Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:47:38 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 56
#KOTWART0156
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 18, 2014
பாரதீய ஜனதாவின் +272 கனவு பலிக்குமா?
இந்த பக்கம் 2107 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



புது வருடம் பிறந்துவிட்டது. இந்தியாவைப் பொருத்த வரையில் இது தேர்தல் வருடம். கனவு காலம் என்றும் கூறலாம். ஆட்சி மாற்றம் வரும் என்று கனவு காண்பவர்கள் ஒரு புறம்; “இல்லை... மீண்டும் நாங்களே!” என்று சொல்பவர்கள் மறு புறம். “நானே பிரதமர்” என்று சொல்பவர் ஒருவர்; “நானும் ஆவேன்” என்பவரும், “எங்களுக்கும் வாய்ப்புண்டு” என்று கூறுபவர்களும் உண்டு. மொத்தத்தில் எல்லோரும் கனவு காண்கிறார்கள். பிரதமர் கனவு!

முதலாவதாக, பாரதீய ஜனதாவின் கனவு என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். அவர்கள் கனவு. "+ 272" என்பதாகும். அதாவது, 545 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், தங்கள் கட்சி மட்டும் சரிபாதியான 272 ஆசனங்களைப் பிடிக்கும் என்றும், கூட்டணிக் கட்சிகளின் ஆசனங்களையும் சேர்த்து, பெரும்பான்மையான ஆட்சியமைப்போம், என்பதுவும் அவர்களின் கனவு - பிரச்சாரம். இது சாத்தியமா இல்லை சறுக்குமா?

பாரதீய ஜனதா கட்சியின் அசுர - அவசர வளர்ச்சியை வாசகர்கள் அறிவார்கள். அதன் ஊற்றுக்கண் - 1951இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் துவக்கப்பட்ட பாரதீய ஜனசங். இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். - அதாவது, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் என்ற முஸ்லிம் எதிர்ப்பு - ஹிந்துத்துவ அமைப்பின் வெளிமுகமாக, 1980 டிசம்பரில் பாரதீய ஜனதா கட்சி (பீ.ஜே.பி.) என்று ஒன்று வாஜ்பாய் - அத்வானி குழுவினால் பெயர் மாற்றம் பெற்றது.

1984 நாடாளுமன்றத் தேர்தலில் பீ. ஜே.பி. இரண்டு ஆசனங்களை மட்டுமே வென்றது. ஒன்று ஆந்திராவிலும், மற்றொன்று குஜராத்திலும். 1989இல் நடந்த பொதுத் தேர்தலில் பீ.ஜே.பி. 88 ஆசனங்களைப் பெற்றது. 1996இல் பீ.ஜே.பி. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டதாக இருந்தாலும், ஆட்சியமைக்குமளவுக்கு பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் அரசு அமைத்தனர். இந்த முதல் பாரதீய ஜனதா அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது.

மீண்டும் வந்த மார்ச் 1998 தேர்தலில், பா.ஜ.க. பரந்த கூட்டணி அமைத்து, 188 ஆசனங்களை வென்றது. தமிழகத்தின் அ.தி.மு.க.வும் அதில் அடக்கம். 14 மாதங்கள் நீடித்த அந்த ஆட்சி, மே 1999 இல் தமிழக அம்மையார் (அன்று அவர் ‘அம்மா’ அல்ல; ‘மேடம்’) முரண் பட்டதால் கவிழ்ந்தது. அடுத்து 13 அக்டோபர் 1999இல் பா.ஜ.க. கூட்டணி 303 ஆசனங்களைப் பெற்றது. பா.ஜ.க. மட்டும் 183 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 13 மே 2004 வரை சென்று இந்த அரசு தனது காலத்தை முழுமைப்படுத்தியது.

ஐந்து ஆண்டுகள் நீடித்த வாஜ்பாய் அரசு, நரசிம்மராவிற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்த தளும்பல் நிலையை உறுதிப்படுத்தி, வெளிநாட்டுக் கொள்கையிலும் - உள்நாட்டிலும் ஓரளவுக்குத் தரமான ஆட்சியைத் தந்தது. சில குறைகள் இல்லாமலில்லை.

நெடுஞ்சாலை அமைப்பு, அரசு ஊடகங்களின் கட்டுப்பாடு தளர்வு, அணு பரிசோதனை போன்று குறிப்பிடத்தக்க சில விடயங்களை சிறப்பாகவே செய்ததால், 2004 தேர்தலில் ‘INDIA SHINING’ - ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்தோடு களமிறங்கி, அது 116 ஆசனங்களை மட்டுமே பெற்று, ஒளியிழந்து அமாவாசையில் சிக்கிக் கொண்டது. இன்று வரை மீளவே இல்லை. மீளத் துடிக்கிறது.

2004 தோல்வியின் முக்கிய காரணம் என்ன என்று அவர்கள் வெளிப்படையாக ஆராய்ந்து கூறவில்லை. ஆனால், ஆய்வாளர்கள் - குஜராத்தை மத்திய அரசு அடக்கவில்லை; மெத்தனமாக விட்டுவிட்டது என்பதே பிரதான காரணம் என்றும், அதனால், சிறுபான்மையினரும், நடுநிலையாளர்களும் ஆதரிக்கவில்லை என்றும் கூறினர்.

பாபர் மஸ்ஜித் இடிப்பை மெத்தனமாக விட்டு, முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்து, எப்படி நரசிம்மராவ், காங்கிரஸ் கட்சியை படுகுழியில் தள்ளினாரோ அதே காரியத்தை - மோடியை அடக்கி வைக்காது வாஜ்பாய் செய்தார் என்பதே பலரின் குற்றச்சாட்டு. ஆனால் மோடிக்கு ஆதரவாக அன்று வாஜ்பாயைத் தடுத்தது ஆத்வானிதன் என்பது பலர் அறியாதது.

அவ்வாறு அன்று பா.ஜ.க.வின் தோல்விக்குக் காரணமானவர் என்று அறியப்பட்டவர், இன்று “பா.ஜ.க.வை ஆட்சி பீடத்தில் ஏற்றுவேன்” என்று அறைகூவுகிறார். இது எவ்வளவு சாத்தியம்? நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். உண்மைதான்!

அரியலூரில் அதிகாலையில் ரெயில் ஆற்றில் விழுந்ததற்கு, டெல்லியில் தூங்கிக் கொண்டிருந்த ரெயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி எந்த வகையில் பொறுப்பாளியாவார்? அவர் ஏன் ராஜினாமா செய்தார்? தார்மீகப் பொறுப்பு என்று ஒன்று உண்டு. இன்று இந்திய அரசியலில் அது இல்லை.

188 இல் இருந்து இறங்கி, இன்று 116 ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சி “272 ஆசனங்கள் பெறுவோம்” என்கிறது. இரண்டு மடங்கிற்கு மேல் அதிகம். பா.ஜ.க. இப்போது 450 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. குறைந்தபட்சம் இரண்டில் ஒரு வேட்பாளர் கட்டாயம் வென்றாக வேண்டும்.

அதிக எண்ணிக்கை கொண்ட உத்திரபிரதேசத்தில் 80 ஆசனங்களும், பீஹாரில் 40 ஆசனங்களுமாக 120 தொகுதிகள் உள்ளன. தற்சமயம் உ.பி.யில் 10 ஆசனங்களும், பீஹாரில் 12 ஆசனங்களும் உண்டு. இந்த 12 நிதீஷ்குமார் ஆதரவில் வந்தது. இப்போது அவர் ஆதரவு இல்லை.

எது எப்படியிருந்தாலும், பிற மாநில கூட்டணிகள் எப்படி அமைந்தாலும், உ.பி. மற்றும் பீஹாரில் தனித்தே போட்டியிட வேண்டிய நிலையில்,120இல் 80 ஆசனங்களை வென்றால்தான் பா.ஜ.க.வின் குதிரை வெற்றிக் கம்பத்தை நெருங்கும். இது சாத்தியமா இல்லை சறுக்குமா?

இதுபோக, சுமார் ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க. இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது. இங்கு 170 ஆசனங்கள் இருக்கின்றன. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, ஆந்திரம் அவை. இங்கு பா.ஜ.க. எத்தனை ஆசனங்களைத்தான் பிடிக்கப் போகிறது? மேலும், இன்னும் ஏழு வட மாநிலங்களில் பலமான மாநில கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது.

மோடி அலை எப்படி வீசினாலும் வடக்கே இன்னும் பெரிய அளவில் கூட்டணி அமையவில்லை. அதேவேளை, மகராஷ்டிராவில் தேய்மானம் தெரிகிறது. பால் தக்கரேக்குப் பிறகு சிவசேனா அப்படி பலமாக இல்லை. மேலும், ராஜ் தக்கரே வேறு மோடியோடு முரண்படுவது போல் பேசுகிறார். கூட்டணியில் இவரது கட்சி இணையாவிட்டால், அதன் பாதிப்பு தெரியவே செய்யும்.

சிவசேனாவின் அதிரடி அரசியல்தான் முதலீட்டாளர்களை மகராஷ்டிராவை விட்டு விட்டு குஜராத்தை விரும்ப வைத்தது என்பதையும், அதனால் அம்மாநிலமும், மோடியும் பலன் பெற்றார்கள் என்பதையும் ஊடகங்கள் எடுத்துச் சொல்வதில்லை.



இது இப்படியிருக்க, புதிதாகத் தோன்றிய ஆம் ஆத்மி கட்சி வடக்கே காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளைப் பங்கு போடும் என்பது தெளிவு. அவர்கள் 50 - 60 ஆசனங்களைப் பிடிப்பார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறியதை, பா.ஜ.க. அசட்டை பண்ணினாலும், அவர்களது வாக்கு வங்கியில் இந்தப் புதிய கட்சி ஒரு சரிவை உண்டாக்கும் என்பது நிச்சயம். குஜராத்தின் 26 தொகுதிகள் உட்பட 400 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடலாம்.

இந்தத் தேர்தலில், ராம் ஜென்ம பூமி - பாபர் மஸ்ஜித் போன்ற உணர்ச்சிகளை உசுப்பி விடும் விடயங்கள் இப்போது பிரதான பங்கு வகிக்கவில்லை. ராமரை முன்வைத்து முன்பு வென்றது போல, மோடியை இப்போது முன்வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். ஆகவே, இங்கு பா.ஜ.க.வின் கொள்கைகள், சாதனைகள் என்பன பின்தள்ளப்பட்டு, ஓர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல், மோடி என்ற தனி மனிதரின் சாதனை, அவரது கொள்கை என்று அவரைச் சுற்றியே தேர்தல் பிரச்சாரம் செல்கிறது.

ஆனால் அமெரிக்கா- இலங்கை - பிரான்ஸ் ஜனாதிபதிக்குரிய அதிகாரம் இந்திய பிரதமருக்கு கிடையாது.மேலும் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் பெருமைகளைப் பற்றி மோடி எதுவும் கூறுவதில்லை - தொடுவதில்லை. இது மூத்தவர்கள் பலரைக் கவலையடைய வைத்துள்ளது.

இவர் தலைமையில் ஆட்சி அமைந்தால் அது மோடியின் வெற்றியாகவே இருக்கும். பாரதீய ஜனதாவின் வெற்றியாக அல்ல. ஆகவே, இவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை வரும். இது இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், இரண்டாம் கட்ட தலைவர்களையும் அச்சமடைய வைத்துள்ளது.

காரணம், மோடி பழகுவதற்கு இனியவர் அல்ல. இலகுவில் அனுகக் கூடியவரும் அல்ல. கண்டிப்பானவர். தனது பாதையில் வராதவர்களை - எதிர்பாதையில் மோதுபவர்களை அவர் சகிப்பதில்லை. ஆகவே, கட்சியில் அடக்குமுறை - சர்வாதிகார ஆட்சி வரும் என ஒரு குழு நினைப்பது தவறு அல்ல.

மேலும், டெல்லி அரசியல் மோடி அறியாதது. பா.ஜ.க.வின் 116 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேரை - எத்தனை பெயர்களை அவர் அறிவார் என்று சொல்ல முடியாது. மிக மிகக் குறைவே. அதே வேளை, மூத்தவர் அத்வானியை அவர்கள் அனைவரும் அறிவர். அவருக்கும் இவர்கள் ஒவ்வொருவரின் பெயரும், விபரங்களும் தெரியும்.

மேலும், பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டுமென மோடி விரும்புகிறார். இது எந்தப் பலனைத் தரும் என்பதை தேர்தல் முடிவே சொல்லும். அனுபவம் ஓர் ஆற்றல். அது இல்லாத அமைச்சரவையில் குறை காணும் வாய்ப்பும் அதிகம்.

மோடி அலை இயற்கையா அல்லது செயற்கையா என்று கூற முடியாது. ஆனால் ஊடகங்களின் பங்கீடு இதில் பெரிய அளவு இருப்பது உண்மை. மோடியின் வெற்றிக்காக அமெரிக்கா வாழ் குஜராத்தியர் பிரம்மாண்டமான அளவில் பங்களிப்பு செய்கிறார்கள். குஜராத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அமெரிக்க ஜனத்தொகையில் ஒன்று கூடும் என்று கேலியாக சொல்வர். அந்த அளவு அவர்கள் செல்வாக்கு அங்கு அதிகம்.

அவர்களது முயற்சியில் பராக் ஒபாமா பாணி தேர்தல் பிரச்சாரம் முற்றும் முழுதுமாகப் பின்பற்றப்படுகிறது. கணனியில் காணும் இடமெல்லாம் மோடியே என்பதும் அவற்றில் ஒன்று. இதற்காக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் 5,000 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், பெரும் பணம் செலவிடப்படுவதாகவும் கூறுகிறார்கள். கணனி வழி பத்திரிக்கை செய்திகளில் கருத்தாளர்களின் விமர்சனங்களைப் பார்க்கும்போது, அங்கு ஒரு செயற்கையான பிரச்சார நெடி இருப்பதை அறியலாம்.

பத்து கோடி அளவில் இருக்கும் புதிய வேட்பாளர்கள் - இளைஞர்களைக் கவர்வதே மோடியின் முக்கிய இலக்கு. கணனிக்கு பரிச்சியமான இளவல் கூட்டத்திடம் மோடி மோகம் இருப்பது வுண்மை. ஆனால் புதிதாக வந்த ஆம் ஆத்மி கட்சி, டெல்லி வெற்றியின் பின் மோடிக்கு வேகத் தடையை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. வடக்கே மோடி அலை அடங்கி, கெஜ்ரிவாலின் சுனாமி அடித்துக் கொண்டிருப்பதுதான் உண்மை.

நகர்ப்புற, கிராமப்புற இளைஞர்கள் இலட்சக் கணக்கில் அக்கட்சியில் சேர்கின்றார்கள். சில இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் தீர்ந்து போய்விட்டன. ஏன், காங்கிரசின் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் இதே நிலைமைதான். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமீபத்தில் “இக்கட்சியை அலட்சியம் செய்யாதீர்” என்று பா.ஜ.க.வினருககு அறிவுறுத்தல் செய்ததையும் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.

பாரதீய ஜனதா, 1998 தேர்தலில், 25.59 % வாக்குகளையும், 188 ஆசனங்களையும் பெற்றது. 1999 தேர்தலில், 23.75 % வாக்குகளையும், 183 ஆசனங்களையும் பெற்றது. அது 2004இல் ஆட்சியில் இருந்து சந்தித்த தேர்தலின்போது 22.16 % வாக்குகளையும், 144 ஆசனங்களையும் பெற்றது. ஆனால், 2009 தேர்தலில் 18.80 % வாக்குகளையும், 116 ஆசனங்களையும் பெற்று தேய்பிறையாகவே காட்சி தந்தது ஏன்? இந்த 5 ஆண்டுகளில் நாட்டில் பா.ஜ.க.வின் நிலை எங்கு, எப்படி அதிகரித்திருக்கிறது? தமிழ்நாட்டில் 2 % வாக்கு வங்கியையே அது கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் சூழலைத் தனியாகப் பிறகு பார்க்கலாம்.

மோடியின் பிரச்சாரம், காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாக மட்டுமே இருக்கிறது. அதனைக் கேட்கவும், அவரைப் பார்க்கவுமே கூட்டம் கூடுகிறது. தேர்தல் நெருங்கும்போது எல்லா கட்சிகளுமே காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தில்தான் ஈடுபடும். ஆம் ஆத்மி கட்சியும் அதனையே செய்யும். அப்போது மோடியின் பேச்சிற்கு மதிப்பு இருக்காது. அவரது சரக்கும் தீர்ந்து போயிருக்கும்.

மன்மோகன் சிங் செயல்படும் பிரதமரோ, செயல்படா பிரதமரோ - அவர் போன்று பரந்த அறிவு கொண்டவராக மோடி தோன்றவில்லை. மோடியை விட அறிவுசால் தலைவர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர். தனது தாழ்குடிப் பிறப்பை எடுத்துப் பேசி, சாமானியர்களைக் கவர அவர் முயல்கிறார். காரணம், பா.ஜ.க.வின் முதுகெலும்பு, உயர்ஜாதி ஹிந்துக்கள்தான்.

இறுதியாக, எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், பாரதீய ஜனதாவின் “+272” கனவு நனவாக வாய்ப்பு இல்லை. நரேந்திர மோடி ஒரு பரக் ஒபாமாவோ, எம். ஜி. ஆரோ அல்ல. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வரக்கூடிய 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தலை முடியைப் பிய்க்க வைக்கும்!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சரியான கணிப்பு ...!
posted by: B.M.லுக்மான் மௌலானா (ஜெய்ப்பூர் ) on 19 January 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32573

2014 பாராளுமன்ற தேர்தல் குறித்த கட்டுரையாளரின் அலசல் மிகச் சரி. ஏற்கனவே 2004 லிலும் இந்தியா ஒளிர்கிறது என்று மிக ஆர்ப்பாட்டமாக களமிறங்கிய அக்கட்சி மோசமான தோல்வியையே சந்தித்தது. செய்தி ஊடகங்கள் தங்களுக்கு அனுகூலமான கட்சியை கூவி கூவி விற்கத் தொடங்கி இருப்பது ஜனநாயகத்துக்கு பிடித்த கேடு. இதில் தொழில் முதலைகளும் தங்களுக்கு வசதியான ஆட்சி அமைய கோடிகளை வாரி இறைப்பதும் அரசியல் சாபம் !

ஆனால் - தமிழ்நாடு , கேரளா ,ஆந்திரா ,உ.பி,பீகார் , போன்ற மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆளுமை ஓங்கி இருக்கும் காலம்வரை இனி தனியொரு கட்சி 275 இடங்கள் அல்ல அதில் பாதி இடங்களை கூட வெல்ல முடியாது. அதிலும் பாஜக தனியாக 200 சீட்களை பெறாதவரை மோடி போன்றவர்கள் அரியணை ஏறுவதென்பது பகல் கனவு கூட காண முடியாது.

(எனது தனிப்பட்ட கருத்து: எப்பாடு பட்டாவது ஒரு ஆறு மாதத்துக்கு மோடி பிரதமர் பதவியில் அமர வேண்டும் - அப்போதுதான் அவரின் இயலாமையை இந்த நாடு உணரும். பாஜக எனும் கட்சியே இந்திய அரசியலையும் விட்டு காணாமல் போய்விடும். ஆனால் அப்படி ஒரு பேச்சுக்கு கூட அவரது ஆட்சி அமைவது எனக்கு புலப்படவில்லை!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 30 January 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32870

அஸ்ஸலாமு அழைக்கும் ,

சாஜஹான் அப்பா அவர்களின் இந்த வாக்கிய கட்டுரை சரியான் சமையத்தில் வலை தளத்துக்கு வந்துள்ளது .

செய்திகள் , நாடு நடப்புகள் , உலக சூழல் போன்றவற்றில் அவர்களுக்கு ஆர்வத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது . கூட இது நம்முடைய இளம் தலைமுறைக்கு நல்ல பாடமாக வும் அமையும் . இந்த கட்டுரை நமக்கு பல தகவல்களை அறியத் தருகிறது .

இந்த 2014 - நாடாளுமன்றம் மாநில கட்சிகளுகான் மன்றமாகதான் அமைய வாய்புகள் அதிகம்.

மாநில கட்சிகள் 200 + இடங்களை பிடிக்கும் ,சிறு சிறு உதிரி கட்சிகள் 20 - 25 இடங்களை பிடிக்கும் , பிஜேபி+ 150 - 170 வரை பிடிக்க வாய்புகள் உள்ளது , காங்கிரஸ்+ 115 - 135 வரைதான் கிடைக்க வாய்புகள் இருக்கிறது.

ஆக மொத்தத்தில் கூட்டணி ஆட்சிக்குதான் வாய்புகள் அதிகமாக உள்ளது மாநில கட்சிகளின் கொடிகள்தான் நாடாளுமன்றத்தில் பரபதட்கு மீகவும் அதிக வாய்புகள் உள்ளது . இப்படி அமைந்தாளும் அது நமக்கும் , நாடிட்கும் , நாட்டின் ஜனநாயகதுக்கும் நல்லதாக் இருக்கும் இறைவன் நன்கு அறிந்தவன் அவன் நாடுபவன்தான் ஆளமுடியும்.

நன்மையான் ஆட்சி அமைய நாம் இறைவனை பிராதிப்போம் ஓட்டகதையும் கட்டவேண்டும் , இறையனையும் நம்பவேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved