Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:34:43 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 20
#KOTWEM20
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 18, 2012
சாதனையா? சோதனையா? (பாகம் 2)

இந்த பக்கம் 2169 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புத்தகமே நமது சிறந்த நண்பன் என்று ஓர் அறிஞர் சொன்னதை ஞாபகப்படுத்தி எழுதி இருந்தேன். படிக்கிறமாதிரி ஒரு சுகமும், ஒரு இன்பமும் வேறு ஒன்றம் இல்லை என்பேன். அறிவை தேடத்தேட அது அறிவு ஊற்றாகிறது, கருத்து கருவூலமாய் பொங்கிவரும் ஆற்றலை தான் எழுத்தாக படிக்கிறேன். நான் படித்த அறிஞர்களின் அறிவமுதங்களை இணையதள வாசகர்களுக்கு தரும் போது நானும் சுகம் அடைகிறேன். அதே மாதிரி பயமும் நடுக்கமும் இருக்கிறது, காரணம் உங்களை விட நான் அறிவில் குறைந்தவன், ஆற்றலிலும், படிப்பிலும் குறைவு தான். எனது எழுத்தோவியத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும், குறைகளை தாரளமாக அதுவும் ஏராளமாக குறிப்பிடுங்கள் இந்த ALS மாமா கோபப்படாத் தெரியாத சின்னப் பிள்ளை, சொல்லித்தாருங்கள் கற்றுக்கொண்டே இருப்பேன்.

கடல் கடந்த நாடுகளில் கடுமையான உழைப்பில், வேர்வையில் உங்கள் வேதனை துளிகள் மின்னுவது புரிகிறது. குடும்பம் நல்லபடி வாழ, வளமிக்கவும், பிள்ளைகள் நன்றாக படிக்க, ஆரோக்கியமாக வாழ, பெண்மக்கள் ஒழுக்கத்தோடு, இஸ்லாமிய ஞானத்தோடு வளர உங்களின் நேரடி கவனிப்பும் இருக்க வேண்டும். அதேசமையம் கல்வி, தொழில், மருத்துவ உதவிக்கும் உலகளாவிய காயல் நல சங்கங்களை நடத்தும் நீங்கள் பணங்களையும், நல்ல ஆலோசனைகளையும், இரவு பகலாக நமதூர் மக்கள் நலன் கருதி தருகிறீர்களே அதில் தான் உங்களின் சாதனை மறைந்திருக்கிறது. உங்களின் இந்த நல்ல எண்ணங்களுக்கு அல்லாஹ் இரு உலகிலும் மேலான நற்க்கூலியை வழங்குவானாக ஆமீன். நீங்கள் எல்லாம் எப்போதும் நலமாகவும் நல்ல உற்ச்சாகமாகவும், நீங்கள் எடுத்துக்கொண்ட கடமைகளில் நாடிய எண்ணத்தில் வெற்றியை குவிக்கும் சாதனையாளராக மாறவேண்டும் என்பதே எழுத்தாளராகிய நாங்களும், சமூக நலனை விரும்பும் அனைவர்களின் ஆசையாக இருக்கும் என்பதில் ஐயம்மில்லை.உங்களுக்காக காயல் நகரில் வாழும் ஏழை மக்கள், விதவைகள், வயோதிக ஆண் பெண்கள் அனைவர்களும், தொழில் நலிந்த பணத்துக்காக ஏங்கி நிற்கும் மக்கள்களும், உங்களக்காக ஐவேளை தொழுகைகளிலும், முன் பின் சுன்னத்து தொழுகைகளிலும் துஆ கேட்டு வருகிறார்கள்.

சாதனையாளர்கள் யாவருமே கடுமையான சோதனைக்கு தள்ளப்பட்டு அதன் பின்னரே வெற்றியாளர்களாக ஆகின்றனர். இது பற்றி வரலாறுகள் ஏராளம் உள்ளது எழுத அதிக பக்கம் பிடிக்கும் ஆதலால், என் வயதிற்கும் தகுந்த அளவு தானே எழுத முடியும். இதற்காக ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. உதாரணமாக ஜி.டி நாயிடு அவர்கள், சர்.சி.வி. ராமர் அவர்கள், அலி இப்னு சீன போன்ற மேதைகளின் நூல்களை எடுத்து எழுதினால், சுவையாக இருக்கும் நாட்கள் அதிகம் பிடிக்கும் அதனால் இவைகளை இத்துடன் முடிக்கின்றேன். நமதூரில் பிறந்து மறைந்த சாதனையாளர்கள் சிலரையாவது இக்கால வாரிசுகள் தெரிந்துகொள்ளவே எனக்கு தெரிந்த செய்திகளை தருகின்றேன்.

அக்காலத்தில் ( சுமார் 50 வருடங்களுக்கு முன்) சென்னையில் வேலைதேடி சென்றால், நம்மை தேடி வந்து வேலை பெற்று தருபவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நமதூர் வட பகுதியை சேர்ந்த B.A காக்க, முஹைதீன் இப்ராஹீம் சாஹிப் அவர்கள்தான். சென்னையில் வக்கீல் தொழிலை செய்துகொண்டு காயல் வாசிகளுக்கு அரசு மற்றும் தனியார் காரியாலையங்களில் வேலை தேடி தருவதாக அப்பெரியாரை பற்றி பிறை மாத இதழில் சிறப்பு செய்திகள் மூலம் அறிந்தேன்.

இவர்களை போலவே அலியார் தெரு S.M ஜக்கிரியா சாகிப் அவர்கள் நமதூர் பிள்ளைகளை அன்று சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் சீட்டு வாங்கி கொடுக்க உதவிவந்தார்கள். இது போல அவர்கள் மத்திய மாநில அரசு சார்பில் வேலை வாய்ப்பு பெற்றுதந்திருக்கிரார்கள். ஈ. வே. ரா. பெரியார் அவர்களின் திராவிட கழகத்தின் பொருளாளராக அன்று இருந்ததினால் இப்படி சாதனை புரிய முடிந்தது. இவர்களை இக்கால காயல் வாசிகள் அறிந்துகொள்ள செய்யவே இதை இணையதளத்தில் எழுதுகின்றேன். S.M ஜக்கிரியா சாகிப் அவர்கள் A.K ஹலீம் ஹாஜி அவர்களின் மச்சானும், Dr. இக்பால் அவர்களின் மாமனார் ஆவர்கள். இவர்கள் 1942 ல் K.T.M தெரு மஜ்லீசுள் கௌது சங்கம் உருவாக்கவும் தாயிம் பேட்மிட்டன் கிளப் ஏற்ப்படுத்தவும் இவைகள் மூலம் ஆண்டுதோறும் மீலாது கௌது விழா நடத்தி அக்கால அரசியல் வாதிகளையும், பேரறிஞர் அண்ணா போன்ற தமிழ் அறிஞர்களை அழைத்து வந்த பெருமை இவர்களை சாரும். இவர்களை பற்றி திராவிட இயக்க தூண்கள் என்ற நூலில் க. திருநாவுக்கரசு எழுதி நக்கீரன் பதிப்பகம் 1999 மே ஒன்று (முதல் பதிப்பு) பெரியாரின் நவாப் சாஹிப் என்ற S.M ஜக்கிரியா அவர்கள் பற்றி பக்கம் 60 முதல் 90 வரை சிறப்பாக இடம் பெற்றுள்ளார். இந்நூல் ஈ.வே.ரா. பெரியார் அவர்களின் கழக அலுவலகத்தில் உள்ள நூலகத்திலும், சென்னை கன்னிமாரா நூலகத்திலும் நீங்கள் சென்று பார்க்கலாம் அல்லது நமதூரில் அன்னை கதீஜா அறிவு நூலகம் (எ) எனது சொந்த நூலகத்தில் வந்து பார்வையிடலாம்.

குடிநீர் தண்ணீருக்கு வித்திட்ட ஆனா.கானா அவர்களை போல அப்பாபள்ளி தெரு முழுவதும் இரு பகுதிகளிலும் வேப்ப மரங்களை நட்டி மக்கள் சுகாதார மான முறையில் காற்று பெற்று நிழலில் நடந்து செல்ல உதவியவர் நமது மற்றொரு சாதனையாளர் பீனா.மீனா மீராசாஹிப் மரைக்காயர் அப்பா அவர்களே ஆவார்கள். அநேகமாக இந்நிகழ்ச்சி 1933 ல் நடந்ததாக இரு பெரியவர்கள் கூறுகிறார்கள். பீனா மீனா அப்பா அவர்கள் பெரிய செல்வந்தராகவும் இலங்கை கொழும்பில் கொடிகட்டி பரந்த நல் வணிகர் ஆவார்கள். இவர்கள் ஊர் வந்தால் அப்பாபள்ளி சதுக்கையில் இருந்த வாறு காலையில் வரும் மீன் வியாபாரிகளிடம் கூடையில் உள்ள அனைத்து மீன்களையும் வாங்கி தெரு முழுவதும் உள்ள வீட்டு பெண்களுக்கு இலவசமாக சப்ளை செய்வார்கள். காரணம் அன்று ஒரு சிறு பெண்பிள்ளைகள் கூட தெருவில் நடமாட மாட்டார்கள். அவ்வளவு கடுமையான கோசா முறை அனுசரித்து வீட்டுக்குளே இருப்பார்கள். இதை உணர்ந்த அப்பா அவர்கள் இப்படி செய்திருக்கலாம். சுலைமான் நகர் அருகில் இவர்கள் பெயரில் பீனா. மீனா அப்பா பிளட் போடப்பட்டு இருக்கிறது. இந்த உன்னத மனிதரை, சாதனையாளரை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு எடுத்து வைக்க விரும்பினேன். இவர்கள் வக்கீல் மீரா சாஹிப் அவர்களின் அப்பா (தாத்தா ) ஆவார்கள். இன்று அப்பாபள்ளி முழுவதும் பெரிய சிறிய வேப்ப மரங்கள் 15 கணக்கேடுத்தேன் அவற்றின் ஏழு வயதில் அதிக ஆண்டுகள் கணக்கு வருகிறது. அடிமரத்து அளவை கணக்கிட்டாலும், அதன்சுற்றளவும், உயரமும், வைரம் பாய்ந்த கடினத்தன்மையும் கணக்கிட்டால் சுமார் 70 ஆண்டு என தெரிய வருகிறது. இது எனது கணிப்பாகும். பீனா மீனா அப்பா அவர்கள் பற்றிய தகவல்களை K.T.M தெரு S.M மூஸா ஹாஜி ( S.M ஜுவல்லர்ஸ் அதிபர்) அவர்களும் , வக்கீல் மீரா சாகிப் அவர்களும் தகவல் தந்தார்கள், இருவர்களுக்கும் நன்றி.

- இன்ஷா அல்லாஹ் வளரும்.

குறிப்பு- அடுத்த சாதனையாளர்கள்

1. குமர்களின் தந்தை,
2. தினமும் விருந்து தரும் நல்லவர்,
3. முன்னாள் சேர்மன் அவர்களின் சேவை ஒரு பார்வை

ஆகியவை மூன்றாம் தொடரில் இன்ஷா அல்லாஹ் இடம்பெறும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சாதனையா? சோதனையா? (ப...
posted by: kithuru mohamed abbbas (Dammam) on 18 March 2012
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20651

அஸ்ஸலாமு அழைக்கும் மாமா நமதூர் சாதனையாளர்களை பற்றி கட்டுரை எழுதி இருந்தீர்கள் அழகான கட்டுரை கல்வி தந்தை மர்ஹூம் அப்துல் ஹாய் அவர்களை பற்றியும் தெரிந்துகொள்ள ஆசை.நானும் அவரது மாணவர்களின் ஒருவன்.கட்டுரை தொடரட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சாதனையா? சோதனையா? (ப...
posted by: mackie noohuthambi (colombo) on 19 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20652

அன்புள்ள மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள், சிலர் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்பார்கள், சிலர் வாழ்த்தி வணங்குகிறேன் என்பார்கள்.வாழ்த்த வயதும் தேவையில்லை, வணங்கவும் தேவையில்லை. நல்ல எண்ணமும் நல்லவைகளை பாராட்டும் உயர்ந்த உள்ளமும் இருந்தால் போதும்.

மாமா அவர்கள் சீதக்காதி நினைவு நூலகத்தை கட்டி காத்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன். என்னிடமிருந்த நூற்றுக்கணக்கான நூல்களை அந்த நூலகத்துக்கு ஏன் உள்ளத்தை களவாடி சென்று அங்கே மக்கள் படித்து பயன்பெற உதவியவர்கள். ஊழ வினை காரணத்தால் அந்த நூலகத்திலிருந்து நூலறுந்த பட்டமாக அவர்கள் வெளியேறியது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் சார்ந்துள்ள பாயிசீன் சங்கத்தில் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று நிர்வாகத்தினருக்கு கடிதம் கொடுத்தேன். அந்த நூலகத்தை முன் நின்று நடத்துவதற்கு எந்த சம்பளமும் எதிர்பார்க்காமல் நான் அதை ஏன் தார்மீக கடமையாக செய்கிறேன் என்று அவர்கள் என்னிடம் சொன்னபோது உள்ளம் குளிர்ந்தது, கண்கள் பனித்தன , நல்லவர்கள் நினைப்பதொன்றுதான் நடப்பதில்லை இந்த தென்னாட்டில் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

நான் இலங்கை வந்ததால் எனது முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் பாயிசீன் சங்கம் ஓர் தனிமனிதனை நம்பி இல்லை. அவர்கள் நினைத்தால் மாமா அவர்களை இப்போதும் அழைத்து அந்த பணியை அவரிடம் ஒப்படைக்கலாம். மனசுக்கு வயசில்லை, உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. எனவே மாமா தன வயதை பற்றிக்கவலைப்பட தேவை இல்லை. அல்லா நீடித்த வாழ்வையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் உங்களுக்கு தருவான். பாயிசீன் சங்கத்தின் நூலகராக கூடிய விரைவில் நீங்கள் பவனி வரும் நல்ல நாளை எதிர்பார்த்திருக்கிறேன். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved