Re:... posted byK S Muhamed shuaip (Kayalpattinam )[28 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29780
தம்பி சாளை பஷீர் அவர்களின் இசைத் தாலாட்டு என்னையும் தாலாட்டியது. இஸ்லாத்தில் இசை கூடுமா ..? கூடாதா.. என்கிற வாதப் பிரதிவாதங்களைக் கடந்து, இசை மனிதனின் மெல்லுணர்வுகளைத் தூண்டி, அவனை நிஜ உலகிலினில் இருந்து வேறொரு உலகிற்கு அவனைக் கடத்தி செல்கிறது என்கிற உண்மை இன்றுவரை எவராலும் மறுக்கப்படாத உண்மை.
இசைக்கு மதமில்லை மொழியில்லை... ஆனால் அது நாம் அறிந்த மொழியோடு தவழ்ந்து வரும்போது அது கிளர்த்தும் உண்மை அளப்பரியது. அதையே தனது கட்டுரையில் அழகாக வடித்திருக்கிறார் தம்பி பஷீர்.
இசையை இசையாக மட்டுமே பார்க்கும்போது பிரச்சினை இல்லை. அதை வேறொன்றோடு சம்பந்தப்படுத்தி அதற்க்கு ஒரு புனித சாயம் ஏற்றும்போதுதான் எல்லா பிரச்சினைகளும் ஓடோடி வருகிறது. நிறைய இடங்களில் இசை மதத்தோடு தொடர்புடையது. சில மதங்களின் வழிபாட்டு நிகழ்வே கூட இசைவடிவமானதுதான். அது குறித்து நாம் எதுவும் சொல்வதற்கில்லை .
கண்ணியமான -அளவு மீறாத இசைவடிவங்களை இஸ்லாம் என்றுமே வெறுத்ததில்லை. மனித உணர்வுகளை அதன் அடிப்படையில் மதிப்பது இஸ்லாம். இசையும் மனித உணர்வுகளின் ஒரு அடிப்படை என்பதால் அதை இஸ்லாம் ஏற்றுக்கொண்டுள்ளது .
இறைமறையை ராகமிட்டு ஓதுவது, பாங்கொலியை இசை பொருந்த ஒலிப்பது இன்னோரன்ன உதாரணங்களை இங்கு பட்டியலிடலாம் .
இவைகளை தனது கட்டுரையில் பொருத்தமாக விளக்கியுள்ள தம்பி பஷீர் பாராட்டுக்குரியவர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross