Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:38:27 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 18
#KOTWEM18
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 14, 2012
விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம்!!

இந்த பக்கம் 3272 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம். முதலிரண்டுக்கும் இறைவன் அருளால் நமதூரில் பெரும்பாலானோருக்கு பிரச்சனை இல்லை.ஆனால் மூன்றாவது உள்ள இருக்க இடம் அதாவது வீடு. இன்றைய சூழ்நிலையில் ஒரு நிலத்தை வாங்கி வீட்டை கட்டி முடிப்பதென்றால் நமதூரில் நடைமுறை சாத்தியமா? வேறு எங்குமே இல்லாத அளவுக்கு கண்ணைக் கட்டும் செயற்கை (?) நில விலையேற்றங்கள். 'வெறும்' வியாபார நோக்கத்தின் கோரப் பிடியில் வீட்டுமனைகள் சிக்கித் தவிக்கிறதோ என்ற அச்சம் நம் அனைவருக்கும் இல்லாமல் இல்லை.

உலகப் பொருளாதாரமே 'ரியல் எஸ்டேட்'டினால் வீழ்ச்சியடைந்தாலும் நமதூரில் கோலோச்சியிருக்கும் ஒரே தொழில் 'ரியல் எஸ்டேட்' என்றால் மிகையாகாது. ‘மைய்ய வாடியை’ தவிர எல்லா நிலங்களும் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. எங்கு பார்த்தாலும் 'பிளாட்'. ஒரு காலத்தில் ஓடியாடி விளையாடிய ‘ஒத்தபனை...இரட்டபனை’ இன்று கம்பீரமான வீடுகளாக, குப்பை மேடுகளும் முட்க்காடுகளும் நேற்று அடித்த மழையில் முளைத்த காளான்களை போல் 'பிளாட்' களாய் காட்சி தருகின்றன. 'பேய் ...காத்து' என்று நடமாட பயந்த 'ஆளருத்தான் காடு' அதன் சுற்றுவட்டாரங்கள் கூட இதிலிருந்து தப்பவில்லை. எல்லாத் திசைகளிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பறந்து விரியும் நமதூரும் அச்சுறுத்தும் நில விலையேற்றங்களும்!!

பெருகி வரும் மக்கள் தொகை, ஒவ்வொரு பொண்ணுக்கும் தனி வீடு கொடுத்தே ஆக வேண்டும் என்று எழுதப்படாத ஊர் விதி(?), ஊருக்குள்ளேயே பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் நடப்பதினால் 'இருக்கும்' நில பரப்புக்குள்ளேயே பல்கிப் பெருகும் கட்டாயம் மற்றும் தொழில்/வேலைக்காக குடியேறும் சிலர். இவைகள் யாவும் நிலத்தேவை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள்.

தொட்டி வீடு போல 20*40 நிலத்தில் ‘லாத்தா…தங்கச்சி’ என்று ஒன்றாக குலாவிய காலங்கள் போய், லாத்தாக்கு மட்டும் 'சூப்பர் தெரு வீடு' எனக்கு மட்டும் இத்தனோன்டு ‘குருவி’ வீடா என்று வேறு இடத்தில் புது நிலம் வாங்கி அழகான வீட்டை கட்டித் தாருங்கள் என்று கேட்க்கும் மாடர்ன் காலத்து மகள்கள். கடைசியில் உம்மாக்காரி இரண்டு மகள்கள் வீட்டுக்கும் நடந்தே கால் தேய்ந்து போவது வேற விஷயம்.இவைகள் யாவும் ஊர் பறந்து விரிவதட்க்கும் நில விலையேற்றத்திற்க்கும் ஒருவகைக் காரணங்கள்.

10 -15 வருடங்களுக்கு முன்னர் இருந்த நில மதிப்பையும் தற்போதைய மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விலையேற்ற விகிதம், வீட்டுமனை விலை...நகரத்தை மிஞ்சி விட்டது. நிலம் மட்டுமே பத்து/இருபது லட்சம் என்றால், வீட்டை கட்டி முடிப்பதற்க்கு ஒரு மனிதனின் கதி? வீடு கட்டும் செலவை விட நிலத்தின் மதிப்பு அதிகம். 'நாமெல்லாம் எப்ப நிலம் வாங்கி மகளுக்கு திருமணம் நடத்த' என்று பெருமூச்சு விட்டு வேறு வழியின்றி வீடு கொடுத்து ஆகவேண்டிய கட்டாயத்தினாலும் பயங்கர நில விலையேற்றத்தாலும் நோட்டு போட்டு பிறரிடம் 'வசூல்' பண்ணி வீடு கட்ட வேண்டிய நிலை நம்மில் சிலருக்கு ஏற்படாமல் இல்லை.

தங்கத்திலும் ஷேர் மார்க்கட்டிலும் முதலீடு செய்து வந்த வெளிநாட்டு வாழ் காயலர்கள், ஒட்டுமொத்த பணத்தையும் முதலீடுகளாக நிலத்தில். இவர்களையே குறிவைக்கும் தரகர்கள். தனக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைத்து விட்டால் அந்நிலத்தை தரகர்கள் ‘என்ன விலைக்கு விற்றாலும் நமக்கென்ன' என்று தரகர்களை கெடுத்து விட்ட சிலர். சில ‘முதலீட்டாளர்களே’ அந்நிலத்தை மாறி...மாறி வாங்கி விற்பதும், 'பவர்' வாங்கிக் கொண்டு அதை மறு நிமிடமே சில லாபங்களுக்கு மற்றவரிடமோ அல்லது தரகர்களுக்குள்ளேயே 'கை மாற்றி’...கடைசியாக விற்கபட்ட விலை (அல்லது அதை விட அதிக விலை) அந்நிலத்திட்க்கும் அதை சுற்றியுள்ள நிலத்திட்க்கும் உருவாக ஒவ்வொருவரும் காரணமாகிப் போனோம்.

உள்நாட்டிலே ஏதொ வேலை பார்த்து செட்டில் ஆகலாம் என்றால் "நம் நசீபு இந்த அரபுநாட்டு வாழ்க்கை தான்" என்று பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வாப்பாமார்கள் புலம்பும் அளவுக்கு அவர்கள் கண் முன் நிற்க்கும் நமதூர் வீட்டுமனை விலைகள்.

'முன்னே' கிடக்கும் எல்லா காலி மனைகளையும் வியாபார நோக்கில் பல வருடங்களாக சிலர் கையகப் படுத்தி வளைத்து போட்டதின் (நிலப் பதுக்கல்?) விளைவு…எங்கேயோ தொலைவில் கிடக்கும் நிலத்தின் மதிப்புக் கூட உயர்ந்து விட்டது. பதுக்கலினால் மக்களுக்கு எத்தகைய அசௌகரியங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதுக்கல் வியாபாரம் என்று குறிப்பிட்டது அரிசி,பருப்புக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. மாறாக அது நிலத்துக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் விலையேற்றத்தை எதிர்பார்த்து பதுக்குவதையே நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள். இவைகளை மறந்ததன் விளைவே இந்நில உயர்வுக்கு முக்கிய காரணம்.

வெளிநாட்டை முடித்து விட்டு இரண்டு மாதம் ஊரில் சும்மா இருப்பவரிடம், தம்பி என்ன பண்ணுறீங்க? சும்மாதான் காக்கா இருக்கேன். அட போங்க தம்பி...'அக்குள்' உள்ளே ஒரு பேக்கை சொருவுங்க. யார் கேட்டாலும் நிலபுரோக்கர்னு சொல்லுங்க என்றார். ஒரு மனை என்பது எவ்வளவு ஸ்கொயர் ஃபீட் என்றெல்லாம் தெரியாத சிலர் கூட இத்தொழிலில். '3% கறார் கமிசன்...ஏன்னா நாங்க மூன்று நான்கு தரகர்கள் பங்கு போடணும்' என்கின்றனர். விற்கப்படும் நிலங்களை விட தரகர்கள் எண்ணிக்கை அதிகமில்லாமல் சரி.

வாங்குபவருக்கு சிறு அவகாசம் கூட தராமல் அவர்களை துரிதப்படுத்தி,இந்த நிலத்தை உடனே/இன்னைக்குள்ளேயே முடிக்க வில்லையென்றால் மற்ற தரகர்கள் கையில் மாட்டி அந்நிலம் சீரழிந்துவிடும் என்ற அச்சுறுத்தல் ஒரு பக்கம். “உங்க வீட்டுல கொமரு இருக்கிறதுனாலதான் நான் இந்தளவுக்கு விலை சொல்கிறேன்...இதுவே வேற யாராவது கேட்டால் எங்க விலையே வேற” என்று டிப்ளமெடிக்காக பேசும் நவீனகாலத்துத் தரகர்கள்.

ஊரிலே இருந்து 'சமூக சேவை' மூலம் நிறைய மக்களுக்கு பரிட்ச்சயமான ஒரு நண்பரிடம், நீங்க ஏன் நிலத் தரகர் தொழிலை பண்ணக்கூடாது...ஒரு வருமானமாக இருக்குமே என்றேன் அக்கரையில். இன்றைய சூழ்நிலையில் நகரத் தரகர்களையே மிஞ்சும் அளவுக்கு 'பொய்' சொல்லமால் வாங்கு/விற்ப் பவரை ஏமாற்றாமல் நியாயமான முறையில் நாலுகாசு பார்ப்பது நடைமுறை சாத்தியமன்று...மறுமையை கேள்விக்குறியாக்கும் அப்பேர்பட்ட தொழில் எனக்குத் தேவையில்லை என்றார்.

சார்பு பதிவு அலுவலகத்தில் நிலப்பதிவின் போது, வாங்கியவரிடன் தரகர் விற்ற விலையை அறிய நேரிடும்போது பல லட்சங்கள் முதலீடு பண்ணி நிலத்தை வாங்கி விற்ற எனக்கு ‘ஒரு லட்சம்’ என்றால் அதை விற்றுக் கொடுத்த உனக்கு கமிசனுடன்/உள்குத்துடன் ‘இரண்டு லட்சமா' என்று ஒரே சண்டை. இதெல்லாம் இத்தொழில் சகஜம் தானே என்று மறுமையின் மீது நம்பிக்கைக் கொண்ட தரகர்கள் இருக்க முடியாதல்லவா? இஸ்லாமின் வழிகாட்டுதலை பின்பற்றாமையே இன்று நாம் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரனம். இது போன்ற நம்பிக்கையற்ற தரகர்களினால், வாங்குபவரும் விற்பவரும் நமதூர் இணைய தளங்களில் விளம்பரம் தந்து (Classifieds) நேரடியாகவே வாங்கி விற்க்கும் நிலை ஏற்படுவதன் மூலம் ‘உள்குத்து’ தவிர்க்கப்பட்டு நில விலை உயர்வை கட்டுப்படுத்தலாம்.

“அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்தமான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)”

நகரில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டு மதிப்பு விபரம் அடங்கிய நமது இணையத் தளத்தில் வந்த செய்தி எண் 8137 பார்த்தால் புரியும். அரசு பரிந்துரைக்கும் விலையும் இன்றைய மார்க்கெட் நிலையும். இதை கண்டும் காணாமல் நடைமுறை படுத்தாமல் இருக்கும் அரசும், அரசாங்க அதிகாரிகளும்.

ஒருவேளை, மற்ற ஊர்களை போன்று கணவன் வீட்டுக்கு மணப்பெண் செல்லும் நடைமுறை இருந்திருந்தால் ‘ஒரு வீட்டிலேயே’ இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்ந்து கொன்டிருக்கும். வீட்டு மனைகளின் தேவையும் பறந்து விரிய வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. இருப்பினும் நிலத்தில் மட்டுமே முதலீடு செய்யாமல்...தனது குடும்பத்திலேயே திறமை அனுபவமிருந்தும் பணவசதி இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவித்து 'capital partner' ஆக முதலீடு செய்து அதன் மூலமும் லாபம் ஈட்டலாம், வழமைபோல் பல துறைகளில் முதலீடு செய்தல், வாங்குபவர்களும் விற்ப்பவர்களை ஒரு முறையாவது சந்திக்க/பேச வைத்து 'நியாயமான' விலையை அவர்களே நிர்ணயிக்க வைத்து அதற்க்கான 'கமிசனை மட்டும்' ஹலாலான முறையில் ஈட்டவேண்டும் என்று எல்லாத் தரகர்களும் முற்படும்போது, விழி பிதுங்க வைக்கும் நில உயர்வை கட்டுப்படுத்தலாம்.

நமதூர் இன்னும் எந்தளவுக்கு பறந்து விரிய முடியும் அல்லது இதுமாதிரி எத்தனை நாளைக்கு அதிக விலை கொடுத்து 'நடுத்தர/ஏழை வர்க்கத்தினால்' நிலங்களை வாங்கி வீடு கட்ட இயலும்? மக்களின் வாங்கும் திறன் (Purchasing power), நிலத்தேவை குறையும் போது அல்லது நகரத்தை போல் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் நமதூரிலும் உதயமாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது...நில மதிப்பு குறைந்து, ஊர் எல்லையைத் தாண்டி பறந்து விரிய வேண்டிய அவசியம் தவிர்க்கப் பட்டு நமதூர் எல்லைக்குள் நாம் அனைவரும் ஒன்றாக வாழ வழி வகுக்கும்!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 16 March 2012
IP: 218.*.*.* China | Comment Reference Number: 20635

தம்பி MAC அவர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு நம்ம ஊர் " நிலம் " பற்றி எழுதி இருக்கிறார் . தம்பி , நீங்க சொல்வது அத்தனையும் உண்மைதான் .

உங்களது அடுத்த கட்டுரை என்னவாக இருக்கும் என்பதை இப்போதே ஓரளவு கணித்து விட்டேன் . நம்ம ஊர் கோழி மார்க்கெட் , மீன் மார்க்கெட் பற்றிதானே எழுதப்போறீங்க ? ஒருமுறை லீவில் ஊர் வந்தபோது , காலை நேரத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கோழி மார்க்கெட் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தேன் . ஒரு கோழிக்குஞ்சின் விலையை கேட்டதும் மயக்கமே வந்துட்டுது . என்னப்பா வாங்குறியா என்றதும் , இல்லேப்பா , சும்மா விசாரிச்சேன் என்று சொல்லி மெதுவா நடையை கட்டிட்டேன் .

என் உறவினர் ஒருவர் சொன்னது , ஒருமுறை சவூதி லீவில் வந்தவர் ஒருவர் , இரு கையிலும் கோழியுடன் வரும்போது , உறவினர் அவரிடம் , கோழி என்ன விலைக்கு வாங்கினாய் என்று கேட்க , அவரோ ஒரு விலையை சொல்ல , என் உறவினர் , விலை ரொம்ப அதிகமாச்சே என்று சொல்ல , அதற்க்கு அவரோ , " இப்படி விலையை விசாரிச்சொம்னா என்னோட ரெண்டு மாச லீவும் பாழாகி விடும் , உங்க வேலையை பாருங்க " ன்னு சொன்னாராம் . எப்படி இருக்கு பாத்தியளா ?

என்ன விலை கொடுத்தாலும் வாங்கியே ஆகணும்னு இருக்கும்போது , நீங்க எதுக்கு தம்பி கவலை படுறீங்க ?

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சாபத்திர்க்குரியவர்கள்
posted by: shahulhameedsak (malaysia) on 16 March 2012
IP: 219.*.*.* Malaysia | Comment Reference Number: 20636

சொந்த வீட்டிற்காக ஏங்கும் ஏழைகளின் உள்ளத்தின் பிரதிபலிப்பு, பணக்காரர்களின் பதுக்கலை பாவச்சுமைகளை அம்பலப்படுத்தும் அருமையான கட்டுரை!!!!!!!

பல ஏக்கர் நிலங்கள் அன்னியர் ஆக்கிரமிப்பு இலக்காகி அங்கே இறை மறுப்பு வழிபாட்டிற்கு வழிகோலி பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்கள், பணம் இருக்கும் மமதையில் இன்னும் நிலத்தை கை மாற்றி கை மாற்றி நூறு மடங்காக விலை உயற்றும் அநியாயம்,இப்படியான ஒரு சம்பவம் நடக்கும்போது நேரிலேயே அந்த நண்பரிடம் நான் சொன்னது இந்த ஊரில் அனைவரும் ஏழைகள் ஆக வேண்டும் அப்போதுதான் அனைவரும் நிலம் வாங்க முடியும் என்றேன். தான் விரும்புவதையே அடுத்தவனுக்கு விரும்புபவனே உண்மையான முஸ்லிம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: koman babu (India) on 16 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20637

உங்கள் கட்டுரை அருமை .அவங்க அவங்க தொழிலில் அதிக லாபம் கிடைகாத என்று பார்பார்கள் .தாங்கள் வேலையில் அதிகமாக வேற ஒரு கம்பெனி சம்பளம் தந்தாள் தர்பது வேலை செயம் கம்பனிக்கு நீங்கள் முற்று புள்ளி வைப்பிர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: habeeb rahman (abu dhabi) on 16 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20638

அருமையான கட்டுரை! நம் ஊரில் உங்கள் நியூ யார்க் அளவிற்கு விலை ஏறுவதற்கு காரணங்கள் நீங்கள் சொன்ன மாதிரி இரண்டு விசயங்கள்! ஓன்று பெண்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம். இன்னொன்று நம் பலவீனத்தை முதலாக்கும் 'உள்ளடி' புரோக்கர்கள்!

முதலாவதை ஒழித்துகட்ட பல வருட திட்டங்களும் செயல்பாடுகளும் அதற்கான தகுந்த மாற்று முறைகளும் (நம் ஊரில் இருக்கும் சின்ன சின்ன வீடு அமைப்புகளினால் 'பல குடும்பம் ஒரு வீடு' அமைப்புக்கு சில நடை முறை சிக்கல்கள் இருக்கும்) தேவை. ஆனால் இரண்டாவது பிரச்சினைக்கு வழி நம் கையிலேயே இருக்கின்றது! நாம் யாரும் இது போன்ற புரோக்கர்களை அணுகக்கூடாது! மற்ற பகுதகளில் இருப்பது போல் நேரிடையாக வாங்க விற்க என்று ஒரு ரியல் எஸ்டேட் வெப்சைட் வேண்டும்!

நிலத்தை வாங்கும் நம்மை போன்ற ஆட்கள் அதை அத்தியாவசிய தேவை இன்றி, உடனே விலை ஏற்றும் முகமாக விற்கவே கூடாது! நிலத்தை அதன் உண்மை விலையை உணர்ந்து, எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவில்லை, அந்த விலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.! இதெல்லாம் சாத்தியமே! அப்படியே நிலம் வாங்கி விற்று காசு பார்க்க நினைப்பவர்கள், அட்லீஸ்ட் நம் ஊரை அவாய்ட் பண்ணி வெளியூரில் வாங்கலாமே! இதையே நானும் இதுவரை பின் பற்றி வருகின்றேன்! இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்! இன்ஷா அல்லாஹ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: MOHAMMEDLEBBAI MS (dxb) on 16 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20639

நல்லதொரு அருமையான் கட்டுரை,,, புதிய பணக்காரர்கள் நிறையபேர் இந்த நில புரோக்கர்கள்தான் என்றால் அதுமிகை இல்லை,,,, பொய் சொல்லி ஊரை ஏமாற்றி காசு சம்பாதித்து மாதம் ஒரு உம்ரா,,, வருடம் ஒரு ஹஜ் போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறாகள்,,, மக்களை ஏமாற்றலாம் ,,,,படைத்தவனை ஏமாற்ற முடியுமா?????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: suaidiya buhari (chennai) on 16 March 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20640

asslamualikum

இன்றை காயலுக்கு பொருத்தமான கட்டுரை, இதை போண்டு ஊரில் நடைபெரும் முடுக்கு பிரச்சனை, பத்திரத்தில் இல்லதா இடதுக்கு பட்டா எடுத்தல். இதை போண்டு ப்றோப்ளத்தால் பிண்ணாடி வரும் genaration பாதிக்கப்பட்டு வறுத்தபடும் சூழ்நிலை கு பரவலாக பல குடுபம்களில் தல்லபடுகிரர்கல் .மக்களே அல்லாஹு கு பயந்து கொள்ளுகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: masood (calicut) on 16 March 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 20641

அவசியமான நேரத்தில் வெளிடப்பட்டுள்ள கட்டுரை. ப்ரோகேர்களின் பித்தலாட்டங்களை தோலுரித்து காட்டிய கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள். இபோதைய சுழ்நிலையில் l ஒரு வீட்டிற்கு ஒன்னு அல்லது இரண்டு பெண் மக்களே உள்ளனர், ஆஹையல் வீடு கட்டுவதெற்கு தேவை நிலம் என்பது குறைவே. இப்போது நடைபற்று வருவது அனைத்துமே வியாபார நோக்கத்தில் தான் நிலங்கள் வாங்கிi விற்பனை நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் சென்று விட்டால் தேவைகள் மிஹவும் குறைந்துவிடும். அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் நிச்சயம் பேராசைக்கார மைதாசை போல நிச்சயம் ஏமாறுவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: abbas saibudeen (mumbai) on 16 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20642

கட்டுரையின் ஆசிரியர் ஒன்றை மறந்ததால் தான் அப்படி எழுதியுள்ளார்கள் ,,,,,,,,

வேறு வூரில் வுள்ளது போன்று திருமணதிக்கு பிறகு பெண் ,கணவன் வீட்டில் குடியேறி வாழ்க்கையே தொடர்ந்தால் ???????????????????

ஏன்? வேறு வூருக்கு செல்லனும் ,காயல்பட்டணத்தில் வுள்ள பெரிய நெசவு தெரு ,சின்ன நெசவு தெரு மற்றும் மேலும் ஒன்று அல்லது இரண்டு தெருக்களில் அதே நபி வழியேதான் பின்பற்று கொண்டிருக்கிறோம்........///////////////////// தாங்கள் அறிய வில்லையா ,அறிந்தே குறிப்பிடவில்லையா?................மற்ற காயல் வாசிகள் பின்பற்றுவது ....தாங்களின் கட்டுரையில் வுள்ளது போன்று,என்ன வூர் விதியா ?

நபிவழியில் ,கணவன் வீட்டில் மனைவி வாழ்கையே தொடங்கினால் ......................ஒவ்வொரு மகளுக்கும் வீடு கொடுத்து திருமணம் முடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை?

காயல்பட்டினத்தில் காலம்காலமாக நிலத்தின் செயற்கை மதிப்பு விண்ணை தொடும் அளவுஇக்கு அதிகரிக்க வாய்ப்பும் இல்லை?

காயல்பட்டினத்தின் முன்னேற்றத்தை குலைப்பவைகளில் இதுவும் ஒன்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஏற்றுகொள்வீர்களா !!!!!!!!!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: sheit (Dubai) on 16 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20643

அமெரிக்க மண்ணில் காயல் மணம் வீசுகிறது, என்ன அழகான கட்டுரை தம்பி, பாமரத் தமிழில், இதே மாதிரி மாயை நாங்கள் இருக்கும் மண்ணில் நிகழ்ந்தது ஆனால், இப்பொழுதோ! அல்லாஹ் தான் காப்பாற்றனும்

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852) on 17 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20644

அஸ்ஸலாமு அலைக்கும்!

விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம்! நன்றி: காயல்பட்ணம் டாட் காம். காயல்பட்டணத்தை ஸேட்லைட் ஜெறாக்ஸ் (காப்பி) எடுத்து அதனில் உள்ள நில வியாபாரத்தை என்லார்ஜ் பண்ணி தத்ரூபமாய் காட்டிய கட்டுரையாளர் விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம்!! ஆசிரியர்: சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அமெரிக்காவில் பணி புரியும், காயல் பூர்வீக சமூக ஆர்வலர் அவர்களுக்கும் அபரிமிதமான நன்றியினை தெரிவிக்கிறேன்.

கட்டுரை மேடை ப்பகுதிக்குப் பரிசு வழங்குவதாக வைத்திருந்தால் ????? இவருக்கு ஒரு ப்லாட் (20 இன்று 40) கணக்கில் ஒரு வீட்டுமனை பரிசாகாகக் கொடுக்கலாம் போல இருக்குது. அனால் அதற்க்கு விமோஷனமும் கொடுத்து அதன் படி 100 க்கு 100 அல்ல 30 வீதமாவது நடந்தால் விமோஷனத்துக்காக வேண்டி அல்லாஹ் 100 இன்று 100 க்கு மேலேயே கொடுப்பான். இன்ஷா அல்லாஹ்.! ஆனால் அல்லாஹ் கீழ் வரும் ஒரு விமோஷனம் தருகிறான்.

அல்லாஹ்வை ஈமான் கொண்ட நமக்கு அல்லாஹ் வின் மீது ஈமான் இருக்குதா இல்லையா என்று ஸெல்ஃப் எக்ஸாமினாஷன் பார்த்து சொர்க்கத்தையும் இங்கேயே பார்க்கலாம். بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ61:10 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ இதற்க்கு மேலும் அயாத்துக்களை குற் ஆன் எடுத்து ஓதி,ஓதி தர்ஜமாவும் பாருங்கள்.மொடெரேட்டர் கள் தயவுசெய்து (தற்ஜமாவையாவது. ) எடிட் பண்ணாமல் பதிவிறக்கம் பண்ணி அல்லஹுவின் அதாபலிருந்து நிவாரணம் பெறலாமா?. தர்ஜமா வருகிறது கீழே”:

61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.

61:13. அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!

اللَّهِ 61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

இந்த ஆயாத்துக்கள் காயல் நலம் சம்மந்தமான எல்லா கமன்ஸுகளுகும் நியூஸ்களுக்கும் பொருந்தும். ” மூமீன்களே காயல்பட்டணம் சிறு மக்கம். மக்கம்தான், சந்தேகமே இல்லை. ஆனால் அது முந்திய காலத்தோடு இருக்கத்தான் செய்தது. இப்பவும் இருக்கிறது .இப்ப நாயகம் றஸூல்(ஸல்) அவர்களுக்கு முந்திய மக்காவா அல்லது பிந்திய மக்காவா என்பதை ஒவ்வொரு காயலரும் யோசித்து நாயகம் றஸூலுலல்லாஹ் வுக்குரிய மக்காஹ் வாக சீர்திருத்தம் பண்ண வேண்டியது நமது கட்டாயக்கடமை”. பயான் பண்ணியது மற்ஹூம் ஹாஃபிழ்.செய்ஃக்அப்துல் காதிர் மிஸ்பாஹி (அல்லாஹும் ம்ங்ஃபிர்லஹூ வற்ஹம்ஹூ.)மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வருடம் 1976. நன்றி ஆலிம் & ம. பு ஷ ஸ.காயல்

தகவல்: தைக்கா றஹ்மத்துல்லாஹ்./காயல். ஃபோன்.280852


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: Mohamed Abdul Kader (Dubai) on 17 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20645

அஸ்ஸலாமு அளிக்கும் என் இனிய நண்பரே,

உங்கள் இந்த சமூக ஆர்வக் கட்டுரைக்கு மிக்க நன்றி.

நமதூரின் மிகப் பெரிய நில விலை ஏற்றத்தின் காரணம் ஒவ்வொரு மகளுக்கும் தனி வீடு கட்டுவதால் அல்ல. ஏனென்றால் இஸ்லாமும் ஒரு குடும்பத்துக்கு அதன் தேவைகேற்ப ஒரு வீடு அந்த குடும்பத் தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

குறிப்பு: ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, அவர்களின் மக்கள் (கல்யாணம் முடியும் வரை)

மாறாக ப்ரோகேர்களின் மகா லாப பேராசையும், நிலத்துக்கு சொந்தக்காரர்களின் பேராசையும் (ஹவாவும்) தான் நமதூரின் நில விலையை இப்படி சூடேற வைத்திருக்கிறது.

இந்த அடாவடி போக்குக்கு தீர்வாக நமதூர் மக்கள் ஒன்று கூடி ஒரு அரசு இயக்காத ரியல் எஸ்டேட் கமிட்டி ஒன்று உருவாக்க வேண்டும். அது தான் நில மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். நிலம் வாங்குபவர்களும், விற்பவர்களும் அதன் அங்கீகாரத்தை பெற வேண்டும். அது மட்டுமில்லாமல் ஆன்லைன் ரியல் எஸ்டேட் போர்டல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இப்படி செய்தால் ப்ரோகேர்களின் உள்குத்துகள் வெகுவாக குறையும்.

எல்லாவற்றிகும் மேலாக ஒவ்வொருவரும் இறை அச்சத்தோடு வியாபாரம் செய்ய வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: Firdous (Colombo) on 17 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20646

ஒரு காலத்தில், Realestate broker என்றால் கொஞ்சம் மதிப்பெண் குறைவாகத்தான் உளும். இன்று அவர்கள் எங்கோ போய்விட்டார்கள். முன்பு ஊரில் கூட நாள் இருந்தால் என்ன கல் வியாபரம பாக்கிறாய், அதிகமாக (அ) அடிகடி ஊரில் பார்கமுடியுதே என்று கேட்பார்கள். இன்று Realestate புரோக்கர் என்று கேட்கும் அளவிற்கு மாற்றம். இதில் ஊரில் சும்மா இருப்பவர்களிடம் என்னப்பா பண்ணுறேன்னு கேட்ட, மச்சான் realestate பண்ணறேன்னு சொல்லுறாங்க!

இதில் ஒரு சாரார் கொஞ்சம் அமௌன்ட் கொடுத்து ஒரு குறுப்பிட்ட காலம் வரை புக் பண்ணி வைப்பார்கள். பின்பு demand வரும்பொழுது விலையேற்றி விற்றுவிடுவார்கள். Registrar officeil கையெழுத்து போடும் பொழுதுதான் வாங்குபவரும், விற்பவரும் சந்திப்பாங்க! அப்போதான் இருவருக்கும் தெரியவரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:விண்ணை முட்டும் செயற்கை ந...
posted by: Kader K.M (Dubai) on 17 March 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20647

அருமையான கட்டுரை! இவர்களைப்போன்ற முத்துக்களை (எழுத்தாளர்களை) அடையாளம் காட்டும் kayalpatnam.com க்கு நன்றி. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved