Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:29:02 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 145
#KOTWEM145
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 7, 2014
சிந்தனை செய் மனமே!

இந்த பக்கம் 3149 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சினான் ஒரு சுற்றுலா பிரியர். ஒரு முறை அவர் மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ள ஊர்களுக்கு பயணம் செய்தார். அது கோடை காலம் முடிந்து குற்றால சீசன் துவங்கியிருந்த நேரம். மழை மேகங்கள் மலைகளின் முகட்டைத் தழுவிக் கொஞ்சியபடி நகர்ந்து செல்ல சாரல் அவ்வப்போது உடலை நனைக்க வீசும் தென்றலில் ஒரு சில வினாடிகள் தன்னையே மறந்துபோன சினான் இனி எப்போதும் இங்கேயே தங்கி விட வேண்டியது தான் என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சுஹைல் ஒரு தொழிலதிபர். தனது கடைவேலையிலேயே எப்போதும் மூழ்கி கிடப்பவர். ஒரு சிறந்த அறிவாளியும் கூட. இருக்கும் இடத்திலிருந்தே மார்க்கம், உலகம் என அத்தனை விஷயங்களையும் அறிந்திடும் முயற்சியிலேயே இருப்பார். அவர் அவ்வளவாக சுற்றுலா சென்று பழக்கமில்லாதவர். கேட்டால் நான் இருக்குற இடத்தில் இருந்தவாரே ஊட்டி, கொடைக்கானல என் மனதில் கொண்டு வந்து விடுவேன். அங்க போய் அடையும் ஆனந்தத்தை என் உள்ளம் இங்கயே அடைந்து விடும் என்பார்.

சினானும் சுஹைலும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறார்கள். மனம் சம்மந்தமான ஒற்றுமைதான் அது. முன்னவர் ஓரிடத்திற்குச் சென்று அந்த சூழலில் அகப்பட்டவராய் தன் மனதை அதன் பால் அலைய விட்டு விடுகிறார். பின்னவரோ இருக்கும் இடத்தையே தன் மனதைக் கொண்டு தான் விரும்பும் சூழலுக்கு மாற்றிக் கொள்கிறார்.

நம் மனம் சக்தி வாய்ந்தது. அது சீராக இருந்தால் உடல் அனைத்துமே சீர் பெற்றிருக்கும். அது கெட்டுப் போய் விட்டால் உடல் முழுதுமே கெட்டுப்போய் விடும். ஒரு ஹதீஸின் வரிகள் இவை.

மனதைச் சீர் படுத்துவதெப்படி.

ஒரு மருத்துவர் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு, உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகளைச் செய்யுமாறு அறிவுறுத்துவதைப் போல உள்ளத்தை ஆரோக்கியமாக (நெஞ்சு வலி வராமல்) வைத்திருக்க தினந்தோரும் சில நிமிடங்கள் நன்றாக நடக்க வேண்டும் என்கிறார். திடப்பொருளான இதயத்தை சீராக்குவதற்கு இக்குறிப்புகள் உதவலாம். ஆனால் ஒருவரின் எண்ணத்தைச் சீர்படுத்தி மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேறு பல நற்செயல்களையும் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا

ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا

அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

وَقَدْ خَابَ مَن دَسَّاهَا

ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். (அல் குர்ஆன் 91:8-11)

இவ்வசனங்களில் ஆத்மா எனும் நஃப்ஸ் மனம் சம்பத்தப்பட்டதே.

அதை எவ்வாறு தூய்மைப்படுத்த முடியும் என்பதற்கு பின் வரும் வசனம் விளக்கமளிக்கிறது.

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும்,

தொழுது கொண்டும் இருப்பான். (அல் குர்ஆன் 87:14-15)

அல்லாஹ் மேலும் கூறுகிறான்:

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல் குர்ஆன் 13:28)

உடலின் ஒவ்வொரு அசைவும் மனதுடன் சம்பந்தப்பட்டதே. அண்ணலார் (ஸல்) அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ‘செயல்கள் எல்லாம் எண்ணத்தை அடிப்படையாக கொண்டே அமைகின்றன’ என்றார்கள். (நூல்: புகாரி)

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எண்ணம் ஒரு மனிதனைப் புனிதனாகவும் மாற்றுகிறது. அவனைக் கீழ்த்தரமான நிலைக்கும் தள்ளி விடுகிறது. இறை மருப்புக் கொள்கைவாதியான சிக்மன்ட் ஃப்ராய்ட் மனம் பற்றிய தனது ஆய்வின் முடிவில் ‘செயல்கள் அனைத்தும் ஒருவனது (மனோ இச்சையால் உருவாகும்) பாலுணர்வின் அடிப்படையில் அமைகிறது’ என்கிறான். இறைவனே இல்லை என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தம் மனம் போன போக்கில் எதையும் செய்வதையே இயல்பாக்கிக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வை ஏற்று ஈமான் கொண்டு முஸ்லிமான ஒருவன் தான்தோன்றித்தனமாக வாழ முடியாது. முஸ்லிம் என்ற பெயராலேயே அவன் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவனாவான். ஆயினும் அவனது ஈமானில் ஏற்றத்தாழ்வுகளும் குறைபாடுகளும் அவ்வப்போது இருக்கவே செய்யும்.

தவற்றிலேயே மூழ்கிடாமல் இருக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஐந்து கடமைகளை வகுத்துத் தந்துள்ளான். அதில் ஒன்றான நோன்பும் கூட ‘தக்வா’ என்னும் இறையச்சம் சம்பந்தப்பட்டதே.

அந்த ‘இறையச்சம் மனம் சம்பந்தப்பட்டது. மனதில் போலியாக வாழ்ந்து வெளித்தோற்றத்தில் இறையச்சமுள்ளவன் போல வாழ்பவனை குர்ஆன் நயவஞ்சகன் என அழைக்கிறது.

இதயம் எப்போதுமே சூழலுக்குள் அகப்படுவதாகவே உள்ளது.

ஒருவன் எச்சூழலில் மரணிக்கிறானோ அதே சூழலிலேயே எழுப்பப்படுகிறான் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

பின் வரும் குர்ஆன் வசனம் இதை உறுதிப்படுத்துகிறது.

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ

“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”

إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (அல் குர்ஆன் 26:88-89) ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்வில் அல்லாஹ் வசந்தத்தை வீசச் செய்கிறான். அதைப் பயன்படுத்திக் கொண்டவன் வாழ்வை வெல்கிறான். அதை அனுபவிக்காமல் விட்டு விடுபவன் இனி எப்போதும் அதை அடைய முடியாதவனாக ஆகி விடுகிறான் என ஒரு நபி மொழியின் கறுத்து கூறுகிறது.

இரண்டாம் ஃகலீஃபாவாகிய செய்யிதினா உமர் ஃகத்தாப் (ரழி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் கணவராகிய தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) அவர்கள், இமாம் மாலிக் (ரழி) அவர்கள் முதலானோர் அவ்வாறு தம் வாழ்வில் வீசிய ஈமானிய வசந்தத்தை தழுவிக் கொண்டவர்களே.

இன்றும் நம்மில் பலர் அவ்வசந்த்தத்தை அடைந்து கொண்டேயிருப்பதை இறையழைப்புப் பணிகளைச் செய்து வருபவர்கள் நன்கறிவார்கள். அந்த வசந்தத்தை அடையும் வழிகளிம் மிக முக்கியமான காலம்தான் இப் புனித ரமளான் மாதமாகும்.

இம்மாதத்தை முறையாக பயன்படுத்தாதவன் துற்பாக்கியசாலி மட்டுமல்ல, அல்லாஹ்வின் சாபத்திற்கே உரியவன் ஆகிறான். எவ்வளவு கூறியும் ஏற்காத உள்ளங்களைத் துருப்பிடித்த உள்ளமாக அல்லாஹ் கூறுகிறான்:

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ

அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (அல் குர்ஆன் 83:14) இன்னொரு இறைவசனம் மூஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்டு ஆனால் அவர்களைத் துன்புறுத்திக் கொண்டே இருந்த அவர்களின் சமூகத்தார் பற்றி பின்வருமாறு கூறுகிறது:

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَد تَّعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ ۖ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

61:5. மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல் குர்ஆன் 61:5)

எனவே, காலத்தால் மிகவும் சிறந்து விளங்கும் இப்புனித ரமளானில் அதை அலட்சியப்படுத்துபவர்களின் குழுவில் நாம் இருக்காமல் நம் மனதை அல்லாஹ்வின் பால் செலுத்தி குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதைக் கொண்டும் இரவில் நீண்ட நேரம் நின்று வணங்குவதைக் கொண்டும் ஸஹ்ருடைய வேளையில் அல்லாஹ்விடம் சரணடைந்து இஸ்திஃக்ஃபார் செய்வது கொண்டும் வீணான பேச்சுக்கள், செயல்களை விட்டும் விலகி இருப்பது கொண்டும் புயல் போன்ற வேகத்தில் தான தர்மங்கள் புரிவது கொண்டும் நம் வாழ்வைக் கழித்து திருப்தியுள்ள ஆன்மாவாக (நஃப்ஸும் முத்மஇன்னாவாக) நம் இரட்சகனைச் சந்திப்போமாக, ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்மைகளை அதிகமதிகம்...
posted by: N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) on 08 July 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35848

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நல்ல பயனுள்ள கட்டுரை – சிந்தனை செய்ய வேண்டிய தருணம் இது – சிந்தித்துணர்ந்து இந்த புனித மாதத்தில் இறைமறையை அதிகமதிகம் ஓதி, தான தருமங்களை செய்து இவ்வுலகுக்கும் மறு உலகுக்கும் நன்மைகளை அதிகமதிகம் சேர்ப்போமாக ஆமீன்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புரிந்து கொண்ட நல்ல புத்திசாலிகள் புண்ணியம் சுமந்து கொள்வார்கள்.
posted by: s.s.md meerasahib (TVM) on 08 July 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35849

அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர் எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் எழுத்து மேடை கட்டுரை பயனுள்ள ஜெயம் பெறவல்ல ஒரு நல்ல அறிவுரையும், சைத்தானை நம் நப்சில் இருந்து துரத்தும் யுக்த்தியும் கூட. நல்ல சமயத்தில் நல்ல கட்டுரையை தந்தமைக்கு நல் வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Vilack SMA (kayalpatnam) on 09 July 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35862

சுமார் 25 வருடங்களுக்குமுன் என நினைக்கிறேன் . என் மனதில் மிகவும் ஆழப்பதிந்த ஒரு TV நிகழ்ச்சி . திரைப்பட நடிகை லட்சுமி அவர்கள் ஒரு பெரியவருடன் பெசிக்கொண்டிருப்பதுபோன்ற நிகழ்ச்சி . 15 நிமிடம் சாதாரண பேச்சுதான் . பலதையும் பேசுவார்கள் . நமதூர் சங்கங்களில் மாலைவேளைகளில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பார்களே அதுபோலத்தான் .

பேச்சின்போது இடையிடையே லட்சுமி அவர்கள் அந்த பெரியவரிடம் , 5 நபரின் பெயர்களுக்குண்டான எழுத்துக்களை ஒவ்வொரு எழுத்தாக மாற்றி மாற்றி சொல்வார் . ஒருமுறை ஒரு எழுத்துதான் சொல்வார் . பிறகு பேச்சு தொடரும் . அடுத்து ஒரு எழுத்தை சொல்வார் . பெயரின் 3 வது எழுத்து என்பார் . அடுத்த முறை இது 5 வது பெயரின் கடைசி எழுத்து என்பார் . இப்படியாக மாற்றி மாற்றி சொல்வார் . இறுதியில் 15 நிமிட பேச்சு முடிந்ததும் பெரியவர் 5 பெயர்களையும் எவ்வித பிழையும் இன்றி சொன்னார் . மிகவும் ஆச்சர்யம் . இதற்கிடையே பேசிக்கொண்டிருக்கும்போதே பெரியவர் கையால் எதையோ செய்துகொண்டிருந்தார் . அதையும் கச்சிதமாக முடித்தார் .

பேட்டிகண்ட லட்சுமி அவர்கள் ஆச்சரியத்துடன் வியப்புடனும் கேட்டார் . என்ன பெரியவரே எப்படி இதெல்லாம் உங்களால் முடிகிறது ?

மனம் ஒருமைப்பட வேண்டும் . கெட்ட செயல்களை பார்ப்பது , செய்வது , பேசுவது இவைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் . கெட்ட எண்ணங்கள் குப்பைகளுக்கு சமம் . அவற்றை மூலையில் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் . மன ஒருமைப்பாட்டுடன் நல்ல எண்ணங்களும் சேர்ந்தால் நான் செய்த இந்த காரியம் எல்லோருக்கும் வரும் என்றார் .

நண்பர் அவர்களின் கட்டுரை அனைத்தையுமே விரும்பி படிப்பவன் நான் . பயனுள்ள செய்திகள் ஏகப்பட்டது இருக்கும் .

அல்லாஹ்வை வணங்குவது , மனம் ஒருமைப்படுவது இந்த ரமலான் மாதத்தில் ஸ்பெசல் என்றாலும் எல்லா காலத்திலும் இது தொடர வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...சிந்தைக்கு விருந்து
posted by: mackie noohuthambi (chennai) on 13 July 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35897

நோன்பு காலங்களில் செய்யவேண்டிய நற்கருமங்கள் இவ்வளவு இருக்க, நமது இரவு நேர பொழுதுபோக்குகளாக சஹர் நேர ஒளிபரப்புக்கள், தாம் விளையாடுவது, கேரம் போர்டு விளையாடுவது என்று மாறி விட்ட அவலத்தை யாரிடம் சொல்வது. பகல் நேரங்கள் வெறும் அரட்டையிலும் அடுத்தவர் பற்றி புறம் பேசுவதிலும் கழிகிறது. விழித்து இருந்து பசியை உணர்வதை விட, தூங்கியே நமது பகல் பொழுதை கழிக்கும் பழக்கமும் நம்மிடம் உள்ளது.

இந்த மாதிரி கட்டுரைகள் இணையதள வசதி உள்ளவர்களைத்தான் சென்றடைகிறது. சாதாரண மக்கள் இதை அறிவது எப்படி.

நமதூரில் ஜாவியாவில் மட்டும் காலை 11 மணி முதல் 12 மணி வரை மார்க்க விஷயங்கள் சொல்லப்படுகின்றன. முன்பு மிஷ்காத் என்ற நூலில் இருந்து செய்து ஆலிம் அவர்கள் மார்க்க விஷயங்கள காலை 11 மணிக்கு ஜாமிஉல் அஸ்ஹர பள்ளியில் சொல்வார்கள். இப்போது அகீதா என்று ஒரு பிரச்சினை நம்மிடையே தோன்றி மன மாச்சரியங்களை ஏற்படுத்தி, இது மாதிரி நல்ல செய்திகளை கேட்க தடையாக உள்ளது. மற்ற எல்லா முஹல்லா பள்ளி வாசல்களிலும் இப்படி ஒரு ஏற்பாடு செய்யலாம். எத்தனை பேர் வருகிறார்கள் எனபது முக்கியமல்ல. காலபோக்கில் மக்கள் வர ஆரம்பிப்பார்கள்.

இதை விட்டு விட்டு நோன்பு திறந்த பிறகு தராவீஹ் தொழுத பிறகு பயான்கள் நடக்கின்றன. வீடு போய் சேர 12 மணி ஆகிறது. தூக்க மேலீட்டால் சஹர் நேரத்தில் பதறி பதறி எழுகிறார்கள். தஹஜ்ஜத் தொழுகை, இஸ்திக்பார், சலவாத் ஓதக் கூட நேரமில்லை. சிலர் சஹர் நேர ஒளிபரப்பில் மூழ்கி விடுகிறார்கள். எல்லா டிவி களிலும் பலதரப்பட்ட உலமா பெருமக்கள் பேசுகிறார்கள். அமல் செய்யும்படிதான் பிரசங்கம். ஆனால் பிரசங்கம் முடியும்போது சஹர் முடியும் நேரம் வந்து விடுகிறது. எங்கே அமல் செய்வது, எப்போது அமல் செய்வது.இதை எப்படி சரிசெய்வது ஒன்றுமே புரியவில்லை.

ஆசிரியர் அவர்கள் நல்ல சிந்தனையாளர், அவரது தந்தை SK எனது நெஞ்சில் நிறைந்தவர். அந்த காலத்தில் சஹர் நேர ஒலி பரப்புக்கள் குழாய்கள் வைத்து எழுப்பும் பழக்கம் இல்லை. சஹர் நேர ஒளிபரப்புக்கு டிவி க்கள் இல்லை. ஆலிம்கள் முண்டி அடித்துக் கொண்டு வருவதில்லை..ஆனால் , ஒரு கூட்டம் தெரு தெருவாக வருவார்கள். "ஒத்தை அடியும் அடிச்சாச்சி, ரெட்டை அடியும் அடிச்சாச்சி எழும்புங்க லாத்தா, எழும்புங்க லாத்தா சஹ்ரின் வக்தாச்சி, பொட்ட எழும்புங்க லாத்தா எழும்புங்க லாத்தா சஹ்ரின் வக்தாச்சி" என்று பாடிக் கொண்டு வருவார்கள் அதில் SK யின் பங்கும் பாங்கும் அலாதியானது.பக்கீர்கள் கொட்டு அடித்துக் கொண்டு வருவார்கள் எந்த நோயாளியும் கஷ்டப்பட மாட்டார்கள் திட்ட மாட்டார்கள்.

இப்போது நவீன வாழ்க்கை வசதிகள் ஆனால் மன சங்கடங்கள் அதிகம். அல்லாஹ் ஒருவனே இந்த நிலைகளை மாற்றி நமது சிறிய அமல்களுக்கும் நிறை கூலிகள் தர போதுமானவன். ஆனாலும் இந்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளத்தை தவிர வேறு வழிகள் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டி உள்ளது. கட்டுரை ஆசிரியர் போன்ற சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தினால் மாற்றம் நிச்சயம் வரும். YA MAUSHARA SHABAAB என்று இளைஞர்களை தான் நபிகள் நாயகம் அழைத்தார்கள். அந்த புரட்சியை 13 வருட காலத்தில் செய்து சாதனை படைத்தார்கள்.

நபி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கை முறை, போதனைகள் எல்லாம் புத்தகங்களாக நம்மிடையே இருக்கின்றன. சஹாபாக்கள் உள்ளம் தோறும் ஈமான் இருந்தது நபியின் வாழ்க்கை முறை இருந்தது அன்று. ஆனால் நமது இல்லம் தோறும் அந்த ஈமான் நபியின் வாழ்க்கைமுறை குறுந்தகடுகளாக இருக்கின்றன. நமக்கு நேரம் கிடைக்கும்போது போட்டு பார்த்து கேட்டு ரசித்து, சுபுஹானல்லாஹ் என்று சொல்லி அவர்கள் வாழ்க்கைபற்றி பேசி புகழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் எப்போது அமல் செய்வது, அந்த மனித புனிதர்களின் வாழ்வை வாழ்வது, அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved