Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:02:06 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 15
#KOTWEM15
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 6, 2012
கூடங்குளமும், காயல்பட்டினமும்! (பகுதி-2)

இந்த பக்கம் 2930 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று கூடங்குளம் அணு மின் நிலையத்தைத்திறந்தால் நாளையே மின் தட்டுப்பாடும் ,வெட்டும் பறந்தோடி விடும் எனவே கடையடைப்பு செய்யுங்கள் என்ற ரீதியில் ஊர் தீர்மானம் போட்ட கனவான்களே !!! கீழ்க்கண்ட செய்தியை கொஞ்சம் படியுங்கள்:

சமீபத்தில் ஏற்பட்டுள்ள 10 மணி நேர மின்சார வெட்டிற்கான காரணம் பின் வருமாறு:

”தமிழகத்தின் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் 5 உள்ளன.இவற்றில் 4 நிறுவனங்கள் மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இந்த 4 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின் அளவுகள், ஜி.எம்.ஆர். வாசவி 196 MW, பிள்ளை பெரும நல்லூர் 330.5 MW, மதுரை பவர்106MW, சாமல்பட்டி பவர் 105.66 MW. பத்தாண்டுகளுக்கும் மேலாக இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்துடன் வணிகம் நடத்தி சம்பாதித்தது 250% லாபம்.

தமிழக முதல்வர் அவர்கள் மின் புதிய மின் உற்பத்தி நிறுவனங்களுக்காக ரூபாய் 5995 கோடியை ஒதுக்கியுள்ளார். அந்த மொத்த நிதியும் தங்களுக்கு வரும் என் இந்த தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வாய் பார்த்திருந்தன. அது தங்களுக்கு கிடைக்காமல் போகவே அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இந்த மின் உற்பத்தி முடக்கத்தை தொடங்கி தமிழக மக்களைப்பிணையாக்கியுள்ளனர். இதனால்தான் மின்வெட்டு 10 மணி நேரமாக கூடியுள்ளதற்கு காரணம்.

இந்தியாவின் எந்த அணு உலைக்கும் PLF (plant load factor) என்பது 40% மேல் இல்லை. கூடங்குளம் உலை நவீனமானது என்ற அடிப்படையில் ஒரு பேச்சுக்கு PLF 70% என வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் 1000 MW மின் உற்பத்தியில் 700 MW தான் வெளிவரும்.இதில் 75 MW உலையை இயக்க தேவைப்படும்.அதாவது 625 MWதான் உலை வளாகத்தைத்தாண்டி வெளியே வரும். இதில் தமிழகத்தின் பங்கு என்பது 45%மட்டுமே. அதாவது 281MW. இதில் மின் சக்தியை தொலைவு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும்போதும், வினியோகிக்கும்போதும் ஏற்படும் இழப்பு 35 %. அதாவது 182.65MW மட்டுமே .தமிழகத்திற்கு கிடைக்கும்.” { தகவல்கள்,தரவுகள் உதவி : உயிர்மை மார்ச் {2012} மாத இதழ் }

மேற்கண்ட காரணிகளின் விளைவாகத்தான் 2 அல்லது 3 மணி நேரம் என இருந்த மின் வெட்டு 10 மணி நேரமானதே தவிர கூடங்குளம் உலை முடக்கம்தான் காரணம் என்பது உண்மைக்கு மாறானது.

மின் வெட்டை கண்டித்த வரைக்கும் சரி.ஆனால் ஆழம் தெரியாமல் கூடங்குளம் உலையை ஆதரித்து இயற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னணியில் உள்ள அரசியலையும் அபத்தங்களையும் நாம் பேசாமல் இருக்க முடியாது.அந்த வகையில் தீர்மானம் இயற்றிய முஸ்லிம் லீக் கட்சியினருக்கு சில கேள்விகள்;

1. தங்களின் அரசியல் கூட்டணி் பதவியில் இருக்கும்போதுதான் இந்த மின்வெட்டு தொல்லையே தமிழகத்தை பிடித்தாட்டத்தொடங்கியது.அந்த அரசு ்மின் உற்பத்தியில் செய்த கோளாறுகளுக்கும்,குளறுபடிகளுக்கும் நீங்கள் மௌன பார்வையாளராக இருந்தது ஏன்?

2. பேரழிவு மிக்க அணு குண்டையும்,அணு தொழில் நுட்பத்தையும் ஆளும் வர்க்கமும்,ஃபாஸிச பா.ஜ.க. வும்,உயர்சாதி அறிவியல் தொழில்நுட்பவியலாளர்களும் ஆதரிப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த ஆட்கொல்லி கூட்டணியோடு நீங்கள் ஏன் கை கோர்க்க வேண்டும்?

3. தமிழகத்தில் அணு உலைக்கு ஆதரவான கருத்தை வலிந்து செயற்கையாக உருவாக்க ஆளும் வர்க்கம் பல கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறதாக செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த கையூட்டு பணம் அறிவு ஜீவிகள்,ஊடகங்கள்,அரசியல் கட்சிகள்,தன்னார்வ தொண்டு அமைப்புகளை குறி வைத்து பாய்ச்சப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மக்களைப்பாதிக்கும் தலை போகும் பிரச்சினைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு அவசர அவசரமாக அணு உலையை ஆதரிக்க துடிப்பது ஏன்?

4. நமதூரில் உள்ள தாரங்கதாரா வேதியியல் ஆலையும் {டி.ஸி.டபிள்யூ} தனது தேவைக்கு கூடுதலாகவே மின் உற்பத்தி செய்து வருகின்றது.நமக்கு தேவையான மின்சாரத்தை அவர்களிடமிருந்து பெறுவதை விட்டு விட்டு எதற்காக அவர்களிடம் சுற்றாடல் காரணங்களுக்காக நாம் போராட வேண்டும்?

கூடங்குளம் அணு உலையினால் யார் தலை உருண்டால் என்ன? எங்களுக்கு தேவை மின்சாரம்தான் என்ற வாதம் சரியென்றால் இதுவும் சரிதானே?

5.முஸ்லிம் எதிர்ப்பையும்,வெறுப்பையும் முழுமுதல் கோட்பாடாக கொண்டு செயல்பட்டு வரும் ஃபாஸிச பா.ஜ..க வினரை மதித்து ஊர் அழைத்து ஊர் கூட்டம் போடும் அளவிற்கு உங்களுக்கு என்ன பிரச்சினை? நெருக்கடி? கட்டுச்சோற்றுக்குள் ஏன் நரியை கட்டுகின்றீர்கள்?

மனித குலத்திற்கு எதிரான, பேரழிவு தன்மை வாய்ந்த ஒரு திட்டத்திற்கு ஆதரவாக கடையடைக்கக்கோரும் உங்களின் முடிவானது வரலாற்றின் தவறான பக்கத்தில் நாம் நின்றதாக என்றென்றைக்கும் பதியப்படும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Shameemul Islam SKS (Chennai) on 06 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20606

REALLY THOUGHT PROVOKING, MAY ALLAH BLESS YOU. MAY HE PROTECT ALL OF US FROM ALL MAN MADE AND NATURAL CALAMITIES.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Lebbai (Riyadh) on 06 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20609

சாதாரண அனல் மின் நிலையத்தையே ஒழுங்க பாரமரிக்க முடியாமல் எத்தனை மாசு ஏற்படுத்தும் அளவு செய்து, மின் நிர்வாகம் திணறும்போது, "அணு" வை சேர்த்து கொடுத்தால் பராமரிப்பு எப்படி இருக்கும்?

இது அப்படிப்பட்ட சுதந்திர நாடு? ஊழல் அரசியல்வாதிகள் பரிந்துரை தான் முக்கியமா பவர் பிளான்ட் மேனேஜர் முதல் போர்மன் நியமிப்பு வரை இருக்கும். தகுதியானவர்களுக்கு வேலை இருக்காது. அல்லாஹ் தான் அனைத்து மக்களையும் பாதுகாக்கணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: HASBULLAH MACKIE (Dubai) on 06 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20610

இந்த விவரங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்....அதனால் தான்....உண்மையான மக்களுக்கான சேவைகளை செய்யத் துடிப்பவர்கள் என்றால் எதை படித்த பிறகு உண்மைகளை அறிந்து அணு உலைக்கு எதிராக போராட வேண்டும்...

இதற்கு நிச்சயமாக பதில் அளிப்பது அவசியமானது....

ஆரிப் காக்கா அவர்களே.....ஒரு லெட்டர் முஸ்லிம் லீக் தலைமையகத்துக்கு எழுதி தெரியப்படுத்தினால் உணர்வார்கள் என நினைக்கலாம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Lebbai (Riyadh) on 06 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20611

குறுந்தகவல்:

இந்தியாவில் இதுவரை ஆறு (இரண்டு இன்னும் கட்டுமான பணியில் கூடங்குளம் சேர்த்து) அணுமின் நிலையங்கள் உள்ளது. ஏன் இதுக்கு மட்டும் எதிர்ப்பு?

இந்த அனைத்து ஆறு மின் நிலையங்களிலும் மொத்த சக்தி திறன் 4635 MW அளவு தான் (மின் இழப்பை கணக்கில் கொள்ளாமல்). தமிழ் நாட்டில் இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் மின்சாரம் இரண்டு உலை-இலிருந்து 390 MW (170 +220 MW) சக்தி திறன் உள்ளது.

1 GW Power = 1000 Mega Watt

கூடங்குளத்தின் அணுமின் உற்பத்தி திறன் 2+2 Gigawatt.(மொத்த திறன் 4000 MW).

இந்தியாவில் உள்ள ஏனைய ஆறு நிலையத்தில் கிடைக்கும் மொத்த 4635 திறன்.

கூடங்குளத்தின் அணுமின் உற்பத்தி திறன், கல்பாக்கத்தை விட பத்து மடங்கு திறன் வாய்ந்தது.

நான்கு nuclear ரிக்டர், thick-populated location வைத்தால் என்ன நியாயம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Lebbai (Riyadh) on 06 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20613

இந்தியாவில் இதுவரை ஆறு அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இரண்டு இன்னும் கட்டுமான பணியில் (கூடங்குளம் சேர்த்து) உள்ளது. மொத்தம் எட்டு அணுமின் நிலையங்கள் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: habeeb rahman (abu dhabi) on 06 March 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20614

நண்பர் பஷீர் அவர்களின் கட்டுரையை படிக்கும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது! கட்டுரையாளரின் நோக்கம் அணு உலையை ஓய்பதா? இல்லை முஸ்லிம்லீக்கை ஒழித்து கட்டுவதா?நாம் ஒரு கட்டுரையை எழுதும்போது செயல் பாட்டின் மீது கவனம் இருந்தால் நடு நிலை இருக்கும்!செய்தவர்கள் மீது இருந்தாலோ? இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம்.... ப்ளீஸ்!

அவரின் கணக்குகள் கேற்பதுக்கு provoking ஆகத்தான் இருக்கின்றது. ஆனால் இந்த கணக்குகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதும், அது மற்ற கணக்குகளுடன் ஒப்பிட்டு கூட்டிகழித்து பார்க்க பட்டதா என்பதும் சந்தேகமே! நமக்கு தேவை இங்கு Provoking mentality அல்ல,மாறாக நாலையும் சேர்த்து பார்த்து நடை முறை சத்தியங்களை உணர்ந்து செயல்படும் maturity தான்! பஷீர் பல கணக்குகளை காட்டி கூடம்குளத்தில் எடுக்கும் மின்சாரம் ஜுஜுபி என்கிறார். கம்மென்ட் பகுதியில், லெப்பை வேறு சில கணக்குகளை காட்டி அது பூதம் என்கிறார். எதை நம்புவது? (லெப்பை அவர்களே, நீங்கள் எல்லா கமெண்ட்ஸ் சேர்த்து ஒன்றாகவே சொல்லலாம், பிட்டு பிட்டாக பிரிக்க தேவை இல்லை)

நம் நாட்டில் விடுங்கள்! மனித உரிமைகளை தலையில் தூக்கி நடக்கும் பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளில் இன்று வரை ஏன் அணு உலையை கொண்டு அதிக மின்சாரம் தயாரிகின்றார்கள்? புகொசிமா சம்பவத்திற்கு பின் இழுத்து மூடியிருக்கலமே? ஏன் அது முடியும் வரை காத்திருக்க வேண்டும்? நேற்று இன்கிர்ந்து வெளியாகும் பத்திரிகையில் ஒரு கட்டுரையை படித்தேன். சொடுக் என்றது! பெட்ரோல் எரிப்பதைகாட்டிலும் பல மடங்கு கார்பன்கள் வெளியாவது நிலக்கரியை எரிப்பதினால்தான். சுருங்க சொல்லின் பல்லாயிரம் ஊர்திகளில்றுந்து வரும் புகையை விட மோசமானது சில அனல் மின் நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகளிருந்து வரும் புகைதான்!

ப்ரோவோகிங் முடிவுக்கு போகும் முன் நாலையும் கேளுங்க!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: Lebbai (Riyadh) on 07 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20616

ஹபீப் முஹம்மது, பிட்டு பிட்டா கமெண்ட் எழுதுவது என்ன பெரிய தவறா? அணு உலை ஆதரவாளர்கள் மொத்தமாக ஒரே கமெண்ட் லா எல்லா தகவலும் தருகிறார்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: hyder (colombo) on 08 March 2012
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20618

பஷீர் காகா உங்களின் கட்டுரை அருமை.ஒரு சின்ன யோசனை அணுமின் நிலையம் அமைக்க எல்லா மக்களுக்கும் அச்சம்.கட்சதிவூ போன்ற மக்கள் இல்லாத இடங்களில் அமைத்தால் என்ன?சாத்தியம் உண்டா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:முற்றிலும் அரசியல் சாயம் பூசிய கட்டுரை ..
posted by: V D SADAK THAMBY (KAYALPATNAM) on 10 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20620

முற்றிலும் அரசியல் சாயம் பூசப்பட்ட கட்டுரை. மக்களுக்கு எது நன்மை தீமை என்பதை அலசுவதை விட்டுவிட்டு, அரசியல் சார்ந்த கட்டுரை.

அரசியல் கணக்குப்படி நமக்கு பிடிக்காதாவர்கள் ஆதரித்தால் நாம் எதிர்க்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by: M. Sajith (DUBAI) on 11 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20625

கூடங்குளம் வந்தால் தட்டுபாடு இல்லாமல் போய்விடும் என்று வாதிட அடிப்படை கூட்டல் கழித்தல் தெரிந்த யாராலும் முடியாது.

இந்தியாவின் தற்போதைய தேவையான 120GW (120,000MW) - 2017-ல் 335GW ஆக கூடும் என்பது McKinsey இந்திய அரசுக்காக நடத்திய ஆய்வரிக்கையின் தகவல்.

இதனை தொடர்ந்து வந்த பரிந்துரைகள் பல..

1. உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியை (உற்பத்தியை அல்ல)- (Rate of increase in power generation) 10 மடங்காக உயர்த்த வேண்டும்

2. ஆண்டுக்கு 50GW உற்பத்தி அதிகரிக்க வேண்டும்

3. PLF -ஐ 10 ஆண்டுகளில் சராசரியாக 77% ஆக்கவேண்டும் (Includes all type of generation)

4. ஆண்டுக்கு 300,000 Skilled and Semi-Skilled வேலையாட்கள் தேவையை தயார் செய்ய வேண்டும்

5. AT&C losses ( Aggregate Technical & Commercial losses) 15% ஆக குறைக்கவேண்டும், இதில் Distribution loses and theft அடங்கும்.

6. ஆண்டுக்கு 100,000 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய போதுமான வசதிகளை (infrastructure) செய்யவேண்டும் (for existing Thermal power plants and new ‘Clean Coal Technology’ plants)

7. Renewable Energy (including Solar, Wind, Biomass etc..) உற்பத்தியை 30GW ஆக 2020-ல் எட்டவேண்டும் – (இதுவே சாத்தியமா என்பது கேள்விக்குறி)

ஆக இது போல ஏகப்பட்ட வேண்டும்கள் எல்லாம் நடந்தால் இந்தியாவின் தேவை பூர்த்தியாக சாத்தியம்.

கூடங்குளம் மட்டும் சாதித்துவிடும் என்பது ஒரு போதும் சரியான வாதமாக இருக்க இயலாது.

இன்றய அறிவியல் சாத்தியத்தில், அனுமின் இல்லாமல் இதை பூர்த்தி செய்ய வேறு வழி இல்லை என்பதுதான் சரியான நிலைபாடாக இருக்க முடியும். (both in terms of Technical Feasibility and consumer cost viability)

மின் உற்பத்தி நிலையங்களை நுகர்வோருக்கு அருகில் தான் அமைத்தாக வேண்டும். நன்பர் ஒருவர் யோசித்தது போல கச்சத்தீவிலோ அந்தமானிலோ சாத்தியம் இல்லை, Distribution and Transmission Loss - சத்தியமில்லாமல் ஆக்கிவிடும்)

இந்த எதார்த்தை மறுப்பதனால், மீண்டும் நம் தலைமுறைகளை சிறுவிளக்குகளையும், மெழுகுவர்த்திகளிலும் பாடம் படிக்கவும், கைவிசிரியிலும், ஹரிக்கன் விளக்குகளில் வழியைத்தேடவும் பழகிக்கொள்ள தேவையான பயிற்சிகள்களை இப்போதே துவங்குவது நல்லது..

------------------------------------------------------------------------------------------------------

கூடுதல் தகவல்,

பிரன்ஸ் நாடு நாள் ஒன்றுக்கு 596 டிரில்லியன் வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கிறது, இவற்றுள் 78% அனுசக்தியாலும், 11% நீர்மின் சக்தியாலும், 9% (Coal, Natural Gas உட்பட)புதைபடிவ எரிசக்தி மூலமும்,1.3% காற்றலை மூலமும் தயார் செய்கிறதாம். (2010 data)

அதிகப்படியான மின்சாரம் விற்பதால் மட்டும் ஆண்டு வருமானம் பிரான்ஸுக்கு 3 பில்லியன் யுரோ கிடைக்கிறதாம்.. ஹூம் உள்ளதுக்கே வழிய காணோம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved