Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:02:48 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 72
#KOTWART0172
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 13, 2014
நாளை நமதே...!
இந்த பக்கம் 1922 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



அடுத்த ஐந்து ஆண்டுகட்கு பாரதத்தை ஆளப்போவது யார்...? என்ற இறுதித்தேர்வின் முடிவை இந்திய மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அத்தேர்வு அதன் இறுதி கட்டத்தை தாண்டுவதற்குள் பாரதத்தை திக்குமுக்காட வைத்துவிட்டது. இத்தேர்வில் புதிய பாடங்களிலிருந்து பல வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவ்வினாக்களுக்கு உரிய பதிலை தேர்வெழுதியோர் அளித்தார்களாவென்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

பாரதத்தை ஆண்ட இரு பெரும் அரசியல் வியாபாரிகளுக்கு (...?) மாற்றாக தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் மூன்றாம் அணி என்ற ஒன்று தேர்வு தளத்தில் பிரவேசித்திருந்தாலும்; தேர்வுக்கான பாடத்தை அந்த மூவருக்கும் நான் நடத்தபோகிறேன் என்ற ரீதியில் துடப்பத்தை கையிலெடுத்து பாரதத்தாயை வருடிவிட / பாரதத்தாயின் மடியில் படிந்துள்ள அரசியல் கரைகளை அகற்றிவிட எனக்கூறி மத்திய பாரதத்தில் கிளம்பியுள்ளது ஒரு இளைஞர் அணி.

அவ்வணியின் தோற்றம் மாற்றாருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும்; நாட்டின் நிதர்சனத்தை நிகழ்காலமாக்கும் நிகழ்வுகள் அவ்வணிக்கு ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால்; இறந்தகால ஆட்சியாளர்கள்; அவர்கள் காலத்தில் அரங்கேற்றிய அவலங்களை அகத்தில் எண்ணி வருந்தாமலில்லை. ஆகவே; நம் எதிர்கால பாரதத்தை வழிநடத்தப்போவது யார்...? பார் போற்றும் பாரதத்தை படைக்கப்போவது யார்...? என்பதற்கான தேர்வில், தரப்பட்ட வினாக்களை நிதானமாக படித்து சரியான விடையை நாம் வாக்காக பதிந்திருந்தால் நம் மனதில் ஓடும் பாரதத்தை உருவாக்குவது நமக்கு கடினமாக இருக்காது. மாறாக; விடையை தவறாக எழுதியிருந்தால் சற்று சிரமத்துடந்தான் நம் தலைமையை தேட வேண்டியது வரும்.

இந்திய இஸ்லாமியர்களை பொறுத்தவரை சுதந்திர பாரதத்தை சுவாசித்த நாளிலிருந்து இன்று வரை அவர்கள் வாக்கு வங்கிகளாகவே அரசியல் வர்க்கத்தால் அலசப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்ட கபளீகரத்தால் அச்சமேந்தி அகிம்சையை கையிலெடுத்த இஸ்லாமிய தலைவர்கள் பிற அரசியல் கட்சிகளை சார்ந்தே நிற்க வேண்டியதாயிற்று. முஸ்லீம் லீக் என்ற அரசியல் அமைப்பு அன்றிருந்தாலும் தனியாக நின்று அரசியல் களங்களை காண வலுவில்லாமல் இருந்தது. அன்று; மக்களவை, மாநிலங்களவைக்கு இஸ்லாமிய சொந்தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நம் நலனுக்காக குரல் எழுப்பி சில கோரிக்கைகளை வென்றெடுத்தாலும் அவர்கள் சாதித்தது என்னவோ பூஜ்யமாகவே தற்போது காட்சிபடுகிறது. மிகச்சிலதைத் தவிர.

சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களெல்லாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு மூன்றாந்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று இன்றுவரை அச்ச உணர்வோடு வாழும் ஒரு சமுதாயம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது இஸ்லாமிய சமுதாயமாகத்தான் இருக்கும்.



அவ்வப்போது அங்கிங்கென்று சில எழுச்சிமிக்க இஸ்லாமிய தலைவர்கள் தோன்றி சமூகத்தை ஒன்று திரட்டி பல வீரியமிக்க போராட்டங்களை நடத்தினாலும் அத்தலைவர்கள் கட்டியெழுப்ப நினைத்த கட்டிடத்தின் அடித்தளம் மிகவும் பலகீனமாக இருந்ததால் அவர்கள் சாதிக்க நினைத்தது கைகூடாமல் போனது என்றே சொல்லவேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதர் மட்டுமே காட்டிதந்த பலமிக்க இஸ்லாமிய அடித்தளத்தில் அவர்கள் அக்கட்டிடத்தை எழுப்பி நம் சமூகத்திற்கென்று ஒரு அப்பழுக்கற்ற தன்னலமில்லா உயரிய தலைமையை நிறுவி, அத்தலைமையின் கீழ் அப்போராட்டக்களங்களை கண்டிருந்தால் இன்று நாம் நிறையவே சாத்தித்து இருப்போம். மட்டுமல்லாமல்; பாரத அரசியலில் நம் சமூகத்திற்கென்று உரிய பிரதிநிதித்துவமும் கிடைத்திருக்கும். நம்மை எதிர்க்கும் ஃபாசிசமும் பயம் கண்டிருக்கும்.



பாரதத்தில் பரவியிருந்த பாசிச காவி விழுதுகளை அன்றே நாம் முறையாக அறுத்தெறிந்திருந்தால் இன்று இவ்வாறு வேரூன்றியிருக்க மாட்டார்கள். நம் சமூகத்தை அழிப்பதையே ஒற்றைக்கொள்கையாக கொண்டிருக்கும் இவர்கள் நாற்காலியில் அமர்வதற்கு எத்தகைய விலையும் கொடுக்க தயங்க மாட்டார்கள். அதன் ஒரு பகுதி தான் தற்போது நாம் கண்டுவரும் குண்டு வெடிப்புக்களும், கலவரங்களும்.

அவர்கள் ஆட்சியில் அமர ஏதுவாக கருத்துக்களை பரப்பி மக்களை மடையர்களாக்க ஊடகங்கள் வாயிலும் காசள்ளி போட்டு விட்டார்கள். பணத்தால் விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்கள் வழியாக தேர்வு முடிவு குறித்து பலகருத்துக்கள் பகிரப்பட்டாலும் அனைத்துமே கணிப்புதான் என்ற ரீதியில் பார்க்கப்பட வேண்டும். உண்மையான தேர்வின் முடிவுகள் கணிப்புக்களின் அடிப்படையில் பெறப்படுவது அன்று. மக்களின் உள்மன ஓட்டத்தின் வெளிப்பாடாக அவர்கள் அளித்த வாக்குதான் தேர்வின் முடிவை பிரதிபலிக்கும். அம்முடிவுகள் எப்படியிருந்தாலும் இஸ்லாமியர்களாகிய நாம் அச்சம்கொள்ளத் தேவையில்லை.

“...தாமாக எந்த கட்சி வந்து எம்மோடு இணைந்தாலும் நாங்கள் அணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்...” என்று வெங்காய நாயுடு அறிக்கை விடுகிறார்.

“...மூன்றாம் அணியுடன் இணைந்து ஆட்சி செய்ய நாங்கள் தயார்...” என்று சல்மான் குர்ஷித் அறிக்கை விடுகிறார்.

காங்கிரசோ, பா.ஜ.க.வோ தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. பாசிச மதவாத பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதை தடுக்க எந்த கட்சி முயற்சித்தாலும் அதை நாம் பலமாக பாராட்டுவோம். அதே சமயம்; அதே ஆக்டோபஸ் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எந்த கட்சி ஆதரவு அளித்தாலும் அக்கட்சியை நம் மண்ணில் இல்லாமல் ஆக்குவோம். அது மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி, தேசிய கட்சிகளாக இருந்தாலும் சரி.

நம் மாநிலத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ப.ஜ.க. ஆட்சி அமைக்க முட்டுக்கொடுப்பார்களானால் - எழுதி வைத்துக்கொள்ளுங்கள் - உங்கள் அரசியல் வாழ்வின் அஸ்தமனத்தை. இந்த சமுதாயம் ஒரு கட்சியை ஆதரித்தால் வெறி கொண்டு ஆதரிக்கும். எதிர்த்தால் அதே வெறி கொண்டு எதிர்க்கும். நம் சமுதாயத்தின் ஜீவமரண போராட்டத்துக்கான இத்தேர்வு களத்தில் நம் சமுதாயத்தை உதாசீனப்படுத்திவிட்டு எவன் அரசியல் சுகம் அனுபவிக்க நினைத்தாலும் அவனை உறங்க விடாமல் உளற விட்டு அரசியல் அனாதையாக்கி அலைய விட்டு அழிவை பரிசாக்குவோம்.



பாரத அரசியல் சாசனத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு உன்னத சமுதாயம் அலட்சியப்படுத்தப்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதற்கு நமது ஒற்றுமையின்மையும் ஒரு காரணமெனலாம். அன்று முதல் இன்று வரை பாரதம் தழுவிய ஒன்றுபட்ட அரசியல் புரிந்துணர்வு நம் சமுதாயத்தலைவர்களிடம் இல்லாமல் போனது துரதிஷ்டமே. உலகிற்கே அரசியலை கற்றுக்கொடுத்த நாம் நமக்குள் சமர் செய்துகொள்வது வெட்கமாக உள்ளது. இதன் விளைவு நம் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்ற உணர்வு கூட இல்லாமல் இருக்கிறோம். அரசியல் அவையின் அகம் சென்று கர்ஜித்தால்தான் நம் சமூகத்திற்கான தேவைகள் கிடைக்கப்பெறும் என்று ஒரு சாராரும், அவையின் புறம் நின்று அறப்போராட்டங்கள் மூலமும் நம் சமூகத்தின் தேவைகளை அடையலாம் என்று இன்னொரு சாராரும் குரலுயர்த்துவதை நம்மால் காணமுடிகிறது. முதல் சாராரைவிட இரண்டாம் சாராரின் குரலுக்குத்தான் அதிக அழுத்தம் இருப்பதாக இதுவரை நடந்த நிகழ்வுகள் உறுதிபடுத்துகின்றன. இவ்விரு சாராரும் நம் சமுதாயம் தன்னிறைவு பெறுவதற்கு மார்க்க வரம்புகளை மீறாமல் காரியங்களை சாதித்தால் இருவருமே பாராட்டுகுறியவர்கள்தான்.

ஆகவே; கடந்தகால கசப்புகளை மறந்து, வரும் காலங்களில் இவ்விரு சாராரும் அமர்ந்து நம் சமுதாயத்தின் பிரச்சினைகள், தேவைகள் பற்றி மனம் திறந்து பேசி தேசிய அளவிலான ஒரு புரிந்துணர்வை நம் மத்தியில் ஏற்படுத்தி நாம் சுட்டும் தலைதான் பிரதம நாற்காலியில் அமரும் என்ற ஒரு கனத்த தாக்கத்தை பாரத அரசியல் களத்தில் ஏற்படுத்தி நம் சமுதாயத்தின் வாக்கு பலத்தை நிரூபித்தால் நம் சந்ததிகள் நமக்காக பிரார்த்திக்கும். அல்லாமல்; நான்தான் என்ற மமதையில் இறுமாப்புடன் விட்டுக்கொடுக்காமல் இம்மையை மட்டுமே விரும்பி, மறுமையை மறந்து, நம் சமரை தொடர்ந்தால் நம் சமுதாயத் தலைவர்களை வரலாறும் மன்னிக்காது இறைவனும் மன்னிக்க மாட்டான்.

இதுவரை நடந்தவை ஷைத்தானிய செயல்கள் என்றெண்ணி அல்லாஹ்விற்காகவும், நம் சந்ததிகளின் நல்வாழ்விற்காகவும் அவைகளை தூரெறிந்து “நாளை நமதே” என்ற நற்சிந்தனையுடன் புதிய பாரதத்தை உருவாக்க களமிறங்குவோம்...! அதற்காக இன்றே ஆயத்தமாவோம்...!

அந்த தூய பணியை நம் தமிழ் மண்ணிலிருந்து தொடங்கலாமே.....!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...in sha allah
posted by: k.m.seyed ibrahim (chennai) on 13 May 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 34946

Ungal Aakkamum Yekkamum In sha allah Niraiverum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...திமுகவோ அதிமுகவோ பீஜெபிக்கு ஆதரவு கொடுத்தால்...
posted by: mackie noohuthambi (chennai) on 13 May 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34947

தம்பி ஷுஐப் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் நீங்கள் சூளுரைத்து இருக்கிறீர்களே , "திமுகவோ அதிமுக.வோ பீஜெபிக்கு ஆதரவளித்தால்...எழுதிவைத்துக் கொள்ளுங்கள்"...

ஒன்றும் நடந்து விடாது.

ஒரு சினிமா வசனம். வடிவேலுவின் ஆளை எதிரியின் ஆள் அடித்து காயப் படுத்தி விட்டான். வண்டியை பூட்டிக் கொண்டு வடிவேலு கிளம்பிய வேகத்தைப் பார்த்தால் - ஒரு கொலை விழும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவர் வந்த வேகத்தில், "எனது ஆளை அடித்தவன் ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்திருந்தால் இந்த கோட்டை தாண்டி வா பார்க்கலாம்" என்பார். உடனே ஒருவன் வருவான். இப்போது வடிவேலு சொல்வார் "நான் ஒத்துக் கொள்கிறேன், நீ ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்தவன்தான்".

தேர்தலில் என்ன நடந்தது. திமுக கூட்டணியில் இணைந்த இஸ்லாமிய கட்சிகள் யாரும் இந்த உறுதிமொழியை கலைஞரிடமிருந்து பெறவில்லை, கடைசியாக அவர்களை ஆதரித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்பட. அதிமுகவில் இருக்கும் அல்லது அவர்களை ஆதரிக்கும் எந்த இஸ்லாமிய கட்சிகளும் அம்மா அவர்களிடமிருந்து இந்த உறுதிமொழியை பெறவில்லை. பீஜெபியுடன் கூட்டு சேர்ந்துள்ள மதிமுக,தேமுதிக ,பாமக இதிலுள்ள எந்த முஸ்லிம்களும் அந்த தலைவர்களிடம் இந்த உறுதிமொழியை கேட்கவே முடியாது.

அடுத்து, எல்லா கட்சிகளிலும் முஸ்லிம்கள் அங்கம் வகிக்கிறார்கள், பிஜேபி உள்பட. முஸ்லிம்கள் ஒரு தனி இயக்கமாக செயல்பட்டால் நீங்கள் சொல்லும்...எழுதிவைத்துக் கொள்ளுங்கள்...சாத்தியமாகலாம்.

தெரு, முஹல்லா, சுன்னத ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்று அகீதவாரியாகவும் பிரிந்து நின்று, எனக்கு இரண்டு கண்கள்போனாலும் பரவா இல்லை - எதிர்க்கும் ஜமாஅத் ஆளுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று வெறி பிடித்து அலையும் நமக்கு நீங்கள் சொல்லும் சூளுரை சாத்தியமா? தன் மடியில் வளர்ந்த பிள்ளை மனித நேய மக்கள் கட்சி - அதன் வேட்பாளரை மயிலாடுதுறையில் ஆதரிக்க மனம் வராத தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்கள் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்தியை சொல்லியிருக்கிறார்கள், கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பதவி மோகம் பிடித்தவர்கள் மத்தியில் ஜமாஅத் வெறிகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இந்த "புண்ணிய" பூமியில் - நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் -

ஒன்றுமே புதிதாக நடந்து விடாது. உணர்ச்சி வேறு உணர்வு வேறு. நீங்கள் இஸ்லாமிய உணர்வுகளைப் பற்றி பேசுகிறீர்கள் - நான் உணர்சிகளைப் பற்றிப் பேசுகிறேன். உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையும் செய்வார்கள். உணர்வு வசப்பட்டவர்கள் சிந்தித்து செயலாற்றுவார்கள். நம்மிடையே உணர்ச்சி வசப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்கள் பின் விளைவுகளை பற்றி யோசிக்க மாட்டார்கள். உணர்வுபூர்வமாக சிந்திப்பவர்கள் குறையவே இருக்கிறார்கள்.அவர்கள் சொல்வதை யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள்

இந்த இக்கட்டான வேளையில் நாம் அல்லாஹ்விடமே கை ஏந்தி கேட்போம்.

ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VALAA YARHAMANAA..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3.
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 13 May 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34949

அன்பு சகோதரரும் என் குடும்ப உறவுகொடிகளில் ஒரு கொடியுமாகிய அரபி ஷுஅய்ப் அவர்களுடைய அடிமனது ஆதங்கத்தின் தாக்கத்தை உணர்கிறேன்!

அவரின் உயிர் மூச்சு உணர்வாகிய நம் சமுதாய ஒற்றுமையை அழகாக கோடிட்டு காட்டி இருக்கிறார். அவர் கட்டுரையை படிக்கும் இந்த நேரத்தில் தேர்தலின் கருத்து கணிப்பு என்ற ஒரு கருத்து திணிப்பு நாடகம் எல்லா இணயதளங்களிலும்,பாசிச பிரிய பத்திரிக்கைகளிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது!

இந்த நொடியே மோடி பிரதம ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக கொட்டமடித்து கும்மாளமிடுகின்றனர்!அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான், அவனுக்குத்தெரியாததல்ல!

இது உண்மை கருத்து கணிப்பொ அல்லது கருத்து திணிப்போ என்பதை ஆராய்வதை விட ஒரு உண்மையை நம் இஸ்லாமிய சமுதாயம் புரிந்துகொள்ளவேண்டும்.கடந்த சமீபகாலம் வரை நம்மை அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திட்டம் தீட்டிகொண்டிருந்தவர்கள் எட்டுத்திசைகளிலும் பல பிரிவுகளாக பிரிந்து கிடந்தார்கள்,ஆனால் இன்றோ அவர்கள் ஒன்றுசேர்ந்து விட்டார்கள்.

அந்த ஒரு நிலையைப் பார்த்தாலாவது நம் சமுதாய தலைவர்கள் நமக்குள் இருக்கும் கருத்து மாட்சிரத்தையும்,கருத்து வேறுபாடுகளையும் மறந்து நம் முஸ்லிம் சமுதாய மக்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் எதிர்கால பேராபத்து பாதுகாப்பிற்க்காகவும், ஒரே நினைவில்,ஒரே உணர்வில்,ஒரே ஒற்றுமை உறுதிப்பாட்டில் ஒட்டுமொத்தமாக ஓரணியாக நின்று நாங்கள் "சிறுபான்மை சமுதாயதின் பாதுகாப்பு கேடயம்" என்பதை பிரகடனபடுதுத்வார்களாக!

அல்லாஹ் அப்படிப்பட்ட ஒற்றுமை உணர்வை அனைத்து முஸ்லிம் அமைப்பு தலைவர்களுக்கு அனைத்து முஸ்லிம் முஹ்மீனுக்கும் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved