Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:02:12 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 9
#KOTWART019
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 28, 2012
ஒரு வழி பாதைக்கு மனச் சுவர்கள் தேவையில்லையே!
இந்த பக்கம் 6336 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சுவர்கள் - வீட்டின் எல்லைகளாகவோ அல்லது பாதுகாப்பிற்காகவோ தேவைதான் என்றாலும், மனிதர்களுக்குள்ளே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணம் காட்டி தனித்தனியே அல்லது கூட்டாக தங்களுக்கிடையே மனங்களில் சுவர்களை எழுப்பிக் கொண்டு வாழ்தல் தேவையா என்பது ஆழ்ந்த சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரிய ஒன்றாகும்.

          ஏதோ ஒரு அறியாமையில் அற்பக் காரணத்திற்காக
     தத்தம் நெஞ்சத்திற்குள் நெடுஞ்சுவர்களை எழுப்பிக் கொண்டு,
          இன்ப ஊற்றாக இருக்க வேண்டிய நமது உறவில்
     ஈட்டியை பாய்ச்சிக் கொண்டு,
          ஒருவருக்கொருவர் நெருங்காமல்
     தொலைதூரத்தில் நின்றுக் கொண்டு,
          அருகிலே எதிரும் புதிருமாக
     அவரவர் முதுகை காட்டி கொண்டு,
          மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல்,
     ஏதோ ஒரு சூறாவளியில் சிக்கி கொண்டு,
          வீட்டை சுற்றி கட்ட வேண்டிய சுவற்றை
     உள்ளத்தைச் சுற்றி எழுப்பிக் கொண்டு,
          சோகத்தின் சொந்தக்காரர்களாகி நிற்கின்றோமே.

நாம் - பல ஆண்டுகள் உயிருக்கு உயிராய் பழகிய நண்பர்கள் என்பது மறந்து விட்டதா? அல்லது மறக்கடிக்கப்பட்டதா?.

"எனக்காக உயிர் கொடுப்பான் என் தோழன் என்று பெருமிதப்பட்டு, பிரிக்கப்பட முடியாதவர்கள் நாங்கள்" - என மார்தட்டி நட்பை அடைமழையாய் பொழிந்தவர்களிடையே கூட திடீரென ஒரு சுவர் ஓசையின்றி கட்டப்பட்டு விட்டதே! அதுவும், இந்த குறுக்குச் சுவர், நமது பல ஆண்டுகால நட்பு என்பதையே பொய்யாய், பழங்கதையாய், கனவாய், மாற்றி விட்டதே. ‘கண்ணுக்கு தெரியாத, கருத்துக்கு’ மட்டுமே தெரியக் கூடிய இந்த சுவருக்கு இப்படி ஒரு சக்தியா? என்ன ஒரு ஆச்சரியம்!

நட்புரிமை பாராட்டும் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் இடையே ஏற்படும் பிழைபட உணர்தல், கசப்புணர்வாக மாறி - "காரையும் சிமெண்டும் இல்லாமலேயே சித்தாளும் கொத்தாளும் கட்டாமலேயே" இந்த மனச்சுவர்கள் - மனைசுவர்களை விட வெகுவேகமாக எழும்பிவிட்டதே! என எண்ணும்போது நல்லோர் மனம் வேதனை கொள்கிறது.

கருத்து-வேறுபாடு என்பதற்கும், கருத்து-மாறுபாடு என்பதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன என்பதையே நண்பர்கள் பலர் உணர்ந்து கொள்வதை விட்டு, நயத்தக்க நாகரீக முறையில் ஒன்று கூடி, தன்மையாகப் பேசி தீர்வை சிறப்பாக்கி கொள்ளலாமே.

சில மனிதர்களிடத்தில் "ஆசைக்கு முன் அறிவு வேலை செய்வதில்லையே?" அது போன்று, "படித்தவர்கள் எண்ணிக்கை பெருகிய அளவிற்கு பண்பாளர்களின் எண்ணிக்கை பெருகவில்லையே" - ஏன்? என்பதும் இது போன்ற சுவர்கள் தோன்ற காரணமாகி விடுகின்றதோ? மனிதன் என்பவன் பகுத்தறிவையும், மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும், விட்டு கொடுத்து வாழும் நெறிமுறைகளையும் அடிப்படையாக கொண்டு இருப்பதால்தான் மற்ற உயிர்வாழ் பிராணிகளை விட உயர்ந்த, வாழ்வியலுக்கு உரியவனாகிறான்.

வீட்டின் ‘மூலையில் உள்ள குப்பைகளை வெளியே எறிவது போல நமது மூளையில் ஏற்படும் சில தரமில்லாத முடிவுகளை புறந்தள்ளி விடுவோமேயானால்’ அனைவரும் மகிழும்படியான ஒரு நல்ல தீர்வு "தானே" அமையும். "பிரச்சனைக்கு தீர்வை தேட வேண்டும் அல்லாது தீர்வையே பிரச்சனையாக்கினால்" ‘சிந்துபாத்’ தொடர் போன்று நீண்டு கொண்டே போகுமல்லவா?

உன்னுடனேயே நீ நட்பு கொள்வதும், மற்றோரிடம் அன்பு காட்டுதலும், பெருந்தன்மை, நியாயம் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் போதே சமுதாயம் உங்களை பின்தொடர வழிவகை செய்யும். "எதை உங்களுக்கு பிறர் செய்யக் கூடாது என நீங்கள் கருதுகிறீர்களோ, அந்த செயலை மற்றோருக்கு நீங்களும் செய்யாதிருப்பதே சிறந்த மனிதனின் செயல். ஆகவே, எது முறையான செயல்? என்பது எப்போதும் நமக்குள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய கேள்வியாகும். "ஊக்குவிக்க ஆள் இருந்தால் - கொண்டை ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்".

கசப்புணர்வு, சச்சரவு இவைகளற்ற ஒரு சமாதானமான அமைதி வாழ்க்கை அமைய, உயர்ந்த உன்னத உணர்வினை கொண்டவர்களாக, தொண்டு எண்ணமும், ஒற்றுமைக்கு உழைக்கும் - வானம் போன்ற பரந்த - மனம் உள்ளவர்களாக வாழ கற்றுக் கொண்டு வாழ்வோமேயானால், காலம் நம்மை சிறந்த மனிதர்கள் என்று மட்டுமல்லாது - வரலாற்று மனிதர்கள் என்றும் போற்றும்.

இப்போதோ, பின்னரோ அடுத்தவர் மனம் வருந்தும் விதமாக எந்த செயலையும் செய்வது முறையல்ல. தவறுகள் பின்னர் திருந்தினாலும் அல்லது திருத்தப்பட்டாலும் கூட, அந்த தவறுகளால் ஏற்பட்ட காயங்கள், தங்க தாம்பாளத்தில் விழுந்த கீறலாக நிரந்தரமான தழும்புகளை ஏற்படுத்தி விடும். எனவே, நன்கு சிந்தித்து, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மனைச் சுவர்களை மண்ணோடு மண்ணாக்கி இடிப்பதைப் போன்று, இந்த மனச் சுவர்களையும் - நமது பாசத்தால், பண்பால், பழகும் நேசத்தால் இடித்தால், முன் போலவே ஊனாகி, உணர்வாகி உறவில் கலந்து, உயர்வது எப்படி என்று யோசியுங்கள்... மகிழ்ச்சி ஊற்று மறுபடியும் நமக்குள் பொங்கி வழிவது நிச்சயம்...

மறப்போம்.
மன்னிப்போம்.
மறுபடியும் இணைவதற்கு படைத்தவனிடம் பரிகாரம் தேடுவோமாக...

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: CADER (JAIPUR) on 29 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20948

இந்த கட்டுரை மிக சிறப்பாக இருக்கிறது. இந்த கட்டுரை பார்த்து சில மனிதர்கள் திருதினால் சரிதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: raiz (Sydney) on 29 February 2012
IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 20949

அருமையான கட்டுரை! பரபரப்பான அவசரமான வாழ்க்கை வாழும் மனிதர்கள் இடத்தில் அன்பும் நம் முன்னோர்கள் சொல்லி தந்த பண்பும் என்றோ தொலைந்து விட்டன என்பதை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பாசமாக காயல் மக்களுக்கு அறிவுறுத்துகிறீர்கள்! தொடரட்டும் உங்கள் அறிவுரை சகோதரர் அலாவுதீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: Mohamed Salih (Kayalpatnam) on 29 February 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20950

நல்ல கட்டுரை .. இந்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஷாலிஹ் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. மக்களின் மனதை சுய பரிசோதனை செய்ய தூண்டும் மிக ஆழமான அர்த்தம் உள்ள மிக அருமையான கட்டுரை...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (?????????? - ??????? ??????????? ?????) on 29 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20951

மக்களின் மனதை சுய பரிசோதனை செய்ய தூண்டும் மிக ஆழமான அர்த்தம் உள்ள மிக அருமையான கட்டுரை... இதை படிக்கும் அனைவர்களும் தன்னை தானே ஒருமுறை நாம் நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்...!

கட்டுரை ஆசிரியர் ஜனாப் அலாவுதீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்..

தாங்கள் இன்னும் பல நல்ல ஆக்கங்கள் நிறைந்த கட்டுரைகள் இந்த வலைதளத்தில் அதிகம் தர வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்... நன்றி..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. தேக்கு விற்க நீங்க ரெடியா .....???
posted by: முத்துவாப்பா... (???-?????) on 29 February 2012
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20952

நான் வரி வரியாக ரசித்து படித்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று .... இன்னும் உங்களிடம் பல கட்டுரைகளை எதிர் பார்க்கின்றோம் . உங்கள் ஊக்குவிற்க நாங்க ரெடி தேக்கு விற்க நீங்க ரெடியா .....???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 29 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20954

இப்போதோ, பின்னரோ அடுத்தவர் மனம் வருந்தும் விதமாக எந்த செயலையும் செய்வது முறையல்ல. தவறுகள் பின்னர் திருந்தினாலும் அல்லது திருத்தப்பட்டாலும் கூட, அந்த தவறுகளால் ஏற்பட்ட காயங்கள், தங்க தாம்பாளத்தில் விழுந்த கீறலாக நிரந்தரமான தழும்புகளை ஏற்படுத்தி விடும். எனவே, நன்கு சிந்தித்து, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மனைச் சுவர்களை மண்ணோடு மண்ணாக்கி இடிப்பதைப் போன்று, இந்த மனச் சுவர்களையும் - நமது பாசத்தால், பண்பால், பழகும் நேசத்தால் இடித்தால், முன் போலவே ஊனாகி, உணர்வாகி உறவில் கலந்து, உயர்வது எப்படி என்று யோசியுங்கள்... மகிழ்ச்சி ஊற்று மறுபடியும் நமக்குள் பொங்கி வழிவது நிச்சயம்...

மறப்போம்.
மன்னிப்போம்.
மறுபடியும் இணைவதற்கு படைத்தவனிடம் பரிகாரம் தேடுவோமாக...

சகோதரா உனது கருத்துக்கு என் பாராட்டுக்கள்! உன் கருத்துக்கள் ஆணித்தரமாக மக்கள் மனதில் பதியவேண்டும்!நீ என்றும் பாதிக்கப்படுவோருடன் இருக்கவேண்டும்! உன் கருத்து போல் உன் செயலும் நிச்சயம் நல்லதாகவே இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: b.a.buhari (chennai) on 29 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20955

சபாஷ்.. அருமையான கட்டுரை,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: saburudeen (dubai) on 29 February 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20956

இக்கட்டுரை ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் மிக அருமையான கருத்துகளுடன் .எங்களையும் கட்டுரை எழுத தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய சிறந்த கட்டுரையாளர்களை இத்தளத்தின் முலம் வெளி உலகிற்கு கொண்டு வந்த காயல்பட்டணம் .காம் இணையதளத்திற்கு நன்றி ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: HAMEED SIRAJUDEEN (Pondicherry) on 29 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20957

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மிகச் சிறந்த, தற்போதைய காயலுக்கு தேவையான ஒரு கட்டுரை.

With a hearty wish for the brothers of our beloved town to become closer. These kinds of thoughts are the must for our town now.

இதை படிக்கும் நாமும் கூட,
இது போன்ற என்ணங்களை வளர்த்துக் கொண்டு,
இவ்வாறான எண்ணங்கள் கொண்ட
அனைவரின் துணை கொண்டு,
பரஸ்பரம் புரிந்து கொள்ள தயங்கிக் கொண்டிருக்கும்
சகோதரர்கள் இணைந்து, மனச் சுவர்களை இடிக்க
முயற்சி செய்ய வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.
வஸ்ஸலாம்.
சினேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) on 29 February 2012
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20958

"அஸ்ஸலாமு அலைக்கும்"

உண்மையில் மீண்டும், மீண்டும், படிக்க துண்டும் அற்புதமான கட்டுரை இது!

"தவறு செய்தவரும் போற்றபடுவான், செய்த தவறை ஏற்ற்றுக் கொண்டால்."

ஆசிரியர் அவர்ஹளுக்கு மனமார பாராட்டுக்கள்.

வாழ்த்தும் உள்ளம்,

சூப்பர் இப்ராகிம்.எஸ்.எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: ABU UMARALI (kayalpatnam) on 01 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20960

மாஷா அலலாஹ் அருமையான கட்டுரை .

விமர்சனத்துக்கு இடமேயில்லை....
என்பதை தெளிவஹா எடுகாட்டிவுல்லீர்ஹல் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: ஷர்புதீன் (???? ) on 03 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20962

இந்த கட்டுரையின் ஒருள் பொருட்டு பாராட்டுவோர், அதன் உள்ளார்ந்த கருத்துக்களை எடுத்து கையாள கடவது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: தேக் முஜீபு (??????????) on 04 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20963

அன்புள்ள காக்கா தாங்கள் எழுதிய கட்டுரையிள் நியாயம் அனியாயம் என்பதை மறைத்துவிட்டு சமாதான போக்கை மட்டும் மையமாக வைத்து கட்டுரை எழுதியுள்ளீர்கள்

தங்களுக்கு சிரமம் இருக்கிறது அதனால் அந்த சிரமத்தை அடுத்தவர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற மனப்போக்கு உள்ளவர்களுக்கு

இந்த தலைப்பை மாற்றி ( தான் பெற்ற துன்பத்தை பெறவேண்டும இவ்வய்யகம் யாவரும்) என்ற தலைப்புதான் சரியானது.......................................................

அன்பின் அல என்பதை மாற்றி
தேக் அலாவுதீன் என்பதே சால
பொருத்தம்.............................
தேக் முஜீப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. எனதன்பு உடன் பிறப்புகளுக்கு...
posted by: AnbinalA (JAIPUR) on 04 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20964

எமது எண்ணத்துளிகளை கருவாக, கண்ணாக ஏற்றுக்கொண்ட நிறைந்த நல் இதயங்களுக்கும்... உங்களின் ஆக்கங்களை, அன்புகளை பதிவு செய்து எம்மை ஊக்குவித்த, நிராகரித்த நல் உள்ளங்களுக்கும்...

கோடி மக்களுக்கு - உலக கோடி வரை... பாலமாக இணைத்த காயல்பட்டணம்.காம் இணையதள குடும்பத்தார்களுக்கும் எனது நெஞ்சார்ந்த

"ஆகாயம் உள்ள வரை அழியாமல் வாழ வாழ்த்துக்கள்"...

நன்றி நம்மை படைத்தவனுக்கு....

ஆசிரியர்: அன்பின் அலாவுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by: ALADHEEN .A.M.S ( MUMBAI ) (KUWAIT) on 22 April 2012
IP: 178.*.*.* Kuwait | Comment Reference Number: 21022

குப்பையை கொட்டிய கொடியவளைக்கூட நலம் விசாரித்து ஈமான் கொள்ள வைத்த நபி பெருமானின் வழியை பின்பற்றக்கூறும் உன் கட்டுரையை படித்தாவது நண்பனே கபட நெஞ்சங்கள் திருந்தட்டும் .

ALADHEEN .A .M .S ,
DAKHNAN GROUP OF COMPANIES ,
SAALMIYA / HAWELI ,
KUWAIT .

TEL : 00965 65031182 / 22622407 / 408 --22629920 / 22619544 /22619455 / 22620583 .

E -MAIL :dakhnancompaniesglobal @gmail .com
PERSONAL :neyyakkaran @yahoo .com
WEBSITE :www .dakhnanonline .com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved