Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:10:49 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous Article
ஆக்கம் எண் (ID #) 49
#KOTWART0249
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 6, 2018
இருபதும் - அறுபதும்!
இந்த பக்கம் 6157 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



இருபது .?
இளமையின் துள்ளல்.
அறுபது .?
முதுமையின் தழுவல்.

அலை கடலென
ஆர்ப்பரிப்பான்-
ஆழ் கடலென
அமைதி கொள்வார்.

வினாக்களுக்கு
விடைதேடும் மாணவன் -
விடைகளை
கற்றுத்தரும் பேராசிரியர்.

வாழ்வைத் துவக்கிட
வழியைத் தேடுபவன் -
வாழ்ந்த வழியை
திரும்பிப் பார்ப்பவர்.

கொஞ்சம் இருந்து பேச
நேரம் இல்லாதவன்-
நேரம் இருந்தும் பேசத்
துணை இல்லாதவர்.

உழைப்பைத் தேடும்
வயதை உடையவன்-
ஓய்வைத் தேடும்
வயதை அடைந்தவர்.

உயர்ந்து நிற்க
தொழிலை தேடுபவன்-
சாய்ந்து கொள்ள
தோளை தேடுபவர்.

சமகால
கனவுகளில் வாழ்பவன் -
கடந்த கால
நிஜங்களில் வாழ்பவர் .

புதுப் புது நண்பர்களால்
புடை சூழந்திருப்பவன் -
பழம் பெரும்
நண்பர்கள் நினைவால்
மனம் நிறைந்திருப்பவர்.

ஓயாமல் ஓடி ஓடி
உழைக்கக் கூடியவன் -
உழைத்து உழைத்து
ஓய்ந்து போனவர்.

காசு பணத்தை
தண்ணீராய் செலவழிப்பான்-
தண்ணீரையும்
காசு பணம் போல் செலவழிப்பார்.

நாலு காசை தேடிவிட்டால்
தலை கால் புரியாது -
எத்தனை காசை பார்த்தாலும்
நிதானம் தவறாது.

அறிவுரை சொன்னால்
அறவே பிடிக்காது -
அறிவுரை சொல்லாமல்
பேச்சே முடியாது.

எதைக் கேட்டாலும்
இவன் நாவில்
கூகுள் பேசும் _
இவர் நாவில்
அனுபவம் பேசும்.

டேபும் கையுமாக
இருப்பான் -
டேப்லட்டும் பையுமாக
இருப்பார் .

எப்ப பார்த்தாலும்
ஆன் லைனில் -
அப்பப்ப ரேஷன்
கடை லைனில்.

ஸ்மார்ட் போன் இருந்தால்
வாழ்வே கொண்டாட்டம் -
அது இருந்தால் பாடு
ரொம்பவே திண்டாட்டம்.

தறி கெட்டு அங்குமிங்கும்
பைக்கை ஓட்டித் திரிவான் -
அதை பார்த்து பயந்து
உயிரை காக்க
ஓடி ஒதுங்குவார் .

ஒவ்வொரு நொடியும்
முக நூலில் ஒன்றிடுவான் -
ஒவ்வொரு நாளும்
இறை நூலை ஓதிடுவார் .

நேரமே கிடைக்காது
பள்ளி சென்று தொழுதிட -
நேரமே தவறாது
பள்ளி சென்று தொழுதிட.

யார் சொல்லையும்
இவன் மதிப்பதே இல்லை -
இவர் சொல்லையும்
யாரும் மதிப்பதும் இல்லை.

இவனுக்கு
யார் துணையும்
தேவை இல்லை -

ஆனால்..
இப்போ இவருக்கு ..?

வாழ்க்கைத்
துணையை விட்டால்,
வேறு துணை
ஏதும் இல்லைங்க.

இதெல்லாம் ...
யார் சொன்னது ?
யாரும் சொல்லைலங்க.

சொல்லித் தந்தது
வாழ்க்கை தான் .
அதுக்கு பேரு தாங்க

"அனுபவம்".

Previous Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தன் செவிகள் பாழானாலும் என் கவிகள் பாழாகாமல் காத்த ராசாத்தி
posted by: mackie noohuthambi (colombo) on 07 December 2018
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46321

கவிதை தந்த புகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இளமையில் வராத புது கவிதை இது. தத்துவங்கள் சொல்லியே பழகிப் போன தமிழன்.

இடுக்கண் வருங்கால நகுக என்ற திருக்குறள் இந்த காலத்துக்கு பொருந்தாது. இடுக்கண் வருங்கால் பொறுமையாக இரு என்ற திருமறை வசனம் எப்போதும் பொருந்துகிறது.

முதுமையடைந்தவர்களை இளைய தலைமுறையினர் எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த திருமறையே சொல்கிறது. எனவே இளமையும் முதுமையும் என்ற கவிதையை இறைவனின் திருமறை நபிகளின் வழிமுறை நபி தோழர்களின் நெறிமுறை இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி எல்லோரும் நடந்து கொண்டால் இளமையை முதுமை சாடாது முதுமையை இளமை ஏளனம் செய்யாது.

காவோலையை பார்த்து சிரித்ததாம் குருத்தோலை ..ஆனால் குருத்தோலையை பார்த்து காவோலை சிரிக்கிறது என்ற உண்மை விளங்குவதில்லை.

நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும் என்ற ஒரு கவிஞன் பாடுகிறான்.

மனசுக்கு வயசு இல்லை என்கிறது ஒரு புதுக்கவிதை.. இளமை புதுமை இனிமை இவற்றைக் கடந்து வந்து முதுமை அடைந்தாலும் அப்படி இளமையாகவே இருக்க முடியும்.

மனித உடலில் ஒரு சதை துண்டு உண்டு. அது கெட்டுவிட்டால் எல்லாமே கெட்டுவிடும். அது சீராக இருந்தால் எல்லாமே சீராக இருக்கும். அறிந்து கொள்ளுங்கள் அதுதான் இதயம் என்ற நபிமொழியை மனதில் கொண்டு வாழ்ந்தால் முதுமையும் சுகமே...வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved