Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:35:37 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
ஊடகப்பார்வை
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 4
#KOTWART044
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 14, 2014
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படம்!
இந்த பக்கம் 4492 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு அவ்வப்போது தமிழ் திரைப்படங்கள் வெளிவருவது உண்டு. அவற்றில் பல - கலை சினிமா வகையை சார்ந்ததாகவே இருந்துள்ளன. அரிதாக - வெகுஜன ரசிகர்களை சென்றடையும் நோக்கில், சமூக பிரச்சனைகளை மையப்படுத்தியும், சில படங்கள் வெளிவருகின்றன. அந்த வரிசையில் - நவம்பர் 7 அன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.



ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், கண்டேன் காதலை, சேட்டை போன்ற வியாபார படங்களை இயக்கியுள்ள ஆர்.கண்ணன் - இப்படத்தினையும் இயக்கியுள்ளார். இது - ஆடல், பாடல் என சராசரி தமிழ் திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட 132 நிமிட நீள படம்.

படப்பதிவின் போது...











தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ முகாம் நடத்த சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். அதில் படத்தின் கதாநாயகியும் ஒருவர். முகாமில் கலந்துக்கொண்ட பலரிடம் புற்று நோய், காது கேளாமை, அடிக்கடி கருகலைவு போன்ற குறைகளை அவர்கள் கண்டறிகிறார்கள்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் இணைக்கும் ஒரே அம்சம் அவர்கள் எல்லோரும் செல்வ விநாயகர் ஸ்டீல் (S.V. Steel Factory Private Limited) நிறுவனத்தில் பணிப்புரிபவர்கள். இந்த நிறுவனம் - காயல்பட்டினம் நகரில் அமைந்துள்ளதாக திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல், படத்தில் அவ்வப்போது - காயல்பட்டினம் பெயர் குறிப்பிடப்பட்டு, புற்று நோய் இங்கு அதிகமாக காணப்படுவதும் தெரிவிக்கப்படுகிறது.

படத்தின் கதாநாயகி - தனது தோழியை ஊரில் சந்திக்கிறார். தனது தோழியும் அந்த நிறுவனத்தில் பணிப்புரிகிறார் என அறிந்து - அந்த நிறுவனத்திற்குள் ரகசியமாக சென்று, ஆபத்தான சூழலில் அந்த நிறுவனம் இயங்குவதை அவர் படம் பிடிக்கிறார்.

எடுத்த ஆதாரங்களோடு அந்நிறுவனத்தின் உரிமையாளரை கதாநாயகி சந்திக்கிறார். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி கேட்கிறார். அவற்றை செய்ய பெரிய செலவாகும் என்றும், தன்னால் அதனை செய்ய முடியாது என்றும் உரிமையாளர் கூறிவிடுகிறார்.

அந்த தொழிற்சாலையில் பணிப்புரியும் தனது தோழி அங்கு ஏற்படும் விபத்தில் மரணிக்கவே, கதாநாயகி - சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போட முடிவு செய்து, சென்னைக்கு ரயிலில் புறப்படுகிறார்.

அதே ரயிலில் - படத்தின் கதாநாயகன், தனது நண்பனுடன் பயணம் செய்கிறார். ஓடும் ரயிலில் தொழில் நிறுவனத்தின் அடியாட்கள் கதாநாயகியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து கதாநாயகியை, கதாநாயகன் காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார்.

அரசு அமைப்புகள் நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்பதால், வழக்கில் கதாநாயகி தோல்வி அடைகிறார்.

ஏமாற்றம் அடைந்த கதாநாயகன், ஓர் உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த - மது அருந்திய நிலையில், தொழிற்சாலையின் உரிமையாளரை காரில் கடத்தி செல்கிறார். வண்டி விபத்தை சந்திக்கிறது. கதாநாயகன் மற்றும் அவரது சகாக்கள் அந்த உரிமையாளரை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்து சென்று உயிரை காப்பாற்றுகிறார்கள். இதனால் மன மாற்றம் ஏற்பட்ட உரிமையாளர், தனது நிறுவனத்தை நவீனமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறார்.

இது தான் படத்தின் கதை.

படத்தில் அவ்வப்போது - எவ்வாறு தொழில் நிறுவனங்கள் - லாபத்தை மட்டும் பிராதன நோக்கமாக வைத்துக்கொண்டு, உயிர்களை மதிக்காமல், செயல்புரிகின்றன என தெரிவிக்கும் வகையில் வசனங்களும் உண்டு.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலையினை மையமாக படம் கொண்டிருந்தாலும், வெகு ஜனத்தின் வரவேற்பினை பெற காமடி படமாக படத்தினை வழங்கியுள்ளார் அதன் இயக்குனர் ஆர்.கண்ணன். இப்படத்தின் - கதை, திரைக்கதை மற்றும் வசனத்திற்கும் இவரே பொறுப்பு.

படத்தில் - கதாநாயகி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாக காண்பிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் குறித்த வழக்குகள் - உயர்நீதிமன்றத்தில் அல்லாமல், 2010ம் ஆண்டு முதல், தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் விசாரிக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில் சகஜமாக காணப்படும் இது போன்ற குறைகள் இப்படத்திலும் சில உள்ளன.

படத்தின் கதாநாயகன் அழகு பாத்திரத்தில் விமல், கதாநாயகி ப்ரியா பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த், கதாநாயகனின் நண்பன் மைக்காக சூரி, தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வ விநாயகராக நாசர், அவரின் மனைவியாக அனுபமா குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக காயல்பட்டினம் மக்கள் மேற்கொண்டு வரும், DCW தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கமோ இப்படம் என - இப்படத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் மையம், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை, காயல்பட்டினம், புற்று நோய் போன்ற விஷயங்கள் - நினைக்க தூண்டுகின்றன.

புகைப்படங்கள்:
www.Top10Cinema.com

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஒரு ஊர்லே ரண்டு ராஜா ..
posted by: mackie noohuthmbi (kayalpaattinam) on 15 November 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38158

வார இதழ்களில் தரமானது புதிய தலைமுறை. நாளிதழ்களில் தலையானது தி இந்து தமிழ்.

சமீப காலங்களில் ஊடகங்களின் தாக்கம் வெள்ளித்திரை சின்னத்திரை வார இதழ்கள் நாளிதழ்கள் என்று அதிகம் பேசப்படுகிறது. ஆட்சி மாற்றங்கள் அதிரடியாக ஏற்படவும் இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை வெளிக் கொண்டு வரவும் இவை பெரிதும் பங்காற்றுகின்றன.

முகம் சுளிக்கும் காட்சிகள் வெள்ளி திரையில் இருந்தாலும் அதில் சில நல்ல கருத்துக்களும் சமூக மாற்றத்துக்கான விதைகளும் ஊன்றப் படுகின்றன. மேலே சொன்ன இதழ்களை வாங்கிப் படித்து பழக்கப் பட்டவர்களுக்கு இது புரியும்.

அந்த இதழ்களில் சினிமா விமர்சனங்களை பார்த்து விட்டு தைரியமாக அவர்கள் சொல்லும் படத்தை பார்க்கலாம். காய்தல் உவத்தலின்றி உள்ளதை உள்ளபடி விமர்சிக்கிறார்கள். அந்த இதழ்களில்தான் காயல்பட்டினம் பற்றி ஒரு ஊர்லே ஒரு ராஜா தரும் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இந்த இணையத்தளம் நன்கு அதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

நமது ஆதங்கம் ஆசை எல்லாம் இப்படி சாவுகள் நிகழ வேண்டும், தொழிற்சாலை அதிபர் விபத்தை சந்தித்து உயிர் பிழைத்தபின் தன் தவறை உணர்ந்து தன் தொழிற்சாலையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. ஏனெனில் சாவுகள் இங்கே சாதரணமாகி விட்டன..அவர்கள் தொழிற்சாலை அமைந்துள்ள ஊர் பெயரே சாவுபுரம் தான். தெரிந்தோ தெரியாமலோ அந்த பெயர் இப்போது பொருந்தி வருகிறது.

"ஆணியாக பிறந்தாய் உனக்கு அடிகள் புதிதில்லை" என்று "லிங்கா"வில் சூப்பர் ஸ்டார் ஒரு வசனம் பேசுகிறார்.படமே வெளிவரவில்லை அதற்கிடையில் இவனுக்கு எப்படி இந்த வசனம் தெரியும் என்று நினைக்காதீர்கள். இதுவும் ஒரு ஊடகத்தின் தகவல்தான்.

எனவே புற்று நோய் சாவுகள் எங்களுக்கு புதிதல்ல, அல்லாஹ் தரும் நோய் என்றால் அதை பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள எங்கள் இதயம் பக்குவப் பட்டுவிட்டது. ஆனால் ஒரு சாதாரண தொழிற்சாலை அதிபர் இந்த நோயை நம் ஊர் எல்லையில் இருந்துகொண்டு, நமதூருக்கே வரி செலுத்திக் கொண்டு, நமதூரில்லுள்ளவர்களை கையில் போட்டுக் கொண்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு, நமக்கு அவற்றுக்கு கைமாறாக, நன்றிக் கடனாக இந்த புற்று நோயை இலவசமாக தருகிறாரே அதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். தொடர்ந்து இந்த ஆலையை எதிர்த்து பல கோணங்களில் இருந்தும் போராட்டம் நடத்த புற்றீசல்கள் போல் பல இயக்கங்கள் புறப்பட்டு விட்டன.

"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாகக் கண்டே. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு"

என்ற பாரதிதாசன் வைர வரிகளை தாரங்கதாரவிலிருந்து வந்திருக்கும் தொழில் அதிபர்களுக்கு ஞாபக மூட்டுகிறோம்.பதுங்கும் புலி பாயக் கூடும் கவனமாக இருங்கள். நீங்கள் திருந்தா விட்டால் - ஒரு ஊர்லே ரண்டு ராஜா போல் நீங்கள் அடிபட்டு திருந்த நாள் குறிக்க வேண்டாம் -

இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள், DECIDE TO MAKE CHANGES IMMEDIATELY OR YOU WILL BE FORCED TO DECIDE YOUR FUTURE . இதை.நான் சொல்லவில்லை. புற்று நோயால் தினம் தினம் மாண்டுகொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளின் சொந்தங்கள் சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

சுனாமி சொல்லி விட்டு வராது - எரி மலை உங்களிடம் சம்மதம் கேட்டுவிட்டு வெடிக்காது. ஜாக்கிரதை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 15 November 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 38163

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

எல்லாப்புகழும் இறைவனுக்கே.

"ஒரு ஊர்ல ரெண்டு ராஜா "

நமது ஊரையும் அதன் சுற்றூரையும் அழித்துவரும்
கொடுங்கோலர்களின் கொடுமைகளை ஓரளவு படம்பிடித்துக்காட்டியிருக்கிறது.

தந்தத்திற்காக யானைகளைக்கொன்ற வீரப்பன்களையெல்லாம் கொன்றுவிட்டது அரசு.

ஆனால் காசுபடைப்பதற்காக மனித உயிரையும் சுற்றுப்புறச்சூழலையும் மாசுபடைத்து உலையிலிடும் மாசுபடிந்த மனம்படைத்தோரை ஏன் கண்டு கொள்வதில்லை.

எத்தனை மனுக்கள் கொடுத்தாகிவிட்டது மனித, விலங்கு, தாவர உயிர்களையெல்லாம் பலிகொடுத்துக்கொண்டேயிருக்கிறோம் இருந்தும் இரக்கம் வரவில்லை.

ஒரு விஷயத்தை நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள், ஒரு பலூனை ஒரு பக்கமாக நசுக்கினால் மறுபக்கம் வீங்கும் அந்த வீங்கிய பகுதி பார்க்க அழகாகத்தானிருக்கும் அதேசமயம் விரைவில் வெடித்துவிடுமென்பதை மறந்துவிடாதீர்கள்

எங்களை வதைத்து விஷத்தை விவசாயமாக்கி வியாபாரம் செய்கிறீர்கள்

"தினையை விதைப்பவன்தினையையறுப்பான்"

நீங்கள் என்னவிதைக்கிறீர்களென்று உங்களுக்கு நன்றாகத்தெரியும்.

நம்மோடிருந்து இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுன்னிகளைக்கண்டு களையெடுப்போம் ஏனெனில் மீனமாட்டாவின் கேடுகளையும் தாண்டிக்கொண்டுபோகிறது கொடுமைகள் இப்பொழுதேனும் விழித்துக்கொள்லவில்லையெனில் இனி எப்பொழுதுமே மீளமாட்டோம் அணுகுண்டு, நியூக்லியர் பாதிப்புபோல் நிரந்தரமாகிவிடும்.

"விஷ விவசாயிகளின் சாயம் வெளுத்துவருகிறது."

இறைவன் யாவருக்கும் சமமானவனே பிரசவமாக்குபவனும் அவனே பிறகு சவமாக்குபவனும் அவனே அவனிடமிருந்து சாமான்யமாக எந்தசாமான்யர்களாலும் தப்பிவிடமுடியாது இன்ஷா அல்லாஹ் விரைவில் கேட்பான் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. நிம்மதி மூச்சை நெருங்கிவிட்டோம்
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 16 November 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38166

திரைப்பட தாக்கத்தினால் விளையும் எந்த நன்மை தீமைகளையும் அலசிப்பார்க்க நம் மார்க்கம் அனுமதிப்பதில்லை என்ற நம்பிக்கையை வாழ்க்கையாக ஏற்று வாழும் நாம்,சற்று விலகிச்சென்று ஊடககங்களின் பார்வையை பார்க்கும் பார்வையாளர்களாக அது கூறும் உண்மை யதார்த்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு,அந்த மையக்கருத்தை மற்றவர்களுக்கு முறையாக எடுத்து விளக்குகின்ற பணியை செய்வதில் தவறேதுமில்லை!

பாத்திரத்தைப்பார்க்காமல் அதிலுள்ள பண்டத்தைமட்டும் எடுத்துக்கொள்வதுபோல்,"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவன் மொழிக்கொப்பவும், நம்முடைய சீரிய பணியான,நம்மை சீரழிக்கும் அந்த நச்சு ஆலையை அனைத்து வழிகளிலும், எதிர்கொண்டால்தான் அந்த இரும்பு நிர்வாகத்தை இலேசு,இலேசாக அசைக்க வைக்க முடியும்!

வல்ல அல்லாஹ்வின் உதவியால் அது அசையும் நிலை ஆரம்பமாகிவிட்டது.ஆமாம், அனைத்து தரப்பினர்களும் அந்த ஆலைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்கின்ற அறிகுறியில் ஒன்று தான் SDPI அமைப்பின் டிசமபர் 30-ன் போராட்டம்!

முதலை பலம் கொண்ட முதலாளிகள் எல்லாம் இப்போது இலவம் பஞ்சாய் பறக்ககூடிய வேகமான விழிப்புணர்வு யுகமாக மாறிக்கொண்டிருகிறது.வீத்யில் வேண்டாவெறுப்பாய் செல்லும் சுப்பனுக்கும் குப்பனுக்கும் உணரவைக்கும் வேலையைக் கூட ஊடகங்கள் செய்ய ஆரம்பித்து விட்டன!

இனி எத்தனை வருடங்கள் என்ற சொல் எத்தனை மாதங்கள் என்ற அளவிற்கு சுருங்கும் நிலை வெகு நீண்ட நிலையில் இல்லை நிம்மதி மூச்சை நெருங்கிவிட்டோம் நெடியோன் துணையுடன்! . அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,

முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) on 16 November 2014
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38169

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் மக்களின் இந்த நாசமா போன DCW தொழிற்சாலையை பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இப்படத்தில் காட்டி இருக்கலாம் .....படம் நல்ல பொழுது போக்குடன் ...காமடி கலந்த படமாகவே உள்ளது .....

இருப்பினும் நம் ஊர் மக்கள் போராடும் ...போராட்டம் பற்றியாவது கொஞ்சம் சொல்லி இருக்கலாம் .....நம் ஊர் மக்களின் இந்த போராட்ட சூழ் நிலைமையில் இந்த திரைப்படம் வந்து ..... தமிழக மக்களின் பார்வை நம் ஊர் பக்கம் கொஞ்சம் திரும்பி இருப்பதும் வரவேற்க தக்க ஓன்று தான் .....

இந்த திரைப்படத்தால் நாசமா போன DCW தொழிற்சாலைக்கு ஒரு முடிவு வருமா என்று பார்ப்போம் .......பணத்தின் ஆதிக்கம் பற்றி நன்றாகவே ( அழுத்தமாகவே ) படத்தில் கூறி உள்ளார்கள் ....அது முழுக்கு ,, முழுக்க ,,..உண்மையே ....அரசு நிர்வாகத்தின் கவன குறைவை பற்றியும் திரை படத்தில் ரொம்பவும் அழுத்தமாகவே கூறி உள்ளார்கள் .......பாராட்டத்தக்க விசையம் தான் .....

நம் தமிழக அரசு இப்போதாவது கண் விழிக்குமா & நம் ஊர் மக்களை பாதுகாக்குமா ....?? என்று பொருத்து இருந்து பார்ப்போம் .....நல்லது நடக்கும் என்கிற ஆதங்கத்துடன் ....காத்து உள்ளோம் .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved