, அவர்களைத் தனிமைப் படுத்தும் சுவர்கள், கலப்புத் திருமணம் செய்யத் தடை என்ற போர்வையில் தர்மபுரி நாயக்கன் கோட்டை காலனி தாக்கப்பட்டு, ஒரு ஊரையே துவம்சம் பண்ணும் சம்பவங்கள் போன்றவை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு உலகளவில் மதிப்பு கெடுகிறது என்று மத்தியில் ஆளும் ஆட்சியர்களிடம் ஒரு குற்ற உணர்வு பல ஆண்டுகளாக இருந்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் போல், புது சம்பவங்கள் திரும்பவும் நடக்காமல் இருக்க, மத வன்முறைத் தடுப்பு (PREVENTION OF COMMUNAL AND TARGETED VIOLENCE (ACCESS TO JUSTICE AND REPARATIONS) BILL, 2011) வரைவு சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணி கொண்டுவந்துள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்க உருவாக்கப்பட்டது தேசிய ஆலோசனை குழு (NATIONAL ADVISORY COUNCIL). 2004 இல் உருவாக்கப்பட்ட இந்த குழு, பல முக்கிய சட்டங்களையும், திட்டங்களையும் வடிவமைத்து அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. சோனியா காந்தியை தலைவராக கொண்ட இந்த குழுவில், பல வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது பரிசீலனையில் இருக்கும் மத வன்முறைத் தடுப்பு வரைவுச் சட்டத்தை தயாரிக்க, NAC - துணைக்குழு (WORKING GROUP) மற்றும் ஆலோசனை குழு நியமித்து செயல்புரிந்தது.

வரைவு சட்டத்தை வடிவமைத்தவர்கள் குழுவில் ஹர்ஸ் மந்தர் (சர்ச்சைக்குட்பட்ட அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்), அனு ஆகா (தொழில் அதிபர் / சமூக ஆர்வலர்), டீஸ்தா செதல்வாட் (குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகளை வெளியில் கொண்டுவர பெரும் பங்காற்றியவர்), ஃபரா நக்வி (எழுத்தாளர் / சமூக ஆர்வலர்) போன்றோர் இருந்தனர்.

இவ்வரைவு சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) தேசிய மற்றும் மாநில அளவில் - இச்சட்டத்தை அமல்படுத்த புதிய அமைப்புகள் (NATIONAL / STATE AUTHORITY FOR COMMUNAL HARMONY, JUSTICE AND REPARATION) உருவாக்கப்படும்

2) தலைவர், துணைத் தலைவர் உட்பட 7 பேர் கொண்ட இவ்வமைப்புகளில், குறைந்தது 4 பேர் - இந்த சட்டம், பிரிவு (Group) என அடையாளம் கண்டுள்ள (மொழி/மத) சிறுபான்மையினர், தலித், பழங்குடி இனம் சார்ந்தோர் இருக்கவேண்டும்

3) அவ்வமைப்புகளிடம் வழங்கப்படும் புகார் வாக்குமூலங்கள் எல்லா நீதிமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

4) இராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ அல்லது எந்த துறைக்கோ - நேரடியாக அமல் செய்கின்ற உத்திரவை - அந்த அமைப்புகள் பிறப்பிக்கலாம்.

5) வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக இந்தக் குழுக்கள் நிவாரணம் வழங்கலாம்.

இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களும், மற்ற சில மாநிலங்களும் எதிர்க்கின்றன. இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் வெளிப்படையாக கூறும் காரணங்களும், சொல்லாமல் - நம்மால் புரிந்துக்கொள்ளக்கூடிய காரணங்களும் என்னவென்றால்:

1) சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவது மாநில அரசின் கடமை. அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது.

2) மத்திய அரசு - 2014ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர் ஓட்டுக்களைப் பெறும் கண்ணோட்டத்தில் இச்சட்டம் கொண்டு வந்துள்ளது.

3) கோத்ரா சம்பவத்திற்குப் பின்பு நடந்த மனித வேட்டையை கண்ணை மூடிக் கொண்டு, கண்டும் காணாது போல இருங்கள் என்று எந்த அரசும் அதிகாரிகளுக்கு இனி உத்தரவிட முடியாது. ஏனென்றால் அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில குழுக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். அதையும் மீறி எந்த அதிகாரியாவது நடந்தால் அவர் ஆயுள் தண்டனை பெரும் அளவிற்கு தள்ளப்படுவார்.

4) இந்த வரைவுச் சட்டம், மகாராஷ்டிராவில் காணப்படும் "மகாராஷ்டிரா மகாராஷ்டிரா மக்களுக்கே" என்ற மொழி வெறிக் கோஷங்களை எழுப்ப, சிவசேனா போன்ற அமைப்புகளை ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும்.

ஆனால் நடுநிலையாளர்களோ - ஆட்சியாளர்களும், மத வெறியர்களும் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு மனித வேட்டையாடக் கூடாது என்றும், நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் காப்பற்றப் பட வேண்டும் என்று கூறி, இந்த வரைவுச் சட்டம் நாட்டிற்கு நல்லது என்கின்றனர்.

அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் சில உதாரணங்கள்:

1) 1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அரசு இயந்திரம் இயக்கக் கூடிய கிரியா ஊக்கி என்ற கட்டளைகளை பிறப்பிக்க யாரும் முன் வரவில்லை.

2) 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவம், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், அதனை இயக்காமல் மவுனம் காத்த பிரதமரைக் கொண்ட மத்திய அரசை நாம் பெற்றதால் புராதன சின்னம் இடிக்கப்பட்டது.

3) 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பிறகு நடந்த நரபலி நிகழ்வுகளை அறிந்து கண்ணீர் விடத்தான் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனால் முடிந்ததாக அவரே பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார்.

4) அதற்கு பின்னரும் பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் - குஜராத்தில் இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கி உள்ள அகதி முகாம்களைப் பாவையிட வேண்டும் என்று அப்போதைய பாரதிய ஜனதா ஆண்ட மத்திய அரசிடம் கேட்டதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாகவும், தன் பதவி போன பின்பு எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

5) முஸ்லிம்களின் ஓட்டை பெருவாரியாகப் பெற்று ஆட்சியமைக்கப்பட்ட உத்திரபிரதேச மாநில முசாபர் நகரில், கிட்டத்தட்ட 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டும், ஏராளமானோர் ஹுசைனா பாக்கில் அகதிகளாக தஞ்சம் புகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்படி போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக வருவதற்குக் காரணம், குற்றவாளிகள் நீதிமன்றத்தின்பால் நிறுத்தப்படும் போது, நீதி தேவதையின் கண்கள் நிரந்தரமாகக் கட்டப்பட்டு, குற்றவாளிகள் வெளிவருவதுதான் என்று சிறுபான்மை மக்களும், தலித்துகளும், பழங்குடியினரும் நம்புகின்றனர்.

Previous Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வாசகர்கருத்து.
posted by: kamalmusthafa (abhaksa) on 11 December 2013
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31912

இதை எல்லாம் சிந்தித்து பார்த்தல் நம் நாட்டுக்கு இது போன்று சட்டம் தேவை தான் என்று தோனுகிறது. இதைசமூக ஆர்வாளரும் மக்களும் புரிந்து கொண்டு மக்களின் நலனுக்காக தான் இந்த சட்டம் என்பதை புரிந்துகொண்டு எந்த சுயநலனும் இல்லாமல் இதை ஆதரிக்கவேண்டும். அத்தோடு எந்த ஆட்சி மக்களுக்கு திருப்தி இல்லையோ அந்த ஆட்சியை மக்கள் திரும்பபெற மக்களுக்கு உரிமை வேண்டும். மக்களும் சில கட்சிகள் கொடுக்கும் பணத்துக்கோ பொருளுக்கோ ஆசை படாமல் யார் மக்களுக்காக உழைக்க விரும்புகிறார்களோ அவர்களை தேர்ந்து எடுக்கவேண்டும்.

இவர்கள்தரும் பணம் பொருள் அனைத்தும் நம் நாட்டுக்கு தரும் வரி பணம் தான் அது என்று சிந்திக்கவேண்டும் பொது மக்களே சிந்தித்து பாருங்கள். நம் நாட்டின் முன்னாள் தலைவர்கள் நம் பாரததந்தை மகாத்மா காந்தி . அறிஞர் அண்ணா. நம் .காமராஜர் .ஏன்.நம் நாட்டின் முன்னால் ஜனாதிபதி dr அப்துல்கலாம் இவர்களின் சொத்தை பாருங்கள். ஒரு சராசரி குடிமகனின் அளவுதான் இருக்கும்.

இதை எல்லாம் மக்கள் உணர்ந்து நம் மகாத்மா காந்தியை காட்டி கொடுத்தது போல் யாரையும் காட்டிகொடுக்காமல் அவரோடு சேர்ந்து நம் நாட்டுக்கு சுகந்திரம் வாங்கித்தந்த தியாகியை போல் எல்லோரும் ஒற்றுமையாக குரல்கொடுக்கவேண்டும் இந்தசட்டம் வந்தால் மக்களுக்கு நல்லது என்று தெரிந்தால் அனைவரும் ஆதரியுங்கள் போராடுங்கள் வன்முறையில் அல்ல காந்திய வழியில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved