Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:08:30 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 131
#KOTWEM131
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 10, 2014
பிஞ்சுக்கு நஞ்சு!

இந்த பக்கம் 6767 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



“ஏங்க... என் மாமி மக பீவி ஃபாத்திமாக்கு பொம்பள புள்ள பொறந்திருக்குதாம்...”

“அப்படியா? சந்தோஷம்... புள்ளைய பாக்க போகனும்பியே...?”

“ஆமாங்க... என்னவாச்சும் வாங்கிட்டுப் போகனுமே...? என்ன வாங்கலாம்...?”

“பஜார்ல ஒரு ஸ்டேஷனரி ஷாப் குழந்தைகளுக்குன்னே தொறந்திருக்காங்களாம்... அங்க புதுப்புது மாடல்கள்ல பால் போச்சி, சூப்பி, செரிலக் - நெஸ்டம் போன்ற மாவு அயிட்டங்கள், டயாபர்ஸ், தாய்க்கு பால் சுரக்க மதர் ஹார்லிக்ஸ் எல்லாம் ஃப்ரெஷ்ஷா வச்சிருக்காங்களாம்... அதோட நா துபையிலேர்ந்து கொண்டு வந்த ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் பேபி கிட்டையும் எடுத்துட்டுப் போயி குழந்தைக்கு கொடுப்போம்...”

புதிதாகப் பிறந்த குழந்தையைக் காணச் செல்லும் பொதுமக்கள் பொதுவாகப் பேசிக்கொள்பவைதான் இவை. இது நம் யாவர் வீட்டிலும் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் காட்சிகள்.

தாய்ப்பாலை விஞ்சிய உணவு என்று குழந்தைக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், இன்றுள்ள தாய்மாருக்கு பத்து மாதம் சுமந்து பெற்ற தங்கள் குழந்தையின் நலனை விட, தம் உறக்கம் கெடக்கூடாது என்பதுதான் முதன்மைக் கவலையாக உள்ளது.

குழந்தையின் பால்குடிப் பருவம் இரண்டாண்டுகள் என்கிறது திருமறை குர்ஆன். “குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரையாவது அதற்கு தாய்ப்பால் கொடுங்கள்” என்று, மனசாட்சியுள்ள மருத்துவர்கள் இன்றளவும் வலியுறுத்திச் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆகக் குறைந்தது 4 மாதங்களாவது கொடுக்கலாம். ஆனால், பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில், உடனடியாக புதிய பால்போச்சைக் கையிலெடுத்து, லக்டொஜன் மாவைக் கலக்கி பச்சைக் குழந்தைக்குக் கொடுக்கும் மாபாதகச் செயலை என்னென்று சொல்ல?



காரணம் கேட்டால் உடனே கிடைக்கும் விடை: “வாப்பா, நீ சொல்றது அந்தக் காலத்துக்கு சரி! இப்ப நாம அந்தக்காலத்து மனுஷி மாதிரியா உணவு உண்கிறோம்...? இன்னைக்குள்ள உணவு முறைக்கு, எந்தத் தாய்க்கும் போதிய அளவு பால் சுரப்பதில்லை...”

ஒரு பைசா செலவில்லாமல், சில வினாடிகள் கூட சிந்திக்க நேரமெடுக்காமல், நுனி நாக்கில் தன் கண்டுபிடிப்பை உரக்கச் சொல்வாள் பிள்ளையைப் பெற்றவளின் தாய். வெளிநாட்டிலிருந்து, ஒரு மாத விடுமுறையில் ஊர் வந்த புருஷனோ, “இருக்கப் போவது ஒரு மாசம்... அதுலயும் பயணத்துல சில நாட்கள் கழிந்துவிடும்... இருக்கும் இருபது நாள்ல அத இத பேசிட்டு இருக்காம, எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இருப்போம்...” என்று விரும்பாமவுனியாகி விடுவார்.

காயல்பட்டினத்தில் நடந்த நிகழ்வு ஒன்று: ஒரு பெண்ணுக்கு புதிதாகக் குழந்தை பிறந்தது. மருத்துவமனையிலேயே பால் புட்டி கொண்டு மாவு கலக்கிக் கொடுக்க ஆயத்தப்படுவதைக் கண்ட பெண்ணின் கணவன் அதைத் தவிர்க்கக் கூற,

“இன்னங்க... தயவுசெய்து இதுலல்லாம் தலையிடாதீங்க... பிள்ளைக்குத் தேவையான பால் சுரந்தால் நான் ஏன் இப்படிச் செய்யப் போகிறேன்...?” என்றாள் பிள்ளையைப் பெற்றவள்.

“சரி, ஒருவேளை அப்படித்தான் போல...” என்று எண்ணியவனுக்கு - பச்சைக் குழந்தைக்கு பால் புட்டியைத் திணிப்பது ஏனோ சரியாகவே படவில்லை. உடனடியாக, விவரமறிந்த தன் தாயிடம் சென்று விளக்கம் கேட்க,

“புள்ளைய படச்சவன் அதுக்கான ரிஸ்கையும் (உணவாதாரத்தையும்) சேர்த்தேதான் படைக்கிறான்... முன்னாடி இருந்த தாய்மாருக்கு வேறு வழியில்லே... தாய்ப்பால் கொடுத்தே ஆகனும்னு நிர்ப்பந்தம் இருந்ததால தான் உறங்க வேண்டிய நேரத்தையெல்லாம் குழந்தை உறங்கும் நேரத்திற்கேற்ப மாற்றியமைத்துக்கொண்டு, குழந்தை சிணுங்கும்போதெல்லாம் அதற்குத் தயங்காமல் தாய்ப்பால் தருவாள்... முதல் ரெண்டு நாளைக்கு சரியா வராதுதான்... குழந்தை வாய் வைத்து தொடர்ந்து உறிஞ்சும்போதுதான், சுரப்பிகள் நன்றாக இயங்கி, பால் தொடர்ந்து சுரக்க வாய்ப்பேற்படும்...

அன்னைக்கி தாய்க்கு சுகமில்லாமல் போனால் கூட, தன் குழந்தைக்குப் பால் கொடுக்க - குழந்தை பெற்ற வேறு பெண்களைத் தேடிச் செல்லும் நிலை இருந்தது... அதனால் பால்குடி உறவுகளும் வளர்ந்தது... இந்தக்காலத்துல, பால்மாவு டப்பா ஈஸியா கிடைக்குதில்ல...? அதனால தானும் அவதிப்படத் தேவையில்லே... யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமும் இல்லே... இன்றைய தாய்மாருக்கு அவங்க நிம்மதியா இருக்கிறதுதான் பெருசாப் போச்சு...” என்றாள் தாய்.

தனக்குக் கிடைத்த இந்தச் செய்தியை அவன் உடனடியாகத் தன் மனைவியிடம் திணித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மனைவிக்கு மெதுவாகப் பாடம் நடத்தினான் பக்குவப்பட்ட அந்தக் கணவன். அதிகாரத்தால் கிடைக்காத பயன் அன்பால் கிடைத்தது. தன்னைப் பெற்ற தாய் கூட புட்டிப்பாலைக் கொடுக்க வலியுறுத்திய நிலையிலும், கணவன் தந்த பாடத்தால், தன் அவதியைக் கூட பொருட்படுத்தாமல், “தாய்ப்பால் மட்டுமே என் குழந்தைக்குக் கொடுப்பேன்” என உறுதியெடுத்தாள். செய்தும் பார்த்தாள். மூன்றே நாட்களில், அளவுக்கதிகமாக பால் சுரந்தது.

இது ‘கராமத்’ எனும் அற்புதமல்ல. உடல் நலமுள்ள யார் முயற்சித்தாலும் இந்த அனுபவம் கிடைக்கும். பாவம்! தன் மகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்த சரித்திரத்தையும் அந்த மூத்த தாய் மறக்கும் நிலைதான் இன்று எல்லோர் வீட்டிலும். விதிவிலக்குகள் இருக்கலாம்.

பசிக்காக குழந்தை அழுகிறது... பால் குடிப்பதற்காக அதன் நாக்கும், முரசும் இறுக ஒட்டிக்கொண்டு உறிஞ்சுகிறது... அப்படிப்பட்ட குழந்தைக்குப் போய் ரப்பர் சூப்பியை வாயில் திணிக்கவும் தாய் என்ற பெயரிலிருக்கும் பலரால் முடிகிறது. பாலுக்கு ஏங்கும் குழந்தையின் அழுகையை நிறுத்த சூப்பியைத் திணித்து ஏமாற்றும் இந்தத் தாயை, நாளை அக்குழந்தை வளர்ந்து - ஆளாகி ஏமாற்றும்போது மட்டும், எல்லாத் தாயும் சொல்லும் ஒரே வாசகம்:

“உன்னப் பெத்து வளக்க நா எவ்ளோ கஷ்டப்பட்டேன்... இப்படி ஏமாத்துறியே...?”



உடலிலிருந்து வெளியாகும் கழிவுதான் சிறுநீரும், மலமும். அது உள்ளே இருந்தால் உடல்நலனைக் கெடுக்கும் என்பதால், சிறிது நேரம் கூட வைத்திருக்காமல் வெளியே தள்ளும் இயல்பை இறைவன் எல்லோர் உடலுக்கும் தந்திருக்கிறான். “ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்க முடியாது” என்ற பழமொழிக்கேற்ப, தனக்கு வந்தால் தனியிடம் தேடுவோர், தன் குழந்தையின் அதே கழிவை டயாபர்ஸ் (பாம்பர்ஸ்) கொண்டு பிஞ்சு உடலோடு சேர்த்தே பல மணி நேரம் வைப்பது யாரிடம் பெற்ற அறிவோ? என்றாவது வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவதிப்படக் கூடாதே என்பதற்காக “கண்டுபிடிக்கப்பட்ட” இந்த டயாபர்ஸ், இன்று குழந்தையின் தவிர்க்க முடியாத - அன்றாட உடையாகவே மாறிப்போய்விட்டது.

“புள்ளே... என் ஃப்ரெண்டு அடுத்த வாரம் ஊர் வர்றான்... வீட்டுக்கு ஏதாவது சாமான் இருந்தால் தா! கொண்டு போகிறேன்... என்றான். என்ன வேணும்? சொல்லு!”

“எனக்கு என்னங்க வேணும்...? எல்லாம் செறப்பா ஈக்கிது... நம்ம புள்ளைக்குத்தான் பேம்பர்ஸ் முடியப்போகுது... ஒரு பாக்ஸ் பேம்பர்ஸ் மட்டும் அனுப்பி வைங்கங்க... ஒரு மாசத்துக்கு ஓடும்...”

நட்புக்காகக் கேட்ட நண்பனின் மொத்தப் பயணப் பொதியின் பெரும்பகுதியையும் இதுதான் அடைக்கும் என்பதைக் கூட கருத்திற்கொள்ளாமல், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது டயாபர்ஸ்.

“ஏம்மா... இத ஊருலயே வாங்கலாமே...?”

“ஆங்... ஊருல ஒழுங்கானது கிடைக்குமா...? ஃபாரின்ல தயாரிக்கிற மாதிரி வருமா...?”

ஆகா! என்னே புள்ள பாசம்!!!

குழந்தைப் பருவம் முழுக்க டயாபர்ஸையே மாட்டி விடுவதால், குட்டி போட்டு நஞ்சு தொங்கிய நிலையிலுள்ள ஆடு போல, காலை அகட்டி அகட்டி நடக்கப் பழகிய குழந்தை, நாட்கள் செல்லச் செல்ல, தனக்கு சிறுநீர் வருவதையோ, மலம் வருவதையோ - வாய் பேசத் தெரிந்தும் சொல்லத் தெரியாத அளவுக்கு வளர்ந்து, அதே தாயின் கைகளால் தர்ம அடி வாங்குகிறது. வளர்ந்து ஆளான பிறகு, அதன் பழக்கவழக்கத்தில் சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.

இதுவே, அவதி பாராமல் - சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் சுத்தம் செய்யும் பெண்ணின் குழந்தை போதிய அறிவு வளர்ச்சியுடனும், தன் மழலை மொழியாலேயே, “உம்மா... உச்சா...” “உம்மா... சீ...” “உம்மா... ஆயி...” என்று சொல்வதை, இன்றுங்கூட சில குழந்தைகளிடம் கேட்க வாய்ப்பு கிடைக்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

மனதில் பட்டது... எழுதிவிட்டேன். இது சரியெனப்பட்டு, நூற்றில் ஒருவரிடமேனும் மாற்றம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே!

மேற்சொன்னவை மட்டுமல்ல! மழலையருக்குப் பிரியமே மண்ணில் புரண்டு விளையாடுவதுதான். அவ்வாறு விளையாடும்போது, நிலத்தோடு குழந்தைக்குள்ள ஆத்மார்த்தமான தொடர்பு அவர்களின் ஆளுமையைத் தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. சுகாதாரம் என்ற பெயரில் இன்று அது தடுக்கப்படுவதால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் நிறைய எழுத ஆவலுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது எழுத நாட்டம்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Ibrahim Faisal (Riyadh) on 10 February 2014
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33088

Ma sha Allah !

காலத்திற்கு ஏற்ற கட்டுரை என்று தான் இதை சொல்ல வேண்டும். இவ்வாறு தவறு செய்பவர்கள் திருத்தி கொண்டால் இதன் பலன் நமக்கு தான் என்பதை அவர்கள் உணர்வார்கள் என்பது உறுதி.

எஸ்.கே.ஸாலிஹ், உங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள் பல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அருமையான கட்டுரை
posted by: SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) on 10 February 2014
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33090

அருமையான கட்டுரை ...அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை ...வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...sariyaga sonninga
posted by: k.M.seyed ibrahim (chennai) on 10 February 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 33093

மாஷா அல்லாஹ். கட்டுரை அருமையாக இருக்கு. நீங்க என்னதான் சொன்னாலும், கேட்கவா போறாங்க ... ஊஹும்.

இப்பலாம் யாருங்க 2 வருடம் தாய் பால் குடுக்குறாங்க. குழந்தை பிறந்தவுடன், டாக்டர் இடம் பொய் எந்த மாவு கொடுக்கலாம் என்று கேட்கிறாங்க. டாக்டர் தாய்பால் கொடுக்க சொல்லலாம். போ மா, அந்த டாக்டர் அப்படிதான் சொல்வாருன்னு அலட்சியம் வேறு.

தாய் மார்கள் சொல்லும், கருது ஆமா நீங்க சொல்லிட்டு போயிருவீங்க, நான்காதான் கழுவி, கழுவி கஷ்டப்படனம். பம்பேர்ஸ் போட்டா பிள்ளை அவன் பாட்டுக்கு இருப்பான். நாங்கலாம படில உட்காந்து, ஊர் கதை பேசிட்டு இருக்கலாம் போங்க. உங்களுக்கு எங்க தெரியும் நாங்க படுற கஷ்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புழுதி புள்ளையை வளர்க்கும்
posted by: salih.sma (sakaka, al jouf, ksa) on 10 February 2014
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33095

மாஷா அல்லாஹ் ... வெகு நாளாக என் மனத்தில் குமுரியவை கட்டுரை மூலம் வெளிப்படுத்தியதற்கு ஸாலிஹ் காகாவிற்கு நன்றி!!!

புழுதி புள்ளையை வளர்க்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அருமையான படைப்பு
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) on 10 February 2014
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33096

சகோதரர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களின் பிஞ்சுக்கு நஞ்சு என்ற கட்டுரை மிகவும் அருமை .

இந்த நவீன கம்ப்யூட்டர் & இண்டர்நெட் காலத்தில் மூழ்கி தவிக்கும் நமது அருமை சகோதரிகளும் நிச்சயம் படித்து பயன் பெற வேண்டிய ஒரு அவசியமான கட்டுரை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: Salai . S.M.B.Abdul Razak . (cathedral road , Chennai -86.) on 10 February 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 33098

என் பால்ய நண்பன் எஸ் .கே. ஸாலிஹ் அவர்களின் இந்த அருமையான கட்டுரை இந்த காலத்திற்கான ஒவ்வொரு கருவுற்ற பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய கட்டாய கடமையாகும்.

தாய்ப்பாலை விட குழந்தைக்கு சத்தான ஆரோக்கியமான உணவு எதுவும் இல்லை என்று அவருக்கே ஏற்ற பாணியில் அழகாக எழுதியுள்ளார். நம் ஊரில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களும் இந்த கட்டுரையை அவசியம் படித்ததோடு மட்டுமல்லாமல் பின்பற்றவும் வ ேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
சாளை. அப்துல் ரஜாக் .
சென்னை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 10 February 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33099

அஸ்ஸலாமு அழைக்கும்.

குழந்தை தரிக்க தகுதி இருந்தால் பால் சுரக்கவும் தகுதிகள் இருக்கும் இது இறைவனின் கோடை .

சில தாய்மார்களுக்கு அரிதிலும் அரிதாக பால் சுரக்கும் தன்மை இருக்க வாய்புகள் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுதான் இந்த செயற்கை விதமான் மாற்றுகள். அதற்கான மருதுவ பரிகாரத்தையும் செய்து பால் சுரக முயற்சிக்க வேண்டும்.

நல்ல முறையாக சுரந்தும் கொடுகைப்படாத தாய்பால் குழந்தைக்கும் உதவாமல் அது சமையம் தாய்க்கும் தீங்காக அமையும் மார்பு புற்று வியாதி வர கடும் வாய்பாக அமையும்.

கண்டிப்பாக கட்டழகு ஒன்றும் குறைத்து விடாது. நல்ல சத்து உள்ள உணவு வகைகளை , பழங்ககளை , கீரை ,பால் ,மீன் ,புரத உணவுகள் அனைத்தையும் சரிவிகிதத்தில் உட்கொண்டால் போதும் பாலும் சுரக்கும், அழகும் குறையாது. தாயும் , குழந்தையும் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இன்னும் நம் ஊரில் குழந்தை வளர்ப்பில் நல்ல நடைமுறைகள் பின்படுத்தபடுவது இன்றும் வழக்கில் உள்ளது. ஆனால் தட்போது அவைகள் குறைந்து கொண்டு வருவது கவலை அளிக்கும் செய்திதான்.

கண்டிப்பாக இந்த மோசமான நிலை மாறனும் இது போன்ற தகவல்கள் அடிக்கடி அணைத்து வழிகளிலும் மக்களுக்கு எடுத்து உரைக் வேண்டும்.

தாய்பால் குடித்த குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகள் பிணி தாக்குதலை சமாளிக்கும் தன்மையை இறையருளால் பெற்றிருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:.என் உடன்பிறப்பே வாலாட்டும் எல்லாம் பாலுட்டும் போது நீ மட்டும ஏன்...?
posted by: AnbinalA (Jaipur) on 10 February 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 33102

மனிதன் விஞ்ஞானத்தில் வளர்ந்து விட்டான்
மனதளவில் சுருங்கி விட்டான்...
தாயின் கருவறையில் குழந்தை வளர்வதே
மருத்துவர் எழுதும் பவுடரில் என்பதாலா...?
ஐந்தறிவுகள் கூட இன்றும்
ஐந்தறிவுடன் தான் கருவுற்று
பாலுட்டி வளர்க்கின்றன - ஆனால்
ஆறறிவு படைத்த மனிதன்....?
தாயின் கருவறையில்
"நஞ்சுக்குள் தான் பிஞ்சு"இருக்கிறது என்பதற்க்காக
கல்லறை வரை மனிதன் மட்டுமே தொடருகிறான்.....

இதுதான் ஆறாம் அறிவின் சிறப்பே......?
கல்லறை வரை மனிதன் மட்டுமே தொடருகிறான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: zubair rahman-ab. (Doha-Qatar) on 10 February 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 33106

சிறந்த ஒரு பதிவு வாழ்த்துக்கள் !

இன்றைய சமுதாயம் குழந்தை வளர்ப்பில் யாரை நம்புகிறார்களோ இல்லையோ தொலைக்காட்சியில் நூதன விளம்பரங்களில் வரும் ஒரு சில தயாரிப்புகளை நம்பி பிள்ளைகளை வளர்க்கிறார்கள்.

மருந்துகளும் மற்றும் அதனை சார்ந்த தயாரிப்புகளும் உட்கொள்வது உடலில் ஏற்படும் வேதி குறைபாடுகளுக்கு மட்டுமே.

சிறந்த மருத்துவர்கள் சொல்லும் ஒரே அறிவுரை ! பிள்ளைகளின் வளர்ச்சி கூடுதலான ஊட்டச்சத்து மிக்க உணவு மூலமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:... ஏன்? ஏன்.? ஏன்? ஏன்?
posted by: T.M.RAHMATHULLAH (Kayalpatnam) on 10 February 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33107

அஸ்ஸலாமு  அலைக்கும்!  

  என் பால்ய நண்பன்  மர்ஹூம் எஸ் க்கே அவர்களின்  அப்பனுக்கு   மகன்  தப்பாமல்   பிறந்த   எஸ் .கே. ஸாலிஹ் அவர்களின் இந்த அருமையான கட்டுரை இந்த காலத்திற்கான ஒவ்வொரு கருவுற்ற பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய கட்டாய கடமையாகும்.

மக்களைப்  பெற்று   வளர்த்து  வாலிபமாக்கி  என்ன  பிரயோஜனத்தையும்   காணவில்லை    ஒரு   சொல்   கூட    கேட்க   மாட்டேங்கிறதுகளே  என்று அங்கலாய்த்து  சொல்லும்  பெற்றோர்கள்  ,     கீழ் வரும் , படைத்த அல்லாஹ்வின் இந்த  ஒரு சொல்லாவது   கேட்டிருந்தால்   இந்த மாதிரி  துன்பம்  வரவே வராது . இன்ஷா  அல்லாஹ்

இப்னு  எஸ் கே யின்  கட்டுரைக்கு  உரமாகவே . திருக்குர்ஆன்   கூறும் ஆயத்தையும்  நான்  கீழே    தருகிறேன்   வாசித்து அமல் செய்து  பயனடைந்து  எங்கள்  ஹக்கிலும்   துஆ   செய்யுங்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

18:17    ۗ مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُّرْشِدًا

18:17. ( எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன் நேரான வழியில் சென்றே விடுவான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீங்கள் காண மாட்டீர்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

46:15   وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

46:15. மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, 

பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய

பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான்.

Report to   T.M.RAHMATHULLAH   MOB 919488507221


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அறிவுப்பால் புகட்டியமைக்கு நன்றி...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) on 11 February 2014
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33109

என் அருமை நண்பர் குழந்தை பராமரிப்பு சிறப்பு நிபுணர் எஸ்.கே. சாலிஹ் அவர்கள் தற்கால காயலின் நவீன தாய்க்குலத்திற்கு புரியும் வகையில் நமதூர் பேச்சு வழக்கில் அழகான இரண்டு கருத்துக்களை வலியுறுத்தி இருக்கின்றார். மனதில் பட்டதை பதிவாக்குவதில் அவர் வல்லவர்.

வயதுக்கு வந்த பருவப்பெண்ணுக்கு துவங்கி அவளுக்கு திருமனமாகி கருவுற போடும் ஊசி, கரு வளர்ச்சிக்காக போடும் ஊசி பின்னர் மாதா மாதம் தொடர்ந்து ஊசி, இறுதியில் சிசேரியன் அதன் பின்னர் அடுக்கடுக்காக மருந்து மாத்திரை பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி, அதற்கு பின் அந்த காம்ளெக்ஸ் இந்த கம்ளெக்ஸ் இப்படி அது பருவம் எய்தும் வரை தொடரும் இந்த மருந்து போராட்டம் ஓர் தலைமுறை சுழற்ச்சியாகவே தொடர்கிறது.

இயற்கைக்கு வேட்டு வைத்து விட்டு இல்லையே...இல்லையே என கைகளை பிசைந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை! வழிந்தோடிய கிணறுகளெல்லாம் வற்றி வரண்டு போய் வடுபற்றி இருப்பதற்கு காரணம் நாம் வாழும் சுற்றுப்புறமும், சூழலும்தான். உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடைகள் வரை செயற்கையை புகுத்தி வைத்து இயற்கையை தொலைத்து விட்டோம் என்பதுதான் உண்மை.

பின்னர் டயப்பர்ஸ்(நேப்பி) ச்...சே! நாத்தம் புடிச்ச சமாச்சாரம்.ஒரு பிள்ளையெ தூக்கி வைத்து கொஞ்சக்கூட முடியல்லெ...ஒரே வாடை. அந்த காலத்துலெ நம்ம உம்மா, கம்மா, சாச்சிமார்கள் சிரமம் பார்க்காமல் நமக்கு அடிக்கடி கழுவி விட்டதுனாலெதான் இன்னைக்கு நம்ம ***** சுத்தமா இருக்கு இல்லாட்டி...நாரி நத்தபலையா போயிருக்கும்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by: தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 11 February 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33110

கட்டுரையை படித்தேன் மனதுக்குள் கவலை அடைந்தேன்.. போலியான நாகரீகம் வளர வளர நோயும் வளரத்தான் செய்கின்றன... எத்தனை எத்தனை விழிப்புணர்வுகள் - அறிவுரைகள் அனுபவ பட்டவர்கள் கூறினாலும் புரியும் அறிவு மங்கி விட்டது - மனக்கவலை அளிக்கிறது.. அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை... கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. காலத்திற்கேற்ற கட்டுரை!
posted by: Jesmin A.K.Khaleel (Kayalpatnam) on 14 February 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33176

மருமகன் எஸ்.கே.ஸாலிஹ் உடைய இந்தக் கட்டுரை, இன்றைய காலச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. அத்தனையும் ஏற்கப்பட வேண்டியதே. இதை நானும் ஆர்வத்துடன் படித்து முடித்ததோடு, என் குடும்பத்துப் பெண்கள் யாவரையும் படிக்கச் செய்தேன்.

படிப்பவர்கள் வெறுமனே படிப்பதோடு நிறுத்தி விடாமல், இக்கட்டுரையின்படி செயல்பட முனைய வேண்டும். இதனால் செலவும் இல்லாமல் போவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும்.

இதுபோன்ற கட்டுரைகளை மருமகனிடமிருந்து தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஜெஸ்மின் கலீல்
ஜெஸ்மின் பாரடைஸ்
மெயின் ரோடு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. பிஞ்சுக்கு நஞ்சு! நஞ்சுக்கு அஞ்சு. தாய்க்குலமே.....
posted by: s.s.md meerasahib (TVM) on 14 February 2014
IP: 223.*.*.* India | Comment Reference Number: 33179

அஸ்ஸலாமு அலைக்கும். கட்டுரை ஆசிரியருக்கு முதற்க்கண் நன்றியை தெறிவிக்கிறேன். காலத்திற்கு ஏற்ற கட்டுரை.

நம் காயல் பெண்களுக்கு முக்கியம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டிய ஒன்று. அவர்கள் நஞ்சை பிஞ்சுக்கு வேணும் என்று செய்யவில்லை என்றாலும்........ இது போன்ற கட்டுரைகள் அவர்களுக்கு உறுதுணையாக அமையும். இதுபோன்ற சுகாதாரத்தை மனதிற்கொண்டு பயனுள்ள கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். வஸ்ஸலாம்.

S.K.சாலிஹ் மச்சானுக்கு தெரியாத இரண்டு விசயம் குறிப்பிட ஆசை படுகிறேன்.

1) 2 டாய்லெட்டை “உம்மா... உச்சா...” “உம்மா... சீ...” “உம்மா... ஆயி...” என்றெல்லாம் எழுதி இருந்தீர்கள். என் மகள் "உம்மா......... முக்கு" என்பாள். இதையும் உங்கள் அகராதில் சேர்த்துகொள்ளுங்கள்.

2) பிள்ளைக்கு போச்சில் பால் கொடுக்கும் படத்தை போட்டு இருந்தீர்கள். மச்சான்.......... பாட்டில் தான் மாறி இருக்கு........ (பிளாஸ்டிக்) உள்ளே இருக்குற சரக்கு (தாய்ப்பால்தான்) இப்படியும் நம் தாய்மார்களிடம் நடக்குது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by: சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) on 15 February 2014
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33183

இந்த அருமையான கட்டுரைக்கு கருத்து பதிவு செய்யனும், கருத்து பதிவு செய்யனும் என்று காலங்கள் கடந்து விட்டன.

முதலில் சகோ. எஸ்.கே.ஸாலிஹ் அவர்களுக்கு மிக்க நன்றி, பிரயோசனமான கட்டுரை தந்தமைக்கு.

இந்த கட்டுரையின் கூடுதல் சிறப்பு, ஜெஸ்மின் ஜனாப் கலீல் மாமாவே முதல் முதலாக அவர்களின் கருத்தை பதிவு செய்துள்ளார்கள் என்றால் இதன் மதிப்பு அதிகம் என்று.

*பள்ளிக்கூடத்திற்கு அருகில் கொஞ்சம் நின்று அவதானித்து பாருங்கள், அதிகப்படியான மாணவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக, காலை சற்று அகற்றி, விந்தி விந்தி நடப்பார்கள். காரணம் பிறந்ததில் இருந்து போடப்பட்ட பேம்பர்ஸ் உடைய தாக்கம்தான் இது. அப்புறம் என்ன.. NCC இல் சேர்த்து நடையை திருத்தனும்.

* சவுதியில் நண்பர் ஒருவர் மனைவிக்கு போன் போட்டு, தன்னுடைய கடைசி குழந்தை உடைய எடையையும், முந்தைய குழந்தையின் எடையையும், தன் அண்ணன் உடைய குழந்தையின் எடையையும் அக்கறையாக விசாரித்து ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டார்.

எனக்கு ஒரு குற்ற உணர்வு உண்டானது. இத்தனை வருடங்களில் இது வரை நம் குழந்தையின் எடையை கேட்டு விசாரித்ததே இல்லையே என்று.!

நண்பனை பாராட்டி விபரம் கேட்டேன்.

இல்லை ஜியா பாய். பிள்ளைகளுக்கு பாம்பர்ஸ் வாங்கி அனுப்பனும், அதான்.

எனக்கோ புஸ் என்றாகி விட்டது. அவரிடம்..

ஊரில்தான் பாம்பர்ஸ் கிடைக்கின்றதே, எதற்கு இங்கிருந்து அனுப்புகின்றீர்கள் என்றதும்.

ஊரில் சரி இல்லை பாய். ஒரு மூத்திரம் போனாலே நொத.. நொதத்து (என்ன தமிழோ!) தொங்கி விடுகிறது. சௌதி உள்ளது நல்ல குவாலிட்டி. காலையில் போட்டால் இரவு வரை தாங்குகிறது என்றார்.

அப்படி என்றால் நாள் பூராவும் குழந்தைகள் கக்கூசை கட்டிக்கொண்டா அலைகிறார்கள். கன்றாவியே! அப்புறம் அந்த வியாதி இந்த வியாதி என்று மருத்துவரிடம் அலைய வேண்டியது.

* முந்தைய தலைமுறையில் நாம் அடிக்கடி கேட்டு இருப்போம்.." குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன், பல் முளைத்து விட்டது.. கடிக்க ஆரம்பித்துவிட்டது." என்று. இன்றோ கட்டுரையில் சொன்னது போல தான். தாயின் பாலை சுவைத்தே அறியாத குழந்தைகள் பல உள்ளன. நிறைய்..ய்..ய விசயங்கள் பகிர்ந்து கொள்ள உள்ளன. அப்புறம் கருத்து கட்டுரையை விட அதிகமாக ஆகிவிடப்போகின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved