Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:51:12 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 178
#KOTWEM178
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 15, 2015
நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்? சிந்திக்க வேண்டாமா?? (பாகம் 4)

இந்த பக்கம் 2407 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத பயந்து எழுதுகிறேன்.

இணையதள இனிய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் ஆர்வம் காட்டுகிறேன். தலைப்புக்குத் தகுந்தபடி செய்திகள் சேகரிப்பது எனது கடமை. நபிமொழிகள், உலக பொன்மொழிகள் உதாரணங்களுக்கான சரியான தகவல் தேடி கட்டுரை எழுதும் காலமும் அதிகமாகிவிடும். மேலே தந்த தலைப்பில் பத்துக்கு மேற்பட்ட மூன்று அல்லது நான்கு பக்கம் எழுத அப்படியே அனுப்பாமல் வைத்து இருக்கிறேன். தனி மனிதரைப் பற்றி என்று ஒரு இடத்தில் கூட தவறாக எழுதிவிடாமல் நான் எழுதியதை நானே நிராகரித்து நமது இணையதளத்தில் கொடுப்பதில்லை. சில கவனக் குறைவால் கொடுத்தால், நான் நினைத்த அதே பக்கம் எடுக்கப்பட்டு, கட்டுரையை வெளியிட அனுமதியளித்துள்ளேன்.

கட்டுரை எழுத பயப்படுகிறேன். எல்லோரையும் திருப்திபடுத்தி கட்டுரை எழுத முடியாவிட்டாலும், ஜீரணிக்கக் கூடிய சில அறிவு ஜீவிகளை மாத்திரமாவது பாதிக்காமல் எழுதுவதில் அதிக அக்கரை செலுத்தி, நிதானமாக பலமுறை யோசித்து எழுதுவேன்.

பிரபல எழுத்தாளர் தமிழ் பத்திரிக்கை உலகில் ஜெ.எம்.சாலிஹ் அடிக்கடி சென்னையில் இலக்கிய சொற்பொழிவு கூட்டத்தில் சந்திப்பது உண்டு. அக்காலத்தில், முத்துச்சுடர் மாத இதழில் மூன்றாம் சிறுகதை எழுதிய நேரம். அநேகமாக 1979-80க்குள் இருக்கும். ஜெ.எம்.சாலிஹ் அவர்கள் என்னிடம் கூறியது: “ஏ.எல்.எஸ். பாய், இஸ்லாமிய பத்திரிக்கைகளில் கதை கட்டுரை கவிதை வடிக்கும்போது கூரிய கத்தி மீது வெறுங்காலுடன் நடப்பது போல கவனமாக எழுதுங்கள்... உங்களுக்கு என விசிறிகள் (ரசிகர்கள்) இருப்பார்கள். உங்கள் ஆக்கங்களைப் படிப்பார்கள் என்பதற்காக ஏதாவது மார்க்க முரணாக அல்லது உலக நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களை எடுத்து வைக்கும்போது விசிறிகள் விசிறி கம்பால் தாக்கவும் வருவார்கள்... நீங்கள் இனி தலைதூக்க முடியாது... அதனால், கவனமாக கருத்தைத் தாருங்கள்... எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகள், உங்களூர் கவுன்சிலர்களைக் கூட அவர்களின் சேவைகள் மட்டுமே முதலில் தேர்ந்தெடுத்து எழுதி ஏணியில் ஏறுங்கள். இந்த முறைப்படி ஏணிதான் உங்கள் எழுத்து மூலம் புகழ்பெற முடியும். யாரோ சொன்னதாக ஆதாரமின்றி குட்டையைக் குழப்பினால், முதுகைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் முதுகு உங்களுக்குத் தெரியுமா? பிறர் குறைகளை - அதிலும் பதவியில் இருப்பவர் குறித்து ஒருபோதும் குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்து விடாதீர்கள். அப்படி எழுத விரும்பினால், உங்களுக்கு அடி விழுந்தால் ஹாஸ்பிட்டலுக்கு வாகனத்தில் தூக்கிப் போகும் நல்மக்களையும் தேடிக் கொண்டு எழுதுங்கள்...” என்று வேறு ஒரு சந்திப்பில் சொன்ன வைர வரிகள் முப்பத்து ஐந்து வருடங்களாக நான் கடைப்பிடித்து, இன்று இணையதளத்தில் கையாண்டு வருவதால், உலகில் எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர் - ரசிகைகள் இருப்பதைக் காணுகின்றேன். நான் யாரையும் தாக்கி எழுத மாட்டேன். விஷயங்களை எடுத்து வைக்க நாசூக்கான வார்த்தை ஜாலங்களைத் தேடி எழுதும் பாணியைக் கடைப்பிடிக்க வல்ல அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். ஆமீன். (அல்ஹம்துலில்லாஹ்)

சுற்றுப்புற சுகாதாரம் காத்தல் அமைப்பு ஆரம்பமாகிறது!

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க மக்கள் பழக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதை மக்களுக்கு தினமும் எடுத்து வைக்க தமிழக தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாராகி வருகிறது. தினசரிகளும் தங்கள் பங்கைத் தந்தவண்ணம் இருக்கிறார்கள். காயல் நகர மக்கள் அனைவர்களுக்கும் முக்கியம் இக்காலத்தில் அவசியம் தேவை வாழும் இடத்தைச் சுற்றிலும் தூய்மையாக வைப்பது குறித்து எல்லோரும் முயற்சி எடுப்பது. அதை முழு மனதோடு செயலாற்றுவது. இதனால் நோய் பரவாயமல் முதலில் தடுக்க முடியும். பக்கத்து வீட்டாருக்கு தொந்தரவு செய்யாமல் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்பது நபி போதனைகளில் ஒன்று. ஆனால், நமதூரில் குப்பையை உரிய இடத்தில் உரிய நேரத்தில் போடாமல், அடுத்த வீட்டுக்காரர்கள் ஏதோ வேலையில் இருக்கும்போதோ அல்லது வெளியில் சென்றிருந்தாலோ இறால் கூந்தல் கழிவு மீன் கழிவுகளை கேரி பேக்கில் மொத்தமாகக் கட்டி, மாடியலிருந்தோ வீட்டு முன்பகுதி தலைவாசல் பகுதியில் யாரும் பார்க்கவில்லை என்று வீதி ஓரம் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாத பாப்பா போல இருந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டுப் பகுதி மட்டும் சுத்தமாக இருக்க விடுகிறார்கள். இதுபோல வீசும் பேர்வழிகள் இது நியாயம்தானா உங்கள் மனசாட்சியுடன் பேசிப்பாருங்கள்!

இதையெல்லாம் விட்டுவிட நீங்கதான் ஓர் அமைப்பை ஆறு நோன்பு கழித்து நமதூரின் கடற்கரை ஓரம் மாதம்தோறும் முதல் ஞாயிறு மட்டும் சுற்றுப்புற சுகாதாரம் காப்போம் என்ற அமைப்பை வாவு முஹம்மது முகைதீன் துவங்க உள்ளதாக என்னையும் அதில் இணைத்து செயல்பட அழைத்துள்ளார்கள். எனக்கு 2013-2014இல் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் நடத்திய அனுபவம் இருப்பதால் அவர்களுடன் இணைந்து, செலய்பட சம்மதம் தெரிவித்து, பச்சைக்கொடி அசைத்து ஒத்துக்கொண்டேன். இந்த அமைப்பின் மூலம் நமதூர் மக்கள் அனைவரும் சுற்றுப்புற சுகாதாரம் காத்து நலமாய் சுகமாய் வாழ பிற ஊருக்கு வழிகாட்டியவர்களாக மாற இந்த அமைப்பு உளத்தூய்மையுடன் இன்ஷாஅல்லாஹ் செயல்பட துவங்கவுள்ளது. உங்கள் கருத்துக்களை இந்த இணையதளம் மூலம் தெரிவிக்க அவர்கள் சார்பில் வேண்டுகிறேன். எதையாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்து மக்கள் நலன் அடையப் பாடுபட விரும்பும் மக்களோடு நானு் ஒரு பகுதியில் நிற்கிறேன். அவர்குளுடன் நாமும் இணைந்து செயல்பட செல்வோம், வாரீர்.

வீதியில் மணல் ஜல்லிகள் கொட்டலாமா?

வீடு கட்டப்படுவது என்பது காயல் நகரில் புதிதல்ல. எல்லாத் தெருக்களிலும் குறைந்தது மூன்று வீடாவது கட்டுவது வழக்கம். வீடுகட்ட மணல், ஜல்லி வருகிறது. வீதியில் மக்கள் நடமாட முடியாத அளவும் வாகனங்கள் ஏறிப்போய் வீதி பூராவும் ஜல்லி மணல் விரையம் ஆகாமல் வீதியின் ஓரமாகக் கொட்டச் சொல்லவும். லாரியில் எங்கேயாவது கொட்டுவது வீதியின் பாதிக்கு மேல் வாகனம் போக முடியாமல் செய்துவிட்டுப் போகும் லாரி காரர்களை வீட்டுக்காரர்களும், மேஸ்திரிகளும் கண்டுகொள்வதில்லை என்பதால் இந்தத் துயரச் சம்பவம் நாள்தோறும் நடைபெறுகிறது. இது விஷயம் ஒரு கவுன்சிலர் என்னிடம் எழுதும்படி கூறினார். மக்களுக்கு நல்ல விஷயங்கள்தானே என்று ஏற்று எழுதினேன். வீடு கட்டுவது குறித்து இன்னும் நிறைய குறைகள் இருந்தாலும், அத்தனையையும் எழுதிக்காட்ட முடியாது. எழுத முடிந்தவைகளை எழுதிவிட்டேன். எழுத முடியாத சில சங்கடங்களை விட்டுவிடுவது என் முதுகுக்கு பாதுகாப்பாகும். “ஒரு சொல் வெல்லும், மறு சொல் கொல்லும்” என்பதால் ஆழமாக நுழைய விரும்பவில்லை.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: kamalmusthafa (abha.ksa) on 16 July 2015
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41354

ஏ.எல் .எஸ் .மாமா அவர் களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் நீங்கள் இதை விட இன்னும் நல்ல கருத்துக்களை மக்களுக்கு வழங்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

எழுத்து மேடை என்ற தலைப்பில் நம் ஊர் மக்களுக்கு எத்தனையோ பலநல்ல ஆலோசனைகள் வழங்கி உள்லிர்கள்இது அனைவருக்கும் போய்சேர்வது இல்லை வாவு முஹம்மது முகைதீன் அவர்கள் சொன்னது போல் நீங்களும் சேர்ந்து சுற்று ப்புறசுகாதாரம் கார்போம் என்ற அமைப்பை ஏற்ப்படுத்தி நம் ஊர் மக்களுக்கு விழிப் புநர்வைஏற்படுத்தி நாள் கொஞ்ச காலம் கழித்து இத்தமாதிரி பிரச்சனைகள் தீர வாய்ப்பு உள்ளது நம் மக்கள் மனதிலும் இது மாதிரியான நல்ல என்னங்கள்வர வேண்டும் வீடு கட்டும் பொது சாலை களில்மணல் ஜல்லி களைபோடாமல் இருக்க முடியாது நம் ஊர் சாலைகள் அனைத்தும் மிக குறிகிய சாலைகள் ஆனால்நகராச்சி நடவடிக்கை எடுக்கலாம் மூன்று தினங்களுக்கு மேல் சாலைகளில் மணலோ ஜல்லியோ கிடத்ந்தால் கட்டிட உரிமையாளருக்கு 5000 ருபாய் வரை அபதாரம் என்று கட்டிட உரிமம் வழங்கும் போதே இந்த வாசகத்தையும் சேர்த்து எழுத வேண்டும் இதை நகராச்சி ஊழியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் அப்போதுதான் அபதாரத்துக்கு பயந்து துரிதமாக அனைத்தையும் அகற்றுவார்கள் சில சமயம் நகராச்சியேரோடு போடஆறு மாதத்திற்கு முன்பே ஜல்லியை ரோட்டில் கொட்டி விடுகிறார்கள் நம் நகர்ச்சி திருந்தி விட்டல் நாளிடைவில் மக்களும் திருந்தி விடுவார்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved