Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:56:23 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 19
#KOTWART0119
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 7, 2012
எங்கே செல்கிறது தமிழகம்? அப்பாவிகளைத் தாக்குவது அக்கிரமம் அல்லவா??
இந்த பக்கம் 3180 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“நாங்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்... தமிழ்நாட்டை எங்கள் தாய் வீடாகவே நேசிக்கிறோம்... எங்களை ஏன் தாக்குகிறார்கள்? நாங்கள் வியாபாரத்திற்கு வரவில்லை... அன்னை மாதாவிடம் ஆசி பெறவே வந்தோம்...” என்று குமுறினார் திருமதி மெர்ஸி ஃபெர்னான்டஸ்.

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலாபம் நகரிலிருந்து வரும் ஜோஸப்பைப் பொருத்த வரை, ஒவ்வொரு வருடமும் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற வருவது வழக்கம். தனது பிரார்த்தனையின்படி அன்னை வேளாங்கன்னி தனது உடல் உபாதைகளைக் குணப்படுத்தியதால்தான் இந்த யாத்திரையை ஒவ்வோர் ஆண்டும் செய்வதாகவும், இந்த வருடம் அது பயங்கர நிகழ்வாக முடிந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், “எதிர்காலத்தில் நிச்சயம் நிலைமை சீராகும்... அடுத்த வருடம் வருவதற்கு அன்னை அருள் செய்வார்” என்று நம்பிக்கையோடு கூறினார்.

முதலில் வந்த செய்தியானது புனித யாத்திரிகர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்றும், ஆத்திரம் கொண்ட ஈழ ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள் என்றும்தான் ஊடகங்கள் கூறின. பின்பு அச்செய்தியில் திருத்தம் பெறப்பட்டு, கனிசமான தமிழர்கள் அக்குழுவில் இருந்தார்கள் என்று இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 05ஆம் திகதி இரவு 10.22 மணிக்கு வெளிவந்த தி ஹிந்து பத்திரிக்கையின் கணினி செய்தியில், அனைவரும் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சிலாபம் போன்ற மீன்பிடி நகரங்களில் சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் அவர்கள் சரளமாக தமிழ் பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஞாயிற்றுக்கிழமை அன்று, 184 பக்தர்களைக் கொண்ட எங்கள் குழு சில பிரச்சினைகளைச் சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டபோது நாங்கள் உண்மையில் நொந்து போய்விட்டோம்... எங்களை - பேருந்தில் இருந்தவாறே பிரார்த்தனை செய்யுங்கள்! தேவாலயத்திற்குள் செல்ல வேண்டாம்!! என்று சொல்லியபோது, மாதாவே, இதென்ன சோதனை? இவ்வளவு செலவு பண்ணி சிரமம் எடுத்து உன்னை தரிசிக்க வந்த இடத்தில் இப்படியும் சோதனையா என்று அழுதுவிட்டோம்...” என்றார் ஜோஸப்.

“08ஆம் திகதி நடக்கவிருந்த திருவிழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது எங்களுக்கு பெரிதும் மன வேதனையைத் தருகிறது... அத்தோடு, பாவிகள் மீது கல் வீசுவதைப் போல எங்கள் பஸ் மீது கல் வீசி, மூன்று பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து, முன்புறம் இருந்த சிறுவர்கள் இருவர் காயப்பட்டதும், மற்றவர்கள் அனைவரும் கூச்சலிட்டு அலறியதும் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு” என்று ஜோஸப் மேலும் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்நிகழ்வு, உலகச் செய்தியாக மாறிவிட்டது. இலண்டன் பி.பி.சி.யின் தமிழ் ஒலிபரப்பான தமிழோசை - இந்நிகழ்வு பற்றி பிரபல ஈழ ஆதரவாளரான ஓர் அரசியல்வாதியைப் பேட்டி கண்டபோது, தனக்கே உரிய குரலில் அடுக்கு மொழி வசனத்தில் பேசிய அவர், “அந்தப் பேருந்தில் தமிழ் கிறிஸ்தவர்களும் இருந்தார்களே?” என்ற கேள்விக்கு, “அந்தத் தமிழர்கள் எதற்கு சிங்களவர்களோடு வந்தார்கள்?” என்று கர்ஜித்தார். என்ன அறிவிலியான கேள்வி இது?

தமிழக அரசியலில் மறுமலர்ச்சி காணத் துடிக்கும் அந்தத் தலைவருக்கு பதில் கூறும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன். தமிழ் பேசும் ஹஜ் பயணிகள் எதற்காக ஹிந்தி பேசும் ஹஜ் பயணியரோடு ஒரே விமானத்தில் வந்தார்கள் என்று கேட்பது போல் இது இல்லையா? பி.பி.சி. மேலும் தலைவரை கேள்விகளால் குடைந்தபோது, அவர் தனது தொலைபேசியை நிறுத்திவிட்டார். மீண்டும் பதில் தரவில்லை. ஜனநாயகம் வாழ்க!

இது நிற்க, 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின்போது மலையகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோது, தமிழக அரசோ, இந்திய அரசோ அவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அழைத்து - இல்லையில்லை, அடிமைகள் போல இழுத்துச் செல்லப்பட்ட இவர்கள்தான் தொப்புள்கொடி உறவு. வடகிழக்கு இலங்கையில் வாழும் தமிழ் பேசுபவர்கள் அல்ல. அதனை விவரிக்க இங்கு இடமில்லை.

தமிழகத்தின் இத்தகைய “தமிழ் உணர்வாளர்களால்” தமிழகத்திற்கு வர்த்தக ரீதியில் பாதிப்பு ஏற்படப் போவது உண்மை. இலங்கை - இந்திய வர்த்தகம், ஐந்து மடங்கிற்கு மேல் சாதகமாக இந்தியாவின் பக்கமே உள்ளது. ஜவுளி மற்றும் நகை, உணவுப் பொருட்களை ஏராளமான பயணியர் தினசரி கொள்முதல் செய்கிறார்கள். தி.நகரில் பிரபல கடைகளில் நிறைய இலங்கைப் பயணியரைக் காணலாம். இக்கடைகளின் வர்த்தகம் 10 சதவிகிதம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், 06ஆம் தேதி வியாழக்கிழமையன்று, கொழும்பு நகரிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை, இந்திய வம்சாவளி வர்த்தக சமூகம், இலங்கை தமிழ் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஆர்ப்பாட்டம் - பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்திய தூதரகத்திற்குச் சென்ற அவர்கள், இலங்கைப் பயணிகள் தமிழகத்தில் தாக்கப்படுவதைக் கண்டித்து இந்திய ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றை கையளித்தனர்.

வியாழன் அன்று கொழும்பிலுள்ள சகல தமிழ் வர்த்தக நிலையங்களும் பிற்பகலில் மூடப்பட்டன. மகஜர் அளித்த ஐவர் குழுவில் திரு. பி.சுந்தரலிங்கம், திரு. கே.துரைசாமி செட்டியார், திரு. ஆர்.அசோக் குமார், திரு. கே.இராதாகிருஷ்ணன், திரு. டி.சிவகுமார் ஆகியோர் இருந்தனர்.

தமிழகத்தின் தமிழ் உணர்வாளர்களின் செயலுக்கு இலங்கை இலங்கை வாழ் தமிழர்களிடம் ஆதரவு இல்லை என்பதை உணர்த்துவதாக அல்லவா இந்நிகழ்வு அமைந்துள்ளது?

எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியின்போது, இலங்கை கதிர்காமத்திற்கு யாத்திரை வந்த தமிழக பயணி ஒருவர் சவரக் கடையில் இருக்கும்போது, போதையில் இருந்த ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார். அவர் தாம்பரம் அ.தி.மு.க.வின் முக்கிய உறுப்பினர். அவரது சடலத்தைப் பொறுப்பேற்க எம்.ஜி.ஆர். அவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்வார் என்ற செய்தி வந்ததும், அப்போதைய கொழும்பு மேயர் மற்றும் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அமைச்சர் என்னை அழைத்து, முதல்வர் விமான நிலையம் சென்றால் சென்னையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரலாம், இலங்கையர் தாக்கப்படலாம் என்று அச்சம் தெரிவித்து, சென்னையோடு என்னைத் தொடர்புகொள்ள வேண்டினர்.

நான், சபாநாயகர் ராசாராம் அவர்ளோடு தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியதும், ஆவன செய்வதாக உறுதியளித்த அவர், மக்கள் திலகம் அவர்கள் விமான நிலையம் செல்லாது - அத்தொண்டரின் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதாகவும், நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை இங்கு இப்போது குறிப்பிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...முகவரி தவறி வந்த மடல்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 07 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21941

புரட்சி தலைவி அவர்களுக்கு முகவரி இட்டு எழுத வேண்டிய மடல் kaayalpatnam .com க்கு வந்துள்ளது. எனினும் காயல்பட்டினம் மக்கள் உலகெங்கும் வாழ்கிறவர்கள் இதனை பார்த்து உண்மை நிலையை விளங்கி கொள்ள உதவியாக இருக்கிறது.

தொப்புள்கொடி உறவு, தாலிக்கொடி உறவு என்பதெல்லாம் வெறும் நாடகம். பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசம் என்பது ஏதடா....அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே....என்று கவிஞர் பாடுவார்.

மறுமலர்ச்சி காணுவதற்கு துடிப்பவர் சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்பதும், அணிமாறி சால்வை அணிவித்து புரட்சி தலைவி துதி பாடினாலும் இலவு காத்த கிளியாக இரண்டு இலக்க இடத்துக்காக தவமிருந்து கிடைத்த இடத்தையும் இழந்தவர் என்பதும். கள்ளத்தோணியில் இலங்கை சென்று தன் தமிழ் இனத்தை பார்க்கசென்ற பாராளுமன்ற உறுப்பினர் என்பதும், தற்போது அதலபாதாளத்தில் இருக்கும் தனது செல்வாக்கை தூக்கிப்பிடிக்க ஒரு கொழுகொம்பு தேவைப்படுவதால் இந்த ஈழ பிரச்சினையை ஈனத்தனமாக கையாண்டு இந்த தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுக்க புறப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. மற்றப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவியாவது வெங்காயமாவது......

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ, தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக்கோ என்று புரட்சி தலைவர் அவர்கள் மானசீகமாக புரட்சி தலைவி அவர்களிடம் சொல்வது காதில் கேட்கிறது. விநாச காலே விபரீத புத்தி என்று சொல்வார்களே அதுதான் இது. இந்த நிலையும் மாறும். THIS TOO WILL PASS AWAY எனபது முதல் அமைச்சர் நன்கு அறிவார்.

2014 இல் இந்த நாட்டின் பிரதமராக முதல்வர் அவர்கள் வரவேண்டுமென்று நல்லாசி கூறும் சோ ராமசாமி அவர்கள் இவருக்கு நல்லுரை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம். ஒரு வேளை அந்த கனவு நனவானால், அன்றைய நாளேடுகளில் இப்படி ஒரு செய்தி வரும்.

" இந்திய பிரதமர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே அவர்களை கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்து இலங்கை இந்திய நல்லுறவுகள் பற்றி பேச இன்று இலங்கை பயணம்."...

.கனவு மெய்ப்படவேண்டும்...பாரதியார் நாமம் வாழ்க ...அண்ணா நாமம் வாழ்க...... புரட்சி தலைவர் நாமம் வாழ்க..... .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...ilankai
posted by: hylee (kayalpatnam) on 07 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21942

தேவையான நேரத்தில் வெளிவந்த ஒரு அருமையான கட்டுரை.தியாகி நாட்டை பற்றி சிந்திப்பான்.அரசியல்வாதி அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பான்.வாழ்த்துக்கள் காக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்திலா ?
posted by: Abdul Wahid S. (Kayalpatnam.) on 07 September 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21949

விளையாடுடன் அரசியலை கலக்கக் கூடாது என்று பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விதியை கூட மதிக்காமல் இலங்கையிலிருந்த கால்பந்து ஆடவந்த மாணவர்களை (ராணுவத்தை அல்ல) திருப்பி இலங்கைக்கு அனுப்பிய நமது முதல்வர் அம்மாதான் இந்த அக்கிரமம் நடப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தார் என்றால் அது மிகையாகாது.

-------------------------

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மறுமலர்ச்சி காணத்துடிக்கும் அந்த மனிதர் (தி.மு.க. விலிருக்கும்போது) நமதூரிலுள்ள Y.U.F. சங்கம் அருகில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் யாழ்பாணத்து தமிழர்களுக்கு குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி முடிந்தவுடன் கொச்சியார் தெருவிலுள்ள ஒரு வீட்டிற்கு அவரது ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டார். அப்போது இலங்கையுடன் வியாபாரத் தொடர்புள்ள நமதூர் பெரியவர்கள் பலர் , யாழ்பாணத்து தமிழர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்ட வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்ட தமிழர்களையும், வியாபாரத்திற்காக இலங்கையில் வசித்து வந்த தமிழர்களையும் எவ்வாறு (இரண்டாம் வகுப்பு குடிமகனாக) நடத்தினார்கள் என்பதை விவரித்துக் கூறினார்கள். அப்பொழுதுதான் அந்த மறுமலர்ச்சி காணத் துடிக்கும் மனிதருக்கு இலங்கையில் இரண்டு வகையான் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பதே தெரியவந்து அங்கிருந்தவர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: saburudeen (dubai) on 08 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21953

தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்த துடிக்கும் கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் ஆன திரு வைகோ அவர்கள் தமிழர்களுக்காக ஆற்றும் பணியை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உலக தமிழர்களுக்காக எடுக்கும் அணைத்து முடிவுகளும் சரியானதே. இவர் ஒரு முடிவில் இறங்கி விட்டால் அதில் கண்டிப்பாக கடைசி வரை போராடி மக்கள் ஆதரவுடன் இறைவன் நாடினால் வென்று காட்டுவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 08 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21969

சிந்திக்கும் ஒருவர் பிறரின் சிந்தனையை தூண்டும் விதத்தில் எழுதியுள்ள சிறப்பான கட்டுரை இது.இங்குள்ள சில "தமிழ் தீவிர "அரசியல்வாதிகள் ,தங்களுக்கு பிழைக்க வேறுவழியின்றி இலங்கைத்தமிழர் பிரச்சினையை பிடித்துக்கொண்டு தொங்குகின்றனர். பிரபாகரன் இறந்தபிறகும் அவர்கள் இதை விடுவாதாக இல்லை. இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டது வேதனை அளிக்கும் நிகழ்வுதான். அதை யாரும் மறுக்கவில்லை. எனினும் அண்டை நாடான இந்திய தமிழர்களால் இதற்க்கு என்ன தீர்வு கண்டுவிட முடியும் ?

நிறைய பேர் பரிதாப பட்டார்கள். வேதனை பட்டார்கள். அவர்களால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். இந்திய அரசும் அதை கண்டுகொள்ளவில்லை. அன்றைய மாநில (தி.மு.க )அரசும் எதையும் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் போராட வேண்டுமெனில் நியாயமாக மத்திய அரசை எதிர்த்தும்,அன்றைய மாநில அரசின் முதல்வராக இருந்த கருணாநிதியை எதிர்த்துதான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு அப்பாவி இலங்கை யாத்திரீகர்களை எதிர்த்து ஏன் போராட வேண்டும் ?இல்லையெனில் இலங்கைக்கு போய் ராஜபக்சேயை எதிர்த்து போராட போகட்டும்.

நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் இன்னும் இரண்டு மூன்று பெரியார் திராவிட கட்சிகள் இவைகளுக்கு வேறு வேலையே இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு,தமிழர்களுக்காய் கட்சி நடத்திக்கொண்டு இவர்கள் அல்லும் பகலும் அனவரதமும் பேசுவதும்,ஓலமிடுவதும் பிரபாகரனை பற்றியும், செத்துமாண்ட விடுதலை புலிகளைப்ப்ற்றியும்தான் (இதில் சீமானும் ஒருவர் ) இதில் என்ன ஒரு பெரிய சோகம் எனில் இன்று ஈழத்தில் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் எந்த ஒரு ஈழத்தமிழனும் "தனி நாடு "கேட்கவில்லை. பூமியே வீடாக, ஆகாயமே கூரையாக கொண்டு தினம் தினம் செத்து பிழைக்கும் அந்த அப்பாவிகள் தங்களை நிம்மதியாக வாழவிட்டால் பொது என்கின்றனர்.

ஆனால் இங்கு மேடையில் தினம் தினம் சிங்கநாதம்தான் "ஈழம் அடைந்தே தீருவோம் "அடப்பாவிகளா...உங்கள் ஈழம் வரும்போது அதில் வசிக்க ஒரு தமிழன் கூட உயிரோடு மிஞ்சமாட்டாண்டா...(எழுதுகிறேன் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 08 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21971

(தொடருகிறேன் )

அங்கு (ஈழத்தில் )வெந்ததை தின்று, விதிவந்தால் சாவோம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிற மிச்ச சொச்ச தமிழர்களையும் இவர்கள் கணக்கில் எடுக்கவில்லை,இங்கிருந்து பிழைப்பு நிமித்தம் இலங்கை போய்வரும் இந்திய தமிழர்களின் நலனையும் இவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.

இப்படித்தான் எம்.ஜி ஆர் புதிய கட்சி ஆரம்பித்தபோது அவர் மலையாளி என்கிற வெறுப்பில் சென்னையில் உள்ள மலையாளி டீ கடைகளை ஒரு முட்டாள் கும்பல் அடித்து நொறுக்க, அடுத்த நாளே அதன் எதிர்வினை திருவனந்தபுரத்தில் தெரிந்தது.

வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடமிருந்து இந்த இயக்கங்களுக்கு நிறைய பணம் வருகிறது. இதை வைத்துக்கொண்டுதான் இவர்கள் இந்த போடு போடுகின்றனர். மத்திய அரசு இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழக மக்கள் இவர்களின் இந்த கோர நாடகத்தை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். எப்போதுமே சண்டை சச்சரவில் ஈடுபாடு கொண்டு அழியும் சில கல்லூரி இளவட்டங்களும், தமிழ்,தமிழன் என்று வறட்டு பெருமை பேசித்திரியும் சில உருப்படாத ஜென்மம்களும்தான் இது போன்ற கீழ்த்தரமான காரியத்தை செய்துள்ளார்கள்.

மக்களின் புறக்கணிப்பில் இவர்கள் கூடிய சீக்கிரமே காணாமல் போவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. பொறுப்பற்ற தன்மை
posted by: M.Fauz (A lAin - UAE) on 10 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22002

83 வண்செயளிலும் சரி,கதிர்காமம், திருகொநேஸ்வரம் வரும் தமிழ்நாடு பக்தர்களையும் சரி, வேண்டிய அளவு உதவிகளை மட்டும் செய்யும் இந்த இலங்கேயர்களைதான் அரசியல் லாபம் தேடும் ஒரு சிலரால் நடத்த பட்ட இந்த வேறிசெயளுக்கு வெட்கபடுகிறேன்,வேதனை படுகிறேன். இவ்வளவு நடந்தும் பொறுமை காத்த இலங்கையர்களுக்காக தலை நிமிர்ந்து பெருமை படுகிறேன்,நன்றி கூறுகிறேன். முஹம்மது பவுஸ். அல் ஐன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) on 10 September 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22003

மிகவும் அருமையான பதிவு. பாராட்டுக்கள். தொடர்ந்து நல்ல பல ஆக்கங்களை எழுதுங்கள்.

எங்கே செல்கிறது தமிழகம்? - பலருக்கும் புரியாத கேள்வி தான் இது?

இந்த நிகழ்வில் கூட பலமாதிரியான குழப்பங்கள்.

- வந்த அனைவர்களும் சிங்களவர்கள் தான் என்றார்கள்.
- பின்பு அவர்கள் சிங்களவர்கள் தான் ஆனாலும் தமிழ் பேசுபவர்கள் தான் என்றார்கள்.
-இல்லை சில தமிழர்கள் மட்டும் அந்த குழுவில் இருந்தார்கள்.
- ஏன் தமிழர்கள் அவர்களுடன் வரனும் என்றார்கள்..

தலை நிமிர்ந்தது இருந்த தமிழர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு தலைக்குனிவு தான்.

- சிங்கள மக்கள் தமிழகம் வரக்கூடாது.
- சிங்கள மாணவர்கள் தமிழகத்தில் விளையாடக்கூடாது..

போகிற போக்கைப்பார்த்தால் இனி,

- இலங்கை டீ குடிக்கக் கூடாது,
-சிலோன் புரோட்டா விற்பனை செய்யவோ, சாப்பிடவோ கூடாது,
- சிங்களத்து சின்னக்குயிலே..! என்ற பாட்டையும் கேட்கக் கூடாது என்றும் சொல்லுவார்கள்..

ஒன்றும் புரியலே..!
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved