Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:56:17 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 20
#KOTWART0120
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 16, 2012
என்று திருந்தும் காயல் நகர் மன்றம்?
இந்த பக்கம் 2302 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சாளை சலீம் அவர்கள் நகராட்சியின் தேக்க நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக சளையாமல் உழைத்தது உண்மை. 22.08.2012இல் என் வீடு வந்த அவர் ஒரு மணி நேரம் வரை ஊர் நலன் பற்றிப் பேசியது என்னையும் அந்த முயற்சிக்குத் துணை போகத் தூண்டியது. மாறாக, 5ஆவது வார்டு உறுப்பினர் தனது இணையதளத்தில் குறிப்பிட்டது போல, சமரசக் குழுவில் நானில்லை; ஆனால் எனது ஆசி இருந்தது.

இந்த வீடியோ பிரச்சினைதான் ‘வாடி, போடி’ என்று நகர்மன்றக் கூட்டத்தில் பேச வைக்கிறதோ என்று நினைக்கிறேன். இது கணனி உலகம். ஆம், கணனி - உலகத்தை கிராமமாக்கிவிட்டது. என்னைப் பொருத்த வரையில் ஒவ்வொரு கூட்டத்தையும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தாலும் தகும் என்பதாகும். அதற்கான ஆற்றல் இங்கு உண்டு. இதன் மூலம் உள்ளூரில் உள்ள மக்களும் மன்றத்தில் நடப்பது என்ன என்று அறிய முடியும்.

வீடியோ பதிவு செய்தால் சில குறிப்புகள் ஊறு விளைவிக்கலாம் என்று கருதினால் பதிவை நிறுத்தி - OFF THE RECORD ஆக அதனைப் பேசலாம். அதனை விடுத்து பதிவே வேண்டாம் என்பது கற்கால கருத்து.

ஓர் இணையதளத்தின் பிறப்புதான் வெளிநாடு வாழ் காயலர்களுக்கு நம்ம ஊர் செய்தியை உடனுக்குடன் தந்து தொடர்பை ஏற்படுத்தியது. இதன்மூலம் ஊருக்கு பல சமூக உதவிகள் கிடைத்ததை - கிடைத்துக் கொண்டு இருப்பதையும் குறிப்பிட வேண்டும். பல தளங்கள் வரட்டும்.

மேலும் மன்ற நிகழ்வில் செய்தி சேகரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஊடகத்திற்கும் உரிமை உண்டு. ஆஸ்தான ஊடகம் என்று எதுவும் கிடையாது. ஆனால் சில இடங்களில் FAVOURED MEDIA உண்டு. தமிழக அரசியலில் இதனைக் காணலாம்.

மேலும் வெளிநடப்பு செய்பவர்கள் சவரக்கடையில் நுழைவதும் - போவதும் போல, மீண்டும் தானே உள்ளே வருவதும், வந்தவர் கருத்துக் கூறுவதும், வாய்ச்சண்டையில் ஈடுபடுவதும் மரபல்ல. மறுப்பு உறுப்பினர் உள்ளே வந்தால் அவரது வெளிநடப்பு இரத்து ஆகிவிடும். இது கூட தெரியாத அரசியலாளர்கள்தான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். நம்மை ஆள்கிறார்கள்.

தலைவியிடம் கேள்வி கேட்க உறுப்பினருக்கு உரிமை உண்டு. பதில் தர தலைவிக்கு கடப்பாடும் உண்டு. ஆனால் பத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரே நேரத்தில் பத்து கேள்விகள் கேட்டால் பதில் தர வேண்டியவருக்கு பத்து வாய் உண்டா? தலைவியை மடக்க நினைப்பவர்கள் தலைவி தப்பிக்கவே வழி செய்கிறார்கள் இதன் மூலம். நகர்மன்ற தேக்க நிலை போக்கப்பட வேண்டும்; அது செயல்பட வேண்டும்; யார் குத்தியும் அரிசியாக வேண்டும் என்பதுதான் எங்கள் அவா. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் ...

தொலைக்காட்சி நிருபர்களை அழைத்தது யார்? கிழக்கே வசிக்கும் அன்பர் ஒருவர் 02.09.2012 அன்று மாலையில் என்னை சந்தித்தபோது, தானே தூத்துக்குடியில் உள்ள நிருபர்களை தொலைபேசியில் அழைத்ததாகவும், நகர்மன்றக் கூட்டம் மூன்றாம் முறையாகவும் வெளிநடப்பாகப் போகிறது; அதனை ஒளிபரப்பி, கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு வந்து, மன்றத்தைக் கலைக்க வழி செய்யுங்கள் என்று கேட்டதாகவும் சொன்னார். இது பொருத்தம்தானா?

மன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடு இல்லாது, கோபம் கொப்பளிக்க உடலாலும் - நாவாலும் செயல்படுவது வீடியோ பதிவு அவசியம்தான் என்ற கருத்தை எனக்கும் தந்தது. என்னிடம் அன்று தன்னிலை விளக்கம் தந்த உறுப்பினர் ஒருவர் “உற்சாகத்தில்” மிதந்ததையும் நான் அவதானித்தேன். இந்நிலையில் மன்றத்தை நடத்துவது எப்படி?

இறுதியாக, இன்றைய வெளிநாடு வாழ் காயலர்கள் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தங்கள் சுய விருப்பில் தங்களது நேரத்தையும் - பணத்தையும் ஒதுக்கும் அவர்கள் ஊரில் நல்லாட்சியை விரும்புகிறார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை என்பதே உண்மை. நகர நிர்வாகத்தில் ஏகப்பட்ட தாமதம், குழப்படிகள் உண்டு. எனக்கு இதில் சொந்த அனுபவமும் உண்டு. எந்த நாட்டு மன்னராக - தலைவராக - துரையாக இருந்தாலும் மண்ணின் மைந்தர்கள் என்ற அமைப்பில், பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயலால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே குரல் எழுப்ப உரிமை உண்டு.

அதிகாரம், கலந்தாலோசனை, சூரா என்ற வார்த்தைகள் அதிகம் அடிபடுகின்றன. அனைத்தும் அவசியமே. ஆனாலும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்க்கு சில வரையறைக்கு உட்பட்டு - அவசியம் கருதி - சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரமும் உண்டு. தமிழக அரசியலின் இரண்டு முக்கிய தலைவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்தாவது இது புரியாதா?

அதை விடுத்து, “நீங்களே எல்லாம் செய்தால் நாங்கள் என்ன மயிருக்கு இருக்கிறோம்?” என்று உதிர்த்த வார்த்தைகள் கண்ணியக் குறைவானவை - அதுவும் ஒரு பெண் முன்னால்.

என்று திருந்தும் காயல் நகர் மன்றம்?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:.. .
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 16 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22202

ஷாஹ்ஜஹான் துரை அவர்கள் கொழும்பிலிருந்து வந்து வெகு நாட்கள் ஊரில் இருப்பதில்லை. இந்த முறை இருந்துவிட்டீர்கள். . அதனால் ஏற்பட்ட விளைவுதான் இந்த கட்டுரை.

கடந்த கால காயல்பட்டினம் வரலாறு அறியாதவர்களா நீங்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்று சில இடங்களில் இந்தியாவை பற்றி பேசுவார்கள். UNITY IN DIVERSITY . ஆனால் நமதூர் வேற்றுமையே ஒற்றுமை என்று முழங்கும் ஊர். நாம் எந்தக்காலத்திலும் எந்த விஷயத்திலும் ஒன்று பட்டு நின்று ஒரு காரியத்தை சாதித்ததில்லை. அது ஆன்மீகமானாலும் சரி லவ்கீகமானாலும் சரி. நமது பலமே நமது ஒற்றுமையின்மைதான்.

இந்த நகர்மன்றதுக்கு தலைவி தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிறகு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அசாதாரண நிகழ்ச்சிகள். அந்த நேரத்தில் நடந்த அறிக்கை போர்கள் நியாய அநியாயம் பற்றிய அலசல்கள் இப்போது சொல்லி பயனில்லை

நகர்மன்றதுக்கு ஒரு ஆண்தான் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட இருந்தது. திடீரென ஒரு அரசாணை மூலம் பெண் தலைவி என்ற நிலை ஏற்பட்டது.. நீதிமன்றத்திலே மெகா என்ற ஒரு அமைப்பு வழக்கு தொடர்ந்தார்கள் அரசு ஆணைக்கு எதிராக.. அந்த வழக்கு தீர்ப்பு அன்றே வந்திருந்தால் இந்த தொல்லைகள் வந்திருக்காது. நமது நாட்டு நீதி கால தாமதமாகத்தான் வரும். அந்த தீர்ப்பு வருவதற்குள் ஐந்து வருடங்கள் உருண்டு ஓடிவிடும். அதற்கிடையில் இப்படியான நிகழ்சிகளை நாம் சகித்துகொள்ளத்தான் வேண்டும்.

எனவே அறிக்கை போரில் உங்களை ஆட்படுத்திக்கொண்டு உங்கள் உணர்வுகளை இங்கே வெளிப்படுதிக் கொண்டிருக்காதீர்கள். நடுநிலையாளர்கள் வேதனையுடன் அவதாநிதுக் கொண்டிருக்கிரார்கள். செய்வது அறியாது கை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகல் ஒன்று வந்திடுமே....நம்பிக்கை என்பது வேண்டும் உன் வாழ்வில்....நன்மைகள் நிச்சயம் நடக்கும் ஒரு நாளில்...மனமே ஒ மனமே நீ மாறிவிடு,, மலையோ பனியோ நீ மோதிவிடு .என்று ஒரு பாடல் நீங்கள் கேட்டதுண்டா.

இப்போது மோதிப் பார்பவர்கள் இன்னொரு நாளில் நினைத்துப்பார்ப்பார்கள். அதுவரை உங்களுக்கு ஓர் இடைவேளை. இலங்கை சென்று வாருங்கள். அல்லது இங்கே நடப்பதை அமைதியாக அவதானிதுக் கொண்டிருங்கள். அடுத்து wikileaks media வில் உங்களைப்பற்றி விமர்சனம் வரும். எதிர்கொள்ள தயாராகுங்கள்.சமரச நாயகனே, வாழ்த்துக்கள். . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: Peena Abdul Rasheed (Riyadh) on 17 September 2012
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22227

உங்கள் கட்டுரை கருத்து என் கருவிழி நனைந்தது. போதும் இந்த உபையம் இல்லாத மழை என்று விடியும் நல்ல பொழுது. ஏன் வந்தது நமது ஊருக்கு இந்த கானல்நீர். கருணை உள்ள இறைவன் நம் ஊருக்கு நல்ல கருத்து ஒற்றுமை தருவான் இந்த பயன் இல்லா மழை கூட பயன் பட வைப்பான் அமீன். அல்லாஹ் நம் ஊருக்கு நல்லது தருவதை யாரக இருந்தாலும் தடுக்க முடியாது. பொறுமையுடன் இருப்போம் பொறுப்பாளன் கூடிய விரைவில் நல்லது செய்வான் அமீன்.

உங்களை போன்று ஊருக்கு நல்லதை விரும்பும்
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: salai s nawas (singapore) on 17 September 2012
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22228

துரை மாமா அவர்களின் கட்டுரை மிகவும் யதார்த்தமாக உள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் பத்து கேள்விகள் கேட்டால் பதில் தர வேண்டியவருக்கு பத்து வாய் உண்டா? தலைவியை மடக்க நினைப்பவர்கள் தலைவி தப்பிக்கவே வழி செய்கிறார்கள் என்ற கூற்று மிகவும் சரி.

தயவு செய்து தலைவியின் தலைமைத்துவத்தை உணர வாய்ப்பு கொடுங்கள். தனி தனியாக நின்று கேள்வி கணைகளை தொடருங்கள். அப்போதுதான் உண்மையில் தலைவியின் திறமை அல்லது ஆற்றாமை தெரிய வரும்.

வாழ்த்துக்கள் துரை மாமா.
- அன்புடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved