Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:05:04 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 25
#KOTWEM25
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 1, 2012
ஒலிபெருக்கியின் - ஒலி மாசு! (பாகம்-1)

இந்த பக்கம் 5488 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

என்னுடைய கட்டுரைகளை கொள்கை ரீதியாக சிந்திக்காமல் , பொதுவான சிந்தனையோடு பார்த்து - எந்த கொள்கையையும் , பகுதியையும் குறிப்பிடாமல் மேலான தங்களுடைய சொந்தக் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள். - கட்டுரை ஆசிரியர்.


சுற்றுச்சூழல் மாசுபடுவதால் உலகம் முழுவதும் பல நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிப்பதை பார்த்தும், கேட்டும் வருகிறோம். அதற்கு பல காரணங்களையும் கூறுகிறோம்.

குப்பைக்கூளங்கள், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் கழிவுகள் அதன் நச்சுக்காற்று, மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனக் கழிவுகள், மற்றும் திறந்த வெளி சாக்கடைகள் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதே நேரத்தில் சுற்றுச்சூழல் கெடுவதற்கு " ஒலி மாசு " ம் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

வாகனங்களின் இரைச்சல், வாகன ஒலிப்பான்களின் மிதம் மிஞ்சிய சத்தம் , ஜெனரேட்டரின் இரைச்சல், பட்டாசுகளின் வெடி சத்தம், ஒலி பெருக்கிகளின் அளவுக்கு அதிகமான சத்தம், மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் இரைச்சல் ஆகியவைகள் மூலம் 'ஒலி மாசு' ஏற்படுகிறது என்பதையும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவைகளினால் ஏற்படும் ஒலி மாசு மக்களை பல நோய்களுக்கும் உட்படுத்துகிறது மட்டுமல்லாமல் பறவை இனங்களையும் , மிருகங்களையும் மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கிறது.

ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவுகோல் உண்டு , அந்த அளவுக்குள் வைத்துக்கொண்டால் எந்த பாதிப்பும் இருக்காது. தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மற்றும் வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலியை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. அந்த அளவுக்குள் அவைகளின் ஒலி இருந்தால் அது யாரையும் பாதிக்காது. அந்த அளவை மீறும்போதுதான் ஒலி மாசு அடைகிறது.

பட்டாசுகளுக்கும் , ஒலி பெருக்கிகளுக்கும் கூட ஒலிகளின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அந்த அளவுக்கு மேல் சத்தம் வந்தால்தான் ஒலி 'மாசு' அடையும். அதிக ஒலியின் காரணமாக நரம்புத்தளர்ச்சி, இதய நோய், மூளை பாதிப்பு மற்றும் காது கேளாமை ஏற்படுகிறது.

பறவை இனங்கள் அமைதியின்மை காரணமாக இனப்பெருக்கக் காலங்களில் ஒலியை எழுப்பி, தன்னுடைய இருப்பை தெரியப்படுத்த முடியவில்லை. அவைகளும் அழியத் தொடங்கிவிட்டன.

எடுத்துக்காட்டாக 15 , 20 வருடங்களுக்கு முன்பு, மாலை இருள் தொடங்கிவிட்டால் பறவைகள் எல்லாம் தம் தமது கூடுகளுக்கு சென்றுவிடும் அதிலும் முக்கியமாக காகங்கள் கூட்டம், கூட்டமாக செல்லும். ஒரு காகம் கூட இரவில் கரையாது - மறுநாள் பொழுது விடியும்வரை. ஆனால் இப்பொழுது அப்படியல்ல இரவு பொழுதிலும் காகங்களின் சத்தத்தை கேட்கலாம். சில நாட்களில் இரவு முழுக்க காகங்கள் கரைவதை கேட்கலாம். இதற்கு காரணம் ஒலி, மாசு அடைந்திருப்பதுதான். இது போல் எத்தனையோ பறவைகளின் நிலையும் அப்படியே.

அன்று சாதாரண பட்டாசுகளை வெடித்தார்கள் அதனால் காற்று மட்டும் மாசு அடைந்தது. ஆனால் இன்றோ அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கிறார்கள் இதனால் ஒலியும் மாசு அடைந்து பல இழப்புகள் ஏற்படுகின்றன. வீட்டில் உள்ள வயோதிகர்கள் , கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். பலருக்கு தூக்கமின்மையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.அதே நேரம் சத்தம் அளவுடன் இருந்தால் காற்று மட்டும் 'மாசு' அடைவதுடன் நின்றுவிடும்.

முன்பெல்லாம் விபத்து அல்லது பிறவியின் காரணமாக காது கேளாதவர்களாக இருந்தார்கள் ஆனால் இன்று ஒலி 'மாசு' அடைவதன் காரணமாக காது கேளாதவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

இன்று நகரம் என்றல்ல கிராமங்களிலும் வாகனங்கள் என்று மட்டும் அல்லாமல் தொலைகாட்சிப் பெட்டி , கிரைண்டர் , மோட்டார், வாஷிங் மெஷின் என்று மோட்டார் பொருத்தப்பட்ட பல சாதனங்கள் வீடுகளில் உபயோகப்படுத்துவதால் எல்லாத் தரப்பு மக்களையும் அதிகமான 'ஒலி' பாதிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் மன உளைச்சல் , இரத்த அழுத்தம், காது கேளாமை மற்றும் தூக்கமின்மை ஏற்படுகிறது.

வாகனங்கள் , தொழிற்சாலைப் பகுதிகளில் 75 டெசிபலுக்கும் வர்த்தக பகுதிகளில் 65 டெசிபலுக்கும் குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிபலுக்கும் மேல் ஒலி எழுப்பக்கூடாது என்றும், மருத்துவ மனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களிலிருந்து 100 மீட்டர்கள் வரை அமைதியிடங்களாக அறிவிக்கப்படுகிறது. ஆகவே இவைகளை மக்கள் கடைப் பிடித்தால் ஒலி 'மாசு' ஏற்படாது.

ஒலி 'மாசு' அடைவதை தடுப்பதற்கான செயலில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது - நம் ஊரிலும்கூட அரசாங்க அதிகாரிகள் வந்து, விசாரணைகள் நடத்தி புள்ளி விவரங்கள் சேகரித்து சென்று இருக்கிறார்கள் .

ஒலியை அதாவது சத்தத்தின் அளவை பல மடங்காக கூட்டி வெளிப்படுத்த உதவும் சாதனம்தான் " ஒலிபெருக்கி " என்பது. இந்த ஒலிபெருக்கியைப் பொறுத்தவரை அதை நாம் நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துவதாக எண்ணுகிறோமே தவிர அதனால் ஏற்படும் பாதிப்பை மக்கள் உணர்வதில்லை. ஒலி பெருக்கி மிதமான அளவுடன் செயல்பட்டால் நன்றாக கேட்கலாம். அதேநேரம் ஒலி பெருக்கியின் சத்தம் அளவுக்கு மிஞ்சும்போது இரைச்சலாக மாறிவிடுகிறது நம்மால் எதுவும் கேட்க இயலாது.

அளவுக்கு அதிகமான சத்தத்தால் காதுகளின் சவ்வு பாதிக்கப்படுகிறது. நமது காதுகளின் கேட்கும் அளவு 50 டெசிபலிலிருந்து 75 டெசிபல் என்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கும் மேலாக ஒலியின் அளவு கூடாமலிருந்தால் நமது கேட்கும்தன்மை பாதுகாப்பாக இருக்கும்.

இன்று ஒலிபெருக்கிகள் மூலம் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகிறார்கள் காரணம் அதிகமான சத்தத்துடன் ஒலி பெருக்கியை உபயோகிப்பதுதான். இந்த ஒலிபெருக்கி மட்டுமல்ல , ஒலியை ஏற்படுத்தும் ஜெனரேட்டர் , வாகனங்களில் பயன்படுத்தும் 'ஹாரன்' , வாகனங்களின் இரைச்சல் , புகை வண்டி , விமானம் , மோட்டார் இது போன்ற எந்த ஒன்றும் அளவுக்கு அதிகமான ஒலியைத் தந்தால் நிச்சயமாக அதன் மூலம் " ஒலி மாசு " ஏற்படும். இவைகள் எல்லாம் பொதுவாக எல்லோரையும் பாதிக்கக் கூடியவைகள். ஆனால் செல் போன் , ஹெட் போன் என்பதெல்லாம் உபயோகிப்பவரை மட்டுமே தாக்கக்கூடிய ஓன்று.

மொத்தத்தில் கூட்டிக்கழித்து பார்த்தால் ஒலி பெருக்கி மட்டும்தான் எல்லா தரப்பு மக்களையும் அதிகம் பாதிக்கக்கூடியதாக அமைகிறது. அதே நேரத்தில் அந்த ஒலி பெருக்கிதான் மிகவும் தேவையானவையாகவும் இருக்கிறது.

உலகம் தோன்றியது முதல் ( ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலிருந்து ) சில நூற்றாண்டுகள் முன்பு வரை காற்று 'மாசு' படாமல் இருந்தது , சுத்தமான , சுகாதாரமான காற்றையே மக்கள் சுவாசித்து வந்தார்கள். உலகில், என்று விஞ்ஞானம் முன்னேற்றங்கள் அடையத் தொடங்கியதோ அன்று இயற்கையும் ' மாசு ' படத் தொடங்கிற்று. இயற்கை பொய்த்து செயற்கை செயல்படத் தொடங்கியது. ஆம் அது உண்மையே! - காற்று மற்றும் ஒலி ' மாசு ' படாமல் இருந்த காலம் வரை ஒலிபெருக்கியின் அவசியம் ஏற்படவில்லை.

அன்று நபிமார்களும் அவர்களுக்கு பின் வந்த இறைநேசச் செல்வர்களும் மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு ஒலிபெருக்கியையா உபயோகித்தார்கள் ? நின்ற இடத்திலிருந்தும் மலை குன்றுகளின் மீது ஏறி நின்றும் நூற்றுக்கணக்கான மக்கள் என்ன ஆயிரக் கணக்கான மக்களிடையே பிரச்சாரம் செய்தனர், அதை அனைவரும் செவியுற்றனர். காரணம் அன்று காற்றும், ஒலியும ' மாசு ' படாமல் இருந்தது அதனால் எல்லோருக்கும் தெளிவாக கேட்டது.

ஒலிபெருக்கி உபயோகத்திற்கு வருவதற்கு முன்பு, வீட்டின் உள்ளே இருக்கின்றவர்களுக்கும் , தூரமான இடத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் ஜென நெரிசலான இடங்களில் உள்ளவர்களுக்கும் பாங்கு ஒலி கேட்க வேண்டும் என்பதற்காக எல்லா பள்ளிவாசல்களிலும் பாங்கு சொல்வதற்கு முன்பாக " டங்கா " அடித்து (முரசொலித்து ) அதன் பின்பே பாங்கு சொல்லி வந்தார்கள். காரணம் டங்காவின் சத்தத்தில் மக்கள் அனைவரும் நிசப்தம் ஆவார்கள் பாங்கு தெளிவாக எல்லோருக்கும் கேட்கும் என்பதால்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை விண்ணும் , மண்ணும் சுகாதாரமாக இருந்தது என்று வாகனங்கள் பெருகியதோ அன்று முதல் காற்று மாசுபடத் தொடங்கியது. ஆகாய விமானமும் , ஊர்திகளும், தொழிற்சாலைகளும், கட்டிடங்களில் உள்ள மோட்டார்கள், ஏசி , டிவி , கிரைண்டர் என்று பல தரப்பட்ட மோட்டார் சாதனங்களும் அதிகரித்தக் காரணத்தால் இரைச்சல்களும் , புகையும் ஏற்பட்டு காற்று மாசு படத் தொடங்கியது இதன் காரணமாகவே ஒலிபெருக்கியின் உதவியை நாடவேண்டியதாயிற்று.

40 , 45 ஆண்டுகளுக்கு முன்பு நமது ஊரில் மார்க்க சொற்பொழிவுகளுக்காக வெறும் 4 ஸ்பீக்கர்களை மட்டும் 4 திசையையும் நோக்கி கட்டுவார்கள் , அந்த ஒலிபெருக்கியின் சத்தம் மிதமாக இருக்கும், அது நாளா திசைகளிலும் வெகுதூரம் வரை அந்த சொற்பொழிவை மிக தெளிவாக கேட்க செய்யும். இன்று அதே சத்தத்துடன் 4 ஸ்பீக்கரை கட்டினால் திசைக்கு 10 வீடுகளுக்குக்கூட சொற்பொழிவு தெளிவாக கேட்காது. காற்றின் தூய்மைக் கெட்டு ஒலி ' மாசு ' அடைந்த காரணத்தால் ஒலிபெருக்கியின் எண்ணிக்கையும் அதன் " ஒலி " யும் ( சத்தமும் ) கூடுதலாக தொடங்கியது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 1960 களிலே குறுக்குத்தெரு முனையில் அதாவது சதுக்கைத்தெரு ஆரம்பத்தில் நின்று கொண்டு பெரிய சதுக்கைக்கு அப்பால் போகிறவரை அழைப்பதற்கு கைத்தட்டிக் ( ஒரு கையின் மேல் மறு கை கொண்டு தட்டி ) கூப்பிடுவார்கள் , அவர் திரும்பிப் பார்ப்பார் அந்த அளவுக்கு இரு கையின் ஓசை கேட்கும் . காரணம் தூய்மையான காற்று ஒலியை சுலபமாக எடுத்து சென்றது, 300 , 350 மீட்டர் தூரத்திற்கு தெளிவாக கேட்டது கைகளினால் எழுப்பப்படும் ஓசை.

இன்று இயற்கையான காற்றும், ஒலியும ' மாசு ' அடைந்து விட்டது எனவேதான் ஒலியை எடுத்து செல்ல செயற்கையான ஒலிபெருக்கியின் அவசியத்தை நாடுகிறோம்.

இன்ஷா அல்லாஹ்! தொடரும்.......................

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 01 April 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20684

மச்சான்ஜி ரொம்ப அசத்தி விட்டிங்கபோங்க !!! ஆனாலும் அன்று குறுக்கு தெருவிலே கைதட்டினால், பெரிய சதுக்கையில் போவோருக்கு,கேட்க்கும் என்றால்,பெரிய பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள எங்களுக்கு டங்கா சத்தம் எவ்வளவு பாதிப்பை ஏற்ப்படுத்தி இருக்கும் அந்த காலத்தில்??? மஞ்சள் கோடிட்டு விட்டதால் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன் உங்கள் கட்டுரையினை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: Kader K.M (Dubai) on 02 April 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20687

கண்ணியமாக நடந்துக்கொண்ட உமர் அனஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தாங்க முடியல்லே....இது தாங்க உண்மை...!!!
posted by: M.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (????????????.) on 02 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20688

நகரில் அவ்வப்போது நடக்கின்ற விழாக்கள், வைபவங்கள், நிகழ்ச்சிகள், மார்க்க உபந்நியாசங்கள் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் ஒலி பெருக்கியின் மூலம் உச்சகட்ட சப்தங்களால் செவிப்பறையை கிழித்து செல்வது பழகிப் போன வழமையாகி போனது.

பரவலாக விசேஷ வைபவங்கள் மற்றும் விழாக்கள் நடைபெறும் போது, அதன் நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்ப, ஒலி பெருக்கியை ஊர் முழுக்க தெருக்களில் கட்டி ஒலிபரப்பி பலருக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. எந்த தெருவுக்குள் போனாலும் ஒலிப்பெருக்கியின் ஓசைதான் கேட்கின்றது. அந்த அளவிற்கு தெருவுக்கு தெரு ஒலி பெருக்கி குழாய்களைப் பொறுத்தியுள்ளனர். இது ரமழான் காலங்களிலும் தொடர்ந்து வருகின்றது.

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதர்கள் முன்பெல்லாம் மேகத்தில் ஏற்படும் இடி ஓசையை தான் அதிகம் கேட்டுள்ளனர். இந்த ஓசையால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் நம் முன்னோர்கள் இடி, மின்னலின் போது வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்.

அன்று இடி ஓசையால் பாதிக்கப்பட்ட மனிதன் இன்று அதைவிட பல மடங்கு சப்தத்தைக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக காதின் உட்புறச் சவ்வானது மிக மெல்லிய படலமாகும். மனிதனின் காதானது குறைந்த அளவு சப்தத்தையே உள்வாங்கிக் கொள்ளும்.

இப்படி மென்மையான ஒலியை மட்டும் வாங்கும் காதுகளுக்கு அதிபயங்கரமான ஒலிகளை எந்நேரமும் கேட்க நேருவதால் காதுகளின் செவிப்பறை கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் சக்தியை இழக்கச் செய்கின்றது.

ஒரு மனிதனின் காதுகளில் உள்வாங்கும் ஒலியின் அளவு கூடும் போது உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு எரிச்சல், கோபம் ஆகியவை ஏற்படுவதால் தான் உச்சபாஷினியை பயன்படுத்த உயர் நீதிமன்றமே தடை செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை நடந்து வரும் நிலையில் அவர்கள் வீட்டில் வைத்து பாடம் படிப்பதற்கும், டியூஷன் நடத்துவதற்கும் பெரும் இடைஞ்சலாகவே உள்ளது.

அதைவிடவும் மோசமானது, வீடுகளின் ஜன்னல் அருகே ஒலி பெருக்கி குழாய்களைக் கட்டுவதால் அதன் சத்தம் சுகவீனர்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் நிலையும் உள்ளது. நம் நகரில் தொடர்ந்து பல மணி நேரங்கள் ஓயாது ஒலிக்கும் ஒலி பெருக்கியின் ஓசைதான் பிரச்சனைக்குரியது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்தச் செயலையும் நாம் ஆதரிக்கக் கூடாது, பொதுமக்களின் நலன் கருதி இச்செயலை நாம் இயன்ற அளவிற்கு தவிர்த்துக் கொள்வதுடன், குறிப்பாக மாணவர்களுக்கு பரீட்சை நடந்து வரும் காலங்களில் இது போன்ற நிகச்சிகளை பள்ளிக்குள், அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மட்டும் கேட்கும் விதத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (பாக்ஸ்) களைப் பயன்படுத்தி பிறருக்கு சிரமம் ஏற்படாடமல் பார்த்துக் கொள்வது நலம். இது எந்த (கொள்கை) கருத்து வேறுபாடுகள் சார்ந்த விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் முழுக்க முழுக்க ஊர் மக்களின் நலன் கருதிய பதிவாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு துன்பம் இழைப்பதை இஸ்லாம் ஒரு போதும் வலியுறுத்துவதில்லை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: mackie noohuthambi (colombo) on 02 April 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20689

ஒலி பெருக்கியின் மாசு பற்றி நீங்கள் எழுதியுள்ள கட்டுரையை காய்தல் உவத்தல் இன்றி அபிப்பிராயம் வெளியிட முடியாத நிலை நம் ஊரில் உள்ளது. குறிப்பாக் திருமண வைபவங்கள், கந்தூரி நிகழ்சிகள், மார்க்க வைபவங்கள் திக்ரு மஜ்லிசுகள், மார்க்க உபன்யாசங்கள், மஹ்லரா முதல் புனித புகாரி ஷரீப் வரை நடக்கும் நிகழ்சிகள். கே எம் டி மருத்துவமனை முதல் ஜாமிஉல் அஸ்கர், IIM போன்ற இடங்கள் வரை நடக்கும் நிகழ்சிகள், ஐக்கிய விளையாட்டு சங்கம் முதல் கடற்கரை வரை நடக்கும் கொண்டாட்டங்கள் எல்லாமே நீங்கள் சொல்லும் மாசு ஏற்படுத்துபவைதான்.

துணிச்சலாக மேடை ஏறி இதை சொல்வதானால் நீங்களும் சமுதாயதிலிருண்டு தூரமாக்கப்பட்டு விடுவீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துதான் இதை எழுதியிருக்கிறீர்கள் என்றால் உங்களை மனமார பாராட்டுகிறேன்.

மாற்று வழியையும் சொன்னால் நல்லது. வெறும் கட்டுரைகளால் மட்டும் இந்த மாசுகளை அகற்ற முடியாது. மக்களிடம் தைரியமாக சென்று இதைபற்றி எடுத்துரைக்கவேண்டும். நடக்கிற காரியமா என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்லி விடுவார்கள்.

அரசியல் கூட்டங்கள் ஆர்பாட்டம் இல்லாமல் எங்காவது நடப்பதுண்டா. இந்து தர்மப்படி திருமணங்கள் மேல தாள வாத்தியங்கள் இல்லாமல் நடந்தால் அது அப சகுனம். கெட்டி மேளம் என்று உரக்க சொல்லி மத்தளத்தை படாது பாடுபடுத்தி அடிக்காமல் நமது நாட்டில் கல்யாணங்கள் நடக்க முடியுமா.கோயில்களில் கடவுள் வழிபாடுகள் இந்த மாசுக்கு தாயாக உள்ள ஒலி பெருக்கியிலிருந்து தப்ப முடியுமா.

நாளையே ஒரு அரசாணை பிறப்பித்து இதை கட்டுப்படுத்த நினைத்தாலும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாக அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம் செய்வார்களே, அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியுமா. எனவே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனபது என் தாழ்மையான கருது. ஊரின் உயிரோட்டமான சத்தங்களிலிருந்து நாம் தனிப்பட்டு இயங்க முடியாது.

எனவே உங்கள் கட்டுரை ஒரு கானல் நீர். ஆகாயத்தில் கட்டும் மாளிகை. சற்றே சிந்தியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (????????? ) on 02 April 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20690

அருமையான கட்டுரை. அசத்தி விட்டீர்கள் மாமா.

முதலில் ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் அவர்களை இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன். பல வருடங்களாக அவர்கள் இதனின் தீமையையும், பாதிப்பையையும் எதிர்த்து வருகிறார்கள். கமெண்ட்ஸ் பதிவில் அதிகமாக இந்த ஒலி மாசை பற்றி எழுதியவரும் இவர்கள் தான். ஆனால் யாருடைய காதிலும் விழவே இல்லை.

நாங்கள் எதுவும் எழுதினால் உடனே சாயம் பூச பலர் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். மஹ்மூது மாமா, ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி போன்ற நடுநிலையாளர்கள் எழுதியுள்ளதால் இதற்க்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்புகிறோம்..இன்ஷா அல்லாஹ்.

பசங்க பரிட்சைக்காக கவலையுடனும், அக்கறையுடனும், பரபப்புடன் இரவில் படித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் குழாய் ஸ்பீக்கர் டொக்..டொக் என்று கத்தவும், பசங்க விரக்தியுடன் புத்தங்களை பொத்...பொத்..தென்று மூடவும் சரியாக இருக்கும். அப்புறம் இக்ரா என்று கல்விக்கு பாடுபட்டு என்ன பயன்.

வயோதிகர்கள், நோயாளிகளுக்கு உதவி செய்து, பின்பு தலைமாட்டில் குழாய் ஸ்பீக்கரை வைத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதை விட..... என்னத்தை எழுத...கொடுமையோ கொடுமை.

வல்ல ரஹ்மான் அனைவர்களுக்கும் நல் வழியை காட்டட்டும்.

மீண்டும் மஹ்மூது மாமாவிற்கும், கருத்து பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: Lebbai (Riyadh) on 03 April 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20692

அஸ்ஸலாமு அழைக்கும்,

மஹ்மூத் மாமாவின் கட்டுரை அருமை.

ஒலிபெருக்கியை ஒலி மாசு ஏற்படாதாவண்ணமும், பிறருக்கு இடைஞ்சல் கொடுக்கா வண்ணமும் உபயோகிப்பது நலம்.

உலக கல்வி, உலக பாடம் என்று எந்நாளும் நாம் உலக கல்விக்காக செலவழிக்கும் மணித்துளிகள் தான் எத்தனை எத்தனை? மார்க்க விசயத்துக்காக (நான் உற்பட) செலவழிக்கும் நேரம் என்ன? ஆற அமர்ந்து சிந்தித்தால் புரியும்.

மிதமான ஒலி வெளியாகும் விதமாக, மார்க்க நிகழ்வுகளை (மார்க்க உபன்னியாசம்) ஒளி பரப்பினால், அதில் தவறேதுமில்லை.

தற்போது கேபிள் டிவி மூலம் வரும் மார்க்க நிகழ்ச்சிகள் (ஏன் வாராந்திர ஜும்மா பயான்) கூட அதிக அளவில் ஒலி பெருக்கியில் ஒலி பரப்பு செய்கிறார்கள். கேபிள் டிவி கேட்க வாய்ப்பு உள்ள நிகழ்வுகள், ஒலிபெருக்கியில் ஒலி பரப்புவதை தவிர்க்கலாம், அல்லது மிதமாக செய்யலாம்.

முதலில் நம் வீட்டில் உள்ள தொ(ல்)லைகாட்சியை கட்டுபடுத்தினாலே பெரிய அளவில் ஒலி மாசு குறைந்து விடும்.

இரண்டாவது, கைபேசி. அது கைபேசியா காது பேசியா? அந்த அளவு சிறுவர்கள் முதல் இளைஞர் வரை எப்போது காதில்வைத்து வேண்டாத பேச்சுக்கள் . இதுவெல்லாம் கூட பல நோய்களுக்கு காரணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: SEYED ALI (ABUDHABI) on 03 April 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20693

வளர்ந்து வரும் நகரில் வாகனப்பெருக்கமும் ஜன நெரிசலும் அதனால் ஏற்ப்படும் இரைச்சலும் தவிர்க்க முடியாது தான்.ஏனென்றால் அது இயற்க்கை.ஆனால் செயற்கையாக நாம் ஏற்ப்படுத்தும் ஒழி மாசுகளை நம்மால் சில ஏற்பாடுகள் மூலமும் சகிப்பு தன்மை மூலமும் தவிர்க்க முடியும்.

உதாரணமாக தன்நாட்டை தன் வீட்டைவிட பிரதானமாக நேசிக்கும் இங்கு அபுதாபியில் பொதுக்கூட்டங்களை அரங்கத்திர்க்குல்தான் நடத்த வேண்டும்.ஒலிபெருக்கிகளை உள்ளே மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.எல்லோர் காதிலும் நிர்பந்தமாக தன கொள்கைகளை ஒலி குண்டுகளாக போடுவதை விட்டு விரும்பியவர் காதில் அது விழுந்தால் போதும் என்ற ஏற்பாடு நியாயம்தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244) on 03 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20694

அஸ்ஸலாமு அலைக்கும்.ஹாஜி என் எஸ் ஈ மஹ்மூது அவர்களின் கட்டுரை (நியூஸ் ஐ டீ 8295- 1 ஏப்ரில்.) முழுவதும் 100 க்கு 300ம் உண்மை

நமதூரில் .இந்த ஒலிமாசு விஷயமாகவே என் முதல் ஒரு சிலர் கடந்த 30/40 வருடங்களாகவே முயற்ச்சி பண்ணத்தான் செய்கிறார்கள் கேவலம் கலக்டர் வரை முயன்று தடை வாங்கிய பின் 2-3 நாள்கள் அமுல் நட்த்தும் சமயம் மந்திரி அளவில் முயன்று தடை நீக்கம் பெற்ற சரித்திரமும் உண்டு. ஆச்சரியமாக இல்லையா?. இதற்கென ஒரு விழிப்புணர்வு மாநாடு நட்த்தினால் வெட்ட வெளிச்சமாக ஆகிவிடும்.

இந்த ஒலிமாசு ஏற்படுத்தி வயிறு பிழைக்கும் ஆத்மாக்களும் இந்த ஒலிமாசின் விபரீதங்களால் ஏற்படும் தீமைகளை அறியாத எல்லா(தப்லீக். தரீக்கா,அஹ்லெ ஹதீது) உலமாக்களுக்கும் கூட இந்த பெரும்பாவத்தில் ஒரு பங்கு உண்டு. ஏனெனில் பிர்ச்சனையில் உள்ள எல்லா உலமாக்களும் கூட இந்த பாவத்தில் ஒற்றுமை.

அல்லாஹ் கூறுகிறான் “ WALAA THA AAWANOO ALAL ITHUMI WAL UDHUWAAN “ தீமையான விஷயங்களில் ஒருவர்க்கு ஒருவர் உதவியாய் இருக்காதீர்கள் என்று தானே கூறுகிறான். இங்கு நம் காயலில் நடப்பதென்ன? செய்யப்படும் பாவங்களின் வகைகளை கிழே கூறுகிறேன்.

1. இந்த கூம்பு வடிவ குழாய் ஸ்பீக்கர் மூலம் அதிக சப்த்த்தில் அக்கம் பக்கம் மஸ்ஜிது களிலும் வீடு களிலும் தொழுகை, தஸ்பீஹ், ஸலவாத்து, ஜிக்ர் போன்றவைகள் முறையோடு செய்ய முடிய வில்லை, ஒழுங்கான ஷைகு மார்கள்கூட ஸ்பீக்கரில் ஜிக்று மஜலிஸ் நடத்துவதை மிகவும் கண்டித்து இருக்கிறார்கலள். அவர்களும் நடத்து வதில்லை..

2. குழந்தை குட்டிகள். கடின, மித வியாதியஸ்தர்கள்,மாணவர்கள், இலமை தேடும்.ஹிஃப்ழ் பண்ணும், தாலிபீன்கள் கூட மிகவும் சங்கடப்படுகிறார்கள். உதாரணத்துக்கு சமீபமாக மரணமடைந்த மற்ஹூம் ஹாஜி பீ.மஹ்மூது (94 வயது) அவர்கள் பட்டவேதனை,அவர்கள் தமையனார் பீ.அபூபக்கர் அவர்களின் ஸக்றாத்து சமயம் கூட மிக அடுத்துள்ள கந்தூரிகாறர்கள் கூடசொல்லியும் நிறுத்த இல்லை. குற் ஆன் கூறுவது சரியாகிவிட்டது. காரணம் ”தன் கையாலே தனக்கு தீமையை தேடிக்கொண்டார்கள் ” என்ற இறைமறை கூற்றுப்படி இவ்விருவர்கள்தான் முன்பு 1945 வாக்கில் பாம்பை யில் இருந்து மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஸபைக்காக ஆம்ப்ளிஃபையர் ஸெட் வாங்கி அணுப்பி உதவினார்கள். அதுவும் வேண்டாம் என்று கூறியும் உலமாக்களை வற்புறுத்தி அரங்கேற்றம் செய்யப்பட்டதாகவும் கேள்வி யுறுகிறோம். அதுவே இவ்விதமான பாவத்துக்கு அடிகோலாகும்.

3. நமதூரில் துளிர் பாடசாலை உருவாகவும், மாற்றுத்திறனாளிகள் இரண்டுபங்கு அதிகமாகவும் இதுவே காரண மாய் இருக்கின்றது.குறிப்பாக கீழ் பகுதி வீடுகளிலும், காயலின் மத்திய பகுதி வீடு களிலும் தான் அதிகமான ஸ்பீக்கர் பாவணையும் இருக்கிறது . மொத்த்த்தில் சுமார் நூறு ஸ்பீக்கர் களோடு பத்தாயிரம் மணி நேர அவ்ஸ்தையில் காயல் நகர் வாழ்கிறது உலகளாவிய திறமை வாய்ந்த ஈ என் ட்டீ டாக்டர் கள் கூட கடினமாக இந்த கூம்பு வடிவ ஸ்பீக்கரின் ஒலி மாசை கண்டித்து ஆராய்ச்சி செய்து தடை செய்ய பேசி யுள்ளார்கள்.குறிப்பாக நமதூர் ஜனாப் ஹாஜி பீர் முஹம்மத் அவர்கள் மகன் ஈ என் ட்டீ டாக்டர் செய்யிது முஹம்மது அவர்களும் புத்தக ஆதாரத்தோடு கண்டித்து எண்ணிடம் விளக்கினார்.

மேலும் கூம்பு வடிவ ஸ்பீக்கரை இந்தியாவை தவிர எல்லா நாட்டினரும் பாவிப்பதை ஒரு நியூ ஸென்ஸாகவே கருது கின்றனர் தடைச் சட்டமும் கூட இருக்கிறது. பாவித்தால் உட்னடியாக அர்ரஸ்ட். இங்கு காந்திபடம் காட்டி காவல் இலாக்காவும் இணக்கம்.

என்ன செய்வது. அல்லாஹ்வின்தண்டனை ஒன்றுதான் விமோஷனமா??சிந்தியுங்கள்???

MAY WE REMIND AND FEAR ABOUT THE FOLLOWING AAYAATH FROM QURAAN “ FA MAN AU RAZHA AN ZIKREEE FA INNALAHOO MAYEESHATHTHAN ZHANKAA” அல் குர் ஆண் 20-124


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Local cable TV
posted by: Firdous (Colombo) on 03 April 2012
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20695

காலத்திற்கு ஏற்ற கட்டுரை! ஆசிரியர்க்கு நன்றி. இக்காலத்தில் எல்லா கொள்கையில் உள்ளவர்களுக்கும் அவரவர் கொள்கையை பறைசாற்ற கேபிள் டிவி சேனல் உள்ளது. ஆகவே அவரவர்களின் நிகழ்சிகளை இதன் மூலம் ஒளிபரப்பினால் பொது மக்கள் டிவியில் பார்த்து கொள்வார்கள்.

நண்பர்கள் கூறுவது போல் Box speaker மட்டும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வைத்துகொள்ளலாம். எல்லோரும் சிந்தித்து செயல் பட வேண்டிய தருணம். கரணங்கள் தெரியாமல் பல உயிர் இழப்புகளை சந்திக்கும் நாம், சிந்தித்து செயல் படுவோம். ஒலி மாசை கட்டுப்படுத்துவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: ALS mama (Kayalpatnam) on 05 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20699

அஸ்ஸலாமு அழைக்கும்,

சப்த அலையின்(டெசிபெல்) குறித்து உங்களின் 130 வரி தொடர் கண்டேன் மிக சிறப்பாக காதில் ரீங்கரமிட்டது. இந்த ஒலிமாசு தொல்லைகளை தினந்தோறும் அனுபவிப்பவர்கள் KTM தெரு, சின்ன நெசவு தெரு மற்றும் பஜாரில் குடி இருப்பவர்கள் இரு வழி பாதையாக இருக்கும் போது கடுமையான கஷ்டத்தை அனுபவித்து வந்தோம்.

இது போல் ஒரு கட்டுரையை நான் எழுதி வெளி இட ஆசை பட்டேன் அதனால் அரசு நூலகம் சென்று இது சமந்தமான நூலை தேடி படிக்க ஆர்வம் காட்டி வந்தேன். இதற்கு இடையில் தம்பி S K ஸாலிஹ் அன்பு தொல்லையால் சாதனையா சோதனையா இன்ற கட்டுரை எழுத மாறி சென்று விட்டேன் எனது தொடர் மூன்றும் மார்ச் 11 - 16 - 27 இல் வெளியானது அனைத்தும் உண்மை சம்பவங்கள்.

இணைய வாசகர்களின் இதயங்களின் இடம் பிடிக்க நாம்(எழுத்தாளர்கள்) புதிய யுக்திகளை சிறப்பான செய்திகளை ஆதாரங்களோடு தேடி வைக்கும் போது அந்த கட்டுரை சிறப்படைகிறது. இந்த வித்தைகளை எனது பேனா முனை ஓரளவு வயதால் தெரிந்து இருக்கிறது.

ஓலி மாசு கட்டுரையின் பிரதியை நமது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பார்வைக்கும் நமது காவல்துறை ஐயா பார்த்திபன் அவர்களின் பார்வைக்கும் நமது நகராச்சி தலைவி ஆபிதா அவர்கள் பார்வைக்கும் இந்த கட்டுரையின் சாராம்சம் அவசியம் கொண்டுசெல்ல வேண்டும் ஏன் என்றால் தெற்கே செல்லும் பேருந்துகள் நர்கிச்பானு மருத்துவமனை ஷிபா மருத்துவமனை மற்றும் KMT மருத்துவமனை தாண்டி செல்லும் போது நோயாளிகள் ஒலிமாசு(டெசிபெல்) அதிகமாக இருப்பதால் பாதிக்க படுகிறார்கள்.

வாகன ஓட்டிகள் மக்களின் நலன்களை கவனிப்பது இல்லை ஊருக்குள் ஏர்ஹாரன் அடிப்பது கூடாது வாகனகளில் எழுதி இருந்தும் வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு பயபடுவது இல்லை. இதன் காரணமாக நமது காதின் செவிப்பறைகள் தினம் தினம் ஓலி மசுவால் சேத படுவதை கட்டுரையாளர் N S E மகமூது காக்கா தெளிவாக எழுதி இருகிறார்கள்.

இஸ்லாம் என்றால் என்ன?

எந்த வகையிலும் எந்த மனிதர்களுக்கும் எப்போதும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற உன்னத கோட்பாடு நிறைந்த மார்க்கமே இஸ்லாம். ஆனால், நாம் எல்லோரும் இஸ்லாம் என்று கூறிக்கொள்கின்றோம். ஒரு முஸ்லீமை கண்டதும் சலாம் கூறிக்கொள்கின்றோம், இதுவும் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஒரு செயலாகும்.

மக்களையும், குழந்தைகளையும், நோயாளிகளையும் பாதிக்கும் அளவு ஒலிமாசு எனப்படும் (டெசிபெல்) முறை அதிகமாக உள்ள ஸ்பீக்கர்களை உபந்நியாசம் என்ற பெயரால் மக்கள் நல்வழிபடவேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமிய கருத்துகள் காற்றில் மிதந்துவருகிறது. நல்ல கருத்துகளை கேட்கவேண்டும், அதற்காக காது கிளியும் அளவு சப்த அலைகள் தேவைதானா?

எங்கோ காட்டில் நடக்கும் சிறு நிகழ்சிகள் ஊரின் எல்லா தெருக்களிலும் அது காதை கிழிக்கும் அளவு நடப்பதை கேட்கின்றோம். இது இன்று கூடி வருவதை காணுகின்றோம். இம்முறைகளில் மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடி அவர்களின் கருத்துகள், கூட்டங்கள் எல்லாம் அப்பாகுதியில் மட்டுமே கேட்கும் அளவு செய்யலாமே!

(நான் ஆலிம்களையும், ஊர் தலைவர்களையும், ஊர் அமைப்புகளையும் கட்டளை இடுவதாக என்ன வேண்டாம். நான் வயதில் சிறியவன், அறிவிலும் ஆற்றலிலும் அறியாதவன் என்பதால் இதை எழுத அச்சப்பட்டேன்). மனிதனுக்கு கண் எவ்வளவு முக்கியமோ, அது போல் காது முக்கியம். செவிப்பறை பழுதடைந்தால் நம் அருகில் யார் பேசினாலும் கேட்க முடியாது. அல்லாஹுவின் உதவியால் உடலின் அனைத்து பாகங்களிலும் ஒரு குறைபாடு இல்லாமல் வல்ல அல்லா நம் அனைவரையும் பாதுகாப்பானாக, ஆமீன். கட்டுரை எழுதியதை விட பதில் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது கட்டுரையாளர் மன்னிக்க வேண்டுகிறேன். எழுத்தாளர், சமூக ஆர்வலர், ALS மாமா, பாலம் பத்திரிகை முன்னாள் ஆசிரியர், காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச...
posted by: Farook (Jeddah) on 05 April 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20701

இந்த கட்டுரை ஒரு கானல் நீராகத்தான் தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved