Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:02:17 PM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 44
#KOTWART0144
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 1, 2013
வட்டி எனும் பெரும் பாவம்!
இந்த பக்கம் 4666 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு !

வட்டி எனும் பெரும் பாவம் - "இறைவனுடன் போர் புரிவதற்கு சமமானதாகும்" என்று இஸ்லாம் தெளிவாகக் கூறியுள்ளது !

நமது வங்கி சேமிப்பு கணக்கில் வரும் வட்டி பணத்தை என்ன செய்வது?

நாம் அந்த வட்டி பணத்தை ஏழை முஸ்லீம்களுக்கு கொடுக்கலாமா?

அல்லது, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமா?

வட்டி பணத்தை, எடுப்பதே ஹராமா?

அல்லது, அந்த வட்டி பணத்தை வங்கி கணக்கில் விட்டு வைப்பது சரி ஆகுமா?

இஸ்லாமிய பத்வாக்கள் என்ன கூறுகின்றன?

அனைத்துக்கும் மேலாக , யார் இதனை இஸ்லாமிய பத்வாக்கள் அடிப்படையில் செயல் படுத்துவார்கள்?

இறை அச்சம் உள்ள மூமின்கள் அனைவருக்கும் , இது போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் ...

இதற்கு விடை தான் என்ன?

அல்ஹம்த்துலில்லாஹ் ! அனைத்து கேள்விகளுக்கும் விடை உருவாகி உள்ளது!


"SERVE ALL FOUNDATION", சென்னை

உலகம் முழுவதிலும் இருந்து, பிரபலமான 9 ஃபத்வாக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

1. அல்-அசர் இஸ்லாமிய பல்கலைகழகம் - கைரோ , எகிப்து

2. இஸ்லாமிய பிக்ஹ் அகாடமி - மக்காஹ்

3. தாருள் உலூம் - தேவ் பந்த்

4. தாருல் இப்ஹ்தா - டர்பன், சவுத் ஆப்ரிக்கா

5. முபாரக் மதனீ - இலங்கை

6. ஷேக். அஹமது குட்டி, கனடா

7. ஐரோப்பிய ஷரியா கவுன்சில்

8. ஷேக். ஆசிம் L . அல் ஹகீம் - சவுதி அரேபியா

9. இஸ்லாமிய ஷரியா கவுன்சில் - நைரோபி, கென்யா


அனைத்து ஃபத்வாகளும் "இவ்வாறு வருகின்ற வட்டி பணத்தை, தனது வங்கி கணக்கில் இருந்து அகற்றுவது , முக்கியமான கடமையாகும்" என்று ஒருமித்த கருத்தையே, உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகின்றன!

இந்த ஃபத்வாகளின் அடிப்படையில் , "SERVE ALL FOUNDATION ", 36 அறங்காவலரைகளைக் கொண்ட அறக்கட்டளை 30.04.2013, "இந்தியன் அறக்கட்டளை சட்டம் 1881 , பதிவு எண் : 72 / 2013 பதிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளை “ஷரியா அடிப்படையில்” செயல்படும். இதற்காக மூன்று உலமாக்கள் கொண்ட ஷரியா ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. அப்துஸ் சலாம் மதனீ :
தலைவர் : இஸ்லாமிய கல்வி, பிரஸ்டன் கல்லூரி, சென்னை

2. ஃபயாஸ் ஆலம் உமரீ:
தலைமை இமாம், அஞ்சுமன் , சென்னை

3. ஷம்சுதீன் காசிமி:
தலைமை இமாம், மக்காஹ் மஸ்ஜித் , சென்னை


ஃபத்வா

ஷேக். அஹமது குட்டி : இஸ்லாம் ஆன்-லைன் : 03/Mar/2005

கேள்வி: அன்பார்ந்த அறிஞர்களே , அஸ்ஸலாமு அலைக்கும். நான் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கு , வட்டி தரப்படுகின்றது . இது ஹராமா? ஆம் என்றால் , நான் இந்த வட்டிப் பணத்தை என்ன செய்ய வேண்டும்? ஜசாகுமுல்லாஹ் க்ஹைரன் !


பதில்: வ அலைக்கும் அஸ்- சலாமு வ ரஹமதுல்லாஹி வ பரகாத்துஹு. அளவற்ற அருளாளனும் , நிகரற்ற கிருபை உடையவனுமாகிய , எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் ! எல்லாப் புகழும் , நன்றியும் , அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்ததாகும் ! அவனுடைய தூதர் மீது சாந்தியும் அருளும் உண்டாகட்டும் !

வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும் .

பல மார்க்க அறிஞர்கள் வழங்கிய பத்வா: "வங்கி தரும் வட்டி பணத்தை , நம் வங்கி கணக்கில் இருந்து எடுத்து , அதனை அல்லாஹ்விடம் எந்த கூலியையும் எதிர் பார்க்காமல் , தர்ம காரியங்களுக்கு செலவிடலாம் ."

ஒருவர் தன்னுடைய தேவைகளுக்கு அதனை பயன் படுத்தக் கூடாது .

இன்ஷா அல்லாஹ் , "ஒருவர் இவ்வாறு தனது வங்கி கணக்கில் இருந்து வட்டி பணத்தை அகற்றுவதின் மூலம், தன்னுடைய பணத்தை தூய்மை படுத்தியதற்கான நன்மையை பெறுவார்."

ஷரியா நிலைப்பாடு : "வங்கி , நம் கணக்கில் இருக்கும் பணத்தோடு , வட்டி தொகையையும் சேர்த்து விடுகின்றது ;

மொத்த பணமும் வங்கியிடமே இருக்கின்றது . ஆகையால் , வட்டி தரும் வங்கியிடமே , அந்த வட்டி பணத்தை விட்டு வைப்பது முறையல்ல .

வங்கியின் வியாபார அடிப்படை முறை ' வட்டியை ' சார்ந்ததாகும் ;

இவ்வாறு இருப்பின் , நாம் நமது வட்டி பணத்தை வங்கியிலேயே விட்டு வைப்பது, வட்டி எனும் பெரும் தீமை பெருகுவதற்கு வழி வகுக்கக் கூடும் ;

தீய செயல்கள் செய்பவர்களுக்கு , மேலும் பண அதிகாரத்தை கொடுக்கும்."

ஆகையால், ஒருவர் தன்னுடைய பணத்தை வங்கியில் தூய்மையாக வைத்திருப்பதற்கு , வட்டி பணத்தை ' முஸ்லிம் தொண்டு நிறுவனங்களுக்கு' கொடுப்பது சிறந்ததாகும் .

இதற்கு மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட வாய்ப்பு – உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்திருக்கும் வட்டி பணத்தை , மருத்துவமனைகள் , அநாதை விடுதிகள் , அகதிகள் , மற்றும் பொது நல காரியங்கள் கொடுப்பது சிறந்ததாகும் .

இவ்வாறு நீங்கள் செய்யும் போது, இன்ஷா அல்லாஹ் 'தீமையை விலக்கும் கடைமையும் நிறைவேற்றுவீர்கள்; உங்கள் மீது எந்த பாவமோ அல்லது குற்றமோ சுமத்தப்படாமல் பாதுகாத்துக் கொள்வீர்கள்.'

எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன் !


செர்வ் ஆல் பவுண்டேஷன் நோக்கம்

அ) ஒவ்வொரு முஸ்லிமின் வங்கி கணக்கில் , தனித் தனியாக வரும் வட்டி பணத்தை ஒன்றாக சேகரிப்பது ;

ஆ) இவ்வாறு மொத்தமாக சேகரிக்கப்பட்ட பணத்தை , அல்லாஹ்விடம் எந்த பலனையும் எதிர் பார்க்காமல் கீழ் கண்ட நற்காரியங்களுக்கு , முறையான விதத்தில் பயன்படுத்துவது .

பயனாளிகள்

அ) மருத்துவ உதவி : கேன்சர் , கிட்னி நோய்கள் , இருதய நோய்கள், ஊனமுற்றவர்கள், அவசர ஆபரேஷன் ...

ஆ) கடனாளிகளை மீட்பது : வட்டியினால் பாதிக்கப்பற்றிருக்கும் கடனாளிகளை மீட்பது.

இ) சுகாதார உதவி : கிராமப்புறங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் செய்வது (தனி பாத்ரூம் கட்டுவது etc)

ஈ) நீதி உதவி : சிறையில் இருக்கும் குற்றமட்ட அப்பாவி மக்களுக்கு , நீதிமன்ற செலவுகளுக்காக உதவி செய்வது ; கலவரங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி புரிவது .

உ) பேராபத்து நிவாரண உதவி : நில நடுக்கம் , வெள்ளம் , தீ விபத்து , சுனாமி போன்ற பேராபத்து நேரங்களில் நிவாரண உதவி செய்வது.

ஊ) கல்வி உதவி : கல்வி ஊக்கத் தொகை வழங்குவது .

இது போன்ற அறக்கட்டளை ஏன் தேவை?

பிரபல செய்தி தாள்களில் வெளிவந்த தகவல்கள் :

"இந்தியன் ரிசர்வ் வங்கியின் " அறிக்கைப்படி, கடந்த 30 ஆண்டுகளில், தனித் தனி முஸ்லிம் வங்கி கணக்குகளில் வட்டி பணம் எடுக்கப்படாமல் , அது இன்று மொத்தமாக சேர்ந்து, பல லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பல லட்சம் கோடி பணம் யாருக்கும் பயனின்றி முடங்கி கிடக்கின்றது.

மேலும், இத்தொகை ஆண்டுத்தோறும் , 10 - 15 % உயர்ந்து கொண்டே போகின்றது.

இந்தியாவில் உள்ள பல முஸ்லிம் உலமாக்கள் , அரசியல்வாதிகள், பொருளியல் வல்லுனர்கள் , 'முடங்கி கிடக்கும் பல லட்சம் கோடி பணம் ஏழை மக்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றனர். வெகு சில நபர்கள் , தங்கள் வங்கி கணக்கில் வரும் வட்டி பணத்தை , தங்களுக்கு தெரிந்த ஏழைகளுக்கு கொடுக்கின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது இதனை செய்கின்றனர் .

'முடங்கி கிடக்கும் பல லட்சம் கோடி பணம் , ஏழை மக்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்பட பட வேண்டும் ' என்றால் , அதற்கு கூட்டு முயற்சியும் , முழு நேர ஒருங்கிணைந்த உழைப்பும் தேவை !

இந்த நோக்கத்தை செயலாக்கவே, " செர்வ் ஆல் பவுண்டேஷன்" என்ற முதல் படியில், அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது !

நெடுங்கால நோக்கம்

அ) சென்னையில் முதல் கட்டமாக செயல்படும்.

ஆ) நமக்கு அறிந்தவர்களிடம் , இந்த அறக்கட்டளையைப் பற்றி தெரிவிக்கப்படும்; இந்த நபர்கள் அவர்களிடம் சேர்ந்துள்ள வட்டி பணத்தை அறக்கட்டளைக்கு அனுப்பலாம் ; மேலும் அவர்கள் பயனாளிகளையும் சிபாரிசு செய்யலாம்.

இ) முதல் இரண்டு ஆண்டுக்குள் இந்த அறக்கட்டளையைப் பலப்படுத்த, அனைத்து முயற்சிகளையும் நாம் கூட்டாக செய்ய வேண்டும்.

ஈ) நம்முடைய முயற்சிகளை , செயல் வடிவில் நடைமுறை படுத்திய பின்னர், NGO அங்கீகாரம் பெற முயற்சிகள் எடுக்கப்படும்.

உ) அதே சமயத்தில், இந்த அறக்கட்டளை தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் , சிறு நகரங்களிலும் , கிராமப்புரங்களிலும் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்படும். பிறகு இந்தியா முழுவதும் இதனை பரவச்செய்ய முயற்சிகள் எடுக்கப்படும்.

அறங்காவலர்கள்

1. CHAIRMAN : JANAB. S. AHAMED MEERAN
THE PROFESSIONAL COURIERS,
FOUNDER : UNITY PUBLIC SCHOOL


2. VICE CHAIRMAN : JANAB. A. MOHAMED ASHRAF
HABEEB TANNING COMPANY,
HONY. SECRETARY : MEASI


3. SECRETARY : JANAB. S. IMTIAZ AHAMED
L.K.S. GOLD PARADISE, CATHEDRAL ROAD

4. JOINT SECRETARY : JANAB. IMRAN HUSAIN
RETIRED BUSINESSMAN

5. TREASURER : JANAB. AHAMED MOHAMED
AMSON FURNITURE

6. JOINT TREASURER : JANAB. T.C. MOHAMED RIAZ
TIMBER BUSINESS ( N K M GROUP )

7. BOARD MEMBER : JANAB. A.S. ABDUL BASITH
SALMA LEATHERS

8. BOARD MEMBER : JANAB. S. IBNU SOUD
TAYSEER CONSULTANT (P) LTD , OMIET

9. BOARD MEMBER : JANAB. AVAIS MUSVEE
CONCORD TEXTILES

10. BOARD MEMBER : JANAB. MOHAMMED A. AFZAL
PARVEEN TRAVELS INDIA (P) LTD

11. BOARD MEMBER : JANAB. A.K. MOHAMMED HANIFA
APOLLO WATERS

12. TRUSTEE : DR.A.M.SALAHUDDIN
VICE PRESIDENT - ANJUMAN

13. TRUSTEE : JANAB. C. ABDUL MALICK
AUDITOR , MALICK NIYAZ & CO

14. TRUSTEE : JANAB. M. ABDUL JABBAR
SECRETARY, KEELAKARAI WELFARE ASSN.

15. TRUSTEE : JANAB. M.S. TAJUDEEN
SEAPORT LOGISTICS (P) LTD

16. TRUSTEE : JANAB. H. ABDUR RAQEEB
General Secretary : National Committee on Islamic Banking Convenor : Indian Centre for Islamic Finance

17. TRUSTEE : JANAB. S.M. ABDUR RAHEEM PATEL
SECRETARY, .ALL INDIA MILLI COUNCIL,TN

18. TRUSTEE : JANAB. M.P. ASHRAF
INDIAN TIMBER IND (P) LTD

19. TRUSTEE : JANAB. JAMAL MOHAMED EBRAHIM (RIZWAN)
PARTNER: GOWNER BEEDI

20. TRUSTEE : JANAB. UMMER PARTNER
ORCHID SHOES

21. TRUSTEE : JANAB. M.H. JAWAHIRULLAH
MLA , RAMANATHAPURAM

22. TRUSTEE : JANAB. KAR. SYED
DIAMOND PUBLICITIES (P) LTD

23. TRUSTEE : JANAB. N.BASHEER AHAMED
UCMAS INDIA (P) LTD

24. TRUSTEE : JANAB. M.K.E. UMMER ABDUL CADER
BUSINESS

25. TRUSTEE : JANAB. S.S. AHAMED RIFFAI
AUDITOR : RIFFAI & CO

26. TRUSTEE : JANAB. B.N. KHAISER
V.M. BUS SERVICES Al – Hira School

27. TRUSTEE : JANAB. M.H. JIFFRI KASIM
ASIATIC TRADING COMPANY, Al- Fajr School

28. TRUSTEE : JANAB. ABDUL HAMEED KHAN
WATER WORKS , ALLIED CERAMIC

29. TRUSTEE : JANAB. MOHAMED IMTIAZ
NKM TIMBERS

30. TRUSTEE : JANAB. OMAR JAMEER
ENKAYEM TIMBERS

31. TRUSTEE : JANAB. K. ANEES AHAMED
PARTNER : KAMIL LEATHERS

32. TRUSTEE : JANAB. M. SYED ABU THAHIR
DIRECTOR: FISHERMAN FARE

33. TRUSTEE : JANAB. K.NAVAS KANI
MANAGING DIRECTOR, ST COURIER

34. TRUSTEE : JANAB. V.P. NAIMUR RAHMAN
NADEEM LEATHERWARE EXPORTS

35. TRUSTEE : JANAB. A.MOHAMED ELYAS SAIT
WHITE HOUSE

36. TRUSTEE : JANAB. MANDI MOHAMED ASLAM
AIRGO LOGISTICS.



இந்த அறக்கட்டளைக்கு நீங்கள் எவ்வாறு உறுதுணையாக செயல்படலாம்?

அ) இந்த கூட்டு முயற்சி முறையை , உங்களுக்கு தெரிந்த முஸ்லிம் வட்டாரத்தில் , விளக்கி சொல்லலாம் .

ஆ) மேலும் உங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் .

இ) உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்துள்ள வட்டி பணத்தை , இந்த அறக்கட்டளைக்கு அனுப்பலாம்

ஈ) உங்கள் உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரையும் , அவர்கள் வங்கி கணக்கில் சேர்ந்துள்ள வட்டி பணத்தை , இந்த அறக்கட்டளைக்கு அனுப்ப செய்யலாம் .

உ) தகுதியான பயனாளிகளை பரிந்துரைக்கலாம் .

வங்கி கணக்கு விபரம் :

BANK : AXIS BANK
ACCOUNT NO : 913020023402404
NAME : SERVE ALL FOUNDATION
IFSC CODE : UTIB0000006

மேலும், விபரங்களுக்கு , விளக்கங்களுக்கு என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ், என்னால் முடிந்தவற்றை இதற்காக மேற்கொள்வேன்!

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தி , நம்முடைய இந்த கூட்டு முயற்சியை வெற்றியாக்கி , ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக்கி வைப்பானாக!

ஆமீன்!

On Behalf Of SERVE ALL FOUNDATION

S. Imtiaz Ahamed,
Hony. Secretary

phone : 98410 72722
e-mail : lks.imtiaz@gmail.com

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்துக்கள்
posted by: A.S.L.சதக்கத்துல்லா (சென்னை 86) on 02 August 2013
IP: 101.*.*.* India | Comment Reference Number: 29148

அழகான கூட்டு முயற்சி வெற்றிபெற வாழ்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...எங்கே இருந்தீர்கள் சகோதர்களே?
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 02 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29159

அற்புதமான அழைப்பு, அருமையான உழைப்பு, மன நிறைவு தரும் தீர்ப்பு. மிக்க சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் இந்த புனித ரமலான் தலை பிறையில் வெள்ளிக் கீற்றாக இஸ்லாமிய வானில் வெளி வந்திருக்க வேண்டாமா? இறுதி பத்தின் இறுதி நாட்களில் வந்திருக்கிறீர்கள். THOUGH YOU HAVE COME LATE, YOU HAVE COME WITH LATEST FATHWAAS.

இந்த கட்டுரையை நோட்டீஸ் ஆக வெளியிட்டு நம் தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் கிடைக்க செய்யுங்கள். முதல் கட்டமாக, அடுத்த ஜும்மாவில் அல்லது பெருநாள் தினத்தில்நமது ஊரில் கடகரையில், பள்ளிவாசல்களில் மக்கள் கரங்களில் கிடைக்க செய்யுங்கள். நமதூர் பொதுநல தொண்டு செய்யும் IQRA , மற்றும் சங்கங்கள் மூலமும் இதை அறிய செய்யலாம்.

நான் ஏதாவது இந்த வகையில் உதவ முடியுமா என்று ஆலோசனை சொல்லுங்கள். என்னால் முடிந்ததை செய்கிறேன். ஆனால் ஒரு அணில் மண் சுமந்தால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவுதான் எனது பங்களிப்பு இருக்கும் எனது தகுதியும் அவ்வளவுதான் .என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் இந்த பெரு முயற்சிக்கு அல்லாஹ் துணை நிற்பான். " IT IS A SMALL STEP FORWARD, BUT A GREAT LEAP FOR MANKIND"

மக்கி நூஹுதம்பி
51 புதுக் கடை தெரு
காயல்பட்டினம்
9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Fantastic Idea ... Innovative Thinking !!
posted by: Salai. Mohamed Mohideen (Bangalore) on 03 August 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29173

வட்டி நம்மில் பலர் மிகக் கவனக்குறைவாக இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. மிகவும் அருமையான வித்தியாசமான அதே நேரத்தில் இக்காலத்தில் தேவையான அவசியமான ஒரு முயற்சி. வட்டி பற்றிய மிக அழகான தகவல்களுடன் & பத்வாக்களுடன் இம்முயற்சி மக்களை விழிப்புணர்வு அடைய வைத்திருக்கிறதென்றால்... அதுவே இதன் முதல் வெற்றி !!

இம்முயற்சி வெற்றி பெரும் என்று இக்கட்டுரையை படித்தவுடனே மனதில் தோன்றியது. ஏனென்றால் வெட்டியாக நமது வங்கி கணக்கில் உறங்கி கொண்டிருக்கும் (அல்லது தெரியாமல் சுய தேவைகளுக்கு பயன்படுத்தி விட்ட) வரவு வைக்கப்பட்டிருக்கும் வட்டியை கூட்டி SERVE ALL FOUNDATION க்கு கொடுக்க போகின்றோம். நமது கை காசை எடுத்து செலவழிக்க வேண்டியதில்லை!!

நம்மில் பலர் இது விடயத்தில் அலட்சியாமகவும் நமது வங்கி கணக்கில் வரவு செய்ய பட்டுள்ள தெரிந்து தெரியாமலும் வட்டியை உண்டும் வருகின்றோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பனாக !!

உங்கள் முயற்சி வெற்றி பெற மனதார பாராட்டுகின்றேன். இக்கூட்டு உழைப்பில் காயலர்கள் பலரும் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 04 August 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29197

இது ஒரு நல்ல முயற்சிதான் இது. ஒரு பக்கம் நடக்கட்டும் ஆனால் அதசமயம் இஸ்லாமிய வங்கி ஆரம்பிக்க அணைத்து முயற்சிகளும் தொடர்து எடுக்க பாடுபடணும் . இஸ்லாமியர் தங்களுடைய நீதியை பெருபாலும் சரியான முறைபடி கையாள்வது இல்லை இது நம்மிடம் உள்ள பெரும் குறை இவைகளை . நம்மிடம் நீதியும் உள்ளது அறிவும் உள்ளது கூட இஸ்லாமும் இருக்க சமுதயத்தில் நல்ல கருத்து பரிமாற்றம் செய்து அதனை ஆக்கபூர்வமாக ஆக்க இந்த சமுதாயத்தில் ஒற்றுமை ,உழைப்பு , தொடர் முயற்சி நல்ல சிந்தனை கருத்து கலந்தாய்வு போன்றவ நம்மிடம் நடக்கநும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved