Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:17:47 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 67
#KOTWART0167
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 18, 2014
மோடி & ஜெ சொல்வதுபோல் இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டதா?
இந்த பக்கம் 2621 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மோடி & ஜெ சொல்வதுபோல் இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டதா? அப்படித்தான் கூறுகிறார்கள் அந்த குஜராத்காரரும், நேற்று வரை அவரது நண்பியாக இருந்த கர்நாடக அம்மணியும். நான் இப்படி சொல்லவதைப் பின்னவர் எதிர்க்கலாம். ஆனால் கோமளவல்லியின் தாய் வேதவல்லியின் மொழி என்ன? கன்னடம்தானே. அப்படியானால் இவர் தாய் மொழி - தாயின் மொழி கன்னடம் தானே.

60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டது என குஜராத் & கோ உம், 10 ஆண்டுகளில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என காவிரி தந்த செல்வியாரின் குழுவும் ஒப்பாரி வைப்பது கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளது.

அஹ்மதாபாத்தில் பிறந்த கௌதம் அதானி நிறுவனத்தின் ஹெலிகப்டேரில் ஒரு நாளைக்கு மூன்று மாநிலம் பறக்கும் வெண்தாடிக்காரர் எண்ணிப்பார்க்க வேண்டும், இன்று, வருடம் 35,000 கோடி புரட்டும் அதானியின் சொத்து 26 ஆண்டுகளுக்கு முன்பு என்ன என்று.



ஹெலிகாப்டர்கள், குட்டி விமானங்கள் BMW - கார்கள் என்று ஒரு பட்டாளத்தையே வைத்திருக்கும் அவர் அன்று ஆங்கிலம் சரளமாக வராததால் பல் வைத்திய நண்பன் மகேந்திராவை பின்னால் வைத்து சுற்றியது லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் தானே.

1996ல் ஆரம்பிக்கப்பட்ட அதானி பவர் லிமிடெட் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வைத்து தான் இவர் குஜராத்தில் மின் தட்டு இல்லை எனப் பேசுகிறார். அது இந்தியாவின் மிகப்பெரிய தெர்மல் + சோலார் சக்தி நிறுவனம். 'எனது முன்னேற்ற திட்டத்தினால் குஜாராத்தின் தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை "பல்வேறு வழிகளில்" தீர்க்கப்பட்டுள்ளது'. புரிகிறதா? நான் சொல்வதெல்லாம் உண்மை. நிலக்கரியே தெர்மலுக்கு ஆதனம். அதனால்தான் கரியைப்பேசி கரி பூசிக் கொள்கிறார்.

ஒரு சதுர மீட்டர் ஒரு ரூபாய்க்கு அவர் அதானிக்கு தொழில் பேட்டை அமைக்கக் கொடுத்ததை டாக்டர் தமிழிசை, ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்காகக் கொடுத்தது என்கிறார். அப்படி ஏதும் கிடைத்ததா? இல்லை. குஜராத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகம் என்பது அனைவர்க்கும் தெரியும்.

எல்லா மாநிலங்களும் ஒரு சதுர மீட்டர் ஒரு ரூபாய்க்கு கொடுத்தால் சீனாவில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இங்கே வந்து விடுவார்களே. பிரதமர் ஆனா பின்னும் இப்படித்தான் செய்வாரா? முடியாது. குஜராத் வேறு டெல்லி வேறு என்பதை மோடியும் மக்களும் உணர்வார்கள் ஒருவேளை அவர் பிரதமரானால்.

எண்ணில்லா சிகப்பு நாடாக்கள் இருக்கும் ஒரு நாட்டில், ஆட்சியாளர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இப்படி அசுர வேகத்தில் ஒருவர் உயர முடியுமா? அதானி குஜராத் பா.ஜா.கா வின் செல்லப்பிள்ளை. மோடி பிரதமர் ஆவார் என்று அதானி குழுமத்தின் பங்குகள் இரட்டிப்பாகிறதாம். அப்படியானால் இதுவே ஊழல் தானே.

60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டிருந்தால் இப்படி ஒரு அதானியோ அம்பானியோ உருவாகி இருக்க முடியுமா?



வாசகர்களே, நீங்கள் பிறந்த காலத்தில் உங்கள் தெருவில் எத்தனை சைக்கிள்கள் இருந்தன, இன்று எத்தனை மோட்டார் பைக்குகள், கார்கள் இருக்கின்றன? "சைக்கிளின் நாடு" என்று அன்று சீனா அழைக்கப்பட்டது. இன்று இந்தியாவை "மோட்டார் பைக்கின் நாடு" என்று அழைக்கலாம்.

ஆளுக்கொரு வீடு கட்டுவோம் என்றான் பாரதி. வீட்டுக்கொரு பைக் கிராமத்திலும் ஆளுக்கொரு பைக் நகரத்திலும் உண்டு. பொருளாதாரம் சீரழிந்ததின் வெளிப்பாடு இதுதானா?

அன்று ஸ்டேஷனில் இருந்து வீடு வரும் வரை மாட்டு வண்டி எத்தனை பள்ளத்தில் நொடியில் விழுந்து தலையை உடைக்கும். இன்று சென்னையில் இருந்து காரில் 8 மணித்தியாலத்தில் காயல் பட்டணம் வருகிறார்கள். நாடு முன்னேறவில்லையா? மக்களின் பொருளாதாரம் வளரவில்லையா?

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் பல கோடிக்கு வருமானம் காட்டுகிறார். ஒரு முன்னாள் துறைமுகத் தொழிலாளி, வேட்பாளர் நேர்காணலின்போது 1 C காரில் இருக்கிறது என்றாராம். அதாவது 1 கோடி. இவரது தந்தை எத்தனை 100 ரூபாய் தாளைப் பார்த்திருப்பார்? பொருளாதாரம் சீரழிந்ததால்தான் இவர்கள் கோடியில் புரள்கிரார்களா?

1990 களில் அண்ணிய செலவாணி வெறும் 3 பில்லியன் டாலர்களே இருந்த நிலையில், இருவார தேவை பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்ய தங்கத்தை கப்பலில் லண்டனுக்கு அனுப்பி அடகுவைத்து அவைகளை வாங்கவேண்டிய நிலையில் இருந்த இந்தியாவை இன்று 306 பில்லியன் டாலர் அண்ணிய செலவாணி இருப்புள்ள நாடாக மாற்றியதுதான் பொருளாதாரச் சீரழிவா?

அமெரிக்கா ஐரோப்பா போன்ற பணக்கார நாடுகளே வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் முடங்கிப்போக வேண்டிய நிலையில் உள்ளபோது, ஒரு காலத்தில் கடன்கார நாடு, வட்டி கூட கட்டமுடியாத நாடு என்று புறக்கணிக்க பட்ட நாடு, இன்று அந்நிய கடனை நம்பாமல், இந்த உலக பொருளாதார புயல் சூழ்நிலையிலும் நிமிர்ந்து நிற்பதுதான் பொருளாதாரச் சீரழிவா?

இந்தியாவின் 2014 ஏற்றுமதி 325 பில்லியன் டாலர் ஆகும் என்று வர்த்தக செயலர் ராஜீவ் கெர் நேற்று கூறியுள்ளார். 'இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறும்' என்று former Chairman of the US Federal Reserve Ben Bernanke யும் கூறியுள்ளார். வேறு என்ன வேண்டும்?

என் தந்தை சொல்லுவார், அவர்கள் காலத்தில் தங்கம் பவுன் 10 ரூபாய்க்கு விற்கும், வீசை அதாவது 15 கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கும், உளுந்து 100 கிலோ மூட்டை 90 ரூபாய்க்கு விற்கும் , ஆனால் அதை வாங்க மக்களிடம் பணம் இருக்காது ...அரிசி உற்பத்தி செய்யும் கிராம மக்கள் அரிசி சோறு சாப்பிட பணம் இருக்காது, கம்பு, கேழ்வரகு கஞ்சி தான் தினம் சாப்பாடு. அதுவும் மூணு வேளை சாப்பிடமுடியாது என்றும் 100 ரூபாய் நோட்டுகளை கிராமத்தில் பார்க்க முடியாது என்றும் சொல்லுவார்.



முன்பு ஏழைகள் வீட்டில் டிவி இருக்காது. குடிசையில் உள்ள சிறுவர்கள் வசதியானவர்களின் வீட்டு ஜன்னல் வழியாக தான் நிகழ்சிகளை பார்ப்பார்கள். ஆனால் இன்று குடிசையிலும் ஒரு கலர் டிவி உள்ளது. மத்தியதர மக்களின் வீடுகளில் கூட ரூமுக்கு ஒரு டிவி உள்ளது. Smart Tv களின் இறக்குமதியை சொல்லவும் வேண்டுமோ?

துபாயில் கடலை மூடி ஒரு ஊரையே உருவாக்கி அதில் உலகிலேயே மிக உயரமான கட்டடத்தையும் கட்டி உள்ளார்கள், நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகையால் பணம் வரும் என்று. ஆனால் நீங்கள் ஒரு நூறு மீட்டர் மண் திட்டை உடைத்து சேது சமுத்திரம் திட்டம் போட கூப்பாடு போட்டு 800 கோடி செலவழித்த திட்டத்தை முடக்கி வைக்கிறீர்கள். 3000 மைல் தூரத்தில் இருந்து ராமர் வந்தாராம். பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து.

850 கோடி துறைமுகம் மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் முந்தை அரசு துவக்கியது என்பதற்காக மூன்று ஆண்டாக முடக்கி வைக்க பட்டுள்ளது. அதை மீண்டும் துவக்கினால் அது மண் விலை, கூலி உயர்வு காரணமாக 1500 கோடி ஆகும். திட்டங்களை தாமதப் படுத்தும் அரசு மக்களுக்கு பிற்காலத்தில் அதை நிறைவேற்றும் போது அதன் செலவு அதிகமாகி மக்களின் பணம் விரையமாகிறது என்பதுதான் உண்மை.

5,000 ரூபாயாக இருந்த ஆசிரியர் சம்பளம் இப்போது 50,000 ஆகவேண்டும், ஆனால் அப்போது அரிசி கிலோ பத்து ரூபாய்க்கு விற்றது இப்போது 30 ரூபாய் ஆகினால் விலைவாசி விண்ணை தொட்டு விட்டது என்று நீங்கள் கூப்பாடு போடுவீர்கள். 10000 ரூபாய் சம்பளம் கனவாக இருந்தது. இப்போது ஐந்து லட்சம் சம்பளம் கூட நினைவாகி உள்ளது.

ஆபிசில் வேலை பார்க்கும் பெண்கள் இப்போதுதான் அவர்கள் ஊதியம் ஓரளவு உயர்த்து இருசக்கர வாகனத்தில் வரும் அளவு முன்னேறி உள்ளார்கள். அதே போல விவசாய கூலியாட்கள் கூலியும் உயர்ந்துள்ளது. அதனால் உணவு பொருட்களின் விளையும் கூடி உள்ளது.

வெங்காயம் உற்பத்தி குறைவால் கிலோ 100 ரூபாய் விற்றபோது மத்திய அரசின் நிர்வாக குறை எனக் கூறியவர்கள் இன்று மொத்தவிலை கிலோ 10 ரூபாய்க்கு விற்கும் போது ஏன் இது மத்திய அரசின் நிர்வாக திறன் என்று கூற வில்லை.

பாம்பாட்டியும் பிச்சைகாரனும்தான் இந்தியா என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். இன்று அது மரியாதைக்குரிய ஒரு நாடாக மாறவில்லையா? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.

2004ல் வாஜ்பாய் அரசு போகும்போது பங்கு சந்தை எண் 5500. இன்று 22,277. இந்த 10 வருட ஏற்றம் நாசமாய்ப் போன காங்கிரஸின் 10 வருட ஆட்சியில்தானே வந்தது. ஊழல், லஞ்சம் அருவருப்பான வார்த்தைகள். எது இல்லையோ அதில் தான் மோகம் வரும். வறுமையில் வாடிய நாட்டில் வளம் கைக்கு கிடைத்தால் மனிதன் பேராசையில் திருடனாகிறான்.

அரசியல்வாதி மட்டுமா திருடுகிறான்? நம்மில் எத்தனை பேர் செய்யாத செலவிற்கு ஆபிசில் கணக்கு காட்டுகிறார்கள்? ஊழல் லஞ்சத்தை நாம் மனதால் வெறுக்கவேண்டும். ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

உண்மை இல்லாமல் தாய் நாட்டைப் பழிப்பது தாயைப் பழிப்பது போன்றது. உலகமெல்லாம் இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த பொருளாதார வல்லரசுகள் என்று சொல்லும்போது இவர்கள் நாட்டிலே பஞ்சமும் பசியும் தலைவிரித் தாடுவதுபோல் பேசுவது வெளிநாட்டு ஊடகங்களில் வரும்போது முதலீட்டாளர்கள் என்ன நினைப்பார்கள்?

கிரீஸ் ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில், 'பசிக்கிறது பணமில்லை உணவில்லை வேலையில்லை' என்று நடந்த ஆர்பாட்டங்கள் போன்று இங்கு ஏதும் நடந்ததா? இல்லையே. விலை உயர்ந்திருந்தாலும் மக்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறதே. விலை குறைவாக உள்ளது மட்டும் வளர்ச்சியில்லை அதனை எல்லா மக்களும் வாங்கும் திறனை கூட்டுவதுதான் வளர்ச்சி. இது வளர்ச்சி இல்லையா?

கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொழில் தொடக்கம் என்ற மத்திய அரசின் சாதனைகளை ஒரு பொருளாதார நிபுணராக அலசிப் பாருங்கள் அதன் உண்மை உங்களுக்குத் தெரியும்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா
posted by: mackie noohuthambi (chennai) on 18 April 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34431

ஷா ஜஹான் "சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா" என்ற கவிஞர் இக்பாலின் பாடல் வரிகளை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். இதுவரை மன்மோகன் சிங் சிதம்பரம் இளங்கோவன் சொல்லாத புள்ளி விவரங்கள்.

தமிழகத்தில் மக்களவைக்கு போட்டியிட தகுதியான ஒரு காங்கிரஸ்காரர் இலைமறை காயாக இலங்கையில் முடங்கி கிடப்பதன் மர்மம் புரியவில்லை. பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பதும் அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அதிகம் பேசுவதும் இரண்டுமே ஒரு மனிதனின் பலவீனத்தை வெளிச்சம்போட்டு காட்டும். நீங்கள் எழுதியுள்ள புள்ளி விவரங்கள் ஏதோ ஒரு குறிப்பில் இருந்து காப்பி செய்யப்பட்டதாக இருந்தால் அதை அலட்சியம் செய்து விடலாம். ஆனால் அன்றாட நிகழ்வுகளுடன் நிதர்சன உண்மைகளுடன் உவமானங்களுடன் அவற்றை விலா வாரியாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள் நன்றி.

எனக்கு இப்போது அகவை 65 என்றாலும் உங்கள் அகவை அதற்கு மேல் என்றாலும், ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். எல்லா விஷயத்துக்கும் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் ஒரு முயற்சி வேண்டும். ஆனால் எந்த முயற்சியும் இல்லாமல் வளர்ச்சி அடைவது இந்த "வயது" மட்டும்தான். அதிலும் உங்கள் வயதில் இத்தனை அனுபவங்களா. இந்த நாட்டுக்கும் நமதூர் மண்ணுக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பெரிய துரோகம், நீங்கள் நமதூர் நகரமன்ற தலைவராக வந்து சேவை புரியாமல், சட்டமன்ற உறுப்பினராக வந்து தமிழகத்துக்கு சேவை செய்யாமல் இருப்பது - நாடாளுமன்ற உறுப்பினராக வந்து இந்த தாய் திரு நாட்டுக்கு சேவை செய்யாமல் இருப்பது.

ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்: தகுதியானவர்கள் ஆட்சிபொறுப்பில் அமர்வதை தட்டிக் கழித்தால் தகுதியற்றவர்கள் அந்த பதவியில் அமர்வார்கள். அதன் பிறகு நீங்கள் சஞ்சலப் படுவதில் அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை என்ற கருத்தை நமது நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதாக நான் எங்கோ படித்த ஞாபகம்.

உயிர் வருவதும் ஒருமுறைதான் அது போவதும் ஒருமுறைதான். காயல்பட்டினம் உங்கள் போன்றவர்களின் சேவைக்காக காத்திருக்கிறது, நீங்கள் வருவீர்களா? நீங்கள் செய்வீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே........
posted by: s.s.md meerasahib (TVM) on 18 April 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34432

அஸ்ஸலாமு அலைக்கும். சுருக்கமா சொன்னாலும்........ சுல்லுண்டு உறைக்கிறமாதிரி இருந்தது. நறுக்குண்டு சொன்னாலும் நச்சுண்டு இருந்துது.

நாட்டின் ஊழலை பேசுறவன் அவன் சொந்த வேளைகளில் செய்யும் ஊழலை நினைப்பதில்லை. சிந்திப்பதில்லை. மாறாக நாட்டின் ஊழல் எதிப்பு இயக்கம்களுக்கும், கட்சிகளுக்கும் துணை போகிறார்களாம்.

தலையில் அசுத்தத்தை சுமந்து கொண்டு சும்மிங் செய்யும் இறால்......... மல வாயில் அசுத்தம் தொங்கும் மீனை பார்த்து கேலிசெய்யும் கதைதான். நம்மவர்களின் நிலை. நாட்டை விமர்சிப்பவர்கள் அறிவாளிகளாக இருக்கணும். இல்லையேல் வாய் மூடி அறிவாளிகளை அங்கீகரிக்கனும். சரட்டு மேனிக்கு ஆளும் கட்சியையும், நம் சமுதாயத்துக்கு மட்டுமே...... இவர்கள் செயல் படாத்தாதால் அவர்கள் அயோக்கியர்கள் என்று முத்திரை குத்தி. நீண்ட காலமாக நமக்கு சிருகளவும் அரசியலில் துணை நிர்ப்போரை துரோகி, எதிரி, கள்ளன் என்ற பட்டம் சூட்டி........ புதிதாக வந்தவன் யாரு என்று கூட தெரியாத்த நிலையுள்ள ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம். வஸ்ஸலாம்.

கட்டுரை ஆசிரியர் மாமாக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: M. S. Shah Jahan (Colombo) on 18 April 2014
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 34433

நூஹு தம்பி அவர்களே, சட்ட சபைக்கு எனக்கு வந்த வாய்ப்பை நான் மறுத்ததை முன்பு கூறி இருந்தேன். அந்த VIP நண்பர் ஒருமுறைக் கேட்டார், 'ஷாஜஹான் பார்லிமென்ட் வந்தால் என்ன' என்று. "ஏன்"? என்றேன் நான். 'நம்ம ஆட்கள் பார்லிமெண்டில் நல்ல இங்கிலீஷ் பேசுபவர்களாகவும் வாதம் செய்பவர்களாகவும் இறுக்க வேண்டுமென மாமா விரும்புகிறார்' என்றார். நான் எனது மச்சான் Dr. சுலைமான் அவர்களைச் சிபாரிசு செய்தேன். பார்ப்போம் என்றார். Dr இடமும் அதனைச் சொன்னேன். பின்பு ஏனோ அதில் அக்கறை இல்லாது போய்விட்டது.

இலங்கையில் 1985ல் மாகாண சபைக்கு எனக்கு வந்த வாய்ப்பையும் ஒதுக்கினேன். ஐயா என் குணம் நான் அறிவேன். இந்த அரசியல் என் குணத்திற்கு ஒத்து வராது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. பயனற்ற எதிர்கட்சியினரே முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 18 April 2014
IP: 119.*.*.* China | Comment Reference Number: 34434

கட்டுரையாளர் மிகச்சரியாக எடுத்துரைத்தார்கள் நம் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி.

காங்கிரஸ் ஆட்சியில் இன்னும் வேகமாக முன்னேறி இருக்கும் இந்த வீநாய்போன எதிர்கட்சிகளின் தொல்லை இல்லாமல் இருந்திருந்தால்.

மின் உற்பத்தியில்தான் எவ்வளவு தடங்கல்கள்!!உதாரணமாக கூடங்குளம் அனல் மின் உற்பத்தி நிலையத்தை சொல்லலாம். 1985 ம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த திட்டம் இயக்கம் பெறுவதற்கு சுமார் 30 ஆண்டுகள்.2000 மெகாவாட் . தற்போது மேலும் ஒரு 2000 மெகாவாட் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. எதிர்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் இம்மாதிரியான வளர்ச்சி திட்டங்கள் தடைபெறும்.இது ஒரு எடுத்துக்காட்டுதான் .இதைப்போன்று பல்வேறு திட்டங்கள் முடங்கிப்போகும் வாய்ப்பு உள்ளன.

அளவுக்கு மீறிய ஜனநாயக உரிமைகள். வரம்புமீறிய நீதிமன்ற அதிகாரங்கள். இவையெல்லாம் முன்னேற்றப் பாதைக்கு தடைகற்கள்.எதெற்கெடுத்தாலும் ஒரு இடைக்கால தடை. உதாரணமாக மதுரவாயல் - சென்னை துறைமுகம் மேல்மட்ட விரைவு சாலை திட்டம் கிடப்பில் உள்ளதை சொல்லலாம். திட்ட தாமததினால் போதுமக்களின் வரிப்பணம் பாழ் .

சம்பள உயர்வு கேட்டு போராட்டம் செய்வோர் , வரிகளை உயர்த்தினால் அல்லது கட்டணங்களை உயர்த்தினால் அதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வர்.ஒரு அரசு கட்டணங்களை உயர்த்தாமல் எப்படி முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும்?

இன்னொன்றை பாருங்கள். (தொலைபேசி) கட்டணங்கள் உயரக்கூடாது என்கின்றனர். உலகிலேயே மிக மிக குறைந்த தொலைபேசி கட்டணங்கள் இந்தியாவில்தான். ஸ்பெக்ட்ரம் குறைந்த விலையில் விற்றதாலேயே , தொலைபேசி நிறுவனங்களுக்கு இது சாத்தியமாகிறது. ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை ஏலமிட்டு அதிகவிலைக்கு விற்று அரசுக்கு வருவாயை கூட்டினால், அதைவிளைவாக டெலிபோன் கட்டணங்கள்தான் கூடும். ஒரு அரசு பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்ய விரும்பி, குறைந்த தொகைக்கு ஸ்பெக்ட்ரம் விற்றால் அதை ஊழல் என்கின்றனர் எதிர்கட்சியினர். பின் அரசு எவ்வாறு விரைவாக முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும்?

எனவே ஒரு கட்டுப்பாடான சுதந்திரம் இருந்தால்தான் நம் நாடு இன்னும் வேகமாக முன்னேற முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: Fareed (Dubai) on 19 April 2014
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34453

Salam

When ever i read ur article i really learnt new data's.when ever my friends and families talking about price hike i explained to them think about your monthly income and compare the same (now and earlier)

Really our kayalaties missed your leadership. Request to consider your decision once again-not for politics , to serve for our home town-KPM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved