Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:07:45 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 86
#KOTWART0186
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 25, 2014
இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்தது ஏன்?
இந்த பக்கம் 1756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை மாகாணத்தில் குலக் கல்வி முறையை ஒழித்து, குடிமக்கள் கல்வியினைத் தந்த பெருமை முன்னாள் ஆங்கிலேயக் கவர்னர் தாமஸ் மன்றோவினைச் சாரும். ஆகவே தான் - அவருடைய ஆளுயர சிலையினை - கம்பீரமான குதிரையுடன் சென்னையில் ஐலண்டு மைதானம் அருகில் உள்ள மிலிடரி அகாடமி எதிரில் வைத்து அழகு பார்க்கின்றோம்.

1960ஆம் ஆண்டுகளில் - நான் சிறுவனாக இருந்தபோது, இளையான்குடி சுல்தான் அலாவுதீன் தெருவிலிருந்த இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கம் கட்டிடத்தில் - ஊர் பெரியவர்கள் கூட்டம் நடந்தது. பெரியவர்கள் பேசுவதினை ஜன்னல் வழியாக பார்த்த நியாபகம். இளையான்குடி ஹை ஸ்கூல் சம்பந்தமாக நடந்தது அந்த கூட்டம். அக்கூட்டத்தின் பொருள் சிறுவர்களின் கல்வி வளர்ச்சி ஆகும்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் யாரும் பட்டதாரிகள் அல்ல. இருப்பினும் இளையான்குடியின் வருங்கால சந்ததியருக்கு கல்வியினைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் பேச்சில் இருந்ததை என்னால் காண முடிந்தது.

1945ஆம் ஆண்டு இளையான்குடியில் நிறுவப்பட்ட முஸ்லிம் கல்வி ஸ்தாபனத்தின் பயனாக இன்று - நர்சரி, மிடில், உயர் நிலைப் பள்ளி, ஐ.டி.ஐ., கல்லூரி, ஆசிரியர் பயிற்சி போன்ற கல்வி நிலையங்கள் உள்ளன என்பது போற்றத்தக்கது. ஆனால் இளையான்குடி மக்கள் - கல்வி அறிவில், மற்ற முஸ்லிம் ஊர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் மிகவும் பின்தங்கி தான் உள்ளனர் என்பதனை கீழ்க்காணும் புள்ளி விவரத்துடன் கூறலாம் என நினைக்கின்றேன்.



கல்வியறிவு (LITERACY) என்றால் என்ன?

INDIA LITERACY MISSION - கல்வியறிவு (LITERACY) பற்றி சொல்லும்போது - படிக்க, எழுத, கணக்குபோட, படித்தக் கல்வியினை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த செயல் திறன் உள்ளதினைக் காட்டுவது எனக்கூறுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய ஊர்களிலும் குறைந்த கல்வியறிவு சதவீதம் உள்ளதை காணலாம். இதற்கு கீழ்க்காணும் காரணங்களை சொல்லலாம்:

(1) பள்ளிக் கல்விக் கூடங்களில் சரியான கட்டமைப்பு இல்லாதது

(2) பெண்கள், ஆண்கள் கழிப்பிட வசதியில்லாதது

(3) பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்தாலும், பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்காதது. 'ஒரு பெண்ணுக்கு கல்வி கற்றுக் கொடுத்தால் ஒரு தலைமுறைக்கு கல்வி கற்றுக் கொடுத்ததிற்கு சமம்’ என்ற பழமொழியினை மறந்தது'

(4) திறமையில்லாத ஆசிரியர்கள் போதிப்பது

(5) ஆசிரியர்கள் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இல்லாதது

(6) பெற்றோர் தொழிலைக் கவனிக்க ஆளில்லை என்று பிள்ளைகள் படிப்பினை பாதியில் நிறுத்துவது

(7) குடும்ப வறுமை

(8) படிப்பு வரவில்லை என்று பாதியில் நிறுத்துவது

(9) பள்ளிக்கூடம் வராத மாணவர்களை சந்தித்து அவர்கள் வராத காரணம் தெரிந்து அதனை நிவர்த்தி செய்ய மனம் இல்லா ஆசிரியர்கள் கொண்ட கல்விக்கூடம் அமைவது போன்றவைகள் ஆகும்

இளையான்குடியில் நாகர்கோவிலைச் சார்ந்த சௌகத் அலி என்ற தலைமை ஆசிரியர் இருந்தார். அவர் மாலை நேரங்களில் இளையான்குடி நகரில் வலம் வந்து தெருவில் படிக்காமல் சுற்றும் மாணவர்களைக் கண்டித்து வீட்டிற்கு படிக்க அனுப்புவார்.

நெய்வேலி ஜவஹர் பள்ளி தலைமை ஆசிரியர் மாலை நேரங்களில் எதாவது ஒரு வீட்டில் நுழைந்து மாணவர் யாரும் படிக்காமல் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து சினிமா பார்க்கிறார்களா என்று அறிந்து கண்டித்து படிக்க வைப்பதால் அந்தப் பள்ளியில் நூறு சதவீத வெற்றி இருப்பதினை நான் டி.ஐ.ஜி.யாக இருந்தபோது அறிவேன்.

அவர்கள் போன்ற மாணவர்களுக்காக தியாகம் செய்யும் ஆசிரியர்களைக் காண்பது அரிதாக உள்ளது. ஏனென்றால் ஆசிரியர் வேலையில் அமரும்போது லட்சங்கள் கொடுத்துதான் வேலையில் அமரும் கேவலமான நிலை இருப்பதால் - தகுதியும், தியாகமும் உள்ள ஆசிரியர்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது. கல்வி நிலையங்கள் பணம் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறுவதால் மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மத்திய அரசு படிப்பது மக்கள் உரிமை என்று 'RIGHT TO EDUCATION' என்ற சட்டம் கொண்டு வந்ததால் - வயது ஆறு முதல் வயது 14 வரை கல்வி கற்பது அவசியம் என்றும், சிறார்களை படிக்கவிடாது வேலைகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்ற சட்டம் இருப்பதால் படிப்பது இன்று காலத்தின் கட்டாயமாகும். அந்தக் கல்வியினை வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியாக அமைத்துத் தருவது முஸ்லிம் கல்வியாளர்களைச் சார்ந்தது ஆகும்.

அண்டை மாநிலம் கேரளாவில் லிட்டரசி சதவீதம் 93.91 ஆகும். அங்கு கல்வி கற்காத முஸ்லிம்களைக் காணுவது அரிது.

தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் அதிகமாக கொண்ட ஊர்களில் கலை மற்றும் அறிவியல் கல்வி நிலையங்கள் தான் அதிகம். தொழில் கல்வியினைக் கொடுக்கக் கூடிய பாலிடெக்னிக் அல்லது பொறியியல் கல்லூரிகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு மிகக் குறைவே!

கல்விக் கூடங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் - ஒரு தடவை பதவிக்கு வந்தால் அந்தப் பதவி தன் வீட்டுச் சொத்து என்று, ஏதோ ஒரு வழியினைக் கையாண்டு, சிறந்த கல்விக் கூடங்கள் அமைவதற்கு தடைக்கற்களாக இருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களில் - அரசு வேலைக்கான பரீட்சை பயிற்சி கொடுக்காததால் - அரசு வேலைகளில் நமது சமூதாயம் மிகவும் பின் தங்கி உள்ளது. அதனால் முஸ்லிம் மக்களுக்கு அரசால் வழங்கப்படும் திட்டங்கள் போய் சேராத நிலை ஏற்படுகிறது. அத்துடன் பாதுகாப்பற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

முஸ்லிம் சிறார்களை இளமையில் கற்பித்து, வீட்டிற்கும், சமூதாயத்திற்கும், நாட்டிற்கும் தகுதி உள்ள குடிமக்களாக மாற்றுவது ஒவ்வொருவருடைய கடமையாகும்!

[Administrator: கட்டுரை தலைப்பு திருத்தப்பட்டது @ 3:30 pm / 26.10.2014]

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...காயல்பட்டினம் கல்வியில் இளைத்தாலும் சளைக்கவில்லை.
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 26 October 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37887

டாக்டர் முஹம்மது அலி ஐ.பீ.எஸ். அவர்களின் கட்டுரை பாராட்டுக்குரியது மட்டுமல்ல ஆசிரியர்கள் மாணவர்களை சிந்திக்கவும் வைக்கிறது.

காயல்பட்டினத்தின் கல்வி விழுக்காடு 88% இருப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது இளையான்குடி மக்கள் மலேசியாவின் மடியில் தலைவைத்து படுப்பவர்கள். வெளிநாட்டு வெள்ளி அவர்களை தாலாட்டும் தொட்டில். அப்படி இருந்தும் அவர்கள் நம்மைவிட பின்தங்கி இருக்கிறார்கள். உலக கல்வியிலும் சரி மார்க்க கல்வியிலும் சரி காயல்பட்டினம் இளைத்திருக்கலாமே தவிர சளைத்திருக்கவில்லை என்ற புள்ளியியல் நமக்கு மன நிறைவை தருகிறது.

சமீப காலங்களாக உலகின் பல் பாகங்களில் செயல்படும் காயல் நல மன்றங்கள் நமது மக்களின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் அக்கறை எடுத்து வருகிறது. வேலை வாய்ப்புக்கள் நமது நாட்டிலேயே கொட்டிக் கிடக்கின்றன.

இணைய தளங்களின் அசாத்திய வளர்ச்சி, அதைக் கையாளும் நமது மக்களின் ஆர்வம் நம்மை அதிர வைக்கிறது. தலைமுறை இடைவெளி நம்மை தலை குனிய வைக்கின்றது...அந்த காலத்தில் ......என்று நாம் நீட்டி முழங்க பேச ஆரம்பிக்கும்போதே இளையதலைமுறைக்கு போரடிக்கிறது. அதனால்தானோ என்னவோ வயதானவர்களும் இப்படி மடிக் கணினிக்கு முன்னால் உட்கார்ந்து ஏதாவது செய்து உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று ஒப்புக்கு தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள ஆசைப் படுகிறார்கள்.

முஹம்மது அலி சாஹிப் அவர்களின் கட்டுரையில் நாம் ஏன் கல்வியில் பின் தங்கி இருக்கிறோம் என்ற காரணங்களை உணர்வுப்பூர்வமாக - அனுபவத்தில் கண்ட உண்மை பூர்வமாக விளக்கி இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் - மாணவர்கள் இந்த விஷயத்தை மனம் விட்டு பேச ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு நமதூரில் நடத்தப் படவேண்டும். பெற்றோர் ஆசிரியர் மன்றம் ஒன்று இங்கு உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக சகோதாரர் S .A .MUSTHAFA B .E அவர்கள் L .K .மேல்நிலை பள்ளியில் இருப்பதாக அறிகிறேன். அவர்கள் இந்த கட்டுரையை நன்கு வாசித்து இதன் நிதர்சன உண்மைகளை ஆசிரியர் மாணவர்கள் அறிய செய்ய வேண்டும்.

அதன் மூலம் நமது மாணவ மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தின் விழுக்காட்டை100% விகிதத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல் - ஆலயம் பதினாயிரம் அமைத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாரதியார் பாடுவார். சீனா தேசம் சென்றாயினும் கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் சொல்வார்கள். அது சிங்கத்தின் வாயில் இருந்தாலும் சரியே என்று வேறு சிலர் அதற்கு விளக்கம் தருவார்கள். எது எப்படி ஆயினும் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போது பெற்றோர்களும் மாணவர்களும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள் எனபது மறுக்க முடியாத உண்மை.

நமதூரில் பெருகிவரும் பள்ளிக் கூடங்களும் கல்லூரிகளும் அவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் நமதூருக்கு ஒரு புதிய பரிணாமத்தை தந்து கொண்டிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.

EDUCATION IS THE ONLY SOLUTION AND SALVATION FOR THE MANKIND.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: V D SADAK THAMBY (China) on 26 October 2014
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 37889

காயல் பட்டனத்தில் ஒரு ஆண்கள் கலைகல்லூரி கூட அமையப்பெறாது நம் துரதிஷ்ட்டமே . நம் பகுதியில் ஒரு ஆண்கள் கலைகல்லூரி அமைந்திருக்குமானால் நம் ஊர் கல்வி விகிதாசாரம் இன்னும் அதிகரித்திருக்கும் .. நம் ஊரில் பள்ளிகளில் இருக்கும் போட்டி கல்லூரி அமைப்பதில் ஏற்ப்படவில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved