Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:43:21 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 4
#KOTWART014
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 10, 2011
நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்
இந்த பக்கம் 3282 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

12.5 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு - 4.8 சதுர மைல், (32,664 - 2001 கணக்கெடுப்பின் படி) தற்போது சுமார் 50000க்கு மேல் மக்கள் தொகை, நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய, மிக தொன்மையும் பழமையும் வாய்ந்த காயல்பட்டிணம். ஈகையின் உதாரணம். பதவிகளும் பட்டங்களும் இல்லாமல் சிறு மக்கமாய் மாற்றிய பெறுமை.....இன்றும் வரலாற்றின் ஏடுகளில் காயல்பட்டிணம் என்பது போற்றத்தக்க பக்கங்களாகவே தன்னை பதிவு செய்துள்ளது. இத்தனைக்கும் காரணம்.....மறைந்தும் வாழும் நம் முன்னோர்களின் சுய நலமற்ற அகன்ற பார்வையே.

தலைவர்களாய் - தனது நேர்மைகளையும்
செல்வந்தர்களாய் - தனது சொத்துக்களையும்
கல்வியாளர்களாய் - தனது ஞானத்தையும்
நகர வாசிகளாய் - தனது விசுவாசத்தையும்

பாகு பாடின்றி பகிர்ந்து அளித்ததே.....காரணம்.....

உலக மயமாதல் என்ற சுனாமியில -(நவீன மயமாதல் -பெரிய இழப்புகள்-இது ஒரு தனி கட்டுரை-அதனால் உலக மயமாதல் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துள்ளேன்) தொலைந்து போன பொது நலத்தை தேடும் பயணமாகவும், வரும் சமுதாயத்திடம் இருந்து மாறாத பயனாக அவர்களின் துஆக்களை பெறும் முயற்சியாக நம் செயல்பாடுகள் அமையும் பட்சத்தில் ஒரு முன்னுதாரண நகரமாக நமதூரை மாற்றிவிட முடியும்.

இதற்கு முதன்மையாக சில கருத்துக்களை நான் உங்கள் முன்னால் பதிவு செய்கிறேன்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலையில், அவர்களை தேர்ந்தெடுக்கும் சக்தி மக்களிடம் இருந்த போதிலும், நல்ல போட்டியாளர்களை மக்களுக்கு அறிமுக படுத்தும் முதல் கடமை ஜமாத்திற்கே என்று நான் கருதுகிறேன்.

அதன் அடிப்படையில், ஒரு ஜமாத்தின் பொறுப்புகள்

1. மன்ற உறுப்பினர்களாக போட்டியிட விரும்புவர்களிடமிருந்து, வார்டின் தற்போதைய குறைகள், தற்போதைய தேவைகள், அவற்றை நிறைவேற்ற அவர்களின் செயல்திட்டங்கள் என்ன? அவற்றின் கால அளவு? பதவி காலத்தில் வார்டு முன்னேற்றத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்த செயல் திட்டங்கள் அகியவற்றைப் பெற்று ஜமாத் உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவைகளில் சிறந்த செயல் திட்டங்களை அளித்தவர்களை பட்டியலிட்டு அவர்களை போட்டியிட தெரிவு செய்யலாம்.

*** நன்றாக கவனத்தில் கொள்ளவும்......அன் அப்போஸ்ட் தேர்வு அல்ல....நல்ல போட்டியாளர்களை மக்களுக்கு இனம் காட்டினால் போதும்

2. சொந்தம், பந்தம் என்ற உணர்வை மறந்து வார்டின் நன்மைகளை மட்டும் முதன்மையாய் கருதுவது

3. தன்னிறைவு பெற்ற மனிதர்களை முன்னிறுத்துவது... தன்னிறைவு என்பதின் பொருள் : பணத்தால், உடல் வ்லிமையால் பிறரை சார்ந்து இருக்கும் நிலையற்று இருப்பது

4. கண்டிப்பாய் தொழுகையை பேணுபவராய் இருத்தல் வேண்டும்.-ஜமாத்தின் பங்கு என்று சொல்லிவிட்டு இதை மறந்து விட்டால் எப்படி?

உறுப்பினராய் போட்டியிட விரும்புப்வர்களுக்கு :

1. முதலில் நம் நகரை பற்றிய முழுமையான அறிவை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும்

2. தங்களது வார்டின் தற்போதைய தேவைகள் என்னென்ன? அதில் உடனடியாக நிறைவேற்ற வேண்டியவைகள் எவை?

முக்கிய பணிகளான,

புதிய சாலைகள் அமைப்பது,
முன்பு இருந்த பழைய சாலைகளை பழுது பார்ப்பது,
மின் விள்க்குகள் அமைப்பது,
சுற்றுப்புர சூழலை பாதுகாப்பது,
மரங்கள் நடுவது,
குப்பை, கூலங்கள் இல்லாமல் பாது காப்பது,
சுகாதாரம்,
குடி நீர் வசதி செய்தல்,மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைப்பது, விளையாட்டுத்திடல்கள்,
பூங்காக்கள் அமைப்பது,
நூலகங்கள் உருவாக்குவது.

மேற்கண்ட பணிகளில் முழுமையான அறிவு பெற்றிருத்தல். அதை செயல் படுத்துவதில் விவேகம். வார்டு முன்னேற்றத்திற்காக எதயும் எவரையும் சந்திக்கும் துணிவு

அத்தோடு,

சில சமுதாய முன்னேற்றங்களுக்கும்,-கல்வி, மருத்துவம்,முதியோர் பாதுகாப்பு, போன்றவற்றில் ஏற்கனவே உள்ள சமுதாய அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றி, தனது வார்டில் தனது பதவிக்காலங்கள் முடிந்தும் தனது பெயரை மக்கள் மனதில் பதிவு செய்தல்.

3. தங்களுடைய வார்டின் எதிர்கால நன்மைக்கான திட்டங்கள் - அதை நிறைவேற்றுவதற்கான விபரங்களை மக்களுக்கு தெரிவித்தல்
4. தனது சொத்து விபரங்களை வெளியிடும் துணிவு.
5. இதுவரை மக்களுக்காக உழைத்ததின் பிண்ணனி
6 .பொதுச்சேவையில் அனுபவம்-
7. எதற்காக வேண்டியும், எந்த சூழ் நிலையிலும் எவரிடமும் கையேந்தாத சுத்தம்.
8. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, என்ற பழைய, போலித்தனமான விளம்பரத்தை துறந்து, உண்மையான வார்டு தேவைகளை பட்டியலிட்டு, அதை நிறைவேற்றும் செயல் திட்டங்களோடு மக்களை சந்தித்தல்.

வாக்காளர்களுக்கு,

1. தங்களது வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் கொண்ட நீங்கள் முதலில் உங்களது வலிமையை உணர வேண்டும்.
2. தங்களுக்கு பிடிக்காதவராய் இருப்பினும், பொது வாழ்வில் தூய்மையாளர்களை அடையாளம் காட்டுதல்.
3. இலவசங்கள், பணத்திற்கு மயங்காத நிலை- நம் பணத்தை எடுத்தே நமக்கு தருகிறார்கள் என்ற உண்மையை உணர்தல்.
4. போலியான வார்தைகளுக்கு மயங்காமல், திட்டங்கள், அதை நிறைவேற்றும் முறை ஆகியவைகளை கேட்டு தேர்வு செய்தல்.

இறுதியாக,

கிங் மேக்கர்ஸ் என்று அழைக்கப்படும்.....செல்வந்த்தர்களுக்கு,

தங்களது பலத்தை தெரியப்படுத்த , தக்கவைத்துக்கொள்ள எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. தயவு செய்து தவறான ஆட்களுக்கு மறைமுக உதவிகள் பண்ணி, ஒரு சமுதாய பின்னடைவிற்க்கு காரணமாகி விடாதீர்கள். சரித்திரம் உங்களை சத்தியமாய் மன்னிக்காது.

உங்கள் தாராள மனதை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தேர்தல் முடியட்டும். உண்மையான வெற்றியாளர்கள் மக்களால் தேர்ந்த்தெடுத்து அறிவிக்கப்பட்ட உடன், ஒவ்வொரு வார்டில் உள்ள பணக்காரர்கள் ஒருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இணைந்து,

1. ஒவ்வொரு வார்டு உறுப்பினருக்கும், அந்த வார்டில், ஒரு அலுவலகம், ஒரு கணினி, ஒரு அலுவலர் அகியவற்றை அமைத்துக்கொடுக்கலாம். வருடம் முழுவதற்குமான செலவு என்பது, உங்கள் ஆதரவு பலத்தை நிர்ண்யிக்க செலவழிக்கப்போகும் தொகையை விட கண்டிப்பாக குறைவாகவே வரும்.

2.இரண்டிற்கும் மேற்பட்டோர் கொண்ட ஆலோசனை மற்றும் கண் காணிப்புக் குழுவை அமைத்து வார்டு உறுபினர்களுக்கும் எல்லாவிதத்திலும் உதவலாம்.

மேற்கண்ட செயல்கள் மூலம் வார்டிற்கு கிடைக்கும் நன்மைகள்,

1. எந்த நேரத்திலும், மக்கள் தங்கள் தேவைகள நிறைவேற்றிக்கொள்ள உற்ப்பினரை எளிதில் அணுகலாம்.
2. ஆலோசனை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் வார்டு வளர்ச்சிப்பற்றி உடனை நடவடிக்கைகள், செயல்பாடுகள் மக்களை எளிதில் சென்றடையும்.
3. லஞ்சம், ஊழல் என்ற பேராபத்திலிருந்து முதலில் உறுப்பினரை, பின்னர் மக்களை படிப் படியாக பாது காக்கலாம்.

மேலும்,

1. மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அலுவலக நோட்டீஸ் போர்டில் எழுதப்படவேண்டும்.அதில் மனு பெற்றதேதி அவை நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் கால அளவு, ஆகியவை குறிப்பிடபடவேண்டும்.

2. வார்டின் கல்வி பயிலும் மாணவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.அதில் பண வசதி இல்லாமல் மேற்படிப்பு தொடங்க முடியாமல் இருக்கும் மாணவர்களின் நிலை அறிந்து, பொது நல இயக்கங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

3.அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தவேண்டும்.

இப்படி மக்களுக்காக, மக்களோடு இணைந்து பணியாற்றும் போது அதன் வெற்றி அள்விட முடியாதது...

நாளைய வரலாறு உங்கள் வாழ்கையை தானாகவே பதிவு செய்து கொள்ளும்.

நகராட்சி தலைவரே!

பெருன்பான்மையான உருப்பினர்களின் ஆதரவோடு, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.

தங்களக்கு வழங்கப்பட்டுள்ளது மலர் கீரிடம் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.

1. நகரின் வளர்ச்சிக்கு தேவையான தொலை நோக்கு திட்டங்களை தயாரித்து அதை நிறைவேற்றக்கூடிய குழுவை அமைத்து, அதனை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

2. நகரின் பின்னோக்கிற்கு முக்கிய காரணம் ஊழல்-அதனை முழு மனதாக எல்லாவழிகளிலும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல்.

3. எல்லா வார்டுகளிலும் மாதம் ஒருமுறையேனும் தாங்கள் நேரிடையாக சென்று பார்வையிட்டு வார்டின் உண்மையான நிலை அறிந்து, அந்த்தந்த வார்டின் உறுபினர்களுக்கு, தகுந்த அறிவுரை வழங்குதல்.

4. மாநில அரசோடு இணக்கமான உறவை மேற்கொண்டு நகருக்குத் தேவையான, முழுமையான உதவிகளை பெறுதல்.

5. ஏட்டில் உள்ள அன்றாட பணிகளோடு,நகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கி அரசிடம் உதவி பெற எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.

6. தங்களுடைய பதவிக்காலத்தில் நம் நகரை மாதிரி நகரமாக மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல். இதற்காக நமதூரில் நிறைந்து வழியும் கல்வியாளர்களை, சமூக சிந்தனையாளர்களை இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்,

7. வேலை வாய்ப்பில் நமதூருக்கு முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யலாம். அதற்க்கான தகுதிகளை ஏற்படுத்தக்கூடிய முகாம்களை நடத்தலாம்.

8. நீண்ட கால வளர்ச்சித் திட்டமாக, சிறு தொழில், மற்றும் குறுந்தொழில்கள் நமதூரில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். இதற்காக நமதூரின் செல்வந்தர்களை தொடர்பு கொண்டு, திட்டவடிங்களை தயாரித்து, அவர்களை மனதளவில் தயார் செய்யலாம்.

நகரின் வளர்ச்சிக்கு தங்களோடு துணை நிற்க மக்கள் தயாராக உள்ளார்கள். இம்மைக்கும் மறுமைக்கும் பயன் பெறும் வகையில் செயல்படுங்கள்.

நல்ல தலமை, நல்ல உறுப்பினர்கள்,நல்ல, திட்டமிட்ட செயல் திட்டங்கள்............கண்டிப்பாக அல்லாஹ்வின் அருள் நம்மை சுற்றி இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

முடிவாக,

ஒரு குடும்பத்தலைவன் நன்றாக இருந்தால் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். ஒருகுடும்பம் நன்றாக இருந்தால் ஒரு ஊர் நன்றாக இருக்கும், ஒரு ஊர் நன்றாக இருந்தால் நம் மாவட்டம் நன்றாக் இருக்கும். ஒரு மாவட்டம் நன்றாக இருந்தால் நம் நாடே நன்றாக இருக்கும். எனவே மாற்றத்தை நம்மில் இருந்தே தொடங்கலாமே.

மேற்சொல்லப்பட்ட யாவும் செய்ய முடியாத செயல்கள் அல்ல..... அப்படி நம் மனதிற்க்கு தோன்றினால் நடந்து கொண்டிருக்கும் அநாகா£கத்திற்கு நம்மை அறியாமல் நாமே பழகி விட்டோம் அல்லது ஒத்து போய் விட்டோம் என்பதுதான்.

இது வெறும் கனவு அல்ல..........இன்ஷா அல்லாஹ் நடக்கும்...... அதன் பின்னர்,

ஒவ்வொரு தெருவிலும் உறுப்பினர்களுக்கு அலுவலகம், அதில் தகவல்கள் நிரம்பி வழியும்.....

பணத்தால் கல்வியின்மை என்ற நிலை காணாமல் போய்விடும்.

நகர் மக்களின் தேவைகள் வீடு தேடி வந்து தீர்த்து வைக்கப்படும்.

சுகாதாரம் சொந்தமாகும். ஊழல் ஒழிந்து போகும்.

இளைய தலைமுறையினர் நாட்டின் தேசத்தின் முக்கிய சக்திகளாய் மாறுவார்கள்.

நம் நகர் இந்தியாவிலேயே மாதிரி நகராய் உருவாகும்.

இனி

இது தான் என் ஊர் என்று உலகம் முழுக்க உரக்கச்சொல்வோம்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: SyedAhmed (HK) on 11 August 2011
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 20847

அருமையான பிரக்டிகல் ஆன திட்டம் - வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. நல்லதோர் நகர் மன்றம் அமைய விரும்பும்உங்களைப்போல் ஒருவன்
posted by: சட்னி.எஸ்எ .கே.செய்யது மீரான் (?????????????) on 11 August 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20848

அஸ்ஸலாமு அலைக்கும்.
மிக ஆழமான அற்புதமான
இக்காலத்திற்கு ஏற்ற அவசியமான
கருத்துக்கள்.

கட்டுரையாளர் அவர்களின்
எண்ணம் போல் ,மேலும் நன்மையும்
உண்மையும் விரும்பும் நம் போன்ற
அனைவர்களின் விருப்பமும் அதுவே.
அல்லாஹ் கபுலாக்கி தருவானாக ஆமீன்
நல்லதோர் நகர் மன்றம் அமைய விரும்பும்
உங்களைப்போல் ஒருவன்

சட்னி.எஸ்எ .கே.செய்யது மீரான்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: dawood (chennai) on 15 August 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20860

அஸ்ஸலாமு அலைக்கும்........ .ஒரு பத்திரிக்கையாளனாய் ஆழமாய் சிந்தித்து பதிவு செய்யப்பட காயல் மாநகரின் வளர்ச்சிக்கான தங்களின் கருத்துக்கள் மெய்ப்பட வாழ்த்துக்கள் இந்த அரிய கருத்துக்களை ஒவ்வொரு வார்டு மக்களிடமும் அறிக்கை மூலம் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் .......

ஒவ்வொரு ஜமாஅத் அறிவிப்புப் பலகையில் இதனை பார்வைக்கு விட வேண்டும் ....செயல்படுத்த சற்று கடினமாக இருந்தாலும் இறைவன் அருளால் இது சாத்தியமே{நம் வருங்கால நகர்மன்ற உறுப்பினர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொண்டால்} .........!!!

தங்களின் மேலான கருத்துக்கள் நகர்மன்றதுக்கு தேவை ...தங்களின் எழுத்து பணி மூலம் கிடைக்கும் பல அரிய கருத்துக்கள் தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்

வஸ்ஸலாம்

இப்படிக்கு ,
தங்கள் அன்பு நண்பன்
km.shaik dawood


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: javidh (kayalpatinam) on 15 August 2011
IP: 112.*.*.* India | Comment Reference Number: 20861

நன்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: abubacker (kayalpatnam) on 15 August 2011
IP: 14.*.*.* India | Comment Reference Number: 20862

நான் எதிர் பார்க்கும் நகர் அல்ல . இது நாம் எதிர் பார்க்கும் நகர் என அனைவர்களின் சார்பாக எழுதப்பட்டதுபோல் உள்ளது காயல் மாநகரில் பிற மதத்தினரின் வளர்ச்சி பெரிய அளவில் உள்ளது. நமது இஸ்லாமிய கலாச்சாரம் பாதிக்காத வகையில் pira makkalodu நாம் nalla murayil நடந்து கொள்ள paathai vondrai நாம் kaana vendiya avasiya nilayil irukirom


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. ஆழமான அழகிய ஆலோசனைகள் ....
posted by: MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) on 16 August 2011
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20866

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பு ஆசிரியர் மிக ஆழமான அழகிய நடைமுறைக்கு அவசியமான இலகுவான ஆலோசனைகளை அதிரடியாக பதிந்துள்ளார்கள்.

அனைத்தும் நமது காயல் ஜமாஅத் மற்றும் பொறுப்பாளர்கள்,போட்டியாளர்கள் அல்லாஹ்வின் ஆசி பெற அன்பூகூர்ந்து இவைகளை நடைமுரைபடுதுனால் பயன் பெறுவது நமது காயல் மக்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A) on 17 August 2011
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20870

மிகவும் அறிவு பூர்வமாக தனது கருத்துக்களை வடிவமைத்துள்ளார். மாஜி பத்திரிகை ஆசிரியர் என்பதாலோ என்னவோ நாம் அனைவரும் சிந்திக்கும் ஒன்றை அவரது கருத்தாக தந்துள்ளார்.

இன்ஷா அல்லாஹ் இவரின் கருத்தை இறைவன் செயல் வடிவாக்கி தந்தருள்வானாக -ஆமீன். இவரின் கருத்தை மனதில் கொண்டு நாமும் வரும் தேர்வில் செயல் படுவோமாக

-S .S .J .சாதிக் ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. கனவு மெய்ப்படவேண்டும்!.
posted by: kavimagan (dubai) on 18 August 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20871

பத்திரிகையாளர் ஜனாப்.முஸ்தாக் அஹமத் அவர்களே! உங்களது சீரிய கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது! தவறு செய்யும் தனவந்தர்களை சரித்திரம் மன்னிக்காது என்ற வரிகள் செல்வந்தர்களை சிந்திக்க வைக்கும்.சமூக மாற்றத்திற்காக,நல்லதோர் காயல் உருவாக களப்பணி ஆற்றும் இதயங்களுக்கு உங்கள் எழுத்துக்கள் சக்திதரும். தொடர்ந்து நமது தளத்தில் எழுதுங்கள்.அவலங்கள் நிறைந்த காயலின் காயங்கள் ஆறும்வரை உங்கள் சிறப்பான கருத்துக்களால் மருந்து இடுங்கள்.தங்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: SHEIK RISVAN (MUMBAI) on 19 August 2011
IP: 14.*.*.* India | Comment Reference Number: 20872

தங்கள் எழுதிய கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது . நீங்கள் ஒரு வாக்களார் எவ்வாறு இருக்க வேண்டும் சொன்னிர்கள் இது கயல் பட்டணம் மட்டும் அல்ல எல்லாம் மாவட்டங்களிலும் எல்லாம் மாநிலங்களும் உள்ள மக்கள் இதனை பின்பற்றினால் கயல் பட்டணம் அல்ல எல்லம் ஏரியாக்களும் வளமாக இருக்கும், ஒவ்வறு வாக்காளரும் இதை பின்பற்றினால் நாடு வளமாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. அருமையான சிந்தனை !
posted by: K.V.A.T.HABIB MOHAMED (QATAR) on 20 August 2011
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20875

எழுத்தாளர் எழுத்தாளர் தாங்க ....என்ன தான் நாமோ எழுதினாலும் ஒரு நகரின் நகராட்சி சிறப்பாக உருவாக எப்படி எல்லாம் ...யாரெல்லாம் செயல் படனும் ன்னு புட்டு புட்டு வச்சிருக்கிங்க சார் ...சபாஷ்!

உறுப்பினர்களுக்கு தனி தனி அலுவலகம் அந்த அந்த வார்டுகளில் தனவந்தர்கள் அமைத்துக்கொடுத்து அதை நிர்வகிக்க கம்ப்யுட்டர் மற்றும் அலுவலர்களை நியமித்து செயல் பாட்டை கண்காணித்தல் ....வெல்டன்!! இந்த மாதிரி ஒரு வேளை... நம் கிராம வார்டுகள் கண் காணிக்கப்பட்டால்.....இந்தியாவிலேயே நம்ம ஊர் தாங்க முதன்மை நகரம் ன்னு நாடே பேசும்ங்க....தமாஷ் அல்ல ....நிதர்சனமான உண்மையும் கூட.....

மற்ற கருத்துக்களும் சிறப்பாய் இருக்கு ...இன்ஷா அல்லாஹ்....நாம் து ஆ செய்வோம்...செயல் வடிவம் பெறுவோம்...கண்ட கனவை நினைவாக்க அரும் பாடு படுவோம் ....

தொடர்ந்து இந்த பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செயுங்க முஸ்தாக் அவர்களே...அது மக்களுக்கு சிந்தனையை தூண்ட கூடியதாக இருக்குமே....நன்றி !

அன்புடன் ,

K.V.A.T.ஹபீப் முஹம்மத்
தோஹா/கத்தார் .
kvat.habib@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Zubair Rahman (Bengaluru) on 21 August 2011
IP: 202.*.*.* India | Comment Reference Number: 20877

எல்லா அறிவுரைக்களுக்கும், மேலாக கண்ணியமிகு நமதூரைச்சார்ந்த தனவந்தர்களுக்கு கொடுத்த அறிவுரை சிறந்ததே.

"un opposed என்பதும் ஒரு சிறந்த தேர்வே" சிறந்தவர் என்பது போட்டியிடலால் மற்றும் நிருபிவித்துவிட முடியாது, மாறாக தேர்வின்றியும் நிருபிக்கலாம்.

ஊரின் வளர்ச்சி மேலோங்க உலமாக்களின் வழிகாட்டலும், நெறிபடுத்தலும், உமராக்களின் உதவியும் தான் முக்கியம்.

வல்லோன் அணிவகுத்துத்தர துஆ செய்வோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: S.A.SHAIK MOHAMED (dubai) on 21 August 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20880

Dear Musthaq & All kayal brothers & sisters,

Assalamualaikum.

Your opinion regarding this topic is really productive one to our municipality in a long run basis. so it will be highly appreciated the concerned people will taken your valuable ideas in to their to do list.

Thanks with regards
S.A.SHAIK MOHAMED.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: ALS mama (Kayalpatnam) on 21 August 2011
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20881

எழுத்தாளர் -பொது சேவை
இப்னு அப்பாஸ் (ALS மாமா)
நான் விரும்பும் நகர் மன்றம்
எழுத்தாளர் முஸ்தாக் அஹ்மத் அவர் விரும்பும் கயல் நகர் குறித்து இத்தனை காலம் சிந்தனையில் வைத்தவைகளை எழுதி காண்பித்தமைக்கு நன்றி.அவர் நாடும் காயல் உருவானால் சுத்தமும்,சுகத்ரமும்,அமைதியும் நிறைந்ததோடு மக்கள் நலமாக வாழ முடியும். (மனதில் உள்ள எண்ணங்களை எழுத்தில் வடித்து காண்பிப்பது சுலபம்தான்). முஸ்தாக் அஹ்மத் தம்பியை நமது ஊரில் ஒரு வார்டில் கவுன்சிலர் ஆக்கி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர் விரும்பும் காயல் நகரை சிறப்பாக உருவாக்க செய்யலாமே!.

நகராட்சி தலைவர் அறிந்துகொள்ள "எட்டு அம்சங்களை" தந்து உள்ளார்.மொத்தத்தில் நகரை நன்றாக உருவாக்க ஆசை படும் அவர் உள்ளத்தை நாம் பாராட்டுவோம்.

இப்படிக்கு,
இப்னு அப்பாஸ்(ALS மாமா),
சீதக்காதி நினைவு நூலகம்,
மஜிலிசுல் கௌது சங்க தலைவர்,
(ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சி குழு ஆலோசகர்),
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: k.m.sheik mohamed ali (brunei darussalam) on 31 August 2011
IP: 202.*.*.* Brunei Darussalam | Comment Reference Number: 20886

நீங்கள் வரைந்த கட்டுரை சிந்திக்க வைக்க கூடிய வகைஇல் இருந்தது காயல் மக்கள் இதை சிந்தனைக்கு எடுப்பார்கள்.......... . வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Meera Sahib (kayalpatnam) on 05 September 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20889

அஸ்ஸலாமு அலைக்கும்! சிறந்த கருத்துக்கள்! ஆழ்ந்த சிந்தனைகள் !! இந்த இளம் வயதில் இப்படி ஒரு விழிப்புணர்வு !!! மாஷா அல்லாஹ்! இறைவனுக்கே எல்லா புகழும் !

68 வயதை கடந்த எனக்கு நம் ஊர் நமது சமுதாயம் சிறக்கும் என்ற நிறைவு என் மனதில் ஏற்பட்டுள்ளது - இந்த இளைய சமுதாயத்தின் விழிப்புணர்வு - சிந்தனைகள் வளர்க !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved