Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:23:47 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 111
#KOTWART01111
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 15, 2016
பணமா! பாசமா!
இந்த பக்கம் 4773 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக.

அல்குர்ஆன் : 17 : 23


காயல்பட்டணத்தில் திருமணம் செய்யும் பெண்ணுக்கு நபிவழிக்கு மாறாக வீடு கட்டாயமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக தந்தை, சகோதரர்கள் உற்றார் உறவினர்கள் பல லட்சங்களை தேட குடும்ப வாழ்க்கையை ஒதுக்கி விட்டு ஊர் ஊராக நாடாக அலைகிறார்கள். கக்கூஸ் கழுவியோ, ஒட்டகத்தை மேய்த்தோ, கடைகளிலே ஊழியராகவோ வேலை பார்த்து ஒழுங்காக உண்ணாமல் உறங்காமல் இருந்து கிடைக்கும் ஊதியத்தை கொண்டு மகளுக்கு வீடு கட்டி திருமணம் செய்கிறார்கள். சிலர் வெட்கத்தை விட்டு நோட்டுப் போட்டு வசூல் செய்து குமரை கரையேற்றுகிறார்கள்.

இந்த அவல நிலையை நிறைவேற்றும் பொறுப்பு தந்தைக்கு அதிகம். புல லட்சங்களை சம்பாதிக்கும் ஆண்கள் தன்பெயருக்கு என்று ஒரு அடி கூட நிலம் வாங்காமல் அனைத்தையும் மனைவிக்கோ மகளுக்கோ கொடுத்து விடுகிறார்கள். ஆண்மகனுக்கு பெரும்பாலான இடங்களில் சொத்துகளை பதிவு செய்வதில்லை. வீடு இருந்தால் தான் திருமணம் என்பதால் பல குமர்கள் வீடு வசதியில்லாமல் தேங்கி கிடக்கிறது. வீடு, நகை, கல்யாண செலவுக்கு பல லட்சங்களை கடன் வாங்கி செலவழிக்கும் தந்தை கடன் தந்தவர்களை கண்டு ஒழிந்து ஓட வேண்டும் என்ற நிலை உள்ளது.

இத்தகைய தந்தை வயது முதிர்வு காரணமாகவும், நோயின் காரணமாகவும் உழைக்க முடியாமல் வீட்டின் ஓரத்தில் ஒதுங்கி கிடக்க வேண்டிய நிலை இன்று நம் ஊரில் பல இடங்களில் காண முடிகிறது. சில தந்தைகள் பள்ளி வாசல்களில் பாயும் தலையணையும் போட இடம் பிடிப்பதற்காக அலைகிறார்கள். அம்மா உணவகத்தில் அரைவயிற்றுக்காக தட்டை ஏந்துகிறார்கள். சொல்லி வராத இடத்தில் சொந்தங்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். வயிறை நிரப்புகிறார்கள்.

தனது குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக தியாகம் செய்து தனக்கென்று சேர்த்து வைக்காமல் மிஸ்கீனாகிறார் தந்தை. தனது கணவனிடமிருந்து கை நிறைய காசு வருகிறது என்ற மமதையில் தந்தையை வீட்டை விட்டு விரட்டும் நிலை ஒரு சில இடங்களில் அரங்கேறுகிறது. இங்கு பணம் தலை நிமிர்கிறது பாசம் தலை குணிகிறது.

திருமணம் நடந்து விட்டது. குழந்தை பெற்று தாயாக தானும் வாழ வேண்டும் என்ற ஆசையில் பலஹீனமான பெண்கள் கூட தனது ஆசைகளை ஒதுக்கிவிட்டு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை நல்ல நிலையில் பிறக்க வேண்டும் என்பதற்காக படாதபாடுபடுகிறார்கள். பெற்ற குழந்தைக்கு இருமல், தும்மல் வந்துவிட்டால் தான் தூங்காது மருத்துவம் செய்வதுடன் மேல் சிகிச்சைக்காக வெளியூர் மருத்துவரிடம் செல்லவும் தயங்கமாட்டார்கள். கையில் காசில்லவிடில் அடுத்தவரிடம் கடன் வாங்கியோ, வெட்கத்தை விட்டு பைத்துல்மால்களிடம் அணுகியோ குழந்தைக்கு சிகிச்சை அளிப்பார்கள். தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, குழந்தைக்கு உணவு ஊட்டுவார்கள். முடியாத பட்சத்தில் பிச்சை எடுத்தாவது குழந்தையின் பசியை தீர்ப்பார்கள். படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டில் உணவு இல்லாத நிலையில் சத்துணவு வழங்கும் பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பி கல்வி புகுட்டுவார்கள் ஒழுக்கத்துடன் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பெரும்பாலும் தாய்க்கே உரியது. கோழி குஞ்சுகளை பாதுகாப்பது போன்று 24 மணி நேரமும் குறிப்பாக பெண்மக்களிடம் கவனம் செலுத்துவார்கள். தந்தை தொழில் நிமித்தம் வெளியில் செல்வதில் தாய்தான் குழந்தைகளின் முக்கிய பாதுகாவலர் ஆவார்.

இத்தகையை தாய் உயிருடன் இருக்கும் பொழுதே அவள் பெயரில் இருக்கும் வீட்டை மகளின் திருமணத்திற்காக கட்டாயப் படுத்தி பறிக்கப்படுகிறது. சிறிது காலத்தில் குடும்பத்தில் ஏற்படும் சில்லறை சச்சரவுக்காக தாயை வீட்டை விட்டு வெளியேற்றும் சம்பவங்கள் சர்வசாதரமாக நடக்கிறது. மகனோ மனைவியின் கைப்பொம்மையாக இருந்து தாயையும் தந்தையையும் நடுரோட்டில் அலைய விடும் நிலை நம் ஊரில் பரவலாக உள்ளது. நாளை நாமும் தாய், தந்தையாக ஆகுவோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

தனது இரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு உணவளிக்கும் தாய், அல்லும் பகலும் தனது குழந்தைகள் நல்ல நிலையில் வாழவேண்டும் என்று வேர்வை சிந்தும்தந்தை ஆகியோரை வயதான காலத்தில் வீட்டை விட்டு விரட்டும் நிலை நம்மிடத்தில் பரவி வருகிறது. இது அல்குர்ஆன் 17:23க்கு எதிரானது.

“காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி,” “காசேதான் கடவுளப்பா” என்ற தவறான சித்தாந்தம் நம்மிடையே இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

பணத்தின் மீது பாசத்தை செலுத்துவதை விட பெற்ற தாய் தந்தையிடம் என்ன தவறுகள் இருந்தாலும் மன்னித்து பாசம் செலுத்த அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

பணம் கைக்கு கை மாறும். பாசம் நிலைத்துநிற்கும்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 15 June 2016
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44041

ஷேக் மாமா அவர்களின் கருத்து மிகவும் சரியானது. நமது ஊரில் நிலவும் கலாச்சாரத்தை நன்றாக படம் பிடித்து காட்டுகிறது.

ஆனால் அதே சமயம், நமக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணத்தில் நம் பிள்ளைகள் நாம் என்ன சொன்னாலும் என்ன தொந்தரவு குடுத்தாலும் தாங்கியே ஆக வேண்டும் என்ற நினைப்பில், தான் பெற்ற மகளை, அவளுக்கு பிறந்த பேர குழந்தைகளை மிகவும் அசிங்கமான சொற்களால் அர்ச்சிப்பதும், அவர்கள் விருப்பப்படி அவர்கள் வீட்டை பராமரிக்க கூட அனுமதிக்காமல், பேரன் சைக்கிள் ஓட்ட கூட பொறுக்காமல், நண்பர்களோடு அவன் வெளியே செல்வது கூட பிடிக்காமல் எதற்கெடுத்தாலும் வம்பு அளக்கும் வாப்பாமார்களை என்ன செய்வது?

அதையும் நீங்கள் இங்கு பதிவு செய்திருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: Ahamed Mohideen Bin Farook (Hong Kong) on 16 June 2016
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 44042

அருமையான மற்றும் சிந்திக்கக்கூடிய பதிவு.. கட்டுரையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஹலாலான முறையில் சம்பாதித்து பெற்றோர்களை கண்ணியமான முறையில் வைத்து காப்பாற்றுவதற்கும் இக்ஹ்லாஸ் ஆன பிள்ளைகளை வார்த்து எடுப்பதற்குரிய பாக்கியத்தை அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்து அருள்புரிவானாக..ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:.பெண்வீட்டு கலாசாரத்தை காயலில் திருத்தப்போவது யார்..? திருந்தப்போவது யார்..?
posted by: AnbinalA (jaipur) on 16 June 2016
IP: 101.*.*.* India | Comment Reference Number: 44043

கைக்கு கைமாறும் பணமே - உன்னை
கைபற்ற நினைக்குது மனமே...
சொந்தத்தை விட சொத்துக்குத் தான் மதிப்பு
பந்தத்தை விட பணத்துக்குத் தான் முதல்விரிப்பு...

அட...வாப்பா எங்கீந்து வாரா..?
பொண்டாட்டி வீட்டில் இருந்து - இப்போ
எங்கே போரா..? - உம்மா வீட்டுக்கு - ஆக..!
காயலில் ஆண்மகனுக்கு வீடில்லை..? ஆனால்..!
ஆண்களின் உழைப்பு மட்டும் கல்லிலும், மண்ணிலும் கலங்காலமாய்...

எல்லாத்துக்கும் இஸ்லாத்தை தூக்கிப்பிடிக்கும் காயலில் பெரும்பகுதி மக்கள் ஏன்..? இந்த பெண்வீட்டில் இருக்கும் கலாசாரத்தை வெக்கம்யின்றி தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பது இன்னும், இன்றும் திருத்தப்போவது யார்..? திருந்தப்போவது யார்..? என்ற கேள்வி வளைந்தே வனுயர எழுந்து நிற்கிறது...17


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...காயல் கலாச்சாரம் சரிதானா?
posted by: Muhammathu Salih (Chennai) on 16 June 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44044

இஸ்லாமிய பார்வையில் நமதூர் கலாச்சாரம் சரிதானா? என்பதை அறிந்து கொள்ள ஒரு ஆலிமிடம் கேட்டேன். அதற்க்கு அவர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவிமார்கள் வீட்டில் தானே தங்கினார்கள் என்றார் அவர். பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டில் தானே குடும்பம் நடத்தினார்கள் என்றேன். சரியான பதில் இல்லை. சஹாபாக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள். நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களை எவ்வாறு வாழ போதனை செய்தார்கள் என்பவற்றை எல்லாம் மறு ஆய்வு செய்து ஷரியதிர்க்கு உட்பட்டு காலத்திற்கேற்றவாறு நம் ஊரில் மாற்றம் கொண்டுவர காழிகளும்ஆலிம்களும் ஊர்பெரியவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த விசயத்தில் ஒரு பாதையில் செல்லும்போது நமதூர் ஏன் இப்படி? நான்கு பெண் குழந்தைகள் பிறந்தால் நான்கு வீடுகள் என்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: moinudeen (kayalpatnam) on 13 August 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44446

மேற்கூறப்பட்ட கட்டுரையில் சில விடயங்கள் உண்மையானாலும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ... தியாகம் தான் வாழ்க்கை ... இறைவன் அமைத்து வைத்து அப்படிதான்.. பெண் மக்களுக்கு வீடு கொடுப்பது மார்க்கமா இல்லையா என்று நான் சொல்ல வரவில்லை...ஒரு வேலை மருமகன் வீடு கொடுக்க வேண்டும் என்றாலும் பிரச்சனை தான் ... எல்லாரும் பணக்காரர்கள் இல்லை வீடு கேட்டுவதற்கு ... மாமியார் வீட்டில் மருமகள் தங்குவதும் மார்க்கம் அல்ல... மஹ்ரம் பிரச்னை எழலாம் ...மாமியார் கொடுமை நடக்கலாம் ... இங்கு சகிப்பு தன்மையோடு சூழ்நிலைகளை அறிந்து நாம் செயல் படவேண்டும் ... ஒழுங்கான மார்க்க சிந்தனை இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை... தேவைகளை குறைத்து கொள்வதும் தன்னிறைவு அடைந்த மனமும் இருந்தால் போதும்..இவைகள் ஒரு பெரிய விடயமே அல்ல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved