Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:54:08 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 39
#KOTWART0239
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 14, 2015
சமர்...!
இந்த பக்கம் 3539 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நேற்றுத்தான் அவனைப் பார்த்தேன்
எலும்புகள் துருத்தும் கன்னம்
தழும்புகள் நிறைந்த வண்ணம்
சிரிக்க முயன்று - அல்லது
சிரிப்பதாய் நினைத்தபடி
கடந்து போனான்.

நகரத்து இன்றைய மரண அறிவிப்பில்
சிரித்தபடி செய்தியானான்.

ஒருக்கண்ணில் மணாளன்
ஒருக்கண்ணில் மக்கள்
பறவை போல் சிறகு பரப்பி
பாசத்தால் கட்டிய கூட்டை
பற்றிய புற்றுக் கொண்டு
பாதியிலேயே விட்டுப் போனாள்.

இவர்கள் மரணித்து விடுவார்கள் என்ற
எதிர்ப்பார்ப்பில் தான் - இங்கே
பல திருமணங்கள் நிச்சயிக்கபடுகின்றன.

எங்கள் ஊரின் - ஒவ்வொரு குடும்பத்திலும்
குறைந்த பட்சம்
ஒரு ஆலிம் - ஒரு ஆலிமா
ஒரு ஹாபிழ் - ஒரு ஹாபிழா
ஒரு எஞ்சினியர் - ஒரு வியாபாரி
ஒரு அயல் தேசத்து சபராளி
கூடவே
ஒரு புற்று நோயாளியும்...

இது சமர் –
சகோதரர்களே......!
அதிர் முரசின் அதிர்ச்சி அறிவிப்பின்றி
முப்படைகளின் முற்றுகையின்றி
ஒரு –
சிறு மக்கத்தின் மக்கள் மேல் திணிக்கப்பட்ட
அறிவிக்கப்படாத போர்.

சுவாசத்தை மாசுப்படுத்தும்
சப்தமின்றி ஒரு சந்ததிதியை
ஆக்சிஜென் இன்றி
அழித்து விடும் - இரசாயனப் போர் ...

மக்களே ...!
நம் இருப்பை நிச்சயப்படுத்த
நம் முன்னே
இரண்டு வழிகளே உள்ளன...

ஒன்று - சண்டையிடுவது
ஒன்று - சரணைடைவது ...

முன்னதற்கு - ஒற்றுமையில்லை
பின்னதற்கு - உத்தரவாதம் இல்லை ...

எனில்

கலிமா சொல்லி காற்றில் கரைந்திடுவோமா?
காயலின் அடையாளத்தை
இந்திய வரைப்படத்தில்
இரசாயன தீட்டாய் மாற்றிடுவோமா?

சந்ததிகளின் சாபத்திற்கு ஆளாகிப்போமோ?
கேள்வி சூழ் குழப்ப மனதில்
ஏனோ - வந்து போகின்றது
சபிக்கப்பட்ட அசோகரின் வாளும்
அலங்கரிக்கப்பட்ட அப்துல்கலாமின் ஆசனமும்...

அசோகர் மன்னிக்கப்பட்டதும்
அப்துல்கலாம் ஆதாரிக்கப்பட்டதும்
வாழ்வின் போதே அவர்கள்
வளர்த்த மரங்கள் கொண்டே ...

மனிதன் பெற்ற மகவு - விஷம் தூவி
பூமிப்பந்தை சிதைக்க
மரங்கள் பெற்ற மகவு - அக்சிஜென் பரப்பி
பூமிப்பந்தை புதுப்பித்தது.

ஒன்று நிச்சயம்
வரும் காலங்களில் - தருமம் என்பது
மரம் வளர்த்தல் என்பதேயாம்.
இனி,
தருமஸ்தன் - என்பதை
நட்ட மரங்களின் கூட்டுத்தொகை கொண்டே
வரலாறு பதிவு செய்யும்.

ஆதலின்
ஒரு மகவு பெறின்
இரு மரக்கன்று நடவேண்டும்
ஒரு மகளும் - மூன்று மரங்களும்
உள்ள வீட்டில் உறவு கொள்ளல் வேண்டும்.

மரங்களடர்ந்த தோட்டமும்
வீட்டின் எதிர்புறம் ஒரு மரமும்
அமைந்த வீடு வரம்

இதுவரை
பணம் கொண்டு விஷம் தூவிய
இயற்கை எதிரிகளை
மரம் கொண்டு - ஆக்சிஜென் தூவி அழிப்போம்.

--------------------------------

பி.கு.:

இதற்கான முன்னெடுப்புகள்
மார்க்க அறிஞர்களும், ஆசிரியர்களும்
இணைந்து
மதரசாக்களிலும், பள்ளிக்கூடங்களிலும்
இருந்து - தொடங்கினால்
ஜெயம் - நிச்சயம்.


முஸ்தாக் அஹ்மத்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: k.m.s.dawood (chennai) on 16 September 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41861

அஸ்ஸலாமு அலைக்கும்.

நண்பரின் நீண்டநாளுக்கு பிறகு உதிர்ந்த கருத்துள்ள கவிதை மஷல்லாஹ் வெரி குட்

நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்

மரம் வளர்ப்பது அரோக்கியமான வாழ்விற்கு வலுவூட்டும் சந்ததியர் களுக்கு பயனளிக்கும்

இன்ஷா அல்லா ஆரம்பிப் போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. அன்புத்தம்பிக்கு அகம் கனிந்த வாழ்த்துக்கள்!
posted by: முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) on 10 October 2015
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 41959

அன்புத்தம்பி முஸ்தாக்கே உன் இரண்டு ஆக்கங்களும் மாஷா அல்லாஹ் மிகவும் அருமை!

அகிலத்தின் நடப்புகளில் நன்மை பயக்கும் நிகழ்வுகளை இலக்கிய நயமெனும் கிண்ணத்தில் கவிதைத்தேன் வடித்து வார்த்தை வசீகரம் என்ற வர்ணங்களை மேலே படியசெய்து தந்திருக்கும் பானத்தின் சுவை இதயம் முழுக்க இனிக்கிறது!

ஒருபொருளை அழகாக அலசும் உன் நுண்ணிய புத்திகூர்மை பாராட்டி போற்றத்தக்கது, அந்த கூர்மையின் முனையை என் இண்ணிவிரல் கொண்டு தொடக்கூட தயங்குகிறேன் என்விரல் கிழிந்துவிடுமோ என்று

என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள். இன்னும்,இன்னும் பாராட்டுகளை எல்லோரிடமிருந்தும் பெற உன் இலக்கிய கவி,கட்டுரை பயணங்கள் தொடரட்டும்.தொய்வில்லாமல். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .

அன்புநிறை அண்ணன்,
முஹம்மது ஆதம் சுல்தான்! ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: AlS Mama (Kayalpatnam) on 15 October 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42014

A.L.S. மாமா
முன்னால்: ப(h)லம் பத்திரிகை ஆசிரியர்
இணையதள எழுத்தாளர்/சமூகநல ஆர்வலர்
காயல்பட்டடிணம்.

அஸ்ஸலாமு அலைக்கும்:

2015 செப்டம்பர் 14 - ல் கவிஞர் முஸ்தாக் அஹமத் கவிதையான சமர் வாசித்தேன். 18ஆம் வரியில் காயல்நகரில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் ஒரு ஆலீம் ஒரு ஆலிமா - ஒரு ஹாபிழ் ஒரு ஹாபிழா வரிசைபடுத்தி பாராட்டி விட்டு கூடவே ஒரு புற்று நோயாளியும் இருப்பதாக கவி வரி நெஞ்சை தொட்டு கண்ணீர்யிடச் செய்து இன்றைய காயல் நிலை குறித்து எழுதி உள்ளீர்கள். உங்களின் இந்தகவிவரியை நமதூரில் பொது சேவை அரங்கில் உங்கள் பெயர் கூறி படித்து காட்டினார்கள். அரங்கில் இருந்தோர் இதயத்தில் இடம் பிடித்தீர். 64வது வரியில் வரும் காலத்தில் நட்ட மரங்களின் கூட்டுத்தொகை கொண்டே வரலாறு பதிவு செய்யும் என்றவரியும் மரத்தடியில் நின்ற நிழல் தரும் சுகம் போல் இருந்தது. என்னுடைய கட்டுரைகளில் மரம் வளர்க்கா விட்டாலும் பரவாயில்லை இருக்கும் மரத்தை வெட்டாதீர் என்று எழுதுவதுண்டு. நாம் அறிய வீதியில் நின்ற வேப்பை மரம் காணாமல் போயிற்று. அக்கரை இல்லாத மனிதர்களால் இது நடந்துவிட்டது. மரம் விடும் ஆக்ஸிஜன்தான் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் சுகம் தருவதோடு மழை அழைக்கும் ஒரு வேதியியல் பொருளாகும். இதில் வைட்டமின் நிறைந்திருப்பதை மக்கள் உணர்வதில்லை. நமதூர் அப்பாபள்ளி தெரு வழியாக போனால் வேப்ப மரநிழல் தரும் சுகத்துடன் உற்சாகமாக போக முடியும். வேப்பங்காற்று நோய் தீர்க்ககும் மருத்துவக் காற்று சென்ற காலத்தை மறப்போம். வருங்காலத்தில் வீதி எங்கும் வேப்ப மரம் வளர்ப்போம் வீட்டுத் தோட்டத்தில் பெருநெல்லி, மா, முருங்கை மரம் வளர்த்து நம் தேவைக்குபயன் படுத்தலாம். பள்ளிவாசல் மைய்ய வாடியில் பலா, நாவற்பழமரம், அத்திமரம், புளியமரம்அரசு ஆலமரம் மற்றும் மஞ்சனத்தி மருத்துவமரம் வளர்க்க சரியான இடம் பள்ளி நிர்வாகம் மனதில் இதை பதித்தால் வளரும் தெருவாசிகள் பலன் பெறுவார்கள். ஊரும் நலன்பெறும் செய்வார்களா?

- A.L.S. மாமா (ஓவியர்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. இறகாய் மாறிய இதயங்கள்
posted by: முஸ்தாக் அஹமது (குவைத்) on 17 October 2015
IP: 37.*.*.* | Comment Reference Number: 42019

பேறு கால எதிர்பார்ப்பிற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு எழுத்தானின் படைப்பு ..

பிரசவித்தப் பின் உச்சி முத்தும் சொந்தங்களை தேடுவது போல பிரசுரத்திற்குப் பின் விமர்சனங்களை தேடி தவமிருக்கும் எழுத்தாள இதயம்

ஒரு இருக்கமான நேரத்தில் என்னை உற்சாகப்படுத்திய என் முதல் ரசிகன் நண்பன் தாவூது என்னை எப்போதும் செ துக்கி செம்மைப் படுத்தும் ஏ எல் எஸ் மாமா மற்றும் உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு என் உடன் பிறவா சகோதரர் சுல்த்தான் காக்கா மற்றும் வாட் சப்பின் மூலம் பாரட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். திட்டோ பாராட்டோ பதிந்து விடுங்கள் " அதுவே போதும் இன்னும் பறக்க எளக்கு இறகுகள் ஆகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved