Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:35:45 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 14
#KOTWART0114
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 24, 2012
முயன்றால் உங்களால் முடியும்!
இந்த பக்கம் 6163 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.

பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.

வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.

”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்...

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.

உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.

“முகம் - வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.

உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்...

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = I.A.S, I.P.S எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

If not me, then who?
If not now, then when?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.

துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...

மாணவர்கள்
மாணவிகள்
மகத்தான கல்வி ஞானம் பெற படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக...

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 24 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21024

பாராட்டுக்கள். இப்படி உற்சாகப்படுத்தும் கட்டுரைகளை மக்களுக்கு வழங்குங்கள் மாணவ மாணவிகளை உற்சாகபடுதுங்கள். எப்போதும் POSITIVE THINKING NOT NEGATIVE THINKING.ரோஜாவில் முள் இருக்கிறது என்று பார்ப்பதை விட அதை கடந்து சென்றால் அழகிய மணம்பரப்பும் மலர் கிடைக்கிறது என்று முன்னேற்ற பாதையை காட்டுங்கள்.

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை சிப்பிக்குள்ளே வளர்ந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை.வைரம் அடிமண்ணில்தான் அமிழ்ந்து கிடக்கிறது மாணிக்கம் மரகத கற்கள் எல்லாமே மண்ணின் அடியில்தான், மண்ணின் மடியில்தான். நாம் அதை தோண்டி எடுத்த பிறகுதான் அவை விலைமதிப்பற்ற பொருள்களாக சந்தையில் வலம் வருகின்றன.குடும்பக்கட்டுப்பாடு பற்றி பேசும்போது கூட, அதிகம் பிள்ளைகளை பெற்று அவஸ்தை படாதீர்கள் என்று கூறி சோர்வு ஏற்படுத்துவதை விட, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இரண்டு கைகள் இரண்டு கால்களுடந்தான் பிறக்கின்றன, உழைத்து முன்னேற அவை கட்டியம் கூறுகின்றன என்று உட்சாகபடுதுங்கள்.

ஒவ்வொருவரிடமும் புதைந்துள்ள சக்தியை திறமையை நபிகள் நாயகம் அவர்கள் நன்றாக அடையாளம் கண்டதால்தான் அபூபக்கர் உமர் உதுமான் அலி உசாமா போன்ற நபிதோழர்கள் வித்தியாசமான பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள், வெற்றிகளை நபியின் காலடியில் குவித்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம் வல்ல அல்லாஹ்வை பெரிதும் நம்பியிருந்து தங்கள் கடமைகளை, நபிகள் இட்ட பணிகளை துணிச்சலுடன் செய்து முடித்தார்கள்.தொடரட்டும் இதுபோன்ற துணிச்சலை மனதிலே வளர்க்கும் கட்டுரைகள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வானம் வசப்படும் நீ முயன்றால் என்று உதயமூர்த்தி அவர்களின் வாரிசாக வந்து விடிவெள்ளியாக விளக்கேற்றி உணர்வுகளை முறுக்கேற்றி விட்டுள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by: ALADHEEN .A.M.S ( MUMBAI ) (KUWAIT) on 25 April 2012
IP: 178.*.*.* Kuwait | Comment Reference Number: 21025

சீனம் சென்றாவது கல்வியை தேடிக்க்கொல்லுங்கள் என்ற பெருமானாரின் வாக்கினை / DO OR DIE என்ற லெனின் கொள்கையை / ஏழு முறை தோல்வியுற்ற ராபர்ட் பிருஸ் முயற்சியுடன் கூட்டை அடைந்த எட்டுக்கால் பூட்சியைப்பார்த்து அவனும் அடைந்த வெற்றியை / இளமைக்காலத்தில் இந்தியாவை கண்டு பிடிக்க பற்பல முயற்சி கொண்டு பல கண்டங்களை கண்டு பிடித்து தோல்வி யுற்று தனது வயோதிக காலத்தில் வாஸ்கோட காமாவை கண்டு பிடித்து வெற்றி பெற்ற கோ லாம்பசைப்போல் காயல் மாநகரில் பல IPS / IAS களை உருவாக்க பயன் தரும் உனது கட்டுரையை பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பனே !

ALADHEEN . A M S ,
DAKHNAN GROUP OF COMPANIES ,
SAALMIYA / HAWELI ,
KUWAIT .
MOBILE : 00965 65031182 .
TELE FONE :22622407 / 408 / 22629920 / 22619544 / 22619455 / 22626583 .
E - மெயில் :dakhnancompaniesglobal @gmail .com
PERSONAL :neyyakkaran @yahoo .com
WEBSITE :www .dakhnanonline .com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by: ASHIK RAHMAN M.H. (mikhwa (via) al baha) on 25 April 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21026

அருமையான கட்டுரை இளைஞ்சர்களுக்கு. முயற்ச்சி செய்தால் அல்லாஹ் வெற்றியைத்தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by: Hameed Sirajudeen (Pondicherry) on 29 April 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21027

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது
முட்டிப்பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது.
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுப்பவன் முதுமையில் தவிக்கிறான்
கடலுக்கு பயந்தவன் கரையினில் நிற்கிறான்
அதை படகினில் கடந்தவன் உலகை ஆள்கிறான்.

படிப்போரை உத்வேகப்படுத்தக் கூடிய
கருத்துக்களையும்,
நெஞ்சில் நிறுத்தினால் துள்ளி எழச் செய்யும்
எண்ணங்களையும்,
அருமையான நடையுடன் கூடிய
எழுத்துக்களையும்..
கொண்ட இந்த கட்டுரை பலரை
‘முயற்சித்து முன்னேற’ தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியரின் இன்னும் பல ஆக்கங்களை
எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
தொடரட்டும் அவரது இந்த மகத்தான பணி.

சினேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. எனதன்பு உடன்பிறப்புகளுக்கு,
posted by: AnbinalA (Jaipur) on 29 April 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21028

அலைபேசி, எஸ்.எம்.எஸ், இணையம் வழியாகவும்
நேடிடையாகவும் என் உணர்வுகளைத் தொட்டு
உள்ளத்தை அள்ளிக் கொண்ட
அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும்,
எம்மை நேசிக்கும் நெஞ்சங்களுக்கும்,
எமது எழுத்துக்களை வாசிக்கும் வாசகர்களுக்கும்....

எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்
எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும் – என
அல்லும் பகலும் பனிபோல் பணியாற்றும்
www.kayalpatnam.com குடும்பத்தாருக்கும்...

முயன்று வெற்றியுடன் வாழ வாழ்த்துக்கள்.
என்னால் முடிந்தவரை படைத்தவனிடம் பிராத்திக்கிறேன்.

- அன்பின் அலாவுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by: ப.ஆ. கதீஜா ஷமீமா (?????????????, ?????????????) on 05 May 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 21029

அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] !

நான் தற்பொழுது 12 ஆம் வகுப்பை முடித்துள்ளேன் . நான் முதன் முறையாக கருத்து எழுதும் கட்டுரை இதுவே .

சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த என்னுள் இக்கட்டுரை வாழ்க்கையை வித்தியாசமாக வாழ்ந்து பார் என்ற உணர்வை தூண்டியது.

வெறும் நாளிதழ்கள், புதினங்கள், வார இதழ்கள் போன்றவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்த எனக்கு இக்கட்டுரை நல்ல சிறந்த இலக்கிய படைப்புக்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது .

அத்துடன் எனது திறமையை எவ்வாறு வெளிக் கொண்டு வருவது என்றும் யோசிக்க வைத்துள்ளது .

மேலும் இது போன்ற இன்னும் சிறந்த படைப்புகளை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by: Zubair Rahman (Doha-Qatar) on 05 May 2012
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 21030

சிறந்த படைப்பு ! சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

படைப்பாளியின் படைப்பாற்றலை வெளிக்கொணர உதவிய நமது காயல் இணையதள சேவாக்களுக்கும் நன்றி. சிறந்த பேச்சாற்றலை விட எழுத்தாற்றல் உலகையே மாற்றக்கூடியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved