Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:45:39 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 146
#KOTWEM146
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 10, 2014
ஒருதலைக் காதல்! (?!)

இந்த பக்கம் 5452 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் புனித ரமழான் மாதத்தில் இது என்ன தலைப்பு? இதில் என்னத்த சொல்லப் போறான் இவன்?” என்ற நினைப்பு இத்தலைப்பைப் பார்த்த பலருக்கும் இருக்கும். போகப் போகத் தெரியும்!

காயல்பட்டினத்தில் சுமார் 28 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுள், ஹாஜியப்பா தைக்கா பள்ளி, கே.எம்.டி. பள்ளிவாசல் ஆகிய பள்ளிகளைத் தவிர இதர அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ரமழான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுவது வழமை. எல்லாப் பள்ளிவாசல்களிலும் பெரும்பாலும் வெண்கஞ்சியே நாள்தோறும் தயாரிக்கப்படும்.

பச்சரிசி, தேங்காய்ப்பால் கலவையில் நறுமணப் பொருட்களுடன், முருங்கைக் கீரையையும் இட்டு தயாரிக்கப்படுவதே வெண்கஞ்சி. அதன் மணமும் சுவையும், அதை உணர்ந்து அருந்தியவர்களுக்குத்தான் தெரியும்.

கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள (காம்பினேஷனாக) அம்மியில் அரைக்கப்பட்ட துவையல் தரப்படும். பொட்டுக்கடலை (பொரி கடலை) துவையல், கொத்தமல்லி துவையல், புதினா துவையல் என பல வகைகளில் நாள்தோறும் துவையல் தயாரிக்கப்பட்டு, நோன்பு துறக்க வருவோருக்கு பூவரச மர இலையில் (செட்டிக்காய் பூசணி மரம்) வைத்து கொடுக்கப்படும்.

இடது கையில் கஞ்சிக் கோப்பையைத் தாங்கிப் பிடித்து, வலது கையால் இலையிலுள்ள துவையலைக் கிள்ளியெடுத்து, கஞ்சி ஒரு வாய்க்கு; துவையல் ஒரு வாய்க்கு என மாற்றி மாற்றி உட்கொள்ளும்போது ஏற்பட்ட இன்பமே தனிதான்! எந்த வகைத் துவையலானாலும் அதில் அடை ஊறுகாய் (உப்பு போட்டு ஊற வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம்) சேர்த்து அரைக்கப்படுவதால், துவையலை வாயில் வைக்கும்போதே 75 மில்லி லிட்டர் எச்சில் நாக்கின் அடியில் சுரந்துவிடும் என்பது தனி!!

படிக்கப் படிக்க பலரது நாக்குகளிலும் - துவையல் படாமலேயே 100 மில்லி லிட்டர் எச்சில் சுரந்திருக்கும்.

சரி! விஷயத்திற்கு வருவோம்...

மேலே கூறப்பட்டுள்ள தகவல் ஏதோ சித்தர் காலத்து சுவடிக் கதை அல்ல. நம் வாழ்நாளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் யாவரும் அனுபவித்து, இன்று - மரணித்த பாட்டனாரை மறப்பது போல மறந்தும், காணாமல் போன குழந்தையைத் தேடுவது போல தேடிக் கொண்டும் இருக்கிறோம்.

வெண்கஞ்சி மட்டுமே அனைத்துப் பள்ளிகளிலும் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில், ஒரு சில பள்ளிகளில் - 12ஆம் இரவு, 17ஆம் இரவு, 27ஆம் இரவு என குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் கறிகஞ்சி தயாரிக்கப்படும். ஓரிரு பள்ளிகளில் நாள்தோறும் கறிகஞ்சி தயாரிக்கப்படும். அதன் காரணமாக அப்பள்ளிவாசல்களுக்கு தனி மவுசு இருந்தது. காலப்போக்கில் எல்லாப் பள்ளிவாசல்களிலும் கறிகஞ்சி பரவலாக தயாரிக்கப்பட்டது.

“உங்க பள்ளியில் இன்று வெள்ளையா, கலரா?”

“வெள்ளையா, மஞ்சளா?”

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரமழான் மாலை நேரங்களில் காயல்பட்டினம் வீதிகளில் நடமாடும் அனைவர் காதுகளிலும் தவறாமல் விழுந்த வாக்கியங்கள் இவை. இன்றோ நிலைமை தலைகீழ்!

“வெள்ளக்கஞ்சிய பார்த்தே ரொம்...ப வருஷம் ஆயிடுச்சே…?”

“அந்தக் காலத்துலயே நான் எந்தப் பள்ளிவாசலுக்கும் தூக்குச் சட்டிய தூக்கிட்டுப் போனதில்லை... ஆனா இப்ப, எங்க ஊட்டு மட்டெ - எனக்கு வேலை இருக்குன்னு சொல்லியும் கூட கேக்காம, இந்த வெள்ளைக் கஞ்சிய தேடி ஊருல உள்ள பள்ளியெல்லாம் சுத்த வச்சிட்டாளே...?”

“உங்க பள்ளியில இன்னைக்கி வெள்ளக்கஞ்சியா? மச்சான் நோம்பு தொறக்க நா வந்துடுறேன்... இடம் போட்டு வச்சிக்கோ... சட்னிய மறக்காம எடுத்து வச்சிடு...”

இவைதான் இன்று நம் காதுகளில் ஒலிக்கும் வாக்கியங்கள்.



மணமும், சுவையும் நிறைந்த வெண்கஞ்சி மறைந்ததன் மர்மம்தானென்ன?

கறிகஞ்சியுடன் ஒப்பிடுகையில், செலவால் சில ஆயிரங்கள் குறைவாகவே இருக்கும் வெண்கஞ்சி தயாரிக்க. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை எல்லாப் பள்ளிவாசல்களிலும் அந்தந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலரே கஞ்சிக்கு அனுசரணையாளர்களாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளனர். ஆண்டுகள் செல்லச் செல்ல நகரில் படித்து பட்டம் பெற்று, நல்ல ஊதியத்துடன் பணி செய்வோர் எண்ணிக்கையும் உயரவே, அதற்கேற்ப அனுசரணையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. குறைந்தளவு அனுசரணையாளர்கள் இருந்த காலத்தில், அனைவரும் வெண்கஞ்சி தயாரிக்கவே ஆர்வம் காட்டினர். ஆனால் புது அனுசரணையாளர்களோ,

“ஒரே என்ன வெள்ளைக் கஞ்சி? நம்ம பள்ளியிலயும் கறிகஞ்சி போடுவோம்...” என ஆர்வத்தில் துவக்கிய வழமைதான் இன்று வெள்ளையே இல்லாமல் போனதற்கு முக்கியக் காரணமாயிற்று. இதில் யாரையும் குற்றஞ்சொல்லவும் வழியில்லை. காரணம், புதிய அனுசரணையாளர்கள், தாம் சார்ந்த பள்ளிவாசல்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கட்டுமே... என்ற நோக்கத்தில்தான் இவ்வாறு செய்யத் துவங்கினர்.

“சரி, இப்ப அதுக்கு என்ன?”

பொழுது விடிவதற்கு முன்பு துவங்கி, பொழுது சாயும் வரை உண்ணல், பருகல் என அனைத்தையும் துறந்து - இறைவனுக்காக பட்டினி கிடந்த வயிற்றுக்குள் - நோன்பு துறக்கும்போது வெண்கஞ்சியை உள்ளே இட்டால் அமைதியாகப் பசியடங்கும். அதை விட்டுவிட்டு, மசாலா, மஞ்சள், காரம், கத்தரிக்காய் என அனைத்தையும் கலந்து தயாரிக்கப்படும் கறிகஞ்சியை பசித்த வயிற்றில் இறக்குவதன் காரணமாக, வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறிப்போய்விட்டன நம் வயிறுகள்.

இதன் கொடுமையை உணர்ந்துள்ள சிலர், எந்தப் பள்ளியில் வெள்ளைக் கஞ்சி தயாரிக்கிறார்கள் என பார்த்துப் பார்த்து தேடிச் செல்லும் நிலை. ஆனால், பாரம்பரிய வெண்கஞ்சியின் மகத்துவத்தை உணராத தற்காலத்து புதிய தலைமுறை சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்த எண்ணம் இல்லை என்றே கூறலாம். எண்ணம்தான் இல்லையே தவிர, கெடுதி எல்லோருக்கும் சேர்த்துதான்.

தண்ணீர், தேனீர் - இவ்விரண்டையும் தவிர எல்லாவற்றிலும் இறைச்சியைக் கலந்து பழக்கப்பட்டுவிட்டோம் நாம். நகைச்சுவைக்காக இதைச் சொல்லவில்லை. கறி வடை, கறி அடை, கறி சம்சா, கறி கட்லட், சிக்கன் ரோல்ஸ், மட்டன் புரோட்டா, கோழி சூப்... அப்பப்பா! இவையெல்லாம் இருக்கும் மொத்தப் பட்டியலில் அரை சதவிகிதம் கூட இல்லை.

அசைவத்தை சாப்பிடலாம் என இஸ்லாம் நமக்களித்துள்ள அனுமதியை, அசைவம் சாப்பிட்டேயாக வேண்டும் என ஏதோ கட்டாயக் கடமை போல நாம் ஆக்கிக் கொண்டுள்ளோம்.

வழமை போல நடப்பாண்டு ரமழான் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சிகளின்போது செய்தி சேகரிப்பதற்காக காயல்பட்டினம் பள்ளிவாசல்களுக்கு நாள்தோறும் செல்லும் வாய்ப்பு எனக்கு உள்ளது. நானும் ஒரு வெண்கஞ்சிப் பிரியன் - இல்லையில்லை, வெண்கஞ்சி வெறியன் என்பதால், எந்தப் பள்ளியில் என்று வெண்கஞ்சி தயாரிக்கப்படுகிறது என பார்த்துப் பார்த்து, அந்தந்த நாட்களில் குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்குச் சென்று, கஞ்சியையும் - துவையலையும் ஆசை தீர உட்கொண்டு வருகிறேன்.

என்னருகில் அமர்ந்து நோன்பு துறக்கும் பலர், “என்னப்பா! வெள்ளக்கஞ்சி போடுற நாளா பார்த்து வந்திருக்கியே...? கறிகஞ்சி போடும்போது வந்தா கூட்டம் அதிகமாக இருக்குமே...?” என்று கூற, வெண்கஞ்சி மீதான என் ஏக்கத்தை விளக்கிய பின், “ஆமாப்பா... இதெல்லாம் யாருக்குப் புரியுது? இன்னைக்கி உள்ள பிள்ளைங்களுக்கு வெள்ளக்கஞ்சி பிடிக்கிறதேயில்லே...” என்று கூறினர்.



“ஏன் பள்ளி நிர்வாகிகளாகிய நீங்கள் நினைத்தால், இந்தப் பள்ளியில் குறிப்பிட்ட நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வெண்கஞ்சிதான் தயாரிக்கப்படும் என்று முடிவெடுத்து, அனுசரணையாளர்களிடம் தெரிவிக்கலாமே...?” என்று கேட்டால்,

“ம்... போ வாப்பா! நாங்க பாட்டுக்கு இதப் போயி சொல்ல, துட்டு தர்றவன் திட்டுறதுக்கா? நா என்ன கூட ரெண்டாயிரம் ரூபாய் தர்றதுக்கு வழியில்லாமலா இருக்கிறேன்-ன்னு அவங்க கேக்கவா?” என என்னை நோக்கி மீண்டும் கேட்கின்றனர்.

அனுசரணையாளர்கள் சிலரிடமும் பேசிப் பார்த்தேன்.

“எல்லோரும் கறிகஞ்சி போடுற நிலையில, நா மட்டும் வெள்ளக் கஞ்சிக்கின்னு காசு கொடுத்தா, என்னை எல்லோரும் என்ன நினைப்பாங்க...?” இது அவங்களோட கவலையாக உள்ளது.







ஆனால், நோன்பு துறக்கும்போது மட்டும் - நிர்வாகிகள், அனுசரணையாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்குமே வெள்ளை மீது தீராத காதல் இருப்பதை உணர முடிகிறது. அவரவர் காதலை வெளிப்படுத்தத்தான் வழி தெரியாமல் இருக்கின்றனர்.

இந்த ஒருதலைக் காதலுக்குத் தீர்வுதான் என்ன?

வெவ்வேறு திசைகளில் தனித்தனியே நின்று சிந்திக்கும் இவர்களின் எண்ணங்களை ஒன்றுபடுத்தப் போவது யார்??

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) on 10 July 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35876

கட்டுரையாளரின் ஆதங்கம் நமக்குப் புரிகிறது. வெள்ளைக் கஞ்சி மிகவும் ருசியானது. இன்னும் சொல்லப்போனால் கஞ்சி என்பதன் முழு அர்த்தமே ..வெள்ளைக் கஞ்சிதான்.

நாம்தான் எதிலுமே காரமும், இறைச்சியும் சேர்த்துப் பழக்கப்படுத்திக்கொண்டோம்.

அண்மையில் முகநூலில் ஒரு தகவல் படித்தேன். காயல்பட்டினம் கஞ்சி குறித்து அதில் ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். அதுக்கு விமர்சனம் எழுதிய இன்னொரு வெளியூர் நண்பர் ...

"இந்தக் காயல்பட்டனத்துக்காரர்களின் சமையல் எல்லாமே ருசிதான். ஆனால் அவுங்க பிரியாணியில் தண்ணீர் ஊற்றி அதைக் கறிக்கஞ்சி என்று சொல்வதைத்தான் நம்பமுடியவில்லை .."என்று எழுதியிருந்தார்.

படித்ததுமே சிரித்துவிட்டேன்.

என்ன செய்வது ...? கறிக்கஞ்சிக்கு ஏங்கியது ஒரு காலம். அதில் ஒரு சிறிய துண்டு இறைச்சி கிடந்தாலும் குடிப்பவன் அதிருஷ்டசாலி .எனது சிட்டியில் பெரிய கறித்துண்டு கிடந்துச்சு ...என்று சொல்லி ..சொல்லியே ..பெருமைப்பட்டதும் ஒரு காலம். இப்போ ப்ராய்லர் கோழி இறைச்சி அறிமுகமான பிறகு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.

முருங்கைக்கீரையும் கிடைக்கவில்லை. சட்னியும் இல்லாது ஒழிந்தது.

பள்ளிவாசல்களிலேயே பப்சும், ரோலும் கஞ்சிக்கு சைடு -டிஷ் ஆக கொடுக்கும் இந்தக் காலத்தில் வெள்ளைக் கஞ்சிக்கு எங்கும் சாலிஹைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...உண்மை
posted by: siddiq (chennai) on 10 July 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35877

"படிக்கப் படிக்க பலரது நாக்குகளிலும் - துவையல் படாமலேயே 100 மில்லி லிட்டர் எச்சில் சுரந்திருக்கும்." இது உண்மை அனுபவம் எனக்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: zubair rahman-ab. (Doha-Qatar) on 11 July 2014
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35883

சாலிஹ் (ஹாபிழ்) அவர்களே ! (sk வுக்கு தெரியும்)

"மருத்துவ குணம் கொண்டது வெள்ளைக்கஞ்சி"

கீழ் காணும் வார்த்தையில் ஏதோ தன் (sk வின் ) சொந்த அனுபவம் பிரதிபலிக்கிறது போல் எனக்கு தோன்றுகிறது, என்ன செய்வது கொஞ்சம் பொருத்துதான் போகவேண்டும்

“அந்தக் காலத்துலயே நான் எந்தப் பள்ளிவாசலுக்கும் தூக்குச் சட்டிய தூக்கிட்டுப் போனதில்லை... ஆனா இப்ப, எங்க ஊட்டுலே எனக்கு வேலை இருக்குன்னு சொல்லியும் கூட கேக்காம, இந்த வெள்ளைக் கஞ்சிய தேடி ஊருல உள்ள பள்ளியெல்லாம் சுத்த வச்சிட்டாளே...?”

அதுக்கு தான் கேமராவோடு தூக்கும் கொண்டு போறியோ ஹாபிசா(???)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: zakariya (chennai) on 11 July 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 35884

தலைப்புக்கும் உள்ள செய்திக்கும் பெரிய அளவு சம்பந்தம் இல்லையென்றாலும் சிறிய வயதில் அனுபவித்த விசயங்களை மிக அழகாக கோடிட்டு காட்டுகிறார் நண்பர் சாலிஹ்

அன்று என்னமோ எல்லோருடைய மனதும் மஞ்சளை எண்ணித்தான் ஏங்கியது. ஆனால் இன்று அதனுடைய சுவை நம்மை இழுக்கிறது. எதுமே இருக்கும் போது அதனுடைய அருமை தெரிவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்

அது என்னமோ தெரிய வில்லை பணத்துக்கும் ஆரோகியதிற்கும் ஒட்டவே மாட்டேன்கிறது இவ்வாறு தான் இறைவனே ஏற்படுதிவிட்டானோ என என்ன தோன்றுகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நீ ஒரு வெண்கஞ்சி காதலன்...! நானோ உனது கட்டுரையின் நல்ல செய்தியை படிக்கும் காதலன்...!
posted by: தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 11 July 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35886

கட்டுரை படிக்கும் போது அதில் துவையல் என்கிற வரி உச்சரிக்கும் போது உண்மையிலேயே நாவில் நீர் ஊரத்தான் செய்கிறது மறுபதற்கில்லை.. வெறும் வயிற்றில் காரம் கலந்த உணவை முதலில் சாபிடாதீர்கள் என்று மருத்துவர்களும் அறிவுரைகள் செய்கிறார்கள் நாம் தான் அதை மீறி பல மசாலா - மிளகாய் கலக்கப்பட்ட கறி கஞ்சியை ருசி என்று நினைத்து காதல் கொள்கிறோம்..

இந்த கறி கஞ்சி காதலுக்கு மாற்றமாக இந்த செய்தியாளர் வெண்கஞ்சி மீது ஒருதலை காதல் கொண்டு இருப்பது ஏதோ காரணம் இருக்காமலில்லை..!

கடந்த ரமலானில் கூட உனது ஒருதலை காதலை நான் அறியமுடியவில்லையே..! உணரவில்லையே...! தம்பி..!

நான் வழமையாக நோன்பு திறக்க செல்லும் புதுபள்ளியில் ஏதோ நகரின் இப்தார் செய்திக்காக போட்டோ எடுக்க வருகிறாய் எனவல்லவா நினைத்து இருந்தேன் அப்போது கூட சில நண்பர்கள் S K ஷாலிஹ் வந்துட்டான் முகத்தை காட்டுங்கள் என்றுதான் சொல்வார்கள்.. ஆனால் நீ வந்தது (காதலியை) வெண்கஞ்சி தேடி அனுபவிப்பதற்காகதான் என்று எனக்கு முதலில் தெரியாது..

நீர் வந்து போன அணைத்து நாட்களையும் எண்ணி நினைவு படுத்தி பார்க்கும் போது தெரிகிறது அந்நாட்களில் வெண்கஞ்சிதான் பள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இப்போது உணருகிறேன்.. நீ ஒரு வெண்கஞ்சி காதலன் - என்று அறிந்து கொண்டேன்...

உன்காதல் இந்த நோன்பில் அணைத்து நாட்களிலும் (வெண்கஞ்சி) கைகூடட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 11 July 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35887

அழகான நினைவூட்டல். கட்டுரையாளருக்கு நன்றிகள் பல.

இன்றும் காயல்பட்டணத்திற்கு வெளியே எங்கு பார்த்தாலும் வென்கஞ்சி தான் அதிகம் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்படும்போது அதிலேயே இறைச்சியை சற்று கலந்து விடுகிறார்கள். அவ்வளவுதான்.

உடல் ஆரோக்கியம், நோயை விரட்ட வழிமுறைகள் என சொல்லியும் எழுதியும் வந்தால் மட்டும் நோய்கள் நீங்கி விடுமா. களரிக்கரியில் இன்றும் கசகசா சேர்க்கிறார்கள். உடலுக்கு இது மிகவும் கேடு என்றும் இன்னும் மார்க்க அடிப்படையில் இதை தவிர்க்க வேண்டும் எனவும் அரபு நாடுகளில் தடையே செய்துள்ளார்கள். ஆனால் ருசியை நம்மால் இழக்க முடியவில்லையே.

எப்போவாவது சாப்பிடும் உணவுகளை எப்போதும் சாப்பிட்டால் உடல்தான் தாங்குமா? சிந்திப்போம்.

அந்தக் காலத்தின் கலப்பற்ற கலப்படமற்ற வாழ்க்கை முறைக்கும் ஆரோக்கியத்திற்கும் வென்கஞ்சிக்கும் கலப்படமே வாழ்க்கை ஆகிப்போன இந்த காலத்திற்கும் தினசரி கறிக் கஞ்சிக்கும் என்ன பொருத்தம் பார்த்தீர்களா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மோகம்,மோகம் கலர் கஞ்சியிலிருந்து களரி பந்திவரை!.
posted by: முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) on 12 July 2014
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35890

வெண் ஆடை கஞ்சிக்காரியை மூலையில் முடங்க வைத்து விட்டார்கள், பல வண்ணத்தில் பலரையும் கவரும் காந்தர்வ கலர்கஞ்சிக்காரிக்கு அடிமையாக இருப்பவர்கள் அங்கெங்கும் நிறைந்திருக்க, அந்தோ பரிதாமாக அந்நியப்படுத்தப்பட்ட வெண்னாடைக்கஞ்சிக்காரியிடம் கரிசனம் கட்டுபவர்களை காணக்கிடைப்பது கடினமே!

SK .தம்பியே முயற்சித்துப்பார் முடங்கியவளை முன் சபையில் கொண்டுவர,உன்னுடன் கைகோர்க்க உன்வயதுக்கொத்தவர்கள் கூட உன்னில் இணைவதென்பது இயலாததொன்றே!

மோகம்,மோகம் கலர் கஞ்சியிலிருந்து களரி பந்திவரை எங்கும் எல்லோரும் அடிமை.!அடிமை!! இது காயல்பத்யின் பதிவாளரலுவலகத்தில் பதிக்கப்படாத பதிவுபத்திரவிதியாகும். இவ்விதியை மாற்ற இன்னும் எத்தனை தலைமுறைகள் தவமிருக்க வேண்டுமோ வல்லோனுக்கே வெளிச்சம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

SK உணர்வுடன் ஒன்றென உறையும்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

விதிவிலக்கு: முப்பதாவது நோன்பை நாம் அடையும் நாளில் அன்று மட்டும் வெள்ளைக்கஞ்சிக்காரிக்குவேலைகொடுப்பார்கள் பல பள்ளிகளில் என்றுகேவிப்பட்டிருக்கிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பூனைக்கு மணி கட்டுவது யார்?
posted by: mackie noohuthambi (chennai) on 12 July 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35893

மிக்க ரசனையான கட்டுரை மட்டுமல்ல கண் திறக்கும் கட்டுரை.

எல்லாவற்றுக்கும் நம் முன்னோர்களை ஆதாரம் காட்டும் நாம் இந்த வெண் கஞ்சி விஷயத்தில் அவர்களுக்கு மாறு செய்கிறோம்.

வெள்ளை கஞ்சி போட்ட காலத்தில் பொருளாதாரத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் இல்லாமல் இல்லை. "பணம் என்னடா பணம் குணம் ஒன்றுதான் நிரந்தரம்" என்று அவர்கள் நினைத்தார்கள். பெருமைக்காக அவர்கள் கஞ்சி போட்டதில்லை. ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஒரு பேரீச்சம்பழத்தை அளித்தாலும் அதற்கு என்ன நன்மை என்று ரசூலுல்லாஹ் சொன்னதை நினைத்து அவர்கள் கஞ்சி போட்டார்கள்.

வெள்ளை கஞ்சியும் சும்மா போடவில்லை. பகலெல்லாம் நோன்பிருந்து வயிறு ஒட்டி இருப்பவர்கள் வாய்வு கலைவதற்காக வெள்ளை பூடு அதில் அதிகம் கலப்பார்கள். நாவு ருசிக்காக துவையல் சேர்ப்பார்கள்.

புது பணக்காரர்கள் ஒரு சிலர்தான் இந்த கஞ்சிக்கு உலை வைத்தார்கள். காய்கறி கஞ்சி என்று லேசாக மாறி, பின்பு கறி கஞ்சி என்று ஆனது. நாளடைவில் அது ஒரு வியாதியாக மாறி, பின்னர் அதுவே சமூக அந்தஸ்தாக மாறி விட்டது.

HISTORY REPEATS என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் மீண்டும் வெள்ளை கஞ்சி காலம் கனிந்து வருகிறது. நாங்கள் மொகுதூம் பள்ளியில் கஞ்சி போடுவோம். வெள்ளை கஞ்சி என்றால் OK என்போம். குருவித்துறை பள்ளியிலும் போட்டோம். எல்லா இடங்களிலும் எங்கள் ஓட்டும் ஒகேயும் வெள்ளை கஞ்சிக்குதான்.

இப்போது கூடுதலாக ஒரு பழக்கம் வடை கட்லெட் கேக் என்று நிறைய நோன்பு திறக்க கஞ்சியுடன் வலம் வருகிறது. நோன்பு திறக்கும்போதும் சஹர் செய்யும்போதும் சம நிலையை கையாளும் பழக்கம் போய்விட்டது. வயிறு முட்ட சாப்பிடுவது வழக்கமாகி விட்டது.

இதற்கு நபி அவர்களின் அங்கீகாரம் இல்லை. நபிகள் நாயகமும் சஹாபாக்களும் எப்படி தங்கள் இப்தாரையும் சஹ்ரையும் அமைத்துக் கொண்டார்கள் என்ற ஹதீத்கள் ஏராளம் இருக்கிறது. இதை நாம் சிந்தித்து நமது நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னொரு புதிய இப்தார் கலாசாரம் முளை விட்டிருக்கிறது. அந்நிய மதத்து சகோதரர்களை, தலைவர்களை அழைத்து அவர்கள் தலையில் ஒரு தொப்பியை போட்டு, "மதங்களை கடந்து மனங்களால் இணைவோம் " என்று அதற்கு ஒரு புதிய கோஷமும் சுலோகமும் போட்டு அவர்களை அழைத்து நோன்பு கஞ்சி கொடுத்து உபசரிக்கிறோம்.

காலை 4 மணிமுதல் மாலை 6.45 மணி வரை ஒரு முடக்கு தண்ணீர் கூட குடிக்காமால் இருப்பவர்கள், நோன்பே நோற்காதவர்களை அழைத்து நோன்பு துறக்கச் செய்கிறோம். இந்த நிலையை மாற்றுவதற்கு வழி என்ன? வெள்ளை கஞ்சி கலாசாரம் திரும்ப வருவது மகிழ்ச்சி தருகிறது. அதே நேரம் இந்த புதிய கலாச்சர்ரங்கள் பெருகி வருவது அதிர்ச்சி தருகிறது...

.பூனைக்கு மணி கட்டுவது யார்?

கட்டுரை ஆசிரியர்கள் போன்ற சமூக ஆர்வலர்கள் நினைத்தால் இந்த கலாச்சாரங்களை ஒழிக்க முடியும். ஆட்சிகளை மாற்றுவதற்கும் அவலங்களை வெளிக் கொணர்வதற்கும் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கும் இந்த கால கட்டத்தில் நல்ல சிந்தனைகள் துளிர்த்திருப்பது பாராட்டுக்கு உரியது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது.

உன்னால் முடியும் தம்பி.

தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள். தடம் பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள்.

நீங்கள் யாராக இருக்க ஆசைப் படுகிறீர்களோ அப்படியே ஆவீர்கள்.

IF YOU THINK YOU CAN DO, YOU ARE RIGHT. IF YOU THINK YOU CANNOT DO, YOU ARE RIGHT. GO AHEAD.

நோன்பு நோற்பது மட்டுமல்ல, நோன்பு திறப்பது மட்டுமல்ல நோன்பு காலத்தில் செய்ய வேண்டிய வணக்கம். அதை நபிகள் நாயகம் சொன்ன வழியில் அமைத்துக் கொண்டால்தான் அதற்கான முழு பயனும் நன்மையும் கிடைக்கும். அத்தகைய நோன்பு நோற்றவர்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் ஆக்கி வைப்பானாக ஆமீன்.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வெண்கஞ்சி வேந்தனே வெல்க உமது ஆவல்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) on 16 July 2014
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 35944

அருமை நண்பர் எஸ்.கே.எஸ்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

உமது கஞ்சிக் கட்டுரையை இன்றுதான் முழுமையாகப் படித்தேன். வேலைப்பளு காரணமாக முன்பு போல் கமெண்ட் எழுதவோ கட்டுரை எழுதவோ நேரம் கிடைப்பதில்லை. என்னதான் சொல்லுங்க வெள்ளைக் கஞ்சியின் சுவையும் மணமும் தனிதான். அதில் முருங்கைக் கீரை வெந்தயம் வெந்த பூண்டு இவைகளின் கலவை சேர்ந்த தாளிப்புக்கு ஈடே இல்லை! அத்துடன் பூசணி இலையில் வைத்த (வத்தல்) தேங்காய் சட்ணி இருந்தால் இன்னும் கொண்டா கொண்டா என்பது போல் இருக்கும்.

நான் ஊரில் இருந்த போது என்னை பல முறை ஜி ஸ்நேக்ஸ்க்கு அழைத்துச் சென்று வெள்ளைக்கஞ்சி வாங்கி ருசித்து சாப்பிட்டதுண்டு. உமக்கு பல காதலிகள் இருப்பது எனக்குத் தெரியும் (உதா) கடல், செம்பருத்தித் தோட்டம், நண்டு, சமைக்காத உணவு, சுட்ட பனைங்காய், அத்துடன் எனது ரெஸிப்பியில் உருவாகும் சிக்கன் கபாப் - இப்படி உள்ளூரில் இருந்து கொண்டே ஏகபோகமாக அனுபவித்து வருகின்றீர். இத்தகைய வாய்ப்பு கோடீஸ்வரனுக்குக் கூட கிடைப்பதில்லை.

யார் எப்படி வாழ்ந்தாலும் நான் இப்படித்தான் வாழ்வேன் என மன உறுதியோடு உள்ளதைக் கொண்டு நல்லதை செய்யும் உமது வாழ்வியல் முறை கண்டு பலமுறை நான் வியந்ததுண்டு. சிலவேளை பொறாமை கூட பட்டதுண்டு. உம்மிடத்தில் நான் கற்ற பாடங்கள் ஏராளம்.

அல்லாஹ் உமக்கு பூரண ஆரோக்கியத்தையும், நீடித்த ஆயுளையும் தந்து உமது இலட்சிய பாதையில் நிம்மதியுடன் பயணிக்க அருள் புரிவானாக ஆமீன்.

வெள்ளைக்கஞ்சிக்கு ஒரு ஓ...போடுவோம்!

அன்புடன்,
-ஹிஜாஸ் மைந்தன். சிங்கப்பூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by: netcom buhari (CHENNAI) on 16 July 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35949

SALIH அருமை

எனக்கு நினைவு தெரிந்து ஒரு பள்ளி இல் மஞ்ச கஞ்சி வாங்கிவிட்டு, அதை தூக்கில் மறு பள்ளி இல் வெறும் கஞ்சியும் மிக்ஸ் பண்ணி (இரு தலை காதலக)சாப்பிட சுகமே தனி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) on 18 July 2014
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35984

எங்களைப் போல ஊரை பிரிந்து வாழும் மக்களுக்கு, ஊர் செய்திகளை அறிந்தும், ஒவ்வொரு பள்ளிவாசல்களில் நடைபெறும் நோன்புக் கஞ்சி போன்ற விபரங்களை பார்த்து மிகவும் மனதிற்கு சங்கடமாக இருக்கும்.

கூடுதலுக்கு தம்பி S.K.சாலிஹ் வேறு.... கூடுதலாக..! ஊரையும், மறந்து போன வெள்ளைக் கஞ்சியையும் நினைவு படுத்தி விட்டார். எளிய நடை, படிக்க விறுவிறுப்பு, பல பழைய விசயங்களை நினைவு படுத்துதல்.. வெல்டன் SKS . அதிகம் அதிகம் எழுது.

மண் சிட்டியில் வெள்ளைக் கஞ்சியை ஊற்றி, சிறு சிறு உருண்டையாக சட்னியை சிட்டியின் விளிம்பில் வைத்து முதல் குடிக்கு வெது வெதுப்பாகவும், இரண்டாம் குடிக்கு சிறிது சூடாகவும், மூன்றாம்,,நான்காம் குடிக்கு அதிக சூடாகவும்.. ஒவ்வொரு லெவலுக்கும் ஒவ்வொரு சட்னி உருண்டையை சேர்த்து அடிக்கும் ருசியே அலாதி. இது மாதிரி மல்டி லெவல் சூட்டுடன் அனுபவித்து குடிக்க முடிவது மண் சிட்டியில் தான்.

அரிதாகிப் போகும் இந்த வெண் கஞ்சியை பள்ளி வாசல்களில் இந்த இந்த பிறைக்கு வெண் கஞ்சி தான் என்று நிர்ணயித்து விடனும். யாருக்கும் மன சங்கடமோ நெருடலோ இருக்காது. SKS முயற்சி செய்யுங்களேன்.

என்ன செய்தாலும் எங்களுக்கு கொடுப்பினை இல்லையே...?

ஆதங்கத்துடன்
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நினைவுறுத்தல்....சாளை ஜியாவுக்கு...!
posted by: M.N.L.Mohamed Rafeeq (Singapore.) on 18 July 2014
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 36007

நண்பரே! அனுபவிச்சு ஆதங்கத்தை கட்டுரையாக தந்துள்ள சாலிஹான பிள்ளையின் ஆவல் நம் யாவருக்குள்ளும் ஒளிந்திருப்பது உண்மையே! என்ன செய்ய காலப்போக்கில் வெள்ளைக் கஞ்சிக்கு கஞ்சி ஊத்திடுவாங்க போலே...!

இதே தளத்தில் ” காயலின் நோன்பு...இதயம் சுமக்கும் இனிய நினைவுகள்...” எனும் எனது கட்டுரையை ஒரு முறை டூட்டியில் இருக்கும் போது லுஹர் நேரத்தில் அஸருக்கு முன்பு சற்று பொறுமையாக அசைபோட்டுப் பாருங்கள் (அதான் சரியான டைம்) ஊர் வழக்கமும், கஞ்சி சிட்டியும் அப்படியே கண்முன் நிழலாடும்...

”அக்காலத்தில் பல கிராமங்களிலிருந்தும் பள்ளிவாசல்களுக்கு மாட்டு வண்டிகளில் மண் சிட்டிகள் வந்து இறங்கும்.....”

http://www.kayalpatnam.com/columns.asp?id=96

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved