Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:29:23 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 17
#KOTWEM17
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 11, 2012
சாதனையா? சோதனையா? (பாகம் 1)

இந்த பக்கம் 2524 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நமது கட்டுப்பாட்டுக்கு அடங்காத பிரச்சினைகளை சமாளிக்க பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேண்டும். எண்ணம், பேச்சு, செயல், இந்த மூன்றிற்கும் சம்பந்தம் இருப்பது அவசியமாகும். நம்மை பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணுவதே ஒரு முக்கியமான அறிவுரையாகும்.

பிரச்சனைகளில் அல்லது சோதனைகளில் சோர்வடையாமல் இன்பம் அல்லது வேதனை, கஷ்டங்களில் ஏற்படும் விரக்தி அடையாமல், தோல்வியில் மனம் உடைந்து போகாமல் சாதனைகள் புரிய முயற்ச்சிக்க வேண்டும்.(Try try again you will Succeed!) என்று எழுதுகிறார் ' சாதிக்கலாம் வாங்க' நூலாசிரியர் தில்லி இரா வைத்திய நாதன் அவர்கள். (நமதூர் அரசு கிளை நூலக வரிசை எண் 21763)

சாதனை புரிபவர்களுக்கு நம்முடைய செயல்களை பிறர்க்கு நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறர்க்கு உணர்த்தவேண்டும். அது மட்டும் அல்ல சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயல்கள் ஆகின்றனவா என்பதை அறிந்தபின் செயலாற்றவேண்டும். சாதனை புரிய இதுவும் ஒரு வழியாகும். நீண்ட தூரம் ஓடிவந்தால் தான் உயரம் தாண்ட முடியும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.படிக்கும் நூல்கள் மூலம், சந்திக்கும் மனிதர்கள் மூலம் சாதனை புரிய வழி இருக்கிறதா என்று பார்ப்பது ஒவ்வொருவரின் கடமை. நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் வேகமாக அல்லது விரைவாக செயலில் இறங்க வேண்டும். சாதனை புரியும் வழியை கண்டு பிடிக்க பல்வேறு தொழிலதிபர்களின் வாழ்க்கையை படித்து தெரிந்து கொள்ளலாம் . உதாரணமாக : கல்வித்தந்தை எல். கே. லெப்பை தம்பி கல்வியின் பால் காட்டிய அக்கறை, அவர்களும் படித்து, நமதூர் மக்கள் அனைவர்களையும் படிக்க எடுத்த முயற்ச்சியால் தான் இன்றும் நாம் அவர்களை நினைத்து பார்க்கிறோம்.

இது போல உயர் கல் வியாபாரி(gems) ஆனா. கானா அவர்களின் தளராத சிந்தனையால் தான் இலங்கை கொழும்பு நகரில் தனித்து நின்றும், நேர்மையான வர்த்தகத்தின் மூலமும் தர்மசிந்தனையுடன் சாதனை புரிந்து காட்டிய நாட்களை நமது வாரிசுகள் பார்வையில் வைக்க விரும்புகிறேன்.1954 ல் நமதூர் குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண திருநெல்வேலி ஜில்லா போர்டு கலெக்டரிடம் ரூ.51000 அன்று கொடுத்ததினால் தான் இன்று 5 நாளைக்கு ஒரு முறையாவது தண்ணீர் கிடைக்கிறது. இந்த சாதனைக்கு அன்று அவர்கள் பணத்தை கொடுக்க தயக்கம் காட்டி இருந்தால், குடிதண்ணீர் நிலை எப்படி ஆகி இருக்குமோ தெரியாது.(இந்த தகவலை முத்துச்சுடரில், "காயல் நகரில் முதல்முதலில்" என்ற தொடரில் 1978 முதல் 1998 வரை வெளியான 250 குறிப்புகளில் ஒன்றாகும், இன்னும் ஊருக்கு உழைத்த உத்தமர்கள் குறித்து அதில் நிறையவே உள்ளது).

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு, என்ற வேதாந்த குரலுடன் வெள்ளைக்காரன் இங்க்லீசை படிக்க மாட்டோம் என்று சுதந்திர தாக வேட்கைகாலத்திலேயே படிக்காமல் இருந்த முஸ்லீம்கள் அவசியம் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றார் முஹம்மத் அலி, சௌக்கத் அலி. அறிஞர் ஜின்னா இந்தியா பிரிவதற்கு முன் ஆங்கிலேயர்களை எதிர்ப்போம் ஆனால் அவன் மொழியை அல்ல என்று முழக்கமிட்டு அது தமிழகம் பரவி நின்ற பொது காங்கிரஸ் வாதியாக இருந்த எல்லா மத மக்களும் ஆங்கிலத்தை படிக்க ஆர்வம் காட்டினார்களாம். அப்பொழுது தான் கிழக்கு பகுதி சிந்தனை வாதி சேனா ஈனா கிதுரு முஹம்மது என்ற பெரியார் தன குழந்தைகளுக்கு ஆங்கில கல்வி கற்றுத்தருவேன். அதன் மூலம் நமதூரில் டாக்டர் இல்லாத குறையை நீக்கிக் காட்டுவேன் என்ற சபத சொல்லும், இறைபக்தியும், பிராத்தனையும் இணைந்து முதல் கண் மருத்துவர் செய்து முஹம்மது அவர்களை தந்த பெரியார் குடும்பத்தில் இன்று பதினோரு டாக்டர்கள் என்று நினைக்கும் பொது உள்ளம் பூரிக்கிறது.

சாதனையாளர்கள் வரிசையில் ஊருக்கே பெருமை தேடித்தந்தவர்களின் குடும்பத்தை சார்ந்த தௌலத் ஹாஜி அவர்களின் மகன் மருத்துவர் டாக்டர் கிஸார் D.C.H இப்படி கிதுரப்பா அவர்களின் மகன், பேரன், இப்படியாகத்தான் பட்டியல் கணக்கிட்டு தந்தேன். பொதிகை சாரல் மார்ச் 2012 - இதழ் பக்கம் 7-ல் மனித நேசமும் என்றும் நிரந்தரமில்லை என்று காயங்களை கட்டளையாக்கி இதயதூணில் வீண் ஆசைகளுக்கு வேலியிட்டு சாதிக்கும் எண்ணம் என்றும் உதித்தால் உன் வாழ்வில் வெற்றி உதயமாகும். உயிர் நண்பனும் திசை மாறலாம், இன்று விரும்பியவர்கள் நாளை வெறுக்கலாம். ஏனெனில் எதுவுமே நிரந்தரம் இல்லை துடிப்புகள் எதிர்நீச்சலை போடா அழைக்கலாம். முன்னேறினால் வெற்றிகள் நமக்கு நிரந்தரமாகும். நினைக்கும் சாதனை கைகூடலாம், கைகூட கடின உழைப்பு, கூட்டு முயற்சி, இறைபக்தி தேவை. சாதனை படைத்தவர்களின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் கடுமையான உழைப்பு, தளராத முயற்சி, கலந்தாலோசிப்பது, முடிவடுக்கும் முன் யோசிக்க வேண்டும்,யோசித்ததை உடனே எழுதவோ, பேசிடவோ கூடாது என்கிறார்கள் சாதனை படைத்தவர்கள் குறிப்பாக வி.ஜி பன்னீர் தாஸ் சகோதரர்கள், கொடைவள்ளல் சி. அப்துல் ஹக்கீம், இலங்கை பேருவலா, நளீமியா கல்லூரியை முஸ்லீம் சமுதாயத்திற்கு தந்த கொடைவள்ளல் நலீன் ஹாஜி, நல்லி குப்புசாமி செட்டியார் போன்றோர்களின் நூல்களை நான் படித்துவிட்டு, என் சொந்த நூலகமான அன்னை கதீஜா அறிவு நூலகத்தில் பாதுகாத்து வருகிறேன். இவை காலத்தால் அழியாத சாதனையாளர்களின் அறிவூற்று.

நூலகத்தின் வாடையே இல்லாத சிலர் பாதுகாத்த பழைய நூல்களை கரையான் அறித்ததாத கூறி பழைய பேப்பர் கடைக்கு போடுவதாக கேள்விப்படுகிறேன்( நமது வீட்டு தாய் பத்திரம் கரையான் அறித்துவிட்டதாக பழைய பேப்பர் கடைக்கு போட்டு விடுவோமா?) இல்லையே அதை எப்படி பாதுகாப்பது, பத்திரப்படுத்துவது, இக்கால முறைப்படி ஜெராக்ஸ் எடுத்து பத்திர படுத்திகொள்வோம். ஆனால் நமதூரில் பழைய பேப்பர் கடைக்கு சென்று பாருங்கள். ஊரில் பலபகுதில் உள்ள நூலகங்களில் உள்ள பழுப்பேறிய நூல்களை நாம் பாதுகாத்து வைத்தாலும் ஒருவர் பதவி மாறிவிட்டாலோ, அவர் இல்லாவிட்டாலோ பழைய பாதுகாப்பான நூல்களை பேப்பர் கடைக்கு போடுகின்ற அவல நிலை வேதனையாக உள்ளது.

காயல் நகர சரித்திர நூல்கள், பஞ்சாயத்து நூற்றாண்டு மலர், இன்னும் பல கொள்கை நூல்கள் பழைய பேப்பர் கடையில் போட்டுவிடுகிறார்கள். காயல் நகர் குறித்து ஆய்வு செய்யும் காலம் நமதூர் செய்திகள் யாவும் மீண்டும் மறுசுழற்ச்சி முறைக்கு போய் நமது வரலாற்று நூல்கள் காணாமல் போய்விடுகிறது. ஒருதுறையில் படித்து பட்டம் பெற்ற பின் தனிக்கருத்து ஆய்வுக்கு சென்று P.hd பட்டம் பெற நினைத்தால், அல்லது எழுத்துலகில் சாதனை பெற விரும்பினால் அந்த நூல்களை எங்கு போய் படிப்பது. எல்லாம் பழைய பேப்பர் கடையில் சங்கமாம் ஆகும் காலம் மாறவேண்டும் என்பதே என் அவா! எழுத்தாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், பதிப்பகதார்களுக்கும் தான் நூல்களின் அருமை புரியும். சாதிக்கவோ, சாதனை புரியவோ சிறந்த நூல்கள் தான் நமது நண்பனாக இருப்பான்.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆதங்கம் , வேதனை - எமக்கும் ஏற்படுகிறது.
posted by: N.S.E. மஹ்மூது (????????????) on 11 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20623

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

" சாதனையா? சோதனையா? " சிந்திக்க வைக்கிறது சகோதரர் இப்னு அப்பாஸ் அவர்களின் இந்த கட்டுரை.

பாதுகாத்து வைக்க வேண்டிய, பிறர் பயனடைய வேண்டிய நல்ல நூல்களை குப்பைகளிலும், பழைய பேப்பர் கடைகளிலும் போடும் நமது மக்களை பற்றிய அவர்களின் ஆதங்கம் , வேதனை - எமக்கும் ஏற்படுகிறது.

நீங்கள் என்னதான், எவ்வளவுதான் செய்திகளையும், சரித்திரங்களையும், கல்வியையும் இன்றைய விஞ்ஞான கண்டு பிடிப்புகள் மூலமாக கம்பியூட்டர் , மொபைல் இன்னும் பல வழிகளிலும் படித்தாலும் புத்தகத்தின் மூலம் படித்ததற்கு ஈடாகாது.

புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால் அது வாழ்வில் நல்ல பல முன்னேற்றங்களை , பொறுமையை , சகிப்புத் தன்மையை கொடுக்கும் என்பதை உணரலாம்.

----------------------------------------------

வேண்டுகோள் :

தயவு செய்து யாரிடமாவது பழைய நூல்கள் , வரலாறுகள் இருந்தால் அவைகளை குப்பைகளில் வீச வேண்டாம் - பழைய பேப்பர் கடைகளிலும் போடவேண்டாம் நூல் நிலையங்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சாதனையா? சோதனையா?...
posted by: M. Sajith (Dubai) on 11 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20624

An inspiring write-up.. தொடரட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சாதனையா? சோதனையா?...
posted by: www.tamilkudumbam.com (USA) on 11 March 2012
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 20630

நல்ல கட்டுரை தொடரட்டும் உங்கள் கட்டுரைகள் தாங்கள் முடிந்தால் பெண்கள் முன்னேற்றம் பற்றி கட்டுரைகளை எழுதி தாருங்கள்

நன்றி
தமிழ்குடும்பம்.காம்
tamilkudumbam@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சாதனையா? சோதனையா?...
posted by: Mohamed Salih (Kayalpatnam) on 12 March 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20631

நல்ல கட்டுரை தொடரட்டும் உங்கள் பனி ..

வாரம் ஒரு கட்டுரை எழுதவும் மாமா ..

என்றும் அன்புடன்,
பெங்களூர் ரில் இருந்து
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சாதனையா? சோதனையா?...
posted by: Firdous (Colombo) on 12 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20632

வாசிக்கும் பழக்கம் தேய்ந்துக்கொண்டே போய்கிறது. இளையவர்களிடம் இல்லையென்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. இந்நிலை மாறவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சாதனையா? சோதனையா? (பாகம்...
posted by: kithuru mohamed abbbas (Dammam) on 18 March 2012
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20650

அஸ்ஸலாமு அழைக்கும் அருமையான கட்டுரை தொடரட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved