Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:42:42 AM
ஞாயிறு | 28 ஜுலை 2024 | துல்ஹஜ் 1823, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:39மறைவு12:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0119:2719:54
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 144
#KOTWEM144
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 2, 2014
வெளுத்துக்கட்டும் நேரமல்ல இது...!

இந்த பக்கம் 3244 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மஃரிப் பாங்கு சொல்வதற்கு இன்னும் 12 நிமிடங்கள்தான் இருந்தது. ஆளைக்காணோமே என மனம் பரபரத்துக் கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. திறந்து பார்த்தால் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பன் நின்று கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே ஸலாம் சொன்ன அவன் தனது தாமத வருகைக்கான காரணத்தையும் கூறி வீட்டிற்குள் நுழைந்தான்.

சரி சரி கையை கழுவிட்டு வா, வாங்கு சொல்றதுக்கு 06 நிமிஷந்தான் ஈக்குது என்றேன். கையை கழுவி விட்டு உணவு மேசைக்கு முன் வந்து அமர்ந்தான்.





அது ஒரு நோன்பு மாதம். நோன்பை திறந்தாகி விட்டது. அவன் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த பழத்துண்டங்களை மட்டுமே எடுத்து தின்று கொண்டிருந்தான்.

கஞ்சி, கறி சமூசா, ரோல்ஸ், கட்லட், தேயிலை, பழச்சாறு, ஃபிர்னி என பரத்தி வைக்கப்பட்டிருந்த வலந்துகளை அவனருகில் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைத்தேன். மச்சான் இது என்னா ரெஸ்டாரண்ட் மாதிரிலோ இருக்குது என கிண்டலடித்தான்.

தின்னு என்றேன். சாப்டுவேன் ஆனால் இப்பம் இல்ல அது வறய்க்கும் நீ பொறுப்பியா என புதிர் போட்டான். மச்சான் . ஏண்டா இந்த நேரத்துல கொழப்புறே என்னத்துக்குடா இப்படி சுத்தி வளய்க்குறே என்ற என் சலிப்பிற்கு அவன் நீண்ட விளக்கம் ஒன்றை தந்தான்.

மச்சான்.. நோம்பு புடிக்கும்போது உடம்புல உள்ள நச்சுத்தன்மைலாம் வெளியேறுது என அவன் சொன்னவுடன் எது வழியா எந்த டைம்ல எப்படி வெளியேறுது என்ற என்னுடைய கிண்டல் கேள்விக்கும் சேர்த்தே அவன் பதில் சொன்னான்.



நாமோ நோம்பு தொறக்கிற சமயத்துல பழோம், தண்ணி , பால் , கஞ்சி இதுல எத வேணா சாப்டலாம். ஏண்டா பகல் முழுசா உடம்புல இருந்து சேகரமான வெஷம்லாம் செரிமான உறுப்புலதான் தங்கி ஈக்கும். ரொம்ப நேர பட்டினிக்கு பொறவு பழம், தண்ணி , பால் , கஞ்சி போல உள்ள எயற்கையான உணவு உள்ளக்க போகும்போது நம்ப கொடல் ஈஸியாக நச்சுத்தன்மைய வெளிய தள்ளீரும். நம்ப ஊட்டுல ஆசயா செஞ்சதுலோண்டு பொரிச்சது வறுத்ததய்லாம் உள்ள தள்ளி கதவ சாத்துனா கொடல் ஜாம் ஆயீரும். அப்புறம் வெஷம் வெளிய எறங்காது. எனக்கென்னாண்டு அங்கயே செம்மீரும்.

நான் பொரிச்சதயும் வறுத்ததயும் திங்க வாணாண்டு ஒரேயடியா சொல்லலப்பா. நாஞ் சொன்னேன்டு இங்க இருக்கிறதய்லாம் ஒம் பொண்டாட்டி அள்ளீட்டு போய்டாம. இதய்லாம் நோம்பு தொறந்து ஒன்றர மணி தேரம் கழிச்சி அளவா சாப்புடலாம்.

ஒரு வழியா நண்பனுக்கான இஃப்தார் உபசரிப்பு முடிவடைந்து அவன் கிளம்பி விட்டான். உணவு தட்டங்களாலும் மிச்சங்களாலும் நிரம்பி இருந்த மேசையை மனைவி தூய்மைப்படுத்தினாள். நான் அப்படியே சேரில் அமர்ந்திருந்தேன். என் முன் காலியாக இருந்த மேசை போலவே என் மனதிலிருந்த உணவு , நோன்பு தொடர்பான முன் கருத்துக்களில் நிறைய வெறுமையாகி விட்டிருந்தன.

நண்பனின் சொற்களில் இருந்து தெறித்த சுடர் என்னை அலைக்கழித்து கொண்டிருந்தது. அவனிடம் இது தொடர்பாக நிறைய உரையாட வேண்டும் போல இருந்தது. செல் போனை எடுத்தேன். அழைத்தேன். எடுத்தான். மச்சான் தராவியா முடிஞ்ச பொறவு பத்தர மணி கிட்ட கடக்கரைக்கு போவமா என்றேன். சம்மதித்தான். நான் போகும் முன்னரே அவன் கடற்கரையில் விளக்கு கோபுரத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் தொப்பியையும் சட்டையையும் கழற்றி பக்கத்தில் வைத்து விட்டு பனியனுடன் மல்லாக்க படுத்திருந்தான். கடும் கோடைக்காலமாக இருந்ததால் நிறைய பேர் கடற்கரை மணலில் ஏற்கனவே சாய்ந்து கிடந்தனர்.



அஸ்ஸலாமு அலய்க்கும் மச்சான்! இப்பிடி ஒன்ன மாதிரி அவ்வளோ பேரும் பீச்சுக்கு வந்துட்டா ஏசீலாம் எப்டீடா விக்கும் என்று கேட்டபடியே அவனருகில் போய் அமர்ந்தேன்.

வ அலய்க்குமுஸ்ஸலாம் வா வா என கண்களை திறந்த படியே பதில் சொன்னான்.

சொகுசுக்கும் வசதிக்குமான நம்மட ஏக்கத்த ஏசீ கம்பனிக்காரன் முதலாக்குறான். வெப்ப காலம் சில மாதங்களல முடிஞ்சிரும். ஆனா வருஷம் புல்லா எல்லாரும் ஏசீ வச்சா வெளி வெப்பம் மொத்தமா உயருமேண்டு நாம சிந்திக்கிறதில்ல.

சரி மச்சான் நான் வந்த விஷயம் ஏசீ பத்தி பேச இல்ல. நோம்பு இஃப்தார பத்தி நீ சொன்னத அச போட்டு பாத்தன்டா. அதப்பத்தி பேசத்தான் உன்ன கூப்பிட்டன் என நான் இடை மறித்தேன். கல்கத்தா . டில்லி , பம்பாய்லலாம் ரம்ஜான் பஜார்ண்டே தனியா இருக்குதே. அதுல வெதம் வெதமான ஈத்தப்பழம் , பால் பசு நெய்ல செஞ்ச இனிப்பு அய்ட்டம் , இம்போர்ட்ட்ட் ஷர்ட் , சின்ன புள்ளைளுக்கான உடுப்புண்டு கள கட்டுதே.

கேரளால பல எடங்கள்ல நோம்பு தொறக்க பரோட்டா , பத்திரி , வறுத்த கோழி , கப்பக்கிழங்கு மசியல் , தோசை , மாட்டுக் கறி ரோஸ்ட்ண்டு வெளுத்துக்கட்டுறாங்களே. நம்ப மெற்ராஸ் மண்ணடிலயும் குமியல் குமியலா வடை , சம்சா , கட்லட் பொறிச்சு வச்சிருக்குதே. கடப்பாசி , கஞ்சியும் சேத்து விக்கிறாங்களே . ஏன் நம்மூர்ல மட்டும் கொறவாவா இருக்குது . சிலோன்லயும் நோம்புல வெளுத்துதான் கட்டுறாங்க ? ஒலகமே இப்படி ஈக்கும்போது நாம மட்டும் மாற்ரது ஈஸி இல்லதானே என்றேன்.

சரி முடிச்சிட்டியா என மூச்சு விட்டபடியே கேட்ட நண்பன் நீ பதில சொல்லீட்ட இப்போ நான் கேள்விய கேக்கட்டா என்றான். இது என்னா தல குப்புறா இருக்குது. என்னதோ கேளுப்பா என்றேன்.

சிலோன் , கேரளா , தமில் நாட்டுல ஆஸ்பத்திரிய்லயும் மருந்துக்கடய்கள்லயும் போய் பாரு. புர்க்காவும் தொப்பியும் போட்ட கூட்டந்தான் ஜாஸ்தியா இருக்கும். ஏன் நம்ம ஜனங்க இவ்வளவோ பேர் இங்கேங்கிற கேள்விக்குத்தான் நீ மொதல்லேயே பதில் சொல்லீட்ட. இப்போம் நம்மட தீனிக்கும் நோய்க்கும் உள்ள கனெக்சன புரிஞ்ச்சுக்கிட்டீயா.

ரமழான் என்பது வருஷத்துல ஒரு தடவ வர்ற விஷேஷ காலம். இதுலயும் டைட் பண்ணுனா எப்படிடா என நான் அவனை இடைமறித்தேன். ஏம்பா ஒன்னும் தெரியாத மாதிரி நீனும் பேசுறியே . வருஷம் ஃபுல்லா உங்றது திங்றதுல ஏதும் கொறவு வய்க்க்றோமா?

இவன இப்படியே உட்டா சரிவர மாட்டான்னுதான் இறைவன் வருஷத்துக்கு ஒரு தடவை நம்பளுக்கு பிரேக் போடுறான்.

ஆனா நாம என்னண்டா பகல்ல கிடந்த பட்டினிக்கு பழி வாங்குற மாதிரி இஃப்தார்லயும் தராவீஹுக்கு பொறவும் ஸஹர்லயும் வெளுத்து வாங்கீர்ரோம். கறியும் , மீனும் இல்லாத ஸஹர்ண்டு ஒன்னு நம்மட்ட இருக்குதா ? நோம்பு பகல்ல நம்ம உடம்பு காத்து போல லையிட் வெயிட்டா இருக்குது .ஆனா ராத்திரி மாட்டு மாட்டுனு மாட்டுறதுல மஃரிப் , இஷா , தராவியா சுபுகு தொழுவய்ல குனிய்ரதுக்கும் நிமிர்ரதுக்கும் எப்டி மூச்சு முட்டும் தெரியுமா ?

அது மட்டுமில்லே எளிய மக்கள்ட வேதனய கஷ்டத்த நாமோ ஒணர்ரதுக்குத்தான் நோம்புண்டு நம்புறோம் சொல்றோம். ஆனா நோம்பு முடிஞ்ச பொறவு நம்ம ஒடம்புட எட கூடவும் செய்யுதே. நோம்பு மாசத்துல நம்ம வீட்டு செலவு ஏன் பல மடங்காவுது. சாப்பாடுதான் செலவுகளை கூட்டுது. இதே சாப்பாட்டாலதான் நோம்புட நோக்கங்களும் அடி வாங்குது. தாறுமாறான வாழ்க்க முறயாலயும் உணவாலயும் நமக்கு விடிவா வந்த ரமழானையும் சரியான பயன்படுத்த தவறிர்ரோம்.

ஒரு பெரியவர் சொன்ன கதையை சொல்றேன் கேள்.

ஒரு சமயம் ரயிலில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் முதிய பாதிரியார் ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்தார்.

கிட்டதட்ட ஒரு நாள் வரை நீடித்த பயணம் அது. அந்த பயணத்தில் அந்த பாதிரியார் உணவு எதுவும் சாப்பிடவில்லை. வெறும் நீரை மட்டுமே அருந்தினார். இதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த அந்த நடுத்தர வயதுக்காரர் பாதிரியாரிடம் உணவுண்ணாமைக்கான காரணத்தை கேட்டார்.

அதற்கு அந்த பாதிரி சொன்னாராம். நான் பயணம் செய்யாத நாட்களில் உணவை உண்ணத்தான் செய்கின்றேன். பயண நாட்களில் உணவை தவிர்த்து விடுவதற்கான காரணம். அதில் மிஞ்சும் பணத்தை அனாதைகள் நிலையத்திற்கு கொடையாக அளித்து விடுவேன். எனது உணவில் என்றைக்காவது யாருக்காவது பங்கு இருக்க வேண்டுமே என்றாராம்.

தஹஜ்ஜுத் நேர தொழுவையும் அதுல குரான் ஓதுறதும் வாக்கையும் மனசையும் ஒன்னு சேக்கும்ண்டு குரான்ல இருக்குது. பகல்ல நோன்பு மனதையும் உடலையும் சுத்தமாக்குது. ரமழான் மாச தர்மம் பல மடங்கு நன்மையையும் மன்னிப்பையும் கொண்டு வருது. வசதி உள்ளவங்க வீசுற காத்தப்போல தர்மம் செய்வாங்க. இல்லாதவங்க உங்கிறதலயும் உடுத்துறதிலயும் செலவை குறைத்துத்தான் தர்மம் செய்ய வேண்டியீக்குது. நாம எங்கயும் மிஸ்ஸாவிடக்கூடாதுண்டுதான் நோம்பு தொழுவை தர்மம் தஹஜ்ஜூத் குரான் திலாவத் இஸ்திஃபார் திக்ர் என எல்லா அமலையும் ஒரே நேர் கோட்டில் இணைத்து synchronise செய்துள்ளான் இறைவன். சிங்க்ரனைஸ் ன்டா என்ன தெரியுமா ? ஒன்றை மற்றொன்றோடு ஒத்திசைந்து செயல்பட வைக்கிறது.

கடல் அலை போல பெருகி வந்த நண்பனின் சொல் பெருக்கு சட்டென நின்று விட்டது. எங்களுக்கிடையே கனத்த மௌனம் நிலவியது. வீட்டிற்கு போவதற்காக கிளம்பினோம். அவன் நிதானமாகவும் இலேசாகவும் நடந்து சென்று கொண்டிருந்தான்.

எதோ சுமையை சுமந்தவனைப்போல நான் அவனுக்கு பின்னால் சென்று கொண்டிருந்தேன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சாப்பாட்ட கொரச்ச மாதிரியும் இல்ல; நன்மைய சம்பாதிச்ச மாதிரியும் இல்ல...!!!
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 02 July 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35747

மிகச் சரியாக சொல்லி இருக்கிறார். ரமலான் என்பது உடலை பட்டினி போட்டு இதயத்துக்கு தீனி போடும் காலம். ஆனா இப்போ அப்படியா எல்லாரும் கடபிடிக்கிறாங்க.

என் கல்லூரி நாட்கள்ல சில ரமளான்களில் எங்களோட கல்லூரிலையே படிச்ச சூடான் நாட்டினர், பாலஸ்தீனியர் தங்குமிடத்துக்கு அவர்களது விருந்தாளியா நோம்பு தொறக்க போய் இருக்கோம்.

எல்லாரும் ஒன்னா உக்காந்து இருப்பாங்க, மொதல்ல ஈத்தப்பழம், தண்ணி, அப்புறம் ஒரு ஜூஸ் தான் வரும். இதோட முடிஞ்சிதாணு நெனைக்கிறப்ப அடுத்து தொழுகைய ஜமாஅத்தா தொழுவாங்க.

அப்புறம் ஒரு சின்ன பயான் நடக்கும். தொடர்ந்து கிட்சென் லருந்து சமைச்ச சட்டியோட அத்தனையும் எங்களுக்கு முன்னாடி வந்துரும். விரும்பியத சாப்டுட்டு போய்ட வேண்டியது தான்.

அடுத்த அவங்க உணவு சஹர்கு தான். அந்த உணவு ஏற்பாட்டுல ஒரு சிஸ்டமும் இருந்திச்சி. நல்ல பழக்க வழக்கமும் இருந்திய்ச்சி. நோன்பும் நோன்பா இருந்திச்சி.

ஆனா நம்மகிட்ட இருக்ற பழக்க வழக்கத்த பார்த்தா நோன்பு வர்றதுக்கு வராம இருந்தா கூட பரவா இல்ல போல இருக்கு. ஏன்னா சாப்பாட்ட கொரச்ச மாதிரியும் இல்ல; நன்மைய சம்பாதிச்ச மாதிரியும் இல்ல.

அல்லாஹ்வுக்கு கோவம் வருமா வராதா சொல்லுங்க பாக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: mofamalik (kayalpatnam) on 02 July 2014
IP: 107.*.*.* | Comment Reference Number: 35752

அருமையான கட்டுரை, உண்மையான வரிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 03 July 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35755

சிந்திக்க வைக்கும் ஆக்கம், முன்பைவிட இப்போது இப்தாருக்கு வீடுகளில் பொறியல், பாஸ்ட் food மற்றும் குளிர் பதனங்கள், பழங்கள், அந்தந்த காலத்திற்கு கிடைக்கும் பழங்கள், pastry அயிட்டங்கள் இதுவெல்லாம் காணாது என கட்டாயம் பள்ளிகளில் பெரும் ஊத்துக்கஞ்சி இப்படி பல.

ஒருநேரத்தில் பள்ளிகளில் விசேஷ தினத்தில் மட்டும் கறிக்கஞ்சி இருக்கும் இன்றோ, எல்லா நாளும் கறிக்கஞ்சி. சாதா கஞ்சியை பார்ப்பது அரிது என்ற நிலை,பள்ளிகளிலும் கட்டாயம் பொறியல் அயிட்டம் உண்டு. இப்படி மாறியுள்ளது இன்றைய நிலை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: zakariya (chennai) on 04 July 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 35781

கஞ்சியில் கூட இருபது வருடங்களுக்கு முன்னர் பள்ளிவ்வாசல்களில் பரிமாறப்படும் வெள்ளை கஞ்சி தான் உடலுக்கு நல்லது. இப்போது அந்த கஞ்சி எந்த பள்ளியில் போடுகிறார்கள் என தேடும் நிலை ஏற்பட்டு விட்டது.

கஞ்சிக்கு combination வடை என்பதை மாற்றுவது என்பது நம்மை பொறுத்த வரையில் மிக கடினமான விசயமாகிவிட்டது ஒரு குடி ஒரு கடி என்பதை ஏதோ ஆத்திசூடி போல பெருசுகள் கூட மனதில் வைத்து செயல் பட்டதினால் பரலோகம் பொய் சேர்ந்தவர்கள் பலர்.

நம்முடைய உடல் என்பது நமக்கு நம்மை பொறுத்தவரையில் அமானிதம் அதை பாது காக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை நாம் மறந்து விடக்கூடாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. உணவு பழக்கங்கள் !!
posted by: Salai. Mohamed Mohideen (USA) on 09 July 2014
IP: 50.*.*.* United States | Comment Reference Number: 35867

நல்ல வெளுத்து கட்டியதோடு மட்டுமில்லாமல் , பொரிச்ச ஐட்டங்களின் புகைப்படங்களையும் போட்டு உசுப்பி விட்டுட்டு... ஒன்றை மணிநேரம் கழிச்சு சாப்பிடுன்னு சொன்ன என்ன நியாயம் பஷீர் காக்கா ?

நாம பேசுற தமிழை எழுத்து நடையில் படிக்கும் போது, சிரிப்பு சிரிப்பா வருது. மற்ற மாதங்களை விட, நோன்பில் சாப்பாடு செலவுக்கு இரண்டு மடங்கு கூடுதலாக அனுப்பி தாங்க என்கின்றனர் நமதூர் தாய் குலங்கள். அதை விட வினோதம் என்றால்... நோன்பு மாதத்தில் தான், இணையதளங்களை நோட்டம்விட்டு ஒவ்வொருநாளும் புதுவகையான உணவு பதார்த்தங்களை செய்வதில் பிஸியாக இருப்பவர்களும் உள்ளனர். போகின்ற போக்கை பார்த்தால்... நோன்பு மாதத்தில் எடை கூடுபவர்கள் தான் அதிகம் போல் தெரிகின்றது.

முடிந்த வரை உணவு விடயத்தில் (அதிலும் குறிப்பாக நோன்பு மாதத்தில்) மாற்றங்களை நாம் தான் கொண்டுவரவேண்டும் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved