ஹனியா சிற்றரங்கம், துஃபைல் காம்ப்ளக்ஸ், பிரதான வீதி
“ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்துவதென்ன?” - எழுத்து மேடை மையம் சார்பில் இன்று 18.30 மணிக்கு விவாத அரங்கம்!
“ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்தும் செய்தி என்ன?” - எழுத்து மேடை மையம் சார்பில் இன்று மாலை விவாத அரங்கு!
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்புக்குத் தடை கோரியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்தும் செய்தி என்ன?” எனும் தலைப்பில், எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், இன்று மாலையில் விவாத அரங்கு நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
ஜல்லிக்கட்டு போராட்டம் – உணர்த்தும் செய்தி என்ன ? விவாத அரங்கு
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு இன் 16 ஆம் நிகழ்வு
அன்பார்ந்த காயல்வாசிகளே ! அஸ்ஸலாமு அலைக்கும் !!
தமிழகம் முழுக்க தன்னெழுச்சியாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெறுமனே மண்ணின் மரபைக்காக்கும் தற்காப்பு முயற்சி என சுருக்கி பார்க்க முடியாது.
களத்திலிருந்து வரும் தகவல்கள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு பரிமாணங்களும் கோணங்களும் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.
இது தொடர்பான விரிவான சுவையான பல முனை விவாத அரங்கிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross