அரசாங்கத்துடன் போராடி நம் உரிமைகளை..... posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM )[25 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13773
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகர்மன்ற தலைவர் சகோதரி ஆபிதா அவர்கள் சென்னை சென்று நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து - நமது நகர் மன்றத்திற்கு தற்போதைய தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை கொடுத்து விண்ணப்பித்தது சந்தோஷத்தை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்!.
" கோரிக்கைகளை பார்வையிட்ட செயலாளர் அவர்கள் - அவைகளை ஆய்வுசெய்து, உரித்த நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வதாக தெரிவித்தார் " என்ற செய்தி நம்பிக்கையை அளிக்கிறது.
நகராட்சி நிர்வாகத்துறையின் (COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION) ஆணையர் அவர்கள் " சிறந்த முறையில் நகராட்சியினை நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார் " என்பதும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது.
---------------------------------------------------
இன்றைய சூழலுக்கு உகந்தது :
சகோதரி ஆபிதா அவர்கள் மேற்கொண்டிருக்கும் இந்த அணுகுமுறைதான் என்னுடைய எதிர்பார்ப்பு - இன்ஷா அல்லாஹ்! உங்களுடைய முயற்சிக்கு நிச்சயம் பலனுண்டு - அல்லாஹ்வின் அருளும் உண்டு.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள் - அதுபோல் நாம் கேட்டால்தான் கிடைக்கும். அதுவும் நீங்கள் நேரில் சென்று
விண்ணப்பிக்கின்றீர்களே இதுதான் இன்றைய சூழலுக்கு உகந்தது - நிச்சயமாக பலன் கிட்டும்.
இதே அணுகுமுறைகளை நமது மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், அதிகாரிகளிடமும் கையாள வேண்டியது - நமது தேவைகள் நிறைவேற்றப்படும்.
--------------------------------------------------
ஆற்றலுடன் செயல்படுங்கள் :
மக்கள் மன்றத்திற்கு தலைவராக போட்டியிடும்போது மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு பலமாக இருக்கும் - அரசாங்கத்தினுடைய ஆதரவு அப்படியும், இப்படியுமாகத்தான் இருக்கும் - இருந்தாலும் இன்ஷா அல்லாஹ்! நம் பிரதிநிதிகள் எல்லாம் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு அரசாங்கத்துடன் போராடி நம் உரிமைகளை பெற்று நகராட்சியை சிறப்பாக நடத்தலாம் என்ற கனவுடன் வந்தீர்கள்.
ஆனால் பதவியேற்றபின் நிலைமைகள் தலை கீழாக இருப்பதாக தெரிந்திருக்கும் - இன்ஷா அல்லாஹ்! எல்லா நிகழ்வுகளும் சரியாகி ஒவ்வொரு உறுப்பினரும் உங்களுடன் ஒருமித்தக் கருத்துடனே செயல்படுவார்கள் என்று நம்புங்கள்.
ஒரு வேளை உறுப்பினர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பும் இல்லாது போனாலும் - மேல் அதிகாரிகளின் அனுசரணையோடு, ஆற்றலுடன் செயல்படுங்கள் - அல்லாஹ்வின் உதவியால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருங்கள் - எல்லாம் வல்ல அல்லாஹ்! உங்கள் சேவையில் நகர்மன்றம் சிறப்புடன் நடைபெற கிருபை செய்வான் ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross