Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:02:43 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 88
#KOTWEM88
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 26, 2013
காயலும்... கால்பந்தாட்ட ரசனையும்...!

இந்த பக்கம் 4105 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மதியம் பிஸ்மி சொல்லி சாப்பிடும்போதே ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, அஸர் தொழுகைக்குப் பின் மேட்ச் பார்க்க போகணும்ங்கிற ஆவல் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் உதிக்கும். அலமாரியைத் திறக்கும் போதெல்லாம் அயன் பண்ணி அடுக்கி வைக்கப்பட்ட சட்டைகளுக்கு அடியில் லாமினேஷன் செய்து வைத்திருக்கும் பாஸைத் தொட்டுப் பார்த்து மகிழ்வதுண்டு. கத்திரி வெயிலின் தாக்கம் சற்றே தணியும் அந்த மாலைப் பொழுதினில், நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கண்டு மகிழும் ஒரு மே மாத கொண்டாட்டம் அல்லது கோடைகாலத் திருவிழா என்பது நமதூரில் நாற்பத்தெட்டு ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றேதான். வெளிநாடுகளில் உள்ள காயலர்கள் பலர் இப்போட்டியைக் கண்டுகளிப்பதற்காகவே தங்களது விடுமுறையை மே மாதத்தில் தெரிவு செய்து ஊருக்கு வருகின்றனர்.





வயது வரம்புகளைத் தாண்டி அறுபது வயதுள்ள வயோதிகர் முதல் ஐந்து வயது சிறார்கள் வரை ஆர்ப்பரித்து அகமகிழும் ஒரேயொரு விளையாட்டு இக்கால்பந்தாட்டம்தான். போட்டி முடிந்து செய்கு ஹுஸைன் பள்ளியில் மஃரிப் தொழுது விட்டு திரும்பும் வேளையில், வீதிகளில் தென்படும் சில பெரிசுகள், “தம்பி இன்னைக்கு யார் விளையாடினாங்க? எத்தனை கோல் போட்டாங்க?” என ஆவலோடு கேட்டு, தான் வரமுடியாமல் போன காரணத்தைக் கூறி ஆதங்கப்படுக் கொள்வது வழக்கம். கடற்கரையில் கூடி பேசும் நண்பர்கள்கூட “ச்சே...! அநியாயமா அந்த கோலை விட்டுட்டானே? நல்ல டீம்ப்பா! இப்படி டை பிரேக்கரில் வீணா வெளியே அடிச்சுட்டானே...? ரெஃப்ரி தேவையில்லாமெ பெனால்ட்டி கிக் கொடுத்துட்டாரு! சூப்பர் கீப்பர்ப்பா அவன் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு தோற்றுப் போயிருப்பாங்க” இப்படி கால்பந்தாட்டத்தின் சுவரஸ்யமான நிகழ்வுகளைப் பற்றியே தான் பேசிக் கொள்வார்கள்.

நமது சுற்று வட்டார மாவட்டங்களில் கூட இதுபோன்று தொடர்ந்து அகில இந்திய அளவில் கால்பந்தாட்டப் போட்டி நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அரை நூற்றாண்டுகளுக்கு முன் விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள சில பெரியவர்கள் துவங்கி வைத்த போட்டி இன்றளவும் அதன் வீரியம் குறையாமல் மூன்று தலைமுறையினரை ஒன்றுகூடச் செய்து வருவது வியப்பிற்குரியதே! நமதூரைப் பொருத்த வரை, காலங்காலமாக கால்பந்தாட்டத்தின் மீதுள்ள ஆர்வம் கிஞ்சிற்றும் குறைந்து விடவில்லை என்பதை, கிரிக்கெட் விளையாட்டின் மோகமும், வெறியும் அதில் அநேக ஆங்கில சொற்கள் கலந்திருப்பதால் அதை அறிந்து கொண்டவனே புத்திசாலி எனும் மனோபாவமும் சிறியவர், பெரியவர் மனதில் ஆட்கொண்டு ஆட்டிப்படைத்து வரும் இக்காலத்தில் கூட இக்கால்பந்து விளையாட்டைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லி விடலாம். காலரியில் அமர்ந்து கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்யும் அசத்தலான நிகழ்வுகளைச் சொல்வதற்கு முன் இப்போட்டியை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தினர் எப்படி நடத்தி வருகின்றனர் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.







1958ஆம் ஆண்டு துவக்கம் முதல் அதைத் தொடர்ந்து இன்றும் கூட இந்தியாவின் தலைசிறந்த அணிகள் இந்த மைதானத்தில் விளையாடியிருக்கின்றன. வட இந்தியாவிலிருந்து கோஷியார்பூர், பஞ்சாப் போலீஸ், ஜலந்தர், உத்திரபிரதேசம் மிலிட்டரி டீமான மீரட், மஹாரஷ்ட்ரா நாசிக், அகமதாபாத், மற்றும் தென்னிந்தியாவின் முன்னணியிலுள்ள கேரளாவின் டைட்டானியம், கெல்ட்ரான், திருவனந்தபுரம், கொச்சின், யுனிவர்ஸல் காலிகட், ரோடியர் மில்ஸ் பாண்டிசேரி, பெங்களூருவிலிருந்து MEG, IGM, EME, BEML, கோலார் மேலும் கோவா, ஹைதராபாத், விசாகப்பட்டினம் அட்லி சூரிபாபு மெமோரியல் க்ளப், மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மெஜுராகோட்ஸ், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, தூத்துக்குடி போர்ட்டரஸ், கோவை டெக்ஸ்டூல்ஸ், லெட்சுமி மில்ஸ், நேசமணி, சென்னை கஸ்டம்ஸ், தமிழ்நாடு போலீஸ், என பல அணிகளை அடுக்கிக் கொண்டே போலாம்.

பள்ளிக்கூட விடுமுறை வரும் மே மாதத்தில் துவங்க இருக்கும் போட்டிக்கான செயல்பாடுகள் பிப்ரவரி மாதத்திலிருந்தே ஆரம்பித்து விடும். அகில இந்திய அளவிலான அணிகளைத் தொடர்பு கொண்டு போட்டியில் கலந்து கொள்ள அவர்கள்தம் விருப்பத்தைக் கேட்டறிந்து, மாவட்ட கால்பந்து கழகத்திற்கு மனு அளித்து, அது மாநில கால்பந்து கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் முறையான அனுமதி கிடைத்தவுடன் அதன் படிவத்தையும், இரயில்வே கன்செஷன் படிவத்தையும், போட்டிக்கான விதிமுறைகளையும், கலந்துகொள்ள விருப்பமுள்ள அணிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதன் பின்னர் போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நான்கு பிரிவுகளாக குழு அமைக்கப்பட்டு, போட்டிகளை நடத்துகின்றனர். அதில் கால் இறுதிக்குத் ததியான அணிகள், அரையிறுதிக்குத் தகுதியான அணிகள் என மோதி, அதில் வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்குத் தயாராகுகின்றனர். அணிகளுக்கான போக்குவரத்து செலவு, தங்குமிட வசதிகள், உணவு மற்றும் செலவுக்கான படிகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.











சரித்திர சிறப்பு வாய்ந்த இந்த ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் பல அரசியல் தலைவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக எம்,ஜி.ஆர். ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, மற்றும் நடிகர் முத்துராமன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இறுதியில் வென்ற அணிக்கான சுழற்கோப்பை சுமார் மூன்று கிலோ எடையுள்ள பளபளக்கும் வெள்ளிக்கோப்பையை 1974-ஆம் ஆண்டு PSK பல்லாக்கு லெப்பை கம்பெனியினராலும், இரண்டாம் பரிசான ஒன்றரை கிலோ எடையிலான வெள்ளிக்கோப்பையை 1986-ஆம் ஆண்டு LKS ஜுவல்லர்ஸ் ஸ்தாபனத்தினராலும் வழங்கப்பட்டது. அரையிறுதிப் போட்டி நடக்கும்போதே அந்த வெள்ளிக் கோப்பைகளை பொலிவுறச் செய்து ரிப்பனால் அலங்கரித்து புது மணப் பெண்ணைப்போன்று அரங்கத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்படுவது வழக்கம்.

போட்டி துவங்கும் முன் ஒலிபெருக்கியில் ஒரு வகை இசை நம் காதுகளில் வந்தடையும். டட டடடைன்...டண்டைன்...டடடைன். இது பிரபல ஆங்கில இசையமைப்பாளரான பாபி டாரின் என்பவரது கம் செப்டம்பர் எனும் ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ரிக்கர்ட் ப்ளேயரில் பதிவு செய்யப்பட்டு இருந்ததை இப்போது மெமரி கார்டுகள் மற்றும் சிடிகளில் பதியப்பட்டு போட்டியின் போது சுமார் நாற்பது வருடங்களாக இசைக்கப்பட்டு வருகின்றன. அதைக் கேட்டதும் மைதானத்தை நோக்கி பல்வேறு திசைகளிலிருந்தும் பார்வையாளர்கள் சாரை சாரையாக அரங்கத்திற்குள் வருவதைக் காணலாம்.







“இன்றைய போட்டிக்கான கட்டண விபரம்... விறுவிறுப்பான ஆட்டத்தின் நடுவில் என அறிவிப்பாளர்கள் சொல்லும் விதமே தனி! மைதானத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் மாடிகளில் பெண்டிரும், பிள்ளைகளும் குழுமியிருப்பதுமுண்டு. நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது கிழக்குத்திசையிலிருக்கும் பனை மரத்தில் ஏறி அமர்ந்து மகாலிங்க நாடார் என்பவர் இரண்டு மணிநேரம் சளைக்காமல் போட்டியை பார்த்து ரசிப்பார் அதைப் பார்த்து ஒரு கூட்டமே ரசிக்கும். அந்தக் காலத்தில் சிப்ஸ், கிட்கட், டயரி மில்க், லேஸ் போன்றவைகள் இல்லை! மைதானத்தில் படு ஜோராக விற்பனையாகும் தின்பண்டங்கள் சவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய், சுண்டல், வேர்க்கடலை மட்டுமே. இன்றளவும் அது விற்பனையாகி வருவது காயலின் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்றாகவே கருதுகின்றேன். என் நீண்ட நாள் ஆசையை சவ்வு மிட்டாய் வாங்கி தீர்த்துக் கொண்டேன்.



ஆட்ட ரசிகர்களுக்கென தனி வழக்கங்கள் உள்ளன. முதல் நாள் எந்த இடத்திலிருந்தார்களோ அதே இடம்தான் இறுதி ஆட்டம் வரை. மேல்புறம் கீழ் புறம், கீழ்த்தட்டு, நடு மற்றும் மேல் தட்டு என தமக்கென தனி இடங்களைத் தேர்வு செய்துகொள்வர். ஒரு வேளை அந்த இடம் பறிபோய் விட்டால் கூட அதை கூச்சப்படாமல் கேட்டு வாங்கி அமர்ந்து கொள்வார்கள். இன்னும் சில பெரியவர்கள் காலரிக்கு பாஸ் வாங்கியிருந்த போதிலும் வட புறத்திலுள்ள மண் தரையில் பாய் அல்லது ஜமுக்காள விரிப்புக்களில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த தேநீர் மற்றும் தின்பண்டங்களைப் பகிர்ந்து கொண்டு ஆட்டத்தை கண்டுகளிப்பதை இன்றும் காணலாம்.

இரு அணிகளுக்கான போட்டியில் காலரியிலிருக்கும் ஒரு சாரார் ஒரு அணிக்கும் இன்னொரு சாரார் மறு அணிக்கும் ஆதரவு கோஷங்கள் எழுப்புவது வாடிக்கை. தமது அணிக்கெதிராக மஞ்சள், சிவப்பு அட்டை அல்லது ஃபவுல், ஃப்ரீ கிக் கொடுத்து விட்டால் ரெஃப்ரி அவ்வளவுதான். ரசிகர்கள் வார்த்தைகளால் அவரைக் கொட்டி திட்டித் தீர்த்து விடுவார்கள். ஒரே கோரஸாக ரெஃப்ரி ஒன் சைட், ரெஃப்ரி டவுன்.. டவுன்... என கோஷமிடுவது விளையாட்டு வீரர்களை இன்னும் உசுப்பேற்றும். வீரர்களுக்கிடையில் மோதல் ஏற்படும் போது விசில் ஊதிக் கொண்டு ஓடிச் செல்லும் ரெஃப்ரி, ஆவேசத்தோடு எழுந்து அலறும் ரசிகர்கள், பார்க்க படுசுவாரஸ்யமாகவே இருக்கும். இன்னும் சில வேளைகளில் மோசமாக விளையாடும் அணிகளின் பயிற்சியாளர் அருகில் சென்று அவரது அணியின் பெயரைச் சொல்லி இன்னைக்கு 06:40 பஸ் இருக்கு! நேரா ஊர் போய் சேர்ந்திடலாம் என வெறுபேற்றுவதும், அணியின் வீரர்களை ஐஸ்காரன், திருவல் குத்தி தலையான், பறக்கும் ஜெட்டு, என இப்படி பல பட்டப் பெயர்கள் சூட்டி அழைப்பதும், ஆட்டம் வலுவிழக்கும்போது, “என்னப்பா இவனுங்க கபடி விளையாடுறானுங்க?” என கலாய்ப்பதும், டை பிரேக் வந்தால் பந்தை அடிக்கும் முன் “உள்ளே, வெளியே” என சிறுவர்கள் ஓலமிடுவதும் ரசிக்கக் கூடியதே!

ஆட்டம் முடிந்ததும் தோற்றவர்களாக இருந்தாலும் சரி! வென்றவர்களாக இருந்தாலும் சரி! கிரவுண்டுக்குள் சப்தமிட்டுக்கொண்டு ஓடி அணி வீரர்களுடன் கை குலுக்குவதும், அவர்களைத் தொட்டுப் பார்த்து ரசிப்பதும் வேடிக்கையே! முன்பெல்லாம் பால் பாய்ஸ் இசைக்கு ஏற்ப வரிசையாக மைதானத்தில் இறங்க, அவர்களைத் தொடர்ந்து ஆட்ட வீரர்கள் களத்தில் இறங்கி பார்வையாளர்களை நோக்கி சல்யூட் அடிப்பது, கை அசைப்பது என களைகட்டும். போட்டி துவங்கும் முன் அணி வீரர்கள் வெவ்வேறு நிறத்திலான உடைகளில் உடற்பயிற்ச்சி செய்வதை உற்று நோக்கும் கூட்டம் அவர்களின் சாகசத்தைப் பார்த்து இவர்கள் வெல்வார்கள் இவர்கள் தோற்பார்கள் என மிகத் துல்லியமாக வெற்றி தோல்வியை நிச்சயிப்பார்கள்.



இடைவேளையின்போது சிட்டெனப் பறக்கும் சிறார்கள் தமது இரண்டு கைகளிலும் தின்பண்டங்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். காரணம் ஆட்டம் நடக்கும்போது வாங்கச் சென்றால் இடம் போய் விடக்கூடும் எனும் அச்சம் அவர்களுக்கு உண்டு. கால் இறுதி, அரையிறுதி, மற்றும் இறுதிப் போட்டிகளில் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம். கடைசி நாளில் கொடி மற்றும் பேண்டு வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க கிரவுண்டைச் சுற்றி வருவது கண்கொள்ளாக் காட்சி எனலாம்.

ரசிகர்களின் தரப்பிலிருந்து ஆறுமுகநேரி உருமி மேலக்காரரை அழைத்து வந்து அவருக்கு பூமாலை போட்டு உலா வரச்செய்து கொட்டடித்தும் தமது அணி கோல் போட்டுவிட்டால் வானவெடிகள் விட்டும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் தீவிர ரசிகர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். ஃபைனல் அன்று இரவு பரிசு வழங்கிய பின்னர், வான வேடிக்கைகள் விண்ணை அலங்கரிக்கும். மொத்தத்தில் கால்பந்தாட்டம் என்பது காயலர்களின் இரத்த நாளங்களில் ஊறிப்போன ஒன்று என்றால் மிகையாகாது.



இன்னும் பல மறக்க முடியாத நிகழ்வுகளை எழுதிக் கொண்டு, போனால் பல பாகங்கள் எழுத வேண்டி வரும். எனவே என் மனதில் இவ்விளையாட்டுக்கான மதிப்பும், மரியாதையும், ஆர்வமும், ஆவலும், வீரியமும், வேகமும் சற்றும் குறையாமல் இருப்பதால்தான் என் எண்ணங்களின் வெளிப்பாட்டை இக்கட்டுரை மூலம் காலத்தின் பார்வைக்கு இதோ அர்ப்பணித்து விட்டேன்.

என்னைப் போன்று ஆர்வமுள்ள அனைவரும் தங்கள் அனுபவங்களை இக்கட்டுரையின் கருத்துப் பகுதியில் பதிவு செய்தால் காயலின் கால்பந்தாட்ட ரசனை பற்றிய ஏராளமான விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே இந்தக் கட்டுரைக் கால்பந்தாட்டத்திற்கு இப்போதைக்கு லாங் விசில் ஊதி விடை பெறுகின்றேன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. U S E
posted by: mbsshaik (bangkok) on 26 May 2013
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 27586

Assalamualikkum

brother great article, you kept our those days unforgetable nothing to say, u did well when i read the article i am like 5 year boy with my papa hand ,keep it up.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கால்பந்தாட்ட ரசிகபெருமக்களே......
posted by: AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) on 26 May 2013
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27588

காயல்பட்டினம் என்றும் கால்பந்துபட்டினம் தான்.

மிகவும் சுவாரசியமான கட்டுரை..... கட்டுரையாளருக்கு நன்றி.....

போட்டி துவங்கும் முன் MS காக்காவின்.... “கால்பந்தாட்ட ரசிகபெருமக்களே......” என்று துவங்கி “..... இன்றைய விறுவிறுப்பான, சுறுசுறுப்பான ஆட்டத்தினை ஆரம்பம் முதல் கண்டு கழிக்க உங்களை திடல் நோக்கி அன்போடு அழைக்கின்றது ஐக்கிய விளையாட்டுச் சங்கம்” என்று நிறைவு பெரும் அவருடைய அறிவிப்பு மிகவும் சுவாரசியமாக இருக்கும்....

ஏதோ பதிவு செய்து போடுவது போன்று ஒருவார்த்தை கூட மாறாமல், இறுதி போட்டிவரை அதே அறிவிப்பு தொடர்வது அவர்களின் தனிச்சிறப்பு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) on 26 May 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27589

அஸ்ஸலாமு அலைக்கும்

எம் அருமை நண்பர் .ஜனாப் .M.N.L.முஹம்மது ரபீக் என்கிற.ஹிஜாஸ் மைந்தன் அவர்களின் .....இந்த கட்டுரை பொக்கிசமானது தான் .....நமது ஊருக்கு ஒரு பெருமை சேர்ப்பது என்றால் அதில் நமது >> U.S.C. << யும் ஓன்று தான் .... அவர்கள் தொடர்ந்து இக்காலத்திலும் தங்களின் சிரம்பங்களையும் பாராது ......இப்போட்டிகளை நடத்தி வருவதே தனி ஒரு சிறப்பு தான் ............

எங்களை மறக்கவே முடியாத அளவுக்கு பழைய நினைவுகளுடன் ....தம் பக்கம் அழைத்து சென்று விட்டார் ....எம் நண்பர்.M.N.L.M.Z. அவர்கள்.......பாராட்டுக்கள் .............

விளையாட்டு போட்டி ஆரபிக்கும் முன் ஒரு மியுசிக்கு போடுவார்கள் ......பாருங்கள்.அவ்வளவு அருமையாக இருக்கும்......இந்த மியுசிக்கை கேட்டதும் .....நாங்கள் எங்கள் தெருவில் இருந்து ரொம்பவும் வேக ,,வேகமாக நடந்து போவோம் ......

இந்த கால்பந்து போட்டியை காணவே நாங்கள் எங்களின் '' சபரை '' ஒரிசாவில் / கல்கத்தாவில் ......இருந்தும் அமைத்து ஒரு குருப்பாகவே நம் ஊருக்கு வருவோம் ......பந்து விளையாட்டின் மீது அப்படி ஒரு பிடிப்பு .........கேட் பாஸ் ....எடுத்து விட்டால் .....மற்றற்ற மகிழ்ச்சி வந்து விடும் எங்களுக்கு .............

பொதுவாக இந்த கட்டுரை எம்மை போன்ற ......காயல் புட்பால் ரசிகர்களுக்கு ஒரு வர பிரசாதம் தான்.........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam ) on 26 May 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27592

காயலின் கால்பந்து விளையாட்டின் நினைவலைகளை கட்டுரை ஆசிரியர் மிக சுவையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அறுபதுகளில் பிறந்த என் போன்ற பலருக்கும் இந்த கால்பந்து விளையாட்டு குறித்த சுவையான அனுபவம் இருந்தே தீரும். ஏனெனில் இது ஊர் கொண்டாடும் திருவிழா. இன்றைக்கு வேண்டுமெனில் இளைஞ்சர்களின், வாலிபர்களின் கவனம் கிரிகெட்டை நோக்கி திரும்பி இருக்கலாம். ஆனால் இந்த ஊர் மக்களின் நெஞ்சகங்களில் எப்போதும் வற்றாத ஜீவ ஊற்று இந்த கால்பந்து விளையாட்டு .

இருபத்து ஐந்து பைசா டிக்கெட்டில் தரை டிக்கெட் வாங்கி பார்த்த எனது மிகச் சிறு வயது அனுபவத்தோடு இது தொடங்குகிறது. பதினைந்து ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டும் வாங்கியிருக்கிறேன். நடிகர் முத்துராமன் ஒரு கால்பந்து ஆர்வலர் .அவர் ஒருமுறை இந்த விளையாட்டு மைதானத்துக்கு வெள்ளை பாண்ட் ,வெள்ளை சட்டையுடன் வந்தார் .அவருக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர் .

மற்றபடி எம் ஜி ஆர் ,கருணாநிதி ,ராஜீவ்காந்தி போன்றோர் அவர்களின் அரசியல் தேவை கருதி இங்கு பொதுக்கூட்டம் பேச வந்தவர்கள் .

அப்போதெல்லாம் இடைவேளையின்போது அடுத்தநாள் என்ன ஆட்டம் என்பதை ஒரு ப்ளாக் போர்டில் எழுதி அதை U S C மைதானத்தில் வேலை பார்க்கும் ஒரு கருப்பு கண்ணாடி அணிந்த வாட்ச்மேன் மைதானத்தை சுற்றி கொண்டுவருவார் .நாங்கள் அதில் பொடி கற்களை விட்டெறிவோம் .

அப்போதெல்லாம் மர்காசியஸ் நாசேரத் அணியும் பட்டணம் லெவன்ஸ் வீரபாண்டியன் பட்டணம் அணியும் மோதினால் அன்று ஆட்டம் தூள்பறக்கும். இந்தியா --பாகிஸ்தான் அணிகள் மோதிய கதைதான். கைகலப்பு நிச்சயம் உண்டு. சிறுவர்களாகிய எங்களுக்கும் அதுதானே வேண்டும்.

பாலகிருஷ்ணன் என்பவர்தான் நீண்ட நாட்களாக நடுவராக வேலை பார்த்தார். அணிகள் தப்பாட்டம் ஆடிய உடன் அவர் விசில் ஊதுவதும்.. எதற்காக தான் விசில் ஊதினேன் என்பதை அவர் இருக்கும் இடத்திலிருந்தே சைகையால் காண்பிப்பதும் பெரும் சுவாரஸ்யமாக இருக்கும்.

ஸ்கோர் போர்டை அப்போது பெவிலியனில் மேலே ஒரு பக்கமாக மாட்டி வைத்திருப்பார்கள். என்னதான் தனது அபிமான அணிகள் கண்ணுக்கு எதிரே கோல் போட்டாலும் ..ஸ்கோர் போர்டில் எண்களை மாற்றும் வரை ரசிகர்கள் நம்பமாட்டார்கள் .

"ஏய்.....நம்பரை மாத்துடா .....!என ரசிகர்கள் கூச்சலிடுவார்கள்.

இன்னும் ஏரளாமான நினைவுகள் உண்டு .அதை மற்றவர்களும் இங்கு கொஞ்சம் பகிர்ந்து கொள்ளட்டும் .

பாபி டாரின் இசை பற்றி எழுதியுள்ளார் ."கம் செப்டம்பர் "என்ற ஆங்கில படத்தின் தமிழ் வடிவம்தான் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற "அன்பே வா"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: nizam (INDIA) on 27 May 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27593

சில நினைவுகளை அசை போடவிரும்புகிறேன்.

இந்த விளையாட்டு இவ்வளவு ரசனை ஆனதற்கு ஒரு காரணம் காயல் மௌலான காக்காவின் அனவுன்ச்மென்ட். வாண்டேர்லைடே கொழும்பு சோப்பு அப்போது பிரபலம் அதற்குதான் பேட்டிங் கட்டுவார்கள். மீரட் வீரர்களை உச்சிகொண்டை என்று பட்டம் வைத்தார்கள்.

போர்ட்ஆப் தூத்துக்குடி அணியில் மீசை வைத்தவர் சரியான டிபென்ஸ் பிளையர். அவரே போல குமரன் சைக்கில் கடையில் ஒருத்தர் வேலை பார்த்தார். பிச்சை என்ற பிளையர் சரியான கில்லாடி பிளையர். ஒருசமயம் ரசிகர்களுடன் தகறாரு செய்தனர். ரோடியர் மில் பாண்டிச்சேரி அணியில் வழுக்கை விழுந்த பிளையர் காலில் பந்து கிடைத்தால் கோல்தான்.

எம் ஈ கீ பெங்களூர் அணியில் ராஜபுத்திரன் சரியான பிளையர். கோவை லக்ஸ்மி மில் அணியினர் நல்ல திட்டமிட்டு விளையாடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேல் காயமடைந்த வீரர்களுக்கு சிஹிச்சை செய்யும் பால் பாண்டி அவர்கள் இன்றும் நான் சரியான கால்பந்து ரசிகர்தான். இங்கிலிஸ் பிர்மியர் லீக் தினசரி 1மனி நேரம் பார்த்தால்தான் நிம்மதி. அந்த விளையாட்டை பார்த்து விட்டு இந்திய கால்பந்து ரசிக்கவில்லை உண்மையைத்தான் சொல்கிறேன். ஒரு சிறிய ஊரில் கால் நூற்றாண்டுக்கு மேல் இந்த விளையாட்டை சிறப்பாக நடத்துவதற்கு யு எஸ் சி நிர்வாகத்தை மனமார பாராட்டுகிறேன்.

கடைசியாக கால்பந்தை பற்றி சில வரிகள், இதை போல அற்புதமான சிறப்பான விளையாட்டு வேறு கிடையாது. சோர்வுற்ற நேரங்களில் இந்த விளையாட்டாய் ரசித்து பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. சூதாட்டம் முறைகேடுகள் எதிலும் சிக்காமல் பரிசுத்தமான விளையாட்டு கால்பந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: salai s nawas (singapore) on 27 May 2013
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 27595

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே நின்றது மைந்தனே மைந்தனே ஹிஜாஸ் மைந்தனே !!!!!!!! பனை மரத்திலிருந்து பார்க்கும் இராமலிங்க நாடார் வரை எங்கள் நினைவுகளை மீட்டு கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.

நானும் சில்வர் ஜுபிலி ஆண்டு முதன் மூன்று வருடம் ( ball boys) பால் பாய்ஸ் ஆகா இருந்தேன், பால் பாயசம் பால் பாயசம் என்று கேலரியில் உள்ளவர்கள் எங்களை கண்டவுடன் கூப்பாடு போடுவார்கள்.

காலை எழுந்ததும் சூயஸ் கார்னர் ஹோட்டலுக்கு சென்று டீ குடித்து விட்டு, மைதா மாவு போட்ட டப்பாவுக்குள் சுடுநீர் விட்டு கலக்கி நேரா போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் போய் நின்று KTC இக்பால் அப்பாவிடம், அப்பா 2ஆம் நம்பர் புன்னக்காயல் போச்சா, 4அம் நம்பர் குரங்கணி போச்சா, நாசரேத் டப்பா போய்ட்டானா ன்னு கேள்வி பலே கேள்வி கேட்டு அவரும் சளைக்காமல் பத்தி சொல்லுவார். அந்த அந்த பஸ் வந்தவுடன் ஓடி போய் USC இன்றைய போட்டி போஸ்டர் ஓட்டும் சுகமே தனிதான். எழுதி கொண்டே போகலாம் ........

மறக்க முடியாத குழு தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட் ...பிச்சை தொம்மை பால்சன் மீசை மற்றும் அம்பயர் செல்வா சார் பெயர் இன்னும் நினைவில் இருக்குது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...பந்தாட்டங்கள் சூதாட்டங்கள்
posted by: mackie noohuthambi (colombo) on 27 May 2013
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27598

பந்தாட்டங்கள் சூதாடங்களாக விசுவரூபம் எடுத்துக்கொண்டு விளையாட்டையும் விளையாட்டு வீரர்களையும் மக்கள் அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் ஒரு கட்டுப்பாடான அமைப்பாக, தொழுகைக்கு அழைப்பு விடப்பட்டவுடன் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தொழுகைக்கு விரைந்து செல்லும் ஒரு ஆடுகளம் காயல்பட்டினதுக்கே சொந்தமானது.

இங்கேயும் match fixing வந்து விடாமல் பாதுகாத்துக் கொண்டு, இஸ்லாமிய மரபுகளையும் தக்க வைத்துக் கொண்டு மாற்று மத்தது சகோதரர்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். எந்த ஒரு ஊழல் புகாரும் இங்கு இதுகாலம் வரை யாரும் சொல்லாமல் மிக கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இந்த விளையாட்டு போட்டி நடந்து வருவதற்கு மாவட்ட ஆட்சியர் இந்த நிர்வாகத்துக்கு தங்க பதக்கம் கொடுத்து கௌரவிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Mr D .A .பீட்டர் நினைவு பெவிலியன்
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 27 May 2013
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27599

U S C விளையாட்டு மைதானம், கால் பந்தாட்டம் என்று வரும்போது கட்டுரை ஆசிரியர் ஒரு முக்கியமான நபரை குறிப்பிட மறந்துவிட்டார்.மறைந்த கோச் பீட்டர் அவர்கள் U S C யை பொருத்தவரை ஒரு முக்கியமான நபர். 1965 அல்லது 1966 ம் வருடம் இருக்கும் ஒரு சாலை விபத்து ஒன்றில் அவர் இறந்துவிட்டார் என நினைக்கிறேன்..அவர் நினைவாகவே Mr D .A .பீட்டர் நினைவு பெவிலியன் 1967 ஆம் ஆண்டு கட்டி இறக்கிறார்கள். அது இன்றளவும் உள்ளது.

அறிவிப்பாளராக SK சாகுல் ஹமீது காக்கா அவர்களின் குரல் பெரும்பாலும் கேட்ட நினைவு.காயல் மௌலானா காக்கா அவர்களை அதிகமாக சைடு அம்பையராக பார்த்த நினைவு.

ஒலிபெருக்கியில் அறிவிப்புகளுக்கு நடுநடுவே விளம்பரங்கள் ஒலிபரப்பாகும். தற்போது அம்மாதிரி விளம்பர ஒலிபரப்பு உள்ளதா என தெரியவில்லை.

முன்னர் இந்த கேலரி (மூங்கில்))கலைகம்புகலால்தான் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது நாம் பார்க்கும் இந்த சிமெண்ட் கேலரி பின்னாளில் வந்ததுதான்.வருடம் நினைவில் இல்லை.இது ஓர் பழைய நினைவு.

1967 வரை எனது 8 வகுப்பு வரைதான் நான் ஊரில் பள்ளியில் படித்தேன்.1968 முதல் இன்றுவரை எனது வாழ்க்கை பெரும்பாலும் ஊருக்கு வெளியேதான். USC விளையாட்டுப்போட்டிகளை அதிகமாக காணும் வாய்ப்பு எனக்கில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Peena Abdul Rasheed (Riyadh) on 27 May 2013
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27601

தம்பி ரபீக் உன் கட்டுரையை படித்து என்னை பழைய காலத்துக்கு பந்தடித்து விட்டாய். அது போல் போடோக்களும் பழைய காலத்து போட்டோவை போட்டு இருந்தால் இன்னும் நன்றக இருந்து இருக்கும். உன் கட்டுரைக்கு கடந்த காலத்து என் நண்பரர்களின் நன்றிகள் பல

இவன் பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 27 May 2013
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27602

எவனோ ஒருவன் சூதாட்டத்தில் சம்பாதிக்க நாம் இரவு - பகல் தொலைக்காட்சி முன் இருந்து பார்க்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் - காயலும்... கால்பந்தாட்ட ரசனையும்...! கட்டுரை படித்தேன் மனதுக்கு இனிமையாக இருந்தது..! பழைய நினைவுகளை மனதில் ஓட வைத்த கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved